Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 ஆகஸ்ட், 2024

August 3 - FINDING OF THE BODY OF SAINT STEPHEN

 

ஆகஸ்டு0️3ம்தேதி

முதல்வேதசாட்சியாக மரித்த அர்ச்‌. முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 

                அர்ச்‌. முடியப்பருக்குத்தோத்திரமாக அனுசரிக்கப்படுகிற இந்த 2வது திருநாள்‌, (முதல்திருநாள்‌- அர்ச்‌.முடியப்பா்யூதர்களால்கல்லாலெறிந்து வேதசாட்சியாகக்கொல்லப்பட்ட திருநாள்‌) அவருடைய பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்டபோது, திருச்சபையால்ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச்‌.ஸ்டீஃபன்‌ (அர்ச்‌. முடியப்பர்‌) நமதாண்ட வருக்காக, தனது உயிரை ஒப்புக்கொடுத்து, முதல்வேதசாட்சியானர்‌; கோபவெறிகொண்ட யூதர்களின்கூட்டத்தினால்‌, முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பா்‌, கல்லால்எறிந்து கொல்லப்பட்டதை விவரிக்கும்போது, பரிசுத்த வேதாகமம்‌, இந்நிகழ்வை, “பயபக்தியுள்ள மனிதர்கள்முடியப்பரை எடுத்து அடக்கம்செய்து, அவருக்காக மிகுந்த துக்கம்கொண்டாடினார்கள்!” (அப்‌. நட 8:2) என்று கூறி முடிக்கிறது. ஆனால்,‌ யார்இந்த பயபக்தியுள்ள மனிதர்கள்‌? அர்ச்‌. முடியப்பருடைய விலைமதியாத பரிசுத்த சரீரத்தை எங்கே அடக்கம்செய்தனர்‌? இக்கேள்விகளுக்கான பதில்கள்‌, இந்நிகழ்விற்குப்பின்ஏறக்குறைய 400 வருடங்களுக்குப்பின்னரே வெளிப்படுத்தப்பட்டன!  கி.பி.410ம்வருடம்‌, உரோமாபுரி நகரமானது, வட ஐரோப்பாவிலிருந்து வந்த காட்டுமிராண்டி இனத்தவரால்‌, சூறையாடப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டது! இதைக்கண்ட உரோமை அஞ்ஞானிகள்‌, உரோமா புரிக்கு நேர்ந்த இப்பேரழிவு, கிறீஸ்துவர்கள்செய்த தவறினால்தான்நேர்ந்தது என்றும்‌, உரோமை அஞ்ஞானிகள்வழிபட்டு வந்த விக்கிரகங்களை, கிறீஸ்துவர்கள்மதியாமல்‌, அவமதித்து வந்ததாலேயே, இந்த விக்கிரகங்கள்‌, உரோமை சாம்ராஜ்ஜியத்திற்கு தங்கள்முதுகைத்திருப்பிக்கொண்டன என்றும்‌, அதனாலேயே, இப்பேரழிவு ஏற்பட்டது என்றும்‌, கூறினர்‌. 

கிறீஸ்துவர்களுக்கு எதிராக அஞ்ஞானிகள்பரப்பிவந்த அநீதமானதும்‌, அவதூறானதுமான புறணியை அழித்து ஒழிப்பதற்காக, அதற்கான சரியான தெளிந்த பதிலை அளிப்பதற்காகவும்‌, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, சர்வேசுரனுடைய நகரம்‌, என்கிற மாபெரும்உன்னதமான புத்தகத்தை எழுதினார்‌. கிறீஸ்துவ வேதத்தின்சத்தியத்தையும்‌, உன்னதமான மகிமையையும்வெளிப்படுத்தி, கிறீஸ்துவ வேதத்திற்கு, ஆதரவாகவும்‌, கிறீஸ்துவர்களைப்பாதுகாப் பதற்காகவும்‌, தேவசிநேகத்தாலும்‌, தேவஏவுதலாலும்தூண்டப் பட்டவராக அர்ச்‌.அகுஸ்தீனாரால்‌,  எழுதப்பட்ட இப்புத்தகத்திலுள்ள உண்மைகளால்‌, சகல கிறீஸ்துவர்களும்வெகுவாக ஆறுதலும்சந்தோஷமும்அடைந்தனர்‌. ஆனால்‌, இதைவிட மேலான பரலோக ஆறுதலாக அநேக ஆச்சரியத்திற்குரிய புதுமைகள்நிகழலாயின! ஏனெனில்‌, இச்சமயம்‌, சுபாவத்திற்கு மேற்பட்ட அற்புதங்கள்நிகழலாயின: அநேக அர்ச்சிஷ்டவர்களுடைய பரிசுத்த அருளிக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன!

இவற்றில்ஒன்றாக தான்‌, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த அருளிக்கங்களும்‌, கண்டெடுக்கப்பட்டன! கி.பி.415ம்வருடம்‌, அர்ச்‌. கமாலியேலின்பரிசுத்த ஆத்துமம்‌, சங்‌. லூசியான்என்கிற குருவானவருக்குக்காட்சியளித்து, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்அருளிக்கங்களும்எங்கே கண்டெடுக்கலாம்?‌ என்பதை அறிவித்தார்‌! அர்ச்‌. கமாலியேல்‌, லூசியான்சுவாமியாரை, ஜெருசலேம்மேற்றிராணியாரான வந்‌.அருளப்பர்ஆண்டகையிடம்‌ , ஒரு நூதனமான செய்தியுடன்அனுப்பி வைத்தார்‌. அந்த செய்தி பின்வருமாறு : “நம்கல்லறையில்உள்ளவற்றைச்சாதனங்களாகக்கொண்டு, சர்வேசுரன்‌, தமது தேவ இரக்கத்தின்கதவை, உலகத்திற்குத்திறந்து விடும்படி யாகவும்‌, இந்த அகில உலக துன்ப உபத்திரவத்தின்காலத்தில்‌, தமது மக்கள்மீது இரக்கம்கொள்ளும்படியாகவும்‌, நமது கல்லறையை திறப்பதற்கு துரிதமாக செயல்படுங்கள்‌!” அதன்படி, ஜெருசலேமி லிருந்து 20 மைல்தூரத்திலிருந்த கேப்பர்  கமேலா என்ற இடத்திலிருந்த அர்ச்‌. கமாலியேலுக்குச்சொந்தமான தோட்டத்திலிருந்த அந்த கல்லறை திறக்கப்பட்டபோது, அர்ச்‌.முடியப்பர், அர்ச்‌. கமாலியேல்‌, அர்ச்‌. நிக்கோதேமுஸ்‌, அர்ச்‌. ஆபிபோ ஆகியோருடைய பரிசுத்த அருளிக்கங்கள்கண்டுடடுக்கப்பட்டன!

அர்ச்‌. முடியப்பரின்சவப்பெட்டி திறக்கப்பட்டபோது, பூமி  அதிர்ந்தது! அந்த பெட்டியிலிருந்து, இதுவரை யாரும்அறிந்திராத உன்னதமான இனிய பரலோக நறுமணம்வீசியது! 415ம்வருடம்ஆகஸ்டு 3ம்தேதியன்று, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்அருளிக்கங்களும்கண்டுடடுக்கப்பட்டன! பின்‌, இவை, ஜெருசலே மிலுள்ள தேவாலயத்திற்கு, 415ம்வருடம்‌, டிசம்பர்‌ 26ம்தேதியன்று, இடமாற்றம்செய்யப்பட்டு,பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டன!  ஆகஸ்டு மாதம்‌ 3ம்தேதிக்கான திருச்சபையின்திருவழிபாட்டிற்கான  வாசகத்தில்‌, அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்ட போது, நிகழ்ந்த நிகழ்வைப்பின்வருமாறு வாசிக்கிறோம்‌:

அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்டது! என்கிற செய்தியைக்கேட்டு ஒரு மாபெரும்ஜனக்கூட்டம்திரண்டு வந்தது; அதில்வந்த அநேக வியாதியஸ்தர்களும்‌, அநேக நோய்களால்பலவீனமடைந்தவர்களும்‌, அந்த க்ஷண நேரத்திலேயே, புதுமையாகத்தங்கள்நோய்களிலிருந்து, பரிபூணமாகக்குணமடைந்தனர்‌. இவற்றிற்குப்பிறகு, அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்மாபெரும்ஆடம்பரத்துடனும்‌, மகிமையுடனும்சீயோன்நகரின்பரிசுத்த தேவாலயத்திற்குக்கொண்டுச்செல்லப்பட்டது! ஆச்சரியத்திற்குரிய இவ்வதிசயங்கள்கிறீஸ்துவ நாடுகளிலெல்லாம்தொடர்ந்து நிகழலாயின! அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரத்தின்அருளிக்கங்கள்உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டபோது, இதே அதிசய நிகழ்வுகள்‌, அந்த நாடுகளிலும்நிகழலாயின! வட ஆப்ரிக்காவிற்கு அனுப்பப்பட்டபோது, அங்கும்ஏராளமான புதுமைகள்நிகழ்ந்தன. அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அர்ச்‌.முடியப்பருக்கு தோத்திரமாக அச்சமயம்‌, அங்கு ஒரு தேவாலயம்கட்டினார்‌.

அப்‌.நடபடியாகமத்தில்‌, அர்ச்‌.முடியப்பரை யூதர்கள்கொன்ற போது, அவர்களிடம்‌, “நீங்கள்இந்த மனிதர்களை (கிறீஸ்துவர்களை) தொடாமல்‌, விலக அவர்கள்பாட்டுக்கு விட்டு விடுங்கள்‌. இந்த யோசனை அல்லது, அலுவல்மனிதரால்உண்டாயிருந்தால்பிரிந்து அழிந்துபோம்‌. இது, சர்வேசுரனால்உண்டாயிருந்தால்‌, நீங்கள்சர்வேசுரனையே எதிர்த்து விரோதிக்கிறவர்களாக எண்ணப்படுவீர் களல்லாதே, இதை அழிக்க உங்களாலேகூடாது!” (அப்நட 5:38-39) என்று கூறிய பரிசேயரான கமாலியேல்தான்‌, இந்த அர்ச்‌.கமாலியேல்!  சவுலாயிருந்த அர்ச்‌.சின்னப்பரும்‌, அவருடைய குருவும்பரிசேயனுமாயிருந்த அர்ச்‌. கமாலியேலும்‌, அர்ச்‌. முடியப்பருடைய வேதசாட்சிய மரணத்தின்சாட்சிகளாயிருந்தனர்‌. ஆகவே தான்‌, அர்ச்‌. கமாலியேல்‌, முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பருடைய பரிசுத்த சரீரத்தை தனது சொந்தத்தோட்டத்தின்கல்லறையிலேயே அடக்கம்செய்தார்‌, என்பதை நாம்அறிந்துகொள்ளலாம்‌.  திருச்சபையின்தந்தையரில்ஒருவரான ஃபோதியுஸ்என்பவர்‌, அர்ச்‌. இராயப்பரும்அர்ச்‌. அருளப்பரும்‌, அர்ச்‌. கமாலியேலுக்கும்அவருடைய குமாரருக்கும்‌, அர்ச்‌. நிக்கோதேமுசுக்கும்‌, ஞானஸ்நானம்கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார்‌. பாரம்பரியம்வெளிப்படுத்தியதின்அடிப்படையில்‌, அர்ச்‌.சின்னப்பா்மனந்திரும்புவதற்கு முன்பாகவே, அர்ச்‌. கமாலியேல்மனந்திரும்பி, சத்திய வேகத்தில்சேர்ந்தார்‌, என்று அர்ச்‌. கிறிசோஸ்தம்அருளப்பர்‌, அறிவிக்கின்றார்‌. அர்ச்‌. ஆபிபோ, அர்ச்‌. கமாலியேலின்இரண்டாவது குமாரராவார்‌. அர்ச்‌. நிக்கோதேமுஸ்‌, ஆண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திருச்சரீரத்தை, சிலுவையில்மரித்தபிறகு, அடக்கம்செய்வதற்கான அனுமதியை பிலாத்துவிடம்பெற்றுத்தந்த பரிசேயராவார்‌.

 

முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!





FINDING OF THE BODY OF SAINT STEPHEN


This subsequent celebration to pay tribute to St. Stephen, (the Primary Saint) was initiated by the congregation on the event of the disclosure of his valuable remaining parts.

St. Stephen was battered to the point of death for Our Ruler by a crowd of furious Jews. Sacred writing closes its record by letting us know that "sincere men took request for Stephen's memorial service, and made extraordinary grieving over him." (Acts 8:2)

However, who were those "faithful men" and where did they cover the valuable remains⁉

The solutions to these inquiries were uncovered to the world very nearly 400 years after the occasion.

In the year 410, the city of Rome was sacked and pillaged by the brute clans. The Agnostics asserted that this disaster was the issue of the Christians. Since the Roman divine beings had been so offended by the Christians who declined them divine honor, that the divine beings had walked out on the Roman Domain.

To shield the Congregation against this slander, St. Augustine of Hippo composed his incredible work, "The City of God". Such a protection probably been an extraordinary reassurance to the dedicated, yet more noteworthy still was the superb comfort that came as wonders. For right now started a progression of otherworldly wonders which included supernatural discoveries of the relics of the holy people. One of these was the inexplicable discoveries of the relics of St. Stephen.

The spirit of Holy person Gamaliel appeared to the cleric Lucian in Promotion 415 and let him know where to track down the relics of Stephen.

Holy person Gamaliel sent Lucian to Minister John of Jerusalem with a bizarre message: "Make flurry to open our catacomb, that by our method God might open to the world the entryway of His pardon, and may show compassion for His kin in the widespread hardship."

The relics of Holy people Stephen, Gamaliel, Nicodemus, and Abibo. were seen as per the headings given to the minister Lucian by St. Gamaliel, who uncovered that they had been covered on his own home in Capergamela, around twenty miles beyond Jerusalem.

Upon the launch of St. Stephen's final resting place the earth shook, and there emerged from the casket such a sweet scent that nobody made sure to have at any point smelled anything like it.

The relics were seen as on 3 August Promotion 415. The relics of Holy person Stephen were made an interpretation of a while later to Jerusalem legitimate on 26 December Promotion 415.

The Congregation's ceremonial example for third August relates that "at the gossip of what had happened, an extraordinary group met up, and a large number of them who were wiped out and feeble from different sicknesses disappeared flawlessly relieved. The consecrated assemblage of St. Stephen was then conveyed with amazing privilege to the heavenly church of Sion."


The wonderful fixes proceeded and the entire wonder extended when segments of the relics were sent all around the Catholic world, including North Africa, where St. Augustine fabricated a place of worship to pay tribute to St. Stephen.


    🍁🍁🍁🍁🍁🍁🍁


St. Gamaliel is, as a matter of fact, the well known Pharisee referenced in Acts, Part Five, who directed the Sanhedrin not to put St. Peter and his allies to death. ("I share with you, cease from these men — assuming it be of God, you can't topple it" Acts 5:38-39.)

St. Paul and St. Gamaliel had seen the suffering of St. Stephen. This would make sense of to some extent why the Protomartyr was covered on Gamaliel's home.

Photius relates that the Witnesses St. Peter and St. John, had purified through water Gamaliel along with his child and Nicodemus.


Maybe more solid is St. John Chrysostom's reference to an old custom that Gamaliel changed over even before St. Paul did indeed.


St. Abibo was the second child of Gamaliel


St. Nicodemus was the Pharisee, who had gotten the consent from Pontius Pilate to cover the Assortment of Jesus after Execution.

🔵

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக