Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Catholic Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Catholic Songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜனவரி, 2024

பூசைப் பலிபோல் - Lyrics for Tamil catholic songs

 பூசைப் பலிபோல்



1. பூசைப் பலிபோல் பாக்கியசெல்வம் புவியில் இல்லையே
புவிநிரம்ப பொன்தந்தாலும் பலிக்கு ஈடில்லையே
பரமனே இப்பலிபொருளாய் எழுந்தருள்வாரே
பக்தி ஆவல் நிரம்ப பலியை ஒப்புக்கொடுப்போமே (2) -(பூசைப் பலிபோல்)

2. அள்ள அள்ளக் குறையா சுரக்கும் அமுதம் நிறை சுனையே
அன்பில் சிறந்து உயர்ந்து நின்ற கல்வாரிப் பலியே
எல்லையில்லா பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவநோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே - (2) - (பூசைப் பலிபோல்)

 3. சோம்பல் அசதி சோர்வனைத்தும் தூரத்தள்ளியே
சீர்நிறைப்பலி ஆவல் நிரம்ப செலுத்திடுவோமே
ஆண்டவனுக்கேற்ற நன்றி ஆராதனையுமே
அளித்து பாவமன்னிப்பருளும் அடைந்திடுவோமே - (2) - (பூசைப் பலிபோல்)


Tamil Catholic songs lyrics


சனி, 4 டிசம்பர், 2021

கலங்கரைத் தீபமே - Tamil Catholic Song Lyrics

கலங்கரைத் தீபமே  
கலங்களின் தாரகையே   
துலங்கிடும் மணியே    
கலங்குவோர்க் கதியே    
காத்திடுவாய் தாயே 


மாதர்களின் மாதிரியே 
மாயிருளில் ஒளிர் தாரகையே  
மாதரசியே மனவொளி தாராய் 
மாசு அகலச் செய்வாய் 


தாயெனவே தாவி வந்தோம் 
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி 
கூவிடும் குரல் கேளாய்






to Buy Tamil Christian Books (Catholic) Click here

வியாழன், 1 ஏப்ரல், 2021

அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics


பல்லவி 


அழகின் முழுமையே தாயே 

அலகையின் தலை மிதித்தாயே 

உலகினில் ஒளி ஏற்றிடவே 

அமலனை எமக்களித்தாயே


சரணங்கள் 


1. இருளே சூழ்ந்திடும்போதே

உதய தாரகை போலே 

அருளே நிறைந்த மாமரியே 

அருள்வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம் 

அன்னை உனைப் பின் செல்வோம் 

உன்னைத்துணையாய்க் கொள்வோம் 

என்றும் பாவத்தை வெல்வோம்