Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

daily saints life history. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
daily saints life history. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2024

August 28, St. Agustine, அர்ச்‌. அகுஸ்தீனார்


 

ஆகஸ்டு 2️8️ம்‌ தேதி

திருச்சபையின்‌ தலைசிறந்த வேதபாரகரும்‌
தந்தையுமான ஹிப்போ நகரின்‌
அர்ச்‌. அகுஸ்தீனார்திருநாள்

 

இவர்‌, 354ம்‌ வருடம்‌,நவம்பர்‌ 13ம்‌ தேதியன்று உரோமையின்‌ ஆப்ரிக்கப்‌ பிராந்தியத்தைச்‌ சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக்‌ ஆஹ்ராஸ்‌)வில்‌ பிறந்தார்‌. அர்ச்‌.மோனிக்கம்மாள்‌, இவருடைய தாயார்‌. ஆனால்‌, இவருடைய தந்தையார்‌, ஒரு அஞ்ஞானியாக இருந்தார்‌; அர்ச்‌.மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபத்தின்‌ பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக மனந்திரும்பி பாக்கியமாய்‌ மரித்தார்‌. கத்தோலிக்க வேத விசுவாசத்தில்‌ வளர்க்கப்பட்டபோதிலும்‌, முதல்‌ சில நூற்றாண்டுகளில்‌, வாலிப வயதை அடைந்ததும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றுக் கொள்ளும்‌ வழக்கம்‌ திருச்சபையில்‌ அனுசரிக்கப்பட்‌டதால்‌, அகுஸ்தீனார்‌, சிறு வயதில்‌,ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளவில்லை.

அர்ச்‌. மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும்‌, உயரிய இலட்சியங்களையும்‌,பிரகாசமுள்ள திறமைகளையும்‌, அதே சமயம்‌, மூர்க்கமான ஆசாபாச உணர்‌வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அநேக வருடங்கள்‌, தீமைகளும்‌, போலியான பதித நம்பிக்கைகளும்‌ நிறைந்த ஜீவியம்‌ ஜீவித்து வந்தார்‌. இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும்‌ அறிவுத்திறனும்‌, ஞானமும்‌ உடையவராயிருந்த மனிதர்களில்‌ ஒருவராகத் திகழ்ந்த  போதிலும்‌, அசுத்த பாவங்களும்‌, ஆங்காரமும்‌, அகுஸ்தினாரின்‌ மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்‌ செய்ததென்றால்‌, சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால்‌ பார்க்கக்‌ கூடாமல்‌, அல்லது புரிந்துகொள்ளக்‌ கூடாமற்போயிற்று!  இருப்பினும்‌, இவர்‌ இலத்தீன்‌ மொழியில்‌, எவ்வளவு உயரிய  தேர்ச்சியை அடைந்தாரென்றால்‌, வாய்ச்சாலகமாக அம்மொழியைப்‌ பேசுவதிலும்‌, தனது கருத்தைத்‌ தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்‌தனமாக வாதிடுவதிலும்‌ நிபுணத்துவம்‌ பெற்றிருந்தார்‌.

தத்துவ இயலில்‌ தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்‌; இலக்கியத்தையும்‌, இலக்கணத்தையும்‌ , தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும்‌, கார்த்தேஜிலும்‌ 9 வருட காலமாகக்‌ கற்றுக்கொடுத்து வந்தார்‌. இவருடைய வயதின்‌ கடைசி இருபதுகளில்‌, ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்‌, வேலை தேட ஆரம்பித்தார்‌. இதே சமயம்‌, இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச்‌. மோனிக்கம்மாள்‌, இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல்‌ ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்‌; இவரைப்‌ பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும்‌ சென்றார்கள்‌. உரோமாபுரியில்‌ அகுஸ்தினார்‌ வளமையடைந்தார்‌; அணியிலக்கணத்தின்‌ துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்‌. மிலான்‌ நகர மேற்றிராணியாரான அர்ச்‌. அம்புரோசியாரை, அகுஸ்தீனார்‌ சந்தித்தார்‌; இவர்‌ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்‌, திருச்சபையின்‌ ஞானமுள்ள பதில்களை, அர்ச்‌. அம்புரோசியார்‌ அளித்தார்‌. அப்போது தான்‌,கிறீஸ்துவ வேதம்‌,தத்துவ இயல்‌ வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம்‌, என்பதை அகுஸ்தீனார்‌ கண்டறிந்தார்‌.

ஆனால்‌, இவர்‌ தனது துர்ப்‌ பழக்கங்களின்‌ சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்‌; அதற்‌கான தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார்‌. உடனடியாக, அகுஸ்தீனாரால்‌ கிறீஸ்துவராக மாறக்‌ கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால்‌ ஒருபோதும்‌ ஜீவிக்க முடியாது, என்று , இவர்‌, நினைத்திருந்தார்‌. இருப்பினும்‌ ஒருநாள்‌, அர்ச்‌. வனத்து அந்தோணியாரின்‌ ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால்‌, இரு மனிதர்கள்‌ கத்தோலிக்கர்களாக மாறினர்‌, என்பதைக்‌ கேள்விப்‌பட்டதும்‌, இவர்‌ தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்‌; இவர்‌ தன்‌ நண்பரான அலிபியுஸ்‌ என்பவரிடம்‌, “நாம்‌ என்ன செய்து கொண்டிருக்கிறோம்‌? கல்வியறிவில்லாக மனிதர்கள்‌, வலுவந்தமாக பரலோகத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்கின்றனர்‌! அதே சமயம்‌, எல்லாவிதமான அறிவையும்‌ கொண்டிருக்கிற நாம்‌, நம்‌ பாவங்கள்‌ என்கிற சேற்றிலே உருண்டுகொண்டிருக்கும்‌ அளவிற்கு மாபெரும்‌ கோழைகளாக இருக்கிறோம்‌!” என்று கூறினார்‌.

அகுஸ்தீனார்‌, பின்னர்‌, பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச்‌. சின்னப்பரின்‌ நிரூபங்களை ஒரு புதிய ஒளியில்‌ வாசித்தார்‌; ஒரு நீண்‌டதும்‌ கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்‌ இதைப்‌ பின்தொடர்ந்து வந்தது! ஆனால்‌, தேவ வரப்பிரசாதத்தின்‌ உதவியால்‌, உள்ளரங்க போராட்டத்தை, இவர்‌ வெற்றிகொண்டார்‌. அர்ச்‌. மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபங்களாலும்‌, அர்ச்‌. அம்புரோசியாரின்‌ ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும்‌, கத்தோலிக்க வேதம்‌ மட்டுமே உண்மையான வேதம்‌ என்பதைத் தெளிந்தமனதுடன்‌, 386ம்‌ வருடம்‌, அகுஸ்தீனார்‌, கண்டறிந்தார்‌; 387ம்‌ வருடம்‌ ஈஸ்டர்‌ திருநாளன்று, அர்ச்‌. அம்புரோசியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம்‌ அளித்தார்‌.  இவர்‌ ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்தார்‌; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்‌; அங்கே,395ம்‌ வருடம்‌, மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌. அடுத்த 35 வருட காலத்தில்‌, இவர்‌ அயராமல்‌ திருச்சபைக்காக உழைத்தார்‌;

 வடஆப்ரிக்கா, திருச்சபையின்‌ மையமாக உருமாறியது! இவருடைய ஞான ஜீவியம்‌ உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்‌சமயத்தில், இவர், ‌ திருச்சபையில்‌ நிலவிய சகல பதிதத்‌ தப்பறைகளையும்‌, எதிர்ப்பதிலும்‌, தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்‌, பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும்‌, முன்னோடியான ஞானமும்‌ வலிமையுமிக்க வேகபாரகராகத்‌ திகழ்ந்தார்‌; அநேகக்‌ காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும்‌, நூல்களும்‌, உலகெங்கிலும்‌ ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும்‌, வேத இயல்‌ ஊகங்களுடையவும்‌ முக்கிய ஆதாரமாகப்‌ பயன்படுத்துப்படுகின்றன!

அர்ச்‌.அகுஸ்தீனார்‌ காய்ச்சலினால்‌, 430ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 28ம்‌ தேதியன்று, 76வது வயதில்‌, மரித்தார்‌. இந்நேரத்தில்‌, ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. 8ம்‌ நூற்றாண்டில்‌, ஹிப்போ நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை, லொம்பார்டு நாட்டின்‌ அரசரான லுட்பிராண்டு என்பவர்‌, இத்தாலியாவிலுள்ள பாவியாவில்‌ ஸ்தாபித்தார்‌; அதற்காக பெருந்தொகையை, அவர்‌ மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!                                 

அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ பிரபல்யமான காட்சி

St. Agustine and the Child (Angel)


ஒரு சமயம்‌, அர்ச்‌.அகுஸ்தினார்‌, கடற்கரையோரத்தில்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய பரம இரகசியத்தைப்‌ பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்‌ ஒருசிறு குழந்தை ‌ விளையாடிக்கொண்டிருப்பதைக்‌ கவனித்தார்‌: அது தன்‌ கையிலிருந்த ஒரு சிறு ஓட்டிற்குள்‌ கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள்‌ ஊற்றிக்கொண்டிருந்தது; இதைத்‌ தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “நீ என்ன செய்கிறாய்‌?” என்று கேட்டார்‌; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்‌ இந்த குழிக்குள்‌ விட்டு, கடலைக்‌ கட்டாந்தரையாக்கப்‌ போகிறேன்‌!” என்று கூறியது. உடனே, அக்குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “குழந்தையே! உன்‌ ஜீவியகாலமெல்லாம்‌ இந்த வேலையில்‌ நீ ஈடுபட்டாலும்‌, உன்னால்‌, இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்‌; அதற்கு, அந்த குழந்தை, “இருப்பினும்‌, நீங்கள்‌ உங்களுடைய மனதில்‌ தியானிக்கிற அந்த மகா பரம இரகசியத்தைப்‌ பற்றி நீங்கள்‌ புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான்‌ இதை செய்து முடிப்பேன்‌!” என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ பரம இரகசியத்தைப்‌ பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான்‌ எடுத்து வந்த பயனற்ற முயற்சிகள்‌ பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்‌ உருவில்‌ தன்னிடம்‌, சர்வேசுரன்‌ தாமே அனுப்பியிருக்கிறார்‌, என்பதைக்‌ கண்டுணர்ந்தார்‌.

மாபெரும்‌ திருச்சபையின்‌ வேதபாரகரும்‌ தந்தையுமான அர்ச்‌.அகுஸ்‌ தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

Download St. Augustine Books for Free
 Click Here to download

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

August 22 - Immaculate Heart of Mary - அர்ச்‌. மரியாயின்‌ மாசற்ற இருதயம்

 

ஆகஸ்டு 2️2️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவான
அர்ச்‌. மரியாயின்மாசற்ற இருதயம்

        


    மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி முயற்சி, திருச்சபையின்‌ சரித்திர ஆசிரியர்களின்‌ குறிப்பீடுகள்‌ மூலம்‌, 12வது நூற்றாண்டு முதல்‌ அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருச்சபையின்‌ பரிசுத்த எழுத்தாளர்களான அர்ச்‌. ஆன்செல்ம்‌, அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தியைப்‌ பற்றி எழுதியிருக்கின்றனர்‌. அர்ச்‌.  சியன்னா பெர்னர்தீன்‌ (1380-1484), "தேவ சிநேகத்தினுடைய அக்கினிச்‌ சூளையி லிருந்து புறப்படும்‌ அக்கினிச் சுவாலைகள்‌ போல்‌, மகா பரிசுத்த தேவ மாதா, தமது மாசற்ற இருதயத்திலிருந்து புறப்பட்ட மகா அத்தியந்த தேவ சிநேகத்தினுடைய வார்த்தைகளால்‌, பேசினார்கள்‌, என்று எழுதியுள்ளார்‌.

            நமதாண்டவரின்‌ மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்தின்‌ திருநாளை அகில திருச்சபையிலும்‌ கொண்டாடத்‌ துவங்குவதற்கு இருபது வருடங்களுக்கு முன்பாக, அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பரும்‌ அவருடைய துறவியர்களும்‌, 1643ம்‌ வருடம்‌, பிப்ரவரி 8ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளைக்‌ கொண்டாடத்‌ துவக்கினர்‌. 1799ம்‌ வருடம்‌, 6ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஃபுளாரன்ஸ்‌ நகரில்‌ சிறைக்கைதியாயிருந்தபோது, பாலர்மோ நகர மேற்றராணியாருக்கு, அவருடைய மேற்றிராசனத்திலிருந்த சில தேவாலயங்களில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளைக்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌. 1805ம்‌ வருடம்‌, 7ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஒரு புதிய சலுகையை அளித்தார்‌; அதன்‌ காரணமாக இப்பக்திமுயற்சி, உலகில்‌ பெரும்‌ பகுதிகளில்‌ பரவி அனுசரிக்கப்பட்டது.

            மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அற்புதப்பதக்கத்தைப்‌ பற்றி மகா பரிசுத்த தேவமாதா தாமே, பாரீஸிலுள்ள அர்ச்‌.  வின்சென்‌ட்‌ தே பவுலின்‌ பிறா்சிநேகக்‌ கன்னியர்‌ சபைக்‌ கன்னியாஸ்திரியான அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்குக்‌ காட்சியளித்து, வெளிப்படுத்தியதும்‌, பாரீஸிலுள்ள ஜெயராக்கினி மாதா தேவாலயத்தில்‌, பாவிகளின்‌ அடைக்கலமான மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான தலைமை பக்திசபை ஸ்தாபிக்கப்பட்டதுமாகிய இவ்விரு பரலோக நிகழ்வுகளும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்திமுயற்சி‌, மிக உத்வேகமாகவும்‌ தீவிரமாகவும்‌, துரிதமாகவும்‌  மற்ற எல்லா நாடுகளிலும்‌ பரவுவதற்குக்‌ காரணமாயின!

            1855ம்‌ வருடம்‌, ஐூலை 21ம்‌ தேதியன்று, திருச்‌சபையின்‌ உரிமைகள்‌ ஆணையம்‌, இறுதியாக, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளுக்கான திவ்ய பலி பூசை ஜெபங்கள்‌ மற்றும்‌ கட்‌டளை ஜெபங்களை அங்கீகரித்தது! இருப்பினும்‌, இத்திருநாளை அகில திருச்சபையும்‌, அனுசரிப்பதற்குக்‌ கட்டாயமாக்காமல்‌ விட்டது.

            1830ம்‌ வருடம்‌ , அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்கு அற்புதப்பதக்கத்‌தைப்‌ பற்றி அறிவித்த மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகளுக்கும்‌, பாத்திமாவில்‌, 1917ம்‌ வருடம்‌ (மே 13ம்‌ தேதி முகல்‌ அக்டோபர்‌ 13ம்‌ தேதி வரை) மகா பரிசுத்த தேவமாதா, லூசியா, பிரான்சிஸ்கோ, ஐசிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கு அளித்த காட்சிகளுக்கும்‌ பிறகு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி மாபெரும்‌ விதமாக, தீவிரமாக உலகம்‌ முமுவதும்‌ பரவியது! 1917ம்‌ வருடம்‌ ஜூலை 13ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதா, பாத்திமாவில்‌, பூமியின்கீழ்‌ வயிற்றுப்‌ பகுதியிலுள்ள நரகத்தைக்‌ காட்சியில்‌ காண்பித்த பிறகு, அம்மூன்று சிறுவர்களிடம்‌, “நீசப்பாவிகளைக்‌ காப்பாற்றும்படியாக, சர்வேசுரன்‌, உலகத்தில்‌ என்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான பக்தியை ஏற்படுத்த ஆசிக்கின்றார்‌!” என்று அறிவித்தார்கள்‌. ஜெபம்‌, ஜெபமாலை, தபம்‌, பரிகாரம்‌, ஆண்டவருக்கும்‌ தேவமாதாவிற்கும்‌ எதிராக மனிதர்கள்‌ கட்டிக்கொள்கிற பாவாக்கிரமங்களுக்கும்‌, நிந்தைகளுக்கும்‌, அவசங்கைகளுக்கும்‌ பரிகாரம்‌ செய்ய  வேண்டும்‌ என்பதே, பாத்திமா காட்சிகளுடைய செய்திகளின்‌ சாராம்சமாகும்‌.



            1942ம்‌ வருடம்‌, பாத்திமா காட்சிகளின்‌ 25ம்‌ வருடாந்திர தினத்தில்‌, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, உலகத்தை மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணம்‌ செய்தார்‌. அதே வருடத்தில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திருஇருதயத்தின்‌ திருநாளாகக்‌ கொண்டாடுவதற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மோட்சாரோபனத் திருநாளுடைய எட்டாம்‌ நாளாகிய ஆகஸ்டு 22ம்‌ தேதியைத்‌ தேர்ந்தெடுத்தார்‌. 1944ம்‌ வருடம்‌, மே 4ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளை ஆகஸ்டு மாதம்‌ 22ம்‌ தேதியன்று வருடந்தோறும்‌, அகில உலகத்‌ திருச்சபையும்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌.

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயமே! எங்கள்‌ இரட்‌சணியமாயிரும்‌!

புதன், 21 ஆகஸ்ட், 2024

August 21 - St. Jane Frances de Chantal - அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்

 

ஆகஸ்டு 2️1️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌ விதவையுமான
அர்ச்‌.ஜேன்பிரான்செஸ்தே ஷாந்தால்


 

            ஜேன்‌ பிரான்செஸ்‌ ஃப்ரெமாய்ட்‌ 1572ம்‌ வருடம்‌,பிரான்சிலுள்ள பா்‌ கண்டியில்‌ பிறந்தாள்‌. இவளுடைய தாயார்‌, கிளார்வாக்ஸின்‌ அர்ச்‌. பெர்னார்டுவின்‌ பாரம்பரிய வம்சாவளியைச்‌ சேர்ந்தவர்கள்‌; இவளுக்கு ஒன்றரை வயதானபோது, இவளுடைய தாயார்‌, அடுத்த குழந்தையைப்‌ பிரசவித்தபோது, இறந்து போனார்கள்‌.  ஒரு புராட்டஸ்டன்டு பதிதன்‌, இவளை திருமணம்‌ செய்ய முன்‌  வந்தபோது, சர்வேசுரனுக்கும்‌ அவருடைய திருச்சபைக்கும்‌ எதிரியாயிருக்கிற பதிதனை நான்‌ திருமணம்‌ செய்யமாட்டேன்‌, என்று தீர்மானமாகக்‌ கூறி மறுத்துவிட்டார்கள்‌. 1592ம்‌ வருடம்‌, பிரான்ஸ்‌ அரசருடைய மெய்காப்பு வீரரும்‌, அரசவை உறுப்பினருமான கிறிஸ்டோஃபா்‌ ராபுடின்‌ -ஷாந்தால்‌ என்கிற ஒரு பிரபுவை, இவள்‌, திருமணம்‌ செய்து கொண்டாள்‌. 1601ம்‌ வருடம்‌, இவளுடைய கணவர்‌ துப்பாக்‌கிச்சூட்டின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில்‌, கொல்லப்பட்டார்‌.ஜேன்‌ 28 வயதில்‌ விதவையானாள்‌.

            4 குழந்தைகள்‌ பிறந்திருந்தன. மறு திருமணம்‌ செய்துகொள்ள உறவினர்களும்‌, பணிவிடைக்காரர்களும்‌ வற்‌புறுத்தி, கணவரை இழந்த துயரத்திலிருந்த இவளுடைய வேதனையை இன்னும்‌ கூடுதலாக அதிகரிக்கச்‌ செய்தனர்‌. 1604ம்‌ வருடம்‌, ஜேன்‌, ஜெனிவா மேற்றிராணியாரான, அர்ச்‌. பிரான்சிஸ்‌ சலேசியாரைச்‌ சந்தித்தாள்‌. டிஜானில்‌ உள்ள செயிண்ட் சாப்பல் ‌ தேவாலயத்தில்‌ பிரசங்கம்‌ நிகழ்த்தியபோது, அவரைச்‌ சந்தித்தாள்‌; அவரையே தனது ஆன்ம குருவாகத்‌ தெரிந்துகொண்டாள்‌.பின்னாளில்‌, இவருடைய ஆதரவின்‌ துணையுடனும்‌, தன்‌ தந்தையின்‌ ௨தவியுடனும்‌, போர்ஜஸ்‌ நகர அதிமேற்றிராணியாராயிருந்த தன்‌ சகோதரரின்‌ உதவியுடனும்‌, தனது நான்கு பிள்ளைகளையும்‌ உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியபிறகு, ஆன்னஸி என்ற இடத்திற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபையை ஸ்தாபிப்பதற்காகச்‌ சென்றாள்‌.

            இந்த இடத்தில்‌, 1610ம்‌ வருடம்‌, ஐூன்‌ 6ம்‌ தேதி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ திருநாளன்று, மகா பரிசுத்த தேவ மாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபை, திருச்சபையின்‌ அங்கீகாரத்துடன்‌ ஸ்தாபிக்கப்பட்டு துவக்கப்பட்டது! வியாதியினாலும்‌ வயதின்‌ காரணத்தினாலும்‌, மற்ற கன்னியர்‌ துறவற சபைகளில்‌ ஏற்றுக்கொள்‌ளப்படாத பெண்கள்‌, இச்சபையில்‌ எற்றுக் கொள்ளப்பட்டனர்‌.  ஜேன்‌ , பிரான்ஸ்‌ மற்றும்‌ இத்தாலி நாடுகளில்‌ அயராத பயணத்தை மேற்கொண்டு, அநேக மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ மரித்தபோது, ஸ்தாபிக்கப்பட்டிருந்த 86 மினவுத‌ல் கன்னியர்‌ சபை மடங்களே, இவளுடைய உன்னதமான அயரா முயற்சிகளின்‌ வெற்‌றிக்கு, அத்தாட்சியாயிருக்கின்றன!

            ஜேன்‌, தனது எல்லா மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களிலும்‌  அறிவிக்கப்பட வேண்டிய ஒரு சுற்றறிக்கையை, தன்‌ உதவியாளரிடம்‌ எழுதும்படிச்‌ செய்தபிறகு, உறுதியான விசுவாச முயற்சி செய்தாள்‌; இறுதி தேவதிரவிய அனுமானமாகிய மகா பரிசுத்த தேவநற்கருணையை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ உட்கொண்டாள்‌; அவஸ்தைப்பூசுதலை பக்தியுடன்‌ பெற்றுக்‌ கொண்டாள்‌; திவ்ய சேசுநாதரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ மெதுவாக , நிதானமாக மூன்று முறை உச்சரித்தபடி, 1641ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 13ம்‌ தேதியன்று, பாக்கியமாய்‌ மரித்தாள்‌. இவளுடைய பரிசுத்த ஆத்துமம்‌, ஒரு நெருப்பின்‌ கோளமாக மேலே உயர்ந்து மோட்சத்தை நோக்கிப்‌ பறந்து சென்றதை, அர்ச்‌.பிரான்சிஸ்‌ சலேசியாருக்குப்‌ பிறகு, இவளுடைய ஆன்மகுருவாயிருந்த அர்ச்‌.வின்சென்ட்‌ தே பவுல்‌ கண்டார்‌. அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலுக்கு, 14ம்‌ ஆசிர்வாதப்பா்‌ பாப்பரசரால்‌, 1751ம்‌ வருடம்‌, நவம்பர்‌ 21ம்‌ தேதி முத்திப்‌ பேறுபட்டமளிக்கப்பட்டது; 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌, 1767ம்‌ வருடம்‌ ஜூலை 16ம்‌ தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்கப்பட்டது.

“நரகமானது, திறமைமிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களால்‌ நிறைந்தி ருக்கிறது! ஆனால்‌, மோட்சமானது, ஆற்றல்மிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களைக்‌ கொண்டிருக்கிறது -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌

“ஆனால்”‌, “ஒருவேளை என்று எவ்வித நிபந்தனைகளுமில்லாமல்‌, சர்‌ வேசுரனுடைய திருச்சித்தம்‌, இன்றும்‌, நாளைக்கும்‌, எல்லா காலத்திற்கு மாக நிறைவேற்றப்படும்! -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌                                                                             

அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்!

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 20 - St. Bernard - அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு

 ஆகஸ்டு2️0️ம்தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகளை ஸ்துதித்துப்பாடிய சிதார்இசைக்கருவி என்று அழைக்கப்பட்டவரும்‌,ஸ்துதியரும்வேதபாரகருமான அர்ச்‌.  கிளார்வாக்ஸ்பெர்னார்டு திருநாள்

“Nun Quam satis De Maria”- 🏻+ St. Bernard of Clairvaux

மகா பரிசுத்த தேவமாதாவைப் பற்றி யாராலும்ஒருபோதும்போதிய அளவிற்குப்புகழ முடியாது!” ”- 🏻அர்ச்‌. பொர்னார்டு

அர்ச்‌. பொர்னார்டு, 12ம்நூற்றாண்டின்முற்பகுதியில்‌, தலைமை ஏற்று நடத்தக்கூடிய திருச்சபையின்மாபெரும்பிதாப்பிதாக்களில்ஒருவராகவும்‌, எல்லா காலத்திற்குமான மாபெரும்ஞான ஆசிரியர்களில்ஒருவராகவும்திகழ்ந்தார்‌.  இவர்‌ 1091ம்வருடம்பிரான்சிலுள்ள பர்கண்டியில்ஃபோன்டேன்ஸ்என்ற ஒரு கோட்டையில்பிறந்தார்‌. இவர்கொண்டிருந்த விசேஷ அறிவாற்றலின்உத்வேகத்தைக்கண்டு, இவருடைய பெற்றோர்கள்இவர்மட்டில்மிக உயரிய நம்பிக்கைகளைக்கொண்டிருந்தனர்‌; உலகம்இவருக்கு முன்பாக மாபெரும்ஒளியுடனும்‌,புன்னகைத்தபடியும்தோன்றியது! ஆனால்‌, 22வயதானபோது, அர்ச்‌. பெரனார்டு, இராணுவத்தை விட்டு வெளியேறினார்‌; சிட்டோவின்மடாதிபதியான, அர்ச்‌. ஸ்டீஃபன்ஹார்டிங்கிடம்ஞான ஆலோசனையைப்பெற்றபிறகு, 1098ம்வருடம்புதிகாக ஸ்தாபிக்கப்பட்டு, துவக்கப்பட்டிருந்த சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர தீர்மானித்தார்‌; அச்சிறிய துறவறசபை அச்சமயம்‌, பல இன்னல்களுக்கிடையே அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இத்துறவறசபை, அர்ச்‌. ஆசிர்வாதப்பர்துறவறசபையின்ஆரம்ப கால கடின தபசையும்ஒழுங்குவிதிமுறைகளையும்அனுசரிக்கும்படியாக, துவக்கப்பட்டிருந்தது.இத்துறவற சபையின்விதிமுறைகள்‌,அர்ச்‌. பெர்னார்டை மிகவும்கவர்ந்திழுத்தது; அதன்காரணமாக, இவர்‌, தனது சகோதரர்கள்ஐந்து பேரையும்மற்றும்‌, தனது நண்பர்கள்‌ 25 பேரையும்‌,இத்துறவற சபையில்சேரும்படி பெருமுயற்சி செய்துத்தூண்டினார்‌. அதன்படி, இவர்தன்சகோதரர்கள்‌, மற்றும்நண்பர்கள்என்று 30 பேருடன்‌ 1113ம்வருடம்‌, சிட்டோவிலுள்ள சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர்ந்தனர்‌. அர்ச்‌. பெர்னார்டு, தன்கடைசி இளைய சகோதரரான நிவார்டுவை , தனிமையில்வயோதிப வயதிலிருக்கும்தந்தையை கவனித்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார்‌. ஏனெனில்இவருடைய தாயார்ஏற்கனவே காலமாயிருந்தார்கள்‌; மேலும்‌, அண்ணன்மார்கள்‌, அந்த கடைசி தம்பி நிவார்டுவிடம்‌,” இனி நம்குடும்பத்தின்சகல ஆஸ்திகளுக்கும்நீ மட்டும்தான்ஒரே வாரிசு!”, என்று கூறிச்‌  சென்றனர்‌; அதற்கு, நிவார்டு, தன்அண்ணன்பெர்னார்டுவிடம்‌, “ஆம்‌.நீங்கள்எனக்கு உலகத்தை விட்டுச்செல்கிறீர்கள்‌. ஆனால்‌, நீங்கள்‌ , மோட்சத்தை உங்களுக்கு மட்டும்வைத்துக்கொள்கிறீர்கள்‌! இது நீதி என்று கருதுகிறீர்களா?” என்று கூறிவிட்டு, அவரும்‌, அவர்களுடன்சிஸ்டர்ஷியன்மடத்திற்குள்நுழைந்தார்‌; இறுதியில்‌, அவர்களுடைய வயது முதிர்ந்த தந்தையும்‌, அவர்களுடன்சேர்ந்து கொண்டார்‌!

மூன்று வருட காலத்திற்குள்‌, அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸிலுள்ள மூன்றாவது சிஸ்டர்ஷியன்மடத்தின்மடாதிபதியாக நியமிக்கப் பட்டார்‌. இளம்வயதிலேயே மடாதிபதியான அர்ச்‌.  பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்மங்கள வார்த்தையின்பரம இரகசியத்திருநாளுக்கான ஞான தியானப்பிரசங்கங்களை எழுதினார்‌. இது, இவரை விசேஷவரம்பெற்ற ஒருமாபெரும்ஞான ஆசிரியரும்எழுத்தாளருமாக திருச்சபைக்குக்காண்பித்தது! அதே சமயம்‌, “மகா பரிசுத்த தேவமாதாவின்சித்தாரா இசைக்கருவி!” என்றும்‌, இவர்அழைக்கப்படக்காரணமாயிற்று! மேலும்‌, ஆண்டவருக்கும்‌, மனுக்குலத்திற்கும்இடையே மத்தியஸ்தராக மகா பரிசுத்த தேவமாதா ஆற்றும்உன்னதமான அலுவல்பற்றி, இவர்தெளிவித்துக்காண்பித்த தியானக்கருத்துக்கள்,‌ இவரை மகா பரிசுத்த தேவமாதாவின்வேதபாரகராக அடையாளம்காண்பித்தன!

 இவர்எழுதிய ஞான நூல்களும்‌, இவருடைய அசாதாரண தனிப்பட்ட வசீகரமான உன்னத கத்தோலிக்கக்குணாதிசயங்களும்‌, அநேகரை, கிளார்வாக்ஸ்மற்றும்மற்ற சிஸ்டர்ஷியன்துறவற மடங்களை நோக்கிக்கவர்ந்திழுக்கக்காரணமாயின! இதனால்‌, அநேக சிஸ்டர்ஷியன்துறவற மடங்கள்புதிதாகத்துவங்கப்பட்டன! அர்ச்‌. பெர்னார்டு, ஜீவிய காலத்தில்‌, 136 துறவற மடங்களை ஸ்தாபித்தார்‌; இவருடைய துறவிகள்‌, ஜெர்மனி, போர்த்துக்கல்‌, ஸ்வீடன்‌,அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச்சென்றனர்‌.

அர்ச்‌. பெர்னார்டுவின்அசாதாரணமான அர்ச்சிஷ்டதனத்தினுடைய உன்னதமான சுகந்த நறுமணமும்புகழும்‌, எல்லா இடங்களிலும்பரவியது. அநேக மேற்றிராசனங்கள்‌, இவரை அவர்களுடைய மேற்றிராணியாராக்குவதற்குக்கேட்டனர்‌. தனது முந்தைய சீடரும்அப்போதைய பாப்பரசருமாயிருந்த 3ம்யூஜினியுஸின்உதவியால்‌, இம்மேற்றிராணியார்பட்டத்திலிருந்து , அர்ச்‌. பெொர்னார்டு தப்பித்துக்கொண்டார்‌.  இருப்பினும்‌, மேற்றிராணியார்களும்‌, அரசர்களும்‌, பாப்புமார்களும்‌, இவரிடம்‌, அவ்வப்போது, ஞான ஆலோசனையைப்பெற்று வந்தனர்‌.

இறுதியாக, யூஜினியுஸ்பாப்பரசர்‌, இவரை சிலுவைப்போருக்குப்பிரசங்கியாராக ஏற்படுத்தினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, தனது அத்தியந்த பக்திபற்றுதலுடனும்‌, ஆர்வத்துடனும்‌, நேர்த்தியான பிரசங்கங் களாலும்‌, புதுமைகளாலும்‌, அகில உலகக்கிறீஸ்துவ நாடுகளிலும்‌, பிரான்ஸ்‌, ஜெர்மனி, ஆகிய நாடுகளிலும்‌, சிலுவைப்போர்செய்வதற்கான ஊக்கத்தையும்உற்சாகத்தையும்ஏவித்தூண்டினார்‌. 3ம்கொன்ராடு சக்கரவர்த்தி ஒரு சமயம்‌, இவருடைய சிலுவைப்போருக்கான பிரசங்கத்கைக்கேட்டு உருக்கமாக கண்ணீர்சிந்தி அழுதார்‌; இரண்டு மிகப்பெரிய படைகளை சிலுவைப்போருக்கு அனுப்பி வைத்தார்‌.

இவர்‌, ஆண்டவரின்பரிசுக்த பூமியை மகமதியரிடமிருந்து, பாதுகாக்கும்படியாக, துறவற வார்த்தைப்பாடுகளைக்கொடுத்து, இராணுவ யுக்திகளுடன்பயணங்கள்மேற்கொண்டு, கிறீஸ்துவுக்காக மாவீரர்களாக (Knights Templar) போராடக்கூடிய ஒரு புதிய துறவற சபைக்கான விதிமுறைகளையும்இயற்றி எழுதினார்‌. 3ம்யூஜின் பாப்பரசரின்விண்ணப்பத்தின்படி,காணக்கூடிய திருச்சபையின்தலைவருடைய தனிப்பட்ட பரிசுத்தத்தனத்தினுடைய அவசியத் தேவையின்மட்டில்வலியுறுத்தும்படியாக கவனமாகக்கருத்தில்கொண்டிருக்க வேண்டியவைகளுடைய புத்தகத்தை, மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு ஞான புத்தகத்தை, அர்ச்‌.  பெர்னார்டு எழுதினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸில்‌, 1153ம்வருடம்‌, ஆகஸ்டு 20ம்தேதி பாக்கியமாய்மரித்தார்‌; 1174ம்வருடம்‌, ஜனவரி 18ம்தேதியன்று, 3ம்அலெக்சாண்டர்பாப்பரசரால்‌, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது: 7ம்பத்திநாதர்பாப்பரசரால்‌, 1830ம்வருடம்‌, இவர்திருச்சபையின்வேதபாரகராக அறிவிக்கப்பட்டார்‌.

ஆபத்துக்கள்‌, சந்தேகங்கள்‌, கஷ்டங்கள்‌, ஏற்படும்போது, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றி நினை! அவர்களைக்கூவி அழை! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திருநாமம்‌, உன்உதடுகளிலிருந்து அகலாமலிருப்பதாக! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திரு நாமம்‌, உன்இருதயத்கை விட்டு ஒருபோதும்வெளியேற விடாதே! மகா பரிசுத்த தேவமாதாவின்ஜெபத்தினுடைய உதவியை, அதிக நிச்சயத்துடன்நீ அடைந்துகொள்வதற்கு, அவர்களுடைய காலடியைப்பின்பற்றி, கவனத்துடன்நடந்து செல்‌! மகா பரிசுத்த தேவமாதாவை ,உன்வழிகாட்டியாகக்கொண்டிருந்தால்‌, நீ ஒருபோதும்‌, வழிதவறிக்கெட்டுப்போக மாட்டாய்‌! நீ்அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளும்போது, ஒருபோதும்அதைரியமடையமாட்டாய்‌! இருதய சஞ்சலமடைய மாட்டாய்‌! நம்பிக்கையை இழக்க மாட்டாய்‌! மகா பரிசுத்த தேவமாதா, உன்மனதில்இருக்கும்வரை, நீ ஏமாற்றப்படாமல்பாதுகாப்பாய்இருப்பாய்‌! மகா பரிசுத்த தேவமாதா உன்கரத்தைப்பிடித்திருக்கும்போது, நீ தவறி விழமாட்டாய்‌! அவர்களுடைய பாதுகாப்பின்கீழ்‌,நீ எதற்கும்பயப்படத்தேவையில்லை! அவர்கள்உன்முன்பாக நடந்து சென்றால்‌, நீ சோர்வடையமாட்டாய்‌! உனக்கு மகா பரிசுத்த தேவமாதா, தமது ஆதரவைக்காண்பித்தால்‌, நீ இலக்கை நிச்சயமாகஅடைந்துகொள்வாய்‌!”📚🏻+ அர்ச்‌. பெர்னார்டு

 ஸ்துதியரும்மகா வேதபாரகரும்‌ , மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைப்பாடும்இசைக்கருவியுமான அர்ச்‌. பெர்னார்டு! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!  

August 19, St. John Eudes - அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பர்

 

ஆகஸ்டு 1️9️ம்தேதி

யூடிஸ்ட்ஸ்குருக்கள்சபை என்று அழைக்கப்படுகிற, சேசுமரியாயின்சபையின்ஸ்தாபகரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்திருநாள்

அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1601ம்வருடம்‌, பிரான்சிலுள்ள நார்மண்டியைச்சேர்ந்த ரி என்கிற கிராமத்தில்‌, பக்தியுள்ள பெற்றோர்களிடம்பிறந்தார்‌. அவர்கள்இவரைப்பிறந்தவுடனேயே மகா பரிசுத்த தேவ மாதாவிற்கு அர்ப்பணம்செய்து ஒப்புக்கொடுத்தனர்‌. 1615ம்வருடம்‌, கான்என்ற இடத்திலுள்ள சேசுசபைக்கல்லூரியில்படித்தபோது, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்பரிசுத்த கற்பு வார்த்தைப்பாட்டைக்கொடுத்தார்‌; தன்னை முழுமையாக மகா பரிசுத்த தேவ  மாதாவிற்கு அர்ப்பணித்தார்‌;அன்று முதல்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மீதான அத்தியந்த பக்தியானது, இவரிடம்இன்னும்ஆழமாகவும்‌, இன்னும்உயரமாகவும்குறிப்பிடத்தக்கவிதமாக, அதிகரிக்கத்துவங்கியது.

1623ம்வருடம்‌, இவர்‌, வந்.பெரூலின்கர்தினால்ஆண்டகையால்ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸினுடைய ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌. 1625ம்வருடம்டிசம்பர்‌ 20ம்தேதியன்று,குருப்பட்டம்பெற்றார்‌; அப்போஸ்தல வேதபோதக அலுவலில்ஈடுபட்டு, நார்மண்டியிலும்‌, பர்கண்டியிலும்‌, பிரான்சின்ஏழைகள்வசிக்கும்சேரிகளிலும் மூலை முடுக்குகளிலும்‌, பிரிட்டனியிலும்‌, சுவிசேஷத்தைப்பிரசங்கித்து வந்தார்‌.  குருக்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி மிக முக்கியமானது, என்பதை உணர்ந்தவராக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, செபக்கூட துறவற சபையிலிருந்து வெளியேறி, சேசுமரியாயின்சபையை ஸ்தாபித்தார்‌. இது யூடிஸ்ட்ஸ்துறவற சபை என்று அறைக்கப்படுகிறது; இச்சபையின்முக்கிய நோக்கம்‌, மிகச்சிறப்பான குருமடத்தினகல்வியை குருமாணவர்களுக்கு அளிப்பதாகும்‌.

இதனுடைய முதல்குருமடம் , கான்என்ற இடத்தில்ஆரம்பிக்கப்பட்டது;: பின்விரைவிலேயே,மற்ற  பல இடங்களிலும்துவங்கப்பட்டது. தீய வழிகளில்ஜீவிக்கும்பெண்களை மனந்திருப்புவதற்காகவும்‌, பாவ வழியிலிருந்து மனந்திரும்பிய உத்தம கத்தோலிக்க ஜீவியம்  ஜீவிக்கிற நிராதரவான பெண்களுக்கு உதவும்படியாகவும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்பிறா்சிநேகத்தின்சபையை அர்ச்‌. யூட்ஸ் அருளப்பா்ஸ்தாபித்தார்‌; புறக்கணிக்கப்பட்ட கத்தோலிக்கர்களிடம்சுவிஷேத்தையும்ஞான உபதேசத்தையும்போதிப்பதற்காக, பங்குகளில்செயல்படக்கூடிய ஒரு வேதபோதக நிறுவனத்தையும்ஸ்தாபித்தார்‌. நீண்ட காலமாக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, தேவாலயங்களிலும்‌, திறந்த வெளி மைதானங்களிலும்‌, திரளான கூட்டங்களுக்கு, அல்லது அரண்மனைகளில்அரசவையிலுள்ள உயர்குடி மக்களுக்கும்அரசருக்கும்பிரசங்கித்து வந்தார்‌; மக்களிடையே நிலவிய பாவாக்கிரமங்கள்பற்றி, மிக பலமாகக்கண்டித்துப்பிரசங்கித்து வந்தார்‌; இவர்அனுசரித்த தன்னிகறற்ற பரிசுத்தத்தனத்துடன்கூட செய்த நேர்த்தியான பிரசங்கங்கள்‌, மக்களின்இருதயங்களை மிக ஆழமாக ஊடுருவும்சக்திவாய்ந்தவையாக திகழ்ந்தன!

பிரான்ஸ்நாடுமுழுவதும்‌, இவருடைய பிரசங்கங்கள்மிகவும்பிரபல்யமடைந்தன! திரளான மக்கள்பாவ ஜீவியத்தை விட்டு மனந்திரும்பினர்‌! உத்தம கத்தோலிக்கர்களாக ஜீவிக்கலாயினர்‌! நமதாண்டவருடையவும்‌, தேவமாதாவுடையவும்  மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்,‌ நம்மேல்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினால்பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன! என்பதை கேட்பவர்இருதயங்களில்ஊடுருவும்படியாக, சேசுமரிய திரு இருதய பக்தியை அயராமல்சென்ற இடங்களிலெல்லாம்‌, பரப்பி வந்தார்‌. நம்மேல்சர்வேசுரன்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினுடைய அடையாளமாக, திவ்ய சேசுமரிய திரு இருதயங்கள்நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! என்றும்‌, இவ்விரு மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்மீது பக்திகொண்டிருக்கும்ஒரு உத்தம கத்தோலிக்க சமுதாயத்திற்கு நாம்எவ்வாறு அழைக்கப்பட்டிருக்கிறோம்‌? என்பதைப்பற்றியும்அயராமல்‌, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்சென்ற இடங்களிலெல்லாம்‌, ஊக்கத்துடனும்உற்சாகத்துடனும்பிரசங்கித்து வந்தார்‌.

மகா பரிசுத்த சேசுமரிய திவ்ய திரு இருதயங்களுக்குத்தோத்திரமாக, இவர்திவ்ய பூசை ஜெபங்களையும்‌, திருவழிபாட்டின்மற்றும்துறவியர்கன்னியர்ஜெபிக்கக்கூடிய கட்டளை ஜெபங்களையும்இயற்றினார்‌; 1648ம்வருடம்‌, அவுட்டனில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மாசற்ற திரு இருதயத்தின்திருநாள்பிப்ரவரி 8ம்தேதி கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்‌. 1672ம்வருடம்‌, அக்டோபர்‌ 20ம்தேதி, திவ்ய சேசுநாதர்சுவாமியின்மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்திருநாள்கொண்டாடப்பட்டது. அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1680ம்வருடம்‌, ஆகஸ்ட்‌ 19ம்தேதியன்று, சேசுமரியாயின்மகா பரிசுத்தத்திவ்ய திருநாமங்களை பக்திபற்றுதலுடன்உச்சரித்தபடி பாக்கியமாய்மரித்தார்‌. 1925ம்வருடம்‌, மே 31ம்தேதியன்று, 11ம்பத்திநாதர்பாப்பரசரால்இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. இவர்மரித்தபிறகு, சேசுமரியாயின்சபை, தொடர்ந்து வளர்ந்து கொண்டு வந்தது. 1789ம்வருடம்‌, பிரஞ்சுப்புரட்சி துவங்கியபோது, இத்துறவற சபைக்குருக்கள்‌ 15 குருமடங்களை நடத்தி வந்தனர்‌; சில கல்லூரிகளையும்‌, சில பங்குகளையும்  நடத்தி வந்தனர்‌. பிரஞ்சுப்புரட்சியின்போது, இச்சபையின்எல்லா மடங்களும்மூடப்பட்டன ; இச்சபைக்குருக்கள்மற்ற நாடுகளுக்கு சிதறி ஓடினர்‌; இவர்களில்நான்கு குருக்கள்‌, உதவி தலைமை அதிபரானசங்.பிரான்சிஸ்லூயிஸ்ஹெர்பா்ட்சுவாமியார் உட்பட , பாரீசில்பிரஞ்சுப்புரட்சிக்காரர்களால்‌, வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. 1926ம்வருடம்இவர்களுக்கு முத்திப்பேறுபட்டமளிக்கப்பட்டது. 

மற்ற மனிதர்களுடன்வியாபார விஷயமாக, ஏதாவது பேச்சு வார்த்தை நிகழ்த்துவதற்கு முன்னதாக,இந்த குறிப்பிட்ட அலுவலின்போது, அதன்விளைவாக, சர்வேசுரனுக்கு அதிமிக மகிமை ஏற்படவேண்டும்என்பதன்பேரில்‌, அந்த மனிதர்களும்ஏற்புடன்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்ற கருத்திற்காக, எப்போதும்‌, அவர்களுடைய காவல்சம்மனசானவர்களிடமும்‌, அவர்களுடைய பாதுகாவலர்களான அர்ச்சிஷ்டவர்களிடமும்வேண்டிக்கொள்ளவேண்டும்‌!”- 🏻+ அர்ச்‌.  யூட்ஸ்அருளப்பர் 

ஸ்துதியரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!