Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

August 8 - ST. CYRIACUS - அர்ச்‌. சிரியாக்கூஸ்

 ஆகஸ்டு 0️8ம்தேதி

தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான
அர்ச்‌. சிரியாக்கூஸ்திருநாள்


 

 அர்ச்‌. சிரியாக்கூஸ்‌, திருச்சபையின்‌ 14 உதவியாளர்களில்ஒருவராக போற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறார்‌. மேலும்‌, திருச்சபையின்மாபெரும்வேதசாட்சியான தியாக்கோன்களான அர்ச்‌. முடியப்பா்‌, அர்ச்‌. லாரன்ஸ்‌, சரகோசாவின்அர்ச்‌. வின்சென்ட்ஆகியோருடன்ஒருவராகக்திகழ்கிறார்‌. உரோமாபுரியின்பத்ரீசிய உயர்குடி மகனாகப்பிறந்தார்‌; கத்தோலிக்கரானார்‌; தன்ஆஸ்திகளையெல்லாம்‌, ஏழைகளுக்குக்கொடுத்தார்‌; முதலாம்மர்செல்லினுஸ்பாப்பரசர்‌, இவருக்கு தியாக்கோன்பட்ட மளித்தார்‌. பரிசுத்த தியாக்கோனான சிரியாக்கூஸ்‌, உரோமையின்கொடுங்கோல் சக்கரவர்த்தி தியோக்ளேஷியனின்மகளான ஆர்டிமிசியாவிடமிருந்து பசாசுகளை ஓட்டினார்‌; இவளும்‌, இவளுடைய தாயான அர்ச்‌. செரினாவும்‌, கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினார்‌; மேலும்‌, பெர்ஷிய அரசரான ஷாபுரின்மகளான ஜோபியாஸிடமிருந்து, பசாசுகளை ஓட்டி விரட்டினார்‌;

இப்புதுமையால்‌, அரசருடைய குடும்பமும்‌, பெர்ஷிய நாட்டின் ‌400 அஞ்ஞானிகளும்கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினர்‌. பெர்ஷியாவி லிருந்து, இவர்‌, உரோமைக்குத்திரும்பி வந்தபோது, உரோமையின்மாக்சிமின்என்ற அஞ்ஞானியும்கிறீஸ்துவர்களைக்கொடூரமாக உபத்திரவப்படுத்தியவனுமான சக்கரவர்த்தி மாக்ஸ்மின்‌, மாபெரும்குளியல்அறைகளுடனான ஒரு பிரம்மாண்டமான அழகிய அரண்மனையைக்கட்டிக்கொண்டிருந்தான்.‌ உரோமை விக்கிரகங் களை வழிபட மறுத்த பத்தாயிரத்திற்கு மேலான கத்தோலிக்கர்களை, குருக்களை, சிறைபிடித்து அடிமைகளாக்கி, இந்த கட்டிட வேலையில்‌, அமர்த்தினான்‌. இவர்களுக்கு சொற்ப உணவை அளித்தான்‌; கடின வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்‌!

ஆகவே, தியாக்கோன்சிரியாக்கூஸ்‌, தன்சக தோழர்கள்சிலருடன்சேர்ந்து, மற்ற விசுவாசிகளிடமிருந்து உணவையும்‌, மற்ற அத்தியா வசியப்பொருட்களையும்சேகரித்து, இரகசியமாக, அடிமைகளாயிருந்த கிறீஸ்துவர் களுக்குக்கொடுத்து வந்தார்‌. இதைப்பற்றிக்கேள்விப்பட்ட மாக்ஸ்மின்‌, இவரைக்கைதுசெய்து, கொடிய சித்ரவதைகள் செய்து உபத்திரவப்படுத்தினான்‌; இவருடைய சரீரத்தின்மீது, கொதிக்கிற கீல்ஊற்றப்பட்டது: இறுதியாக, வியா ஒஸ்டென்ஸ்என்ற இடத்தில்‌, 304ம்வருடம்‌, 8ம்தேதியன்று, இவரை தலையை வெட்டிக்கொன்றனர்‌;

இவருடன்இவருடைய சக தோழர்களான லார்ஜூஸ்‌, ஸ்மாராக்டுஸ்ஆகிய இருவரும்‌, இன்னும்மற்ற இருபது கத்தோலிக்கர் களும்வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. அர்ச்‌.சிரியாக்கூஸின்பரிசுத்த சரீரம்‌, உரோமையிலுள்ள வியா லாட்டாவிலுள்ள மகா பரிசுத்த தேவமாதா தேவாலயத்தில்அடக்கம்செய்யப்பட்டது. இந்த தேவாலயத்தில்‌, இவருடைய சகாக்களின்பரிசுத்த சரீரங்களும்‌, இன்னும்அநேக வேதசாட்சிகளின்பரிசுத்த அருளிக்கங்களும்பூஜிதமாக அடக்கம்செய்யப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்த இரத்தம்அடைக்கப்பட்டிருக்கிற ஒரு அருளிக்கக்குப்பி, டோர்ரே லே நோச்செல்லேயிலுள்ள பரிசுத்த சந்நிதானத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! மரணப்படுக்கையிலிருக்கிற போது, வருகிற சோதனைகள்நேரத்தில்அர்ச்‌. சிரியாக்கூஸிடம்‌, வேண்டிக் கொள்வது மிகுந்த பலனை அளிக்கக்கூடிய பக்தி முயற்சியாகும்‌. பசாசுகளின்பிடியிலிருந்து விடுதலை அடைவததற்கும்‌, அர்ச்‌.  சிரியாக்கூஸிடம்வேண்டிக்கொள்ளலாம்‌.

 தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. சிரியாக்கூஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக