Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2024

Tamil Christian QUotes - 14 - St. Augustine

 "இதென்ன அதிசயம் ஆண்டவரே? பாவம் செய்தவன் நான்; தேவரீர் எதற்காகத் தண்டிக்கப்பட்டீர்!

அர்ச். அகுஸ்தினார்

Tamil Christian Quotes - 13 - St. Augustine

 "சர்வேசுரன் தம் வல்லமையைக் கொண்டு நம்மைப் படைத்தார்; தம்முடைய பலவீனத்தைக் கொண்டு நம்மை மீட்டு இரட்சித்தார்!"


அர்ச். அகுஸ்தினார்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

Tamil Christian Quotes 8 - St. Philip Neri

 "அர்ச்சியசிஷ்டவனாவதற்கு மெய்யாகவே மனதுள்ளவன் அபத்தமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டாலும் பரிச்சேதம் அதை மறுத்துப்பேச ஞாயஞ்சொல்ல முயலவொண்ணாது" என்று அர்ச். பிலிப்புநேரி 

Tamil Christian Quotes 2

. அர்ச்.  தோமாஸ் ஆகெம்பீஸென்பவர் "மெய்யாகவே தாழ்ச்சி யுள்ளவனா யிருப்பவன் தன்னைத் தானே நிந்திப்பது மன்றி தான் பிறரால் நிந்திக்கப்படவும் ஆசிப்பான்"

Tamil Catholic Quotes 1

 "நீ, சகல மனிதரிலுங் கடைகெட்டவனாக உன்னைப் பாவித்துக் கொள்ளாவிட்டால், மற்றவர்கள் உன்னிலும் மேலாக எண்ணப்பட நீ ஆசியாவிட்டால், சாங்கோபாங்கத்தில் விருத்தியடைந்திருப்பதாக நம்பாதே"  அர்ச். தெரேசம்மாள்

ஞாயிறு, 10 மார்ச், 2019

Our Lady Quotes (Tamil) மரியாயின் மகிமை



மரியாயின் மகிமை

“இவளிடமாய் கிறிஸ்தெனப்படுகிற சேசுநாதர் பிறந்தார்” (மத். 1: 16) என்று சொல்வதே போதுமானதே ! இதைவிட அதிகப்படியாக  இக்கன்னிகையின் மகிமைகளைப்  பற்றி சுவிசேஷத்தில் ஏன்    தேடுகிறீர்கள்?  மாதா கடவுளிள் தாய்.  என்று அத்தாட்சி கொடுப்பதே போதுமே! இந்த அத்தாட்சியிலே மாதாவின் சகல சலுகைகளும் விவரமாய் கூறிவிட்ட சுவிசேஷகர்கள் அவைகளைப்பற்றி தனித்தனியே கூறத்தேவையில்லை.

- அர்ச். வில்லனோவா தோமையார்.

வெள்ளி, 1 மார்ச், 2019

St. Joseph Tamil Quotes





Our lady Quotes on Tamil

இருதய தாழ்ச்சியும் சாந்தமுடைத்தான மாசற்ற இருதயமே

எங்கள் இருதயம் சேசுவின் திரு இருதயம்   போலாகும்படி கிருபை செய்யும்

Sacred Heart Quotes in Tamil

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள சேசுவே

எங்கள் இருதயம் உமது இருதயத்தை  போலாகும்படி கிருபை செய்யும்

புதன், 20 பிப்ரவரி, 2019

தேவதூதர்களின் மகத்துவம்

தேவதூதர்களின் மகத்துவம் ஆழம் காண முடியாததும்,
கரைகள் அற்றதுமான பெருங்கடலுக்கு ஒப்பானது. அது, மனித
மனத்திற்கு எட்டாத பெரும் பாதாளம்! தேவதூதர்களின் இயல்பு
அல்லது சுபாவம் எந்தக் குறைபாடுமில்லாத பூரண முழுமையாக
இருக்கிறது. தேவதூதர்களில் மிகச் சிறியவர்களும் கூட, தேவதாயார்
நீங்கலாக, மற்ற அனைத்து புனிதர்களையும் விட மேலானவர்கள்
என்று புனித அம்புரோஸ் கூறுகிறார்.



“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு



நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசுவிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப உதவிக்குஎன்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோலிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.


Tamil Catholic Quotes & Prayer 2