Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

August 24 - St. Bartholomew (அர்ச்‌. பர்த்தலோமேயு)

 

ஆகஸ்டு2️4️ம்தேதி

அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு திருநாள்

 


பர்த்தலோமேயு- பார்‌-தோல்மை என்கிற வார்த்தையிலிருந்து வருகிறது; இதனுடைய அர்த்தம்‌- தோல்மை என்பவரின்மகன்என்று பொருள்‌. இவர்‌ , நமதாண்டவரால்தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அப்போஸ்தலர்களில்ஒருவா்‌. இவரை ஆண்டவர்தாமே, தமது அப்போஸ்தலராகும்படி அழைத்தார்‌. இவர்கலிலேயாவிலுள்ள கானாவூரைச்சேர்ந்தவர்‌. யூத சட்டத்தில்நிபுணத்துவம்பெற்றவர்‌; டாக்டா்பட்டம்பெற்றவர்‌; அப்போஸ்தலரான அர்ச்‌. பிலிப்புவின்நண்பா்‌. இவருக்கு அளிக்கப்பட்ட நத்தனயேல்என்கிற பெயர்மிகப்பொருத்தமான பெயராயிருக்கிறது. ஆனால்முதல்மூன்று சுவிசேஷங்களும்‌, இவரை பர்த்தலோமேயு என்று எப்போதும்அழைக்கின்றன என்பதைப்பற்றி ஆச்சரியப்படலாம்‌; எபிரேய மொழியில்‌, நத்தனயேல்என்கிற பெயரும்மத்தேயு என்கிற பெயரும்‌, சர்வேசுரனுடைய கொடை என்கிற ஒரே அர்த்தமுள்ளவை என்பதாலேயே, இரு அப்போஸ்தலர்களுக்கும்பெயரில்குழப்பம்வரக்கூடாது என்பதற்காகவே, முதல்மூன்று சுவிசேஷகர்கள்‌, எப்போதும்‌, பாத்தலோமேயு என்ற பெயரில்மட்டுமே இவரை அழைத்தனர்‌. அர்ச்‌.  இராயப்பரும்‌, அர்ச்‌. பெலவேந்திரரும்அறிவுறுத்தியதன்பேரில்‌, அர்ச்‌. பிலிப்‌, கிறீஸ்துநாதரைக்கண்டறிந்ததைப்பற்றிய சந்தோஷ செய்தியை அறிவிக்கும்படியாக தன்நண்பரான பர்த்தலோமேயுவை நோக்கித்துரிதமாகச்சென்றார்‌; பிலிப்‌, அவரிடம்‌, “வேதபிரமாணத்திலே, மோயீசனும்‌, தீர்க்கதரிசிகளும்குறித்தெழுதினவரை நாங்கள்கண்டுகொண்டோம்‌; நீயும்வந்து பார்‌!” என்றார்‌.

தம்மை நோக்கி நத்தனயேல்வருகிறதைக்கண்டதும்‌, நமதாண்டவர்‌, “இதோ! கபடற்ற இஸ்ராயேலன்‌!” என்று கூறினார்‌.ஆண்டவர்‌, நத்தனயேலிடம்‌, “பிலிப்உன்னை அழைப்பதற்கு முன்‌, நீ அத்திமரத்தின்கீழ்இருந்தபோதே, நான்உன்னைப்பார்த்தேன்‌!” என்று கூறினார்‌. உடனே, நத்தனயேல்‌, ஆண்டவரிடம்‌, ராபி! நீர்சர்வேசுரனுடைய குமாரன்‌! இஸ்ராயேலின்இராஜா!” என்று கூறினார்‌. (அரு 1:45-49) இவர்‌, பெந்தேகோஸ்தே திருநாளுக்குப்பின்‌, நாகரீகமடையாத மகா மோசமான காட்டுமிராண்டிகள்ஜீவித்த கிழக்கத்திய நாடுகளுக்கு, இந்தியாவிலுள்ள இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி வரைச்சென்று, சுவிசேஷத்தைப்பிரசங்கித்தார்‌; மனந்திரும்பிய அநேக அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம்அளித்தார்‌; அநேகரிடமிருந்து பசாசுக்களைத்துரத்தினார்‌. அர்ச்‌. மத்தேயு எழுதிய சுவிசேஷத்தை இவர்இந்தியாவிற்குக்கொண்டு வந்தார்‌; அர்ச்‌. மத்தேயுவினால் எபிரேய மொழியில், எழுதப்பட்ட இந்த சுவிசேஷத்தை‌, இந்தியாவில்வளர்ந்து வந்த திருச்சபையானது, தன்விலைமதியாத திரவியமாகப்பாதுகாத்து வந்ததை, பின்னாளில்‌, 2ம்நூற்றாண்டில்‌, இப்பகுதிக்கு வந்த அர்ச்‌. பந்தனேயுஸ்குறிப்பிடுகின்றார்‌;

அர்ச்‌. பந்தனேயுஸ்‌, அர்ச்‌. மத்தேயு சுவிசேஷத்தை, தன்னுடன்அலெக்சாண்டிரியாவிற்கு எடுத்துச்சென்றார்‌. அர்ச்‌. பர்த்தலோமேயுவின்இறுதி அப்போஸ்தல அலுவல்‌, ஆர்மீனியா வில்நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த அஞ்ஞானிகள்பிடிவாதமாக விக்கிரகங்களை வழிபடுவதில்ஈடுபடுவதைக்கண்டித்து, இவர்சத்திய வேதத்தைப்பிரசங்கித்த போது, இவருக்கு மகிமையான வேதசாட்சிய கிரீடம்சூட்டப்பட்டது! ஆர்மீனியாவில்‌, அந்நாட்டின்அரசனான ஆஸ்டியேஜஸ்என்பவன்‌, அர்ச்‌. பர்த்தலோமேயுவிற்கு மரண தண்டனை விதித்தான்‌; உயிருடன்இவருடைய தோலை உரித்து, கி.பி.71ம்வருடம்இவருடைய தலையை வெட்டிக்கொன்றனர்‌.

அர்ச்‌. பர்த்தலோமேயுவின்பரிசுத்த சரீரம்‌, புதுமையாக தண்ணீரினால்அடித்துச்செல்லப்பட்டு, சிசிலி தீவின்அருகிலுள்ள லிபாரி என்ற ஒரு சிறிய தீவில்சேர்க்கப்பட்டது! இங்குள்ள அர்ச்‌.  பர்த்தலோமேயு கதீட்ரல்தேவாலயத்தில்‌, இவருடைய பரித்தத்தோலின்பெரும்பகுதியும்‌, அநேக அருளிக்கங்களான பரிசுத்த எலும்புகளும்பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! கிபி 983ம்வருடம்‌, 2ம்ஓட்டோ சக்கரவர்த்தி, இப்பரிசுத்த அருளிக்கங்களை உரோமாபுரியிலுள்ள அர்ச்‌. பர்த்தலோமேயு பசிலிக்காவிற்குக்கொண்டு வந்தார்‌. அர்ச்‌. பர்த்தலோமேயுவின்பரிசுத்த மண்டை ஓட்டின்ஒரு பகுதி, ஜெர்மனியின்பிராங்க்பர்ட்டிலுள்ள கதீட்ரலுக்கு இடமாற்றம்செய்யப்பட்டது! அர்ச்சிஷ்டவருடைய திருக்கரமானது, இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி கதீட்ரல்தேவாலயத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

இரண்டு முக்கியமான பண்டைக்கால சாட்சியங்கள்அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு இந்தியாவில்ஆற்றிய அப்போஸ்தல அலுவலைப்பறை சாற்றுகின்றன! 4வது நூற்றாண்டைச்சேர்ந்த செசரையாவின்யுசேபியுஸ்என்பவர் எழுதிய குறிப்பேடுகளும்‌, அதே நூற்றாண்டைச்சேர்ந்த அர்ச்‌. ஜெரோம்எழுதிய குறிப்பேடுகளும்‌, 2ம்நூற்றாண்டில்அர்ச்‌. பந்தேனுஸ்இந்தியாவிற்குச்சென்று அப்போஸ்தல அலுவல்புரிந்ததைப்பற்றிய விவரங்களைக்குறிப்பிடுகின்றன! சேசுசபைக்குருவான சங்‌. பெருமாலில்சுவாமியாரும்மோரேஸ்என்பவரும்மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரை, கொங்கன்கடற்கரையிலுள்ள பம்பாய்ப்பகுதியில்அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு தன்வேத போதக அலுவல்களை ஆற்றினார்!‌ என்று குறிப்பிடுகிறது!

பண்டைக்கால துறைமுக நகரங்களான கல்யாண்‌, தானே, பாஸ்ஸேயின்போன்றவற்றை உள்ளடக்கிய இப்பகுதியில்தான்,‌ இவர்தனது அப்போஸ்தல அலுவலை நிறைவேற்றினார்‌; அநேகரை கிறீஸ்துவர்களாக மனந்திருப்பினார்‌; ஆகவே தான்‌, இப்பகுதி, “இந்தியா-ஃபெலிக்ஸ், அதாவதுபாக்கியமான இந்தியப்பகுதிஎன்று அழைக்கப்படுகிறது! 7ம்நூற்றாண்டின்சரித்திர ஆசிரியர்சொஃப்ரோனியுஸ்என்பவரின்குறிப்பின்படி, அர்ச்‌. பர்த்தலோமேயு, பாக்கியமான இந்தியர்கள்என்று அழைக்கப்பட்டவர்களுக்கு, சுவிசேஷத்தைப்போதித்தார்‌. கிரேக்க பாரம்பரியத்தின்படி, அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதிக்குச்சென்றார்‌.  சமஸ்கிருதத்தில்கல்யாண்என்கிற வார்த்தைக்கு வளமை, அல்லது சந்தோஷம்என்று அர்த்தம்‌; இலத்தினில்‌, ஃபெலிக்ஸ்என்ற வார்த்தைக்கு சந்தோஷம்அல்லது பாக்கியம்என்று அர்த்தம்‌.

ஆகவே தான்‌, பண்டைக்கால துறைமுக நகரங்களான கல்யாண்‌, தானே, பாஸ்ஸேயின்‌, சலேஸ்ஸாடே மற்றும்பாம்பே தீவுகள்அடங்கிய பகுதியைப்பற்றி அயல்நாட்டவர்குறிப்பிடும்போது, இந்தியா-ஃபெலிக்ஸ்பாக்கியமான இந்தியப்பகுதி) என்று குறிப்பிடுகின்றனர்‌. இந்தியர்களுக்கு, சந்தோஷமான அல்லது பாக்கியமான இந்தியர்கள்என்கிற அடைமொழியும்அளிக்கப்பட்டது.  இந்தியாவில்கிறீஸ்துவ வேதம்‌, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதியிலுள்ள துறைமுக நகரங்களைச்சுற்றிலும்‌, முதல்நூற்றாண்டிலேயே, வேகமாகப்பரவி  வளர்ந்தது! என்பதை 2ம்நூற்றாண்டில்‌, அதாவது கிபி 189ம்வருடம்‌, இப்பகுதிக்கு வந்த அர்ச்‌. பந்தேனுஸ்குறிப்பிடுகின்றார்‌.  பின்னாளில்இந்தியாவில்இஸ்லாமிய மதம்‌, பரவியபோது, அரபிக்கடலின்எதிர்ப்புறத்திலிருந்த துலுக்க நாடுகளின்கலிஃபாக்களை, வளமை நிறை இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி தன்பக்கமாகக்கவர்ந்திழுத்ததால்‌, இப்பகுதியையும்துலுக்கர்கள்கைப்பற்றினர்‌. இக்காலத்தில்‌, சக்திய கத்தோலிக்க வேதம்இப்பகுதியில்மறையலாயிற்று! போர்த்துக்கீசிய படையினரின்சிலுவைப்போர்உணர்விற்கு நாம்நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்‌! 1533ம்வருடம்‌, ஜனவரி 20ம்தேதியன்று, போர்த்துக்கல்‌, பாஸ்ஸேயினில்நிகழ்ந்த போரில்மகமதியரைத்தோற்கடித்து வீழ்த்தி, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி, கொடூர மூர்க்கர்களான மகமதியரின்அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது!

அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயுவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக