Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

August லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
August லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2024

August 28, St. Agustine, அர்ச்‌. அகுஸ்தீனார்


 

ஆகஸ்டு 2️8️ம்‌ தேதி

திருச்சபையின்‌ தலைசிறந்த வேதபாரகரும்‌
தந்தையுமான ஹிப்போ நகரின்‌
அர்ச்‌. அகுஸ்தீனார்திருநாள்

 

இவர்‌, 354ம்‌ வருடம்‌,நவம்பர்‌ 13ம்‌ தேதியன்று உரோமையின்‌ ஆப்ரிக்கப்‌ பிராந்தியத்தைச்‌ சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக்‌ ஆஹ்ராஸ்‌)வில்‌ பிறந்தார்‌. அர்ச்‌.மோனிக்கம்மாள்‌, இவருடைய தாயார்‌. ஆனால்‌, இவருடைய தந்தையார்‌, ஒரு அஞ்ஞானியாக இருந்தார்‌; அர்ச்‌.மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபத்தின்‌ பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக மனந்திரும்பி பாக்கியமாய்‌ மரித்தார்‌. கத்தோலிக்க வேத விசுவாசத்தில்‌ வளர்க்கப்பட்டபோதிலும்‌, முதல்‌ சில நூற்றாண்டுகளில்‌, வாலிப வயதை அடைந்ததும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றுக் கொள்ளும்‌ வழக்கம்‌ திருச்சபையில்‌ அனுசரிக்கப்பட்‌டதால்‌, அகுஸ்தீனார்‌, சிறு வயதில்‌,ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளவில்லை.

அர்ச்‌. மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும்‌, உயரிய இலட்சியங்களையும்‌,பிரகாசமுள்ள திறமைகளையும்‌, அதே சமயம்‌, மூர்க்கமான ஆசாபாச உணர்‌வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அநேக வருடங்கள்‌, தீமைகளும்‌, போலியான பதித நம்பிக்கைகளும்‌ நிறைந்த ஜீவியம்‌ ஜீவித்து வந்தார்‌. இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும்‌ அறிவுத்திறனும்‌, ஞானமும்‌ உடையவராயிருந்த மனிதர்களில்‌ ஒருவராகத் திகழ்ந்த  போதிலும்‌, அசுத்த பாவங்களும்‌, ஆங்காரமும்‌, அகுஸ்தினாரின்‌ மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்‌ செய்ததென்றால்‌, சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால்‌ பார்க்கக்‌ கூடாமல்‌, அல்லது புரிந்துகொள்ளக்‌ கூடாமற்போயிற்று!  இருப்பினும்‌, இவர்‌ இலத்தீன்‌ மொழியில்‌, எவ்வளவு உயரிய  தேர்ச்சியை அடைந்தாரென்றால்‌, வாய்ச்சாலகமாக அம்மொழியைப்‌ பேசுவதிலும்‌, தனது கருத்தைத்‌ தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்‌தனமாக வாதிடுவதிலும்‌ நிபுணத்துவம்‌ பெற்றிருந்தார்‌.

தத்துவ இயலில்‌ தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்‌; இலக்கியத்தையும்‌, இலக்கணத்தையும்‌ , தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும்‌, கார்த்தேஜிலும்‌ 9 வருட காலமாகக்‌ கற்றுக்கொடுத்து வந்தார்‌. இவருடைய வயதின்‌ கடைசி இருபதுகளில்‌, ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்‌, வேலை தேட ஆரம்பித்தார்‌. இதே சமயம்‌, இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச்‌. மோனிக்கம்மாள்‌, இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல்‌ ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்‌; இவரைப்‌ பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும்‌ சென்றார்கள்‌. உரோமாபுரியில்‌ அகுஸ்தினார்‌ வளமையடைந்தார்‌; அணியிலக்கணத்தின்‌ துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்‌. மிலான்‌ நகர மேற்றிராணியாரான அர்ச்‌. அம்புரோசியாரை, அகுஸ்தீனார்‌ சந்தித்தார்‌; இவர்‌ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்‌, திருச்சபையின்‌ ஞானமுள்ள பதில்களை, அர்ச்‌. அம்புரோசியார்‌ அளித்தார்‌. அப்போது தான்‌,கிறீஸ்துவ வேதம்‌,தத்துவ இயல்‌ வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம்‌, என்பதை அகுஸ்தீனார்‌ கண்டறிந்தார்‌.

ஆனால்‌, இவர்‌ தனது துர்ப்‌ பழக்கங்களின்‌ சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்‌; அதற்‌கான தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார்‌. உடனடியாக, அகுஸ்தீனாரால்‌ கிறீஸ்துவராக மாறக்‌ கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால்‌ ஒருபோதும்‌ ஜீவிக்க முடியாது, என்று , இவர்‌, நினைத்திருந்தார்‌. இருப்பினும்‌ ஒருநாள்‌, அர்ச்‌. வனத்து அந்தோணியாரின்‌ ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால்‌, இரு மனிதர்கள்‌ கத்தோலிக்கர்களாக மாறினர்‌, என்பதைக்‌ கேள்விப்‌பட்டதும்‌, இவர்‌ தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்‌; இவர்‌ தன்‌ நண்பரான அலிபியுஸ்‌ என்பவரிடம்‌, “நாம்‌ என்ன செய்து கொண்டிருக்கிறோம்‌? கல்வியறிவில்லாக மனிதர்கள்‌, வலுவந்தமாக பரலோகத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்கின்றனர்‌! அதே சமயம்‌, எல்லாவிதமான அறிவையும்‌ கொண்டிருக்கிற நாம்‌, நம்‌ பாவங்கள்‌ என்கிற சேற்றிலே உருண்டுகொண்டிருக்கும்‌ அளவிற்கு மாபெரும்‌ கோழைகளாக இருக்கிறோம்‌!” என்று கூறினார்‌.

அகுஸ்தீனார்‌, பின்னர்‌, பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச்‌. சின்னப்பரின்‌ நிரூபங்களை ஒரு புதிய ஒளியில்‌ வாசித்தார்‌; ஒரு நீண்‌டதும்‌ கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்‌ இதைப்‌ பின்தொடர்ந்து வந்தது! ஆனால்‌, தேவ வரப்பிரசாதத்தின்‌ உதவியால்‌, உள்ளரங்க போராட்டத்தை, இவர்‌ வெற்றிகொண்டார்‌. அர்ச்‌. மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபங்களாலும்‌, அர்ச்‌. அம்புரோசியாரின்‌ ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும்‌, கத்தோலிக்க வேதம்‌ மட்டுமே உண்மையான வேதம்‌ என்பதைத் தெளிந்தமனதுடன்‌, 386ம்‌ வருடம்‌, அகுஸ்தீனார்‌, கண்டறிந்தார்‌; 387ம்‌ வருடம்‌ ஈஸ்டர்‌ திருநாளன்று, அர்ச்‌. அம்புரோசியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம்‌ அளித்தார்‌.  இவர்‌ ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்தார்‌; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்‌; அங்கே,395ம்‌ வருடம்‌, மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌. அடுத்த 35 வருட காலத்தில்‌, இவர்‌ அயராமல்‌ திருச்சபைக்காக உழைத்தார்‌;

 வடஆப்ரிக்கா, திருச்சபையின்‌ மையமாக உருமாறியது! இவருடைய ஞான ஜீவியம்‌ உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்‌சமயத்தில், இவர், ‌ திருச்சபையில்‌ நிலவிய சகல பதிதத்‌ தப்பறைகளையும்‌, எதிர்ப்பதிலும்‌, தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்‌, பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும்‌, முன்னோடியான ஞானமும்‌ வலிமையுமிக்க வேகபாரகராகத்‌ திகழ்ந்தார்‌; அநேகக்‌ காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும்‌, நூல்களும்‌, உலகெங்கிலும்‌ ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும்‌, வேத இயல்‌ ஊகங்களுடையவும்‌ முக்கிய ஆதாரமாகப்‌ பயன்படுத்துப்படுகின்றன!

அர்ச்‌.அகுஸ்தீனார்‌ காய்ச்சலினால்‌, 430ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 28ம்‌ தேதியன்று, 76வது வயதில்‌, மரித்தார்‌. இந்நேரத்தில்‌, ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. 8ம்‌ நூற்றாண்டில்‌, ஹிப்போ நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை, லொம்பார்டு நாட்டின்‌ அரசரான லுட்பிராண்டு என்பவர்‌, இத்தாலியாவிலுள்ள பாவியாவில்‌ ஸ்தாபித்தார்‌; அதற்காக பெருந்தொகையை, அவர்‌ மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!                                 

அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ பிரபல்யமான காட்சி

St. Agustine and the Child (Angel)


ஒரு சமயம்‌, அர்ச்‌.அகுஸ்தினார்‌, கடற்கரையோரத்தில்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய பரம இரகசியத்தைப்‌ பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்‌ ஒருசிறு குழந்தை ‌ விளையாடிக்கொண்டிருப்பதைக்‌ கவனித்தார்‌: அது தன்‌ கையிலிருந்த ஒரு சிறு ஓட்டிற்குள்‌ கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள்‌ ஊற்றிக்கொண்டிருந்தது; இதைத்‌ தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “நீ என்ன செய்கிறாய்‌?” என்று கேட்டார்‌; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்‌ இந்த குழிக்குள்‌ விட்டு, கடலைக்‌ கட்டாந்தரையாக்கப்‌ போகிறேன்‌!” என்று கூறியது. உடனே, அக்குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “குழந்தையே! உன்‌ ஜீவியகாலமெல்லாம்‌ இந்த வேலையில்‌ நீ ஈடுபட்டாலும்‌, உன்னால்‌, இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்‌; அதற்கு, அந்த குழந்தை, “இருப்பினும்‌, நீங்கள்‌ உங்களுடைய மனதில்‌ தியானிக்கிற அந்த மகா பரம இரகசியத்தைப்‌ பற்றி நீங்கள்‌ புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான்‌ இதை செய்து முடிப்பேன்‌!” என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ பரம இரகசியத்தைப்‌ பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான்‌ எடுத்து வந்த பயனற்ற முயற்சிகள்‌ பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்‌ உருவில்‌ தன்னிடம்‌, சர்வேசுரன்‌ தாமே அனுப்பியிருக்கிறார்‌, என்பதைக்‌ கண்டுணர்ந்தார்‌.

மாபெரும்‌ திருச்சபையின்‌ வேதபாரகரும்‌ தந்தையுமான அர்ச்‌.அகுஸ்‌ தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

Download St. Augustine Books for Free
 Click Here to download

புதன், 21 ஆகஸ்ட், 2024

August 21 - St. Jane Frances de Chantal - அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்

 

ஆகஸ்டு 2️1️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌ விதவையுமான
அர்ச்‌.ஜேன்பிரான்செஸ்தே ஷாந்தால்


 

            ஜேன்‌ பிரான்செஸ்‌ ஃப்ரெமாய்ட்‌ 1572ம்‌ வருடம்‌,பிரான்சிலுள்ள பா்‌ கண்டியில்‌ பிறந்தாள்‌. இவளுடைய தாயார்‌, கிளார்வாக்ஸின்‌ அர்ச்‌. பெர்னார்டுவின்‌ பாரம்பரிய வம்சாவளியைச்‌ சேர்ந்தவர்கள்‌; இவளுக்கு ஒன்றரை வயதானபோது, இவளுடைய தாயார்‌, அடுத்த குழந்தையைப்‌ பிரசவித்தபோது, இறந்து போனார்கள்‌.  ஒரு புராட்டஸ்டன்டு பதிதன்‌, இவளை திருமணம்‌ செய்ய முன்‌  வந்தபோது, சர்வேசுரனுக்கும்‌ அவருடைய திருச்சபைக்கும்‌ எதிரியாயிருக்கிற பதிதனை நான்‌ திருமணம்‌ செய்யமாட்டேன்‌, என்று தீர்மானமாகக்‌ கூறி மறுத்துவிட்டார்கள்‌. 1592ம்‌ வருடம்‌, பிரான்ஸ்‌ அரசருடைய மெய்காப்பு வீரரும்‌, அரசவை உறுப்பினருமான கிறிஸ்டோஃபா்‌ ராபுடின்‌ -ஷாந்தால்‌ என்கிற ஒரு பிரபுவை, இவள்‌, திருமணம்‌ செய்து கொண்டாள்‌. 1601ம்‌ வருடம்‌, இவளுடைய கணவர்‌ துப்பாக்‌கிச்சூட்டின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில்‌, கொல்லப்பட்டார்‌.ஜேன்‌ 28 வயதில்‌ விதவையானாள்‌.

            4 குழந்தைகள்‌ பிறந்திருந்தன. மறு திருமணம்‌ செய்துகொள்ள உறவினர்களும்‌, பணிவிடைக்காரர்களும்‌ வற்‌புறுத்தி, கணவரை இழந்த துயரத்திலிருந்த இவளுடைய வேதனையை இன்னும்‌ கூடுதலாக அதிகரிக்கச்‌ செய்தனர்‌. 1604ம்‌ வருடம்‌, ஜேன்‌, ஜெனிவா மேற்றிராணியாரான, அர்ச்‌. பிரான்சிஸ்‌ சலேசியாரைச்‌ சந்தித்தாள்‌. டிஜானில்‌ உள்ள செயிண்ட் சாப்பல் ‌ தேவாலயத்தில்‌ பிரசங்கம்‌ நிகழ்த்தியபோது, அவரைச்‌ சந்தித்தாள்‌; அவரையே தனது ஆன்ம குருவாகத்‌ தெரிந்துகொண்டாள்‌.பின்னாளில்‌, இவருடைய ஆதரவின்‌ துணையுடனும்‌, தன்‌ தந்தையின்‌ ௨தவியுடனும்‌, போர்ஜஸ்‌ நகர அதிமேற்றிராணியாராயிருந்த தன்‌ சகோதரரின்‌ உதவியுடனும்‌, தனது நான்கு பிள்ளைகளையும்‌ உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியபிறகு, ஆன்னஸி என்ற இடத்திற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபையை ஸ்தாபிப்பதற்காகச்‌ சென்றாள்‌.

            இந்த இடத்தில்‌, 1610ம்‌ வருடம்‌, ஐூன்‌ 6ம்‌ தேதி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ திருநாளன்று, மகா பரிசுத்த தேவ மாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபை, திருச்சபையின்‌ அங்கீகாரத்துடன்‌ ஸ்தாபிக்கப்பட்டு துவக்கப்பட்டது! வியாதியினாலும்‌ வயதின்‌ காரணத்தினாலும்‌, மற்ற கன்னியர்‌ துறவற சபைகளில்‌ ஏற்றுக்கொள்‌ளப்படாத பெண்கள்‌, இச்சபையில்‌ எற்றுக் கொள்ளப்பட்டனர்‌.  ஜேன்‌ , பிரான்ஸ்‌ மற்றும்‌ இத்தாலி நாடுகளில்‌ அயராத பயணத்தை மேற்கொண்டு, அநேக மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ மரித்தபோது, ஸ்தாபிக்கப்பட்டிருந்த 86 மினவுத‌ல் கன்னியர்‌ சபை மடங்களே, இவளுடைய உன்னதமான அயரா முயற்சிகளின்‌ வெற்‌றிக்கு, அத்தாட்சியாயிருக்கின்றன!

            ஜேன்‌, தனது எல்லா மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களிலும்‌  அறிவிக்கப்பட வேண்டிய ஒரு சுற்றறிக்கையை, தன்‌ உதவியாளரிடம்‌ எழுதும்படிச்‌ செய்தபிறகு, உறுதியான விசுவாச முயற்சி செய்தாள்‌; இறுதி தேவதிரவிய அனுமானமாகிய மகா பரிசுத்த தேவநற்கருணையை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ உட்கொண்டாள்‌; அவஸ்தைப்பூசுதலை பக்தியுடன்‌ பெற்றுக்‌ கொண்டாள்‌; திவ்ய சேசுநாதரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ மெதுவாக , நிதானமாக மூன்று முறை உச்சரித்தபடி, 1641ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 13ம்‌ தேதியன்று, பாக்கியமாய்‌ மரித்தாள்‌. இவளுடைய பரிசுத்த ஆத்துமம்‌, ஒரு நெருப்பின்‌ கோளமாக மேலே உயர்ந்து மோட்சத்தை நோக்கிப்‌ பறந்து சென்றதை, அர்ச்‌.பிரான்சிஸ்‌ சலேசியாருக்குப்‌ பிறகு, இவளுடைய ஆன்மகுருவாயிருந்த அர்ச்‌.வின்சென்ட்‌ தே பவுல்‌ கண்டார்‌. அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலுக்கு, 14ம்‌ ஆசிர்வாதப்பா்‌ பாப்பரசரால்‌, 1751ம்‌ வருடம்‌, நவம்பர்‌ 21ம்‌ தேதி முத்திப்‌ பேறுபட்டமளிக்கப்பட்டது; 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌, 1767ம்‌ வருடம்‌ ஜூலை 16ம்‌ தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்கப்பட்டது.

“நரகமானது, திறமைமிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களால்‌ நிறைந்தி ருக்கிறது! ஆனால்‌, மோட்சமானது, ஆற்றல்மிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களைக்‌ கொண்டிருக்கிறது -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌

“ஆனால்”‌, “ஒருவேளை என்று எவ்வித நிபந்தனைகளுமில்லாமல்‌, சர்‌ வேசுரனுடைய திருச்சித்தம்‌, இன்றும்‌, நாளைக்கும்‌, எல்லா காலத்திற்கு மாக நிறைவேற்றப்படும்! -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌                                                                             

அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்!

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 16 - St. Joachim, - அர்ச்‌. ஜோக்கிம்

 

ஆகஸ்டு 16ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின் மகா பரிசுத்த தந்தையான அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்


            அர்ச்‌. ஜோக்கிம் திருநாள்,  1584ம் வருடம், உரோமன் காலண்டரில் சேர்க்கப்பட்டது. முதலில், இந்த திருநாள், மார்ச் 20ம் தேதியன்று, மகா பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச்‌. சூசையப்பர் திருநாளுக்கு அடுத்த நாள் அனுசரிக்கப்பட்டு வந்தது;1738ம் வருடம், இத்திருநாள், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்கு, எட்டு நாட்களுக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றப் பட்டது! ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டை அனுசரிப்பதை அனுமதிக்கும் விதமாக, அர்ச்‌. பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாளுக்குப் பின் வரும் நாளில், அதாவது, ஆகஸ்டு 16ம் தேதிக்கு மாற்றினார்.

            மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தின் மகிமையைக் கொண்டாடும்போது, அவர்களுடைய மகா பரிசுத்த தந்தையான அர்ச்.ஜோக்கிமையும் நாம் நினைவு கூரும் விதமாக, இந்நாளில், அர்ச்.ஜோக்கிம் திருநாள் அனுசரிக்கப்படும்படியாக, அர்ச்‌. பத்தாம் பத்தி நாதர் பாப்பரசர் ஏற்பாடு செய்தார்! எபிரேய மொழியில், ஜோக்கிம் என்ற பெயருக்கு, “சர்வேசுரன்  ஆயத்தம் செய்கிறார்!”, என்று அர்த்தம்.யூதாவின் கோத்திரத்தில், தாவீதின் குலத்தில் பிறந்த அர்ச்‌.  ஜோக்கிம், பக்தியுள்ள மனிதராயிருந்தார்; இவர் தவறாமல் தொடர்ந்து ஏழைகளுக்கும், செப்ஃபோரிஸிலிருந்த  ஜெபக்கூடத்திற்கும், பண உதவி செய்து வந்தார்; பின்னா், அர்ச்‌.  அன்னம்மாளைத் திருமணம் செய்தார்.   மகா பரிசுத்த தேவமாதாவின் பெற்றோர்கள் முதலில் கலிலேயாவில் ஜீவித்ததாகவும், பின்னர் ஜெருசலேமிற்குக் குடி பெயர்ந்ததாகவும், பரிசுத்த பாரம்பரியம் கூறுகின்றது.  20 வருடங்கள் குழந்தையில்லாமலிருந்தனர்.

            இப்பரிசுத்தத் தம்பதியா், வருடந்கோறும் தவறாமல், கூடாரத் திருநாளுக்கு ஜெருசலேம் தேவாலயத்திற்குச் சென்றனர்; இருப்பினும், பெரிய குரு, ஜோக்கிமினுடைய பலியை நிராகரித்து வந்தார்; இவருடைய மனைவி குழந் தையில்லாமலிருப்பது, தேவ கோபத்தின் அடையாளமாயிருக்கிறது, என்று கூறி, அர்ச்‌. ஜோக்கிம் கொண்டு சென்ற பலிப்பொருட்களை நிராகரித்து வந்தார்: இதன்விளைவாக, அர்ச்‌.  ஜோக்கிம், வனாந்திரத்திற்குச் சென்று,  40 நாட்கள் உபவாசம், தபசு இருந்தார்.அச்சமயம்,சம்மனசுகள், இவருக்கும், அர்ச்‌.  அன்னம்மாளுக்கும் காட்சியளித்து,ஒரு பெண்குழந்தை அவர்களுக்குப் பிறக்கப் போகிறது, என்றும், அக்குழந்தை, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப் பட வேண்டும், என்றும் அறிவித்தனர். மகா பரிசுத்த மாமரி, அமலோற்பவமாக பிறந்த நாளன்று, அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும் அனுபவித்த உன்னதமான சந்தோஷத்தைப்பற்றி யாரால் விவரிக்கக் கூடும்? அவர்களுக்கு, அந்த நாள் மற்றெல்லா நாட்களுக்கும் மேலான நாளாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருந்தது!

            ஏனெனில், அந்த நாள், இவர்கள் இருவரையும் நமதாண்டவரின் பரிசுத்த தாத்தா பாட்டியாக மாற்றவிருக்கிற நாளுக்குக் கூட்டிச்செல்லக்கூடிய நாளாக இருந்தது! மகா பரிசுத்த தேவமாதா 3 வயது குழந்தையாக இருந்தபோது, சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண் குழந்தைகளை வளர்ப்பதில், ஜெருசலேம் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த பரிசுத்தப் பெண்களிடம், அர்ச்‌.  ஜோக்கிமும், அர்ச்‌.  அன்னம்மாளும், தங்கள் மகா நேச முள்ள குழந்தையை, ஒப்படைத்தார்கள். இந்த தேவாலயத்தில் சர்வேசுரனுடைய கருத்தூன்றிய நேரடிப் பார்வையின் கீழ், மகா பரிசுத்த கன்னிமாமரி, எட்டு வருட காலம் ஜீவித்தார்கள். கி.மு.7ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், புண்ணியங்களிலும் உத்தமதனத்திலும் உச்சநிலையை அடைந்தவராக, பாக்கியமாய் மரித்தார்; அர்ச்‌.  அன்னம்மாள், அர்ச்‌.  ஜோக்கிமை, ஜெத்சமேனி தோட்டத்திற்கு அருகிலுள்ள ஜோசப்பாத் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தார்கள். 1889ம் வருடம், அர்ச்‌. ஜோக்கிம், அர்ச் அன்னம்மாளின் கல்லறைகள் கண்டு எடுக்கப்பட்டன.

 நமதாண்டவரின் மகா பரிசுத்த தாத்தாவான அர்ச்‌.  ஜோக்கிமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

August 15 - Assumption of Our Lady - தேவமாதாவின்‌ மோட்சாரோபனத் திருநாள்

 

ஆகஸ்டு 15ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாள்


 

            இந்த திருநாள், மகா பரிசுத்த திருநாட்களிலேயே மிகப் பழமையான திருநாள்; அப்போஸ்தலர்கள் காலந்தொட்டே கொண்டாடப்பட்டு வரும் திருநாள். மோட்சாரோபனம் என்கிற அடையாள வார்த்தை,  மகா பரிசுக்த தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்குள் நுழைந்த பரமஇரகசியமான திருநிகழ்வை நிச்சயப்படுத்துகிறது! திருச்சபை, ஏன், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தைத் திருநாளாகக் கொண்டாடுகிறது?  ஏனெனில், இம்மகா ஆடம்பரமானதும், மகிமைமிக்கதுமான தேவ மாதாவின் மோட்சாரோபனத்தின் பரமஇரகசியத் திருநிகழ்வின் திரு நாள், மகா பரிசுத்த தேவமாதாவைக் கொண்டாடுவதுடன் கூட,திருச்சபையின் எதிர்காலத்தையும் சுட்டிக்காண்பிக்கிறது!

            மகா பரிசுத்த திவ்ய கன்னிமாமரி, நம் திருச்சபையினுடைய சுரூபப்படமாகவும், பரிசுத்த உருவப்படமாகவும் திகழ்கிறார்கள்! நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய திருச்சபை, மகா பரிசுத்த கன்னிமாமரியினுடைய திருச்சபையாகத் திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா என்ன செய்தார்களோ, அவற்றையே செய்யும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்! மகா பரிசுத்த தேவமாதா, எங்கே சென்றார்களோ, அங்கே அவர்களைப் பின்பற்றிச் செல்வதற்கு, நாமும் அழைக் கப்பட்டிருக்கிறோம். மகா பரிசுத்த தேவமாதாவிற்கு, நமதாண்டவர் என்ன செய்தாரோ, அதை, தமது திருச்சபைக்கும் இறுதிநாளில் செய்வார். வண.ஆதிர்தா மேரி கன்னியாஸ்திரிக்கு, அளிக்கப்பட்ட பரலோக வெளிப்படுத்துதல்களுக்கேற்ப, மகா பரிசுத்த தேவமாதா, பெரிய வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, 21 வருடங்களும், 4 மாதங்களும்,19 நாட்களும், பூமியில் ஜீவித்தார்கள்.

            மோட்சாரோபன நாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின் வயது 70 ஆவதற்கு, 24 நாட்கள் குறைவாயிருந்தன! மகா பரிசுத்த தேவமாதா 70 வயதானபோதிலும், அவர்களுடைய மகா பரிசுத்த சரீரத்தின் பரிசுத்தத்தோற்றம், 33 வயதிற்குரிய தோற்றமாகக் திகழ்ந்தது! ஏனெனில், ஜென்மப்பாவமில்லாமல் பிறந்திருந்ததால்,மகா பரிசுத்த தேவமாதா, வயதின் மூப்பிற்கு, அப்பாற்பட்டவர்களாயிருந்தார்கள். தூர்ஸ் நகரின் அர்ச்‌. ஜார்ஜியார் தான், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தைப் பற்றிப் பேசிய திருச்சபையின் முதல் ஆசிரியராகத் திகழ்கிறார். கி.பி.600ம் வருடம், மவுரிசியுஸ் சக்கரவர்த்தி, மகா பரிசுத்த தேவ மாதாவின் மோட்சாரோபனத்திருநாள், ஆகஸ்டு 15ம் தேதிகொண்டாடப்பட வேண்டும் என்று, ஒரு அரச ஆணையைப் பிரகடனம் செய்தார். உடனே, அயர்லாந்து இந்த ஆணையைப் பின்பற்றி, இம் மகா ஆடம்பரமான திருநாளை ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடத் துவக்கியது; பின்னர் உரோமாபுரியும் அனுசரிக்கத் துவக்கியது.

            8ம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளில், முதலாம் செர்ஜியுஸ் பாப்பரசரின் கீழ் இந்த திருநாள் கொண்டாடப்பட்டது. பின்னர், 4ம் சிங்கராயர் பாப்பரசர், இந்த திருநாளை அகில திருச்சபையும் கொண்டா டுவதற்கான அதிகாரபூர்வமான அங்கீகராம் அளித்தார்.  12ம் பத்திநாதர் பாப்பரசர் மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்கிறவரைக்கும் , வேதபாரகர்களிடையே, மோட்சாரோபனத்தைப் பற்றிய தர்க்கம் நிலவியது. 1950ம் வருடம், நவம்பர் 1ம் தேதியன்று, 12ம் பத்திநாதர் பாப்பரசர், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தை, ஒரு விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார்: “நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய அதிகாரத்தினாலும், முத், அப்போஸ்தலர்களான இராயப்பர் சின்னப்பருடையவும் அதிகாரத்தினாலும், நமது சொந்த அதிகாரத்தினாலும், சர்வேசுரனுடைய மாசில்லாத தாயார், என்றும் கன்னிகையான மகா பரிசுத்த மாமரி, இவ்வுலக ஜீவிய காலத்தை நிறைவு செய்தபோது, சரீரத்துடனும் ஆத்துமத்துடனும், பரலோக மகிமைக்குள் நுழைந்தார்கள், என்பதை தேவ வெளிப்படுத்துதலினால் அறிவிக்கப்பட்ட ஒரு விசுவாச சத்தியமாக நாம் உச்சரிக்கிறோம்; அறிவிக்கிறோம்! பொருள் வரையரை செய்கிறோம்!”

            இப்பிரகடனத்தில், பாப்பரசர், மேலும், சர்வேசுரனுடைய வாக்குத்தத்தப் பேழை, ஜெருசலேமுக்குத் திரும்பி வந்ததை நினைவுகூரும் விதமாகவும்,பின்னர் அது, காணாமல் போனதைப் பற்றி அழுது புலம்பியதைப் பற்றியும் எழுதப்பட்ட 132ம் சங்கீதத்தைக் குறிப்பிடுகின்றார்: இந்த சங்கீதம், பிற்பாதியில், இந்த பேழையின் இழப்பு மறுபடியும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஈடுசெய்யப்படும், என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் , ! ஆண்டவரே ! உமது பரிசுத்தம் விளங்கும் பேழையுடன், உமது தாபர ஸ்தலத்தில் எழுந்தருளும்! (சங். 132:8), என்று ஜெபிக்கிறது! இந்த பேழையை தான் திருச்சபை, புதிய ஏற்பாட்டின் பேழையாக, மகா பரிசுத்த தேவமாதாவிடம் காண்கிறது! ஆண்டவர் தாமே, தங்கி வாழுகின்ற இம்மகா பரிசுத்தப்பேழையான, மகா பரிசுத்த தேவமாதா, ஆண்டவரைப்போலவே, ஆத்துமத்துடனும், சரீரத்துடனும், பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட டார்கள், என்பதையும் திருச்சபை ஞானத்துடன் புரிந்து கொள்கிறது! அதையே, விசுவாச சத்தியமாகத் தன் விசுவாசிகளுக்குப் போதித்துக் கற்பிக்கிறது!