Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

July 28 - ST. NAZARIUS & ST. CELSUS, அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்

 ஜூலை 2️8தேதி

 வேதசாட்சிகளான அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்திருநாள்‌. 

              

அர்ச்‌. நசாரியுஸ்‌, பக்திப்பற்றுதலுள்ள  அர்ச்‌.  பெர்பெத்துவம்மா ளினுடைய மகன்உரோமையில்பிறந்தார்‌. இவருடைய தந்தை உரோமை இராணுவத்தின்அதிகாரியாக இருந்தார்‌. அவர்இன்னும்அஞ்ஞானியாக இருந்தார்‌. நசாரியுஸ்‌, 9வது வயதில்கத்தோலிக்க வேதத்தில்சேர்ந்தார்‌. இவருக்கு பின்னாளில்பாப்பரசரான அர்ச்‌. லீனுஸ்ஞானஸ்நானம்கொடுத்தார்‌. இவருடைய அஞ்ஞான தந்தை தன்மகன்நசாரியுஸ்அனுசரித்த உத்தம கத்தோலிக்கப்புண்ணியங்களால்பெரிதும்கவர்ந்திழுக்கப் பட்டார்‌: அதன்காரணமாக ஆண்டவருடைய சுவிசேஷத்தையும்சத்திய கத்தோலிக்க வேதத்தையும்பரப்பும்படி எங்கு வேண்டுமானாலும்செல்வதற்கு அனுமதித்து தன்மகனை அனுப்பி வைத்தார்‌.

நசாரியுஸ்உரோமாபுரிக்கு வெளியே அநேக நகரங்களுக்குச்சென்று கத்தோலிக்க வேதவிசுவாசத்தையும்சுவிசேஷத்தையும்பரப்பி வந்தார்‌. 10 வருடங்களுக்குப்பின்மிலான்நகரை அடைந்தார்‌. ஆனால்அந்நகர ஆளுநன்‌, இவரை சாட்டையால்அடித்து நகரை விட்டு விரட்டி விட்டான்‌. நசாரியுஸ்‌, இத்தாலியை விட்டு வெளியேறி, பிரான்ஸ்நாட்டிற்குச்சென்றார்‌. அங்கு ஒரு பக்தியுள்ள கிறீஸ்துவ பெண்மணி தன்மகனான செல்சுஸ்என்பவரை இவரிடம்கூட்டி வந்தார்கள்‌. தன்மகனுக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பிக்கும்படி  கேட்டுக்கொண்டார்கள்‌.

இவரும்செல்சுஸூக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பித்து அவரை தன்சீடனாக ஆக்கிக்கொண்டார்‌. அநேகர்அங்கு மனந்திரும்பினர்‌: இதைக்கண்ட அந்நகரின்ஆளுநன்நசாரியுஸையும்செல்சுஸையும்கைது செய்தான்‌. சித்ரவதை செய்து கொடுமைப்படுத் தினான். அந்த ஆளுநனின்மனைவி ஒரு கிறீஸ்துவளாயிருந்ததால்தன்கணவனிடம்போராடி மாசற்ற இருவருக்கும்விடுதலை வாங்கித்தந்தாள்‌. இனி கிறீஸ்துவ வேதத்தைப்பிரசங்கிக்கக்கூடாது என்கிற நிபந்தனையின்பேரில்இருவருக்கும்விடுதலை கிடைத்தது.

நசாரியுஸ்தன்சீடனுடன்பிரான்சை விட்டு வெளியேறி  ஆல்ப்ஸ்மலைப்பிரதேசத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும், எம்ப்ருன்என்ற இடம்வரைச் சென்று  சத்திய கத்தோலிக்க வேதத்தைப்போதித்து வந்தார்‌. இங்கு ஒரு சிற்றாலயத்தைக்கட்டினார்‌. பின்னர்ஜெனிவா நகருக்கும்அதன்பின்டிரவெஸுக்கும்சென்றார்‌. டிரவெஸில்நசாரியுஸ்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்‌. தன்குருவைப்பின்பற்றி வந்த செல்சுஸ்தன்குருவுடன்தன்னையும்சிறையில் அடைக்க வேண்டும்என்று கண்ணீர்மல்க ஆசித்தார்‌. அதன்படி அவரும்சிறையிலடைக்கப்பட்டார்‌.

சில நாட்களுக்குப்பின்ஆளுநன்இருவரையும்தன்முன்நிறுத்தும்படி கட்டளையிட்டான்‌. இருவரையும்கொடூரமாக சித்ரவதை செய்து உபத்திரவப்படுத்தினா்‌. இருவரும்மாஜிஸ்திரேட்முன்பாக நிறுத்தப்பட்ட போது பரலோக மகிமையின்மாபெரும்பிரகாசமுள்ள ஒளியினால்இரு அர்ச்சிஷ்டவர்களுடைய முகங்களும்ஒளிர்வதைக்கண்டு கூடியிருந்த மக்கள்எல்லோரும்ஆச்சரியமடைந்தனர்‌! அச்சமயம்அங்கு நிகழ்ந்த அதிசயங்களும்புதுமைகளும்அங்கிருந்த அஞ்ஞான அதிகாரிகளை அச்சமடையச்செய்தன!

உடனே இருவரையும்விடுவித்து. அப்பிரதேசத்திலிருந்து வெளியேறும்படி கூறினர்‌.  இருவரும்மிலான்நகருக்குத்திரும்பி வந்தனர்‌. ஆனால்விரைவிலேயே இங்கேயும்கைது செய்யப்பட்டனர்‌. உரோமையின்அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடவேண்டும்என்று இருவரையும்நிர்ப்பந்தித்தனர்‌. அதற்கு இருவரும்மறுத்ததால்சகல கொடிய உபதக்திரவங்களால்இருவரையும்சித்ரவதை செய்தனர் தேவ பராமரிப்பினால்அந்த கொடிய சித்ரவதைகளிலிருந்து இருவரும்புதுமையாகப்பாதுகாக்கப்பட்டனர்‌. இதைக்கண்ட ஆளுநன்இருவரையும்தலைவெட்டிக்கொல்லும்படி உத்தரவிட்டான்‌.

இதைக்கேட்டு இருவரும்சந்தோஷத்தினால்ஒருவர்ஒருவரை அரவணைத்துக்கொண்டனர்‌. வேதசாட்சிய மகிமையை தங்களுக்கு அளித்தமைக்காகவும்அதற்கான விசேஷ தேவ வரப்பிரசாதத்தை அளித்தமைக்காகவும்இருவரும்முழங்காலிலிருந்து மகிழ்வுடன்சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தினர்‌. இது கி.பி.56ம்வருடம்கொடுங்கோலனான நீரோ உரோமையை ஆண்ட காலத்தில்நிகழ்ந்தது!

 கிறீஸ்துவ உத்தமதனத்தின்பெருந்தன்மையையும்தயாள குணத்தையுமுடைய இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும்தங்களுடைய பரிசுத்த இரத்தத்தை திருச்சபையின்விலைமதியாத பொக்கிஷ திரவியசாலையில்சேர்த்தனர்‌. இருவருடைய பரிசுத்த சரீரங்களும்தனித்தனியாக உரோமை நகருக்கு வெளியே உள்ள ஒரு தோட்டத்தில்அடக்கம்செய்யப்பட்டன.  இந்த கல்லறைகளை, 395ம் வருடம்‌, அர்ச்‌. அம்புரோசியார்‌, கண்டெடுத்து, இருவருடைய பரிசுத்த சரீரங்களையும்‌, தான்அப்போஸ்தலர்களுக்குத்தோத்திரமாக புதிதாகக்கட்டியிருந்த தேவாலயத்தில்பூஜிதமாக அடக்கம்செய்தார்‌.

அச்சமயம்‌, பேய்பிடித்திருந்த ஒரு பெண்புதுமையாக குணமடைந்தாள்‌. இவ்விரு அர்ச்சிஷ்டவர்களின்பரிசுத்த அருளிக் கங்கள்சிலவற்றை நோலாவிலுள்ள அர்ச்‌.  பவுலினுசுக்கு, அர்ச்‌.  அம்புரோசியார்அனுப்பி வைத்தார்‌. அவற்றை  அர்ச்‌. பவுலினுஸ்நோலாவிலுள்ள தேவாலயத்தில்பூஜிதமாக ஸ்தாபித்தார்‌.  அர்ச்‌. நசாரியுஸ்கல்லறையில்அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த தலையும்பரிசுத்த சரீரமும்முழுமையாகப்பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்ணாடி குப்பியினுள்பூஜிதமாக அடைக்கப்பட்டிருக்கிற அர்ச்சிஷ்ட வருடைய பரிசுத்த இரத்தம்புதுமையாக அன்று தான்சிந்தப்பட்டதுபோல்‌,சிவப்பு நிறத்துடனும்நுரை பொங்கியபடியும்காணப்பட்டது!

வேதசாட்சிகளான  அர்ச்‌. நசாரியுஸே!  அர்ச்‌. செல்சுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்‌!



For more please Visit here - https://livesofsaint.blogspot.com/


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக