Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 பிப்ரவரி, 2024

அன்புருவாய் - Tamil Catholic Songs Lyrics

அன்புருவாய்

1. அன்புருவாய் எம் நடுவில்
ஆசையுடன் வந்துதித்தீர் இந்தப் பொன்னொளியுள் வீற்றிருக்கும்
பூபதியே நமஸ்காரம்

 2. பரலோக உந்நதத்தில்
பாக்கியமாய் வாழ்பவர்
நீர்நரலோக வாசிகளுள்
நலமேது தேடி வந்தீர்?

3. நித்திய பிதாவினண்டை
நிரந்தரம் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை
சுதந்திரமாய்க் கொண்டதேனோ?

 4. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள்
வந்த தென்ன வானரசே.

5. வானமதில் மேலவர்கள்
வாழ்த்தி யென்றும் போற்றுகின்ற
ஞானமே எம் மத்தியை
 நீர் நாடினதே ஆச்சரியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக