Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Live லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Live லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 20 - St. Bernard - அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு

 ஆகஸ்டு2️0️ம்தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகளை ஸ்துதித்துப்பாடிய சிதார்இசைக்கருவி என்று அழைக்கப்பட்டவரும்‌,ஸ்துதியரும்வேதபாரகருமான அர்ச்‌.  கிளார்வாக்ஸ்பெர்னார்டு திருநாள்

“Nun Quam satis De Maria”- 🏻+ St. Bernard of Clairvaux

மகா பரிசுத்த தேவமாதாவைப் பற்றி யாராலும்ஒருபோதும்போதிய அளவிற்குப்புகழ முடியாது!” ”- 🏻அர்ச்‌. பொர்னார்டு

அர்ச்‌. பொர்னார்டு, 12ம்நூற்றாண்டின்முற்பகுதியில்‌, தலைமை ஏற்று நடத்தக்கூடிய திருச்சபையின்மாபெரும்பிதாப்பிதாக்களில்ஒருவராகவும்‌, எல்லா காலத்திற்குமான மாபெரும்ஞான ஆசிரியர்களில்ஒருவராகவும்திகழ்ந்தார்‌.  இவர்‌ 1091ம்வருடம்பிரான்சிலுள்ள பர்கண்டியில்ஃபோன்டேன்ஸ்என்ற ஒரு கோட்டையில்பிறந்தார்‌. இவர்கொண்டிருந்த விசேஷ அறிவாற்றலின்உத்வேகத்தைக்கண்டு, இவருடைய பெற்றோர்கள்இவர்மட்டில்மிக உயரிய நம்பிக்கைகளைக்கொண்டிருந்தனர்‌; உலகம்இவருக்கு முன்பாக மாபெரும்ஒளியுடனும்‌,புன்னகைத்தபடியும்தோன்றியது! ஆனால்‌, 22வயதானபோது, அர்ச்‌. பெரனார்டு, இராணுவத்தை விட்டு வெளியேறினார்‌; சிட்டோவின்மடாதிபதியான, அர்ச்‌. ஸ்டீஃபன்ஹார்டிங்கிடம்ஞான ஆலோசனையைப்பெற்றபிறகு, 1098ம்வருடம்புதிகாக ஸ்தாபிக்கப்பட்டு, துவக்கப்பட்டிருந்த சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர தீர்மானித்தார்‌; அச்சிறிய துறவறசபை அச்சமயம்‌, பல இன்னல்களுக்கிடையே அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இத்துறவறசபை, அர்ச்‌. ஆசிர்வாதப்பர்துறவறசபையின்ஆரம்ப கால கடின தபசையும்ஒழுங்குவிதிமுறைகளையும்அனுசரிக்கும்படியாக, துவக்கப்பட்டிருந்தது.இத்துறவற சபையின்விதிமுறைகள்‌,அர்ச்‌. பெர்னார்டை மிகவும்கவர்ந்திழுத்தது; அதன்காரணமாக, இவர்‌, தனது சகோதரர்கள்ஐந்து பேரையும்மற்றும்‌, தனது நண்பர்கள்‌ 25 பேரையும்‌,இத்துறவற சபையில்சேரும்படி பெருமுயற்சி செய்துத்தூண்டினார்‌. அதன்படி, இவர்தன்சகோதரர்கள்‌, மற்றும்நண்பர்கள்என்று 30 பேருடன்‌ 1113ம்வருடம்‌, சிட்டோவிலுள்ள சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர்ந்தனர்‌. அர்ச்‌. பெர்னார்டு, தன்கடைசி இளைய சகோதரரான நிவார்டுவை , தனிமையில்வயோதிப வயதிலிருக்கும்தந்தையை கவனித்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார்‌. ஏனெனில்இவருடைய தாயார்ஏற்கனவே காலமாயிருந்தார்கள்‌; மேலும்‌, அண்ணன்மார்கள்‌, அந்த கடைசி தம்பி நிவார்டுவிடம்‌,” இனி நம்குடும்பத்தின்சகல ஆஸ்திகளுக்கும்நீ மட்டும்தான்ஒரே வாரிசு!”, என்று கூறிச்‌  சென்றனர்‌; அதற்கு, நிவார்டு, தன்அண்ணன்பெர்னார்டுவிடம்‌, “ஆம்‌.நீங்கள்எனக்கு உலகத்தை விட்டுச்செல்கிறீர்கள்‌. ஆனால்‌, நீங்கள்‌ , மோட்சத்தை உங்களுக்கு மட்டும்வைத்துக்கொள்கிறீர்கள்‌! இது நீதி என்று கருதுகிறீர்களா?” என்று கூறிவிட்டு, அவரும்‌, அவர்களுடன்சிஸ்டர்ஷியன்மடத்திற்குள்நுழைந்தார்‌; இறுதியில்‌, அவர்களுடைய வயது முதிர்ந்த தந்தையும்‌, அவர்களுடன்சேர்ந்து கொண்டார்‌!

மூன்று வருட காலத்திற்குள்‌, அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸிலுள்ள மூன்றாவது சிஸ்டர்ஷியன்மடத்தின்மடாதிபதியாக நியமிக்கப் பட்டார்‌. இளம்வயதிலேயே மடாதிபதியான அர்ச்‌.  பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்மங்கள வார்த்தையின்பரம இரகசியத்திருநாளுக்கான ஞான தியானப்பிரசங்கங்களை எழுதினார்‌. இது, இவரை விசேஷவரம்பெற்ற ஒருமாபெரும்ஞான ஆசிரியரும்எழுத்தாளருமாக திருச்சபைக்குக்காண்பித்தது! அதே சமயம்‌, “மகா பரிசுத்த தேவமாதாவின்சித்தாரா இசைக்கருவி!” என்றும்‌, இவர்அழைக்கப்படக்காரணமாயிற்று! மேலும்‌, ஆண்டவருக்கும்‌, மனுக்குலத்திற்கும்இடையே மத்தியஸ்தராக மகா பரிசுத்த தேவமாதா ஆற்றும்உன்னதமான அலுவல்பற்றி, இவர்தெளிவித்துக்காண்பித்த தியானக்கருத்துக்கள்,‌ இவரை மகா பரிசுத்த தேவமாதாவின்வேதபாரகராக அடையாளம்காண்பித்தன!

 இவர்எழுதிய ஞான நூல்களும்‌, இவருடைய அசாதாரண தனிப்பட்ட வசீகரமான உன்னத கத்தோலிக்கக்குணாதிசயங்களும்‌, அநேகரை, கிளார்வாக்ஸ்மற்றும்மற்ற சிஸ்டர்ஷியன்துறவற மடங்களை நோக்கிக்கவர்ந்திழுக்கக்காரணமாயின! இதனால்‌, அநேக சிஸ்டர்ஷியன்துறவற மடங்கள்புதிதாகத்துவங்கப்பட்டன! அர்ச்‌. பெர்னார்டு, ஜீவிய காலத்தில்‌, 136 துறவற மடங்களை ஸ்தாபித்தார்‌; இவருடைய துறவிகள்‌, ஜெர்மனி, போர்த்துக்கல்‌, ஸ்வீடன்‌,அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச்சென்றனர்‌.

அர்ச்‌. பெர்னார்டுவின்அசாதாரணமான அர்ச்சிஷ்டதனத்தினுடைய உன்னதமான சுகந்த நறுமணமும்புகழும்‌, எல்லா இடங்களிலும்பரவியது. அநேக மேற்றிராசனங்கள்‌, இவரை அவர்களுடைய மேற்றிராணியாராக்குவதற்குக்கேட்டனர்‌. தனது முந்தைய சீடரும்அப்போதைய பாப்பரசருமாயிருந்த 3ம்யூஜினியுஸின்உதவியால்‌, இம்மேற்றிராணியார்பட்டத்திலிருந்து , அர்ச்‌. பெொர்னார்டு தப்பித்துக்கொண்டார்‌.  இருப்பினும்‌, மேற்றிராணியார்களும்‌, அரசர்களும்‌, பாப்புமார்களும்‌, இவரிடம்‌, அவ்வப்போது, ஞான ஆலோசனையைப்பெற்று வந்தனர்‌.

இறுதியாக, யூஜினியுஸ்பாப்பரசர்‌, இவரை சிலுவைப்போருக்குப்பிரசங்கியாராக ஏற்படுத்தினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, தனது அத்தியந்த பக்திபற்றுதலுடனும்‌, ஆர்வத்துடனும்‌, நேர்த்தியான பிரசங்கங் களாலும்‌, புதுமைகளாலும்‌, அகில உலகக்கிறீஸ்துவ நாடுகளிலும்‌, பிரான்ஸ்‌, ஜெர்மனி, ஆகிய நாடுகளிலும்‌, சிலுவைப்போர்செய்வதற்கான ஊக்கத்தையும்உற்சாகத்தையும்ஏவித்தூண்டினார்‌. 3ம்கொன்ராடு சக்கரவர்த்தி ஒரு சமயம்‌, இவருடைய சிலுவைப்போருக்கான பிரசங்கத்கைக்கேட்டு உருக்கமாக கண்ணீர்சிந்தி அழுதார்‌; இரண்டு மிகப்பெரிய படைகளை சிலுவைப்போருக்கு அனுப்பி வைத்தார்‌.

இவர்‌, ஆண்டவரின்பரிசுக்த பூமியை மகமதியரிடமிருந்து, பாதுகாக்கும்படியாக, துறவற வார்த்தைப்பாடுகளைக்கொடுத்து, இராணுவ யுக்திகளுடன்பயணங்கள்மேற்கொண்டு, கிறீஸ்துவுக்காக மாவீரர்களாக (Knights Templar) போராடக்கூடிய ஒரு புதிய துறவற சபைக்கான விதிமுறைகளையும்இயற்றி எழுதினார்‌. 3ம்யூஜின் பாப்பரசரின்விண்ணப்பத்தின்படி,காணக்கூடிய திருச்சபையின்தலைவருடைய தனிப்பட்ட பரிசுத்தத்தனத்தினுடைய அவசியத் தேவையின்மட்டில்வலியுறுத்தும்படியாக கவனமாகக்கருத்தில்கொண்டிருக்க வேண்டியவைகளுடைய புத்தகத்தை, மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு ஞான புத்தகத்தை, அர்ச்‌.  பெர்னார்டு எழுதினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸில்‌, 1153ம்வருடம்‌, ஆகஸ்டு 20ம்தேதி பாக்கியமாய்மரித்தார்‌; 1174ம்வருடம்‌, ஜனவரி 18ம்தேதியன்று, 3ம்அலெக்சாண்டர்பாப்பரசரால்‌, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது: 7ம்பத்திநாதர்பாப்பரசரால்‌, 1830ம்வருடம்‌, இவர்திருச்சபையின்வேதபாரகராக அறிவிக்கப்பட்டார்‌.

ஆபத்துக்கள்‌, சந்தேகங்கள்‌, கஷ்டங்கள்‌, ஏற்படும்போது, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றி நினை! அவர்களைக்கூவி அழை! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திருநாமம்‌, உன்உதடுகளிலிருந்து அகலாமலிருப்பதாக! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திரு நாமம்‌, உன்இருதயத்கை விட்டு ஒருபோதும்வெளியேற விடாதே! மகா பரிசுத்த தேவமாதாவின்ஜெபத்தினுடைய உதவியை, அதிக நிச்சயத்துடன்நீ அடைந்துகொள்வதற்கு, அவர்களுடைய காலடியைப்பின்பற்றி, கவனத்துடன்நடந்து செல்‌! மகா பரிசுத்த தேவமாதாவை ,உன்வழிகாட்டியாகக்கொண்டிருந்தால்‌, நீ ஒருபோதும்‌, வழிதவறிக்கெட்டுப்போக மாட்டாய்‌! நீ்அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளும்போது, ஒருபோதும்அதைரியமடையமாட்டாய்‌! இருதய சஞ்சலமடைய மாட்டாய்‌! நம்பிக்கையை இழக்க மாட்டாய்‌! மகா பரிசுத்த தேவமாதா, உன்மனதில்இருக்கும்வரை, நீ ஏமாற்றப்படாமல்பாதுகாப்பாய்இருப்பாய்‌! மகா பரிசுத்த தேவமாதா உன்கரத்தைப்பிடித்திருக்கும்போது, நீ தவறி விழமாட்டாய்‌! அவர்களுடைய பாதுகாப்பின்கீழ்‌,நீ எதற்கும்பயப்படத்தேவையில்லை! அவர்கள்உன்முன்பாக நடந்து சென்றால்‌, நீ சோர்வடையமாட்டாய்‌! உனக்கு மகா பரிசுத்த தேவமாதா, தமது ஆதரவைக்காண்பித்தால்‌, நீ இலக்கை நிச்சயமாகஅடைந்துகொள்வாய்‌!”📚🏻+ அர்ச்‌. பெர்னார்டு

 ஸ்துதியரும்மகா வேதபாரகரும்‌ , மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைப்பாடும்இசைக்கருவியுமான அர்ச்‌. பெர்னார்டு! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!  

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 16 - St. Joachim, - அர்ச்‌. ஜோக்கிம்

 

ஆகஸ்டு 16ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின் மகா பரிசுத்த தந்தையான அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்


            அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்,  1584ம் வருடம், உரோமன் காலண்டரில் சேர்க்கப்பட்டது. முதலில், இந்த திருநாள், மார்ச் 20ம் தேதியன்று, மகா பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச்‌. சூசையப்பர் திருநாளுக்கு அடுத்த நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது;1738ம் வருடம், இத்திருநாள், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்கு, எட்டு நாட்களுக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றப் பட்டது! ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டை அனுசரிப்பதை அனுமதிக்கும் விதமாக, அர்ச்‌. பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்குப் பின் வரும் நாளில், அதாவது, ஆகஸ்டு 16ம் தேதிக்கு மாற்றினார்.

            மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தின் மகிமையைக் கொண்டாடும்போது, அவர்களுடைய மகா பரிசுத்த தந்தையான அர்ச்.ஜோக்கிமையும் நாம் நினைவு கூரும் விதமாக, இந்நாளில், அர்ச்.ஜோக்கிம் திருநாள் அனுசரிக்கப்படும்படியாக, அர்ச்‌. பத்தாம் பத்தி நாதர் பாப்பரசர் ஏற்பாடு செய்தார்! எபிரேய மொழியில், ஜோக்கிம் என்ற பெயருக்கு, “சர்வேசுரன்  ஆயத்தம் செய்கிறார்!”, என்று அர்த்தம்.யூதாவின் கோத்திரத்தில், தாவீதின் குலத்தில் பிறந்த அர்ச்‌.  ஜோக்கிம், பக்தியுள்ள மனிதராயிருந்தார்; இவர் தவறாமல் தொடர்ந்து ஏழைகளுக்கும், செப்ஃபோரிஸிலிருந்த  ஜெபக்கூடத்திற்கும், பண உதவி செய்து வந்தார்; பின்னா், அர்ச்‌.  அன்னம்மாளைத் திருமணம் செய்தார்.   மகா பரிசுத்த தேவமாதாவின் பெற்றோர்கள் முதலில் கலிலேயாவில் ஜீவித்ததாகவும், பின்னர் ஜெருசலேமிற்குக் குடி பெயர்ந்ததாகவும், பரிசுத்த பாரம்பரியம் கூறுகின்றது.  20 வருடங்கள் குழந்தையில்லாமலிருந்தனர்.

            இப்பரிசுத்தத் தம்பதியா், வருடந்கோறும் தவறாமல், கூடாரத் திருநாளுக்கு ஜெருசலேம் தேவாலயத்திற்குச் சென்றனர்; இருப்பினும், பெரிய குரு, ஜோக்கிமினுடைய பலியை நிராகரித்து வந்தார்; இவருடைய மனைவி குழந் தையில்லாமலிருப்பது, தேவ கோபத்தின் அடையாளமாயிருக்கிறது, என்று கூறி, அர்ச்‌. ஜோக்கிம் கொண்டு சென்ற பலிப்பொருட்களை நிராகரித்து வந்தார்: இதன்விளைவாக, அர்ச்‌.  ஜோக்கிம், வனாந்திரத்திற்குச் சென்று,  40 நாட்கள் உபவாசம், தபசு இருந்தார்.அச்சமயம்,சம்மனசுகள், இவருக்கும், அர்ச்‌.  அன்னம்மாளுக்கும் காட்சியளித்து,ஒரு பெண்குழந்தை அவர்களுக்குப் பிறக்கப் போகிறது, என்றும், அக்குழந்தை, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப் பட வேண்டும், என்றும் அறிவித்தனர். மகா பரிசுத்த மாமரி, அமலோற்பவமாக பிறந்த நாளன்று, அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும் அனுபவித்த உன்னதமான சந்தோஷத்தைப்பற்றி யாரால் விவரிக்கக் கூடும்? அவர்களுக்கு, அந்த நாள் மற்றெல்லா நாட்களுக்கும் மேலான நாளாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருந்தது!

            ஏனெனில், அந்த நாள், இவர்கள் இருவரையும் நமதாண்டவரின் பரிசுத்த தாத்தா பாட்டியாக மாற்றவிருக்கிற நாளுக்குக் கூட்டிச்செல்லக்கூடிய நாளாக இருந்தது! மகா பரிசுத்த தேவமாதா 3 வயது குழந்தையாக இருந்தபோது, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண் குழந்தைகளை வளர்ப்பதில், ஜெருசலேம் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த பரிசுத்தப் பெண்களிடம், அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும், தங்கள் மகா நேச முள்ள குழந்தையை, ஒப்படைத்தார்கள். இந்த தேவாலயத்தில் சர்வேசுரனுடைய கருத்தூன்றிய நேரடிப் பார்வையின் கீழ், மகா பரிசுத்த கன்னிமாமரி, எட்டு வருட காலம் ஜீவித்தார்கள். கி.மு.7ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், புண்ணியங்களிலும் உத்தமதனத்திலும் உச்சநிலையை அடைந்தவராக, பாக்கியமாய் மரித்தார்; அர்ச்‌.  அன்னம்மாள், அர்ச்‌.  ஜோக்கிமை, ஜெத்சமேனி தோட்டத்திற்கு அருகிலுள்ள ஜோசப்பாத் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தார்கள். 1889ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், அர்ச் அன்னம்மாளின் கல்லறைகள் கண்டு எடுக்கப்பட்டன.

 நமதாண்டவரின் மகா பரிசுத்த தாத்தாவான அர்ச்‌.  ஜோக்கிமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!