Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

August 25 - St. Louis - அர்ச்‌. லூயிஸ்‌

 

 

ஆகஸ்டு 2️5️ம்தேதி

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசர்திருநாள்

 

 விசுவாசத்திலும்‌, தைரியத்திலும்‌, நீதியினிமித்தம்கொண்டிருந்த சிநேகத்திலும்‌ , தன்னிகறற்றவராக சகல அரசர்களுக்கும்நன்மாதிரி கையாக, உத்தம கத்தோலிக்க அரசராக திகழ்ந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, “பூமியின்சர்வேசுரனுடைய இராணுவப்படைகளின்தளபதிஎன்று அழைக்கப்பட்டார்‌. பிரான்ஸ்நாட்டின்சரித்திரத்தில்‌, இவரை விட பெரிய அரசர்இல்லை. இவர்தமது சாம்ராஜ்ஜியமான பிரான்ஸ்நாட்டை, 9ம்லூயிஸ்அரசராக, மிகுந்த சமாதானத்துடனும்‌, நீதியுடனும்‌, 44 வரு டங்கள்‌, ஆட்சி செய்து வந்தார்‌; இவர்தமது அரசாட்சியில்‌, மூன்று முக்கியமான காரியங்களை கடைபிடித்தார்‌: முதலில்சர்வேசுரன்மீது தேவ பயமும்‌, தேவபக்தியும்கொண்டிருப்பது: இரண்டாவதாக, சுயக்கட்டுப்பாடு, மூன்றாவதாக தனது குடிமக்கள்மீது உத்தமமான சிநேகமும்பாசமும்கொண்டிருப்பது! இவர்தனது ஆத்தும இரட்சணியத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்‌; அதைவிட, தனது குடிமக்களின்ஆத்தும இரட்சணியத்தின்மீது, அதிக அக்கறையுடன்செயல்பட்டார்‌; இதையே, இவர்தனது அதிமிக முக்கிய தலையாயக்கடமையாகக்கருதினார்‌.

அர்ச்‌. 9ம்லூயிஸ்அரசர்‌ 1214ம்வருடம்‌, ஏப்ரல்‌ 25ம்தேதி, பாரீஸுக்கு அருகிலுள்ள பாய்ஸ்ஸி என்ற இடத்தில்பிறந்தார்‌. இவருக்கு, 12 வயதானபோது, 1226ம்  வருடம்‌, நவம்பர்‌ 8ம்தேதியன்று, இவருடைய தந்தை இறந்தார்‌; அடுத்த ஒரு மாதத்திற்குள்இவரையே, இவருடைய 12வது வயதிலேயே, பிரான்ஸ்நாட்டின்அரசராக, ரீம்ஸ்கதீட்ரலில்முடி சூட்டினர்‌. இவர்சிறுவனாயிருந்ததால்‌, இவருடைய தாயாரான பிளாஞ்ச்மகாராணி, இவருக்கு நாட்டை ஆட்சி செய்வதில்உதவி புரிந்தார்கள்‌. கத்தோலிக்க உத்தமதனத்தில்சிறந்து விளங்கிய புண்ணியவதியான இந்த நல்ல தாயார்‌, சிறு வயதினரான தன்மகன்லூயிசிடம்‌, “மகனே! நீ ஒரு சாவான பாவத்தைக்கட்டிக்கொள்வதை விட, என்காலடியில்நீ இறந்து போவதைப்பார்க்கவே ஆசிக்கிறேன்‌!” என்று கூறினார்கள்‌; தன்தாயின்இப்பொன்மொழியை, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, தன்வாழ்நாளெல்லாம்நினைவு கூர்ந்து, உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க அரச ராகக்திகழ்ந்தார்‌; இதுவே, இந்த நல்ல அரசரை, ஒரு அர்ச்சிஷ்டவ ராகும்படிச்செய்தது!  உத்தம கத்தோலிக்க புண்ணியவாளர்களான தாயும்‌, மகனும்பிரான்ஸ்நாட்டை ஆட்சி செய்த ஓராண்டு காலத்திற்குள்ளாக, கத்தோலிக்கப்படை ஒரு விசேஷ தேவ ஆசீர்வாதத்தினால்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை அழித்து ஒழித்தது! இவர்பிறப்பதற்கு முன்பாக, பிரான்ஸ்நாட்டில்பரவியிருந்த ஆல்பிஜென்சியப்பதிகத்தை அழிப்பதற்காக, அந்நாட்டிற்கு வந்த அர்ச்‌.  சாமிநாதர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிடமிருந்து மகா பரிசுத்த ஜெபமாலையைப்பெற்று, ஜெபமாலையின்மீதான பக்தியை பரப்பி வந்தார்‌; ஜெபமாலையை ஜெபிக்கும்விதத்தையும்கற்றுக்கொடுத்தார்‌;

அச்சமயம்‌, அரசியான பிளாஞ்சம்மாள்‌, 12 வருட காலமாக குழந்தையில்லாமலிருந்ததால்‌, அவர்களிடம்‌, அர்ச்‌. சாமிநாதர்‌, ஜெபமாலையை பக்திபற்றுதலுடன், இடை விடாமல்தொடர்ந்து, ‌ ஜெபிக்கும்படி, அறிவுறுத்தினார்‌; அதன்படியே, மகாராணி, ஜெபமாலை ஜெபித்து வந்ததன்பயனாக, குழந்தை பிறந்தது; அதற்கு பிலிப்என்று பெயரிட்டனர்‌; ஆனால்அது இறந்துபோனது; புண்ணியவதியான பிளாஞ்ச்சம்மாள்‌, இன்னும்கூடுதல்பக்திபற்றுதலுடன்ஜெபமாலையை ஜெபித்து வந்ததுடன்‌, அரண்மனையிலிருந்த சகலருக்கும்‌,குடிமக்களுக்கும்‌, ஜெபமாலையை வினியோகித்து, எவ்லோரையும்‌ , தனக்குக்குழந்தை பிறப்பதற்காக ஜெபமாலையை ஜெபிக்கத்தூண்டி வந்தார்கள்‌. நாடு  முமுவதும்ஜெபமாலை ஜெபித்து வேண்டிக்கொண்டபிறகு, பிறந்த குழந்தை தான்‌ , இந்த உன்னத கத்தோலிக்க அரசரான அர்ச்.லூயிஸ்அரசர்‌!  அரசாட்சியின்அலுவல்கள்மத்தியில்‌, இளம்அரசரான லூயிஸ்‌,  கட்டளை ஜெபத்தைத்தவறாமல்‌, ஜெபித்து வந்தார்‌.

தினமும்இருமுறை திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்கண்டு வந்தார்‌. இந்நாட்டிலிருக்கும்மகிமைமிக்க மாபெரும்தேவாலயங்கள்‌, இப்பொழுதும்கூட, இந்த அர்ச்சிஷ்ட அரசர்  கொண்டிருந்த பக்திபற்றுதலின்உன்னதமான நினைவுச்சின்னங்களாகத்திகழ்கின்றன! இவற்றினுள்பாரீஸ் நகரின்மகா பரிசுத்த தேவமாதாவின் கதீட்ரலிலுள்ள அழகிய செயிண்ட் சேப்பல்  சிற்றாலயம்தன்னிகரற்றவிதமாகக்திகழ்கிறது; இந்த தேவாலயத்தில்‌, இவர்பரிசுத்த பூமியிலிருந்து கொண்டு வந்த ஆண்டவருடைய பரிசுத்த முண்முடி, மாபெரும்அருளிக்கமாக, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! கிறீஸ்துவ உன்னத புண்ணியங்களால்தூண்டப்பட்டவிதமாகவே, அர்ச்‌. லூயிஸ்அரசருடைய சகல அரச அலுவல்களும்திகழ்ந்தன! தேவதூஷணத்தையும்‌ , சூதாட்டத்தையும்‌, கடன்கொடுத்து வட்டி வாங்குபவர்களையும்‌, விபச்சாரத்தையும்தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றத்தீர்மானித்தார்‌. 9ம்கிரகோரி பாப்பரசரின்வலியுறுத்தலின்படி, 1243ம்வருடம்‌, தால்முட்என்ற யூதவேதபுத்தகத்தின்‌ 12000 கையெழுத்துப்பிரதிகள்பாரீஸ்நகரில்பகிரங்கமாக நெருப்பினால்சுட்டெரிக்கப்பட்டன! கத்தோலிக்கராக மனந்திரும்பிய நிக்கோலாஸ் டோனின்என்ற ஒரு யூதர்‌, இந்த தால்முட்என்ற யூத வேதபுத்தகத்தை மொழிபெயர்த்திருந்தார்‌; இப்புத்தகத்தில்நமதாண்டவருக்கும்‌, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்‌, கிறீஸ்துவ வேதத்திற்கும்எதிராக அடுத்து அடுத்த அத்தியாயங்களில்எழுதப்பட்டிருக்கும்தேவதூஷணங்களைச் சுட்டிக்காண்பித்து, இப்புத்தகத்திற்கு எதிரான 35 குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியிருந்தார்‌. இதன்படி, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, இப்புத்தகத்தைப்பகிரங்கமாக பாரீஸ்நகரில்எரிக்கும்படி கட்டளையிட்டார்‌.

1248ம்வருடம்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்ஏழாவது சிலுவைப்போரை  தலைமையேற்று வழிநடத்திச்சென்றார்‌; ஆண்டவருடைய பரிசுத்த  பூமியை விடுவிக்கும்படியாகவும்‌, பிரான்ஸ்நாட்டினுடைய வீரத்துவம்வாய்ந்த வீரர்களை,ஆண்டவருக்காக தங்கள்ஜீவியத்தை அர்ப்பணித்த வீரர்களை தன்னுடன்சேர்த்துக்கொள்ளும்படியாகவும்‌, இந்த சிலுவைப்போரை அர்ச்‌. லூயிஸ்அரசர்நடத்தினார்‌. கிறீஸ்துவ நாடுக ளுக்குள்ளே அதிக செல்வ திரவியமுடைய நாடான பிரான்ஸ்நாட்டி னுடைய அரசராகவும்‌, மிக அதிக கிறீஸ்துவ மக்களுடைய ஜனத்தொகையையுடைய நாட்டின்அரசராகவும்இவர் திகழ்ந்தார்‌. இந்த சிலுவைப்போரின்போது, அநேக இழப்புகள்நேரிடும்என்பதை நன்கறிந்திருந்த அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, உலக இழப்புகளை விட அதிக விலை மதிப்புள்ள பரலோக வெகுமதிகளும்சம்பாவனைகளையும்அடைய லாம்என்பதையே, எப்போதும்கருத்தில்கொண்டிருந்தார்‌.  1250ம்வருடம்‌, எகிப்தில்‌, மகமதியரால்‌, இவர்கைது செய்யப்பட்டார்‌; டாமியட்டா என்ற இடத்தில்‌, சிறைபிடிக்கப்பட்டார்‌;

அச்சமயம்‌, இவருடைய கூடாரத்தினுள்நுழைந்த ஒரு அராபிய சிற்றரசன்‌, இரத்தம்தோய்ந்த தன்குத்துவாளைக்காண்பித்து, இதோ சுல்தானைக்கொன்றுவிட்டேன்‌; எனக்கு ஒரு மாவீரர்பட்டத்தை அளிக்காவிடில்‌, உம்மையும்கொன்று போடுவேன்‌, என்று கூறி, மிரட்டினான்‌. அதற்கு அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, அவனிடம்அமைதியாக, “ஒரு கிறீஸ்துவ மாவீரர்நிறைவேற்றக்கூடிய எந்த கடமைகளையும்‌, ஒரு அவிசுவாசியால்நிறைவேற்ற முடியாது!” என்று பதிலளித்தார்‌. இவருக்கு சட்டபூர்வமான நிபந்தனைகளின்பேரிலான விடுதலை அளிக்கப்பட்டது; ஆனால்‌, தேவதூஷணத்தைக்கக்கக்கூடிய ஒரு வார்த்தைப்பாட்டை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டார்‌.

அவிசுவாசிகளும்பதிதர்களுமான மகமதியர்கள்‌, வாள்களால்‌, இவருடைய தொண்டையைக்குறிவைத்தபடி, அந்த தேவதூஷணத்தைக்கூறும்படி வற்புறுத்தப்பட்டார்‌; திரளான கிறிஸ்துவ கைதிகளைக்கொல்லப்போவதாகவும்இரக்கமற்ற அந்த சுல்தான்இவரை அச்சுறுத்தினான்‌; இருப்பினும்‌, ஒரு அநிச்சை செயல்போல்‌, எதையும்சிந்திக்காமல்‌, அர்ச்‌.  லூயிஸ்அரசர்‌, தேவதூஷணமான அந்த வார்த்தைப்பாட்டை எடுப்பதற்கு உடனடியாக மறுத்து விட்டார்‌. பணயத்தொகையினால்‌, மீட்கப்பட்டதும்‌, அர்ச்‌. லூயிஸ்அரசர்‌, எகிப்திலிருந்து, பரிசுத்த பூமிக்குச்சென்றார்‌. நாசரேத்தை அடைந்ததும்‌, இவர்குதிரையிலிருந்து இறங்கினார்அங்கேயே முழங்காலிலிருந்து ஜெபித்தார்‌; பின்னர்‌, அந்நகரத்திற்குள்காலணியில்லாமல்‌, வெறுங்காலில்நடந்து சென்றார்‌. ஆண்டவருடைய பரிசுத்த மனிதவதாரத்தினுடைய பரமஇரகசியமான திருநிகழ்வு நிறைவேறிய இல்லத்திற்குள்‌, நாசரேத்பரிசுத்தத்திருக்குடும்பம்வசித்த இல்லத்திற்குள்‌, வெறுங்காலில்நுழைந்தார்‌. 

1252ம்வருடம்‌, இவருடைய தாயாரும்புண்ணியவதியுமான பிளாஞ்ச்மகாராணியார்இறந்ததால்‌, இவர்மறுபடியும்பிரான்ஸ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல நேரிட்டது. நாட்டின்சூழல்அமைதியடைந்ததும்‌, இவர்மறுபடியும்‌, இரண்டாவது தடவையாக சிலுவைப்போருக்குச்சென்றார்‌; 1270ம்வருடம்தூனிஸில்நிகழ்ந்த சிலுவைப்போரில்‌, மகமதியர்மீது, அர்ச்‌. லூயிஸ்அரசர்வெற்றியடைந்தார்‌. ஆனால்‌, அப்போது ஏற்பட்ட கொள்ளைநோயான விஷக்காய்ச்சல்நோய்க்கு இரையானார்‌. 1270ம்வருடம்‌, ஆகஸ்டு 25ம்தேதியன்று, தனது கூடாரத்தின்படுக்கையினருகில்‌, பக்தி பற்றுதலுடன்முழங்காலிலிருந்தபடி, மகா பரிசுத்த திவ்ய நன்மையை இறுதி தேவ திரவிய அனுமானமாகப்பெற்று உட்கொண்டார்‌. அந்நேரமே, பாக்கியமான மோட்ச பேரின்ப ஆனந்த சந்கோஷத்தினுள்மூழ்கியவராக, பாக்கியமாய்மரித்தார்‌!

 இவ்விதமாக எந்த நித்திய பேரின்ப மகிமை யில்‌, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மற்ற எல்லாவற்றையும்அர்ச்‌. லூயிஸ்அரசர்துறந்தாரோ, அதே நித்திய மோட்சப்பேரின்ப மகிமையை அடைந்தார்‌! 8ம்போனிஃபேஸ்பாப்பரசர்‌, 9ம்‌. லூயிஸ்அரசருக்கு 1297ம்வருடம்அர்ச்சிஷ்டப்பட்டம்அளித்தார்‌. பிரான்ஸ்அரசர்களிலேயே, அர்ச்சிஷ்டப்பட்டம்பெற்ற ஒரே அரசரும்இவரே! விசுவாசப்பிரமாணத்தை ஜெபிக்கும் சமயத்தில், “வார்த்தையானவர்மாமிசமாகிஎன்கிற வேத சத்தியத்தை உச்சரிக்கிறபோது,‌ முழங்காலில்இருந்து மனுவுருவான திவ்ய கர்த்தரை ஆராதித்து வணங்கும்வழக்கத்தை, அர்ச்‌. லூயிஸ்அரசர்தான்‌,முதலில்துவக்கினார்‌.

பின்னர்‌, திருச்சபை, உலகெங்கும்துரிதமாகப்பரவிய இப்பரிசுத்த பழக்கத்தை, திருவழிபாட்டின்விதிமுறையாகச்சேர்த்துக்கொண்டது. ஒருநாள்‌, அரண்மனை சிற்றாலயத்தில்‌, மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர்பாத்திரத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருந்தபோது, அர்ச்‌. லூயிஸ்அரசர்படிப்பறையில்ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, அவருடைய ஊழியர்களில்ஒருவர்‌, விரைந்து ஓடிவந்து, “அரசரே! ஒரு அழகிய புதுமை நம்சிற்றாலயத்தில்நிகழ்ந்து கொண்டிருக்கிறது! மகா பரிசுத்த தேவநற்கருணையில்திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி, காட்சியளித்துக்கொண்டிருக்கின்றார்‌!” என்று கூறினார்‌;அதற்கு, அர்ச்‌. லூயிஸ்‌, அவரிடம்‌, “ஒரு புதுமையை நோக்கிப்பார்த்து தான்‌, மகா பரிசுக்த தேவநற்கருணையில்நமதாண்டவருடைய மெய்யான பிரசன்னத்தை விசுவசிக்க வேண்டுமென்றிருந்தால்‌, நான்இவ்வளவு அதிக உறுதியாக விசுவசித்திருக்கக்கூடாமல்போயிருக்கும்‌! ஏற்கனவே விசுவசிக்கிறவர்களுக்கு புதுமைகள்தேவைப்படுகிறதில்லை!” என்று அமைதியாக பதிலளித்தார்‌. 

ஸ்துதியரான அர்ச்‌. லூயிஸ்அரசரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக