Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 10 மார்ச், 2019

மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்




மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்

அர்ச். தோமினிக் சாவியோ தன் கற்பை பழுதின்றி காப்பற்ற பெரு முயற்சி செய்வார்.  ஒரு சமயம் ஒரு வினோத காட்சிகள் நடக்கும் கடைத் தெரு வழியாக அவர் தன் தோழர்களோடு செல்ல நேரிட்டது.  மற்றவர்கள் அக்காட்சிகளை கண்டு ரசித்துக் கொண்டே போனார்கள். ஆனால் சாவியோ தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
இதை கண்ட நண்பர்கள் இக்காட்சிகளை எல்லாம் இப்பொழுது பார்த்துச் சந்தோ´க்கவிட்டால் உன் கண்களை எதற்காக வைத்து கொண்டிருக்கிறாய் என்று ஏளனமாக கேட்டார்கள்.  அதற்கு அவர் நான் மோட்சம் சென்றவுடன் மாதாவின் திருமுகத்தை பார்க்கப் போகும் இக்கண்களைக் கொண்டு இந்தக் காட்சிகளை காண விரும்பவில்லை என்று பதிலளித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக