Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

August Saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
August Saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 14 - ST. EUSEBIUS OF SAMOSATA, அர்ச்‌. யுசேபியுஸ்

 

ஆகஸ்டு 14ம் தேதி

வேதசாட்சியும் மேற்றிராணியாருமான  அர்ச்‌. யுசேபியுஸ் திருநாள்


            இவர் சிரியா நாட்டில், சமோசட்டா என்ற நகரின் மேற்றிராணியாராக ஜீவித்தார்; ஆரிய பதித சக்கரவர்த்தியான வாலென்ஸ் ஆண்டபோது, ஆரிய பதிதர்களால், கத்தோலிக்கர்கள் மிகக் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, உபத்திரவப்படுத்தப்பட்டனர்; இக்காலத்தில், இவர் மேற்றிராணியாராக, மகா உறுதியான கத்தோலிக்க வேத விசுவாசத்துடனும், ஞானத்துடனும், தனது ஞான மந்தையை ஆரியப் பதிதத் தப்பறையிலிருந்து பாதுகாத்தார்; ஆரிய பதிதத்தப்பறைக்கு எதிராக, அதை அழித்து ஒழிக்கும்படியாக, கத்தோலிக்க தியானப் பிரசங்கங்களைப் பிரசங்கித்து வந்தார். ஒரு இராணுவ அதிகாரிபோல், மாறுவேடம் அணிந்து, சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும், ஆரியப் பதிதர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த கத்தோலிக்கர்களைச் சந்தித்து, ஆறுதலளித்தார்; தேவசிநேகத்தை அவர்களுடைய இருதயங்களில் தூண்டவும், அவர்களை தேவ விசுவாசத்திலும், தேவ நம்பிக்கையிலும் திடப்படுத்துவதற்குத் தேவையான ஞான அறிவுரைகளை அளித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

            மேலும், கத்தோலிக்கர்களுக்கு ஞானபோஷாக்கை அளிப்பதற்குத் தேவையான குருக்களை ஏற்படுத்தும்படியாக, அங்குக் குருமடங்களிலுள்ள தியாக்கோன்மார்களுக்குக் குருப்பட்டம் அளித்தார்; மேலும், அப்பிரதேசங்களில் ஆரிய பதிதர்களால் வெகுவாக துன்பப்பட்டுக்கொண்டிருந்த மேற்றிராணிமார்களுக்குத் தேவையான ஞான ஆலோசனையையும், மற்ற ஆத்தும சரீர நன்மைகளையும் உதவிகளையும், ஆறுதல்களையும், அவ்வப்போது, அளிப்பதில் அயராமல் ஈடுபட்டிருந்தார்.  ஆரிய பதிதர்களின் ஆதரவாளனான கான்ஸ்டன்சியுஸ் சக்கரவர்த்தி, அந்தியோக்கு நகரின் அதிமேற்றிராணியாராக கத்தோலிக்க மேற்றிராணியார் வந்.மெலெடியுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஒரு ஆணை மடலை யுசேபியுஸ் மேற்றிராணியார், கொண்டிருப்பதைக் கேள்வியுற்றான்; அந்த கத்தோலிக்க அதிமேற்றிறாணியாரை நீக்க வேண்டும் என்று ஆரிய பதிதர்கள், சக்கரவர்த்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்;அந்த வேண்டுகோளை, நிறைவேற்ற ஆசித்த  சக்கரவர்த்தி, அந்த ஆணை மடலை, இரத்து செய்யும்படி, இவருக்குக் கட்டளையிட்டான்.

            ஆனால், சக்கரவர்த்தியின் கட்டளையை, அர்ச்‌.  யுசேபியுஸ் துணிச்சலுடன் நிறைவேற்ற மறுத்துவிட்டார்; இதைக் கேட்டு சீற்றத்துடன் வெகுண்டெழுந்த சக்கரவர்த்தி, ஆணை மடலை இரத்து செய்யவில்லையென்றால், மேற்றிராணியார் யுசேபியுஸினுடைய வலது கரம் துண்டிக்கப்படும் என்று ஒரு செய்தியை அனுப்பினான்; அந்த செய்தியை அவரிடம் கொண்டு வந்த தூதுவனிடம், அர்ச்‌. யுசேபியுஸ், தனது இரண்டு கரங்களையும் காண்பித்து, இவை இரண்டையும் வெட்டி விடுங்கள்! ஆனால், ஆரிய பதிதத்தினுடைய பாவாக்கிரமத்தையும் தீமையையும் கண்டித்துப் புறம்பாக்குகிற திருச்சபை சங்கக்தினுடைய இந்த ஆணை மடலை, நான் கைவிட முடியாது! என்று உறுதியான குரலில் கூறினார்; சக்கரவர்த்தி, அர்ச்‌. யுசேபியுஸ், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது உறுதியான பற்றுதலுடனும், தீர்மானமான பிடிவாதத்துடனும் இருப்பதை அறிந்த சக்கரவர்த்தி ஆச்சரியப்பட்டான்; அவருக்கு தீங்கு ஒன்றும் செய்யாமல் விட்டான்.

             அர்ச்‌. யுசேபியுஸ் கத்தோலிக்க வேத சத்தியங்கள் மட்டில் கொண்டி ருந்த இந்த தளரா ஊக்கமும் ஆர்வமும் தான்,அர்ச்‌. நசியான்சென் கிரகோரியார், இவரைதிருச்சபையின் தூண்!” என்றும், “சர்வேசுரனுடைய தேவ கொடை!” என்றும், “வேத விசுவாசத்தின் விதிமுறை!” என்றும் அழைப்பதற்குக் காரணமாயிருந்தது! அந்தியோக்கு அதிமேற்றிராணியார் காரியத்தில், அர்ச்‌. யுசேபியுஸ் அடைந்த வெற்றியைக் கண்டு  பொறுக்காத ஆரியப்பதிதர்கள், அடுத்து வந்த சக்கரவர்த்தியான வாலென்ஸ் மூலமாக, , அர்ச்‌. யுசேபியுஸை திராஸ் நாட்டிற்கு நாடு கடத்தினர். 378ம் வருடம், சக்கரவர்த்தி வாலென்ஸ் இறந்தபிறகு, அர்ச்‌. யுசேபியுஸ் மறுபடியும், அவருடைய மேற்றிராசனத்திற்கு வர அனுமதிக்கப்பட்டார். அவரும் முன்பு செய்ததைப்போல, ஆரியப் பதிதத்திற்கு எதிராக அதை அழிப்பதற்கான அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்.

            சமோசட்டா நகருக்கருகிலுள்ள டோலிகா என்ற நகரில், மாரிஸ் என்ற மேற்றிராணியாருடைய அபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த அர்ச்‌. யுசேபியுஸ் மீது, ஆரியப் பதிதத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு ஓட்டை எறிந்தாள். அந்த ஓடு இவரு டைய தலையை மிக மோசமாகக் தாக்கிக் காயப்படுத்தியது; அதனால் சில நாட்கள் வேதனைமிகுதியால், துன்ப உபத்திரவப்பட்டார்; இவ்வலியைப் பொறுமையுடன் அனுபவித்தார்; ஆரிய பதிதத் தப்பறை அழிந்து, திருச்சபையிலிருந்து முற்றிலுமாக நீங்கும்படியாக, இக்கொடிய வேதனை நிறைந்த உபத்திரவத்தை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். சில நாட்களுக்குப் பின், 380ம் வருடம், பாக்கியமாய் மரித்தார்; இவ்விதமாக மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.  

மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச.யுசேபியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சனி, 10 ஆகஸ்ட், 2024

August 10 - St. Lawrence, அர்ச்‌. லாரன்ஸ்

 

ஆகஸ்டு 1️0️ம்தேதி

 

உரோமை தலைமை தியாக்கோனும்ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்‌.  லாரன்ஸ்திருநாள்


 

                இவர்‌, 225ம்வருடம்‌, ஸ்பெயினில்‌, ஹூஸ்கா என்ற இடத்தில்பிறந்தார்‌. இளைஞராயிருந்தபோது, இவர்உயர்கல்வி கற்பதற்காக சரகோசாவிற்கு அனுப்பப்பட்டார்‌; அங்கு தான்‌, இவர்எதிர்காலத்தில்‌ 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசராக திருச்சபையை ஆளவிருந்தவரைச்சந்தித்தார்‌; இருவரும்‌, ஸ்பெயினை விட்டு உரோமாபுரிக்குச்சென்றனர்‌. 257ம்வருடம்‌, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரானதும்‌, லாரன்ஸ்‌, இப்பாப்பரசரிடம்‌, உரோமையின்ஏழு பேர்களில்ஒருவராக தியாக்கோன்பட்டம்பெற்றார்‌. இவர்தலைமை தியாக்கோனாக பொறுப்பேற்றார்‌; திருச்சபையின்திரவிய சாலையின்பொறுப்பையும்‌, ஏழைகளுக்கு தர்மம்அளித்துப்பராமரிக்கும்அலுவலையும்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, பெர்ஷிய நாட்டில்போரில்ஈடுபட்டிருந்த அஞ்ஞான உரோமைச்சக்கரவர்த்தியான வலேரியன்‌, உரோமாபுரியிலிருக்கும்எல்லா கத்தோலிக்கக்குருக்களையும்கொன்றுபோடும்படியான ஒரு அரச ஆணையை அனுப்பினான்‌; உரோமையிலுள்ள அஞ்ஞான விக்கிரகங்களைப்பாதுகாக்கும்நோக்கத்துடனேயே இந்த அரச ஆணையை அனுப்பியிருந்தான்‌.

                ஏனெனில்‌, அந்நேரம்‌, இதற்கான தீவிரப்பிரச்சாரத்தின்போது வலேரியன்‌, மிக ஆபத்தான துன்பங்களுக்கு ஆளானான்‌; அதன் காரணமாக,அவன்விரைவிலேயே பெர்ஷியர்களால்பிடிக்கப்படவும்‌, அதன்விளைவாக, மரண தண்டனையையும்‌, அடையவும் கூடும்என்கிற ஆபத்தான நிலையிலிருந்தான்‌; வலேரியனுடைய இந்த அரச ஆணையின்உடனடி விளைவாக, 258ம்வருடம்‌, ஆகஸ்டு 6ம்தேதியன்று, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌, அர்ச்‌. காலிக்ஸ்துஸ்பாப்பரசரின்கல்லறைச்சுரங்கத்தில்‌, திருவழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டு, வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌. அதே சமயத்தில்‌, பாப்பரசருடன்கூட அவருடைய தலைமை தியாக்கோனான அர்ச்‌. லாரன்சும்கைது செய்யப்பட்டார்‌; அனால்‌, இவர்திருச்சபையின்திரவியசாலையின்பொறுப்பாளர்என்பதை, உரோமை ஆளுநன்அறிந்தவுடன்‌, இவரிடமிருக்கும்திருச்சபையின்திரவியசாலையை, மூன்று நாட்களுக்குள்‌, தன்னிடம்ஒப்படைத்தால்‌, இவரை உயிருடன்விட்டு விடுவதாகக்கூறினான்‌. அர்ச்‌. லாரன்ஸ்விரைவாக செயல்பட்டு, திருச்சபையின்திரவியத்தை, பணத்தை, ஏழைகளுக்குப்பகிர்ந் தளித்தார்‌; மூன்று நாட்களுக்குப்பிறகு, ஏழைகளையும்முடவர்களையும்‌, உரோமை ஆளுநன்முன்பாகக்கூட்டி வந்து, “இதோ! நான்உங்களிடம்காண்பிப்பதாக வாக்களித்திருந்த திருச்சபையின்பொக்கிஷ திரவியங்கள்,‌ இந்த ஏழைகளிடம்இருக்கிறது! இப்பொக்கிஷங்களுடன்கூட, திருச்சபையின்கிரீடங்களாகத்திகழும்‌, ஏழை விதவைகள்‌, மற்றும்சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர்கள்என்கிற முத்துக்களையும்‌, விலை மதிப்பில்லாத இரத்தினக்கற்களையும்சேர்த்துக்காண்பிப்பேன்‌! திருச்சபை மெய்யாகவே, மிகுந்த செல்வ வளமுடையதாக உங்களுடைய சக்கரவர்த்தியை விட, அதிக செல்வ வளமுடையதாகத்திகழ்கிறது!” என்று கூறினார்‌.

                உரோமை ஆளுநன்‌, இதைக்கேட்டு மிகவும்சீற்றமடைந்தான்‌; அர்ச்‌. லாரன்ஸை, மெதுவாக அதே சமயம்‌, மிகக்கொடிய வேதனை நிறைந்த மரணத்தை அளிக்கும்படியான மரண தண்டனைக்குத்தீர்ப்பிட்டான்‌; அதற்காக, ஒரு பெரிய இரும்புக்கட்டில்தயார்செய்யப்பட்டது; அதன்அடியில்எரியும்கரிகளால்‌, அது,‌ சூடேற்றப்பட்டது;அந்த கட்டில்மேல்படுக்க வைத்து, அர்ச்‌.  லாரன்ஸை, உயிருடன்மெதுவாக, வறுத்தெடுக்க உத்தரவிட்டான்‌. பரிசுத்த தியாக்கோன்லாரன்ஸ்‌, சூடேற்றப்பட்டுக்கொண்டிருந்த அந்த இரும்புக்கட்டிலில்‌, கிடத்தப் பட்டு, நீண்டநேரம்தாங்கமுடியாக அந்த சூட்டினால்‌, வறுத்தெடுக்கப்படுகிற மிகப்பயங்கரமான வேதனையை அனுபவித்த பிறகு, “சகோதரரே! என்னுடைய ஒரு பக்கம்நன்றாக வெந்து விட்டது; அடுத்த பக்கமும்நன்றாக வேகும்படியாக, என்னைத்திருப்பிப் போடுங்கள்‌!” என்கிற தனது மிகப்பிரசத்திபெற்ற வாக்கியத்தை, பரலோக மகிழ்ச்சியுடனும்‌, இனிய முகத்துடனும்‌, கொலைஞர்களிடம்கூறினார்‌. பின்பரலோகத்தை நோக்கி, உரோமாபுரியின்மனந்திரும்புதலுக்காக ஜெபித்து வேண்டிக் கொண்டார்‌; அதன்பின்மரித்தார்‌!

                அர்ச்‌. லாரன்சின்வேதசாட்சிய மரணத்தின்இக்காட்சியைக்கண்ட உரோமை செனட்டர்களில்அநேகர்‌, மனந்திரும்பினர்‌! அவர்களே, எரிந்துபோன அர்ச்‌. லாரன்சின்பரிசுத்த சரீரத்தை, பக்திபற்றுதலுடன்‌, சுமந்து சென்று, பூஜிதமாக திவோலியினரு கிலிருக்கும்‌, வெரோனா வயல்வெளியிலுள்ள ஒரு குகையில்பூஜிதமாக அடக்கம் செய்தனர்‌. 258ம்வருடம்ஆகஸ்டு 10ம்தேதி,அர்ச்‌. லாரன்ஸ்‌, வேதசாட்சியாக, உயிருடன்சூடேற்றப்பட்ட ஒரு இரும்புக்கட்டிலில்வறுத்தெடுக்கப்பட்டுக்கொல்லப்பட்டார்‌. 

                ஏறக்குறைய நூறு வருடங்களுக்குப்பிறகு, மகாக்கான்ஸ்டன்டைன்பேரரசர்‌, அர்ச்‌. லாரன்சின்கல்லறையின்மேல்ஒரு தேவாலயத்கைக்கட்டினார்‌. பின்னாளில்‌, முதலாம்தமாசுஸ்பாப்பரசர்‌, இத்தேவாலயத்தை சீரமைத்து, பெரிய பசிலிக்கா தேவாலயமாகப்புதுப்பித்துக்கட்டினார்‌. இது தான்‌, சான்லொரன்சோ ஃபுவோரி லே முரா என்று, இக்காலத்தில்அழைக்கப்படுகிற அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயம்‌.  இந்த தேவாலயத்தில்‌, முதல்வேதசாட்சியாக மரித்த அர்ச்‌. முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்கூட, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டி ருக்கிறது! 2ம்பெலாஜியுஸ்பாப்பரசர்‌, இப்பசிலிக்கா தேவாலயத்தைப்புதுப்பித்துக்கட்டியபோது, கான்ஸ்டான்டிநோபிளிலிருந்த அர்ச்‌.  முடியப்பருடைய பரிசுத்த சரீரத்தை, இப்பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம்செய்தார்‌! இந்த பசிலிக்கா தேவாலயத்தில்‌, ஹிலாரியுஸ்பாப்பரசரும்‌ 9ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக் கின்றனர்‌. அர்ச்‌. லாரன்ஸ்கிடத்தப்பட்டிருந்த அந்த பெரிய இரும்புக்கட்டில்‌, லூசினாவில்‌, அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயத்தில்‌, 2ம்பாஸ்கால்பாப்பரசரால்பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

                அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. லாரன்சின்பரிசுத்தத்தலை அடங்கிய அருளிக்கப்பேழை, வத்திக்கானில்பொது வணக்கத்திற்காக வைக்கப்படும்‌!  1557ம்வருடம்‌, ஆகஸ்டு 10ம்தேதி, அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. குவென்டின்என்ற இடத்தில்நிகழ்ந்த போரின் போது, அடைந்த வெற்றியின்நினைவாக ஸ்பெயின்அரசரான 2ம்பிலிப்அரசர்‌, அர்ச்‌. லாரன்சிற்குத்தோத்திரமாக ஒரு மாளிகையைக்கட்டினார்‌. இக்கட்டிடம்‌, அர்ச்‌. லாரன்சிற்கு மகிமையாக அவர்வேதசாட்சியாகப்பாடுபட்டு மரித்த இரும்புக்கட்டில்வடிவத்தில்அமைக்கப்பட்டது!

தியாக்கோனும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!