Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

August 29 - அர்ச். ஸ்நாபக அருளப்பர் தலைவெட்டுண்டு வேதசாட்சியாக மரித்தத் திருநாள்

 

ஆகஸ்டு 2️9️ம் தேதி

அர்ச். ஸ்நாபக அருளப்பர் தலைவெட்டுண்டு வேதசாட்சியாக மரித்தத் திருநாள்

 

சர்வேசுரன் தமது திவ்ய குமாரனுடைய வழியை ஆயத்தம் செய்யும்படியாக, அர்ச். ஸ்நாபக அருளப்பரைத் தேர்ந்தெடுத்தார். வனாந்தரத்தில், ஏகாந்த தியான ஜீவியம் ஜீவிக்கும்படியாக திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரால் அர்ச். ஸ்நாபக அருளப்பர் வழிநடத்தப்பட்டார். அர்ச். ஸ்நாபக அருளப்பர் தனது 30வது வயதில், திவ்ய இரட்சகரான நமதாண்டவருடைய வருகைக்காக ஆயத்தம் செய்யவேண்டிய தமது உன்னதமான அப்போஸ்தல அலுவலைத் துவக்கினார். “திபேரியூ என்னும் செசாருடைய  இராஜ்ஜியபாரத்தின்  பதினைந்தாம் வருடத்திலே.... வனாந்தரத்திலே சக்கரியாஸ் குமாரனான அருளப்பருக்கு ஆண்டவருடைய வாக்கியம் உண்டாயிற்று!அப்பொழுது, அவர் யோர்தான் நதிக்கடுத்த  நாடெங்கும் வந்து, இசையாஸ் தீ்ர்க்கதரிசியின் வாக்கியாகமத்தில் எழுதியிருக்கிற பிரகாரம், பாவ விமோசனத்துக்காகத் தவத்தின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தார்(லூக் 3:1-3). அருளப்பர், தமக்குப்பின்வருபவராகிய, திவ்ய சேசுநாதர்சுவாமியை விசுவசிக்க வேண்டுமென்று, ஜனங்களுக்குச் சொல்லி, அவர்களுக்கு தவத்தின் ஞானஸ்நானம் கொடுத்தார்( அப் .நட 19:4).

மகா உன்னத சர்வேசுரனுடைய  உண்மையான கட்டியக்காரராக, அறிவிப்பாளராகத் திகழ்ந்தார்; இவருடைய குரலொலி, தேவ நீதித்தீர்ப்பின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படி, உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் அழைக்கிற பரலோகத்தின் எக்காளத்தின் ஒலியைப்போல், ஒலித்தது! இவர், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தினார்: வரவிருக்கிற திவ்ய இரட்சகர் மூலமாக அவர்களுக்கு அருளப்படவிருக்கிற தேவ இரக்கத்தினுடைய ஞான பலன்களை அறுவடை செய்து பயன்படுத்தும்படியாக, தங்களையே ஆயத்தம் செய்யும்படி, சகல மனிதர்களுக்கும் அறிவுரைப் புகட்டினார்.

ஏரோதுவின் மகனான அந்திப்பாஸ் ஏரோதுவாக  கலிலேயாவின் சிற்றரசனாக, உரோமை சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஆட்சி செய்த காலத்தில், இவன், தன் மனைவியான ஃபாஸேலிஸ் என்பவளை விவாகரத்து செய்து விட்டு, உயிருடனிருந்த தன் சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் வைப்பாட்டியாகக் கொண்டிருந்தான்; அவளை, ஏரோதியாளாக ஏற்படுத்தியிருந்தான்; இது யூத மதச்சட்டத்திற்கு விரோதமான காாரியமாகவும், பெரிய கனமானப் பாவமாகவுமிருந்தது.  ஆகவே தான், அர்ச். ஸ்நாபக அருளப்பர், பரிசுத்த தைரியத்துடன், ஏரோது அந்திப்பாஸையும் அவனுடைய வைப்பாட்டியையும்  கண்டித்தார். இது விபச்சாரம் என்கிற பெரிய பாவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள், என்றும், நாட்டிற்கேத் துர்மாதிரிகையைக் காண்பிக்கிறீர்கள், என்றும், கூறி, அவர்கள் இருவரையும் கண்டித்தார். மோக பாவத்தினாலும், கோபத்தினாலும், ஆட்கொள்ளப்பட்டவனாக, அந்திப்பாஸ், மக்கேருஸ் மலைக்கோட்டைச் சிறையில், அர்ச். ஸ்நாபக அருளப்பரை அடைத்தான்.

ஒரு வருட காலத்திற்குப் பிறகு, கலிலேய உயர்குடி மக்களுக்கு அந்திப்பாஸ் ஒரு விருந்து அளித்தான்;  ஏரோது பிலிப்புவின் மகளான சலோமை நடனமாடி, அந்திப்பாஸை மகிழ்வித்தாள். முட்டாள்தனமாக, அந்திப்பாஸ் அவளிடம், எதைக்கேட்டாலும், தன் இராஜ்ஜியத்தில் பாதியைக்கேட்டாலும் தருவதாகக் கூறினான்.  சலோமை தன் தாயிடம் எதைக் கேட்கலாம் என்று கேட்டபோது, அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்! என்று கூறினாள். காட்டுமிராண்டித்தனமானதும் அரக்கத்தனமானதுமான இந்த விருப்பத்தின் வேண்டுகோளைக்  கேட்டு, கொடுங்கோலனான அந்திப்பாஸே, முதலில் அதிர்ந்து போனான். மனித முகஸ்துதி, மனித மரியாதையினால் மேற்கொள்ளப்பட்டவனாக, ஒரு வீரனை அனுப்பி, அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய தலையை வெட்டிக் கொண்டு வரச் செய்தான்.

இவ்விதமாக, நமது திவ்ய இரட்சகரின் மகா உன்னதமான முன்னோடியான  அர்ச். ஸ்நாபக அருளப்பர், கி.பி.31ம் வருடம், ஆண்டவருடைய பகிரங்க ஜீவியத்தின் இரண்டாம் வருடத்தில், நமதாண்டவருடைய பரிசுத்த சிலுவை மரணத்திற்கு ஒரு வருட காலத்திற்கு முன்பாக வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்த சரீரத்தை, அவருடைய சீடர்கள் பூஜிதமாக, செபாஸ்டே என்ற இடத்தில் அடக்கம் செய்தனர். ஆனால், அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்தத் தலையை, ஏரோதியாள், ஒரு சாணக்குவியலில் புதைத்து வைத்தாள்!; ஏரோதுவின் ஊழியக்காரரின் மனைவியான அர்ச். ஜோவன்னா, இரகசியமாக அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்தத்தலையை  எடுத்து ஒலிவ மரங்களின் மலையில், பூஜிதமாக அடக்கம் செய்தாள். இங்கு பல நூற்றாண்டுகள் காலமாக மறைந்திருந்தது!  பின்னர், அர்ச். ஸ்நாபக அருளப்பர் தாமே, காட்சியளித்து இந்த இடத்தை வெளிப்படுத்தினார்.  பாரம்பரியத்தின்படி, சுவிசேஷகரான அர்ச். லூக்காஸ், செபாஸ்டே என்ற இடத்திற்குச் சென்று, நமதாண்டவருக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் அளித்த அர்ச். ஸ்நாபக அருளப்பரின் பரிசுத்த வலது கரத்தை, ஒரு பரிசுத்த அருளிக்கமாகத் தன் சொந்த ஊரான அந்தியோக்குவிற்குக் கொண்டு சென்று, அங்குள்ள தேவாலயத்தில் பூஜிதமாக  ஸ்தாபித்தார். அந்நாளிலிருந்து, அங்கே, ஏராளமான புதுமைகள் நிகழலாயின!

அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய பரிசுத்தத் மண்டைஓடு, உரோமிலுள்ள காபிடெவிலுள்ள சான் சில்வஸ்ட்ரோ என்ற தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! அர்ச்சிஷ்டவரின் பரிசுத்த மண்டை ஓட்டின் முகப்பகுதி எலும்பும், கீழ்த்தாடை எலும்பும், பிரான்சிலுள்ள ஏமியன்ஸ் கதீட்ரலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

அர்ச். ஸ்நாபக அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

புதன், 28 ஆகஸ்ட், 2024

August 28, St. Agustine, அர்ச்‌. அகுஸ்தீனார்


 

ஆகஸ்டு 2️8️ம்‌ தேதி

திருச்சபையின்‌ தலைசிறந்த வேதபாரகரும்‌
தந்தையுமான ஹிப்போ நகரின்‌
அர்ச்‌. அகுஸ்தீனார்திருநாள்

 

இவர்‌, 354ம்‌ வருடம்‌,நவம்பர்‌ 13ம்‌ தேதியன்று உரோமையின்‌ ஆப்ரிக்கப்‌ பிராந்தியத்தைச்‌ சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக்‌ ஆஹ்ராஸ்‌)வில்‌ பிறந்தார்‌. அர்ச்‌.மோனிக்கம்மாள்‌, இவருடைய தாயார்‌. ஆனால்‌, இவருடைய தந்தையார்‌, ஒரு அஞ்ஞானியாக இருந்தார்‌; அர்ச்‌.மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபத்தின்‌ பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக மனந்திரும்பி பாக்கியமாய்‌ மரித்தார்‌. கத்தோலிக்க வேத விசுவாசத்தில்‌ வளர்க்கப்பட்டபோதிலும்‌, முதல்‌ சில நூற்றாண்டுகளில்‌, வாலிப வயதை அடைந்ததும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றுக் கொள்ளும்‌ வழக்கம்‌ திருச்சபையில்‌ அனுசரிக்கப்பட்‌டதால்‌, அகுஸ்தீனார்‌, சிறு வயதில்‌,ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளவில்லை.

அர்ச்‌. மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும்‌, உயரிய இலட்சியங்களையும்‌,பிரகாசமுள்ள திறமைகளையும்‌, அதே சமயம்‌, மூர்க்கமான ஆசாபாச உணர்‌வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அநேக வருடங்கள்‌, தீமைகளும்‌, போலியான பதித நம்பிக்கைகளும்‌ நிறைந்த ஜீவியம்‌ ஜீவித்து வந்தார்‌. இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும்‌ அறிவுத்திறனும்‌, ஞானமும்‌ உடையவராயிருந்த மனிதர்களில்‌ ஒருவராகத் திகழ்ந்த  போதிலும்‌, அசுத்த பாவங்களும்‌, ஆங்காரமும்‌, அகுஸ்தினாரின்‌ மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்‌ செய்ததென்றால்‌, சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால்‌ பார்க்கக்‌ கூடாமல்‌, அல்லது புரிந்துகொள்ளக்‌ கூடாமற்போயிற்று!  இருப்பினும்‌, இவர்‌ இலத்தீன்‌ மொழியில்‌, எவ்வளவு உயரிய  தேர்ச்சியை அடைந்தாரென்றால்‌, வாய்ச்சாலகமாக அம்மொழியைப்‌ பேசுவதிலும்‌, தனது கருத்தைத்‌ தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்‌தனமாக வாதிடுவதிலும்‌ நிபுணத்துவம்‌ பெற்றிருந்தார்‌.

தத்துவ இயலில்‌ தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்‌; இலக்கியத்தையும்‌, இலக்கணத்தையும்‌ , தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும்‌, கார்த்தேஜிலும்‌ 9 வருட காலமாகக்‌ கற்றுக்கொடுத்து வந்தார்‌. இவருடைய வயதின்‌ கடைசி இருபதுகளில்‌, ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்‌, வேலை தேட ஆரம்பித்தார்‌. இதே சமயம்‌, இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச்‌. மோனிக்கம்மாள்‌, இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல்‌ ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்‌; இவரைப்‌ பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும்‌ சென்றார்கள்‌. உரோமாபுரியில்‌ அகுஸ்தினார்‌ வளமையடைந்தார்‌; அணியிலக்கணத்தின்‌ துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்‌. மிலான்‌ நகர மேற்றிராணியாரான அர்ச்‌. அம்புரோசியாரை, அகுஸ்தீனார்‌ சந்தித்தார்‌; இவர்‌ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்‌, திருச்சபையின்‌ ஞானமுள்ள பதில்களை, அர்ச்‌. அம்புரோசியார்‌ அளித்தார்‌. அப்போது தான்‌,கிறீஸ்துவ வேதம்‌,தத்துவ இயல்‌ வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம்‌, என்பதை அகுஸ்தீனார்‌ கண்டறிந்தார்‌.

ஆனால்‌, இவர்‌ தனது துர்ப்‌ பழக்கங்களின்‌ சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்‌; அதற்‌கான தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார்‌. உடனடியாக, அகுஸ்தீனாரால்‌ கிறீஸ்துவராக மாறக்‌ கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால்‌ ஒருபோதும்‌ ஜீவிக்க முடியாது, என்று , இவர்‌, நினைத்திருந்தார்‌. இருப்பினும்‌ ஒருநாள்‌, அர்ச்‌. வனத்து அந்தோணியாரின்‌ ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால்‌, இரு மனிதர்கள்‌ கத்தோலிக்கர்களாக மாறினர்‌, என்பதைக்‌ கேள்விப்‌பட்டதும்‌, இவர்‌ தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்‌; இவர்‌ தன்‌ நண்பரான அலிபியுஸ்‌ என்பவரிடம்‌, “நாம்‌ என்ன செய்து கொண்டிருக்கிறோம்‌? கல்வியறிவில்லாக மனிதர்கள்‌, வலுவந்தமாக பரலோகத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்கின்றனர்‌! அதே சமயம்‌, எல்லாவிதமான அறிவையும்‌ கொண்டிருக்கிற நாம்‌, நம்‌ பாவங்கள்‌ என்கிற சேற்றிலே உருண்டுகொண்டிருக்கும்‌ அளவிற்கு மாபெரும்‌ கோழைகளாக இருக்கிறோம்‌!” என்று கூறினார்‌.

அகுஸ்தீனார்‌, பின்னர்‌, பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச்‌. சின்னப்பரின்‌ நிரூபங்களை ஒரு புதிய ஒளியில்‌ வாசித்தார்‌; ஒரு நீண்‌டதும்‌ கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்‌ இதைப்‌ பின்தொடர்ந்து வந்தது! ஆனால்‌, தேவ வரப்பிரசாதத்தின்‌ உதவியால்‌, உள்ளரங்க போராட்டத்தை, இவர்‌ வெற்றிகொண்டார்‌. அர்ச்‌. மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபங்களாலும்‌, அர்ச்‌. அம்புரோசியாரின்‌ ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும்‌, கத்தோலிக்க வேதம்‌ மட்டுமே உண்மையான வேதம்‌ என்பதைத் தெளிந்தமனதுடன்‌, 386ம்‌ வருடம்‌, அகுஸ்தீனார்‌, கண்டறிந்தார்‌; 387ம்‌ வருடம்‌ ஈஸ்டர்‌ திருநாளன்று, அர்ச்‌. அம்புரோசியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம்‌ அளித்தார்‌.  இவர்‌ ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்தார்‌; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்‌; அங்கே,395ம்‌ வருடம்‌, மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌. அடுத்த 35 வருட காலத்தில்‌, இவர்‌ அயராமல்‌ திருச்சபைக்காக உழைத்தார்‌;

 வடஆப்ரிக்கா, திருச்சபையின்‌ மையமாக உருமாறியது! இவருடைய ஞான ஜீவியம்‌ உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்‌சமயத்தில், இவர், ‌ திருச்சபையில்‌ நிலவிய சகல பதிதத்‌ தப்பறைகளையும்‌, எதிர்ப்பதிலும்‌, தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்‌, பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும்‌, முன்னோடியான ஞானமும்‌ வலிமையுமிக்க வேகபாரகராகத்‌ திகழ்ந்தார்‌; அநேகக்‌ காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும்‌, நூல்களும்‌, உலகெங்கிலும்‌ ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும்‌, வேத இயல்‌ ஊகங்களுடையவும்‌ முக்கிய ஆதாரமாகப்‌ பயன்படுத்துப்படுகின்றன!

அர்ச்‌.அகுஸ்தீனார்‌ காய்ச்சலினால்‌, 430ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 28ம்‌ தேதியன்று, 76வது வயதில்‌, மரித்தார்‌. இந்நேரத்தில்‌, ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. 8ம்‌ நூற்றாண்டில்‌, ஹிப்போ நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை, லொம்பார்டு நாட்டின்‌ அரசரான லுட்பிராண்டு என்பவர்‌, இத்தாலியாவிலுள்ள பாவியாவில்‌ ஸ்தாபித்தார்‌; அதற்காக பெருந்தொகையை, அவர்‌ மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!                                 

அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ பிரபல்யமான காட்சி

St. Agustine and the Child (Angel)


ஒரு சமயம்‌, அர்ச்‌.அகுஸ்தினார்‌, கடற்கரையோரத்தில்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய பரம இரகசியத்தைப்‌ பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்‌ ஒருசிறு குழந்தை ‌ விளையாடிக்கொண்டிருப்பதைக்‌ கவனித்தார்‌: அது தன்‌ கையிலிருந்த ஒரு சிறு ஓட்டிற்குள்‌ கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள்‌ ஊற்றிக்கொண்டிருந்தது; இதைத்‌ தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “நீ என்ன செய்கிறாய்‌?” என்று கேட்டார்‌; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்‌ இந்த குழிக்குள்‌ விட்டு, கடலைக்‌ கட்டாந்தரையாக்கப்‌ போகிறேன்‌!” என்று கூறியது. உடனே, அக்குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “குழந்தையே! உன்‌ ஜீவியகாலமெல்லாம்‌ இந்த வேலையில்‌ நீ ஈடுபட்டாலும்‌, உன்னால்‌, இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்‌; அதற்கு, அந்த குழந்தை, “இருப்பினும்‌, நீங்கள்‌ உங்களுடைய மனதில்‌ தியானிக்கிற அந்த மகா பரம இரகசியத்தைப்‌ பற்றி நீங்கள்‌ புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான்‌ இதை செய்து முடிப்பேன்‌!” என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ பரம இரகசியத்தைப்‌ பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான்‌ எடுத்து வந்த பயனற்ற முயற்சிகள்‌ பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்‌ உருவில்‌ தன்னிடம்‌, சர்வேசுரன்‌ தாமே அனுப்பியிருக்கிறார்‌, என்பதைக்‌ கண்டுணர்ந்தார்‌.

மாபெரும்‌ திருச்சபையின்‌ வேதபாரகரும்‌ தந்தையுமான அர்ச்‌.அகுஸ்‌ தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

Download St. Augustine Books for Free
 Click Here to download

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

August 27 - St. Joseph Calasanctius

 

ஆகஸ்டு 2️7️ம்‌ தேதி 

ஸ்துதியரும்‌ பியாரிஸ்ட்‌ துறவற சபை ஸ்தாபகருமான

அர்ச்‌.  கலசாங்சியுஸ்சூசையப்பர்திருநாள்‌.

 


இவர்‌ ஸ்பெயினிலுள்ள ஆரகன்‌ என்ற நாட்டில்‌, 1556ம்‌ வருடம்‌,ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தார்‌. உத்தமமான கத்தோலிக்கக்‌ கல்வியை இவருடைய பெற்றோர்கள்‌ இவருக்கு அளித்தனர்‌; இவர்‌ 5வது வயதில்‌, மற்ற சிறுவர்களைக்‌ கூட்டிக்கொண்டு, தெருக்கள்‌ வழியாக பசாசைக்‌ கண்டுபிடித்து அதை வெட்டிக் கொல்வதற்காக, பவனியாகச்‌ சென்று எல்லா இடங்களிலும்‌ பசாசைக்‌ தேடிப்பார்த்தார்‌. இவர்‌ 27வது வயதில்‌ குருப்பட்டம்‌ பெற்றார்‌;பங்கு குருவாகி, பங்கின்‌ ஞான அலுவல்களில்‌ ஈடுபட்டிருந்தார்‌. 1592ம்‌ வருடம்‌, “ஜோசப்‌! ரோமாபுரிக்குச்‌ செல்‌!” என்கிற ஒரு குரலொலி , ஒரு பரலோகக்‌ காட்சியின்போது இவருக்குக்‌ கேட்டது. அக்காட்சியில்‌, இவரால்‌ கற்பிக்கப்‌ பட்ட அநேக சிறுவர்களைக்‌ கண்டார்‌; அவர்களுடன்‌ சம்மனசுகளின்‌ கூட்டத்தையும்‌ கண்டார்‌.

இவர்‌, பரிசுத்த நகரமான உரோமாபுரியை அடைந்ததும்‌, அந்நகரிலிருந்த ஏழை சிறுவர்களின்‌ தீயொழுக்கமும்‌, அறியாமையும்‌ இவருடைய கனிவான இருதயத்தைப்‌ பெரிதும்‌ பாதித்தது! அறியாமையானது, இவர்களுடைய தீயொழுக்கத்தினுடையவும்‌, துன்ப துயரத்தினுடையவும்‌ காரணமாயிருக்கிறது என்பதை, இவர்‌ தெளிவாகக்‌ கண்டார்‌. இச்சூழ்நிலைக்கு, ஞாயிற்றுக்கிழமை ஞான உபதேச வகுப்புகள்‌ ஒரு போதுமான மாற்றுமருந்தாக, ஒரு தீர்வாக, இருக்காது! என்பதையும்‌ உணர்ந்தார்‌. அக்காலக்கட்டத்தில்‌ நடைமுறையிலிருந்த கட்டமைப்பின்படி, எந்த அமைப்பினுடைய ஒத்துழைப்பும்‌ கிடைக்காத சூழலில்‌, ஐரோப்பாவில்‌, முதல்‌ இலவச பள்ளிக்கூட நிறுவனத்தை ஸ்தாபித்தார்‌. இவருடன்‌ இன்னும்‌ இரண்டு குருக்கள்‌ சேர்ந்தனர்‌. பள்ளிக்கூடத்தில்‌ விரைவில்‌, 1200 பிள்ளைகள்‌ சேர்ந்தனர்‌; இதற்கு பொதுமக்களின்‌ பேராதரவுகிடைத்‌தது!

பின்னர்‌, பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ குருக்கள்‌ துறவற சபையை ஸ்தாபித்தார்‌; இப்போது இது, பியாரிஸ்ட்ஸ்‌ துறவற சபை என்று அழைக்கப்படுகிறது. கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல்‌ என்கிற மூன்று வார்த்தைப்பாடுகளுடன்‌ கூட, ஏழைகளுக்கு ஞான உபதேசக்‌ கல்வியை அளிப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்கிற வார்த்‌ தைப்பாட்டையும்‌ இத்துறவியர்‌ எடுத்தனர்‌. 8ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌ இத்துறவற சபைக்கு, அதிகாரபூர்வமாக அங்கீகாரம்‌ அளித்தார்‌. இத்துறவற சபை மிகத்துரிதமாக பரவி வளர்ந்தது; ஆனால்‌ அதே சமயம்‌, இவருக்கு எதிரிகள்‌ தோன்றினர்‌; அதுவும்‌ இவருடைய துறவற சபையில்,‌ இவருக்குக்‌ கீழ்‌ இருந்தவர்களே, இவருக்கு எதிராக பாப்பரசரின்‌ பரிசுத்த பீடத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ முறையீடு செய்தனர்‌: இவருடைய 86வது வயதில்‌, கைது செய்யப்பட்டு, உரோமைத்‌ தெருக்கள்‌ வழியாக சிறைக்கு நடத்திச்‌ செல்லப்பட்டார்‌. இந்த சிலுவையை ஆண்டவர்‌ மீது கொண்டிருந்த சிநேகத்திற்காக, இவர்‌ அமைதியுடனும்‌ பொறுமையுடனும்‌ ஏற்று அனுபவித்தார்‌. இதன்‌ காரணமாக, இவருடைய துறவற சபை,ஒரு மேற்றிராசனத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்படும்‌ ஒரு சிறிய துறவற சபையாகக்‌ குறைக்கப்பட்டது.

அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌ மரித்தபிறகே, இத்துறவற சபை முந்தின சலுகைகளைப்‌ பெற்று, திருச்சபையெங்கிலும்‌ ஸ்தாபிப்பதற்கான அனுமதியைப்‌ பெற்றது! இருப்பினும்‌, இவர்‌, “என்னுடைய இந்த அலுவல்‌, சர்வேசுரனுடைய சிநேகத்திற்காக மட்டுமே, துவக்கப்பட்டது!” என்று கூறியபடி, முழு நம்பிக்கையுடன்‌ பாக்கியமாய்‌, மரித்தார்‌. இவர்‌ தான்‌,பொதுமக்களின்‌ பிள்ளைகளுக்கு இலவசமான கல்வியை முதன்‌ முதலில்‌ அளித்தவர்‌. அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌, 1647ம்‌ வருடம்‌ 92வது வயதில்‌ மரித்தார்‌. இவர்‌ இறந்து 8 வருடங்களுக்குப்‌ பிறகு, 7ம்‌ அலெக்சாண்டர்‌ பாப்பரசர்,‌ பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ மேல்‌ சுமத்தப்பட்டிருந்க அவப்‌பெயரை நீக்கி, அப்பள்ளிக்கூடங்கள்‌ மறுபடியும்‌ திறக்கப்பட அனுமதித்தார்‌.

1748ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 7ம்‌ தேதியன்று, 14ம்‌ ஆசீர்வாதப்‌பரால்‌ இவருக்கு முத்திப்‌ பேறு பட்டமும்‌, 1767ம்‌ வருடம்‌, ஜூலை 16ம்‌ தேதியன்று, 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசரால்‌ அர்ச்சிஷ்டப்பட்‌டமும்‌ அளிக்கப்பட்டது. உரோமாபுரியிலுள்ள பியாரிஸ்ட்‌ துறவற சபை மடத்தின்‌ சிற்றாலயத்தில்‌, புதுமையாக அழியாமலிருக்கும்‌ இவருடைய பரிசுத்த இருதயமும்‌, பரிசுத்த நாவும்‌ அருளிக்‌கங்களாக பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1948ம்‌  வருடம்‌, ஆகஸ்டு 13ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்‌பரசர்‌, இவரை அகில உலகக்‌ கிறீஸ்துவப்‌ பொதுப்‌ பள்ளிக்‌ கூடங்களுக்குப்‌ பாதுகாவலர்‌ என்று பிரகடனம்‌ செய்தார்‌.

“சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்வதில்‌ நீ, உன்‌ சொந்த வசதியைத்‌ தேடுவாயாகில்‌, நீ சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்யாமல்‌, உனக்குத்‌ தானே ஊழியம்‌ செய்கிறாய்‌!” 📚 🏻+ அர்ச்‌. கலசாங்கியுஸ்‌ சூசையப்பர்‌

 ஸ்துதியரான அர்ச்‌.  கலசாங்சியுஸ்‌ சூசையப்பரே! எங்களுக்காக வேண்‌ டிக்கொள்ளும்‌!

Saints Quotes of the Day in Tamil

 

“சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்வதில்‌ நீ, உன்‌ சொந்த வசதியைத்‌ தேடுவாயாகில்‌, நீ சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்யாமல்‌, உனக்குத்‌ தானே ஊழியம்‌ செய்கிறாய்‌!” 📚 🏻+ அர்ச்‌. கலசாங்கியுஸ்‌ சூசையப்பர்‌



"If in serving God you seek your own convenience, you are not serving God but yourself !"


📚 ✍🏻+ St. Joseph Calasanctius


திங்கள், 26 ஆகஸ்ட், 2024

August 26 - ST. ZEPHYRINUS - அர்ச்‌. ஸெஃப்ரினுஸ்

 ஆகஸ்டு 2️6️ம்தேதி

வேதசாட்சியும்பாப்பரசருமான
 அர்ச்‌. ஸெஃப்ரினுஸ்திருநாள்

 

உரோமை நகரவாசியான இவர்‌, கி.பி.199ம்வருடம்‌, திருச்சபையின்‌ 15வது பாப்பரசராக, முதலாம்விக்டர்பாப்பரசர்மரித்தபிறகு, பதவியேற்றார்‌. இவருடைய ஆட்சிகாலத்தில்‌,திருச்சபை மிகக்கடுமையான துன்ப உபத்திரவங்களுக்கு ஆளானது! 202ம்வருடம்‌, செப்டிமுஸ்செவேருஸ்என்ற கொடுங்கோலனான உரோமைச்சக்கரவர்த்தி ஆண்டபோது, திருச்சபைக்கு எதிரான மாபெரும்இரத்தக்களரியான 5வது துன்ப உபத்திரவக் காலத்தை கிறீஸ்துவர்களுக்கு எதிராக நிகழ்த்தினான்‌! இது, 9 வருடகாலமாக, இவனுடைய மரணம்வரை, 211ம்வருடம்வரை நீடித்திருந்தது.

இக்கொடிய துன்ப உபத்திரவக்காலம்முடியும்வரை, பாப்பரசர்தனது மந்தையை வழிநடத்தும்படியாக, ஒளிந்திருந்தார்‌; துன்ப உபத்திரவத்தில்அலைக்கழிக்கப்பட்டிருந்த நமதாண்டவரின்சீடர்களான கிறீஸ்துவர்களுக்கு ஆறுதலையும்தேற்றரவையும்அளித்து வந்தார்‌. அச்சமயம்திருச்சபையில்ஜீவித்த ஸ்துதியர்களான குருக்கள்துறவியரைப்போலவே, இவரும்உத்தமமான பிறர் சிநேகத்தினிமித்தமாகவும்துன்புறுகிற கிறீஸ்துவர்கள்மேல்கொண்ட இரக்கத்தினிமித்தமாகவும்‌, அதிக துன்பப்பட்டார்‌. வேதவிசுவாசத்திற்காக தங்கள்உயிரைக்கையளித்து மகிமையான வேதசாட்சிய வெற்றியின்கிரீடத்தை அடைந்த வேதசாட்சிகள்மெய்யாகவே இவருக்கு ஆனந்த சந்தோஷத்தை அளித்தனர்‌; ஆனால்‌, அதே சமயம்‌, வேத விசுவாசத்தில்உறுதியாக இல்லாமல்‌, விசுவாசத்தை மறுதலித்தவர்களாலும்‌, பதிதர்களாலும்‌, ஏற்பட்ட மிக ஆழமான அநேகக்காயங்களால்‌, இப்பரிசுத்தப்பாப்பரசர்மிகவும்துன்புற்றார்‌. திருச்சபையில்சமாதான காலம்திரும்ப வந்த போது, இப்பதிதம்தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது!

தெர்துல்லியன்என்ற கிறீஸ்துவ வேதசாஸ்திரி, ஒரு பதிதத் தப்பறையில்வீழ்ந்ததைக்கண்டு, இப்பரிசுத்த பாப்பரசர்பெரிதும்வேதனையடைந்தார்‌. இருப்பினும்‌, தியோடோசியன்பதிதத்தைத்தழுவியிருந்த மேற்றிராணியாரான நாட்டாலிஸ்என்பவரை மனந்திருப்பும்படியாக, சர்வேசுரன்தாமே, மிகக்கண்டிப்பான திருத்தலினுடைய துன்பத்தை அனுப்பினார்‌; அதன்காரணமாக, தன்பதிதத்தப்பறையை நன்குணர்ந்தவராக, கண்கள்திறக்கப்பட்டவராக, நாட்டாலிஸ்‌, உத்தமமான மனஸ்தாபத்துடன்‌, கிறீஸ்துவின்பிரதிநிதியான பாப்பரசரிடம்வந்து முழங்காலிலிருந்து, திருச்சபைக்கு எதிராகத்தான்செய்த கிளர்ச்சிக்காக மன்னிப்பு கேட்டார்‌.

மனந்திரும்பி உத்தம கத்தோலிக்க மேற்றிராணியாரானர்‌. இக்காரியம்பாப்பரசருக்கு ஆறுதலாக இருந்தது! யுசேபியுஸ்என்ற சரித்திர ஆசிரியர்‌, இப்பரிசுத்த பாப்பரசர்‌, பதிதர்களுடைய தேவதூஷணங்களுக்கு எதிராக அயராமல்எவ்வளவு அதிக ஆர்வத்துடன்உழைத்தாரென்றால்‌, இந்த பதிதர்கள்இவரை, உச்சக்கட்ட கோபத்துடன்‌, வெறுத்தார்கள்‌. இவருடைய மகிமையாக, இந்த பதிதர்கள்தாமே, கிறீஸ்துநாதருடைய தேவத்துவத்தின்முதன்மையான பாதுகாவலர்‌, என்று இப்பரிசுத்த பாப்பரசரை, அழைத்தனர்‌. இப்பாப்பரசர்‌, 19 வருட காலம்திருச்சபையை ஆண்டு நடத்தினார்‌; பாஸ்கு திருநாளாம்நமதாண்டவரின்மகிமைமிகு உயிர்ப்பு திருநாளன்று, எல்லா விசுவாசிகளும்திவ்ய நன்மை உட்கொள்ளவேண்டும்என்பதைக்கட்டாயமாக்கினார்‌. 217ம்வருடம்ஸெஃப்ரினுஸ்பாப்பரசர்வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌: இவருடைய சொந்தக்கல்லறையிலேயே ஆகஸ்டு 26ம்தேதி அடக்கம்செய்யப்பட்டார்‌.

தியோடோசியன்பதிதம்என்றால்என்ன? நமதாண்டவரான திவ்ய சேசுநாதர்சுவாமி, யோர்தான்நதியில்ஞானஸ்நானம்பெறும்வரை சாதாரண மனிதராயிருந்தார்என்றும்‌, அதன்பின்னரே, அவர்கிறீஸ்துநாதராக மாறினார்என்றும்தப்பறையானக்கருத்துக்களை, தியோடோசியன்பதிதர்கள்பரப்பி வந்தனர்‌. 190ம்வருடம்தோன்றிய இப்பதிதத்தப்பறை, 4ம்நூற்றாண்டில்முற்றிலுமாக அழிந்தது!

வேதசாட்சியான அர்ச்‌.  ஸெஃப்ரினுஸ்பாப்பரசரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 

August 25 - St. Louis - அர்ச்‌. லூயிஸ்‌

 

 

ஆகஸ்டு 2️5️ம்தேதி

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசர்திருநாள்

 

 விசுவாசத்திலும்‌, தைரியத்திலும்‌, நீதியினிமித்தம்கொண்டிருந்த சிநேகத்திலும்‌ , தன்னிகறற்றவராக சகல அரசர்களுக்கும்நன்மாதிரி கையாக, உத்தம கத்தோலிக்க அரசராக திகழ்ந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, “பூமியின்சர்வேசுரனுடைய இராணுவப்படைகளின்தளபதிஎன்று அழைக்கப்பட்டார்‌. பிரான்ஸ்நாட்டின்சரித்திரத்தில்‌, இவரை விட பெரிய அரசர்இல்லை. இவர்தமது சாம்ராஜ்ஜியமான பிரான்ஸ்நாட்டை, 9ம்லூயிஸ்அரசராக, மிகுந்த சமாதானத்துடனும்‌, நீதியுடனும்‌, 44 வரு டங்கள்‌, ஆட்சி செய்து வந்தார்‌; இவர்தமது அரசாட்சியில்‌, மூன்று முக்கியமான காரியங்களை கடைபிடித்தார்‌: முதலில்சர்வேசுரன்மீது தேவ பயமும்‌, தேவபக்தியும்கொண்டிருப்பது: இரண்டாவதாக, சுயக்கட்டுப்பாடு, மூன்றாவதாக தனது குடிமக்கள்மீது உத்தமமான சிநேகமும்பாசமும்கொண்டிருப்பது! இவர்தனது ஆத்தும இரட்சணியத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்‌; அதைவிட, தனது குடிமக்களின்ஆத்தும இரட்சணியத்தின்மீது, அதிக அக்கறையுடன்செயல்பட்டார்‌; இதையே, இவர்தனது அதிமிக முக்கிய தலையாயக்கடமையாகக்கருதினார்‌.

அர்ச்‌. 9ம்லூயிஸ்அரசர்‌ 1214ம்வருடம்‌, ஏப்ரல்‌ 25ம்தேதி, பாரீஸுக்கு அருகிலுள்ள பாய்ஸ்ஸி என்ற இடத்தில்பிறந்தார்‌. இவருக்கு, 12 வயதானபோது, 1226ம்  வருடம்‌, நவம்பர்‌ 8ம்தேதியன்று, இவருடைய தந்தை இறந்தார்‌; அடுத்த ஒரு மாதத்திற்குள்இவரையே, இவருடைய 12வது வயதிலேயே, பிரான்ஸ்நாட்டின்அரசராக, ரீம்ஸ்கதீட்ரலில்முடி சூட்டினர்‌. இவர்சிறுவனாயிருந்ததால்‌, இவருடைய தாயாரான பிளாஞ்ச்மகாராணி, இவருக்கு நாட்டை ஆட்சி செய்வதில்உதவி புரிந்தார்கள்‌. கத்தோலிக்க உத்தமதனத்தில்சிறந்து விளங்கிய புண்ணியவதியான இந்த நல்ல தாயார்‌, சிறு வயதினரான தன்மகன்லூயிசிடம்‌, “மகனே! நீ ஒரு சாவான பாவத்தைக்கட்டிக்கொள்வதை விட, என்காலடியில்நீ இறந்து போவதைப்பார்க்கவே ஆசிக்கிறேன்‌!” என்று கூறினார்கள்‌; தன்தாயின்இப்பொன்மொழியை, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, தன்வாழ்நாளெல்லாம்நினைவு கூர்ந்து, உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க அரச ராகக்திகழ்ந்தார்‌; இதுவே, இந்த நல்ல அரசரை, ஒரு அர்ச்சிஷ்டவ ராகும்படிச்செய்தது!  உத்தம கத்தோலிக்க புண்ணியவாளர்களான தாயும்‌, மகனும்பிரான்ஸ்நாட்டை ஆட்சி செய்த ஓராண்டு காலத்திற்குள்ளாக, கத்தோலிக்கப்படை ஒரு விசேஷ தேவ ஆசீர்வாதத்தினால்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை அழித்து ஒழித்தது! இவர்பிறப்பதற்கு முன்பாக, பிரான்ஸ்நாட்டில்பரவியிருந்த ஆல்பிஜென்சியப்பதிகத்தை அழிப்பதற்காக, அந்நாட்டிற்கு வந்த அர்ச்‌.  சாமிநாதர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிடமிருந்து மகா பரிசுத்த ஜெபமாலையைப்பெற்று, ஜெபமாலையின்மீதான பக்தியை பரப்பி வந்தார்‌; ஜெபமாலையை ஜெபிக்கும்விதத்தையும்கற்றுக்கொடுத்தார்‌;

அச்சமயம்‌, அரசியான பிளாஞ்சம்மாள்‌, 12 வருட காலமாக குழந்தையில்லாமலிருந்ததால்‌, அவர்களிடம்‌, அர்ச்‌. சாமிநாதர்‌, ஜெபமாலையை பக்திபற்றுதலுடன், இடை விடாமல்தொடர்ந்து, ‌ ஜெபிக்கும்படி, அறிவுறுத்தினார்‌; அதன்படியே, மகாராணி, ஜெபமாலை ஜெபித்து வந்ததன்பயனாக, குழந்தை பிறந்தது; அதற்கு பிலிப்என்று பெயரிட்டனர்‌; ஆனால்அது இறந்துபோனது; புண்ணியவதியான பிளாஞ்ச்சம்மாள்‌, இன்னும்கூடுதல்பக்திபற்றுதலுடன்ஜெபமாலையை ஜெபித்து வந்ததுடன்‌, அரண்மனையிலிருந்த சகலருக்கும்‌,குடிமக்களுக்கும்‌, ஜெபமாலையை வினியோகித்து, எவ்லோரையும்‌ , தனக்குக்குழந்தை பிறப்பதற்காக ஜெபமாலையை ஜெபிக்கத்தூண்டி வந்தார்கள்‌. நாடு  முமுவதும்ஜெபமாலை ஜெபித்து வேண்டிக்கொண்டபிறகு, பிறந்த குழந்தை தான்‌ , இந்த உன்னத கத்தோலிக்க அரசரான அர்ச்.லூயிஸ்அரசர்‌!  அரசாட்சியின்அலுவல்கள்மத்தியில்‌, இளம்அரசரான லூயிஸ்‌,  கட்டளை ஜெபத்தைத்தவறாமல்‌, ஜெபித்து வந்தார்‌.

தினமும்இருமுறை திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்கண்டு வந்தார்‌. இந்நாட்டிலிருக்கும்மகிமைமிக்க மாபெரும்தேவாலயங்கள்‌, இப்பொழுதும்கூட, இந்த அர்ச்சிஷ்ட அரசர்  கொண்டிருந்த பக்திபற்றுதலின்உன்னதமான நினைவுச்சின்னங்களாகத்திகழ்கின்றன! இவற்றினுள்பாரீஸ் நகரின்மகா பரிசுத்த தேவமாதாவின் கதீட்ரலிலுள்ள அழகிய செயிண்ட் சேப்பல்  சிற்றாலயம்தன்னிகரற்றவிதமாகக்திகழ்கிறது; இந்த தேவாலயத்தில்‌, இவர்பரிசுத்த பூமியிலிருந்து கொண்டு வந்த ஆண்டவருடைய பரிசுத்த முண்முடி, மாபெரும்அருளிக்கமாக, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! கிறீஸ்துவ உன்னத புண்ணியங்களால்தூண்டப்பட்டவிதமாகவே, அர்ச்‌. லூயிஸ்அரசருடைய சகல அரச அலுவல்களும்திகழ்ந்தன! தேவதூஷணத்தையும்‌ , சூதாட்டத்தையும்‌, கடன்கொடுத்து வட்டி வாங்குபவர்களையும்‌, விபச்சாரத்தையும்தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றத்தீர்மானித்தார்‌. 9ம்கிரகோரி பாப்பரசரின்வலியுறுத்தலின்படி, 1243ம்வருடம்‌, தால்முட்என்ற யூதவேதபுத்தகத்தின்‌ 12000 கையெழுத்துப்பிரதிகள்பாரீஸ்நகரில்பகிரங்கமாக நெருப்பினால்சுட்டெரிக்கப்பட்டன! கத்தோலிக்கராக மனந்திரும்பிய நிக்கோலாஸ் டோனின்என்ற ஒரு யூதர்‌, இந்த தால்முட்என்ற யூத வேதபுத்தகத்தை மொழிபெயர்த்திருந்தார்‌; இப்புத்தகத்தில்நமதாண்டவருக்கும்‌, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்‌, கிறீஸ்துவ வேதத்திற்கும்எதிராக அடுத்து அடுத்த அத்தியாயங்களில்எழுதப்பட்டிருக்கும்தேவதூஷணங்களைச் சுட்டிக்காண்பித்து, இப்புத்தகத்திற்கு எதிரான 35 குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியிருந்தார்‌. இதன்படி, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, இப்புத்தகத்தைப்பகிரங்கமாக பாரீஸ்நகரில்எரிக்கும்படி கட்டளையிட்டார்‌.

1248ம்வருடம்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்ஏழாவது சிலுவைப்போரை  தலைமையேற்று வழிநடத்திச்சென்றார்‌; ஆண்டவருடைய பரிசுத்த  பூமியை விடுவிக்கும்படியாகவும்‌, பிரான்ஸ்நாட்டினுடைய வீரத்துவம்வாய்ந்த வீரர்களை,ஆண்டவருக்காக தங்கள்ஜீவியத்தை அர்ப்பணித்த வீரர்களை தன்னுடன்சேர்த்துக்கொள்ளும்படியாகவும்‌, இந்த சிலுவைப்போரை அர்ச்‌. லூயிஸ்அரசர்நடத்தினார்‌. கிறீஸ்துவ நாடுக ளுக்குள்ளே அதிக செல்வ திரவியமுடைய நாடான பிரான்ஸ்நாட்டி னுடைய அரசராகவும்‌, மிக அதிக கிறீஸ்துவ மக்களுடைய ஜனத்தொகையையுடைய நாட்டின்அரசராகவும்இவர் திகழ்ந்தார்‌. இந்த சிலுவைப்போரின்போது, அநேக இழப்புகள்நேரிடும்என்பதை நன்கறிந்திருந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, உலக இழப்புகளை விட அதிக விலை மதிப்புள்ள பரலோக வெகுமதிகளும்சம்பாவனைகளையும்அடைய லாம்என்பதையே, எப்போதும்கருத்தில்கொண்டிருந்தார்‌.  1250ம்வருடம்‌, எகிப்தில்‌, மகமதியரால்‌, இவர்கைது செய்யப்பட்டார்‌; டாமியட்டா என்ற இடத்தில்‌, சிறைபிடிக்கப்பட்டார்‌;

அச்சமயம்‌, இவருடைய கூடாரத்தினுள்நுழைந்த ஒரு அராபிய சிற்றரசன்‌, இரத்தம்தோய்ந்த தன்குத்துவாளைக்காண்பித்து, இதோ சுல்தானைக்கொன்றுவிட்டேன்‌; எனக்கு ஒரு மாவீரர்பட்டத்தை அளிக்காவிடில்‌, உம்மையும்கொன்று போடுவேன்‌, என்று கூறி, மிரட்டினான்‌. அதற்கு அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, அவனிடம்அமைதியாக, “ஒரு கிறீஸ்துவ மாவீரர்நிறைவேற்றக்கூடிய எந்த கடமைகளையும்‌, ஒரு அவிசுவாசியால்நிறைவேற்ற முடியாது!” என்று பதிலளித்தார்‌. இவருக்கு சட்டபூர்வமான நிபந்தனைகளின்பேரிலான விடுதலை அளிக்கப்பட்டது; ஆனால்‌, தேவதூஷணத்தைக்கக்கக்கூடிய ஒரு வார்த்தைப்பாட்டை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டார்‌.

அவிசுவாசிகளும்பதிதர்களுமான மகமதியர்கள்‌, வாள்களால்‌, இவருடைய தொண்டையைக்குறிவைத்தபடி, அந்த தேவதூஷணத்தைக்கூறும்படி வற்புறுத்தப்பட்டார்‌; திரளான கிறிஸ்துவ கைதிகளைக்கொல்லப்போவதாகவும்இரக்கமற்ற அந்த சுல்தான்இவரை அச்சுறுத்தினான்‌; இருப்பினும்‌, ஒரு அநிச்சை செயல்போல்‌, எதையும்சிந்திக்காமல்‌, அர்ச்‌.  லூயிஸ்அரசர்‌, தேவதூஷணமான அந்த வார்த்தைப்பாட்டை எடுப்பதற்கு உடனடியாக மறுத்து விட்டார்‌. பணயத்தொகையினால்‌, மீட்கப்பட்டதும்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, எகிப்திலிருந்து, பரிசுத்த பூமிக்குச்சென்றார்‌. நாசரேத்தை அடைந்ததும்‌, இவர்குதிரையிலிருந்து இறங்கினார்அங்கேயே முழங்காலிலிருந்து ஜெபித்தார்‌; பின்னர்‌, அந்நகரத்திற்குள்காலணியில்லாமல்‌, வெறுங்காலில்நடந்து சென்றார்‌. ஆண்டவருடைய பரிசுத்த மனிதவதாரத்தினுடைய பரமஇரகசியமான திருநிகழ்வு நிறைவேறிய இல்லத்திற்குள்‌, நாசரேத்பரிசுத்தத்திருக்குடும்பம்வசித்த இல்லத்திற்குள்‌, வெறுங்காலில்நுழைந்தார்‌. 

1252ம்வருடம்‌, இவருடைய தாயாரும்புண்ணியவதியுமான பிளாஞ்ச்மகாராணியார்இறந்ததால்‌, இவர்மறுபடியும்பிரான்ஸ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல நேரிட்டது. நாட்டின்சூழல்அமைதியடைந்ததும்‌, இவர்மறுபடியும்‌, இரண்டாவது தடவையாக சிலுவைப்போருக்குச்சென்றார்‌; 1270ம்வருடம்தூனிஸில்நிகழ்ந்த சிலுவைப்போரில்‌, மகமதியர்மீது, அர்ச்‌. லூயிஸ்அரசர்வெற்றியடைந்தார்‌. ஆனால்‌, அப்போது ஏற்பட்ட கொள்ளைநோயான விஷக்காய்ச்சல்நோய்க்கு இரையானார்‌. 1270ம்வருடம்‌, ஆகஸ்டு 25ம்தேதியன்று, தனது கூடாரத்தின்படுக்கையினருகில்‌, பக்தி பற்றுதலுடன்முழங்காலிலிருந்தபடி, மகா பரிசுத்த திவ்ய நன்மையை இறுதி தேவ திரவிய அனுமானமாகப்பெற்று உட்கொண்டார்‌. அந்நேரமே, பாக்கியமான மோட்ச பேரின்ப ஆனந்த சந்கோஷத்தினுள்மூழ்கியவராக, பாக்கியமாய்மரித்தார்‌!

 இவ்விதமாக எந்த நித்திய பேரின்ப மகிமை யில்‌, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மற்ற எல்லாவற்றையும்அர்ச்‌. லூயிஸ்அரசர்துறந்தாரோ, அதே நித்திய மோட்சப்பேரின்ப மகிமையை அடைந்தார்‌! 8ம்போனிஃபேஸ்பாப்பரசர்‌, 9ம்‌. லூயிஸ்அரசருக்கு 1297ம்வருடம்அர்ச்சிஷ்டப்பட்டம்அளித்தார்‌. பிரான்ஸ்அரசர்களிலேயே, அர்ச்சிஷ்டப்பட்டம்பெற்ற ஒரே அரசரும்இவரே! விசுவாசப்பிரமாணத்தை ஜெபிக்கும் சமயத்தில், “வார்த்தையானவர்மாமிசமாகிஎன்கிற வேத சத்தியத்தை உச்சரிக்கிறபோது,‌ முழங்காலில்இருந்து மனுவுருவான திவ்ய கர்த்தரை ஆராதித்து வணங்கும்வழக்கத்தை, அர்ச்‌. லூயிஸ்அரசர்தான்‌,முதலில்துவக்கினார்‌.

பின்னர்‌, திருச்சபை, உலகெங்கும்துரிதமாகப்பரவிய இப்பரிசுத்த பழக்கத்தை, திருவழிபாட்டின்விதிமுறையாகச்சேர்த்துக்கொண்டது. ஒருநாள்‌, அரண்மனை சிற்றாலயத்தில்‌, மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர்பாத்திரத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருந்தபோது, அர்ச்‌. லூயிஸ்அரசர்படிப்பறையில்ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, அவருடைய ஊழியர்களில்ஒருவர்‌, விரைந்து ஓடிவந்து, “அரசரே! ஒரு அழகிய புதுமை நம்சிற்றாலயத்தில்நிகழ்ந்து கொண்டிருக்கிறது! மகா பரிசுத்த தேவநற்கருணையில்திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி, காட்சியளித்துக்கொண்டிருக்கின்றார்‌!” என்று கூறினார்‌;அதற்கு, அர்ச்‌. லூயிஸ்‌, அவரிடம்‌, “ஒரு புதுமையை நோக்கிப்பார்த்து தான்‌, மகா பரிசுக்த தேவநற்கருணையில்நமதாண்டவருடைய மெய்யான பிரசன்னத்தை விசுவசிக்க வேண்டுமென்றிருந்தால்‌, நான்இவ்வளவு அதிக உறுதியாக விசுவசித்திருக்கக்கூடாமல்போயிருக்கும்‌! ஏற்கனவே விசுவசிக்கிறவர்களுக்கு புதுமைகள்தேவைப்படுகிறதில்லை!” என்று அமைதியாக பதிலளித்தார்‌. 

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!