Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

August 22 - Immaculate Heart of Mary - அர்ச்‌. மரியாயின்‌ மாசற்ற இருதயம்

 

ஆகஸ்டு 2️2️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவான
அர்ச்‌. மரியாயின்மாசற்ற இருதயம்

        


    மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி முயற்சி, திருச்சபையின்‌ சரித்திர ஆசிரியர்களின்‌ குறிப்பீடுகள்‌ மூலம்‌, 12வது நூற்றாண்டு முதல்‌ அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருச்சபையின்‌ பரிசுத்த எழுத்தாளர்களான அர்ச்‌. ஆன்செல்ம்‌, அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தியைப்‌ பற்றி எழுதியிருக்கின்றனர்‌. அர்ச்‌.  சியன்னா பெர்னர்தீன்‌ (1380-1484), "தேவ சிநேகத்தினுடைய அக்கினிச்‌ சூளையி லிருந்து புறப்படும்‌ அக்கினிச் சுவாலைகள்‌ போல்‌, மகா பரிசுத்த தேவ மாதா, தமது மாசற்ற இருதயத்திலிருந்து புறப்பட்ட மகா அத்தியந்த தேவ சிநேகத்தினுடைய வார்த்தைகளால்‌, பேசினார்கள்‌, என்று எழுதியுள்ளார்‌.

            நமதாண்டவரின்‌ மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்தின்‌ திருநாளை அகில திருச்சபையிலும்‌ கொண்டாடத்‌ துவங்குவதற்கு இருபது வருடங்களுக்கு முன்பாக, அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பரும்‌ அவருடைய துறவியர்களும்‌, 1643ம்‌ வருடம்‌, பிப்ரவரி 8ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளைக்‌ கொண்டாடத்‌ துவக்கினர்‌. 1799ம்‌ வருடம்‌, 6ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஃபுளாரன்ஸ்‌ நகரில்‌ சிறைக்கைதியாயிருந்தபோது, பாலர்மோ நகர மேற்றராணியாருக்கு, அவருடைய மேற்றிராசனத்திலிருந்த சில தேவாலயங்களில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளைக்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌. 1805ம்‌ வருடம்‌, 7ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஒரு புதிய சலுகையை அளித்தார்‌; அதன்‌ காரணமாக இப்பக்திமுயற்சி, உலகில்‌ பெரும்‌ பகுதிகளில்‌ பரவி அனுசரிக்கப்பட்டது.

            மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அற்புதப்பதக்கத்தைப்‌ பற்றி மகா பரிசுத்த தேவமாதா தாமே, பாரீஸிலுள்ள அர்ச்‌.  வின்சென்‌ட்‌ தே பவுலின்‌ பிறா்சிநேகக்‌ கன்னியர்‌ சபைக்‌ கன்னியாஸ்திரியான அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்குக்‌ காட்சியளித்து, வெளிப்படுத்தியதும்‌, பாரீஸிலுள்ள ஜெயராக்கினி மாதா தேவாலயத்தில்‌, பாவிகளின்‌ அடைக்கலமான மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான தலைமை பக்திசபை ஸ்தாபிக்கப்பட்டதுமாகிய இவ்விரு பரலோக நிகழ்வுகளும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்திமுயற்சி‌, மிக உத்வேகமாகவும்‌ தீவிரமாகவும்‌, துரிதமாகவும்‌  மற்ற எல்லா நாடுகளிலும்‌ பரவுவதற்குக்‌ காரணமாயின!

            1855ம்‌ வருடம்‌, ஐூலை 21ம்‌ தேதியன்று, திருச்‌சபையின்‌ உரிமைகள்‌ ஆணையம்‌, இறுதியாக, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளுக்கான திவ்ய பலி பூசை ஜெபங்கள்‌ மற்றும்‌ கட்‌டளை ஜெபங்களை அங்கீகரித்தது! இருப்பினும்‌, இத்திருநாளை அகில திருச்சபையும்‌, அனுசரிப்பதற்குக்‌ கட்டாயமாக்காமல்‌ விட்டது.

            1830ம்‌ வருடம்‌ , அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்கு அற்புதப்பதக்கத்‌தைப்‌ பற்றி அறிவித்த மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகளுக்கும்‌, பாத்திமாவில்‌, 1917ம்‌ வருடம்‌ (மே 13ம்‌ தேதி முகல்‌ அக்டோபர்‌ 13ம்‌ தேதி வரை) மகா பரிசுத்த தேவமாதா, லூசியா, பிரான்சிஸ்கோ, ஐசிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கு அளித்த காட்சிகளுக்கும்‌ பிறகு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி மாபெரும்‌ விதமாக, தீவிரமாக உலகம்‌ முமுவதும்‌ பரவியது! 1917ம்‌ வருடம்‌ ஜூலை 13ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதா, பாத்திமாவில்‌, பூமியின்கீழ்‌ வயிற்றுப்‌ பகுதியிலுள்ள நரகத்தைக்‌ காட்சியில்‌ காண்பித்த பிறகு, அம்மூன்று சிறுவர்களிடம்‌, “நீசப்பாவிகளைக்‌ காப்பாற்றும்படியாக, சர்வேசுரன்‌, உலகத்தில்‌ என்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான பக்தியை ஏற்படுத்த ஆசிக்கின்றார்‌!” என்று அறிவித்தார்கள்‌. ஜெபம்‌, ஜெபமாலை, தபம்‌, பரிகாரம்‌, ஆண்டவருக்கும்‌ தேவமாதாவிற்கும்‌ எதிராக மனிதர்கள்‌ கட்டிக்கொள்கிற பாவாக்கிரமங்களுக்கும்‌, நிந்தைகளுக்கும்‌, அவசங்கைகளுக்கும்‌ பரிகாரம்‌ செய்ய  வேண்டும்‌ என்பதே, பாத்திமா காட்சிகளுடைய செய்திகளின்‌ சாராம்சமாகும்‌.



            1942ம்‌ வருடம்‌, பாத்திமா காட்சிகளின்‌ 25ம்‌ வருடாந்திர தினத்தில்‌, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, உலகத்தை மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணம்‌ செய்தார்‌. அதே வருடத்தில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திருஇருதயத்தின்‌ திருநாளாகக்‌ கொண்டாடுவதற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மோட்சாரோபனத் திருநாளுடைய எட்டாம்‌ நாளாகிய ஆகஸ்டு 22ம்‌ தேதியைத்‌ தேர்ந்தெடுத்தார்‌. 1944ம்‌ வருடம்‌, மே 4ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளை ஆகஸ்டு மாதம்‌ 22ம்‌ தேதியன்று வருடந்தோறும்‌, அகில உலகத்‌ திருச்சபையும்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌.

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயமே! எங்கள்‌ இரட்‌சணியமாயிரும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக