Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 20 - St. Bernard - அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு

 ஆகஸ்டு2️0️ம்தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகளை ஸ்துதித்துப்பாடிய சிதார்இசைக்கருவி என்று அழைக்கப்பட்டவரும்‌,ஸ்துதியரும்வேதபாரகருமான அர்ச்‌.  கிளார்வாக்ஸ்பெர்னார்டு திருநாள்

“Nun Quam satis De Maria”- 🏻+ St. Bernard of Clairvaux

மகா பரிசுத்த தேவமாதாவைப் பற்றி யாராலும்ஒருபோதும்போதிய அளவிற்குப்புகழ முடியாது!” ”- 🏻அர்ச்‌. பொர்னார்டு

அர்ச்‌. பொர்னார்டு, 12ம்நூற்றாண்டின்முற்பகுதியில்‌, தலைமை ஏற்று நடத்தக்கூடிய திருச்சபையின்மாபெரும்பிதாப்பிதாக்களில்ஒருவராகவும்‌, எல்லா காலத்திற்குமான மாபெரும்ஞான ஆசிரியர்களில்ஒருவராகவும்திகழ்ந்தார்‌.  இவர்‌ 1091ம்வருடம்பிரான்சிலுள்ள பர்கண்டியில்ஃபோன்டேன்ஸ்என்ற ஒரு கோட்டையில்பிறந்தார்‌. இவர்கொண்டிருந்த விசேஷ அறிவாற்றலின்உத்வேகத்தைக்கண்டு, இவருடைய பெற்றோர்கள்இவர்மட்டில்மிக உயரிய நம்பிக்கைகளைக்கொண்டிருந்தனர்‌; உலகம்இவருக்கு முன்பாக மாபெரும்ஒளியுடனும்‌,புன்னகைத்தபடியும்தோன்றியது! ஆனால்‌, 22வயதானபோது, அர்ச்‌. பெரனார்டு, இராணுவத்தை விட்டு வெளியேறினார்‌; சிட்டோவின்மடாதிபதியான, அர்ச்‌. ஸ்டீஃபன்ஹார்டிங்கிடம்ஞான ஆலோசனையைப்பெற்றபிறகு, 1098ம்வருடம்புதிகாக ஸ்தாபிக்கப்பட்டு, துவக்கப்பட்டிருந்த சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர தீர்மானித்தார்‌; அச்சிறிய துறவறசபை அச்சமயம்‌, பல இன்னல்களுக்கிடையே அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இத்துறவறசபை, அர்ச்‌. ஆசிர்வாதப்பர்துறவறசபையின்ஆரம்ப கால கடின தபசையும்ஒழுங்குவிதிமுறைகளையும்அனுசரிக்கும்படியாக, துவக்கப்பட்டிருந்தது.இத்துறவற சபையின்விதிமுறைகள்‌,அர்ச்‌. பெர்னார்டை மிகவும்கவர்ந்திழுத்தது; அதன்காரணமாக, இவர்‌, தனது சகோதரர்கள்ஐந்து பேரையும்மற்றும்‌, தனது நண்பர்கள்‌ 25 பேரையும்‌,இத்துறவற சபையில்சேரும்படி பெருமுயற்சி செய்துத்தூண்டினார்‌. அதன்படி, இவர்தன்சகோதரர்கள்‌, மற்றும்நண்பர்கள்என்று 30 பேருடன்‌ 1113ம்வருடம்‌, சிட்டோவிலுள்ள சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர்ந்தனர்‌. அர்ச்‌. பெர்னார்டு, தன்கடைசி இளைய சகோதரரான நிவார்டுவை , தனிமையில்வயோதிப வயதிலிருக்கும்தந்தையை கவனித்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார்‌. ஏனெனில்இவருடைய தாயார்ஏற்கனவே காலமாயிருந்தார்கள்‌; மேலும்‌, அண்ணன்மார்கள்‌, அந்த கடைசி தம்பி நிவார்டுவிடம்‌,” இனி நம்குடும்பத்தின்சகல ஆஸ்திகளுக்கும்நீ மட்டும்தான்ஒரே வாரிசு!”, என்று கூறிச்‌  சென்றனர்‌; அதற்கு, நிவார்டு, தன்அண்ணன்பெர்னார்டுவிடம்‌, “ஆம்‌.நீங்கள்எனக்கு உலகத்தை விட்டுச்செல்கிறீர்கள்‌. ஆனால்‌, நீங்கள்‌ , மோட்சத்தை உங்களுக்கு மட்டும்வைத்துக்கொள்கிறீர்கள்‌! இது நீதி என்று கருதுகிறீர்களா?” என்று கூறிவிட்டு, அவரும்‌, அவர்களுடன்சிஸ்டர்ஷியன்மடத்திற்குள்நுழைந்தார்‌; இறுதியில்‌, அவர்களுடைய வயது முதிர்ந்த தந்தையும்‌, அவர்களுடன்சேர்ந்து கொண்டார்‌!

மூன்று வருட காலத்திற்குள்‌, அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸிலுள்ள மூன்றாவது சிஸ்டர்ஷியன்மடத்தின்மடாதிபதியாக நியமிக்கப் பட்டார்‌. இளம்வயதிலேயே மடாதிபதியான அர்ச்‌.  பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்மங்கள வார்த்தையின்பரம இரகசியத்திருநாளுக்கான ஞான தியானப்பிரசங்கங்களை எழுதினார்‌. இது, இவரை விசேஷவரம்பெற்ற ஒருமாபெரும்ஞான ஆசிரியரும்எழுத்தாளருமாக திருச்சபைக்குக்காண்பித்தது! அதே சமயம்‌, “மகா பரிசுத்த தேவமாதாவின்சித்தாரா இசைக்கருவி!” என்றும்‌, இவர்அழைக்கப்படக்காரணமாயிற்று! மேலும்‌, ஆண்டவருக்கும்‌, மனுக்குலத்திற்கும்இடையே மத்தியஸ்தராக மகா பரிசுத்த தேவமாதா ஆற்றும்உன்னதமான அலுவல்பற்றி, இவர்தெளிவித்துக்காண்பித்த தியானக்கருத்துக்கள்,‌ இவரை மகா பரிசுத்த தேவமாதாவின்வேதபாரகராக அடையாளம்காண்பித்தன!

 இவர்எழுதிய ஞான நூல்களும்‌, இவருடைய அசாதாரண தனிப்பட்ட வசீகரமான உன்னத கத்தோலிக்கக்குணாதிசயங்களும்‌, அநேகரை, கிளார்வாக்ஸ்மற்றும்மற்ற சிஸ்டர்ஷியன்துறவற மடங்களை நோக்கிக்கவர்ந்திழுக்கக்காரணமாயின! இதனால்‌, அநேக சிஸ்டர்ஷியன்துறவற மடங்கள்புதிதாகத்துவங்கப்பட்டன! அர்ச்‌. பெர்னார்டு, ஜீவிய காலத்தில்‌, 136 துறவற மடங்களை ஸ்தாபித்தார்‌; இவருடைய துறவிகள்‌, ஜெர்மனி, போர்த்துக்கல்‌, ஸ்வீடன்‌,அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச்சென்றனர்‌.

அர்ச்‌. பெர்னார்டுவின்அசாதாரணமான அர்ச்சிஷ்டதனத்தினுடைய உன்னதமான சுகந்த நறுமணமும்புகழும்‌, எல்லா இடங்களிலும்பரவியது. அநேக மேற்றிராசனங்கள்‌, இவரை அவர்களுடைய மேற்றிராணியாராக்குவதற்குக்கேட்டனர்‌. தனது முந்தைய சீடரும்அப்போதைய பாப்பரசருமாயிருந்த 3ம்யூஜினியுஸின்உதவியால்‌, இம்மேற்றிராணியார்பட்டத்திலிருந்து , அர்ச்‌. பெொர்னார்டு தப்பித்துக்கொண்டார்‌.  இருப்பினும்‌, மேற்றிராணியார்களும்‌, அரசர்களும்‌, பாப்புமார்களும்‌, இவரிடம்‌, அவ்வப்போது, ஞான ஆலோசனையைப்பெற்று வந்தனர்‌.

இறுதியாக, யூஜினியுஸ்பாப்பரசர்‌, இவரை சிலுவைப்போருக்குப்பிரசங்கியாராக ஏற்படுத்தினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, தனது அத்தியந்த பக்திபற்றுதலுடனும்‌, ஆர்வத்துடனும்‌, நேர்த்தியான பிரசங்கங் களாலும்‌, புதுமைகளாலும்‌, அகில உலகக்கிறீஸ்துவ நாடுகளிலும்‌, பிரான்ஸ்‌, ஜெர்மனி, ஆகிய நாடுகளிலும்‌, சிலுவைப்போர்செய்வதற்கான ஊக்கத்தையும்உற்சாகத்தையும்ஏவித்தூண்டினார்‌. 3ம்கொன்ராடு சக்கரவர்த்தி ஒரு சமயம்‌, இவருடைய சிலுவைப்போருக்கான பிரசங்கத்கைக்கேட்டு உருக்கமாக கண்ணீர்சிந்தி அழுதார்‌; இரண்டு மிகப்பெரிய படைகளை சிலுவைப்போருக்கு அனுப்பி வைத்தார்‌.

இவர்‌, ஆண்டவரின்பரிசுக்த பூமியை மகமதியரிடமிருந்து, பாதுகாக்கும்படியாக, துறவற வார்த்தைப்பாடுகளைக்கொடுத்து, இராணுவ யுக்திகளுடன்பயணங்கள்மேற்கொண்டு, கிறீஸ்துவுக்காக மாவீரர்களாக (Knights Templar) போராடக்கூடிய ஒரு புதிய துறவற சபைக்கான விதிமுறைகளையும்இயற்றி எழுதினார்‌. 3ம்யூஜின் பாப்பரசரின்விண்ணப்பத்தின்படி,காணக்கூடிய திருச்சபையின்தலைவருடைய தனிப்பட்ட பரிசுத்தத்தனத்தினுடைய அவசியத் தேவையின்மட்டில்வலியுறுத்தும்படியாக கவனமாகக்கருத்தில்கொண்டிருக்க வேண்டியவைகளுடைய புத்தகத்தை, மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு ஞான புத்தகத்தை, அர்ச்‌.  பெர்னார்டு எழுதினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸில்‌, 1153ம்வருடம்‌, ஆகஸ்டு 20ம்தேதி பாக்கியமாய்மரித்தார்‌; 1174ம்வருடம்‌, ஜனவரி 18ம்தேதியன்று, 3ம்அலெக்சாண்டர்பாப்பரசரால்‌, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது: 7ம்பத்திநாதர்பாப்பரசரால்‌, 1830ம்வருடம்‌, இவர்திருச்சபையின்வேதபாரகராக அறிவிக்கப்பட்டார்‌.

ஆபத்துக்கள்‌, சந்தேகங்கள்‌, கஷ்டங்கள்‌, ஏற்படும்போது, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றி நினை! அவர்களைக்கூவி அழை! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திருநாமம்‌, உன்உதடுகளிலிருந்து அகலாமலிருப்பதாக! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திரு நாமம்‌, உன்இருதயத்கை விட்டு ஒருபோதும்வெளியேற விடாதே! மகா பரிசுத்த தேவமாதாவின்ஜெபத்தினுடைய உதவியை, அதிக நிச்சயத்துடன்நீ அடைந்துகொள்வதற்கு, அவர்களுடைய காலடியைப்பின்பற்றி, கவனத்துடன்நடந்து செல்‌! மகா பரிசுத்த தேவமாதாவை ,உன்வழிகாட்டியாகக்கொண்டிருந்தால்‌, நீ ஒருபோதும்‌, வழிதவறிக்கெட்டுப்போக மாட்டாய்‌! நீ்அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளும்போது, ஒருபோதும்அதைரியமடையமாட்டாய்‌! இருதய சஞ்சலமடைய மாட்டாய்‌! நம்பிக்கையை இழக்க மாட்டாய்‌! மகா பரிசுத்த தேவமாதா, உன்மனதில்இருக்கும்வரை, நீ ஏமாற்றப்படாமல்பாதுகாப்பாய்இருப்பாய்‌! மகா பரிசுத்த தேவமாதா உன்கரத்தைப்பிடித்திருக்கும்போது, நீ தவறி விழமாட்டாய்‌! அவர்களுடைய பாதுகாப்பின்கீழ்‌,நீ எதற்கும்பயப்படத்தேவையில்லை! அவர்கள்உன்முன்பாக நடந்து சென்றால்‌, நீ சோர்வடையமாட்டாய்‌! உனக்கு மகா பரிசுத்த தேவமாதா, தமது ஆதரவைக்காண்பித்தால்‌, நீ இலக்கை நிச்சயமாகஅடைந்துகொள்வாய்‌!”📚🏻+ அர்ச்‌. பெர்னார்டு

 ஸ்துதியரும்மகா வேதபாரகரும்‌ , மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைப்பாடும்இசைக்கருவியுமான அர்ச்‌. பெர்னார்டு! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக