Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

lives of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lives of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 31 - அர்ச். இராபர்ட் பெல்லார்மின் (St. Robert Bellarmine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣3️⃣ம் தேதி

🌹வேதபாரகரும் கர்தினாலுமான அர்ச். இராபர்ட் பெல்லார்மின் திருநாள்🌹


Feast day          13 May (General Roman Calendar, 1932–1969)

Venerated in   Catholic Church

Title as Saint   Confessor and Doctor of the Church

Beatified           13 May 1923 Rome, Kingdom of Italy by Pius XI

Canonized       29 June 1930 Rome, Vatican City by Pius XI



🌹இவர் இத்தாலியின் டஸ்கனி யிலுள்ள மோந்தெபுல்சியானோவில் , 1542ம் வருடம் பிறந்தார்; இவருடைய தாயார், சினிசியா செர்வினி என்பவர், 2ம் மர்செல்லுஸ் பாப்பரசரின் சகோதரியாவார்.

இவர் சிறுவனாயிருந்தபோது, இத்தாலி யிலும், இலத்தீனிலும் அநேகக் கவிதை கள் எழுதினார்; இவர் எழுதிய பாடல் களில் ஒன்று, அர்ச். மரிய மதலேனம் மாள் பற்றிய பாடல், இது உரோமன் கட்டளை ஜெபப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இவர் சேசுசபை மடத்தில் 18வது வயதில் சேர்ந்தார்; 28வது வயதில், 1570ம் வருடம், குருப்பட்டம் பெற்றார்; புராட்டஸ்டன்டு பதிதர்களின் தாக்குதல் களுக்கு ஏற்ப திருச்சபையின் வேத சத்தியங்களின் விளக்க நூல்களை முறைப்படி தயாரித்து பரப்பினார்;  மிக நெருக்கமாகச் சென்று, புராட்டஸ்டன்டு பதிதங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வை நடத்தினார்; 1592ம் வருடம்,இவர், உரோமன் கல்லூரியின் அதிபரானார்; 1598ம் வருடம், மேற்றிராணிமார்களின் பரிசோதகரானார்; 1599ம் வருடம் கர்தினாலானார். உடனே, 8ம் கிளமென்ட் பாப்பரசர், இவரை தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார்; ஜியோடானோ புரூனோ என்ற பதிதனை, அவன் கடைசி வரை பதிதத்தப்பறையிலேயே மூர்க்கனாய் நிலைத் திருந்ததால்,  நெருப்பில் எரிக்கும்படியான தீர்ப்பிற்கு இவர் ஒப்புதல் அளித்தார்; 

1616ம் வருடம், 5ம் சின்னப்பரின் கட்டளைகளின்பேரில், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், கலிலேயோவை, கோபர்நிகன் தப்பறையைக் கைவிடும்படி கூறினார்; கலிலேயோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். 

இராபர்ட் பெல்லார்மின் தனது முதிர்ந்த வயதில், மோந்தேபுல்சியானோ வில் மேற்றிராணியாராக நான்குவருட காலம் அலுவல்புரிந்தார்; அதன்பின், உரோமையிலுள்ள அர்ச்.பெலவேந்திரர் சேசு சபைக் கல்லூரியில் இளைப்பாறி ஓய்வெடுக்கும்படி  தங்கியிருந்தார்; இங்கு, 1621ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதியன்று, 78வது வயதில், அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் பாக்கியமாய் மரித்தார்.🌹✝


🌹அர்ச்.இராபர்ட் பெல்லார்மினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


செவ்வாய், 7 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 28 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ் (St. Stanislaus - May 7)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 0️⃣7️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் திருநாள்🌹




🌹இவர் போலநது நாட்டில், ஸெப்பானோவ் என்ற நகரில் 1030ம் வருடம் பிறந்தார். துவக்கக் கல்வியை போலந்து நாட்டில் கற்றபிறகு, பாரீஸ் நகரில் உயர்கல்வியை முடித்து, குருப்பட்டம் பெற்றார். கிராகோ நகர மேற்றிராணியார் 1072ம் வருடம் இறந்த பிறகு, அர்ச்.ஸ்தனிஸ்லாஸை ஒரு மனதாக அந்நகரின் அடுத்த மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுத்தனர்.  அச்சமயம் அப்பதவியை இவர் மறுத்து வந்தார்;  அப்போது பாப்பரசராக இருந்த 2ம் அலெக்சாண்டரின் நேரடிக் கட்டளை வந்தபிறகே, மேற்றிராணியார் பதவியை அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் ஏற்றுக் கொண்டார்.

போலந்து நாட்டின் அரசனான 2ம்போலஸ்லாசுடன் இவருக்கு ஏற்பட்ட முதல் முரண்பாடு, ஒரு நிலத்தகராறின்போது, துவங்கியது. மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் தனது மேற்றிராசனத்திற்காக விஸ்டுலா நதியின் கரையில் லுப்லின் நகருக்கு அருகில் பியோடர் என்பவரிடமிருந்து, சிறிதளவு நிலத்தை வாங்கியிருந்தார். பியோடர் இறந்தபிறகு, அந்த நிலத்தை அவருடைய குடும்பத்தினர் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தனர். இதில், அரசன், மேற்றிராணியாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினான். 

இதற்குத் தேவையான சாட்சியை, அதாவது, தான் நிலத்தை வாங்கிய பியோடரையேக் கூட்டி வருவதற்கு, அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் அரசனிடம் மூன்று நாள் அவகாசம் கேட்டார்! உடனே, இறந்தவனைக் கூட்டி வருவதாக, மேற்றிராணியார் கேட்கும் இந்த அபத்தமான விண்ணப்பத்தின் பேரில், அரசனும், அவனுடைய அவையிலிருந்தவர்களும் கேலி செய்து நகைத்தனர்; இருப்பினும், அரசன் அதற்கு சம்மதித்து மூன்று நாள் அவகாசம் கொடுத்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், பியோடருக்கு மறுபடியும் உயிர் கொடுத்து, போலஸ்லாஸ் அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். அதைக்கண்ட அரசனும் அவனுடைய அவையிலிருந்தவர்களும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயினர்! பியோடர், தன் மூன்று மகன்களையும் கடிந்து கொண்டார்; பின் அரசனிடம், பியோடர், மேற்றிராணியார் உண்மையாகவே தன் நிலத்தைத் தன்னிடமிருந்து,, விலைக்கு வாங்கியிருந்தார், என்ற வாக்குமூலத்தை அளித்தார். அரசனும் வேறுவழியில்லாமல், மேற்றிராணியாருக்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தான். பின் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், தேவ உதவியால், புதுமையாக கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தன்னுடன் கூட்டி வந்திருந்த, பியோடரிடம் இன்னும் கொஞ்சம் காலம் உயிருடனிருப்பதற்கு ஆசையிருந்தால், வாழலாம், என்று கூறினார். பியோடர், “ஆண்டகையே! வேண்டாம்! என்னை திரும்பவும் கல்லறையிலேயே விட்டு விடுங்கள்”  என்று கூறினார். அதன்படி, அவரை கல்லறைக் குழியினுள் கிடத்தியவுடன், அவருடைய சரீரம், மறுபடியும் எலும்புக்கூடாக மாறியது; கல்லறையில் மறுபடியும் அவரை அடக்கம் செய்தனர்.

அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், அரசனுடைய ஒழுக்கக் கேட்டைக் குறித்து, அவனைக் கண்டித்து, திருச்சபை விலக்கம் செய்தபோது, மிகப் பெரிய முக்கியமான முரண்பாடு அரசனுடன் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அரசன் மூர்க்க வெறிகொண்டவனாக, தனது காவலர்களை, மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸை கொல்வதற்காக, அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள், அர்ச்சிஷ்டவரைத் தொடுவதற்கு துணியாமலிருந்தனர். இதைக் கண்ட அரசன் தனது சொந்த கரங்களினாலே, அர்ச்சிஷ்டவரைக் கொன்றான். 1079ம் வரும் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் திவ்யபலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அரசன் அவரை நெருங்கிச் சென்று, தன் வாளால் அவருடைய தலையை வெட்டிக் கொன்றான். கிராகோ நகர மேற்றிராணியாரான அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் இவ்விதமாக மகிமைமிகு வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

போலஸ்லாஸ் அரசன், செய்த இக்கொலை, போலந்து நாடுமுழுவுதும், அவனுக்கு எதிராகக் கலகம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று: அதனால், அவன் அரசபதவியிலிருந்து அகற்றப்பட்டான். நாட்டு மக்களிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹங்கேரி நாட்டில் தஞ்சம் அடைந்தான்.  இவனுக்குப் பிறகு, இவனுடைய சகோதரன் முதலாம் விலாடிஸ்லாஸ் ஹெர்மன் போலந்து நாட்டின் அரச பதவியிலமர்ந்தான். அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், 4ம் இன்னசென்ட் பாப்பரசரால், அசிசி நகரில், 1253ம் வருடம் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார். 🌹✝


🌹அர்ச்.ஸ்தனிஸ்லாஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



--


🇻🇦

May 0️⃣7️⃣


Martyrdom 🌟🌹

ST. STANISLAUS

Stanislaus was born in AD 1030 at Szczepanów, in Poland. After initial studies in Poland, he completed his education in Paris, and was ordained a priest.

When the bishop of Cracow died in 1072, Stanislaus was unanimously elected as his successor, but accepted the office only at the explicit command of Pope Alexander II.

The first conflict of Bishop Stanislaus with King Bolesław of Poland was over a land dispute. The Bishop had purchased for the diocese a piece of land on the banks of the Vistula River near Lublin from a man named Piotr, but after Piotr's death the land had been claimed by his family. The king gave the verdict against Stanislaus.

Bishop Stanislaus asked the King for three days to produce his witness, Piotr himself. The King and his court laughed at the absurd request, but granted Stanislaus the three days.

After 3 days Stanislaus brought Piotr back to life & brought him  before King Bolesław. The dumbfounded court heard Piotr reprimand his three sons and testify that Stanislaus had indeed paid for the land. Unable to give any other verdict, the King dismissed the suit against Bishop Stanislaus.

A more substantial conflict with King Bolesław arose after Stanislaus criticized the King for his immorality &  excommunicated him.

King Bolesław was furious and sent his guards to kill Bishop Stanislaus, but when the guards didn't dare to touch the Bishop, the King killed him with his own hands by striking Stanislaus on the head with a sword while Mass was being celebrated in the year 1079.

The murder stirred outrage throughout Poland and led to the dethronement of King Bolesław II, who had to seek refuge in Hungary and was succeeded by his brother, Władysław I Herman.

St. Stanislaus was canonized in 1253 by Pope Innocent IV at Assisi.





🔵




திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள் (STE. CATHERINE DE BOLOGNE.)

மார்ச் மாதம் 11-ந் தேதி.
பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள்
STE. CATHERINE DE BOLOGNE.


பிறப்பு :  8 September 1413
இடம்    :  Bologna, Italy
இறப்பு :  9 March 1463 (aged 49)
இடம்     :  Bologna, Italy

Beatified
1524, Old St. Peter's Basilica by Pope Clement VII

Canonized
22 May 1712, St. Peter's Basilica by Pope Clement XI

Feast
9 March
இத்தாலி இராச்சியத்தில் பொலொஞா என்னும் பட்டணத்திலே உயர்ந்த கோத்திரத்தில் நல்ல கிறீஸ்துவர்களாகிய தாய் தகப்பனிடம் அர்ச். கத்தரீனம்மாள் பிறந்தாள். அச்சமயத்தில் தூரமான பட்டணத்திலிருந்த அவளுடைய தகப்பனாருக்குத் தேவமாதா தரிசனையாகி, அன்று அவனுக்குப் பிறக்கும் மகள் திருச்சபைக்குப் பிரகாசமாயிருப்பாளென்று அவனுக்கு அறிவித்தாள். தாய் தகப்பன் சொன்ன புத்தியை கேட்டுக் கத்தரீனம்மாள் சிறுவயது துவக்கிப் புத்திச் சுறுசுறுப்போடே புண்ணிய வழியிலே நடந்தாள். புத்தி விவரம் அறிந்த மாத்திரத்தில் அவள் பெற்றோர் பிரபுவின் மனைவியிடம் வளர வைக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கு ஒன்பது வயதானபோது அரண்மனையின் மகிமை வாழ்வையும் உலகத்தையும் வெறுத்துச் சில பக்தப் பெண்களோடு கன்னியாகத் தன்னைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். பின்னும் அர்ச். கிளாரம்மாள் கன்னியாஸ்திரி சபையில் உட்பட்டாள். அதிலே பத்தி, தேவசிநேகம், பிறசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலான புண்ணியங்களால் உச்சிதமான விதமாய் விளங்கினாள். எல்லாருக்கும் ஊழியம் பண்ணத் தேடுவாள். அதிக தாழ்மையுள்ள அலுவல்களையும், எளிமையான வஸ்திரங்களையுஞ் சந்தோஷமாய் தனக்குத் தெரிந்து கொள்வாள். ஆயினுந் தேவ சித்தத்தால் மடத்து முதலாளியானாள். கர்த்தர் அவளுக்குத் தீர்க்கதரிசன வரம் முதலான சில விசேஷ தயை செய்தருளினார். ஆயினும் ஓர் சமயத்தில் அவள் தன்னிடத்திலே வெகு புண்ணி யங்கள் இருப்பதைக் கண்டு கர்வம் கொண்டு பேசினதால் அதற்கு அபராதமாக ஐந்து வருஷம் அவளுக்கு வெகு துக்கம் வருகிறதற்குச் சர்வேசுரன் சித்தமானாரென்று அவள் தான் இயற்றிய புத்தகத்திலே எழுதி வைத்தாள். அந்தத் துக்கத்தின் மிகுதிக்குத் தன் பாவங்கள் காரணமென்று அவள் நினைத்து அதை மிகப் பொறுமையோடே அனுபவித்தாள்.

அந்தப் புண்ணியவதி தேவநற்கருணையின் பேரிலே வைத்த பத்தியினாலே அதின் பேரில் அவள் தியானம் பண்ணும்போது சந்தோஷத்தினால் அழுவாள். அவள் பூசை காண்கிறபோது மிகுந்த தாழ்ச்சி பத்தியாயிருந்ததினால் ஒரு பூசையிலே சம்மனசுகள் பாடுகிற திருப்பாடல்கள் புதுமையாக அவளுக்குக் கேட்கப்பட் டது. கர்த்தர் பிறந்த திருநாள் இரவில் அந்தம்மாள் தியானத்திலிருந்தபோது தேவமாதா குழந்தை சேசு நாதரை ஏந்தின வண்ணம் அவளுக்குத் தரிசனையாகி அந்தத் திவ்விய குழந்தையை அவள் கையிற் கொடுத்தாள். அந்தத் திவ்விய குழந்தையை வாங்கி அணைத்து முத்தி செய்தபோது எத்தனை சந்தோஷத்தை அனுபவித்தாலென்று சொல்லக்கூடாது.

 அர்ச். பிரான் சீஸ்கென்பவரும் அவளுக்கு இரண்டு விசை தரிசனையானார். அந்தப் புண்ணியவதி ஐம்பது வயது வரை தரும வழியிலே நடந்த பிறகு, 1463-ம் வருஷம் மார்ச் மாதம் 9-ம் தேதி காலம்பண்ணி மோட்ச பாக்கியத்தை அடைந்தாள்.

 கிறீஸ்துவர்களே! அர்ச். கத்தரீனம்மாள் தன் வாயினாலே கட்டிக்கொண்ட அற்ப குற்றத்திற்கு ஐந்து வருஷம் வெகு துக்க துயரத்தை நல்ல மனதோடே அனுபவித்தாள். தம்பீ ! வாயினாலும், மனதினாலும், கிரியையினாலும் நீ கட்டிக்கொண்ட பெரிய பாவங்களுக்கு அபராதமாகக் கொஞ்ச நாளாகிலும் கொஞ்ச மாதமென்கிலும் அனுபவிக்க வேண்டிய கஸ்தி பொல்லாப்புகளைப் பொறுமையோடே அனுபவிக்க வேண்டாமோ? அவைகளைப் பொறுக்க மனதில்லாமல் சர்வேசுரன் பேரிலே நீ முறையிட இடமுண்டோ? உனக்கு வருகிற கஸ்திக்கு நீ செய்த பாவங்கள் காரணமென்று இந்த அர்ச். கத்தரீனம்மாளைப் போல அடிக்கடி நினைத்தால் அந்தம்மாளுடைய பொறுமைக்கொப்ப நீயும் பொறுமை அடைவாயே இதல்லாமல் உன்னிடத்திலே அநேகம் நன்மையிருந்தாலும் அதினாலே உன்னையே புகழ்ந்து பேச வேண்டாம். ஏனெனில் உன்னிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் ஆண்டவருடைய உதவியினால் அல்லவோ வந்தன. சுவாமி உன்னைக் கைவிட்டால் நீ பாவங்கள் நிறைந்தவனாய் இருப்பதல்லாமல் அற்ப புண்ணியமாகிலுஞ் செய்ய மாட்டாய். உன்னிடத்திலுள்ள நன்மைகளுக்குள்ளே ஒரு நன்மையாகிலும் அவரிடத்திலிருந்து வாங்காத நன்மையுண்டோ? நன்மைகளெல்லாம் ஆண்டவராலே நீ கைக்கொண்டிருக்கையிலே அந்த நன்மைகள் முகாந்தரமாக நீ உன்னைக் கொண்டாடலாமோவென்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் திருவுளம்பற்றினதை நன்றாய் யோசித்துத் தாழ்ச்சியாய் இருக்கக்கடவாய். ஒரு சுரூபத்திற்கு உயிர் வந்து அது தன்னிடத்திலுள்ள பொற்பூச்சு முதலான சித்திர வர்ணங்களைக் கண்டு, தன்னைக் கொண்டாடுகிறதைச் சித்திரக்காரன் கேட்பானேயாகில், நான் இந்த வர்ணமெல்லாம் உனக்குக் கொடுத்திருக்கையில் நீ என்னை நினையாமல் உன்னைக் கொண்டாடலாமோ வென்று சொல்லுவது நியாயந்தானல்லவோ ? அவ்வாறே உன்னிடத்திலிருக்கிற நன்மையைக் குறித்து யோசிக்கவேண்டும். அர்ச். கத்தரீனம்மாள் மிக விசுவாசத்தோடேயும் பத்தியோடேயுந் திவ்விய பூசை கண்டதினால் சம்மனசுகளுடைய திருப்பாட்டுகளைப் புதுமையாகக் கேட்பதற்குப் பாத்திரமானாள். பராக்காயிருந்து அநேகங் குறையோடே பூசை காண்கிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும். பெரிய வெள்ளிக்கிழமையிலே சேசுநாதர் கபால மலையிலே மரணத்தை அடைந்தபோது நீங்கள் அங்கே இருந்திருப்பீர்களேயாகில், பராக்கில்லாமல் மிக உருக்கத்தோடேயும் பத்தியோடேயும் இரத்தஞ் சிந்தின அந்தப் பலிபூசையைக் காண்பீர்களல்லவோ? உங்களுக்கு மெய்யாகவே விசுவாசமிருந்தால், இரத்தஞ் சிந்தாத இந்தப் பலிபூசையைக் காண்கிறபோது அவ்வாறே இருக்கவேண்டும். அதேனென்றால், அந்தப் பலியிலே பிதாவாகிய சர்வேசுரனுக்கு நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சேசுநாதர் தாமே இந்தப் பூசைபலியிலும் பிதாவுக்குக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறார். ஆதலால் பூசைகாண்கிற பாக்கியம் உங்களுக்கு எத்தனைமுறை அகப்படுமோ அத்தனை முறையும் நீங்கள் உயிருள்ள விசுவாசத்தோடும் பத்தியோடும் பூசை காணவேண்டும். தேவமாதா அர்ச். கத்தரீனம்மாள் கையிலே தமது திவ்விய குழந்தையாகிய சேசுநாதரைக் கொடுத்தபோது அந்தம்மாள் மிகுந்த பாக்கியத்தை அடைந்தாள். அப்படிக்கொத்த பாக்கியத்திற்கு நீங்கள் பங்காளிகளாயிருக்க வேண்டுமானால் நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கவேண்டும். அதன் வழியாகச் சேசுநாதர் உங்கள் இருதயத்திலே வருவாரென்பதினாலே அதைவிட மேலான பாக்கியங் கிடையாதென்று உணர்வோம்.

 விவரம்:- இந்த அர்ச்சியசிஷ்டையுடைய திருச்சரீரம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அவள் மரித்து அநேக வருஷத்திற்குப் பிறகும் அது இன்னும் உயிராய் இருப்பதுபோல் தோன்றுவதுமன்றி உஷ்ணமுள்ளதுமாயிருந்தது.

சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.