Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

August 27 - St. Joseph Calasanctius

 

ஆகஸ்டு 2️7️ம்‌ தேதி 

ஸ்துதியரும்‌ பியாரிஸ்ட்‌ துறவற சபை ஸ்தாபகருமான

அர்ச்‌.  கலசாங்சியுஸ்சூசையப்பர்திருநாள்‌.

 


இவர்‌ ஸ்பெயினிலுள்ள ஆரகன்‌ என்ற நாட்டில்‌, 1556ம்‌ வருடம்‌,ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தார்‌. உத்தமமான கத்தோலிக்கக்‌ கல்வியை இவருடைய பெற்றோர்கள்‌ இவருக்கு அளித்தனர்‌; இவர்‌ 5வது வயதில்‌, மற்ற சிறுவர்களைக்‌ கூட்டிக்கொண்டு, தெருக்கள்‌ வழியாக பசாசைக்‌ கண்டுபிடித்து அதை வெட்டிக் கொல்வதற்காக, பவனியாகச்‌ சென்று எல்லா இடங்களிலும்‌ பசாசைக்‌ தேடிப்பார்த்தார்‌. இவர்‌ 27வது வயதில்‌ குருப்பட்டம்‌ பெற்றார்‌;பங்கு குருவாகி, பங்கின்‌ ஞான அலுவல்களில்‌ ஈடுபட்டிருந்தார்‌. 1592ம்‌ வருடம்‌, “ஜோசப்‌! ரோமாபுரிக்குச்‌ செல்‌!” என்கிற ஒரு குரலொலி , ஒரு பரலோகக்‌ காட்சியின்போது இவருக்குக்‌ கேட்டது. அக்காட்சியில்‌, இவரால்‌ கற்பிக்கப்‌ பட்ட அநேக சிறுவர்களைக்‌ கண்டார்‌; அவர்களுடன்‌ சம்மனசுகளின்‌ கூட்டத்தையும்‌ கண்டார்‌.

இவர்‌, பரிசுத்த நகரமான உரோமாபுரியை அடைந்ததும்‌, அந்நகரிலிருந்த ஏழை சிறுவர்களின்‌ தீயொழுக்கமும்‌, அறியாமையும்‌ இவருடைய கனிவான இருதயத்தைப்‌ பெரிதும்‌ பாதித்தது! அறியாமையானது, இவர்களுடைய தீயொழுக்கத்தினுடையவும்‌, துன்ப துயரத்தினுடையவும்‌ காரணமாயிருக்கிறது என்பதை, இவர்‌ தெளிவாகக்‌ கண்டார்‌. இச்சூழ்நிலைக்கு, ஞாயிற்றுக்கிழமை ஞான உபதேச வகுப்புகள்‌ ஒரு போதுமான மாற்றுமருந்தாக, ஒரு தீர்வாக, இருக்காது! என்பதையும்‌ உணர்ந்தார்‌. அக்காலக்கட்டத்தில்‌ நடைமுறையிலிருந்த கட்டமைப்பின்படி, எந்த அமைப்பினுடைய ஒத்துழைப்பும்‌ கிடைக்காத சூழலில்‌, ஐரோப்பாவில்‌, முதல்‌ இலவச பள்ளிக்கூட நிறுவனத்தை ஸ்தாபித்தார்‌. இவருடன்‌ இன்னும்‌ இரண்டு குருக்கள்‌ சேர்ந்தனர்‌. பள்ளிக்கூடத்தில்‌ விரைவில்‌, 1200 பிள்ளைகள்‌ சேர்ந்தனர்‌; இதற்கு பொதுமக்களின்‌ பேராதரவுகிடைத்‌தது!

பின்னர்‌, பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ குருக்கள்‌ துறவற சபையை ஸ்தாபித்தார்‌; இப்போது இது, பியாரிஸ்ட்ஸ்‌ துறவற சபை என்று அழைக்கப்படுகிறது. கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல்‌ என்கிற மூன்று வார்த்தைப்பாடுகளுடன்‌ கூட, ஏழைகளுக்கு ஞான உபதேசக்‌ கல்வியை அளிப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்கிற வார்த்‌ தைப்பாட்டையும்‌ இத்துறவியர்‌ எடுத்தனர்‌. 8ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌ இத்துறவற சபைக்கு, அதிகாரபூர்வமாக அங்கீகாரம்‌ அளித்தார்‌. இத்துறவற சபை மிகத்துரிதமாக பரவி வளர்ந்தது; ஆனால்‌ அதே சமயம்‌, இவருக்கு எதிரிகள்‌ தோன்றினர்‌; அதுவும்‌ இவருடைய துறவற சபையில்,‌ இவருக்குக்‌ கீழ்‌ இருந்தவர்களே, இவருக்கு எதிராக பாப்பரசரின்‌ பரிசுத்த பீடத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ முறையீடு செய்தனர்‌: இவருடைய 86வது வயதில்‌, கைது செய்யப்பட்டு, உரோமைத்‌ தெருக்கள்‌ வழியாக சிறைக்கு நடத்திச்‌ செல்லப்பட்டார்‌. இந்த சிலுவையை ஆண்டவர்‌ மீது கொண்டிருந்த சிநேகத்திற்காக, இவர்‌ அமைதியுடனும்‌ பொறுமையுடனும்‌ ஏற்று அனுபவித்தார்‌. இதன்‌ காரணமாக, இவருடைய துறவற சபை,ஒரு மேற்றிராசனத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்படும்‌ ஒரு சிறிய துறவற சபையாகக்‌ குறைக்கப்பட்டது.

அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌ மரித்தபிறகே, இத்துறவற சபை முந்தின சலுகைகளைப்‌ பெற்று, திருச்சபையெங்கிலும்‌ ஸ்தாபிப்பதற்கான அனுமதியைப்‌ பெற்றது! இருப்பினும்‌, இவர்‌, “என்னுடைய இந்த அலுவல்‌, சர்வேசுரனுடைய சிநேகத்திற்காக மட்டுமே, துவக்கப்பட்டது!” என்று கூறியபடி, முழு நம்பிக்கையுடன்‌ பாக்கியமாய்‌, மரித்தார்‌. இவர்‌ தான்‌,பொதுமக்களின்‌ பிள்ளைகளுக்கு இலவசமான கல்வியை முதன்‌ முதலில்‌ அளித்தவர்‌. அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌, 1647ம்‌ வருடம்‌ 92வது வயதில்‌ மரித்தார்‌. இவர்‌ இறந்து 8 வருடங்களுக்குப்‌ பிறகு, 7ம்‌ அலெக்சாண்டர்‌ பாப்பரசர்,‌ பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ மேல்‌ சுமத்தப்பட்டிருந்க அவப்‌பெயரை நீக்கி, அப்பள்ளிக்கூடங்கள்‌ மறுபடியும்‌ திறக்கப்பட அனுமதித்தார்‌.

1748ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 7ம்‌ தேதியன்று, 14ம்‌ ஆசீர்வாதப்‌பரால்‌ இவருக்கு முத்திப்‌ பேறு பட்டமும்‌, 1767ம்‌ வருடம்‌, ஜூலை 16ம்‌ தேதியன்று, 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசரால்‌ அர்ச்சிஷ்டப்பட்‌டமும்‌ அளிக்கப்பட்டது. உரோமாபுரியிலுள்ள பியாரிஸ்ட்‌ துறவற சபை மடத்தின்‌ சிற்றாலயத்தில்‌, புதுமையாக அழியாமலிருக்கும்‌ இவருடைய பரிசுத்த இருதயமும்‌, பரிசுத்த நாவும்‌ அருளிக்‌கங்களாக பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1948ம்‌  வருடம்‌, ஆகஸ்டு 13ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்‌பரசர்‌, இவரை அகில உலகக்‌ கிறீஸ்துவப்‌ பொதுப்‌ பள்ளிக்‌ கூடங்களுக்குப்‌ பாதுகாவலர்‌ என்று பிரகடனம்‌ செய்தார்‌.

“சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்வதில்‌ நீ, உன்‌ சொந்த வசதியைத்‌ தேடுவாயாகில்‌, நீ சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்யாமல்‌, உனக்குத்‌ தானே ஊழியம்‌ செய்கிறாய்‌!” 📚 🏻+ அர்ச்‌. கலசாங்கியுஸ்‌ சூசையப்பர்‌

 ஸ்துதியரான அர்ச்‌.  கலசாங்சியுஸ்‌ சூசையப்பரே! எங்களுக்காக வேண்‌ டிக்கொள்ளும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக