Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

Aug. 5 - Our Lady of Snows (பரிசுத்த பனிமய மாதாவின்‌ பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்‌ தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்‌ செய்யப்பட்ட திருநாள்‌.)

 

ஆகஸ்டு 05ம்தேதி .

மகா பரிசுத்த பனிமய மாதாவின்பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்செய்யப்பட்ட திருநாள்‌.

 


இந்த பசிலிக்கா தேவாலயம்உலகிலேயே மிகப்பழமையானதும்மிக முக்கியமானதுமான தேவமாதாவிற்கு தோத்திரமாகக்கட்டப்பட்ட தேவாலயங்களில்‌, திருயாத்திரை ஷேத்திரங்களில்‌, ஒன்றாகக்திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா தாமே கேட்டுக் கொண்டதன்பேரில்தான்‌, இந்த பசிலிக்கா தேவாலயம்கட்டப்பட்டது; இவ்வற்புத நிகழ்வு, “பனிமயமாதா!” என்கிற மகா பரிசுத்த தேவமாதாவின்மிகப்பழமையான பட்டத்தை , நாம்அறியும்படிச்செய்தது! பாரம்பரியத்தின்படி, உரோமையைச்சேர்ந்த ஒரு பத்ரீசியரான ஜியோவான்னியும்அவருடைய மனைவியும்‌, குழந்தை யில்லாமல்‌, தங்களுடைய உடைமைகளை நிர்வகிப்பதற்குத்தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று, மகா பரிசுத்த தேவமாதா விடம்‌, பக்திபற்றுதலுடன்ஜெபித்து வேண்டிக்கொண்டிருந்தனர்‌. மகா பரிசுத்த தேவமாதா, 352ம்வருடம்‌, ஆகஸ்டு 4ம்தேதிக்கும்‌ 5ம்தேதிக்கும்இடையில் இரவின்போது, இத்தம்பதியருக்குக்காட்சியளித்து, தமக்குத்தோத்திரமாக உரோமையிலுள்ள எஸ்குயிலின்குன்றின்மீது, ஒரு தேவாலயத்தைக்கட்ட வேண்டும்என்றும்‌, அக்குன்றின்மேல்தேவாலயம்கட்ட வேண்டிய இடம்‌, மிகச்சரியாக, பனியினால்குறிக்கப்பட்டிருக்கும்‌, என்றும்கூறினார்கள்‌. அச்சமயம்‌, இத்தாலியில்கடுமையான கோடைகால உஷ்ணம்நிலவியது. அதே சமயம்‌, மகா பரிசுத்த தேவமாதா கூறியதுபோல்‌, புதுமையாக தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடத்தை, பனி மூடியிருந்தது. மகா பரிசுத்த தேவமாதா, பாப்பரசர்லிபேரியசுக்கும்அதே இரவில்தோன்றி இதைப்பற்றி அறிவித்திருந்ததால்‌, தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடம்‌, புதுமையாகப்பனிபடர்ந்து இருப்பதை, அவரும்வந்து பார்த்தார்‌.

352ம்வருடம்‌, ஆகஸ்டு, 5ம்தேதியன்று, காலையில்‌, ஜியோவான்னியும்‌, அவருடைய மனைவியும்எஸ்குயிலின்குன்றிற்கு விரைந்து சென்றனர்‌; அச்சமயம்‌, பாப்பரசர்லிபேரியுசும்தமது பரிவாரங்களுடன்ஆடம்பர பவனியாக, அந்த குன்றிற்கு வந்தார்‌. இப்புதுமையைக்காண்பதற்கு அங்கு திரளான மக்கள்கூடியிருந்தனர்‌; பளிச்சிடும்வெண்பனி புதுமையாக அக்குன்றின்மீது படர்ந்திருந்ததை அனைவரும்கண்டனர்‌; சூரிய ஒளி கடுமையாக இருந்தபோதிலும்‌, அந்த இடத்திலிருந்த பனி புதுமையாக உருகாமல்‌, படர்ந்திருக்கிறதைக்கண்டு எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்‌! தேவாலயத்திற்கான அளவு குறிக்கப்பட்டது; அதன்பின்பனி உருகியது; மகா பரிசுத்த தேவமாதா பசிலிக்கா தேவாலயம்‌, இரண்டு வருடங்களுக்குள்கட்டி முடிக்கப் பட்டது; பாப்பரசர்லிபேரியுசினால்‌, அபிஷேகம்செய்யப்பட்டது.

எஃபேசுஸ்நகரில்‌ 431ம்வருடம்நிகழ்ந்த திருச்சபையின்பொதுச்சங்கம்‌, மிகவும்பரிசுத்த கன்னிமரியம்மாளை, சர்வேசுர னுடைய மகா பரிசுத்த மாதா, என்று அதிகார பூர்வமாகப்பிரகடனம்செய்தபோது, 3ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌(432- 440), இந்த பசிலிக்கா தேவாலயத்தை திரும்பக்கட்டி, அழகுப்படுத்தினார்‌; அர்ச்‌. 5ம் பத்திநாதர்பாப்பரசர்‌, 1568ம்வருடம்‌, திரிதெந்தீன்பொதுச்சங்கத்தின் போது, உறுப்பினர்கள்கோரிய விண்ணப்பத்தின்படி, இத்திருநாளை பொது உரோம திருவழிபாட்டின்காலண்டரில்சேர்த்தார்‌. 18ம்நூற்றாண்டின்போது, இப்பசிலிக்கா தேவாலயம்‌, முழுமையாக மறுபடியும்புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது! இந்த பசிலிக்கா தேவாலயத்தின்முகப்பின்தோற்றமும்‌, இதன்உள்தோற்றத்தின்அலங்காரங்கள்எல்லாமும்‌, இக்காலத்தைச்சேர்ந்த வேலைப்பாடு களாக இருக்கின்றன! இருப்பினும்‌, பண்டைக்காலத்தில்மேற்கொள்ளப் பட்ட வேலைப்பாடுகளும்‌, சலவைக்கற்தூண்களும்‌, அநேக 5ம்நூற்றாண்டின்மொசைக்கற்களும்‌, அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கின்றன! உரோமாபுரியிலேயே, அதிக உயரமான மத்திய நூற்றாண்டைச்சேர்ந்த 240 அடி உயர  கோபுர மணியையும்,‌ இந்த பசிலிக்கா தேவாலயம்கொண்டிருக்கிறது. 

மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த தலைமை பசிலிக்கா தேவாலயம்‌, உலகத்திலேயே மிக நேர்த்தியான கலை வேலைப்பாடு களையும்‌, கட்டிடக்கலையின்அதிசய நுட்பங்களையும்கொண்டிருக்கிறது! தேவாலய உட்கூரையில்காணப்படும்ஓவியம்‌, மத்திய நூற்றாண்டுகளின்மறுமலர்ச்சியின்காலத்தைச்சேர்ந்த ஜூலியானோ சங்கல்லோ என்பவரின்தலைசிறந்த கைவேலைப் பாடாகத்திகழ்கிறது! அச்சமயம்‌, அமெரிக்கக்கண்டத்தைக்கண்டுபிடித்த கிறிஸ்டோஃபர்‌, அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின்நாட்டிற்குக்கொண்டு வந்ததும்‌, ஸ்பெயின்நாட்டின்அரசரான ஃபெர்டினான்டினாலும்‌, அரசி இசபெல்லாவினாலும்‌, 6ம்அலெக்சாண்டர்பாப்பரசருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதுமான தங்கத்தினாலான பூச்சு வேலைப்பாட்டுடன்‌, உள்தேவாலயத்தின்மேற்கூரையில்தீட்டப்பட்ட வண்ண ஓவியம்இன்னும்அழகுற மெருகேற்றப்பட்டது!

இப்பசிலிக்கா தேவாலயத்தில்இன்னும்இரண்டு முக்கியமாகக்குறிப்பிடத்தக்க கிறீஸ்துவ பொக்கிஷ திரவியங்கள்உள்ளன: முதலாவதாக, நமதாண்டவர்‌, திவ்ய பாலனாக கிறீஸ்துமஸ்அன்று பெத்லகேம்குகையில்பிறந்து, கிடத்தப்பட்டிருந்த அந்த மாட்டுக்கொட்டில்அல்லது முன்னிட்டியே, ஒரு அருளிக்கமாக, இத்தேவால யத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற அருளிக்கங்களில்,‌ மகாக்குறிப்பிடத்தக்க அருளிக்கமாகத்திகழ்கிறது. ஏழாம்நூற்றாண்டின்போது, பாலஸ்தீனத்தை மகமதியர்கைப்பற்றியபோது, அகதிகளாக உரோமைக்கு வந்த கிறீஸ்துவர்கள்இந்த பரிசுத்த முன்னிட்டியை, ஒரு அருளிக்கமாகத்தங்களுடன்கொண்டு வந்தனர்‌. இப்பரிசுத்த முன்னிட்டியானது, ஒரு மகா பெரிய அருளிக்கமாக, இந்த பசிலிக்கா தேவாலய முதன்மைப்பெரிய பீடத்தின்அடியில்ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது!

மாட்சிமிக்க இவ்வருளிக்கத்தை நோக்கியபடி, அதற்கு எதிரில்‌, 1854ம்வருடம்மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமை மிகுந்த அமலோற்பவத்தை ஒரு விசுவாசப்பிரகடனமாக அறிவித்த முத்‌.9ம்பத்தி நாதர்பாப்பரசரின்சலவைக் கற்சுரூபம்ஸ்தாபிக்கப்பட்டிருக் கிறது. உரோமை மக்களுடைய இரட்சணியம்என்று அழைக்கப்படுகிறதும்‌, உரோமை மக்களுடைய தன்னிகறற்ற தனிச்சிறந்த பக்தி முயற்சிக்குரியதுமான மகா பரிசுத்த தேவமாதாவின்வரைபடத்தினுடைய ஓவியம்தான்‌, அந்த இரண்டாவது மகா விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாக விளங்குகிறது! இந்த ஒவியத்தை வரைந்தவர்அர்ச்‌. லூக்காஸ்என்று பாரம்பரியம்அறிவிக்கிறது. மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த அரிதான உன்னத ஓவியப்படத்தை, புண்ணிய பூமியிலிருந்து, மகா கான்ஸ்டன்டைன்சக்கரவர்த்தியின்தாயாரான அர்ச்ஹெலன்உரோமாபுரிக்குக்கொண்டு வந்தார்கள்‌.  அர்ச்‌. கிரகோரியார்பாப்பரசர்‌ (590-604) ஆண்ட காலத்தில்‌, உரோமை நகரத்தை ஒரு கொள்ளை நோய்தீண்டியபோது, உரோமை நகர மக்கள்‌,தங்களை மோட்சத்திலிருந்து பாதுகாக்கிறவர் களான மகா பரிசுத்த தேவமாதாவிடம்‌, ஜெபித்து வேண்டிக்கொள்ளும் படியாக, இவ்வற்புதப்படத்தை, பாப்பரசர்பக்தி பற்றுதலுடன்‌, உரோமை நகரின்தெருக்களில்‌, சுற்றுப்பிரகார பவனியாகக்கொண்டு சென்றார்‌.

இதன்பலனாக, புதுமையாக கொள்ளை நோய்‌, நின்று போனவுடன்‌, பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிற்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு மகா ஆடம்பரமான சடங்கின்போது, இந்த அற்புதப்படத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவினுடைய திருத்தலையிலும்‌, தேவபாலனுடைய திருத்தலையிலும்‌, விலையுயர்ந்த மாணிக்கக்கற்களால்அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலான கிரீடங்களை சூட்டினார்‌. இந்த பசிலிக்கா தேவாலயத்தில்அர்ச்‌. 5ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரும்‌, அர்ச்‌. 5ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக்கின்றனர்‌, என்பதும்குறிப்பிடத்தக்கவையாகும்‌.  திருச்சபையின்பரிசுத்தப்பாரம்பரிய சடங்குகளை நேசிப்பதற்கும்அவற்றிற்காகப்போராடுவதற்கும்‌, பாத்திமாவில்‌, மகா பரிசுத்த தேவமாதா, தீர்க்கதரிசனமாகக்கூறியதன்பிரகாரம்‌, துப்புரவு தண்டனைக்கால நாட்களில்‌, நிகழவிருக்கும்மகா வியக்க வைக்கும்புதுமைகளுக்கு நம்முடைய ஆத்துமங்களைத்திறப்பதற்கும்‌, மகா பரிசுக்த தேவமாதா நமக்கு உதவி செய்யும்படியாக, நாம்‌, மகா பரிசுத்த பனிமய மாதா என்கிற மகிமைமிகு பட்டத்தினால்‌, அவர்களை நோக்கிக்கூவி அழைத்து மன்றாடி ஜெபிப்போமாக!

! மகா பரிசுத்த பனிமய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக