Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சேசுவின் மதுர இருதயம் - Tamil Catholic Songs Lyrics

சேசுவின் மதுர இருதயம் 

1. சேசுவின் மதுர திரு இருதயமே
சிநேக அக்கினி மயமே
தினமும் நீர் எங்கள்
சிநேகமாயிருப்பீர் தேவ தயாநிதியே

 2. மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க மனுமகனாய்ப் பிறந்தாய்
மகிமை பிரதாப கடவுளானாலும்
மாபழி மேற்சுமந்தாய்.

3. கள்ளளைப் போல கசடர்கள் உன்னைக் கடுஞ்சிலுவையி லறைந்தார்
கருணை ஆர் உந்தன் இருதய அன்பின் கரை எவர் கண்டறிவார்

4. உம் திரு ரத்தம் ஒரு துளி முதலாய் உனக்கென வைத்தாயோ ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திவ்ய இருதயமே

 5. என்றும் எம்மோடு இருந்தருள்
ஈவாய் இனிய நல்லுணவாவாய். இவையெல்லாம் பாரா ஈனர்கள்
நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே

6. நன்மைமேல் நன்மை என்றும் நீ செய்தாய் நாங்களோ தீமை செய்தோம். நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நாணி இப்போ தழுதோம்

7. எங்களைப் பாரும் இடர்குறை தீரும் இனிய நல்லிருதயமே எந்தெந்தப்
பாவ தந்திரம் நின்று
இரட்சிப்ப துன் பொறுப்பே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக