Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 ஆகஸ்ட், 2024

July 31 - St. Ignatius of Loyalo - அர்ச்‌. இலொயோலா இஞ்ஞாசியார்‌

 

ஜூலை 31ம்தேதி

புராட்டஸ்டன்டு பதிதத்தப்பறையிலிருந்து திருச்சபையைக்காப்பாற்றும்படியாக, சர்வேசுரனுடைய விசேஷ தேவ வரப்பிரசாதத் தைப்பெற்று, சேசு சபையை ஸ்தாபித்தவரும்‌, வேத இயல்அறிஞரும்‌, ஸ்துதியருமான அர்ச்இலொயோலா இஞ்ஞாசியார்திருநாள்‌.

 

அர்ச்‌. இஞ்ஞாசியாருடைய பெயர்‌, இக்னேஷியஸ்லோபெஸ்‌. இவர்‌, 1491ம்வருடம்‌, அக்டோபர்‌ 23ம்தேதியன்று, ஸ்பெயினிலுள்ள இலொயோலா என்ற கோட்டையில்பிறந்தார்‌. இவருடைய பெற்றோர்களுக்கு, இவர்‌ 19வது கடைசி மகனாகப்பிறந்தார்‌. 17 வயதில்‌, இராணுவத்தில்சேர்ந்தார்‌. ஒரு சமயம்ஒரு மகமதியன்‌, நமதாண்ட வருடைய தேவத்துவத்தை மறுத்தபோது, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, அவனை சாகும்வரைப்போரிடக்கூடிய தனிச்சண்டைக்கு அழைத்தார்‌. கத்திச்சண்டையின்இறுதியில்‌, அவனை வீழ்த்தி, அவன்மேல்வெற்றிகொண்டார்‌. 1509ம்வருடம்‌, நவார்வைஸ்ராயாக இருந்த அன்டோனி யோ டி லாரா என்பவருக்காக, பாம்பலூனா கோட்டையைப்பாதுகாப்பதற்காக, பிரஞ்சுப்படைக்கு எதிராகப்போரில்பங்கேற்றார்‌;

1527ம்வருடம்மே 20ம்தேதியன்று, பாம்பலூனா கோட்டை கைப்பற்றப்பட்டது! ஒரு பீரங்கிக்குண்டு, இக்கோட்டையைத் தாக்கியபோது, இவர்பெரிதும்காயப்பட்டு, உயிருக்கே ஆபத்தாகி, மருத்துவமனையில்‌, சிகிச்சைபெற்றார்‌. இவருடைய ஒரு கால்‌, காயமடைந்தது! இது, இவருடைய ஜீவிய காலமெல்லாம்ஊனமாகவே இருந்தது. மருத்துவமனையிலிருந்தபோது, நமதாண்டவருடைய ஜீவிய சரித்திரம்‌, என்கிற புத்தகமும்‌, அர்ச்சிஷ்டவர்களின்ஜீவிய சரித்திரமும்,‌ இவருக்கு வாசிக்கக்கிடைத்தன.

இவ்விரு புத்தகங்களும்‌, இவருடைய ஜீவியத்தையே, முழுமையாக மாற்றின! அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, இராணுவத்தைத்துறந்தார்‌. சர்வேசுரனுக்குத்தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார்‌; 1522ம்வருடம்‌, மார்ச்மாதத்தில்‌, மோன்செராத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதா வின்திருயாத்திரை ஸ்தலத்தில்‌, தேவ பாலனுடன்‌, பரலோக இராக்கினி, இவருக்குக்காட்சியளித்தார்கள்! பிறகு, இவர்‌, மன்ரேசா என்ற இடத்திலுள்ள ஒரு குகைக்குச்சென்று, ஏகாந்தத்தில்ஜெப தப ஜீவியத்தில்‌, ஒரு வருட காலம்ஜீவித்தார்‌.  1523ம்வருடம்‌, செப்டம்பர்மாதம்‌, அர்ச்இஞ்ஞாசியார்‌, நமதாண்டவர்ஜீவித்த புண்ணியபூமிக்கு திருயாத்திரை சென்றார்‌: 1531ம்வருடம்‌, பாரீஸ்நகரை அடைந்தார்‌; அச்சமயம்‌, பிரான்ஸ்நாட்டில்குழப்பத்தையும்‌, பதிதத்தப்பறை களையும்ஏற்படுத்திக்கொண்டிருந்த புராட்டஸ்டன்டுகளுக்கு எதிராக, பிரஞ்சுக்கத்தோலிக்கர்கள்போராட்டத்தில்‌, கால்வினிஸ்டு பதிதத் தப்பறையை பரப்பி வந்த ஜான்கால்வின்‌, பிரான்சை விட்டு ஓடிப் போனான்‌.  பாரீஸ்நகரப்பல்கலைக்கழகத்தில்‌, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, வேத இயலில்முனைவர்பட்டம்பெற்றார்‌; அச்சமயம்‌, இவர்சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, புராட்டஸ்டன்டு போன்ற பதிதத்தப்பறைகளிலிருந்து, திருச்சபையைப்பாதுகாக்கும்படி, சர்வேசுரனுடைய வேத சத்தியங்களையும்‌, ஞான உபதேசத்தையும்‌, உலகமெங்கும்கற்பிக்கும்படியான உத்தமமான கத்தோலிக்க பள்ளிக் கூடங்களையும்‌, கல்லூரிகளையும்கட்டும்படியாகவும்‌, எல்லாவற் றிற்கும்மேலாக, சேசு சபையை ஸ்தாபிக்கவும்‌, தன்னுடன்சேசுசபையில்துறவிகளாக சேர்ந்து, ஆத்துமங்களை இரட்சணியப்பாதைக்குக்கூட்டி வரும்படியாக உழைப்பதற்கு, தன்பிறகே வரக்கூடிய ஆறு  பேரைக்கவர்ந்திழுத்தார்‌:

அர்ச்‌. பிரான்சிஸ்சவேரியார்‌, அல்ஃபோன்சோ சால்மரான்‌, தியகோ லேனெஸ்‌, நிக்கோலாஸ்போபாடில்லா ஆகிய நான்கு இஸ்பானியர்களையும்‌, பீட்டர்ஃபேபர்என்கிற ஒரு பிரஞ்சு நாட்டினரும்‌, சிமாவோ ரொட்ரிகஸ்என்கிற ஒரு போர்த்துக்கல்நாட்டினரும்‌, அர்ச்‌. இஞ்ஞாசியாரைப்பின்பற்றி, முதன் முதலில்சேசுசபையில்,‌ ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல்என்கிற வார்த்தைப்பாடுகள்கொடுத்து துறவிக ளாகச்சேர்ந்த ஆறு பேர்களாவர்‌. 

1539ம்வருடம்ஆகஸ்டு 15ம்தேதியன்று, அர்ச்‌.இராயப்பர்தேவாலயத்தில்‌, மோன்மாத்தர்என்ற இடத்தில்‌, அர்ச்‌. இஞ்ஞாசியாரும்‌, இந்த ஆறு பேர்களும்‌, சேசு சபை என்கிற துறவற சபையை ஸ்தாபித்தனர்‌. இதில்சங்‌. பீட்டர்ஃபேபர்மட்டுமே ஒரு குருவாக இருந்தார்‌. மற்றவர்கள்எல்லாரும்‌, பின்னாளில்குருப்பட்டம்பெற்றனர்‌. 1580ம்வருடம்‌, 3ம்சின்னப்பர்பாப்பரசர்‌, சேசு சபைக்கு, அங்கீகாரம்அளித்தார்‌. சேசு சபை உலகெங்கிலும்பரவி, துறவற மடங்களையும்‌, தேவாலயங்களையும்‌, கல்விநிலையங்களையும்கட்டி, சகல பதிதத்தப்பறைகளிலிருந்தும்‌, சத்திய கத்தோலிக்க திருச்சபையைப்பாதுகாத்து வந்தது! அர்ச்‌. பிரான்சிஸ்சவேரியார்‌, இந்தியாவிற்கும்‌, ஐப்பான்போன்ற கீழை நாடுகளுக்கும்வந்து, சத்திய வேதத்தைப்பரப்பினார்‌.

அர்ச்இஞ்ஞாசியார்‌, 1556ம்வருடம்‌, ஜுலை 31ம்தேதியன்று பாக்கியமாய்மரித்தார்‌; 1609ம்வருடம்ஜூலை 27ம்தேதியன்று, 2ம்சின்னப்பர்பாப்பரசரால்‌ , முத்திப்பேறு பட்டமும்‌, 1622ம்வருடம்மார்ச்‌ 12ம்தேதியன்று, 18ம்கிரகோரி பாப்பரசரால்அர்ச்சிஷ்டப்பட்டமும்அளிக்கப்பட்டது! அர்ச்இலொயோலா இஞ்ஞாசியார்‌, மருத்துவமனை யில்வாசித்த தே வீடா கிறிஸ்தி என்கிற புத்தகம்‌, அதாவது நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய ஜீவிய சரித்திரம்என்கிற புத்தகமானது, ஆதித்திருச்சபையின்தந்தையர்களான மாபெரும்அர்ச்சிஷ்டவர்கள்‌ 60 பேர்எழுதிய நூல்களிலிருந்து கையாளப்பட்ட மேற்கோள்களுடன்‌, சுவிசேஷ புத்தகங்களின்விளக்க வுரை நூலாகத்தொகுக்கப்பட்டிருந்தது! எளிய தியானம்என்கிற ஜெப முறையானது, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, தனது ஞான முயற்சிகள்என்கிற தியான பயிற்சிக்காக ஏற்படுத்திய அடிப்படை பயிற்சிமுறையாக விளங்குகிறது!

அகில திருச்சபையெங்கிலும்தேவசிநேக நெருப்பைப் பற்றி யெரியச்செய்த சேசு சபையின்ஸ்தாபகரும்‌, வேத இயல்அறிஞரும்‌, ஸ்துதியருமான அர்ச்இலொயோலா இஞ்ஞாசியாரே! எங்களுக் காக வேண்டிக்கொள்ளும்! 




Life History of St. Ignatius of Loyala in Tamil. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக