Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

saints lives history in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
saints lives history in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 29 - அர்ச். நசியான்சென் கிரகோரியார் (St. Gregory of Nyssa)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣9️⃣ம் தேதி


🌹வேத பாரகரும், ஸ்துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். நசியான்சென் கிரகோரியார் திருநாள்🌹


🌹இவர் கி.பி.325ம் வருடம் கப்பதோசியாவில்,   அர்ச்சிஷ்டவர்களின் குடும்பத்தில் பிறந்தார்; அர்ச். நோன்னா இவருடைய தாயார்! அர்ச்.செசாரியுஸ், இவருடைய சகோதரர்! அர்ச்.கொர்கோனியா, இவருடைய சகோதரி!  சிறு வயதில் கிரகோரியாரும்,அவருடைய சகோதரர் செசாரியுசும் அவர்களுடைய மாமா ஆம்ஃபிலோகியோஸிடம் கல்வி பயின்றனர். பின்னர், சொல் இலக்கணத்தையும், தத்துவ இயலையும் கற்றுக் கொள்வதற்காக நசியான்சுஸிற்கும், செசரையாவிற்கும், அலெக்சாண்டிரியாவிற்கும், ஏத்தன்ஸிற்கும் கிரகோரியார் சென்றார். 

ஏத்தென்ஸ் செல்லும் வழியில். கப்பல் ஒரு மூர்க்கமான புயலில் அகப்பட்டது. உடனே, கிரகோரியார், ஆண்டவரிடம் இப்புயலிலிருந்து காப்பாற்றப்பட்டால், தனது ஜீவியத்தை சர்வேசுரனுடைய ஊழியத்திற்காக அர்ப்பணிப்பதாக வாக்களித்து, வேண்டிக் கொண்டார். 

ஏத்தென்ஸில், இவர் தனது சக மாணவரான அர்ச்.பேசிலுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார். அர்ச்.பேசில் செசரையாவைச் சேர்ந்தவர். இன்னொரு சக மாணவனாக ஜுலியன் இருந்தான்; இவன் பின்னாளில் உரோமைச் சக்கரவர்த்தியாகி, வேதவிரோதியானான்; கிறீஸ்துவர்களை உபாதித்துக் கொன்று போட்டான்.

361ம் வருடம்,  கிரகோரி நசியான்சுஸிற்கு திரும்பி வந்தார். விரைவிலேயே குருப்பட்டம் பெற்றார்;இச்சமயம், இவருடைய சக மாணவரான அர்ச்.பேசில், இவருடைய மேற்றிராணியாரானார். அர்ச்.பேசில் , அவருடைய விருப்பத்திற்கு எதிராக மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார்.

அதே சமயம்,ஜுலியன் உரோமைச் சக்கரவர்த்தியாக உயர்த்தப் பட்டிருந்தான்; பகிரங்கமாக கிறீஸ்துவ வேதத்திற்கு எதிரானவன் என்று அவன் தன்னையே பிரகடனம் செய்தான். கிறீஸ்துவ வேதவிசுவாசத்தை மறுதலித்த ஜுலியனுக்கு எதிராக  சிநேகத்தினாலும், பொறுமையாலும் சத்திய வேதமான கிறீஸ்துவ வேதமே, ஜுலியன் போன்ற ஒழுங்கற்ற ஆட்சியாளர்களை மேற்கொண்டு வெற்றிபெரும், என்று அர்ச்.கிரகோரியார், ஒரு கட்டுரையைத் தொகுத்து வெளியிட்டார்; 

அர்ச்.கிரகோரியார் விளக்கிய இவ்வேத இயலின் செயல் முறையானது, சர்வேசுரனுடன் பரம இரகசியவிதமாக ஒன்றிணைந்து ஐக்கியமாகிற ஞான ஜீவியத்தின் உயரிய நிலைமைக்கு இட்டுச் செல்கிற, (Theosis) தெய்வீகமாக்கும் நடைமுறை செயல்முறையினுடைய பகிரங்க வெளிப்பாடாகும்.

வேதவிரோதியான  ஜுலியன் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் வல்லமையுடனும் அர்ச்.கிரகோரியாரையும், மற்ற கிறீஸ்துவ தலைவர்களையும்  உபத்திரவப்படுத்தத் தீர்மானித்தான்; இருப்பினும், அடுத்த வருடமே, பெர்ஷியர்களுக்கு எதிரான போரில் ஜுலியன் மாண்டு அழிந்துபோனான்.

திருச்சபை, கொடுங்கோலன் ஜுலியனின் சாவிற்குப் பிறகு வளம் பெற்றது; அடுத்து வந்த சக்கரவர்த்தி ஜோவியன் நல்ல கிறீஸ்துவராகவும் கிறீஸ்துவர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அடுத்த சில வருடங்கள், கிரகோரியார்,கப்பதோசிய பிராந்தியத்தை பிளவுபடுத்துவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆரிய பதிதத் தப்பறைக்கு எதிராகப் போராடுவதில்  ஈடுபட்டார். இந்த பதற்றமான சூழலில்,  இவர் தனது நண்பரான அர்ச்.மகா பேசிலுடன் சேர்ந்து கொண்டு, ஆரிய பதிததர்களை செசரையா தேவாலயத்தில் நிகழ்ந்த  வேத இயலிலும் சொல் இலக்கணத்திலும் வாதிட்டு  வென்றார். பகிரங்கமாக நடத்தப்பட்ட இவ்விவாதத்தை சக்கரவர்த்தி வாலென்ஸின் பிரதிநிதிகள் தலைமைதாங்கியிருந்தபோது, அர்ச்.பேசிலும், அர்ச்.கிரகோரியாரும் பதிதர்களை விவாதத்தில் வாதிட்டுத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். இதன் பின், இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுடைய எதிர்காலமும், திருச்சபையை நிர்வகிப்பதற்கான அலுவலில் அர்ப்பணிக்கப்பட வேண்டியதாயிருந்தது! இவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி திருச்சபையின் சீரான நிர்வாக அலுவல்கள் காத்திருந்தன!

380ம் வருடம் புதிய சக்கரவர்த்தியாக, தியோடோசியுஸ் வந்தபோது, கான்ஸ்டான்டிநோபிளின் ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணியாரான டெமோஃபிலியுஸ் பதவி நீக்கம் பெற்றார்; அப்பதவியில் அர்ச்.கிரகோரியார்  மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார்;  கான்ஸ்டான்டி நோபிள் மேற்றிராசனத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார்; பின்னர்,இளைப்பாறும்படியாக, நசியான்ஸிற்குச் சென்று ஏகாந்தத்தில் ஜெப தப பரிகார ஜீவியம் ஜீவித்தார்; இவர் தனது 64ம் வயதில் 389ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்.🌹✝

“எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்: இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்; நாவில் எப்போதும் உண்மை; சரீரத்தில் அடக்கவொடுக்கம் ஆகிய மூன்றும்  ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்” அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.


🌹அர்ச். நசியான்சென் கிரகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

சனி, 4 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 26 - அர்ச். ஃபுளோரியன் (St. Florian, May 4)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣4️⃣ம் தேதி 

🌹வேதசாட்சியான அர்ச். ஃபுளோரியன் திருநாள்🌹

(இவர் தீயணைப்புப் படை வீரர்களின் பாதுகாவலர்)



🌹ஃபுளோரியன் கிபி 250ம் வருடம் ஆஸ்திரியாவிலுள்ள செஸியும் என்ற இடத்தில், 250ம் வருடம் பிறந்தார். இவர் உரோமை இராணுவத்தில் சேர்ந்து, அயரா உழைப்பினால் உயர்ந்த பதவியை அடைந்தார். ஆஸ்திரியாவிலுள்ள நோரிகும் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த உரோமை இராணுவப் படையின் நிர்வாகியாக ஏற்படுத்தப்பட்டிருந்தார்.

அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன், கிறீஸ்துவர்களைத் தண்டித்து உபாதிக்க வேண்டும் என்கிற தனது கட்டளையை ஃபுளோரியன் நிறைவேற்றகிறதில்லை என்பதை அறிந்து, அதிர்ச்சியடைந்தான். எனவே, ஃபுளோரியனுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சகல கிறீஸ்துவர்களையும் கொல்லவும், தனது கட்டளையை ஏன் ஃபுளோரியன் பின்பற்றுகிறதில்லை என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், அகுவிலியுஸ் என்கிற இன்னொரு அதிகாரியை, சக்கரவர்த்தி அனுப்பி வைத்தான். அகுவிலியுஸ், ஃபுளோரியனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ஃபுளோரியன், அகுவிலியுஸிடம், “நானும் ஒரு கிறீஸ்துவன்! கிறீஸ்துவர்களுடைய கதியை நானும் அடைந்துகொள்வேன்! என்று சக்கரவர்த்தியிடம் போய் கூறு!” என்று கூறினார். அகுவிலியுஸ், ஃபுளோாரியனிடம், “நீ கிறீஸ்துவ வேதத்தை கைவிட்டால், உனக்கு ஒரு உயர் பதவி கிடைக்கும்!” என்று கூறினான். அதை அர்ச்.புளோரியன் மறுத்து விட்டார். உடனே கோபவெறியுடன், ஃபுளோரியனை சாட்டையால் அடிக்க உத்தரவிட்டான். அப்போதும் திடமாக தனது வேத விசுவாசத்தில் நிலைத்திருந்த அர்ச்.ஃபுளோரியன், அகுவிலியுஸிடம்,  “சக்கரவர்ததிக்காக போர்களில்  அநேக காயங்களை என் சரீரத்தில் அனுபவத்திருக்கிற நான், என் சத்திய வேதமான கத்தோலிக்க விசுவாசத்திற்காக சில சிராய்ப்புகளை என் சரீரத்தில் தாங்க மாட்டேனா?” என்று கூறினார். அப்போது, அகுவிலியுஸ், அர்ச்.ஃபுளோரியனை நெருப்பினால் எரித்துக் கொல்லக் கட்டளையிட்டான்.

ஆஸ்திரியாவில் லோர்க் என்ற இடத்தில், அர்ச்.ஃபுளோரியனை, நெருப்பினால் சுட்டெரிக்கும்படியாக, உரோமைப் படை வீரர்கள் ஆயத்தம் செய்தபோது, அர்ச்.ஃபுளோரியன் அந்த வீரர்களை நோக்கி, “நீங்கள் இந்த நெருப்பைப் பற்ற வைத்தால், நான் நெருப்பின் சுவாலைகள் மேல் ஏறி மோட்சம் செல்வேன்!” என்று கூறினார்.இதைக் கேட்டு பயந்த அகுவிலியுஸ், அவரை நெருப்பில் எரிப்பதற்கு பதிலாக, கசை வார்களாலும், சாட்டையாலும் அடிப்பிக்கச் செய்தான்; பின், அர்ச்.ஃபுளோரியனுடைய கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி, என்ஸ் என்ற ஆற்றில், அவரை  மூழ்கச் செய்துக் கொன்றான். அர்ச்.ஃபுளோரியன், கிபி 304ம் வருடம், மே 4ம் தேதி வேதசாட்சியாகக் கொல்லப்பட்டு, பாக்கியமான மோட்ச மகிமையின் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், கிறீஸ்துவர்கள் அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த சரீரத்தை ஆற்றிலிருந்து எடுத்து, லோர்க் என்ற இடத்தில் பக்தி பற்றுதலுடன் அடக்கம் செய்தனர். 600 வருடங்களுக்குப் பின், இதே இடத்தில் அர்ச்.அகுஸ்தீனார் துறவற சபை மடம் கட்டப்பட்டது. போலந்து நாட்டின் அரசரான கசிமிர் மற்றும் கிராக்கோ நகர மேற்றிராணியாருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, 3ம் லூசியுஸ் பாப்பரசர் போலந்து நாட்டின் பாதுகாவலராக, அர்ச்.ஃபுளோரியனை ஏற்படுத்தினார்.அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த அருளிக்கங்களை போலந்து நாட்டிற்கு 1184ம் வருடம் அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, நெருப்பில் விழுந்த ஒருவர், அர்ச்.ஃபுளோரியனை நோக்கிக் கூப்பிட்டு உதவி கேட்டபோது, புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். அந்நாள் முதல், அர்ச்.ஃபுளோரியனிடம், நெருப்பினால் ஏற்படும் ஆபத்துக்காலங்களில், மக்கள் வேண்டிக்கொள்ளத் துவக்கினர். தீயினாலும், வெள்ளத்தினாலும், தண்ணீரில் மூழ்குவதினாலும் ஏற்படும் ஆபத்துக்களில் நம்மைக் காப்பாற்றுவதற்கு வல்லமையுள்ள பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் திகழ்கிறார். அநேக நாடுகளில் தீயணைப்பு வீரர்களுடைய பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். 



ஆஸ்திரியா , ஜெர்மனி நாடுகளில் தீயணைப்பு வீரர்கள், “ஃபுளோரியன்” என்கிற வார்த்தையை, தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தீயணைப்புக்கான கனரக வாகனங்களை அழைப்பதற்கான, அவர்களுடைய வானொலி தொடர்பின் ஒரு பொதுவான அழைப்பின் அடையாள வார்த்தையாகப் பயன்படுத்துகின்றனர். தீயணைப்பு படைவீரர்கள் பயன்படுத்தும், ஃபுளோரன்டைன் என்று அழைக்கப்படுவதும், ரேடியோ கைபேசி சாதனமும் கூட அர்ச். ஃபுளோரியனுடைய பெயரினாலேயே (சிறிது மருவி அழைக்கப் படுகிறது)  அழைக்கப்படுகிறது! அர்ச் .ஃபுளோரியனுடைய சிலுவையையே  அமெரிக்கா, கனடா நாடுகள் உட்பட , அநேக நாடுகளில், தீயணைப்பு வீரர்கள் தங்களுடைய சீருடையில் அடையாளச் சின்னமாக (பேட்ஜ்) அணிந்து கொண்டிருக்கின்றனர்.🌹✝

🌹வேதசாட்சியான அர்ச்.ஃபுளோரியனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹





ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

அர்ச். பிளெய்ஸ் (St. Blaise)

அர்ச். பிளெய்ஸ் ✠ (St. Blaise)



*வேதசாட்சி, பரிசுத்த உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316


*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

அர்ச். பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. அர்ச் பிளெய்ஸ், வேதசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய அர்ச். பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் குழந்தைக்காக செபித்தார்.; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.


St. Blaise


Little is known about St. Blaise, a 4th-century bishop who died a martyr. He was forced to flee due to religious persecution. While hiding in a cave, legend has it that he was discovered by a group of hunters, who found him surrounded by wild animals he had tamed. The hunters dragged him off to prison. On the way, he encountered a mother with a young son who had a bone stuck in his throat. Blaise commanded the bone be dislodged, and the child coughed up the bone.

St. Blaise's feast day is celebrated with the Blessing of the Throats with the following prayer:

Through the intercession of St. Blaise, bishop and martyr, may God deliver you from ailments of the throat and from every other evil. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.


St. Blaise is also venerated as one of the "Fourteen Holy Helpers," a group of saints invoked as early as the 12th century in Germany and who are honored on Aug. 8: St. Denis of Paris (headache and rabies), St. Erasmus or Elmo (colic and cramp), St. Blaise (throat ailments), St. Barbara (lightning, fire, explosion and sudden and unprepared death), St. Margaret (possession and pregnancy), St. Catherine of Alexandria (philosophers and students, and wheelwrights), St. George (protector of soldiers), Sts. Achatius and Eustace (hunters), St. Pantaleon (tuberculosis), St. Giles (epilepsy, insanity, and sterility), St. Cyriac (demonic possession), St. Vitus (epilepsy), and St. Christopher (travelers). The German Dominicans promoted this veneraion, particularly at the Church of St. Blaise in Regensburg (c. 1320).