Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 7 ஆகஸ்ட், 2024

Aug. 07 - St. Cajetan - அர்ச்‌. கயேத்தான்‌

 ஆகஸ்டு 0️7ம்தேதி 

ஸ்துதியரும்தியேட்டைன்துறவற சபையின்ஸ்தாபகருமான அர்ச்‌.கயேத்தான்திருநாள்

 

 இவர்இத்தாலியிலுள்ள விசென்ஸா என்ற உயர்குடியில்‌ 1480ம்வருடம்‌, அக்டோபர்‌ 1ம்தேதி பிறந்தார்‌. இவருடைய 2வது வயதில்‌, இவருடைய தந்தை இறந்தார்‌.இவர்‌, பதுவா பல்கலைக்கழகத்தில்சட்டக்கல்லூரியில்கல்வி பயின்றார்‌. 24வது வயதில்‌, சமூக சட்டத்துறையிலும்‌, வேத இயல்சட்டத்துறையிலும்முனைவர்பட்டம்பெற்றார்‌; 1506ம்வருடம்முதல்‌, 2ம்ஐூலியஸ்பாப்பரசரிடம்திருச்சபையின்அரசாங்க விவகார அதிகாரியாக, இவர்தன்அலுவலைத்துவக்கினார்‌; வெனிஸ்குடியரசை, பாப்பரசருடன்சமரசம்செய்து கொள்ளச்செய்து, பாப்பரசருடன்நல்லுறவு கொள்ளச்செய்தார்‌. 1513ம்வருடம்‌, 2ம்ஜூலியஸ்பாப்பரசர்இறந்தபிறகு, அர்ச்‌.கயேத்தான்‌, பாப்பரசருடைய அரண்மனையிலிருந்து விலகி வெளியேறினார்‌. இவர்‌ 1516ம்வருடம்குருப்பட்டம்பெற்றார்‌; அடுத்த வருடம்‌, இவருடைய தாயார்இறந்தபிறகு, விசென்ஸாவிற்கு இவர்மறுபடியும்வரவழைக்கப்பட்டார்‌; அங்கு, குணப்படுத்த முடியாத நோயில் பீடிக்கப்பட்டிருந்த வியாதியஸ்தா்களுக்காக, 1522ம்வருடம்‌, ஒரு மருத்துவமனையைக்கட்டினார்‌.

 இவ்விதமாக இவருடைய ஜீவிய காலம்முழுவதையும்நிரப்பியிருந்த உத்தமமான பிறர்சிநேக அலுவல்களின்அத்தாட்சியாக இம்மருத்துவமனை திகழ்கிறது! ஆனால்‌, ஆத்துமங்கள்மீது, இவர்கொண்டிருந்த ஆர்வமானது, அக்காலத்தில்பல்வேறு நிலைகளிலிருந்த குருக்களிடையே நிலவியதும்‌, அவர்களுடைய ஞான ஜீவியத்தின்நோயாக இருந்ததும்‌, அவர்களிடையே தொற்று நோயைப்போல்பரவியிருந்ததுமான அரசியல்ஒழுங்கீனங்களால்‌, மிக ஆழமமான தாக்கத்தையும்‌, உத்வேகத்தையும்கொண்டிருந்தது! முன்னொரு காலத்தில்‌,அர்ச்‌. அகுஸ்தீனார்செய்ததைப்போல, இவரும்‌, தீவிர முனைப்புடன்குருக்களிடையே நிலவிய சீர்கேட்டை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்காக, குருக்களை சீர்திருத்துவதற்காக, ஒரு துறவற குருக்கள்சபையை ஏற்படுத்தினார்‌; இக்குருக்களுடைய ஜீவியம்‌, துறவற மடத்தின்ஜீவியமும்‌, மக்களிடையே குருக்கள்ஆற்ற வேண்டிய ஆன்ம இரட்சணிய அலுவலின்ஜீவியமும்ஒன்றிணைந்த துறவற ஜீவியமாக இருந்தது! இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை என்று அழைக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, 1523ம்வருடம்‌, உரோமாபுரிக்குத்திரும்பி வந்தபோது, இத்துறவற சபையை ஸ்தாபித்தார்‌.

1524ம்வருடம்‌, 7ம்கிளமென்ட்பாப்பரசர்‌, இத்துறவற சபையை அங்கீகரித்து, அதற்கான அனுமதியை அளித்தார்‌. இத்துறவற சபையை ஸ்தாபிப்பதில்‌, அர்ச்‌. கயேத்தானுக்கு உறுதுணையாக இருந்து, உதவிய முதல்நான்கு சகதுறவிகளில்ஒருவர்‌, ஜான்பியத்ரோ கராஃபா, சியட்டியின்மேற்றிராணியாராயிருந்தார்‌. இந்த சியட்டி நகரம்‌, இலத்தீனில்தியேட்டே என்று அழைக்கப்படுகிறது; இம்மேற்றிராணி யார்‌, பின்னாளில்‌ 4ம்சின்னப்பர்பாப்பரசரானார்‌; இருப்பினும்‌, இவர்‌, தியேட்டே மேற்றிராணியாராக இருந்த போது, இத்துறவற சபையின்தலைமை அதிபராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதால்‌, இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை, என்று அழைக்கப்பட்டது. ஒரு சமயம்‌, உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின்பெரிய பசிலிக்கா தேவாலயத்தில்‌, கிறீஸ்துமஸ்திருநாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்திருக்கரங்களிலிருந்து, தேவபாலனான திவ்ய குழந்தை சேசுவை, அர்ச்‌.கயேத்தான்நேரடியாக தன்கரங்களில்பெற்றுக்கொள்கிற மகா உன்னதமான பாக்கியம்‌, பெற்றார்‌. இத்துறவற சபை, மெதுவாக வளர்ந்தது.

1527ம்வருடம்‌, 5ம்சார்லஸ்உரோமையை ஆக்ரமித்து, அதை சூரையாடியபோது, அந்த அரசனுடைய வீரர்கள்‌, அர்ச்‌.கயேத்தானை சித்ரவதை செய்தனர்‌; இவருடைய தியேட்டைன்துறவியர்‌, உரோமையை ஆக்ரமித்த வீரர்களால்‌, அநேக அவசங்கைகளையும்‌, துன்ப உபத்திரவங்களையும்‌ , அனுபவித்தபிறகு, இத்துறவற சபையிலிருந்த 12 துறவியரும்‌, உரோ மையிலிருந்து தப்பி, வெனிஸ்நகருக்குச்சென்றனர்‌. அங்கு, கயேத்தான்‌, அர்ச்‌. ஜெரோம்எமிலியானியை சந்தித்தார்‌. இவருடைய துறவற குருக்கள்சபையை ஸ்தாபிப்பதில்‌, இதற்கு முன்பாக,இவருக்கு அர்ச்‌.கயேத்தான்‌, உதவியிருந்தார்‌. இங்கு ஏழைகளுக்கு உதவுவதற்காக, ஒரு வங்கியை அர்ச்‌.கயேத்தான்‌, நிறுவினார்‌. அச்சமயம்‌, அங்கே, ஏழைகள்‌, கடன்தருகிற பண முதலைகளால்‌, மாபெரும்விதமாக துன்புறுத்தப் பட்டிருந்தனர்‌. இவ்வங்கி, பின்னாளில்‌, நேப்பிள்ஸ்வங்கி என்று அழைக்கப்பட்டது. நேப்பிள்ஸிலும்‌, ஒரு துறவற மடத்தை ஸ்தாபித்து, லூத்தரன்பதித சபையை, அங்கிருந்து விரட்டினார்‌. அர்ச்‌. கயேத்தான்‌, 1547ம்வருடம்‌,ஆகஸ்டு 7ம்தேதியன்று, பாக்கியமாய்மரித்தார்‌. இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள்‌, நேப்பிள்ஸிலிருக்கும்அர்ச்‌.சின்னப்பா்பசிலிக்கா தேவாலயத்தில்‌, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1629ம்வருடம்‌, அக்டோபர்‌ 8ம்தேதியன்று, 8ம்உர்பன்பாப்பரசரால்இவருக்கு முத்திப்பேறு பட்டம்அளிக்கப்பட்டது. 1671ம்வருடம்‌,ஏப்ரல்‌ 12ம்தேதியன்று, 10ம்கிளமென்ட்பாப்பரசரால்‌, இவருக்கு, அர்ச்‌. லீமா ரோசம்மாள்‌, அர்ச்‌. லூயிஸ்பெல்டிரான்‌, அர்ச்‌.பிரான்சிஸ்போர்ஜியா, அர்ச்‌.பிலிப்பெனிசியார்ஆகியோருடன்சேர்த்து, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, அர்ஜென்டீனா நாட்டிற்கும்‌, வேலை தேடுகிறவர்களுக்கும்பாதுகாவலர்‌.

ஸ்துதியரான அர்ச்‌.கயேத்தானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக