Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Saints of the day in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saints of the day in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2024

August 28, St. Agustine, அர்ச்‌. அகுஸ்தீனார்


 

ஆகஸ்டு 2️8️ம்‌ தேதி

திருச்சபையின்‌ தலைசிறந்த வேதபாரகரும்‌
தந்தையுமான ஹிப்போ நகரின்‌
அர்ச்‌. அகுஸ்தீனார்திருநாள்

 

இவர்‌, 354ம்‌ வருடம்‌,நவம்பர்‌ 13ம்‌ தேதியன்று உரோமையின்‌ ஆப்ரிக்கப்‌ பிராந்தியத்தைச்‌ சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக்‌ ஆஹ்ராஸ்‌)வில்‌ பிறந்தார்‌. அர்ச்‌.மோனிக்கம்மாள்‌, இவருடைய தாயார்‌. ஆனால்‌, இவருடைய தந்தையார்‌, ஒரு அஞ்ஞானியாக இருந்தார்‌; அர்ச்‌.மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபத்தின்‌ பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக மனந்திரும்பி பாக்கியமாய்‌ மரித்தார்‌. கத்தோலிக்க வேத விசுவாசத்தில்‌ வளர்க்கப்பட்டபோதிலும்‌, முதல்‌ சில நூற்றாண்டுகளில்‌, வாலிப வயதை அடைந்ததும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றுக் கொள்ளும்‌ வழக்கம்‌ திருச்சபையில்‌ அனுசரிக்கப்பட்‌டதால்‌, அகுஸ்தீனார்‌, சிறு வயதில்‌,ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளவில்லை.

அர்ச்‌. மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும்‌, உயரிய இலட்சியங்களையும்‌,பிரகாசமுள்ள திறமைகளையும்‌, அதே சமயம்‌, மூர்க்கமான ஆசாபாச உணர்‌வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அநேக வருடங்கள்‌, தீமைகளும்‌, போலியான பதித நம்பிக்கைகளும்‌ நிறைந்த ஜீவியம்‌ ஜீவித்து வந்தார்‌. இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும்‌ அறிவுத்திறனும்‌, ஞானமும்‌ உடையவராயிருந்த மனிதர்களில்‌ ஒருவராகத் திகழ்ந்த  போதிலும்‌, அசுத்த பாவங்களும்‌, ஆங்காரமும்‌, அகுஸ்தினாரின்‌ மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்‌ செய்ததென்றால்‌, சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால்‌ பார்க்கக்‌ கூடாமல்‌, அல்லது புரிந்துகொள்ளக்‌ கூடாமற்போயிற்று!  இருப்பினும்‌, இவர்‌ இலத்தீன்‌ மொழியில்‌, எவ்வளவு உயரிய  தேர்ச்சியை அடைந்தாரென்றால்‌, வாய்ச்சாலகமாக அம்மொழியைப்‌ பேசுவதிலும்‌, தனது கருத்தைத்‌ தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்‌தனமாக வாதிடுவதிலும்‌ நிபுணத்துவம்‌ பெற்றிருந்தார்‌.

தத்துவ இயலில்‌ தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்‌; இலக்கியத்தையும்‌, இலக்கணத்தையும்‌ , தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும்‌, கார்த்தேஜிலும்‌ 9 வருட காலமாகக்‌ கற்றுக்கொடுத்து வந்தார்‌. இவருடைய வயதின்‌ கடைசி இருபதுகளில்‌, ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்‌, வேலை தேட ஆரம்பித்தார்‌. இதே சமயம்‌, இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச்‌. மோனிக்கம்மாள்‌, இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல்‌ ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்‌; இவரைப்‌ பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும்‌ சென்றார்கள்‌. உரோமாபுரியில்‌ அகுஸ்தினார்‌ வளமையடைந்தார்‌; அணியிலக்கணத்தின்‌ துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்‌. மிலான்‌ நகர மேற்றிராணியாரான அர்ச்‌. அம்புரோசியாரை, அகுஸ்தீனார்‌ சந்தித்தார்‌; இவர்‌ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்‌, திருச்சபையின்‌ ஞானமுள்ள பதில்களை, அர்ச்‌. அம்புரோசியார்‌ அளித்தார்‌. அப்போது தான்‌,கிறீஸ்துவ வேதம்‌,தத்துவ இயல்‌ வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம்‌, என்பதை அகுஸ்தீனார்‌ கண்டறிந்தார்‌.

ஆனால்‌, இவர்‌ தனது துர்ப்‌ பழக்கங்களின்‌ சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்‌; அதற்‌கான தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார்‌. உடனடியாக, அகுஸ்தீனாரால்‌ கிறீஸ்துவராக மாறக்‌ கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால்‌ ஒருபோதும்‌ ஜீவிக்க முடியாது, என்று , இவர்‌, நினைத்திருந்தார்‌. இருப்பினும்‌ ஒருநாள்‌, அர்ச்‌. வனத்து அந்தோணியாரின்‌ ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால்‌, இரு மனிதர்கள்‌ கத்தோலிக்கர்களாக மாறினர்‌, என்பதைக்‌ கேள்விப்‌பட்டதும்‌, இவர்‌ தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்‌; இவர்‌ தன்‌ நண்பரான அலிபியுஸ்‌ என்பவரிடம்‌, “நாம்‌ என்ன செய்து கொண்டிருக்கிறோம்‌? கல்வியறிவில்லாக மனிதர்கள்‌, வலுவந்தமாக பரலோகத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்கின்றனர்‌! அதே சமயம்‌, எல்லாவிதமான அறிவையும்‌ கொண்டிருக்கிற நாம்‌, நம்‌ பாவங்கள்‌ என்கிற சேற்றிலே உருண்டுகொண்டிருக்கும்‌ அளவிற்கு மாபெரும்‌ கோழைகளாக இருக்கிறோம்‌!” என்று கூறினார்‌.

அகுஸ்தீனார்‌, பின்னர்‌, பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச்‌. சின்னப்பரின்‌ நிரூபங்களை ஒரு புதிய ஒளியில்‌ வாசித்தார்‌; ஒரு நீண்‌டதும்‌ கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்‌ இதைப்‌ பின்தொடர்ந்து வந்தது! ஆனால்‌, தேவ வரப்பிரசாதத்தின்‌ உதவியால்‌, உள்ளரங்க போராட்டத்தை, இவர்‌ வெற்றிகொண்டார்‌. அர்ச்‌. மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபங்களாலும்‌, அர்ச்‌. அம்புரோசியாரின்‌ ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும்‌, கத்தோலிக்க வேதம்‌ மட்டுமே உண்மையான வேதம்‌ என்பதைத் தெளிந்தமனதுடன்‌, 386ம்‌ வருடம்‌, அகுஸ்தீனார்‌, கண்டறிந்தார்‌; 387ம்‌ வருடம்‌ ஈஸ்டர்‌ திருநாளன்று, அர்ச்‌. அம்புரோசியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம்‌ அளித்தார்‌.  இவர்‌ ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்தார்‌; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்‌; அங்கே,395ம்‌ வருடம்‌, மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌. அடுத்த 35 வருட காலத்தில்‌, இவர்‌ அயராமல்‌ திருச்சபைக்காக உழைத்தார்‌;

 வடஆப்ரிக்கா, திருச்சபையின்‌ மையமாக உருமாறியது! இவருடைய ஞான ஜீவியம்‌ உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்‌சமயத்தில், இவர், ‌ திருச்சபையில்‌ நிலவிய சகல பதிதத்‌ தப்பறைகளையும்‌, எதிர்ப்பதிலும்‌, தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்‌, பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும்‌, முன்னோடியான ஞானமும்‌ வலிமையுமிக்க வேகபாரகராகத்‌ திகழ்ந்தார்‌; அநேகக்‌ காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும்‌, நூல்களும்‌, உலகெங்கிலும்‌ ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும்‌, வேத இயல்‌ ஊகங்களுடையவும்‌ முக்கிய ஆதாரமாகப்‌ பயன்படுத்துப்படுகின்றன!

அர்ச்‌.அகுஸ்தீனார்‌ காய்ச்சலினால்‌, 430ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 28ம்‌ தேதியன்று, 76வது வயதில்‌, மரித்தார்‌. இந்நேரத்தில்‌, ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. 8ம்‌ நூற்றாண்டில்‌, ஹிப்போ நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை, லொம்பார்டு நாட்டின்‌ அரசரான லுட்பிராண்டு என்பவர்‌, இத்தாலியாவிலுள்ள பாவியாவில்‌ ஸ்தாபித்தார்‌; அதற்காக பெருந்தொகையை, அவர்‌ மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!                                 

அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ பிரபல்யமான காட்சி

St. Agustine and the Child (Angel)


ஒரு சமயம்‌, அர்ச்‌.அகுஸ்தினார்‌, கடற்கரையோரத்தில்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய பரம இரகசியத்தைப்‌ பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்‌ ஒருசிறு குழந்தை ‌ விளையாடிக்கொண்டிருப்பதைக்‌ கவனித்தார்‌: அது தன்‌ கையிலிருந்த ஒரு சிறு ஓட்டிற்குள்‌ கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள்‌ ஊற்றிக்கொண்டிருந்தது; இதைத்‌ தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “நீ என்ன செய்கிறாய்‌?” என்று கேட்டார்‌; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்‌ இந்த குழிக்குள்‌ விட்டு, கடலைக்‌ கட்டாந்தரையாக்கப்‌ போகிறேன்‌!” என்று கூறியது. உடனே, அக்குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “குழந்தையே! உன்‌ ஜீவியகாலமெல்லாம்‌ இந்த வேலையில்‌ நீ ஈடுபட்டாலும்‌, உன்னால்‌, இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்‌; அதற்கு, அந்த குழந்தை, “இருப்பினும்‌, நீங்கள்‌ உங்களுடைய மனதில்‌ தியானிக்கிற அந்த மகா பரம இரகசியத்தைப்‌ பற்றி நீங்கள்‌ புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான்‌ இதை செய்து முடிப்பேன்‌!” என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ பரம இரகசியத்தைப்‌ பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான்‌ எடுத்து வந்த பயனற்ற முயற்சிகள்‌ பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்‌ உருவில்‌ தன்னிடம்‌, சர்வேசுரன்‌ தாமே அனுப்பியிருக்கிறார்‌, என்பதைக்‌ கண்டுணர்ந்தார்‌.

மாபெரும்‌ திருச்சபையின்‌ வேதபாரகரும்‌ தந்தையுமான அர்ச்‌.அகுஸ்‌ தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

Download St. Augustine Books for Free
 Click Here to download

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

August 27 - St. Joseph Calasanctius

 

ஆகஸ்டு 2️7️ம்‌ தேதி 

ஸ்துதியரும்‌ பியாரிஸ்ட்‌ துறவற சபை ஸ்தாபகருமான

அர்ச்‌.  கலசாங்சியுஸ்சூசையப்பர்திருநாள்‌.

 


இவர்‌ ஸ்பெயினிலுள்ள ஆரகன்‌ என்ற நாட்டில்‌, 1556ம்‌ வருடம்‌,ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தார்‌. உத்தமமான கத்தோலிக்கக்‌ கல்வியை இவருடைய பெற்றோர்கள்‌ இவருக்கு அளித்தனர்‌; இவர்‌ 5வது வயதில்‌, மற்ற சிறுவர்களைக்‌ கூட்டிக்கொண்டு, தெருக்கள்‌ வழியாக பசாசைக்‌ கண்டுபிடித்து அதை வெட்டிக் கொல்வதற்காக, பவனியாகச்‌ சென்று எல்லா இடங்களிலும்‌ பசாசைக்‌ தேடிப்பார்த்தார்‌. இவர்‌ 27வது வயதில்‌ குருப்பட்டம்‌ பெற்றார்‌;பங்கு குருவாகி, பங்கின்‌ ஞான அலுவல்களில்‌ ஈடுபட்டிருந்தார்‌. 1592ம்‌ வருடம்‌, “ஜோசப்‌! ரோமாபுரிக்குச்‌ செல்‌!” என்கிற ஒரு குரலொலி , ஒரு பரலோகக்‌ காட்சியின்போது இவருக்குக்‌ கேட்டது. அக்காட்சியில்‌, இவரால்‌ கற்பிக்கப்‌ பட்ட அநேக சிறுவர்களைக்‌ கண்டார்‌; அவர்களுடன்‌ சம்மனசுகளின்‌ கூட்டத்தையும்‌ கண்டார்‌.

இவர்‌, பரிசுத்த நகரமான உரோமாபுரியை அடைந்ததும்‌, அந்நகரிலிருந்த ஏழை சிறுவர்களின்‌ தீயொழுக்கமும்‌, அறியாமையும்‌ இவருடைய கனிவான இருதயத்தைப்‌ பெரிதும்‌ பாதித்தது! அறியாமையானது, இவர்களுடைய தீயொழுக்கத்தினுடையவும்‌, துன்ப துயரத்தினுடையவும்‌ காரணமாயிருக்கிறது என்பதை, இவர்‌ தெளிவாகக்‌ கண்டார்‌. இச்சூழ்நிலைக்கு, ஞாயிற்றுக்கிழமை ஞான உபதேச வகுப்புகள்‌ ஒரு போதுமான மாற்றுமருந்தாக, ஒரு தீர்வாக, இருக்காது! என்பதையும்‌ உணர்ந்தார்‌. அக்காலக்கட்டத்தில்‌ நடைமுறையிலிருந்த கட்டமைப்பின்படி, எந்த அமைப்பினுடைய ஒத்துழைப்பும்‌ கிடைக்காத சூழலில்‌, ஐரோப்பாவில்‌, முதல்‌ இலவச பள்ளிக்கூட நிறுவனத்தை ஸ்தாபித்தார்‌. இவருடன்‌ இன்னும்‌ இரண்டு குருக்கள்‌ சேர்ந்தனர்‌. பள்ளிக்கூடத்தில்‌ விரைவில்‌, 1200 பிள்ளைகள்‌ சேர்ந்தனர்‌; இதற்கு பொதுமக்களின்‌ பேராதரவுகிடைத்‌தது!

பின்னர்‌, பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ குருக்கள்‌ துறவற சபையை ஸ்தாபித்தார்‌; இப்போது இது, பியாரிஸ்ட்ஸ்‌ துறவற சபை என்று அழைக்கப்படுகிறது. கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல்‌ என்கிற மூன்று வார்த்தைப்பாடுகளுடன்‌ கூட, ஏழைகளுக்கு ஞான உபதேசக்‌ கல்வியை அளிப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்கிற வார்த்‌ தைப்பாட்டையும்‌ இத்துறவியர்‌ எடுத்தனர்‌. 8ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌ இத்துறவற சபைக்கு, அதிகாரபூர்வமாக அங்கீகாரம்‌ அளித்தார்‌. இத்துறவற சபை மிகத்துரிதமாக பரவி வளர்ந்தது; ஆனால்‌ அதே சமயம்‌, இவருக்கு எதிரிகள்‌ தோன்றினர்‌; அதுவும்‌ இவருடைய துறவற சபையில்,‌ இவருக்குக்‌ கீழ்‌ இருந்தவர்களே, இவருக்கு எதிராக பாப்பரசரின்‌ பரிசுத்த பீடத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ முறையீடு செய்தனர்‌: இவருடைய 86வது வயதில்‌, கைது செய்யப்பட்டு, உரோமைத்‌ தெருக்கள்‌ வழியாக சிறைக்கு நடத்திச்‌ செல்லப்பட்டார்‌. இந்த சிலுவையை ஆண்டவர்‌ மீது கொண்டிருந்த சிநேகத்திற்காக, இவர்‌ அமைதியுடனும்‌ பொறுமையுடனும்‌ ஏற்று அனுபவித்தார்‌. இதன்‌ காரணமாக, இவருடைய துறவற சபை,ஒரு மேற்றிராசனத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்படும்‌ ஒரு சிறிய துறவற சபையாகக்‌ குறைக்கப்பட்டது.

அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌ மரித்தபிறகே, இத்துறவற சபை முந்தின சலுகைகளைப்‌ பெற்று, திருச்சபையெங்கிலும்‌ ஸ்தாபிப்பதற்கான அனுமதியைப்‌ பெற்றது! இருப்பினும்‌, இவர்‌, “என்னுடைய இந்த அலுவல்‌, சர்வேசுரனுடைய சிநேகத்திற்காக மட்டுமே, துவக்கப்பட்டது!” என்று கூறியபடி, முழு நம்பிக்கையுடன்‌ பாக்கியமாய்‌, மரித்தார்‌. இவர்‌ தான்‌,பொதுமக்களின்‌ பிள்ளைகளுக்கு இலவசமான கல்வியை முதன்‌ முதலில்‌ அளித்தவர்‌. அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌, 1647ம்‌ வருடம்‌ 92வது வயதில்‌ மரித்தார்‌. இவர்‌ இறந்து 8 வருடங்களுக்குப்‌ பிறகு, 7ம்‌ அலெக்சாண்டர்‌ பாப்பரசர்,‌ பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ மேல்‌ சுமத்தப்பட்டிருந்க அவப்‌பெயரை நீக்கி, அப்பள்ளிக்கூடங்கள்‌ மறுபடியும்‌ திறக்கப்பட அனுமதித்தார்‌.

1748ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 7ம்‌ தேதியன்று, 14ம்‌ ஆசீர்வாதப்‌பரால்‌ இவருக்கு முத்திப்‌ பேறு பட்டமும்‌, 1767ம்‌ வருடம்‌, ஜூலை 16ம்‌ தேதியன்று, 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசரால்‌ அர்ச்சிஷ்டப்பட்‌டமும்‌ அளிக்கப்பட்டது. உரோமாபுரியிலுள்ள பியாரிஸ்ட்‌ துறவற சபை மடத்தின்‌ சிற்றாலயத்தில்‌, புதுமையாக அழியாமலிருக்கும்‌ இவருடைய பரிசுத்த இருதயமும்‌, பரிசுத்த நாவும்‌ அருளிக்‌கங்களாக பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1948ம்‌  வருடம்‌, ஆகஸ்டு 13ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்‌பரசர்‌, இவரை அகில உலகக்‌ கிறீஸ்துவப்‌ பொதுப்‌ பள்ளிக்‌ கூடங்களுக்குப்‌ பாதுகாவலர்‌ என்று பிரகடனம்‌ செய்தார்‌.

“சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்வதில்‌ நீ, உன்‌ சொந்த வசதியைத்‌ தேடுவாயாகில்‌, நீ சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்யாமல்‌, உனக்குத்‌ தானே ஊழியம்‌ செய்கிறாய்‌!” 📚 🏻+ அர்ச்‌. கலசாங்கியுஸ்‌ சூசையப்பர்‌

 ஸ்துதியரான அர்ச்‌.  கலசாங்சியுஸ்‌ சூசையப்பரே! எங்களுக்காக வேண்‌ டிக்கொள்ளும்‌!

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 12 - St. Clarie, அர்ச்‌. கிளாரம்மாள்

 

ஆகஸ்டு 1️2️ம்தேதி

அர்ச்‌. கிளாரம்மாள்திருநாள்‌.



இவள்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியாருடன்சேர்ந்து, அவருடைய 2ம்துறவற சபையான ஏழை கிளாரம்மாள்துறவற சபையை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ 1194ம்வருடம்‌, ஜுலை 16ம்தேதி, இத்தாலியிலுள்ள ௮சிசி நகரில்பிறந்தாள்‌. கிளாரா என்கிற வார்த்தைக்கு, “ஒளிருகின்ற , அல்லதுதெளிந்தஎன்று அர்த்தமாகும்‌. இவளுடைய தந்தை, பண்டைக்கால உரோமை உயர்குடும்பத்தைச்சேர்ந்த செல்வந்தர்‌; அசிசியில்இவருக்கு சொந்தமாக ஒரு கோட்டை இருந்தது. 1212ம்வருடம்‌, மார்ச்‌ 19ம்தேதி, குருத்து ஞாயிறன்று, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, தபசுக்காலத்திற்காக நிகழ்த்திய ஒரு ஞான தியானப்பிரசங்கத்தைக்கேட்டபோது, அந்த உன்னதமான தியானப்பிரசங்கத்தினால்‌, அர்ச்‌. கிளாரம்மாள்‌, பெரிதும்மேற்கொள்ளப்பட்டாள்‌.அச்சமயம்‌, இவளுக்கு 18 வயது.

                இரகசியமாக வீட்டை விட்டு, தன்அத்தை பியான்காவுடனும்‌, ஒரு சகத்தோழியுடனும்‌, போர்சியன்குலா தேவாலயத்திற்கு, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியாரைச்சந்திப்பதற்காகச்சென்றாள்‌. அங்கு, அந்த தேவாலயத்தில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்பீடத்தண்டையில்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, இவளுடைய தலைமுடியை, கத்தரித்து நீக்கினார்‌;அர்ச்‌. கிளாரம்மாள்‌, தான்அணிந்திருந்த விலையுயர்ந்த செல்வ மகளுக்குரிய ஆடையைக்களைந்து விட்டு, எளிய கன்னியாஸ்திரியின்உடுப்பையும்‌, முக்காட்டையும்‌, ஒரு இடுப்புக்கயிற்றையும்அணிந்துகொண்டாள்‌. இவ்விதமாக, அர்ச்‌. கிளாரம்மாள்‌, ‌ 18வது வயதில்‌, தன்பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து. ஆண்டவருடைய ஞான பத்தினியானாள்‌!  பாஸ்டியா என்ற நகரத்திற்கருகிலிருந்த சான்பவுலோவிலுள்ள அர்ச்‌. ஆசீர்வாதப்பர்கன்னியர்மடத்தில்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, அர்ச்‌. கிளாரம்மாளை விட்டார்‌.அவளுடைய தந்தை, அவளை வீட்டிற்குத்திரும்பி வர வற்புறுத்தினார்‌.

                அச்சமயம்‌, கிளாரம்மாள்‌, தேவாலயத்தின்பீடத்தைக்கெட்டியாகப்பற்றிப்பிடித்துக்கொண்டாள்‌; பின்தன்தந்தைக்கு முன்பாக தனது முக்காட்டை அகற்றி, நீளமானதலைமுடி கூந்தல்எல்லாம்வெட்டப்பட்டு வெறுமையாயிருந்த தன்தலையைக்காண்பித்தாள்‌.  அதன்பின்‌, அர்ச்‌. பிரான்சிஸ்‌, இவளை, பான்சோ என்ற இடத்திலிருந்த சான்ஆஞ்சலோ என்ற இன்னொரு அர்ச்‌. ஆசீர்வாதப்பா்கன்னியர்மடத்திற்கு அனுப்பி வைத்தார்‌. கிளாரம்மாள்‌, இந்த மடத்திலிருந்தபோது, விரைவிலேயே இவளுடைய தங்கை கத்தரீனும்‌, இவளுடன்சேர்ந்து கொண்டு, ஆக்னஸ்என்ற பெயரைத்தேர்ந்து கொண்டாள்‌. இரு சகோதரிகளும்‌, அர்ச்‌. ஆசீர்வாதப்பர்கன்னியர்மடத்திலேயே தங்கியிருந்தனர்‌; பின்னர்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, சில வருடங்களுக்கு முன்செப்பனிட்டிருந்த அர்ச்‌. தமியான்தேவாலயத்தை ஒட்டியபடி, கன்னியர்மடத்திற்கான ஒரு சிறிய கட்டிடத்தைக்கட்டி, அதில்இரு கன்னியரும்குடியேறினர்‌. நாளடைவில்‌, மற்ற பெண்களும்அங்கு வந்து, அவர்களுடன்சேர்ந்து கன்னியர்களாக , அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்ஏற்படுத்தியிருந்த துறவற விதிமுறைகளை அனுசரித்து ஜீவிக்கலாயினர்‌.

                இதுவே, பிரான்சிஸ்அசிசியாரின்‌ 2ம்துறவற சபையாகும்‌. ஏழைகிளாரம்மாள்கன்னியர்சபை என்றும்அழைக்கப்படுகிறது! பின்னாளில்‌, கிளாரம்மாளின்தாயாரும்‌, இன்னொரு சகோதரியும்கூட , கிளாரம்மாளுடன்சேர்ந்து, கன்னியாஸ்திரிகளாயினர்‌!  அர்ச்‌. தமியான்தேவாலய வளாகம்‌, கிளாரம்மாளின்இப்புதிய கன்னியர்சபையின்மையமாக மாறியது! இதன்காரணமாகவே, சான்தாமியானோ ஏழைப்பெண்களின்துறவறசபை என்றே,அர்ச்‌. கிளாரம்மாள்ஜீவிய காலம்‌, முழுவதும்அழைக்கப்பட்டது! இக்கன்னியாஸ்திரிகளின்அனுதின ஜீவியம்‌, உடல்உழைப்பையும்‌, ஜெபத்தையும்கொண்டிருந்தது! இக்கன்னியாஸ்திரிகள்காலணி அணியாமல்வெறுங்காலில்நடந்துசென்றனர்‌; வெறுந்தரையில்படுத்து உறங்கினர்‌; இறைச்சியை உண்ணாமல்‌, சுத்த போசனத்தையே எப்போதும்அனுசரித்தனர்‌; எப்போதும்பரிசுத்த மவுனத்தை அனுசரித்து வந்தனர்‌.  சிறிது காலத்திற்கு, இக்கன்னியார்சபையை, அர்ச்‌. பிரான்சிஸ்  அசிசியாரே நடத்தி வந்தார்‌; 1216ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாள்‌, சான்தாமியானோ கன்னியர்மடத்தின்அதிபர்தாயார்பொறுப்பை ஏற்று கன்னியர்சபையை நடத்தத்துவக்கினாள்‌. அதிபர்தாயாராகக்கூடுதல்பொறுப்பையும்அதிகாரத்தையும்கொண்டிருந்தாள்‌; மடத்தின்தாயாராக இருந்தபோது, சகக்கன்னியரை , குருவானவரின்கட்டளைகளைப்பின்பற்றி நடத்தி வந்தாள்‌; ஆனால்‌, அதிபர்தாயாராக பொறுப்பை ஏற்றபோது, தன்சுய அதிகாரத்தைப்பயன்படுத்தி, சகக்கன்னியரை ஞான ஜீவியத்தில்வழிநடத்தி வந்தாள்‌.

                1228ம்வருடம்‌, 9ம்கிரகோரி பாப்பரசர்‌, கண்டிப்பான தரித்திர வார்த்தைப்பாட்டிலிருந்து கிளாரம்மாளுக்கு விலக்கு அளிக்க ஆசித்த போது,அர்ச்‌.  கிளாரம்மாள்‌,”என்பாவங்களுக்கான மன்னிப்பு எனக்குத்தேவையாயிருக்கிறது; என்பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட ஆசிக்கிறேன்‌; ஆனால்‌, நமதாண்டவரான திவ்யசேசு கிறீஸ்துநாதரைப்பின்பற்றுவதற்கான கடமையிலிருந்து விடுவிக்கப்பட நான்ஆசிக்கவில்லை!” என்று பாப்பரசருக்கு பதில்கூறினாள்‌! அதன்படி, பாப்பரசரும்‌, இவளுடைய கன்னியர்சபைக்கு, அட்ட தரித்திரத்தினுடைய சிறப்பு சலுகையினுடைய உரிமையை அளித்தார்‌. இந்த உரிமையின்பிரகாரம்‌, யாரும்‌, இக்கன்னியாஸ்திரிகளிடம்‌, எவ்வித செல்வததையோ, பணத்தையோ சொந்தமாகக்கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது!

                1253ம்வருடம்‌, ஆகஸ்டு 9ம்தேதியன்று, 4ம்இன்னசன்ட்பாப்பரசர்‌, சோலெட்அன்னுவெரே என்கிற பாப்பரசரின்ஆணைமடலைப்பிரகடனம்செய்தார்‌; இது, அர்ச்‌. கிளாரம்மாள்ஏற்படுத்திய சபை விதிமுறையை, குறிப்பாக அட்ட தரித்திர வார்த்தைப்பாட்டின்விதி முறையை, ஏழை கிளாரம்மாள்கன்னியா சபையின்நிர்வாக விதி முறையாக நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தியது.  இரண்டு நாட்களுக்குப்பின்‌, ஆகஸ்டு 11ம்கேதியன்று, அர்ச்‌.  கிளாரம்மாள்‌, 59வது வயதில்‌, “! திவ்ய கர்த்தரே! என்னை சிருஷ்டித்ததற்காக தேவரிர்ஸ்துதிக்கப்படுவீராக! ஆசீர்வதிக்கப்படுவீராக!” என்று பக்தி பற்றுதலுடன்உச்சரித்தபடி, தேவசிநேக மிகுதியால்‌,பாக்கியமாய்மரித்தாள்‌. அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, இவளுக்கு தோத்திரமாக ஒரு தேவாலயம்கட்டப்படும்வரைக்கும்‌, அர்ச்‌. ஜார்ஜியாரின்தேவாலயத்தில்பூஜிதமாக அடக்கம்செய்யப்பட்டது. 4ம்இன்னசன்ட்பாப்பரசரின்வேண்டுகோளுக்கிணங்க, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிப்பதற்கான ஏற்பாடுகள்‌, உடனடியாக துவங்கின! இவளுடைய பரிந்துரையால்நிகழ்ந்த புதுமைகள்பேரில்நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகள்எல்லாம்வெறும்ஆறு நாட்களிலேயே நிறைவடைந்தன! ஆனால்‌, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்கொடுப்பதற்கான செயல்முறைகள்எல்லாம்‌, முடிவதற்கு இரண்டு ஆண்டு காலம்தேவைப்பட்டது. 

                1255ம்வருடம்ஆகஸ்டு 15ம்தேதியன்று, 4ம்அலெக்சாண்டர்பாப்பரசர்‌, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளித்தார்‌. 1260ம்வருடம்‌, அர்ச்‌.  கிளாரம்மாளின்பசிலிக்கா தேவாலயம்கட்டி முடிக்கப்பட்டது! அக்டோபர்‌ 3ம்தேதியன்று, அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, இப்புதிய பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு, முதன்மையான பெரிய பீடத்திற்கு அடியில்‌, பூஜித மாக அடக்கம்செய்யப்பட்டது. அர்ச்‌.  கிளாரம்மாளின்மாபெரும்புண்ணியங்களை மகிமைப்படுத்தும்படி, 4ம்உர்பன்பாப்பரசர்‌, 1263ம்வருடம்‌, ஏழைப்பெண்களின்துறவற சபை என்கிற பெயரை, ஏழை கிளாரம்மாள்கன்னியர்சபை என்று , அதிகாரபூர்வமாக மாற்றினார்‌. 600 வருடங்களுக்குப்பின்‌, 1872ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, அர்ச்‌. கிளாரம்மாள்பசிலிக்கா தேவாலயத்தில்புதிகாகக்கட்டப்பட்ட கீழ்நிலவரைச்சிற்றாலயத்தின்ஷேத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதை இன்றும்காணலாம்‌. மகா பரிசுத்த தேவநற்கருணைப்பாத்திரத்தைக்கரத்தில்ஏந்தியபடி, அர்ச்‌. கிளாரம்மாள்‌, படங்களில்‌, சித்தரிக்கப்பட்டிருக்கிறதை நாம்காணலாம்‌.

                1224ம்வருடம்அசிசி நகரைத் தாக்க வந்த 2ம்ஃபிரடரிக்அரசனின்படையை நேருக்கு நேராக சந்தித்த அர்ச்‌. கிளாரம்மாள்‌, தேவாலயத்திலிருந்த மகா பரிசுத்த தேவநற்கருணைப்பாத்திரத்தை, எதிரிப்படைகள்முன்பாக, பக்திபற்றுதலுடன்மேலே உயர்த்திப்பிடித்து, அவர்களுக்குக்காண்பித்தாள்‌; திடீரென்று, ஒரு நூதனமான பேரச்சம்‌, ஏதிரிப்படையினரை ஆட்கொண்டது! உடனே, அந்தப்படைவீரர்கள்அசிசி நகர வாசிகளுக்கு ஒரு தீங்கும்செய்யாமல்‌, அந்நகரை விட்டு ஓடிவிட்டனர்‌! 12ம்பத்திநாதர்‌ 1958ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாளை, தொலைக்காட்சியின்பாதுகாவலராக ஏற்படுத்தினார்‌.

                அர்ச்‌. கிளாரம்மாள்மிக வும்நோய்வாய்ப்பட்டிருந்தபோது, திவ்யபலிபூசைக்காண்பதற்காக தேவாலயத்திற்குச்செல்லக்கூடாமலிருந்தபோது, அவளுடைய சிற்றறையிலிருந்த சுவரில்‌, புதுமையாக திவ்யபலிபூசையைக்காணும்பாக்கியம்பெற்றிருந்தாள்‌.  EWTN என்ற ஒரு அமெரிக்க கத்தோலிக்க தொலைக்காட்சி அலை வரிசையை, சங்‌.தாயார்ஆஞ்சலிக்கா என்ற ஒரு ஏழை கிளாரம்மாள்சபையைச்சேர்ந்த கன்னியாஸ்திரி ஸ்தாபித்திருந்தார்‌! என்பது குறிப்பிடத்தக்கது!

அர்ச்‌. கிளாரம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


 

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 4. St. Monica, அர்ச். மோனிக்கம்மாள்

 

மே 0️4️ம் தேதி

அர்ச். மோனிக்கம்மாள் திருநாள்


 

திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், தூய  ஞானத்தினுடைய மாபெரும் ஆசிரியருமான அர்ச். அகுஸ்தீனாரின் தாயாரான அர்ச். மோனிக்கம்மாள், வட ஆப்ரிக்காவிலுள்ள தகாஸ்தே என்ற இடத்தில் கி.பி.331ம் வருடம் பிறந்தார்கள். மோனிக்கம்மாள், அர்ச். அகுஸ்தீனாருக்கு பூலோக ஜீவியத்தை மட்டுமல்லாமல் ஞான ஜீவியத்தையும் அளித்தவர்களாக, அதாவது, பரலோக ஜீவியத்திற்கான மறுபிறப்பையும் அவர் அடையும்படிச் செய்து, அவருக்கு இரட்டிப்பான தாயாராகத் திகழ்கின்றார்கள்!  மோனிக்கம்மாளின் பெற்றோர்கள் நல்ல கிறீஸ்துவர்களாயிருந்ததால், மோனிக்கம்மாளை அடக்கவொடுக் கத்திலும், கிறீஸ்துவ புண்ணியத்திலும் வளர்த்தனர்; சிறு வயதிலிருந்தே பக்திமுயற்சிகளை அனுசரித்து வந்தார்கள்;  இரவில் உறக்கத்தை மேற்கொண்டு, அந்நேரத்தை, ஜெபத்தில் செலவழிப்பது, சர்வேசுரனை அதிகமாக மகிழ்விக்கக் கூடிய புண்ணியம் என்பதை தன் தாயிடமிருந்து  கற்றறிந்த நாள் முதல், மோனிக்கம்மாள், இரவில் எழுந்து ஜெபிக்கத் துவக்கினார்கள்.  ஏழைகள் மேல் அதிக இரக்கமுள்ளவர்களாக, அர்ச். மோனிக்கம்மாள், அநேக நேரங்களில் தனக்குண்டான உணவை முதலாய், ஏழைகளுடைய பசியைப் போக்குவதற்காக அளித்து ஏழைகளைப் பராமரித்து வந்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் எப்போதும் அலங்காரத்தைத்  தவிர்த்தவர்களாக, எளிமையாகவும் அடக்கவொடுக்கமாகவும் ஆடை அணிந்து வந்தார்கள்; கன்னியாஸ்திரியாக சர்வேசுரனுக்கு தன்னை அர்ப்பணிக்க ஆசித்தார்கள்; ஆனால், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, திருமணம் செய்து கொண்டார்கள்; ஒரு உத்தமமமான கிறீஸ்துவ மனைவியாக ஜீவித்தார்கள்; மற்ற திருமணமான பெண்களுக்கெல்லாம், நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்கள்; ஆனால், மோனிக்கம்மாளுடைய கணவன், பத்ரீசியுஸ்,  மூர்க்கக் குணமுடையவராக, ஒழுக்கக்கேட்டிலும், அனேக துர்ப்பழக்கங்களுக்கு  அடிமையாயிருந்ததாலும்,பக்தியுள்ள தன் மனைவியை ஆயிரக்கணக்கான வழிகளில், சித்திரவதைச் செய்து உபத்திரவப்படுத்தி வந்தார்; இருப்பினும், மோனிக்கம்மாள், எப்போதும் தன் கணவனை தயவுடனும் பெருந்தன்மையுடனும், சிநேகத்துடனும்  நடத்தினார்கள்; ஒருபோதும்,கணவனுடைய துர்க்குணங்களுக்காகக் கடிந்துகொண்டதில்லை! அநேக சமயங்களில் தன்னை சபித்துத் திட்டியபோதிலும் கணவனுக்கு எதிராக ஒரு முரண்பாடான வார்த்தையும் கூறாமல், மோனிக்கம்மாள் எப்போதும் தாழ்ச்சியும் சாந்தமும் உடையவர்களாக இருந்தார்கள். கணவனுடைய கோபம் நீங்கியவுடன், கிறீஸ்துவ அமைதியுடன், கணவன் செய்த குற்றத்தைப் பற்றி, மோனிக்கம்மாள், எடுத்துரைத்து வந்தார்கள்; கணவனின் மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல், சர்வேசுரனிடம் இரவு பகலாக ஜெபித்து வந்தார்கள்; கொஞ்சமாக,கொஞ்சமாக மோனிக்கம்மாள் தன் கணவனை மனந்திருப்பி வந்தார்கள்; இறுதியில், பத்ரீசியுஸ் தான் அனுசரித்து வந்த மாணிக்கேயப் பதிதத்தை விட்டு விட்டு, உத்தம கத்தோலிக்கராக மனந்திரும்பி முன்மாதிரிகையான மேம்பட்ட ஜீவியம் ஜீவிக்கலானார்.

                மோனிக்கம்மாளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்; இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்களுக்கு கிறீஸ்துவ ஞான உபதேசக் கல்வியைக் கற்பிப்பதில் மோனிக்கம்மாள் மாபெரும் கவனத்துடன் இருந்தார்கள். மூத்த மகன் அகுஸ்தீன்,  கீழ்ப்படியாத மகனாக இருந்தார்; குறிப்பாக அவருடைய தந்தை இறந்தபிறகு, ஒரு முரட்டுத்தனமான ஜீவியம் ஜீவித்து வந்தார்; சுதந்திரமாக எந்த அறிவுரையையும் கேட்க விருப்பமில்லாமல் பக்தியுள்ள தாயாருடைய அச்சுறுத்தல்களையும் கண்டு கொள்ளாமல், தன் இஷ்டம்போல் ஜீவித்து வந்தார்; அச்சமயம் மாணிக்கேயப் பதிதத்திலும் சேர்ந்திருந்தார்.

                அதேசமயம், அர்ச். மோனிக்கம்மாள், விதவையாகிவிட்ட தனது ஜீவிய அந்தஸ்தின் கடமைகள் மட்டில், அர்ச். சின்னப்பர், தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் நிரூபத்தின் அறிவுரைகளின் விதிமுறைகளை முறையுடன், அனுசரிக்கலானார்கள். தினமும் திவ்யபலி பூசை தவறாமல் பக்தியுடன் கண்டு வந்தார்கள்; ஏழைகளுக்கு தர்மம் செய்து தாராளமாக உதவி வந்தார்கள்; தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடாமலும்,தேவையற்ற இடங்களுக்குச் செல்லாமலும், ஞான வாசகங்கள் வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், உழைப்பதிலும் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தார்கள்;  ஏகாந்த ஜீவியத்தை நேசித்தவர்களாக, தனிமையில் அமைதியான ஜீவியம் ஜீவிப்பதில் இளைப்பாறினார்கள்; மூத்த மகனுடைய துர்ப்பழக்கத்தினுடைய தீய ஜீவியத்தைப் பற்றிய கவலை மட்டுமே, அர்ச். மோனிக்கம்மாளைப் பெரிதும் பாதித்தது! தனது மகன் அகுஸ்தீனுடைய மனந்திரும்புதலுக்காக மோனிக்கம்மாள், திரளான கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, இரவு பகலாக சர்வேசுரனிடம் தொடர்ந்து மன்றாடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; இதே கருத்திற்காக மற்றவர்களிடமும், குருக்களிடமும் துறவியரிடமும், வேண்டிக் கொள்ளும்படி விண்ணப்பித்து வந்தார்கள்; ஒருநாள் ஒரு மேற்றிராணியாரிடம், தன் மகனுக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்ட போது, அந்த மேற்றிராணியார், மோனிக்கம்மாளிடம், “சமாதானமாகப் போங்கள்! ஒரு மகனுக்காக ஒரு தாய் சிந்தும் இவ்வளவு அதிகமான கண்ணீர்கள் ஒருபோதும் வீண்போகாதுஎன்று கூறி அனுப்பி வைத்தார். மேற்றிராணியாரின் இவ்வார்த்தைகள், மோனிக்கம்மா ளுக்கு ஆறுதல் அளித்தன;  ஆனால், அச்சமயம், அர்ச். மோனிக்கம்மாள் கண்ட ஒரு பரலோகக் காட்சியில், சர்வேசுரன் தாமே பிரத்தியட்சமாக, அகுஸ்தீனாருடைய மனந்திரும்புதலைப் பற்றி அறிவித்ததைக் கண்டபிறகு, மோனிக்கம்மாள் மாபெரும் ஆறுதலடைந்தார்கள்.

                அதேசமயம், அகுஸ்தீனார், சொல் இலக்கணத்திற்கான உயர்கல்வியை கற்றபிறகு, கார்த்தேஜ் நகரை விட்டு, உரோமைக்குச் செல்ல தீர்மானித்தார்.மோனிக்கம்மாள் பெருமுயற்சி செய்து, தன் மகனை உரோமைக்குச் செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். மோனிக்கம்மாள் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, இரகசியமாக அகுஸ்தீன், உரோமைக்கான பயணத்தைத் துவக்கினார்; உரோமையை அடைந்தவுடன் அகுஸ்தீனுக்கு, உயிருக்கு ஆபத்தான பெரிய வியாதி வந்தது. இதைப்பற்றிக்கூறும்போது, “என் தாயாருடைய பக்திமிகுந்த ஜெபங்களால்  தான், என் நித்தியக் கேட்டை அடையும் படியாக, நான் அப்போது  பாவத்திலேயே இறந்து போகவில்லை!” என்று பிற்காலத்தில் அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.

                மகனுடைய வியாதியைப் பற்றி அறிந்ததும், மோனிக்கம்மாள், உடனே மகனைக் கண்காணித்து, இரட்சணியப்பாதையில் சேர்த்து விடுவதற்காக உரோமைக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்; உரோமையை அடைந்ததும், மோனிக்கம்மாள், தன் மகன் உரோமைக்கு சொல் இலக்கணத்தைக் கற்பிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்கள்; அச்சமயம், தன் மகன் மிலான் நகர மேற்றிராணியாரான அர்ச். அம்புரோசியாருடன் நிகழ்த்திய உரையாடல்களினால் பெரு மாற்றத்தை அடைந்திருப்பதைக் கண்டு மோனிக்கம்மாள் மிகவும் அகமகிழ்ச்சியடைந்தார்கள்; அர்ச். மோனிக்கம்மாள், அர்ச். அம்புரோசியாரிடம், தன் மகனுடைய  முழு மனந்திரும்புதல் வரை, தளர்வில்லாத கண்டிப்புடன் ஞான உபதேசத்தைக் கற்பிக்கும் படி விண்ணப்பித்தார்கள்.

                இறுதியாக, சர்வேசுரன் தமது இரக்கத்தினால், இப்பரிசுத்த விதவையான அர்ச். மோனிக்கம்மாளின் ஆவலை நிறைவேற்றத் திருவுளம்கொண்டார். அகுஸ்தீனார், மாணிக்கேயப் பதிதத்தைப்புறக்கணித்து கைவிட்டார்;  மேலும், கத்தோலிக்கராக தனது 30வது வயதில், அர்ச். அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார்;

அர்ச். மோனிக்கம்மாளின் இடைவிடாத ஜெபங்களுடையவும் கண்ணீர்களுடையவும் பலனாகத்தான், இவ்வுன்னதமான மனந்திரும்புதல் நிகழ்ந்தது; இதன்பின், அர்ச். மோனிக்கம்மாள், தன் மகனுடன் ஆப்ரிக்காவிற்குத் திரும்ப ஆசித்தார்கள்; ஆனால், ஓஸ்டியாவை அடைந்ததும், அர்ச். மோனிக்கம்மாளுக்கு இலேசான காய்ச்சல் வந்தது; அப்போது தன் தாயார் பரலோக மகிமைகள் பற்றி உரையாடிய உரையாடலின் இறுதிப்பகுதியைப் பற்றி, அர்ச். அகுஸ்தீனார் பின்வருமாறு விவரிக்கின்றார்: “என் மகனே! என்னைப் பொருத்தவரை, இந்த உலகத்திலிருந்து, இன்னும் வேறு ஒன்றையும், நான் எதிர்பார்க்கவில்லை!  நான் இறப்பதற்கு முன் உன்னை ஒரு கத்தோலிக்கனாக பார்க்க வேண்டும் என்கிற ஒரே ஒரு ஆவல் எனக்கு இருந்தது! நான் கேட்டதற்கு மேலாக சர்வேசுரன் இக்காரியத்தில் எனக்கு அருளியிருக்கிறார்! ஏனெனில், நீ சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்லாமல், நீ பூலோக சந்தோஷத்தையெல்லாம் அருவருத்துப் புறக்கணித்தும் விட்டிருக்கிறாய்! ஆதலால், இனி நான் செய்யக்கூடிய  வேறு  என்ன காரியம் இவ்வுலகில் இருக்கிறது?”

                அர்ச். மோனிக்கம்மாளுடைய  வியாதி அதிகரித்தது்  ஒன்பது நாட்களுக்குப் பிறகு,மோட்சத்தை தன் வாழ்நாளெல்லாம் மிகவும் ஆசித்த அர்ச். மோனிக்கம்மாள், அநேக புண்ணியங்களால் அலங்கரித்திருந்த தனது ஆத்துமத்தை தனது சிருஷ்டிகரிடம் ஒப்படைக்கும்படியாக, தனது 56வது வயதில் 387ம் வருடம் ஆகஸ்டு 27ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் இறப்பதற்கு முன்பாக, தன் இரு மகன்களிடமும், கூறியதைப் பற்றி அர்ச். அகுஸ்தீனார், பின்வருமாறு விவரிக்கின்றார்: “நீங்கள் எங்கே அடக்கம் செய்ய விரும்புகிறீர்களோ, அங்கே என் சரீரத்தைக் கிடத்துங்கள்!  நான் இறந்ததைப் பற்றிய எந்த நினைவும் உங்களைக் கஷ்டப்படுத்துவதற்கு அனுமதியாதேயுங்கள்! நான் உங்களிடம் ஒரே ஒரு  காரியத்தைத்தான் கேட்கிறேன்: நீங்கள் எங்கிருந்தபோதிலும், எல்லாம் வல்லவரும் சர்வாதி கர்த்தருமானவரின் பரிசுத்த பலிபீடத்தின் முன்பாக என்னை நினைவு கூருங்கள்!”  கல்லறையின் அருகில் தனது பரிசுத்த தாயாரின் சரீரத்தைக் கிடத்தியபடி, மரித்தோருக்கான திவ்யபலி பூசை நிறைவேற்றப்பட்டது, என்பதை அர்ச். அகுஸ்தினார் எழுதி வைத்தார்.

அர்ச். மோனிக்கம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


for Daily Saints History - Click here