Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 21 - அர்ச்.சிலுவை சின்னப்பர் (April 28) St. Paul of Cross

ஏப்ரல் 28 தேதி


ஸ்துதியரும் வேதபாரகருமான அர்ச்.சிலுவை சின்னப்பர் திருநாள்




இவர் வடக்கு இத்தாலியிலுள்ள லிகூரியா மாகாணத்திலுள்ள  ஓவடா என்ற ஊரில் 1694ம் வருடம் ஜனவரி 3ம் தேதியன்று பிறந்தார்; பியட்மோன்ட்டின் அலெஸ்ஸான்டிரியாவிற்கு அருகிலுள்ள காஸ்டலா ஸோவைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயாருக்கு, இவர் பிறப்பதற்கு முன் ஏற்பட்ட பிரசவவேதனையின் சமயத்தில், ஒரு அதிசய பரலோக ஒளி இவருடைய தாயார் படுத்திருந்த அறையை ஒளிர்வித்தது! இப்பரலோக ஒளி, இவருடைய வருங்கால பரிசுத்தத்தனத்தினுடைய ஒளியின்  பிரகாசத்தை முன்னறிவித்தது! மேலும், இவர் குழந்தையாயிருந்தபோது, ஆற்றில் விழுந்து விட்டார்; அச்சமயம், பரலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா, புதுமையாக, இவரை எந்தக் கேடும் இல்லாமல் காப்பாற்றினார்கள்! புத்தி விவரம் வந்த நாள் முதற்கொண்டு, இவர், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவர் மீதான அத்தியந்த சிநேகத்தினால் நிறைந்திருந்தார்! மேலும், சிலுவையில் அறையுண்டிருக்கும் திவ்ய இரட்சகர் மீதான  தியானத்தில், அதிக நேரத்தை செலவிடத் துவக்கினார்.

இவர் தனது மாசற்ற சரீரத்தை கண்விழிப்புகளாலும், உபவாசங்களாலும், சாட்டை கசை அடிகளாலும், ஒறுத்துத் தண்டித்து வந்தார்; வெள்ளிக்கிழமைகளில், பிச்சுக் கலந்த காடியைக் குடித்து வந்தார்; மற்ற எல்லா விதமான கடின தபசுகளையும் ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து வந்தார். ஒரு வேதசாட்சியாக, சத்திய வேதத்திற்காக தன் உயிரை விடுவதற்கு ஆசித்தவராக, துருக்கியருக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, வெனிஸில் திரட்டப்பட்ட  படைவீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்க்கும்படிச் செய்தார்; ஆனால், சர்வேசுரனுடைய திருச்சித்தம், இதற்கு மாறாக இருப்பதை, ஜெபிக்கும்போது உணர்ந்தார்;  படைக் கருவிகளுடன் சண்டையிடும் இராணுவத்தில் சேர்வதைக் கைவிட்டார்; ஆனால், தன் சகல வல்லமையுடனும் எல்லா மனிதர்களுடைய நித்திய இரட்சணியத்திற்காகப் பாடுபடுகிற திருச்சபையைப் பாதுகாக்கிற உன்னதமான இராணுவத்தில் சேரத் தீர்மானித்தார்; இவர் வீடு திரும்பியதும், மிக செல்வாக்கும் புகழும் சம்பாதிக்கக் கூடிய திருமணத்தையும், தன் மாமா விட்டுச் சென்ற ஆஸ்தியையும் மறுத்து விட்டார்; குறுகலான சிலுவைப் பாதையினுள் நுழையவும்,மேற்றிராணியாரிடமிருந்து கரடுமுரடான துறவற உடுப்பைப் பெற்றுக்கொள்ளவும் இவர் ஆசித்தார்;  பின் இவர் மேற்றிராணியாருடைய கட்டளையினால், இவர் குருவானவராக இல்லாதபோதே, இவருடைய ஜீவியத்தின் மேம்பட்ட பரிசுத்தத்தனத்தினிமித்தமாகவும், தேவ காரியங்கள் பற்றி இவர் பெற்றிருந்த அறிவின் காரணமாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால், ஆண்டவருடைய வயலில் உழுது , மாபெரும் பலனை அறுவடை செய்தார்; அநேக ஆத்துமங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்;

இவர் உரோமாபுரிக்குச் சென்றார்; வேத இயல் கற்ற பிறகு, 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசரின் கட்டளையால், குருப்பட்டம் பெற்றார்; இவர் தன்னுடன் கூட சகக் குருக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, பாப்பரசர் அனுமதியளித்தார்; அதன்படி, ஏற்கனவே தன்னை அர்ஜென்டாரோ மலைக்கு வரும்படி மகா பரிசுத்த தேவமாதா அழைத்திருந்த அதே மலைக்குச்  சென்று, ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கச் சென்றார்; மேலும் மகா பரிசுத்த தேவமாதா காண்பித்திருந்த அவர்களுடைய திவ்ய குமாரனுடைய  பரிசுத்தப் பாடுகளைக் குறிக்கும் அடையாள சின்னத்தைப் பொறித்த கறுப்பு உடுப்பை உடுத்திக்கொண்டார்; அங்கே அவர் ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபித்தார்; அது தான் “ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் துறவற சபை”. குறுகிய காலத்தில், சர்வேசுரனுடைய ஆசீர்வாதத்தினால், இத்துறவறசபை மிக துரிதமாக அதிகரித்து வளர்ச்சியடைந்தது! இவருடைய கடினமான அயரா உழைப்பினால் இத்துறவற சபை வளர்ந்து வந்தது; அநேக உயர்குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்; இத்துறவற சபைக்கான உறுதிப்பாட்டை ஒரு முறைக்கு மேலாக திருச்சபையின் தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொண்டது! அர்ச்.சிலுவை சின்னப்பர் ஜெபத்தில் பெற்றுக் கொண்ட இச்சபைக்கான விதிமுறைகளையும் திருச்சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது; “நமதாண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றிய  ஆசிர்வதிக்கப்பட்ட ஞாபகத்தை ஊக்குவித்துப் பரப்புவது” என்கிற நான்காவது வார்த்தைப்பாடும் இத்துறவற சபையின் வார்த்தைப் பாடுகளுடன் சேர்க்கப்பட்டது!

பரிசுத்த கன்னியர்களின் ஒரு துறுவற சபையையும் இவர் ஸ்தாபித்தார்; இப்பரிசுத்தக் கன்னியர், இடைவிடாமல், தேவ பத்தாவானவருடைய சகலத்தையும் மிஞ்சும் உன்னதமான  சிநேகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பார்கள்!

இந்த எல்லா ஞான அலுவல்களிலும், இவர் ஆன்மாக்கள் மேல் கொண்டிருந்த அயரா சிநேகமானது, ஒருபோதும், இவர் சுவிசேஷத்தைப் போதிப்பதில் சோர்வடையாமலிருக்கும்படிச் செய்தது! இவர் எண்ணிக்கையில்லாத திரளான மனிதர்களை, மிகவும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மனிதர்களையும், பதிதத் தப்பறையில் விழுந்த மனிதர்களையும் கூட மனந்திருப்பி, இரட்சணியத்தின் பாதைக்குக் கூட்டிவந்து சேர்த்தார்! இவருடைய நேர்த்தியான பேச்சுத்திறனுடைய வல்லமை, விசேஷமாக  ஆண்டவருடைய பரிசுத்தப பாடுகள் பற்றி இவர் பேசியபோது, எவ்வளவு ஆச்சரியத்திற்குரிதாயிருந்ததென்றால், இப்பிரசங்கத்தின் போது, இவரும், ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகள் மட்டிலான இவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களும்  கண்ணீர் சிந்தி அழுவார்கள்! மகாக் கடினப்பட்ட இருதயங்களும் இதைக் கேட்டு, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினார்கள்!

 அர்ச்.சிலுவை சின்னப்பருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினி சுவாலை எவ்வளவாக பற்றியெரிந்ததென்றால், இவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த  துறவற அங்கிப்பகுதி, நெருப்பினால் எரிந்ததைப் போல் தீய்ந்து போயிருக்கும்!இவருடைய விலா எலும்புகள் இரண்டு, தேவசிநேக மிகுதியால் இருதயம் விரிவடைந்ததினிமித்தமாக துருத்திக் கொண்டிருந்ததைப் போல் தோன்றின!

இவர் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்போது, இவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போகும்! இவர் அடிக்கடி பக்திபரவசத்தில் ஆழ்ந்திருப்பார்! இச்சமயங்களில், இவருடைய சரீரம் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தை விட்டு மேலே உயரும்! இவருடைய முகம் பரலோக ஒளியால் பிரகாசிக்கும்! சில சமயங்களில் இவர், பிரசங்கம் நிகழ்த்தும்போது,இவரை ஊக்குவிக்கும் விதமாக பரலோகக் குரலொலி கேட்கப்படும்! மற்ற சமயங்களில், இவருடைய பிரசங்கம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் கேட்கும்!

தீர்க்கதரிசன வரமும், பலமொழிபேசும் வரமும், பிறருடைய இருதய இரகசியங்களை அறியும் வரமும், தீய ஆவிகள், நோய்கள் மட்டில் இவர் கொண்டிருந்த வல்லமை ஆகியவை இவர் கொண்டிருந்த விசேஷ தேவ கொடைகளாகும்! பாப்பரசர்களால் இவர் மிகுந்த மேரை வணக்கத்துடன் நடத்தப்பட்ட போதிலும், இவர் தன்னை பயனற்ற ஊழியன் என்றும் தகுதியற்ற பாவி என்றும் கருதினார்; இறுதியாக,  இவர் தனது கடின தபசின் மிகுதியால், தனது 81வது வயதில், 1775ம் வருடம் அக்டோபர் 18ம் தேதியன்று  உரோமாபுரியில் பாக்கியமாக மரித்தார்; இவர் ஏற்கனவே  தீர்க்கதரிசனமாக அறிவித்தபடி, அதே நாளன்று மரித்தார்;அதற்கு முன்பாக மகா அழகிய அறிவுரையை தன் துறவியருக்குக் கூறினார்;  அதுவே இத்துறவியருக்கு இவர் அளித்தத் தன் மரண சாசனமாகவும், உயிலாகவும் இருந்தது! திருச்சபையின் இறுதி தேவதிரவிய அனுமானங்களாலும், பெற்று, பரலோகக் காட்சியினாலும் திடம் பெற்றவராக பாக்கியமாய் மரித்தார். 9ம் பத்திநாதர் இவருக்கு முத்திப் பேறு பட்டமும், அர்ச்சிஷ்டப்பட்டமும் அளித்தார்.

அர்ச்.சிலுவை சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read more about Saints - Click Here



Tags: St. Paul of Cross, Saint. Paul of Cross, Saints life History in Tamil, 

திங்கள், 29 ஜனவரி, 2024

பூசைப் பலிபோல் - Lyrics for Tamil catholic songs

 பூசைப் பலிபோல்



1. பூசைப் பலிபோல் பாக்கியசெல்வம் புவியில் இல்லையே
புவிநிரம்ப பொன்தந்தாலும் பலிக்கு ஈடில்லையே
பரமனே இப்பலிபொருளாய் எழுந்தருள்வாரே
பக்தி ஆவல் நிரம்ப பலியை ஒப்புக்கொடுப்போமே (2) -(பூசைப் பலிபோல்)

2. அள்ள அள்ளக் குறையா சுரக்கும் அமுதம் நிறை சுனையே
அன்பில் சிறந்து உயர்ந்து நின்ற கல்வாரிப் பலியே
எல்லையில்லா பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவநோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே - (2) - (பூசைப் பலிபோல்)

 3. சோம்பல் அசதி சோர்வனைத்தும் தூரத்தள்ளியே
சீர்நிறைப்பலி ஆவல் நிரம்ப செலுத்திடுவோமே
ஆண்டவனுக்கேற்ற நன்றி ஆராதனையுமே
அளித்து பாவமன்னிப்பருளும் அடைந்திடுவோமே - (2) - (பூசைப் பலிபோல்)


Tamil Catholic songs lyrics


திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe

புதன், 17 ஜனவரி, 2024

சேசுநாதர் புறஜாதியாருக்கும் ஆண்டவர் மூன்று அரசர்கள் திருநாள்: ஜனவரி 6

 "தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் சரிவேசுரனைத் தரிசிப்பார்கள்" என்கிறார் தம் ஆண்டவர் (மத் 5:8). தேவ வார்த்தையாகிய ஆத்துமங்களின் ஒளி உலகில் தோன்றியபோது, உலகமும் குறிப்பாக, திவ்ய இரட்சகரின் வருகைக்காகவே ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இஸ்ராயேல் இனமும் இருளில் மூழ்கியிருந்தது. "அவர் தமக்குரியவர்களிடத்தில் வந்தபோதும், அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. " அவர்கள் உலக செல்வச்செழிப்பிலும், வானளாவிய உலக அதிகாரத்திலும், உலகத்தையே அடக்கியாளும் வல்லமையிலும் மெசையாவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஏழ்மையே உருவான ஓர் உத்தம கன்னிகையின் திருவுதரத்தில் இருந்த உலகத்தின் ஒளியானவரைத் தங்கள் இல்லத்திலும் கூட ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வரவில்லை. சத்திரமும் கூட அவருக்கு இடம் தரவில்லை.

ஆனால் பெத்லகேமிலிருந்து ஏறத்தாழ 1500 கி.மீ. தொலைவில், அநேகமாக பெர்சியாவில் இருந்த மூன்று சோதிட சாஸ்திரிகளுக்குத் தம்மை வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தங்கொள்கிறார். அர்ச். மத்தேயு அவர்களுடைய பெயர்களை நமக்கு அறிவிக்கவில்லை. ஆனால் உரோமைத் திருச்சபையின் பாரம்பரியம், அவர்களுடைய பெயர்கள் கஸ்பார். மெல்கியோர் மற்றும் பல்தசார் என்று அறிவிக்கிறது. அவர்கள் நட்சத்திரங்களை ஆராய்ந்து எதிர்காலத்தை உரைக்கிற அஞ்ஞானப் பொய் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அப்படியிருக்க, யூதர்களில் பெரும் ஞானிகளுக்கும். விவேகிகளுக்கும் தம் உலக ஆகமனத்தை மறைத்துக்கொண்டு, திவ்ய இரட்சகர் இந்தப் புறஜாதியாரான அஞ்ஞானிகள் மூவருக்குத் தம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன? தமது நட்சத்திரத்தைக் கொண்டு அவர்களைத் தம்மிடம் அவர் அழைத்து வந்த காரணமென்ன?

நாம் தொடக்கத்திலேயே கூறியபடி, அவர்கள் தூய இருதயமுள்ளவர்களாய் இருந்தார்கள். தாங்கள் முன்பின் அறியாத நாட்டில், தங்களுக்குத் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்திருக்கிற "யூதர்களின் அரசரைக்" காணும் ஆர்வம் அவர்களுக்கு ஞான சுறுசுறுப்பைத் தருகிறது. ஒட்டகங்களின்மீது அமர்ந்து, 1500 கி.மீ. தூரம் இலக்கு சரியாகத் தெரியாமல், வழியில் வரக் கூடிய வழிப்பறிக் கொள்ளையரின் தாக்குதல், உஷ்ணம், குளிர், மழை, உடல் சோர்வு, போன்ற எந்த ஆபத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல், திவ்ய இரட்சகரைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரே குறிக்கோளோடு அவர்கள் புறப்பட்டார்கள். அந்த பக்தியார்வத்திற்குத் தம்முடைய திவ்ய காட்சியின் மூலம் தேவ பாலன் சம்பாவனையளித்தார்.

அவர்கள் தாழ்ச்சியோடு இருந்தார்கள், அவர்களது பயண காலம் மூன்று மாதங்கள் நீடித்தது என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று மாதங்களுக்குள் குசையப்பர் தம்முடைய திருக்குடும்பம் தங்குவதற்கான ஓர் எளிய வீட்டை அல்லது குடிசையை நிச்சயம் கண்டுபிடித்திருப்பார். இவர்களோ அரசர்கள், ஞானிகள். பிறந்திருப்பவரோ பரம ஏழையான ஒரு பரிசுத்த கன்னிகையின் மடியில், ஏதுமறியாதவராகவும், அனைத்திற்கும் தம் தாயைச் சார்ந்திருப்பவராகவும் இருக்கிற ஒரு பச்சிளங் குழந்தையாயிருக்கிறார். ஆனால் அவரே தங்கள் தேவனும், இரட்சகருமானவர் என்று தங்களுக்கு மேலிருந்து தரப்பட்ட புதிய விசுவாசத்தில் அவர்கள் உறுதியாயிருந்தார்கள். "வீட்டில் பிரவேசித்துப் பாலனை அவர் தாயான மரியம்மாளோடு கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து அவரை ஆராதித்தார்கள்" (மத்.1:11) என்று மத்தேயு அறிவிக்கிறார். இதில் வெளிப்பட்ட உத்தமமான தாழ்ச்சி அவர்களைத் தூய இருதயத்தினர் என்று நிரூபிக்கிறது.

இதன்பின் அவர்கள் தங்கள் சர்வேசுரனும், இரட்சகருமான திவ்ய பாலனுக்குத் தந்த காணிக்கைகளின் மூலம், தாங்கள் அவரைத் தங்கள் அரசராகவும் (பொன்), சர்வேசுரனாகவும் (தூபம்). இரட்சகராகவும் (மீரை) ஏற்றுக்கொண்டதை அவர்கள் அறிக்கையிட்டார்கள். இவ்வாறு, கீழ்த்திசையிலிருந்து ஓர் உலகத்தன்மையான பயணத்தை மட்டுமல்ல, மாறாக, அவர்கள் அஞ்ஞானவாதத்திலிருந்து புறப்பட்டு, நித்திய இரட்சணியத்தின் கர்த்தராகிய திவ்ய பாலனை நோக்கித் தங்கள் இருதயங்களிலும் ஒரு ஞானப் பயணத்தை நடத்தி, அவரை வந்தடைத்திருந்தார்கள். தங்களுக்குத் தரப்பட்ட விசுவாச ஒளியை, எந்தத் தடையைப் பற்றிய கவலையும் இன்றி அவர்கள் இறுகப் பற்றிக்கொண்டார்கள். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு, எதிர்காலம் உரைக்கும் சோதிட சாஸ்திரிகளாக, பொய் மதத்தினராக இருந்தவர்கள். உண்மையில் மனுவுருவான சர்வேசுரனால் மீட்டு இரட்சித்துக் கொள்ளப்பட்ட முதல் புறஜாதியாராக ஆனார்கள். மேலும், புறஜாதியாரின் பிரதிநிதிகளாயிருந்து, அவதரித்த வார்த்தையானவர் யூதர்களுக்கு மட்டுமின்றி, புறஜாதியாருக்கும். உலகம் முழுவதற்குமே இரட்சகராயிருக்கிறார் என்று தங்கள் செயல்களின் மூலம் அவர்கள் அறிக்கையிட்டார்கள். இந்த விசுவாசம் சிறு குழந்தை வடிவில் சர்வேசுரனைத் தரிசிக்கும்" பாக்கியத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

அவர்கள் கள்ளங்கபடற்றவர்களாகவும் இருந்தார்கள். யூதர்களின் இராஜாவாயிருந்த ஏரோதிடமே சென்று, "யூதருடைய இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? ஏனெனில் கீழ்த் திசையில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை ஆராதிக்க வந்தோம்" என்று அவர்கள் விசாரித்ததில் அவர்களுடைய இந்த மாசற்ற தன்மை வெளிப்படுகிறது. மேலும், சேசுபாலனைக் கண்டு, அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கைகள் செலுத்தியபின், தங்களுக்குத் தரப்பட்ட தேவ கட்டளையின்படி, வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றதன் மூலம், அவர்கள் தங்கள் கீழ்ப்படிதல் என்னும் புண்ணியத்தையும் நிரூபிக்கிறார்கள்.

நாமும் இந்தப் பரிசுத்த ஞானிகளைப் போல, திவ்ய பாலனை நோக்கி, நம் இருதயங்களில் ஒரு ஞானப் பயணத்தை நிகழ்த்தி அவரிடம் வந்து சேர்வோமாக. நாமும் ஒரு வகையில் அஞ்ஞானிகள்தான். உலக செல்வத்தையும், சரீர இச்சையையும், பொன்னையும், பொருளையும், மண்ணையும் தெய்வமாக ஏற்று ஆராதிக்கிற விக்கிரக ஆராதனையாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். அவரோ நேசப் பொறாமையுள்ளவராயிருக்கிறார். தம்மை விட ஒருவன் தன் சொந்தத் தந்தையையும், தாயையும், மனைவி, மக்களையும் கூட அதிகமாக நேசிப்பதை அவர் அனுமதிப்பதில்லை. பிளவுபட்ட நேசத்தை அவர் விரும்புவதில்லை. ஆகையால் கீழ்த்திசையின் ஞானிகளைப் போல நாமும் நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத் தோடும், முழு சத்துவத்தோடும் அவரைத் தேடி வந்து, நம் தேவசிநேகமாகிய பொன்னையும், நம் தாழ்ச்சியாகிய மீரையையும், நம் ஆராதனையாகிய தூபத்தையும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம். அவருக்கு மட்டுமே சொந்தமாயிருப்போம் என்று வாக்களித்து, இத்திருநாளின் பேறுபலன்களை நிறைவாய்ப் பெற்றுக்கொள்வோம்.

மரியாயே வாழ்க! 

பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்

1979 ஆம் ஆண்டில் குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம் மிகக் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட திருச்சபையால் அனுமதிக்கப்பட்டது.இந்த ஆய்வைச் செய்தவர் டாக்டர் பிலிப் கல்லதரன் என்பவர் ஆவார். இவர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உயிர் இயம்பியல் ஆய்வு வல்லுனர் ஆவார். இவர் ஓர் ஒவியரும். புகைப்பட கலைஞரும், விஞ்ஞான எழுத்தாளரும் கூட. பழைய சித்திரங்களைப் பற்றிய விமர்சன ஆய்வுக்காகப் பரிந்துரைக்கப்படும் செயல்முறைப்படி அகச்சிவப்பு ஒளியில் இவர் முதல் தடவையாக நம் மாதாவின் அற்புதச் சித்திரத்தை மிக விஸ்தாரமாகப் புகைப்படங்கள் எடுத்தார். அப்போது இந்த சித்திரத்தில் சில சிறிய செயற்கை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவை மாமரியைச் சுற்றியுள்ள சூரியக் கதிர்கள், அவர்களது நீல நிற மேற்போர்வையின்மீது காணப்படும் பொன்னிற நட்சத்திரங்கள், பொன்னிறத் துணிப்பின்னல் அலங்காரங்கள். இருண்ட நிலவு. அலங்கார நூற்குஞ்சங்கள், நிலவின் காணப்படும் தேவதூதரின் உருவம் போன்றவை ஆகும். இந்தச் செயற்கை அலங்காரங்களில் காணப்பட்ட வண்ணங்கள் காலத்தால் சிதைந்தும், மங்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 1629-1634-ம் வருடங்களில் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்களுக்குப் பிறகு மனிதக் கைகளால் வரையப்பட்டிருக்கவோ, அல்லது சேர்க்கப்பட்டிருக்கவோ வேண்டும். இந்தப் பெருவெள்ளங்களால் இந்தப் பரிசுத்த சித்திரத்தைத் தாங்கியிருந்த டில்மா என்னும் சாக்குத் துணி போன்ற மேலாடை சிறிது பாதிக்கப்பட்டது.(மாதாவைச் சுற்றிக் காணப்படும் சூரியக் கதிர்கள் இச்சித்திரத்தின் தொடக்க கால செவ்வித்திய நகல்களில் காணப்படவில்லை என்பது இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றது.) ஆனால் மாமரியின் முகம் மற்றும் உருவம் ஆகியவை உட்பட சித்திரத்தின் எஞ்சியிருக்கும் பகுதியைப் பொறுத்த வரை, டாக்டர் சுல்லஹனின் முடிவு மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. "மேற்போர்வை ஒருவித இருண்ட பச்சை நீல நிறமுடையதாக உள்ளது. இது விளக்கப் பட முடியாதது. ஏனெனில் இத்தகைய நிறமிகள் எல்லாமே நிரந்தரமற்றவை. காலப்போக்கிலும், குறிப்பாக வெப்பமான காலநிலைகளிலும், மிக வேகமாக மங்கி விடக் கூடியவை. செவ்வித்திய மாயன் நீலநிற சுவர்ச் சித்திரங்கள் ஏற்கனவே மிக மோசமாக மங்கிப்போய் விட்டன. ஆயினும் இந்த நீல நிற மேற்போர்வை மட்டும் ஏதோ போன வாரம்தான் வரையப்பட்டது போல பிரகாசமான நிறத்துடன் காணப்படுகிறது. "மாதாவின் மேலங்கியைப் பொறுத்த வரை, எல்லாவற்றிலும் மேலாகக் குறிப்பிடத் தக்கது வியக்கத்தக்க விதத்தில் அது வீசும் ஒளியாகும். கண்ணால் காணக் கூடிய அதிகமான ஒளிப்


பிரதிபலிப்பு அதில் காணப்படுகிறது. ஆனாலும் அகச் சிவப்புக் கதிர்களில் அது ஊடுருவிக் காணக்கூடியதாக இருக்கிறது... நீல நிற மேற்போர்வையிலிருப்பது போல இளஞ்சிவப்பு ஆடையின் ஒளி-நிழல் வேறுபாடானது (Shade of colour), வர்ணப்பூச்சோடு கலந்து காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறமியின் கீழ் எந்த ஒரு செயற்கையான ஓளியமும் காணப்படவில்லை. "இந்த இளஞ்சிவப்பு நிறமி வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததாகத் தோன்றுகிறது.இந்த ஓவியத்தில் நிஜமாகவே விநோதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று, அந்த டில்மா சரியான அளவுடையது அல்ல என்பதாகும். அது மட்டுமல்ல, அதன் மீது சித்திரங்களைப் பாதுகாக்கக் கூடிய வார்னிஷ் பூச்சுக்கான தடயமேயில்லை. இப்படி எந்த விதமான பாதுகாப்புக்குரிய மேற்பூச்சும் இல்லாதிருந்தும், மாதாவின் உள்ளங்கியும், மேற்போர்வையும், இப்போதுதான் நெய்யப்பட்டவை போலப் பிரகாசமாகவும், நல்ல நிறங்களுடனும் இருக்கின்றன. மேலும் நெய்யப்பட்ட இதன் இழைகள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல. ஆகவே அதிக இடை வெளிகள் உள்ள சாக்குத் துணி போன்ற இந்தத் துணியில் இவ்வளவு அற்புதமான நுணுக்கங்கள் நிறைந்த சித்திரத்தை வரைவது என்பதற்கு சாத்தியமேயில்லை. "குவாடலூப்பே கன்னிகையின் முகத்தோற்றம் ஒரு கலை அற்புதமாகும். வடிவழகிலும், பாவனையை வெளிப்படுத்தும் எளிமையிலும், திறங்களைப் பயன்படுத்தியுள்ள கலைநுட்பத்திலும் உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இந்தச் சித்திரம் எந்த விதத்திலும் குறையாததாக இருக்கிறது. மேலும் இதே போன்ற முறையில் வரையப்பட்டுள்ள எந்த ஒரு சித்திரத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை."

 "இந்தச் சித்திரத்திற்குத் தத்ரூபமான தோற்றம் தருவதில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் உண்மையாகவே அற்புதமானவை. நம் வார்த்தைகளுக்கு எட்டாதவை. அவற்றில் ஒன்று, சரியான அளவுகளில் இல்லாத அந்த டில்மாவில் இயற்கையாகயே இருக்கும் மடிப்பு களை அல்லது பிசிறுகளை, அல்லது கசங்கல்களைக் கூட, அந்த ஓவியத்திற்கு ஆழமும் உயிரோட்டமும் தரும் விதத்தில் பயன்படுத்தியிருப்பது ஆகும். குறிப்பாக வாயில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அந்தத் துணியின் ஒரு முரட்டு இழை, துணியின் மற்றப் பகுதிகளின் மட்டத்திற்குச் சற்று மேலாக எழுந்துள்ளது. இது உதட்டின் மேற்பகுதியின் விளிம்போடு மிக மிகச் சரியாகப் பொருந்துகிறது! இதே போன்ற முரட்டுத்தனமான குறைபாடுகள் இடது கன்னத்தின் நிழலூட் டப்பட்ட பகுதியிலும் வலது கண்ணின் மேற்பகுதியிலும், வலப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த ஓவியத்திற்கு ஒரு விதமான முப்பரிமாணத் தோற்றம் கிடைத்து, அதன் தத்ரூபத் தோற்றம் நுல்லியம் பெறுகிறது. இப்படி தத்ரூபத் தோற்ற விளைவைத் தரும்படி ஏற்கனவே மிகத் துல்லியமான இடங்களில் மடிப்புகளும், பிசிறுகளும் உள்ள ஒரு டில்மாவை எந்த ஒரு மனித ஓவியனும் தேர்ந்தெடுப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.

இது தற்செயலாக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. கண்கள், மற்றும் தலைமுடியின் கறுப்பு நிறம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரும்பு ஆக்ஸைடோ அல்லது வேறு ஏதாவது நிறமியோ அல்ல. ஏனெனில் அவை காலப் போக்கில் உடைந்து, பழுப்பு நிறமாகவும் மாறி விடும். மற்றொரு மிக வியப்பான அம்சம் முகத்திலும், கரங்களிலும் காணப்படும் ஒளி-நிழல் வேறுபாடாகும். வர்ணக் கலவையில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் இயற்கை விளையு எப்படியிருக்குமோ, அவ்வாறே அந்த முரட்டு டில்மாவிலிருந்தும் பிரதிபலிக்கிறது!... தூரத்திலிருந்து பார்க்கும் போது, நிறமியும், துணியின் மேல்மட்ட கலைத்திறனும் ஒன்றோடொன்று கலக்கிற இடத்தில், ஒலிவ நிறமான திவ்ய கன்னிகையின் அதியற்புத அழகு ஏதோ மந்திரம் போட்டது போல் வெளிப்படுகிறது. அவர்களது முகபாவனை வணக்கத்துக்கு உரியதாகவும். அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் திடீர் திடீரென மாறி மாறித் தோன்றுகிறது. அவர்கள் செவ்விந்தியப் பெண்ணாகவும், அதே வேளையில் ஐரோப்பியப் பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். ஒலிவ நிறத் தோலுடனும், ஆனாலும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறார்கள்!"

"மேலும், மிகப் பெரும் அளவில் பெரிதாக்கப்பட்ட மாமரியின் வலது கண்ணின் புகைப்படங்களில் மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஹுவான் டியேகோ போலத் தோன்றுகிறார். மற்றொருவர் சுமர்ராகா ஆயர். மூன்றாமவர் ஆயருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட ஹுவான் கொன்சாலஸ் போலத் தோன்றுகிறார். (பிற்பாடு இவர் குவாடலூப்பே மாதா பக்தியின் ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார்.) ஹுவான் டியேகோ, ஹவான் கொன்சாலஸ் ஆகிய இருவரின் ஓவியங்களும் நம்மிடமுள்ளன. இவை, தேவ அன்னையின் கண்ணில் உள்ள இரண்டு உருவங்களோடு ஒத்துப்போகின்றன."

டாக்டர் கல்லஹன் மாதாவின் அற்புதச் சித்திரத்திலுள்ள வலது கண்ணை ஆஃப்தால் மாஸ்கோப் என்னும் கண் பரிசோதனைக் கருவியின் முன் வைத்துப் பரிசோதித்தபோது, ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார். அது படத்திலுள்ள கண்ணைப் போலவே அவருக்குத் தோன்றவில்லை. ஒரு உண்மையான மனிதக் கண்ணிலுள்ள விழித்திரை, லென்ஸ், கண் ரசங்கள் போன்ற அனைத்து பாகங்களையும் அவரால் துல்லியமாக அதில் காண முடிந்தது மட்டுமின்றி. ஒளி கண்ணில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் அனைத்து அம்சங்களையும் அந்தச் சித்திரக் கண்ணிலும் அவர் கண்டார். மாதாவின் கண்கள் சற்று மூடிய தோற்றமாக இருந்தன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எந்த அளவுக்கு டாக்டர் கல்லஹன் இந்த அதிசயத்தால் கவரப்பட்டார் என்றால், ஒரு கணம் அவர் தாம் அற்புதச் சித்திரத்தின் முன் இருப்பதையே அடியோடு மறந்தவ ராக, "கொஞ்சம் தலையை உயர்த்துங்கள் அம்மா!" என்றார்! “இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. இது மனித அறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரியம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்" என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ, அற்புதங்களின் அன்னையே! பரிசுத்த குவாடலூப்பே மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி


  நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
திருச்சி, 1941


தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,

வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.

பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.

பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.

பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.

இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.

மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.








வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

வியாழன், 21 டிசம்பர், 2023

Sacramentals - An explanation in Tamil

 அருட்கருவிகள் - ஓர் விளக்கம்
Sacramentals - An explanation


அருட்கருவிகள் - உதாரணங்கள்


1. நம்மை அர்ச்சிப்பதற்கு தேவதிரவிய அனுமானங்களைத் தவிர வேறே வெளி வழிவகைகள் உண்டா?

திருச்சபை உபயோகிக்கும் அருட்கருவிகள் உண்டு.

2. அருட்கருவிகள் என்பதற்கு அர்த்தமென்ன?

தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாக, திருச்சபை தனது மன்றாட்டினால் நமக்கு வேண்டிய சில நன்மை சகாயங்களை, விசேஷமாய் ஞான நன்மைகளை, அடைந்து கொடுக்கும்படி உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கிருத்தியங்களே (செயல்கள்) அருட்கருவிகள் எனப்படும்.

3. இவ்விடம் கிருத்தியங்கள் அல்லது செயல்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் தற்காலமாயிருந்து. அதற்குப்பின் நிலையற்றதாயிருந்தால் கிருத்தியம் அல்லது செயல்கள் எனப்படும். உதாரணமாக: மந்திரித்தல்.

4. இவ்விடம் பொருட்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் நிலையுள்ளதாயிருந்தால், அது பொருள் எனப்படும்.

உதாரணமாக: தீர்த்தம், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள் முதலியவைகள்.

5. அருட்கருவிகள் எப்படித் தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாயிருக்கின்றன?

அருட் கருவிகளும் தேவதிரவிய அனுமானங்களைப் போல், தம் வழியாய் அடையக்கூடுமான இலௌகிக நன்மைகளையோ அல்லது ஞான நன்மைகளையோ குறித்துக்காட்டும் வெளியரங்கமான அடையாளங்களாயிருக்கின்றன.

6. தேவதிரவிய அனுமானங்களுக்கும் அருட்கருவிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

(1) தேவதிரவிய அனுமானங்களெல்லாம் சேசு கிறீஸ்துநாதரால் உண்டாக்கப்பட்டன. அருட்கருவிகளோ திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் திருச்சபை புதுத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் புது அருட்கருவிகளை உண்டாக்கலாம்.

7. அருட்கருவிகள் எத்தனை வகைப்படும்?

அவைகளை ஆறு பிரிவாய்ப் பிரிக்கலாம்.

(1) செபங்கள் அதாவது திருச்சபையால் கற்பிக்கப்பட்டு அதன் பெயரால் சொல்லப்படும் செபங்கள். உதாரணமாக: ஞானஸ்நானம், அவஸ்தைப்பூசுதல் கொடுக்கப்படும்போது சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த செபம், பூசைச் செபம், திருச்சபையின் கட்டளைப்படி குருக்கள் செபிக்கும் சங்கீதமாலை முதலியவைகள். ஒவ்வொருவரும் தனித்தனியே செபிக்கும் செபம் அருட்கருவியல்ல.

(2) தீர்ந்தத் தெளித்தலும், திருப்பூசுதலும்,

(3) மந்திரிக்கப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தல்

(4) பூசையின் துவக்கத்திலும், திவ்விய நன்மை கொடுக்கும்போதும், கட்டளை செபம் செபிக்கும்போதும் சொல்லப்படுகிற பாவசங்கீர்த்தன மந்திரம்.

(5) திருச்சபை கற்பிக்கிற தானதர்மங்களும், ஆத்தும சரீர சம்பந்தமான சகல தமக்கிரியைகளும்,

உதாரணமாக: விசுவாசப்பரம்புதல், பாலர் சபை, அர்ச். இராயப்பர் காசு முதலியவைகளுக்குச் செய்யும் தர்மம், ஞானோபதேசம் கற்றுக் கொடுத்தல், வியாதிக்காரரைச் சந்தித்தல் முதலியவைகள். மற்றப்படி ஒவ்வொருவரும் தன் இஷ்டப்படி செய்யும் தானதர்மம் அருட்கருவியல்ல.

(6) திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டு ஜனங்கள் பேரிலாவது, யாதொரு பொருள் பேரிலாவது, அர்ச். பாப்பாண்டவர். மேற்றிராணிமார்கள், குருக்கள் கொடுக்கிற சகலவித ஆசீர்வாதங்களும், அவ்விதமாய் மந்திரிக்கப்பட்ட பொருட்களும்.

8. அருட்கருவிகளால் விசேஷமாய் விளையும் நன்மைகள் எவை? 

பலவித நன்மைகளை, விசேஷமாய் ஞான நன்மைகளை வருவிக்க அருட்கருவிகளுக்குச் சக்தியிருக்கின்றது. (1) நம்மிடத்தில் ஸ்திரமான பக்திப் பற்றுதலை எழுப்பி, நாம் பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்யும்படி வேண்டிய உதவி வரப்பிரசாதத்தைப் பெறுவிக்கிறதுமின்றி, பாவப்பொறுத்தலை அடைய நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

(2) மனப்பற்றுதலற்ற சகல அற்பப்பாவங்களும் மன்னிக்கப்படும்.

(3) பசாசானது இருக்கக்கூடிய இடங்களிலும், ஆட்களிலும், பொருட்களிலும் நின்று அதைத் துரத்துகின்றன.

(4) அநேக பிரபஞ்சத் தீமைகளினின்று இரட்சிக்கின்றன. இப்படியே வியாதி, தொத்துநோய், இடி, பஞ்சம் முதலிய துன்ப துரிதங்களிலும், ஆபத்து விபத்துக்களிலும் நின்று காப்பாற்றுகின்றன. மேலும் பற்பல இலௌகீக நன்மைகளையும் அளிக்கின்றன. உதாரணமாக: மழை, சௌக்கியம், வெள்ளாண்மை.

(5) மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு இன்னும் வரவேண்டிய அநித்திய ஆக்கினையும் நீங்கிப்போகலாமென்பது சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.

9. அருட்கருவிகளுக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு வேண்டிய ஆயத்தம் என்ன?

விசுவாசம், பக்தி, பாவங்களின் மேல் மனஸ்தாபம் முதலிய பற்றுதல்கள் அவசியம். மெய்யான மனஸ்தம் இல்லாமல் யாதொரு அற்பப்பாவமும் மன்னிக்கப்படாது. அருட்கருவிகளைப் பெறுபவர்களின் ஆயத்தத்துக்குத் தகுந்தபடி அதிகமான பலனைப் பயக்குவதினால், அவைகளால் வரும் நன்மைகளை ஏராளமாய் அடையும்படி நல்ல ஆயத்தமாயிருக்க வேண்டியது

புதன், 20 டிசம்பர், 2023

சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்! - Feast of Annunciation (March - 25)

Source: Salve Regina, March 2007 


சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!

வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)


ரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!

அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி!  ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது. 

ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)

மாமரியின் தகுதி!

சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு  என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.

திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.

மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!

கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.

கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 18 - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica)

 அர்ச். மோனிக்கம்மாள்

"ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன"




பிரசித்திப்பெற்ற வேதபாரகரும் திருச்சபைத் தூண்களில் ஒருவருமாகிய அர்ச். அகுஸ்தீன் என்பவரின் தாயாகிய மோனிக்கம்மாள், ஆப்பிரிக்காவின் வடபாகத்தில் பக்தியுள்ள குடும்பத்தில் 332-ம் ஆண்டில் பிறந்தவள். மோனிக்காவின் தாய் தந்தையர் தங்கள் பிரிய குமாரத்தியைப் புண்ணியவதியான ஓர் வேலைக்காரி வசம் சிறு வயதிலேயே ஒப்படைத்திருந்தனர். இந்த வேலைக்காரி புகட்டிய நற்புத்திமதி, மோனிக்கம்மாள் தெய்வபயத்திலும் தல்லொழுக்கத்திலும் நாளடைவில் அபிவிருத்தியடைய தூண்டுகோலாயிருந்தது. திருமண பருவம் வந்தவுடன், மோனிக்கம்மாள் பத்ரீசியுஸ் என்னும் பிற மத வாலிபனை மனம்புரிய நேர்ந்தது. இவள் தனது அடக்கவொடுக்கம், கீழ்ப்படிதல், அன்பு, தயை, தாட்சண்யம் முதலிய அருங்குணங்களால் தன் கணவனின் நேசபாசத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். கணவன் அன்புடையவனாயிருந்த போதிலும் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். அவன் கோபமாயிருக்கும்போது மோனிக்கம்மாள் எதிர்த்துப் பேசாமல் பொறுமையாயிருப்பாள். கோபம் தணிந்தவுடன் மிக்க அன்புடன் அவனுக்கு தற்புத்தி புகட்டி அவனது சீர்கேடான நடத்தையைச் சீர்திருத்த முயற்சிப்பாள். கடைசியாக இப்பதி விரதையின் ஜெகுபத்தினால் பத்ரீசியுள் மனத்திரும்பி பாக்கியமான மரணம் அடைந்தான். மோனிக்கம்மாளின் அயல் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரோடு சண்டையிட்டு அடி உதை பட்டு முகத்தில் காயங்களோடு வந்து அவளிடம் முறையிடுவர். "உங்கள் நாவை அடக்கினால் இத்தகைய கேடு உங்களுக்கு வராது" என்பதே மோனிக்கம்மாள் இப்பெண்களுக்கு அடிக்கடி கூறும் புத்திமதி. இந்தப் புத்திமதியை நன்குணர்ந்து இதன்படி நடந்து கொண்டவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி சமாதானம் நிலைபெறும். மற்றவர்கள் குடும்பங்களோ ஓயாத போர்க்களமாகவே இருக்கும். மோனிக்கம்மாளுக்கு ஏழை

களின் மீது அணைகடந்த இரக்கமுண்டு. தனது கையினால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பது அவளுக்கு ஆனந்தம். அனுதினமும் திவ்விய பலிபூசை காணத் தவறமாட்டாள். காலை மாலை தேவாலயத்தில் நடக்கும் பொது ஜெபத்திற்கு போவது இவ்வுத்தமியின் சிறந்த வழக்கம்.

மோனிக்கம்மாளுக்கு மோட்சவாசிகள்மீது உருக்கமுள்ள பக்தி பற்றுதலுண்டு, வேதசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அவர்களுடைய உதவியை அடிக்கடி இரந்து மன்றாடுவாள். வேத அனுசாரத்தைச் சார்ந்த எதையும் சிறிதாக எண்ணி அலட்சியம் செய்யமாட்டாள். சர்வேசுரனுக்கடுத்த காரியங்களில் சகலமும் பெரிதே என்று மதித்து நடந்துவந்தாள். தேவ சிநேகத்தை முன்னிட்டுச் செய்யும் அற்ப நற்கிரிகைகூட தேவ சமுகத்தில் மிக்கப் பேறுபெற்ற மகத்தான புண்ணிய முயற்சியாக மாறிவிடுமென்பது அவளின் திடமான நம்பிக்கை.

மோனிக்கம்மாள் ஜெபத்திலும் தபத்திலும் வெகுநேரம் செலவழித்த போதிலும் தனது பிள்ளைகளைத் தெய்வபக்தியில் வளர்ப்பது கிறீஸ்தவத் தாயின் கடமை என எண்ணியிருந்தான். இவளுக்கு அகுஸ்தீன், நவீஜியுஸ் என்னும் இரண்டு புத்திரர் இருந்தனர். மூத்த குமாரனாகிய அகுஸ்தீன் கல்வி கற்க கார்த் தேஜ் நகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான். இவ்வாலிபன் பக்தியுள்ள தாயின் கண்காணிப்பிலிருந்து வெகு தூரம் சென்ற பின் மனிக்கேயர் என்னும் பதிதர் வலையில் சிக்கித் தனது ஞானக் கடமைகளைக் கைநெகிழ்ந்து எதேச்சையாய்த் திரிந்து தன் அன்புள்ள தாயின் இருதயத்திற்கு அளவற்றத் துயரத்தை வருவித்தான். மோனிக்கம்மாள் தனது மகனுக்கு எவ்வளவுதான் நற்புத்தி கொல்லியும் பயனற்றுப்போனதை கண்டு, அவனுக்காக அழுது கண்ணீர் சிந்தி இடைவிடாது தேவ இரக்கத்தை மன்றாடுவாள்.

அகுஸ்தீன் உலக சாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சிபெற்று பட்டங்களைப் பெற்ற பின்னர், தாய்க்குத் தெரியாமல் கப்பல் ஏறி அன்னியதேசம் சென்று தனது இஷ்டப்படி திரியலாம் என்றெண்ணி இத்தாலிக்குப் பயணமானான். மகன் தப்பித்து ஓடிவிட்டான் என்று அறித்த அன்புள்ள அன்னை அவனைத் தேடிப்பிடிக்கும்படி மறு கப்பலில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள். மிலான் பட்டணத்தில் தாயும் மகனும் ஒருவரை யொருவர் சந்தித்தனர். வேதபாரகராகிய அர்ச். அம்புரோஸ் அச்சமயம் மிலான் நகர் ஆயராயிருந்தார். இந்தப் பரிசுத்த ஆயரின் புத்திமதிகளையும், போதனைகளையும் கேட்டு அகுஸ்தீன தன் பதித அபத்தங்களை விலக்கி, கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வக் குமாரன் ஆனார். இந்த ஊதாரிப் பிள்ளை மனந்திரும்பி தந்தை வீடு சேர்ந்ததை அறிந்த பக்தியுள்ள தாய் ஆண்டவருக்குத் தாழ்மையுடன் நன்றி சமர்ப்பித்து, "ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன" என்று மன்றாடினான். 

அகுஸ்தீன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பியதுமன்றி. குருப்பட்டம் பெற்று. தன் கல்வி, சாதுரியம், திறமை, சத்துவம் சகலத்தையும் தேவ ஊழியத்தில் செலவிடத் தீர்மானித்திருப்பதாக தனது அன்பு தாய்க்குத் தெரிவித்தார். இதைக் கேட்ட உத்தம தாய் ஆனந்தக் கண்ணீர் சொரித்து, தனது மகனை தோக்கி: “அப்பா, மகனே. என் வேலை முடித்துவிட்டது. நீ கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து சர்வேசுரனுடையப் பிள்ளையாயிருப்பதைப் பார்க்கும் பொருட்டே சிறிதுகாலம் இவ்வுலகில் வாழ ஆசைப்பட்டேன். நல்ல ஆண்டவர் நான் கேட்டதற்கு மேல் எனக்கு அளித்தருள கிருபை செய்திருக்கிறார். நீ திருச்சபையில் சேர்ந்தது மாத்திரம் போதாதென்றாற்போல் உன்னைத் தமது திவ்விய ஊழியத்திற்கும் தெரிந்துகொண்டார். எனது பாக்கியமே பாக்கியம்" என்றாள். மோனிக்கம்மாளின் அந்தரங்க ஆவல் முற்றிலும் நிறைவேறியது. இனி மரணத்திற்கு ஆயத்தம் செய்தாள். அவளுடைய குமாரர் இருவரும் தங்கள் சொந்த தேசமாகிய ஆப்பிரிக்காவுக்குத் தாயை அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இத்தாலியின் துறைமுகப்பட்டனமாகிய ஓஸ்தியாவில் மோனிக்கம்மாளுக்கு கடின ஜுரம் கண்டது. பிள்ளைகள் தன்னைச் சொந்த தேசத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாயிருப்பதை அறிந்து மோனிக்கம்மாள் சொல்வாள்: "என் பிரிய மக்களே. தான் அன்னிய நேசத்தில் இறந்து என் சரீரம் நமது நாட்டிற்குத் தூரமான நாட்டில் புதைக்கப்பட்டாலென்ன? ஆண்டவருக்குத் தூரம், சமீபம் உண்டோ? உலக முடிவில் மாமிச உத்தான நாளில் என் சரீரம் இருக்குமிடம் ஆண்ட வருக்குக் தெரியாதோ? மற்றவர்களோடு என்னையும் எழுப்பி எனக்கு மோட்ச பாக்கியம் அளித்தருளுவாரன்றோ? உங்கள் தாயை எவ்விடத்திலென்கிலும் அடக்கம் பண்ணுங்கள். என் சரீரத்தைப்பற்றி எனக்கு யாதொரு கவலையுமில்லை. ஆனால் ஒரேயொரு மன்றாட்டு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் மரித்தபின் என்னை மறவாமல் என் ஆன்ம இளைப்பாற்றிற்காக திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுங்கள். எனக்காக அடிக்கடி வேண்டிக்கொள்ளுங்கள்." 

இவ்வாறு மோனிக்கம்மாள் தனது அருமைப் பிள்ளைகளுக்குக் கடைசி அறிவுரை கூறிய ஐந்தாம் நாள் இக்கண்ணீர் கணவாயை விட்டு கருணா கரத்து கடவுளாகிய தனது கர்த்தர் பதம் சென்றாள். அவள் மரித்தது

387-ம் வருடம். தாயை அடக்கம் பண்ணியபின் இரு சகோதரரும் தங்கள் சொந்த தேசம் திரும்பினர். மூத்தவர் தனது தீர்மானப்படி குகுப்பட்டம் பெற்றார். அவருடைய பரிசுத்த தனத்தையும் அபாரக் கல்வியறிவையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் அவரை ஆயராக நியமித்தார். அருஸ்தின் தேவ ஊழியத்தில் அயராது உழைத்து அதேக அரிய நூல்களை எழுதித் திருச்சபையின் புகழ்பெற்ற வேதபாரகராக இன்றும் விளங்குகிறார்


அர்ச். மோனிக்காம்மாளுக்கு புனிதர் பட்டம் 390ம் ஆண்டு Pope . Siricius  அவர்களால் கொடுக்கப்பட்டது. 

அவளுடைய திருநாள் மே மாதம் 4ம் தேதி.


Source: Sancta Maria 2018 - April - June

அருட்கருவிகள் - கோவில் மணிகள் (Church Bells)

 கோவில் மணிகள்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




பற்பல பொது நிகழ்வுகளுக்கும் வேத நிகழ்வுகளுக்கும் மணி அடிக்கிற வழக்கம் தொன்மையானது. எஜிப்தியர் ஓசரிஸ் என்னும் தெய்வத்தை வழிபடுவதற்கு மணி உபயோகித்தார்கள் என்று தெரியவருகிறது. ஆனால் அந்த மணிகள் வெகு சிறியவையாகவும், தட்டை வடிவமான சேமக்கல் உருவமாகவும் இருந்தன. மோயீசன் எஜிப்து தேசத்துக்குக் குருக்களுடைய பழக்க வழக்கத்தை யூதருடைய ஆராதனை முறையில் ஏற்படுத்தினார் என்று சொல்ல நியாயம் உண்டு.

உரோமையர் தங்கள் வேத சடங்குமுறைகளில் மணி உபயோகப்படுத்தினதாகத் தெரியவில்லை. சண்டையில் ஜெயித்தபின் சந்தோஷங் கொண்டாடுவதற்காக நடத்தின ஊர்வலங்களில் மணி அடித்துக்கொண்டு போவது அவர்களுக்குள் வழக்கமாயிருந்தது.

கிறீஸ்தவ ஆலயங்களில் மணியின் உபயோகம் கி.பி. 400-ம் ஆண்டில் ஏற்பட்டது. இத்தாலியாவிலுள்ள நோலா நகரத்து மேற்றிராணியாராகிய பவுலினுஸ் என்பவர் முதன்முதல் இந்த வழக்கத்தை உண்டு பண்ணினார் என்று கூறுகிறார்கள். அக்காலங்களில் தேவாராதனை சடங்குகளுக்கு மட்டுமின்றி, யாதொரு அபாயத்தை ஜனங்களுக்கு அறிவிப்பதற்காகவும் கோவில் மணியை அடிப்பார்கள். இதனிமித்தம் தேவாலயங்களில் மணிகள் அமைக்கிற வழக்கம் வெகு துரிதமாய் எங்கும் பரவிற்று. நமது நாட்டில் இந்தப் பூர்வீக வழக்கத்தை அநுசரித்து, இன்னும் சிற்சில கிராமங்களில் நெருப்புப்பிடித்தல் போன்ற விபத்துக்களை அறிவிப்பதற்குக் கோவில் மணியை அடிப்பதுண்டு. கோவில் மணி உபயோகம் கி.பி. 604-ம் ஆண்டில் சபினியன் என்னும் பாப்பானவர் காலத்தில் திருச்சபையின் அங்கீகாரம் பெற்றது. சிறிது காலத்துக்குப் பிறகு மணியை மந்திரிப்பதற்கு விசேஷ சடங்கு ஒன்று ஏற்பாடாயிற்று. கோவில் கோபுரங்களில் பெரிய மணிகளை அமைக்க ஆரம்பித்தது 11-ம் நூற்றாண்டுக்கு முன் அல்லவென்று சொல்லலாம்.

ஐரோப்பாவிலுள்ள பலவித காட்சிசாலைகளில் பழமையான பல மணிகளைக் காணலாம். விசேஷமாய் அயர்லாந்து தேசத்திலும், ஸ்காட்லாண்டு தேசத்திலும் வெகு பூர்வீகமான மணி வகைகள் இன்றும் இருக்கின்றன. அவைகளில் சில சதுர வடிவமாகவும், வெண்கலம் அல்லது இரும்புத் தகடுகளால் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. இதனால் அவைகளின் நாதம் கேட்பதற்குக் கோரமாய் இருந்ததுமல்லாமல், இக்காலத்து மணிகளைப்போல் அவ்வளவு ஓசையுள்ளதுமல்ல என்பது நிச்சயம்.


கீழ்த்திசை கிரேக்க ஆலயங்களில் 9-ம் நூற்றாண்டில் மணி உபயோகம் ஆரம்பித்தது. ரஷ்ய தேசத்திலுள்ள பெரிய மேற்றிராசனக் கோவில்களில் தான் உலகப் பிரசித்திப் பெற்ற மணிகள் இருந்தன. எல்லாவற்றிலும் மிகப் பெரிதான மணி மாஸ்கோ பட்டணத்தில் உள்ளது. அது 19 அடி உயரமும், சற்றேறக்குறைய அதேயளவு குறுக்களவிலும் இருந்தது.

சில தேவாலயங்களில், 8, 12, அல்லது 14 மணிகள் வரிசையாய்த் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இவைகள், சங்கீதத்தின் எழு ஸ்வரங்களும் தொனிக்கும்படியாக வார்க்கப்பட்டவை. இவைகள் அடிக்கப்படும்போது, செவிக்கு இனிமையான நாதத்தையும், வெகு தூரம் கேட்கக்கூடிய அளவில் ஓசையையும் உண்டாக்குகின்றன என்பது சொல்லாமலே விளங்கும். குறிப்பான சில வசனங்கள் மணிகளில் செதுக்கப்பட்டிருப்பது சகஜம். அவ்வசனங்கள் மணியின் பிரயோகத்தை எடுத்துரைக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பழைய ஆலயங்களில் அநேக மணிகளின் மேற்பரப்பில் செதுக்கப்பட்டுள்ள சில வாக்கியங்களை நாம் வாசிக்கும் பொழுது அவைகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும். அவைகளில் சில வசனங்கள் பின்வருமாறு:

"துக்கத்தொனியால் மரணமதைத் தெரிவிக்கிறேன்” 

“மின்னல், இடியின் இன்னலதைத் தவிர்க்கிறேன்” 

"ஓய்வுநாளில் ஆலயத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்” 

"தூங்குபவர் துரிதமாய் துயில்விட்டெழத் தொனிக்கிறேன்” 

சண்டமாருதத்தைச் சதா சாந்தப்படுத்துகிறேன்” "

"அபாயம் நேரிடுங்கால் அபயமிட்டு அலறுகிறேன்...." 

என்கிற வாக்கியங்கள் சில மணிகளில் காணக்கிடக்கின்றன.

மின்னல், இடி, புயல் இவைகளால் ஆபத்து நேரிடாவண்ணம் தடுப்பதற்குக் கோவில் மணிச்சத்தம் நிச்சயமான ஓர் சாதனம் என்கிற எண்ணம் அக்காலத்து ஜனங்களுக்கு இருந்ததாகத் தெரியவருகிறது. முத்தின காலங்களில் சாவுமணி அடித்த விதமும் குறிப்பிடத்தக்கத்து. இறந்தவனுடைய வயது எத்தனையோ அத்தனை தடவை தட்டு மணி அடிப்பதுதான் வழக்கமாயிருந்து.

திரிகால ஜெபத்துக்கும், திவ்விய பூசை, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய கோவில் ஆராதனைகளுக்கு முந்தியும் மணி அடிப்பது வழக்கம். சில இடங்களில் நடுப்பூசை நேரத்திலும் கோவில் பெரிய மணியை அடிப்பதுண்டு. நியாயமான விக்கினத்தை முன்னிட்டுத் திவ்விய பலிபூசைக்கு வர இயலாதவர்களும் தாங்கள் இருக்கிற இடத்திலிருந்து, நற்கருணையில் எழுந்தருளிவருகிற ஆண்டவரை ஆராதிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த வழக்கம் 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள். இந்த மணிச்சத்தங் கேட்டவுடன், எல்லோரும் எங்கேயிருந்தாலும் ஒரு நிமிடம் முழந்தாட்படியிட்டு ஆராதனை முயற்சி செய்வது வழக்கமாயிருந்தது


மணி மந்திரித்தல்:



மேற்றிராணியார் அல்லது அவரிடமிருந்து விசேஷ அதிகாரம் பெற்ற குருவானவர் மாத்திரம் மணி மந்திரிக்கிற சடங்கை நிறைவேற்றலாம். மணியை மந்திரிக்கிறவரும் மற்ற குருக்களும் அதைச் சுற்றிவருவதற்கும் அதன் உட்புறத்தைத் தொடுவதற்கும் விக்கினமில்லாத விதமாய் கோளில் நடுச் சாலையில் தலைப்பில் அல்லது வேறு முக்கியமான இடத்தில் மணியைத் தொங்கவிட்டு வைக்கவேண்டும். மேற்றிராணியாரும் குருக்களும் அதை தொங்கவிடப்பட்டிருக்கிற இடத்துக்குச் சுற்றுப் பிரகாரமாய் ஏழு சங்கீதங்களைச் சொல்லித் திருச்சபைக்கும் அதைச் சேர்ந்த எல்லோருக்கும் தேவ இரக்கத்தை மன்றாடிக்கொண்டு போவார்கள். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், மேற்றிராணியார் தீர்த்தம் மந்திரித்து, அதைக் கொண்டு மணியைக் கழுவுவார். அவருக்கு உதவியாய் நிற்கிற குருக்கள் மணியின் உள்ளும் புறமும் மேற்பரப் பெல்லாம் கழுவி முடிப்பார்கள். இதனிடையில் வேறு ஏழு சங்கீதங்கள் சொல்லப்படும். சங்கீதங்களின் முடிவில் சொல்கிற ஜெபம் வெகு நேர்த்தியானது. சர்வேசுரன் தமது பிரஜைக்குத் தமது அருளை ஈந்து, மணிச்சத்தத்தைக் கேட்பதான அவர்களுடைய விசுவாசமும் பக்தியும் அதிகரிக்கவும், துஷ்ட அரூபியின் வஞ்சனைகளெல்லாம் பயனற்றுப்போகவும், ஆரோக்கியம் உண்டாகவும், மணிச்சத்தத்தைக் கேட்டு பசாசுக்கள் பறந்தோடவும் வேண்டுமென்று மன்றாடுகிறார். இன்னுமொரு ஜெபம் சொன்னபின், அவஸ்தைபூசுதலில் உபயோகிக்கிற அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் ஏழு இடங்களில் மணியின் வெளிப்புறத்தில் தடவுகிறார். மீண்டும் வேறொரு ஜெபம் சொல்லி மணியின் உள்வாயில் பரிமள தைலத்தால் நாலு சிலுவை அடையாளம் வரைகிறார். வேறு சில ஜெபங்களும் சங்கீதமும் சொன்னபின்னர், பெரிய பாட்டுப் பூசையில் செய்வதுபோல் சுவிசேம் பாடப்படும். இந்த சுவிசேத்தின் பாகம், நமது திவ்விய இரட்சகர் மார்த்தா, மரியம்மாள் என்னும் இரு சகோதரிகளையும் பார்க்கப்போன சம்பவத்தைக் குறிக்கிறது. கோவில் மணிச்சத்தங் காதில் விழும்போதெல்லாம், மரியம்மாளைப் போல் கடவுளைத் தியானிப்பதே மேலான காரியம் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்

 "அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்" (லூக். 2:7)





திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப்பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பார் என்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத்திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன்  அடிமைத்தனத் தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீது என்பவர் இராஜபட்டம் பெற்ற 1032-ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவகுமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையாஸ் வசனித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப்பிறப்பு சம்பவித்தது. 

சேசு இரட்சகருடைய வருகை!

நம் பரிசுத்த வேதத்தை உண்டாக்கியவரான சேசு கிறீஸ்துநாதர் பெத்லெகேமில் பிறந்ததும், பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து மரித்ததும் சரித்திர வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். உலக சரித்திரமும் இவற்றிற்கு சான்று பகர்கிறது. எவராலும் மறுக்கப்படாத விதமாய் இவைகள் எண்பிக்கப்பட்டிருக்கின்றன.

பெத்லெகேமில் குழந்தையாய் பிறந்த சேசு மெய்யாகவே கடவுள். அவர் ஏனைய குழந்தைகளைப் போன்றவரன்று: அவர் உண்மை யாகவே கடவுள் என்று எண்பிக்க பல அதிசயங்கள் நடைபெற்றன.

கடவுளாகிய தேவகதன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றும்படி இப்பூமிக்கு வந்தார். பாஸ்கு வாரத்தில் மனித மீட்புக்காக உயிர்விட்டார். தமது இரட்சிப்பின் பண்டிகையான அர்ச்சியசிஷ்ட வார திருநாட்களுக்கு, கர்த்தர் பிறந்த திருநாள் தயாரிப்பாகும். மோட்சம் போவதற்கான வழியை மனிதருக்கு காட்ட சேசு இப்பூமிக்கு வந்தார். மோட்ச பாதையை பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியைத் தர வந்தார். எனவே கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளாகும்.

கர்த்தர் பிறந்த திருநாளையொட்டி ஒவ்வொரு கோவிலிலும், இல்லங் களிலும் குடில் தயாரிப்பதுண்டு. குடிலின் மத்திய ஸ்தானம் குழந்தை சேசுவே. அவரருகில் அவருடைய மாதாவான மரியாயையும் அவரை வளர்த்த தந்தை சூசையப்பரையும் காணலாம். தேவ குழந்தையை தரிசிக்க வந்த இடையர்களையும் அங்கு பார்க்கிறோம். சேசு பிறந்த சில நாட்களுக்கு பின் அவரை தரீசிக்க வந்த மூன்று இராஜாக்களின் உருவங்களை ஜனவரி 6-ம் நாளாகிய மூன்று இராஜாக்கள் திருநாளையொட்டி அங்கு வைப்பார்கள். கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளெனக் காட்ட குடிலில் நட்சத்திரங்களையும் காணலாம்.

சேசுவின் பிறப்பானது உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றி ருக்கிறது. அவர் பிறந்த காலத்தில் உரோமை இராஜ்ஜியத்தை செசார் அகுஸ்துஸ் ஆண்டுவந்தான்.

உரோமை இராச்சியம் உலகில் அநேக பகுதிகளில் பரவியிருந்தது. அந்தப் பகுதிகளிலெல்லாம் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக அரசன் கட்டளை பிறப்பித்தான். ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர்களை எழுதிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் தங்கள் சொத்த ஊர்களுக்குப் போனார்கள். சூசையப்பர் தாவிதின் கோத்திரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால் கர்ப்பிணியான கன்னிமரி யுடன் பெயர் எழுதிக்கொடுக்கும் பொருட்டு, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் நகரத்துக்குச் சென்றார். அந்த நாட்களில் எரோது அரசன் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான் (மத் 2:1). சேசு பிறந்த இரவில் அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து தங்கள் கிடைக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். சேசு பிறந்த பெத்லெகேம் ஊர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஊர் இன்னும் இருக்கிறது. சேசு பிறந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள். சேசுவை துணிகளால் சுற்றி முன்னிட்டியில் (தொழுவத்தில்) கிடத்தினார்கள். அவரைப் பெற்ற தாய் மரியம்மாள் என்றும், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் என்றும் தெரியும். இடையர்கள் போய் சேசுவை சந்தித்தார்கள். கீழ் திசையிலிருந்து சோதிட சாஸ்திரிகள் (மூன்று இராஜாக்கள்) அவரைத் தரிசிக்க சென்றனர். 

சேசுவின் பிறப்பானது ஏனையக் குழந்தைகளைவிட அவர் மேம்பட்டவரெனக் காட்டுகிறது. அவரது பிறப்பை சூசையப்பருக்கும் இடையருக்கும் சம்மனசுக்களும், கீழ்த்திசை சோதி சாஸ்திரிகளுக்கு ஒரு நட்சத்திரமும் அறிவிக்கின்றன. சீனாய் மலையில் கடவுள் தம்மை மோயீசனுக்கு வெளிப்படுத்தியபோது தெய்விக ஒளி காணப்பட்டது போல சேசு பிறந்த இரவில் தெய்விக பிரகாசம் பரலோகத்திலிருந்து வந்து காணப்பட்டது என லூக்காஸ் சுவிசேஷத்தில் (2:9) பார்க்கிறோம். கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் கடவுளால் அனுப்பப்பட்ட அதிசய நட்சத்திரமாகும்.

நம்மை இரட்சிப்பதற்காகவே சேசு பிறந்தார்!


நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்" (லூக் 1:31) என கன்னிமரியம்மாளிடம் சம்மனசானவர் அறிவித்தார். சேசு என்றால் இரட்சகர் என்று பொருள். "இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்" என இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்தார் (லூக். 2:11). கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகளுக்கு நோன்றிய நட்சத்திரமானது சேசு அனைவருக்கும் இரட்சகர் எனக் காட்டிற்று. இந்த இரட்சிப்பானது மானிட சந்ததிக்கு ஒரு நல்ல செய்தியாரும்; இந்த நல்ல செய்தியோ பெரும் மகிழ்ச்சியின் ஊற்று, “இதோ எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று இடையர்களுக்கு தேவ தூதன் தெரிவித்தார் (லூக் 2:10). இந்த நல்ல செய்தியானது ஒரு புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை சுவிசேஷப் புத்தகம் என்கிறோம்.

இடையர்கள் போய் சேசுவை கண்டார்கள். அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும், மகிழ்ச்சியும் யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அவன் ஒளியும் சந்தோஷமும் அடைவான். பெத்லெகேம் நகர் மக்களோ சேகவை சட்டைப் பண்ணவில்லை. கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பெற்றார்கள். ஜெருசலேம் நகர் குருக்களோ, சேசுவைப் போய் பார்க்க விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விகும்பினான். சாதாரண மக்களும் அறிஞர்களும், ஏழைகளும் செல்வந்தர்களும் சேசுவைப் பார்க்கப் போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு  நேசிக்கிறார். யூதர்களும் புறஜாதியாரும் சேசுவிடம் போனார்கள்.  சேசு அனைவருக்கும் இரட்சகர் 

கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பலிபூசை நிறைவேற்றுகின்றனர். முதற் பூசையானது சுவிசேஷத்தில் சொல்லப் பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. இரண்டாவது பூசையானது இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும் ஆத்துமங்களில் சேசு பிறப்பதைக் காட்டுகிறது. சேசு கடவுளாகிய மட்டும் நித்தியத்திளிருந்தே இருக்கிறார் எனக்காட்ட “ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார்" என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்றுக் காட்ட “வார்த்தையானவர் மாம்சமானர்" என்றும், தாம் உண்டாக்கிய திருச்சபையில் வசிக்கும் சேசு ஞான விதமாய் ஆத்துமங்களில் பிறக்கிரா ரென்று காட்ட “யார் யார் அவரை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்" என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும் கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டுமென்பதையும் மூன்று பூசைகளும் நம் நினைவுக்கு கொண்டுவருகின்றன. அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல் மாசற்றவர்களாக வாழ்வதே. “நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்".

சேசு தம்மை சாஸ்திரிகளுக்கு காண்பிப்பதை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த சாஸ்திரிகள் புறஜாதியார் அனைவரையும் குறிக்கிறார்கள். சகல ஜாதி ஜனங்களும் இரட்சகரிடம் வருவார்கள் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும், தாவீது இராஜாவும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

கர்த்தர் பிறந்த திருநாளன்று பிறருக்கு நாம் கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு; என்றாலும் கர்த்தர் பிறந்த திருநாளை யொட்டி நாம் பிறருக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சேசு தம்மை இடையர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம் இருதயங்கள் உயிருள்ள குடில்களாக வேண்டும். அந்த குடில்களில் சேசுவை ஏற்றுக்கொள்ள அவற்றை தயாரிக்கும்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும். பாவமோ, பாவத்தின் மேல் பற்றுதலோ, நம் இருதயத்தில் இருக்கலாகாது. அப்படியானால் திவ்விய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

J.M.N உத்தம மக்களை உருவாக்க: 583.# 23

Source : Salve Regina 2010 October - December



சனி, 9 டிசம்பர், 2023

அமலோற்பவ கன்னிமரி - December 8 - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ கன்னிமரி


அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது. (அரு. காட்சி. 12:1) 




1854 டிசம்பர் 8-ம் நாளன்று பாப்பரசர் முத். போன 9-ம் பத்திநாதர் "Ineffabilis Deus" என்ற பிரகடனத்தில் "...மிக ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரி, மனுக்குலத்தைக் காப்பாற்றுகிறவரான சேசு கிறீஸ்துவின் பேறு பலன்களை முன்னிட்டு, எல்லாம் வல்ல சர்வேசுவரனுடைய தனி வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும் தான் உற்பவித்த முதல்கணத்தில், ஜென்மப்பாவக்கறை எதுவும் அணுகாமல் காப்பாற்றப்பட்டார்கள், இந்த சத்தியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால் இது உறுதியுடனும் இடைவிடாமலும் விசுவாசிகள் அனைவராலும் விசுவசிக்கப்பட வேண்டும்..."என்று மாதாவின் அமலோற்பவத்தை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

இந்த உண்மை பரிசுத்த வேதாகமத்திலும், திருச்சபையின் போதனைகளிலும் காணப்படும் ஒன்று கத்தோலிக்க வேதசாஸ்திரத்தை ஒத்திருக்கும் இந்த சத்தியம் பரிசுத்த கன்னிமரியாயின் மிகப்பெரிய மகிமைப் பாக்கியமாக உள்ளது. இது பல புதுமைகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வேசுவரன் ஆதாமையும் ஏவாளையும் தேவ இஷ்டப் பிரசாதத்தில் மிக உன்னதமான நிலையில் சிருஷ்டித்திருந்தார். ஆனால் விலக்கப்பட்டசு கனியினைத் தின்று, பாவம் கட்டிக்கொண்டு தேவ கோபாக்கினையைத் தண்டனையாக தங்கள் மீது தேடிக் கொண்டனர். சர்வேசுவரன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளவை: "உனக்கும் ஸ்திரீக்கும். உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவள் குதிகாலைத் தீண்டப் பிரயத்தனம் பண்ணுவாய்" (ஆதி. 3:15) இதனை சற்று ஆராய்வோம்: ஆதியாகமத்தில் இந்த வார்த்தைகளை சர்வேசுவரன் எக்காலங்களுக்கென்று மனிதர்களுக்காக கூறியது.

அவருடைய வாக்கு மகிமையாகவும், உண்மையிலும், கம்பீர மாகவும் ஒலித்தது. அவர் முன்பாக, பாவத்தால் நிலை குலைந்து போன ஆதாம், வீழ்ச்சியின் துயரத்தோடு ஏவாள், சோதிப்பவனான சாத்தான் ஆகியோர் நிற்கின்றனர். ஆதாம் ஏவாள் விலக்கப்பட்டக் கனியை உண்ணக்கூடாதென்று கடவுளால் கூறப்பட்டாலும், அவர்கள் அவருடைய பேறுபெற்றப் பிள்ளைகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் தீமை நடைபெற்றுவிட்டது. சர்வேசுவரன் தயாளமுள்ள தந்தையாதலால் அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினார். அவர் பாம்பை நோக்கி, "கீழ்த்தரமான சாப்பமே, உனக்கும் பெண்ணுக்கும் அழிவுக்குரிய உடன்பாடு நீ சோதித்தாய். அவள் உடன்பட்டாள். இப்போது உனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் முழுமையான பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துவோம். அது என்னால் ஏற்படுத்தப்பட்ட பகை" என்று கூறுகிறார்.

அவளது மாசுபட்ட இரத்தத்திலிருந்து, குழந்தைகளையேப் பெறுவாள். ஆனால் நான் அவளது இந்த தலை முறையினரை நிறுத்தி, உனது (பசாசின்) ஆதிக்கமில்லாத ஒரு தலைமுறையைக் கொண்டு வருவேன். நான் ஒரு பெண்ணை உனது எதிரியாகவும், பகையாளியாகவும் ஏற்படுத்துவேன். அவளிடமிருந்து பிறப்பவர் பரிசுத்தராக இருப்பார். அவள் மட்டுமல்ல, அவளது வித்தும் உனது எதிரியாக இருப்பார். நீ அவளால நசுக்கப்படுவாய். நீ அவளைத் தீண்ட முயல்வாய். ஆனால் அவளது ஆன்மாவையோ அல்லது உள்ளத்தை யோ தொடமுடியாது. நீ வீணாக அவளது குதிகாலைத் தீண்ட முயற்சிப்பாய். இப்படியாக மரியாயில், சர்வேசுவரன் தாமே பசாசோடு பகையை மூட்டியுள்ளார். அவளை அணுக முயலும் போதெல்லாம் சாத்தான் தோல்வியே அடையும். ஆனால் அவள் அதன் தலையை நசுக்குவாள். மாதா தாம் உற்பவமான அந்த கணத்திலிருந்து அமலோற்பவியாக இருக்கிறார்கள். சாத்தானால் ஒரு கண நேரத்திலும் கூட மாதாவை வெற்றிகொள்ள முடியவில்லை.

பரிசுத்த கன்னிமரியம்மாள் சம்மனசானவரால் “அருள் நிறைந்தவள்" என அழைக்கப்பட்டார்கள். அருள் நிறைவு என்பது மாதா தனது வாழ்நாளெல்லாம் கடவுளோடு முழுமையாக ஒன்றித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் பாவத்தால் கறைபடுத்தப்படவில்லை. கடவுளின் நிறைவான படைப்பாக உருவாக்கப்பட்டார்கள். அமலோற்பவியாக பரிசுத்தவதியாக

அதிதூதரான கபிரியேல் "கர்த்தர் உம்முடனே” (லூக், 1:28) என்றுரைத்து மரியாயோடு சர்வேசுவரன் இருப்பதைக் கூறுகிறார். "சர்வேசுவரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்” (லூக், 1:30) ஆதாம் இந்த வரப்பிரசாதத்தை இழந்ததால் சர்வேசுவரன் அவரை சிங்காரத்தோப்பிலிருந்து வெளியேற்றினார். அவரோடு கடவுள் இருக்கவில்லை. ஆதாம் இழந்தவைகள் அனைத்தையும் மாதா கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து விலகியிருந்தது மட்டுமல்லாமல், அவருடைய பாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டு விலை மதிப்பில்லாத ஒவ்வொரு வரங்களாலும் அணிவிக்கப்பட்டு படைப்புகளிலேயே மிகவும் உன்னதமான சிருஷ்டியாக உயர்த்தப் பட்டார்கள்.

அர்ச். எலிசபெத்தம்மாள் மாதாவை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதாமே” (லுாக். 1:42) என்று வாழ்த்தினாள். இந்த வாழ்த்து எதற்கு? ஏனென்றால் மரியாயின் வயிற்றின் கனியானவர் வாக்களிக்கப்பட்ட மீட்பரான அவர்களது தெய்விக மகன்! சிங்காரத் தோப்பில் சர்வேசுவரனால் ஏவாளின் பாவங்களுக்காக முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரியானவள் மரியாயே! மாதா அவரது அன்னையாக ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகையால் ஒரு சிறு பாவம் கூட அணுகாமல் பாதுகாக்கப்பட்டார்கள். பாவத்தால் பீடிக்கப்பட்ட தாயிடமிருந்து மனுவுரு எடுக்கவோ, சாத்தானால் கவரப்பட்ட பாவக் கறைபட்ட பேழையிலோ அவர் தங்குவதில்லை.

திருவழிபாடுகளிலும், பாரம்பரியத்திலும், தொன்மை கலைச்சித்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட மாதாவின் அமலோற்பவம், விசுவாச சத்தியமாக்கப்பட்ட போது. திருச்சபையின் பாப்பரசரும் வேதபாரகர்களும் இந்த உண்மையை வலியுறுத்தி அநேக நூல்களையும், பிரபந்தங்களையும் எழுதினார்கள்,

கன்னிமாமரி அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந் தார்கள், ஏனெனில் அவர்களே ஞானத்திற்கு இருப்பிடம்: தீமையிலிருந்து காக்கப்பட்டார்கள். இதனால் நன்மைதனத்திலும் நிறைவிலும் எப்போதும் நிலைத்திருந்தார்கள். ஆகையால் தான் திருச்சபை "ஓ மரியாயே நீர் எத்துணை அழகானவள்; ஜென்மப்பாவத்தின் மாசு உம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்று பாடுகிறது. மரியாயின் சரீரத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி என்ற மனித இயல்பின் பரிணாமத்திற்கு உட்பட்டாலும் ஜென்மப்பாவத்தின் தாக்கம் இல்லாமையால் முழுமையான சௌந்தர்யமுள்ளதாக விளங்கியது. அவர்கள் சுகவீனத்திலிருந்துதடுக்கப்பட்டிருந்தாலும் பசி, தாகம், மனவேதனை ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு கடந்து மறுமைக்குச் சென்றதும்கூட சுகவீனமோ. நோய்வாய்ப்பட்டதாலோ அல்ல. மாறாக வல்லமை வாய்ந்த தேவசிநேகமே அவர்களது சரீரத்தை நிலைகுலையச் செய்தது.

மாதாவின் அமலோற்பவத் திருநாளின் கட்டளை ஜெபம், திவ்விய பலிபூசையிலும் கூட மாதாவின் உற்பவத்தின் போது அவர்களது சரீரத்தோடு இணைக்கப்பட்ட, அசாதாரணமான ஆன்ம அழகு பெரிதும் போற்றப்படுகின்றது. கபிரியேல் தூதனால் "அருள் நிறைந்தவளே வாழ்க!" (லுாக். 1:28) என்று கடவுளின் மாதாவை வாழ்த்துவதைப் பற்றிய திருச்சபையின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானனை. மரியாயைப் போதிய அளவுக்கு வாழ்ந்த வேண்டுமானால் நாமும் கபிரியேல் தாதுவரின் மனப்பான்மையை கொண்டிருப்பது அவசியம். அவைகளின் உயர்வை, உன்னதத்தினை யோசிப்பது அவ்வளவு சிரமமில்லை. விசுவாசத்தோடு சம்மனசானவர் தெய்வீக நன்மைத்தனங்களோடு விளங்கிய மரியாயை ஆராதித்த போது, இந்த தாழ்ச்சியானக் கன்னிகை அந்த மகா உன்னத மகிமை உயர்வுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டு வியப்படைந்தாள் மீட்பினுடையவும். மனிதாவதாரத்தினுடையவும் பரமரகசியங்களை முன்னறிவிப்பவராக தாம் ஏற்படுத்தப்பட்ட மரியாதையினால் சம்மனசானவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலோற்பவ மாதாவின் மகோன்னதமான உயர்வு பெருமைகளையெல்லாம் திருச்சபையின் ஜெபங்களிலும், திருவழிப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. மரியாயின் நாமம். எல்லா அழகோடும், தூய்மையோடும், ஒளிபொருந்திய சூரிய பிரகாசத்தோடும், அவர்களது வரப்பிரசாத சுகந்தங்களோடும் அகில உலகெங்கும் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. அவர்கள் ஜெருசலேமின் மகிமை உயர்வு. மக்களின் பெருமை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தெய்விக வல்லபத்தின் உருவம் உயர்ந்த பரிசுத்த பர்வதங்களின் உச்சியில் கட்டப்பட்ட கடவுளின் திருநகர்!

ஒ. அனைத்தும் பரிசுத்த பிரகாசமான மாசில்லாத கன்னிகையே, உலகமுண்டாகும் முன்பே நீர் தேர்ந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்! குற்றங்களின் பாரத்தால் நசுக்கப்பட்டு மீட்பு பற்றிய நிச்சயமில்லாமல் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் மனிதன் உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறான். நீரே எங்களது நம்பிக்கை, உம்மில் உம் வழியாகவே குற்றவாளிகள் வரப் பிரசாதத்தைக் கண்டடைகிறார்கள். நொறுக்கப்பட்டவன் ஆறுதலையும், கைவிடப்பட்டவன் அடைக்கலத்தையும், அறிவிலி ஞானத்தையும்; பாவியானவன் மன்னிப்பையும்; நீதிமான் நிலைமை வரத்தையும் கண்டடைகிறான். தாயே நீரே எங்களது ஏக அடைக்கலம்!



Source: சால்வே ரெஜினா- டிசம்பர் 2006

Christmas - உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்

 உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்






உலகம் இன்று போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இறுதிக் காலங்களின் ஓர் அடையாளமாக "தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்பும்" (மத் 24:7) என்று நம் ஆண்டவர்தாமே முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா- யுக்ரேன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்ற எந்த ஒரு போரும் எந்த நிமிடத்திலும் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உலகப் போராக மாறக்கூடிய ஆபத்து நம் தலைக்கு மேல் வாளைப் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பிற நாடுகளை ஏமாற்றிக் கைவசப்படுத்து வதற்கென்றே உருவானவை போன்ற நாடுகள் "பேச்சு வார்த்தை" மூலம் சமாதானத்தை நிலை தாட்டப் போவதாகப் பாசாங்கு செய்கின்றன. அவை முதுகுக்குப் பின்னால் இடது கையில் கத்தியை மறைத்துக்கொண்டு வலது கையால் "பாசத்தோடு" கைகுலுக்குகின்றன. வேறு வழியின்றி அவற்றை நம்பும் ஏழை நாடுகள் பல வகைகளிலும் தங்களையே அவற்றிடம் அடகு வைக்கின்றன. உலகத்தில் சமாதானமில்லை. ஏனெனில் இப்போது அது "கடவுளற்றதாக" மாறிக் கொண்டிருக்கிறது. அது சமாதானம் (கடவுள்) இல்லாத இடங்களில் அதைத் தேடுகிறது. உலக செல்வங்களிலும், வெற்று வாக்குறுதிகளிலும், பேராசையிலும் அதைத் தேடுகிறது.

தனி மனிதர்களோ கடவுளை அடியோடு மறந்துவிட்டு, உலக செல்வங்களிலும், உலகக் கேளிக்கைகளிலும், மதுவிலும், சரீர இச்சையிலும் தங்கள் இன்பத்தையும், அதில் சமாதானத் தையும் தேடுகிறார்கள். நல்லொழுக்க விதிகளை மீறுவதில் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஊடகங்கள் சகல அகத்தங்களையும் கொண்டு மனிதனை நிரப்பி, அந்திக் கிறிஸ்துவுக்கான பாதையை மிக எளிதாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒளியைத் தேடுவதாக நினைத்துக்கொண்டு. மேலும் மேலும் அதிகக் கடுமையான, "தொட்டுணரக் கூடிய இருளுக் குள் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் சமாதானமில்லை.

இன்றைய (சங்கத்) திருச்சபையோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரட்சணியப் பணியை அடியோடு மறந்துவிட்டு, உலகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே உலக மதத் திற்கான விதையை அதுவே பூமியில் ஊன்றி, அது வளரத் தேவையான எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறது. அது தன் திவ்ய எஜமானராகிய உலக இரட்சகரைத் "தெய்வங்களில்" ஒருவராகப் பார்க்கிறது. அல்லது இன்னும் மோசமாக, சமூகப் புரட்சி செய்ய வந்த ஒரு "மிகச் சிறந்த மனிதராகப்" பார்க்கிறது. சங்கச் சபை சுவிசேஷ போதனைகளை ஏளனம் செய்கிறது; சரீர இச்சை, ஓரின உறவு, குருந்துவ அழிவு, துறவற அழுகல், தேவத் திரவிய அனுமானங்களின் முழுச் சிதைவு, விசுவாசமற்ற "இறை மக்களின்" வெறுமையான "மனித நேய" ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டு, தானே ஒரு முழுமையான விசுவாச மறுதலிப்பை முழுமை யாக்கி விட உழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய "திருச்சபையிலும் சமாதானமில்லை!

இந்நிலையில் இதோ! கீழ்த்திசையினின்று ஓர் ஒளி உதிக்கிறது/ பெத்லகேமில் உண்மை யான "சமாதானத்தின் அரசர்" (இசை.9:6) தோன்றுகிறார்? ஆச்சரியத்திற்குரிய முறையில், இன்று உலகம் தேடும் எதுவும் அவரிடமில்லை! பரலோக, பூலோக, பாதாள லோகங்களாகிய திரிலோகங்களையும் ஒரே வார்த்தையால் படைத்த அந்த நித்திய செல்வந்தர், இதோ, மனிதர் களின் இருதயங்களிலும், சத்திரத்திலும் கூட, தமக்கென ஓர் இடமின்றி, மாடும், கழுதையும் அடையும் கொட்டிலில், மூடத் துணியுமின்றி, படுக்கக் கட்டிலுமின்றி, உலசு வசதி ஏதுமின்றி. தீவனத் தொட்டியில் பரப்பிய வைக்கோலின்மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! யாருக்கு முன்பாக வானத்து நட்சத்திரங்களும் கூட வெறுமையாகவும். ஒரு மூச்சுக் காற்றைப் போலவும் இருக்கின் றனவோ, யாருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறதோ, யாருக்கு முன்பாக மலை களும், குன்றுகளும் துள்ளிக் குதிக்கின்றனவோ, அந்த உன்னத சர்வேசுரன் இங்கே, ஏதும் செய்ய இயலாத எல்லாவற்றிற்கும் தம்முடைய மாசற்ற திவ்ய கன்னிகையாகிய திருத்தாயாரையும், பிதாவால் தமக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட பரிசுத்த விரத்தராகிய நீதிமானையும் சார்ந்திருக்கிறார்! நித்திய பிதாவோடு ஒரே பொருளானவர். கீழ்ப்படிதலின் நிமித்தம் இந்தக் கேடுகெட்ட மனிதனை மீட்பதற்காக, சகல அசுத்தங்களும் நிறைந்த உலகிற்கு இறங்கி வந்திருக் கிறார்! நல்ல வேளையாக, பூலோக மோட்சமாகிய அமல உற்பவ நித்தியக் கன்னிமையின் மாசற்ற இருதயம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது!

ஆம்! கிறீஸ்துநாதரின் பிறப்பு தரும் போதனை உலகத்திற்கு எதிரானது! அது தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம், தரித்திரம், கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் போதனை! கிறீஸ்து பாலன் உலக இன்பங்களுக்கான, உலகில் சுகமாக மனிதன் வாழ்வதற்கான வழியை அல்ல, மாறாக, நித்திய மோட்சத்தின் வழியை, நித்திய இரட்சணியத்தின் வழியைத் திறந்து வைக்கவே வந்திருக்கிறார்! அவரே கூறுவது போல, அந்த வழி ஒடுக்கமானது! கல்லும், முள்ளும் நிரம்பியது! அதில் நுழைபவன் எவனும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, இரத்தம் தோய்ந்த தன் திவ்ய எஜமானரின் பாதச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவனாயிருக்கிறான்!

ஆயினும் இது நமக்கு அச்சம் தரத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஒடுங்கிய வழிக்குள் ஒருவன் நுழைந்த மாத்திரத்திலேயே, உலகம் தர முடியாத, நிரந்தரமான, நல்ல மனத்தவர்களுக்குரிய சமாதானம் அவனை நிரப்பி விடுகிறது. உலகத் துன்பங்களால் கெடுக்கப்படவோ, அழிக்கப்பட்டவோ முடியாத சமாதானம் அது! இன்னும் சொல்லப் போனால், உலகத் துன்பங்களை ஏக்கத்தோடு தேடச் செய்கிற உத்தமமான சமாதானம் அது!

அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த சமாதானத்தில் வாழ்ந்தார்கள்! பல சமயங்களில் அது தருகிற மோட்சத்தின் முன்சுவையாகிய இந்த நித்திய சமாதானத்தையும், பேரின்பத்தின் சில துளிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகக் கூட அவர்கள் இருந்தார்கள்! நம்முடைய ஞானத் தகப்பனான அர்ச். சவேரியாரின் "இந்திய" வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்! பிரபுத்துவப் பிறப்பு! ஆடம்பரமான இளமை வாழ்வு! மிகச் சிறந்த கல்வி! புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி! ஆனால் இதிலெல்லாம் தம்மால் காண முடியாத உண்மையான சமாதானத்தையும், உண்மையான இன்பத்தையும் அவர் தரித்திர வாழ்வைத் தேர்ந்துகொண்ட போது, மட்டற்ற விதமாக அனுபவித்தாரி! இரவெல்லாம் ஜெபத்தில் கழித்து, பகலெல்லாம் கால்நடையாக அல்லது படருகளில் பல ஊர்களுக்குச் சென்று பூசை வைத்து, ஞான உபதேசம் கற்பித்து, ஆலயங்கள் கட்டி, அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடிக் கழித்த பின், இரவில், அந்த மணப்பாட்டுக் குகையில் முழந்தாளிட்டபடி தம்முடைய பரவச நிலையில், "போதும்! போதும் என் ஆண்டவரே! தேவரீர் என்மீது பொழிகிற இந்தப் பேரின்பத்தை என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது!" என்று கூக்குரலிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தச் சமாதானத்தின் வேர்கள் எதில் ஊன்றியிருக்கின்றன? அவை தேவசிநேகத்தில் ஊன்றியிருக்கின்றன. இந்த தேவசிநேகமோ தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அடங்கி யிருக்கிறது. அவை தேவ நம்பிக்கையில் ஊன்றியிருக்கின்றன. பெத்லகேமின் திவ்ய பாவனைப் போல, வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரித்திர நிலையிலும், சர்வேசுரனைத் தன் சொந்தமாகக் கொண்டிருப்பவனை விடப் பெரிய செல்வந்தன் எவனும் இல்லை. அந்த வேர்கள் அசைவுறாத தேவ விசுவாசத்தில் ஊன்றியுள்ளன. இன்றைய விசுவாச மறுதலிப்புக்கு மத்தியிலும், புயலடித்தபோதும், வெள்ளம் வந்து மோதிய போதும். திடமான விசுவாசமென்னும் பாறையின் மீது எவனுடைய வாழ்வு கட்டப்பட்டிருக்கிறதோ. அவன் பாக்கியவான். ஆயினும், தன்னுடைய பரிசுத்த வாழ்வின் மூலம், இந்த விசுவாசமாகிய தேவ கொடை என்றென்றும் தன் சொந்தமா யிருப்பதையும், அது நித்திய ஜீவியத்திற்குரிய கனிகளைத் தன்னில் பிறப்பித்து, அவற்றை விளை வித்துக் கனியச் செய்வதையும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், "மலை களைப் பெயர்த்தகற்றும்" வல்லமையுள்ளதாக இருந்தாலும் கூட கடவுளுக்கு முன்பாக எந்த மதிப்பும் அற்றதாக இருக்கிற ஒரு விசுவாசம் உண்டு! அது பரிசுத்த வாழ்வில் ஊன்றியிராத. வெறும் போலி விசுவாசம்!

மேலும் அது கடவுளுக்குச் சித்தமானால் பரிசுத்த கன்னிமையில், அல்லது ஜீவிய அந்தஸ்துக்குரிய கற்பில் ஊன்றியிருக்கிறது! கடவுளுக்குச் சித்தமானால், அவரைப் போலவும். அவருடைய திருத்தாயாரைப் போலவும், பரிசுத்த நீதிமானைப் போலவும், பரிபூரண தரித்திரத் தையும் ஏற்றுக்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது! மரண மட்டுக்கும். அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவரைக் கண்டுபாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருப் பதிலும், அவரால் நமக்கு மேலாக நியமிக்கப்படுபவர்களுக்குப் பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் பணிந்திருப்பதிலும் அடங்கியிருக்கிறது!

இவை இல்லாத கிறீஸ்துமஸ் திருநாட்கள் திவ்ய பாலனின் பார்வையில் "அருவருப்புக் குரியவையாக" இருக்கின்றன என்பதை மறவாதீர்கள், குடில்கள், வீட்டு அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவற்றில் மட்டுமே இன்று மனிதன் கிறீஸ்து பிறப்பைக் கொண்டாடுவதுதான் இன்றைய பெரும் தீமையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் கிறீஸ்து பிறப்பிற்காகத் தன் ஆத்துமத்தை ஆயத்தம் செய்து வைத்துக் காத்திருப்பதை அவன் நினைப்பது கூட இல்லை. இவைகளைத்தான் செய்திருக்க வேண்டும்; அவைகளையும் விட்டு விடலாகாது (மத்.23:23).மேலும் உங்க ளிடையே வாழும் ஏழைகளையும் மறந்து விடலாகாது! எனவே, அன்புச் சகோதரரே! கிறீஸ்துநாதர் உண்மையாகவே நம் ஆத்துமங்களிலும்,

இல்லத்திலும் வந்து பிறப்பதை உறுதி செய்துகொள்வோம். அப்போது, நல்மனத்தோருக்குரிய சமாதானம் நம்முடையதாகும்; அதுவே உன்னத ஸ்தலங்களில் சர்வேசுரனுக்கு மகிமையாக இருக்கும்.




Source: Matha Malar - நவம்பர் - டிசம்பர், 2023


மரியாயே வாழ்க!