Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

August is the Month of Immaculate Heart of Mary - Aug. 2

 

ஆகஸ்டு 02ம் நாள்

அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பர் கூறுவதற்கேற்ப  நமதாண்டவர், தமது ஞான சரீரமாகிய திருச்சபைக்கு தலையாகவும், நாம் அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம். அப்படியென்றால், நாம் கட்டாயமாக, ஆண்டவருடைய இஸ்பிரீத்துவினால், உயிரூட்டப்பட வேண்டும்; அவருடைய ஏவுதல்களை நாம் நிச்சயமாகப் பின்பற்றி ஜீவிக்க வேண்டும்; ஆண்டவர் நடந்து சென்ற பாதையைப் பின்பற்றி நடக்க வேண்டும்! ஆண்டவர் இப்பூமியில் ஜீவித்தபோது அனுசரித்த சகல புண்ணியங்களையும், நாமும் அனுசரிக்க வேண்டும்! மகா பரிசுத்த தேவமாதாவின் மீது நாம் கொண்டிருக்கிற பக்தி, நமதாண்டவர் தாமே, தமது மகா பரிசுத்த மாதாவின் மீது கொண்டிருந்த பக்தியின் தொடர்ச்சியாகக் கட்டாயமாக  இருக்க வேண்டும், என்பதை இதிலிருந்து, நாம் கண்டுணரவேண்டும். பூமியிலிருந்த போது, ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவின் பேரில் கொண்டிருந்ததும், இன்னும் கொண்டிருக்கிறதுமான மேரை மரியாதை யினுடையவும், கையளித்தலினுடை யவும், பற்றுதலினுடையவும் உணர்வுகளால் நாமும் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும் 

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக