Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 20 - வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர்

ஏப்ரல் 29ம் தேதி


வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர் திருநாள்




இவர் 1206ம் வருடம் வட இத்தாலியிலுள்ள வெரோனா நகரில் பிறந்தார்; இச்சமயம் இப்பகுதியில் கத்தாரியப் பதிதத் தப்பறை வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; இவர் கத்தோலிக்கப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார்; பின்னர், பொலோஞா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார்.

1221ம் வருடம், இவர் தனது 15வது வயதில், அர்ச்.சாமிநாதரை சந்தித்தார்; அர்ச்.சாமிநாதரின் துறவற சபையில் சேர்ந்தார்; வட இத்தாலியிலும்  மத்திய இத்தாலியிலும் இவர் புகழ்பெற்ற பிரசங்கி யாராகத் திகழ்ந்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, விசேஷமாக வட இத்தாலியில் அநேக மனிதர்களை தன் வசப்படுத்தியிருந்த கத்தாரியப் பததித்தப்பறையை எதிர்த்து கத்தோலிக்க ஞானப் பிரசங்கத்தை நிகழ்த்தினார்; 9ம் கிரகோரி பாப்பரசர்,1234ம் வருடம், இவரை வட இத்தாலியின் பொது தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார். இவர், உரோமாபுரி, ஃபுளாரன்ஸ், பொலோஞா, ஜெனோவா, கோமோ என்ற நகரங்களுக்கும் , இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 1243ம் வருடம் புதிதாக , துவங்கிய மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர்கள் துறவற சபையை ஏற்படுத்துவதற்கான பாப்பரசரின் அனுமதியைப் பெறுவதற்காக, இவர் பரிந்துரை செய்தார்.

1251ம் வருடம், 4ம் இன்னசென்ட் பாப்பரசர் , இவருடைய புண்ணியங் களுடையவும், கடின தபசினுடையவும் ஜீவியத்தைப்பற்றியும், இவர் கற்றறிந்த வேத இயலின் அறிவைப் பற்றியும், இவருடைய பிரசங்கம் செய்யும் திறனைப் பற்றியும், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது இவருடைய இருதயத்தில் பற்றியெரிந்த ஆர்வத்தைப் பற்றியும், அறிந்தவராக, இவரை லொம்பார்டியில் நீதி விசாரணையாளராக ஏற்படுத்தினார். இந்த அலுவலில், இவர் ஆறு மாத காலம், அயராமல் ஈடுபட்டிருந்தார்.

இவர் தனது பிரசங்கங்களில், பதிதத் தப்பறைகளையும், வார்த்தையால் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக, ஆனால், அதே சமயம்,அதற்கு எதிராக பதிதத்தப்பறையில் ஜீவிக்கிற கத்தோலிக்கர்களையும் இவர் மிகக் கடுமையாகக் கண்டித்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவரைச் சந்தித்தனர்; இவரைப் பின்பற்றினர்; ஏராளமான மனந்திரும்புதல்கள் நிகழ்ந்தன! அநேகக் கத்தாரிய பதிதர்களும் மனந்திரும்பி, கத்தோலிக்க வேதத்திற்குத் திரும்பி வந்தனர்.

இவர் அடிக்கடி அர்ச்சிஷ்டவர்களுடன் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்; ஒருநாள், வேதசாட்சிகளாக மரித்த பரிசுத்த கன்னியர் களான அர்ச். கத்தரீனம்மாள், அர்ச். ஆக்னசம்மாள், அர்ச். செசிலியம்மாள் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இச் சமயம், இவருடைய அறையைக் கடந்து சென்ற ஒரு துறவி, மடத்தின் அதிபரிடம், பெண்கள் சிலருடன் இவர் அறையில் பேசிக் கொண்டிருப்பதாக, இவரைப் பற்றி புகார் செய்தார். உடனே, அதிபர் இதைப் பற்றி, இவரிடம் எதுவும் கேட்காமல், எந்த தயக்கமும் இல்லாமல், இவரை ஒரு மடத்திற்கு அனுப்பி, அங்கு எந்த பிரசங்கமும் செய்யக்கூடாது என்று தண்டித்தார்.

அதிபர் இட்ட இக்கட்டளைக்கு, இவர் தாழ்ச்சியுடன் உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், பாடுபட்ட சுரூபத்தில், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது , தன்னுடைய அவப்பெயரினால், அவரைக் கை நெகிழ்ந்ததாகக் கூறி தன்னைப் பற்றியே, முறையீடு செய்தார். உடனே, பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவர், இவரை நோக்கி, “பீட்டர்! நான் கூட மாசற்றவராக இல்லையா? மாபெரும் துயரங்களை சந்தோஷத்துடன் துன்புற என்னிடமிருந்து கற்றுக் கொள்!” என்று கூறினார். இறுதியாக இவருடைய மாசற்றதனம் அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டது! இவருடைய பங்கிற்கு, இந்த ஏகாந்தத்தின் காலத்தில், இவர் நிந்தனையையும், தாழ்வாக நடத்தப்படுதலையும், நேசிக்கக் கற்றுக் கொண்டார். மறுபடியும், இவர் பிரசங்கிப்பதில் ஈடுபட்டார்; இவர் அறிவுறுத்திக்கூறிய பிரசங்கங்களுடன் புதுமைகளும் நிகழ்ந்தன! இத்தாலி முழுவதும் பயணத்தை மேற்கொண்ட இவர் நாடெங்கிலும் புகழ்பெற்றார்.

ஒருசமயம் இவர் மிகப் பெரிய கூட்டத்தில் பிரசங்கம் நிகழ்த்தியபோது, வெயில் மிக உக்கிரமமாக இருந்தது;  பதிதர்கள் இவரைநோக்கி நிழலைக் கொண்டு வரும்படி கூக்குரலிட்டனர்; இவர் அதற்காக ஜெபித்தார்; உடனே, இவர் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு மேகம் புதுமையாக நிழலிட்டது!

ஒவ்வொரு நாளும் நடுப்பூசையின் போது, “ஆண்டவரே! தேவரீர் எனக்காக மரித்ததால், நானும் தேவரீருக்காக இறந்துபோவதற்கான வரத்தை எனக்கு அருளும்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டு வந்தார். இவருடைய ஜெபம் கேட்கப்பட்டது.

1522ம் வருடம் மிலான் நகரைச் சேர்ந்த கத்தாரிய பதிதத்தைச்சேர்ந்த ஒரு கூட்டத்தினர், அர்ச்.பீட்டரைக் கொல்ல சதித்திட்டமிட்டனர்.  ஒருசமயம், கோமோவிலிருந்து மிலானுக்குத் திரும்புகிற சமயத்தில்,  கொலைகாரர்கள் இவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பார்லாசினா என்ற இடத்தில் அர்ச்.பீட்டர், சக துறவியான டோமெனிகோவுடன் தனியாக வந்தபோது, ஒரு கோடரியால் இவருடைய தலையில் ஒரு வெட்டு வெட்டினர்! இவருடைய சக துறவியை அடித்து சாவுக்குரிய காயத்தை ஏற்படுத்தினர். கீழே விழுந்த அர்ச்.பீட்டர்,  எழுந்து முழங்காலிலிருந்தபடி, அப்போஸ்தலர் களின் விசுவாசப் பிரமாணத்தை ஜெபித்தபடி, தனது இரத்தத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக பலி செலுத்தும்விதமாக, தனது விரல்களை தன் இரத்தத்தில் நனைக்கும்படியாக, மூழ்கச் செய்து எடுத்து, அதனால் தரையில் நிசே விசுவாசப்பிரமாணத்தின் “ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன்,” என்கிற முதல்  வாக்கியத்தை "Credo in Unum Deum",  என்று இலத்தீனில் எழுதியபடியே மரித்தார். அந்தகோடரியின் வெட்டு, அர்ச். வெரோனா நகர் இராயப்பரின் தலை உச்சியைத் துண்டித்திருந்தது. இரத்தம் அதிலிருந்து பிரளயமாக தரையில் வழிந்தோடியது.இவருடைய சக துறவி டோமெனிகோ, மேதா என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்; அங்கு இவர் 5 நாட்களுக்குப் பின் மரித்தார்.

கத்தாரியப் பதிதம் என்றால் என்ன?

இத்தப்பறையானது, கெட்ட கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்றும்,உலகத்தில் காணப்படுகிற யாவற்றையும், கெட்ட கடவுள் நல்ல கடவுளிடமிருந்து அபகரித்துக் கொண்டு அவற்றை உலகத்தில் விட்டிருக்கிறதாகவும், மனிதர்களுடைய சரீரங்களுக்குள் இருக்கிற ஆவி, நல்ல கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும், யாராவது மரித்தால், அவர்களுடைய ஆவியை  ஒரு புதிய உடம்பினுள் கெட்ட கடவுள் செலுத்திவிடும் என்றும்,இது அந்த ஆவியின் மறு ஜென்மப் பிறப்பு என்றும்  இத்தொடர் பிறப்புகளிலிருந்து தப்பிக்க துப்புரவுப்படுத்துகிற ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்றும் அபத்தமான போதனைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் பாவம்  உண்டு! என்கிற நம் வேத சத்தியத்தை இப்பதிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அர்ச்.வெரோனா நகர் இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read about more saints : Click Here

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

அர்ச். பிளெய்ஸ் (St. Blaise)

அர்ச். பிளெய்ஸ் ✠ (St. Blaise)



*வேதசாட்சி, பரிசுத்த உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316


*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

அர்ச். பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. அர்ச் பிளெய்ஸ், வேதசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய அர்ச். பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் குழந்தைக்காக செபித்தார்.; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.


St. Blaise


Little is known about St. Blaise, a 4th-century bishop who died a martyr. He was forced to flee due to religious persecution. While hiding in a cave, legend has it that he was discovered by a group of hunters, who found him surrounded by wild animals he had tamed. The hunters dragged him off to prison. On the way, he encountered a mother with a young son who had a bone stuck in his throat. Blaise commanded the bone be dislodged, and the child coughed up the bone.

St. Blaise's feast day is celebrated with the Blessing of the Throats with the following prayer:

Through the intercession of St. Blaise, bishop and martyr, may God deliver you from ailments of the throat and from every other evil. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.


St. Blaise is also venerated as one of the "Fourteen Holy Helpers," a group of saints invoked as early as the 12th century in Germany and who are honored on Aug. 8: St. Denis of Paris (headache and rabies), St. Erasmus or Elmo (colic and cramp), St. Blaise (throat ailments), St. Barbara (lightning, fire, explosion and sudden and unprepared death), St. Margaret (possession and pregnancy), St. Catherine of Alexandria (philosophers and students, and wheelwrights), St. George (protector of soldiers), Sts. Achatius and Eustace (hunters), St. Pantaleon (tuberculosis), St. Giles (epilepsy, insanity, and sterility), St. Cyriac (demonic possession), St. Vitus (epilepsy), and St. Christopher (travelers). The German Dominicans promoted this veneraion, particularly at the Church of St. Blaise in Regensburg (c. 1320).

சனி, 6 ஜனவரி, 2024

அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாள்: வேதபோதக நாடுகளின் பாதுகாவலி

 எஸ்கிமோக்கள் என்ற உறைபனி நாட்டில் வாழும் மனிதர்களிடம் சத்திய வேதத்தைப் போதிப்பதற்காக அமலோற்பவ மாதாவின் சபையைச் சேர்ந்த வேதபோதக சபைக் குருக்கள் (Oblates of Mary Immaculate) கனடா நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹட்சன் வளைகுடாவில் தங்கள் வேதபோதக அலுவலை துவக்கியிருந்த போது, சங். ஆர்சின் டர்குவெடில் O.M.I சுவாமியார் 1911ம் வருடம் முதல் 1915 அங்கு சென்று அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டு அவர்களுக்கு நம் ஆண்டவரைப்பற்றிய சுவிசேஷத்தையும் நம் வேதத்தின் ஞானஉபதேசத்தையும் கற்பித்து வந்தார். 1916ம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டில், அவருடைய வேதபோதக அலுவலினால் அங்கு எந்த ஒரு வெளிப்படையான ஞானபலனும் ஆத்தும ஆதாயமும் இல்லாமல் போனது. அந்த ஹட்சன் வளைகுடாக் கடல் உறைந்து போகக்கூடிய பனிக்காலத்திற்கு முன் அக்டோபர் மாதத்தில் ஒரு விநோதமான அதிசயம் நிகழந்தது.

அம்மாதத்தில் அப்பகுதிக்கான கடைசி படகு வந்து சேர்ந்தது. அதில் யாரோ ஒருவர் சுவாமியாருக்கு இரு கடிதங்கள் அனுப்பியிருந்தனர். முதல் கடிதத்தில் "ஒரு சிறிய ஆன்மாவின் வரலாறு" என்ற அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாளைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது. அதில் அந்த சிறிய அர்ச்சிஷ்டவள் வேதபோதக அலுவல்மீது கொண்டிருந்த உன்னதமான ஆர்வத்தைப்பற்றியும் பனிமீது அவள் கொண்டிருந்த நேசத்தைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தன. மற்றொரு கடிதத்தில் சிறுமலர் அர்ச்,தெரசம்மாளின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட தூசி இருந்தது. உடனே சங். டர்குவெடில் சுவாமியாரின் மனதில் ஒரு எண்ணம் தூண்டப்பட்டது. அன்று மாலையே சில எஸ்கிமோக்களை தன் அறைக்கு வந்து அங்கிருக்கும் அடுப்பினருகில் அமர்ந்து தங்களை சூடுபடுத்திக்கொள்வதற்காக அழைத்தார். அவர்களும் வந்தனர். அவர் அவர்கள் முன்பாக சிறு ஹார்மோனியத்தைக் கொண்டு இசையை வாசித்தார். அப்போது சுவாமியாரின் திட்டப்படி, சகோதரர் ஜிரார்ட் அந்த எஸ்கிமோக்களின் பின்புறமாக வந்து அர்ச்.குழந்தை தெரசம்மாளின் கல்லறை தூசியை அந்த எஸ்கிமோக்கள் மேல் தூவினார். பிறகு, அந்த இரு ஓப்லேட் துறவியரும் அன்று இரவு முழுவதும் தேவநற்கருணை பேழைமுன்பாக நீண்ட ஜெபத்தில் ஈடுபட்டு உருக்கமாக அந்த எஸ்கிமோக்களின் மனந்திரும்புதலுக்காக மன்றாடினர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில், எஸ்கிமோக்கள் சுவாமியாரிடம் வந்து தங்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கும்படி விண்ணப்பித்தனர். தனக்குள் ஏற்பட்ட அளவில்லா வியப்பை அடக்கியவராக உடனே அவர்களுக்கு சங்.டர்குவெடில் சுவாமியார் ஞானஉபதேசத்தைக் கற்பிக்கலானார். எஸ்கிமோக்கள் சென்றதும், அவர் சிறுமலரான அர்ச்.குழந்தை தெரசம்மாளை நோக்கி "சிறுமலரே! நீர் மிக நேர்த்தியான வேதபோதகர். உமது இந்த உன்னத அலுவல் தொடரட்டும்!" என்று மிக தாழ்ந்த குரலில் ஜெபித்தார். இதன்பிறகு அப்பகுதியில் ஏராளமான எஸ்கிமோக்களுடைய மனந்திரும்புதல்கள் ஸ்திரமாக தொடர்ந்து ஏற்பட்டன. 1925ம் ஆண்டு ஜூலை 15ம் நாளன்று அப்பகுதியின் அப்போஸ்தல அதிபராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். விரைவில் அது ஒரு மேற்றிராசனமாக உயர்த்தப்பட்டு அதன் முதல் மேற்றிராணியாராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். எஸ்கிமோக்களின் அப்போஸ்தலராக விளங்கும் வந். டர்குவெடில் ஆண்டகையும் அவருக்கு எஸ்கிமோக்களிடம் ஏற்பட்ட அற்புதமான அனுபவங்களுமே 1923ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் பெற்ற அர்ச்.குழந்தை தெரசம்மாள் வேதபோதக நாடுகளின் பாதுகாவலி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றனர். Courtesy: "Mid Snow and Ice" - Rev. Fr. Pierre Douchaussois, O.M.I

வியாழன், 21 டிசம்பர், 2023

St. Thomas, Apostle

 

Saint Thomas, apostle

The unbelief of St. Thomas, by Erasmus Quellin the Younger





"Apostle and Martyr (1st century).

Feast on December 21.

When Our Lord, after spending thirty years in the humility of an obscure life, inaugurated His public mission and began to reveal to the world the mysteries of the kingdom of heaven, He chose, while passing through the towns of Palestine, disciples who accompanied Him in His apostolic journeys. Twelve of them were more intimately associated with His ministry: He instructed them with predilection, sent them to preach in His name, made them His messengers, friends, and apostles. Among these privileged ones who received more closely the sublime teachings of the Master and the secrets of His loving heart was Saint Thomas.

According to ancient documents, his real name was Judas; and it is probably because of the very common use of this name among the Jews that, to distinguish him from his namesakes, he was designated by the nickname Thomas, meaning twin, like the Greek name Didymus by which the evangelist Saint John also refers to him. According to tradition, he was born in Antioch, and apocryphal writings recount that he had a twin sister named Lydia. But one must turn to the Gospel to find episodes of undeniable authenticity from the life of Saint Thomas.

Courageous fidelity to the Master.

At the time he heard the call of Jesus, Thomas must have led, like most other apostles, a humble existence as a fisherman in Galilee. Later, indeed, after the Resurrection of Christ, we find him among the disciples who, having resumed their former trade, cast their nets into the waters of the Sea of Galilee and, favored by an appearance of the resurrected Savior, obtained, by His word, a miraculous catch of fish. His character is revealed in three facts related by Saint John.

Firstly, there is an episode where the apostle shows himself generously devoted to the Master and pushes fidelity to the extent of being willing to face death. Our Lord had publicly taught the Jews that He was equal to the Father and God like Him, and His listeners had gathered stones to stone Him as a blasphemer; but He had escaped their fury, for the time to suffer for the Redemption of the world had not yet come. When this hour approached, He said to His disciples, 'Let us go back to Judea.' These words frightened them. 'Master,' they exclaimed, 'just a few days ago, the Jews wanted to stone you, and you want to return to that place!' They feared, in a dual sense of love and fear, the mistreatment that was reserved for their Master and for themselves. It was then that Thomas, overcoming all fear, encouraged his companions to remain faithful to Jesus unto death. He said these courageous words to them: 'Let us also go, that we may die with him.' In this circumstance, as noted by Saint Vincent Ferrer, he showed more charity than the other apostles, for there is no greater love than to give one's life.

Love for truth.

Resolved to follow Christ even to the path of torment, Thomas was, beyond doubt, very attentive to divine teachings, and he wanted to understand them well. Little inclined to believe without understanding and wary of any assertion not supported by solid evidence, he loved truth and clung to it ardently as soon as it imposed itself on his mind. Far from being naively credulous, he reasoned about what he heard and yielded only to a doctrine that was clear and certain. Two episodes highlight this attitude of soul.

Let us transport ourselves to the Upper Room, where the Lord partook of His last supper with His disciples, this Paschal meal where, after giving them His Body and Blood through the institution of the Holy Eucharist, He imparted to them the most sublime teachings that have ever struck human ears. As He was about to offer Himself up to death, He comforted His disciples who were distressed at the thought of the imminent separation by announcing to them that He would prepare a place for them in His Father's house, saying to them: 'And if I go and prepare a place for you, I will come again and will take you to myself, that where I am you may be also. And you know the way where I am going.' But Thomas interrupted Him: 'Lord, we do not know where you are going; how can we know the way?' By these words, he humbly confessed that the Master's doctrine concerning the end of His mission had exceeded the scope of his understanding, and he asked to be better instructed. And Jesus answered him with these words that magnificently underscore His redemptive work: 'I am the Way, the Truth, and the Life; no one comes to the Father except through me...' No doubt, no apostle listened then with more attention to the doctrine of truth and life that the Savior continued to expound.

The hour of doubt and the hour of faith.

Because he loved truth, the apostle Thomas wanted it pure; he guarded against the illusion and imagination that distort it. In him, to the point of excess, there was a kind of intellectual prudence that prevented him from believing every human testimony that did not offer undeniable proofs. This becomes apparent in the well-known Gospel episode where he underwent a moment of doubt, even disbelief, before the exquisite hour of reassured and unwavering faith.

Jesus Christ, after His Resurrection, appeared to the disciples who, for fear of the Jews, had locked themselves in the Upper Room. Thomas, at that moment, was not with them. When he returned, they surrounded him and said, 'We have seen the Lord.' However surprising the fact of the glorious Resurrection of the Savior might have been, the apostle should have bowed before the unanimous affirmation of the disciples. He did not: he feared that they had been victims of an illusion. 'Unless I see in His hands the mark of the nails, and place my finger into the mark of the nails, and place my hand into His side, I will never believe.'


Eight days later, while the disciples were still gathered in the Upper Room and Thomas was among them, Jesus appeared to them again, saying, 'Peace be with you!' Then, addressing Thomas and showing him His wounds, He said, 'Put your finger here, and see my hands; and put out your hand, and place it in my side. Do not disbelieve, but believe.' Did the apostle touch the Savior's scars? The sacred text does not say, and one can believe that it was enough for Thomas to hear the testimony given by Jesus to the reality of His Resurrection to reject all doubt and disbelief and to express his faith, henceforth luminous and fervent, in this cry full of respect and love: 'My Lord and my God!' Jesus replied: 'Have you believed because you have seen me? Blessed are those who have not seen and yet have believed!' For any reproach, He opposed to the late submission of His apostle the merit and the happiness of souls who believe in Him without requiring to see Him.

The Fathers of the Church delighted in showing how the momentary disbelief of the disciple turned to the advantage of Christianity, by removing all reason to doubt the Resurrection, and consequently the divinity of Jesus. Saint Gregory the Great writes: 'The disbelief of Saint Thomas has done more to strengthen our faith than the faith of the disciples who believed.'

Saint Thomas exclaimed: 'My Lord and my God!'

The farewell of  the Savior to His disciples had a profound echo in the heart of Saint Thomas, who, during the last days of the life of his Master, must have retained a vivid memory of the celestial teachings that the Redeemer gave before His Passion and His ascension to the Father. These teachings resounded with particular strength during the mystical discourse pronounced at the Last Supper and the mandate of love which Jesus had given His apostles, saying: 'This is my commandment, that you love one another as I have loved you.' In His prayer to the Father, He manifested the sovereign will that all His followers 'may be one, even as We are one.' Then, He predicted His approaching Passion and His triumph over death, promising to send the Holy Spirit who, descending on the apostles and making them His courageous witnesses, would enable them to preach His doctrine with the force of miracles.

These words must have resounded powerfully in the heart of Saint Thomas when he saw himself invested with the mission of preaching the Gospel of salvation. And, to be the more docile to the inspirations of the Holy Spirit, the apostle retired into a profound solitude to pray, asking the divine Master for His assistance and the grace to fulfill well the work confided to him.

The apostolic missions and the martyrdom of Saint Thomas.

According to an ancient tradition accepted by the Church, Thomas left Judea and went to preach the Gospel in Parthia, Media, Persia, and finally in India, where the majority of authors place the term of his apostolic labors. What he had long ardently desired, and perhaps feared, became a reality: he was to bear the most beautiful title granted to a mortal, that of martyr, a title that he was going to seal with his blood, after the example of his Divine Master.

In India, the apostle preached the Gospel with apostolic fervor, confirming his words with miracles that touched the souls and hearts of his hearers. He converted to Christ not only simple people but also the children of kings, nobles, and women of the highest rank. He founded Christian communities, ordained priests and bishops, and entrusted to the faithful the deposit of the faith and the Holy Scriptures, which he had translated into the language of the country.

But among those he converted, there were enemies who, full of hatred, sought to take his life. It was in the year 72, while Saint Thomas, during a Eucharistic celebration, was absorbed in prayer, that the assassins arrived. They fell upon him and, brandishing their weapons, inflicted several blows on him, so that, according to tradition, the apostle fell to the ground and gave his soul to God. His death was the echo of his life: a life wholly consecrated to the service of the Divine Master, a life of love for truth, a life of apostolic zeal. His last words, uttered with fervor and carried to the heart of God, were the same as his first words pronounced under the touch of grace: 'My Lord and my God!'

The disciples of the apostle collected his remains and buried them with great veneration in the city of Calamina, in India, where a magnificent basilica was erected in his honor. A church was also dedicated to him in Edessa, where the Christians of Syria venerated the relics of Saint Thomas.

The cult of Saint Thomas spread quickly in the East and later in the West. Pope Urban VIII extended the feast of the Apostle Thomas to the entire Church on December 21. The Greeks, on the contrary, celebrated the feast of Saint Thomas on October 6, which is still done today by the Coptic Church. The church of Saint Thomas on the Palatine Hill in Rome is an indication of the cult that the West rendered to the apostle.

The apostle of Christ offers us several lessons: fidelity to the Master even to death, love for truth, and the courage to face doubt to attain a faith that enlightens the soul and vivifies it with the fullness of divine life."




செவ்வாய், 21 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 15 - அர்ச். சிலுவை அருளப்பர்

 அர்ச். சிலுவை அருளப்பர்

அர்ச். சிலுவை அருளப்பர், ஏழைகளாகிய கொன்சாலோ, கேட்டலினா தம்பதியருக்கு 1542, ஜூன் 24 அன்று பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது அவரது தந்தையும், இரண்டு வருடம் கழித்து, வறுமையால் அவரது அண்ணனும் இறந்தார்கள். இதனால் அவரது தாய் வேலை தேடி அவரோடும், மற்றொரு சகோதரனான பிரான்சிஸ்கோவோடும் முதலில் ஆரவாலோ விலும், அதன்பின் மெதினா தெல்காம்போவிலும் குடியேறினாள்.

மெதினாவில் பெரும்பாலும் அநாதைக் குழந்தைகள் படித்த ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் அருளப்பர் அடிப்படையான, பெரும்பாலும் வேதம் சார்ந்த கல்வி பெற்றார். இங்கே ஓரளவு உணவும், உடையும், இருப்பிடமும் அவருக்குக் கிடைத்தன. 1563ல் அவர் கார்மெல் சபையில் சேர்ந்து அர்ச். மத்தியாஸின் அருளப்பர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடத்தில் கார்மெல் துறவியாக முதல் வார்த்தைப்பாடு தந்த அவர், சாலமான்கா பல்கலைக் கழகத்தில் வேதசாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்றார். இதன்பின் ஃப்ரே லூயித லியோன் என்பவரிடம் அவர் வேதாகமப் பாடம் கற்றார்.


அர்ச். அவிலா தெரேசம்மாளின் சீர்திருத்தப் பணியில் இணைதல்

1567ல் குருப்பட்டம் பெற்ற அவரைத் தனி வாழ்வுப் பிரியம், மவுன, காட்சி தியான வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு, அதிகக் கண்டிப்புள்ள கர்த்தூசிய சபை ஈர்த்தது. 1567 செப்டம்பரில் அவர் ஸாலமான்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்றார். அங்கே தனது இரண்டாவது புதிய மடத்தைத் தொடங்க வந்திருந்த கார்மெல் கன்னிகையான அவிலா தெரேசம்மாளை அவர் சந்தித்தார். அவள் 1432ல் பாப்பரசர் யூஜீனால் தளர்த்தப்பட்டிருந்த "சபையின் தொடக்க கால விதித் தொகுப்பை" அனுசரிக்கும் வாழ்வைப் புதுப்பிப்பதன் மூலம் கார்மெல் சபையின் பரிசுத்த தனத்தை மீண்டும் கொண்டு வர முயன்றுகொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் தன் திட்டங் களைப் பற்றி அருளப்பரிடம் பேசினாள்.

பண்டைய விதிகளின்படி, கார்மெல் சபையினர் ஒரு நாளின் பெருமளவு நேரத்தைப் பரிசுத்த கட்டளை ஜெபம் சொல்வதிலும், கற்பதிலும், ஞான வாசகங்களிலும், பூசை நிறைவேற்றுவதிலும் காண்பதிலும், தனி வாழ்விலும் செலவிடவும், துறவற குருக்கள் மடத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கு சுவிசேஷம் போதிக்கவும், இறைச்சியை முழுமையாக விலக்கவும், திருச் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் முதல் உயிர்ப்புத் திருநாள் வரை நீண்ட கால உபவாசம் கடைப் பிடிக்கவும், நீண்ட மவுன வேளைகள், குறிப்பாக இரவு ஜெபம் முதல் காலை ஜெபம் வரை அனுசரிக்கப்படவும், எளிய, முரடான, குட்டையான அங்கிகள் பயன்படுத்தப்படவும் கால்களை மூடாத காலணிகள் பயன்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. இதனால் ஒரு வகையில் இந்தச் சபை காலணிகள் அணியாத சபை என்றும் அழைக்கப்பட்டது.

வால்லடோலிட் நகரத்தில் சிறிது காலம் இருந்தபின், அருளப்பர் துருவேலோ என்னுமிடத் திற்குச் சென்று, புனிதையின் கடுந்தவக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புதிய கார்மெல் துறவற குருக்கள் சபையை 28.11.1568 அன்று ஸ்தாபித்தார். அன்றே புனிதர் தம் பெயரை சிலுவை அருளப்பர் என்று மாற்றிக்கொண்டார். இந்த மடம் சிறியதாக இருந்ததால், அது அருகிலிருந்த மென்செராத அபாயோ என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. துறவற குருக்களின் கல்விப் பயிற்சிக்காக பாஸ்ட்ரானா என்ற ஊரில் புதிய மடம் ஒன்றை ஸ்தாபித்து, புனிதர் அங்கே குடியேறினார்.

1572ல், அவிலாவுக்குச் சென்ற அவர் தெரேசாவுக்கும், அங்கிருந்த 130 கன்னியருக்கும். ஏரான மான விசுவாசிகளுக்கும் ஆன்ம குருவானார். 1574ல் தெரேசாவுடன் ஸ்ெகோவியாவுக்குச் சென்று அங்கு ஒரு புதிய மடத்தைத் தொடங்கியபின், அவிலாவுக்குத் திரும்பி வந்தார். 1577 வாக்கில், தாம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறீஸ்து நாதர் அவருக்குக் காட்சி தந்தார். 1641ல் இக்காட்சியைப் புனிதர் ஒரு சித்திரமாக வரைந்தார்.

1575-77 வாக்கில் ஸ்பானிய கார்மெல் துறவற குருக்களுக்குள் தெரேசா மற்றும் அருளப்பரின் கடுந்தவ வாழ்வை அனுசரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. 1566 முதல் காஸ்டைலுக்கு ஒருவரும், அந்தலூசியாவுக்கு ஒருவருமாக, அர்ச், சாமிநாதர் சபைத் துறவிகள் இருவர் கார்மெல் மடங்களின்மீது அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். துறவிகளை மடம் மாற்றுவது, மடத்துத் தலைவர்களையும் கூட அவர்களது பதவிகளிலிருந்து விடுவிப்பது போன்ற அதிகாரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. காஸ்டைலுக்கு பெத்ரோ பர்னாண்டஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தலூசியாவின் அதிகாரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ வர்காஸ் என்பவர் ஆவார். இவர் மாற்றங்களை விரும்பிய துறவிகளுக்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் பிரச்சினைகள் எழ, இதன் விளைவாக, இத்தாலியிலுள்ள பியாசென்ஸாவில் 1576 மே மாதத்தில் கார்மெல் சபையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆயினும் குழப்பம் கை மீறிப் போகவே, தெரேசம்மாளின் காலணிகள் அணியாத துறவிகளின் மடங்களை அடியோடு மூடி விட உத்தரவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் தெரேசம்மாளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவா யிருந்ததால், இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை. மேலும் பாப்பரசரின் திருத்தூதரும், பதுவையின் ஆயருமான நிக்கோலோ ஆர்மனேட்டோ என்பவரின் ஆதரவும் அவளுக்கு இருந்தது. இவர் தெரேசம்மாளின் வேண்டுகோளின் பேரில், வர்காஸை நீக்கி விட்டு, ஆல்கலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குருவான எரோனிமோ க்ராஸியன் என்பவரை அந்தலூசியாவின் அதிகாரியாக்கினார். இந்த குரு தாமே தெரேசம்மாளின் சபையைச் சேர்ந்தவ ராசு இருந்தார். 1576ல் மெதினாவில் பாரம்பரிய கார்மெல் துறவிகளால் கைதுசெய்யப்பட்ட அருளப்பர், திருத்தூதரின் தலையீட்டால், விரைவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1577 ஜூன் 18

அன்று ஆர்மனேட்டோ இறந்தபோது, அருளப்பர் பாதுகாப்பின்றி விடப்பட சீர்திருத்தவாதிகளின் கை ஓங்கியது. 1577 டிசம்பர் 2 அன்று, சீர்திருத்தத்தை எதிர்த்து கார்மெல் துறவிகளின் கூட்டம் ஒன்று அவிலாவில் அருளப்பர் தங்கியிருந்த இல்லத்தில் புகுந்து அவரைச் சிறை செய்தது. ஏற்கெனவே சீர்திருத்தத்திற்கு எதிராயிருந்த சபைத் தலைவர்கள் புனிதரை அவிலாவை விட்டு வெளியேறி. தம்முடைய முதல் மடத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை விட அதிக அதிகாரமுள்ள ஸ்பெயின் திருத்தூதர் தம் சீர்திருத்தத்தை அங்கீகரித்திருந்தார் என்ற அடிப்படையில் புனிதர் இதை ஏற்க மறுத்திருந்தார். கைது செய்யப்பட்ட அருளப்பர், அச்சமயத்தில் 40 துறவிகளோடு காஸ்டைலில் முன்னணி மடமாக இருந்த டொலேடோ கார்மெல் மடத்திற்கு அவரைக் கொண்டு சென்றார்கள்.

அருளப்பரின் வாதங்களை மீறி, அவர் சபைத் தலைவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வில்லை என்று குற்றஞ்சாட்டி, துறவிகளின் "நீதிமன்றம்" அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் குறைந்தது வாரம் ஒரு முறை கசைகளால் அடிக்கப்படுவது போன்ற சித்திரவதைகளை அனுபவித்தார்; பத்தடிக்கு ஆறடியுள்ள ஒரு மிகச் சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அறையில் விளக்கு ஏதும் இல்லாததால், அறைச் சுவரிலிருந்த ஒரு துளை வழியாக வந்த வெளிச்சத்தில்தான் அவரால் கட்டளை ஜெபத்தைச் சொல்ல முடிந்தது. மாற்ற உடையில்லை. தண்ணீரில்லை, அப்பமும், உப்பு மீன் துண்டுகளும் தேவைக்கும் குறைவாகவே கிடைத்தன.

இச்சமயத்தில்தான் அவர் புகழ்பெற்ற ஞான சங்கீதம் என்னும் கவிதைகளை எழுதினார். தேவையான காகிதத்தை அறைக்குக் காவலாயிருந்த துறவி இரகசியமாகக் கொண்டு வந்து தந்தார். தம் அறைக்கு அடுத்த அறையிலிருந்த ஒரு சிறு ஜன்னல் வழியாக 1578 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தப்பித்துச் சென்றார்.

ஆறு வார மருத்துவ உதவி பெற்றபின் அவர் தம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். 1578 அக்டோபரில், பாதணிகள் அணியாத கார்மெல் சபையினர் ஆல்மாடாவரில் நடத்திய கூட்டத் தில் அவர் பங்குபெற்றார். மற்ற கார்மெல் துறவியரின் எதிர்ப்பின் விளைவாக, முறைப்படி கார்மெல் சபையினரிடமிருந்து பிரிந்து வாழ தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் பாப்பரச ரிடம் விண்ணப்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் அருளப்பர் எல் கல்வாரியோ என்ற மடத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபோது, தம் "ஞான சங்கீதத்திற்கு" உரை எழுதினார்.

1579-ல் அவர் அந்தலூஸியாவின் பாதணிகள் அணியாத துறவிகளுக்கான புனித பேசில் கல்லூரியின் அதிபராகும்படி பேஸா என்ற நகரத்திற்கு மாற்றப்பட்டார். இப்பதவியில் 1582 வரை இருந்தார். 1580ஆம் ஆண்டில், கார்மெல் சபையினரிடையே நிலவிய பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. ஜூன் 22 அன்று பாப்பரசர் 13ஆம் கிரகோரியார் புதிதாய்ச் சீர்திருத்தப்பட்ட பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரை அதிகாரபூர்வமாகத் தனிச் சபையாக ஆக்கினார். 1581 மார்ச் 3 அன்று ஆல்கலாவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் சபைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1581 நவம்பரில் சேசுவின் ஆனா என்னும் சகோதரி க்ரானடாவில் ஒரு மடத்தை ஸ்தாபிக்க உதவும்படி அருளப்பர் தெரேசாவால் அங்கே அனுப்பப்பட்டார். சகோதரி ஆனா 1582 ஜனவரி யில் அங்கே போய்ச் சேர்ந்து மடத்தை ஸ்தாபிக்க, ஆலாம்பிராவில் இருந்த மடத்தில் அருளப்பர் தங்கியிருந்தார். 1582-ல் அந்த மடத்தில் அதிபராகவும் ஆனார். அவர் அங்கிருந்தபோது, அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தெரேசம்மாள் மரணமடைந்ததை அவர் அறிந்துகொண்டார்.

1585-ல் அவர் அந்தலூசியாவின் மாகாண அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் எல்லா மடங்களையும் சந்திக்கும்படி அதிகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்தப் பகுதியில் அவர் ஏழு ஆண்கள் துறவற மடங்களை நிறுவினார். இச்சமயத்தில் அவர் சுமார் 25,000 கி.மீ. தூரம் பயணம் செய்தார் என்று மதிப்பிடப்படுகிறது.

ஜூன் 1588-ல் அவர் சபை அதிபர் சுவாமி நிக்கோலஸ் டோரியா என்பவரின் மூன்றாம் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காஸ்டைலின் ஸெகோவியாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் டோரியா சபையில் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை அவர் விரும்பாததால் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, லா பெனுவேலா என்ற மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே நோயுற்று, சிகிச்சைக்காக உபேலாவிலிருந்த மடத்திற்குச் சென்றார். அங்கே உடல் நிலை மோசமாகி, 1591, டிசம்பர் 14 அன்று அக்கி என்னும் தோல் நோயால் அவர் மரணமடைந்தார்.

1675, ஜனவரி 25 அன்று பாப்பரசர் பத்தாம் கிளமெண்ட் அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 1726 டிசம்பர் 27 அன்று பாப்பரசர் 13-ஆம் ஆசீர்வாதப்பர் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்: "ஞான சங்கீதம், ""ஆன்மாவின் இருண்ட இரவு." "கார்மெல் மலையேற்றம்"ஆகியவையாகும்.


திருநாள்: நவம்பர் 24.


Source: மாதா பரிகார மலர்-/- நவம்பர் - டிசம்பர், 2023



செவ்வாய், 26 செப்டம்பர், 2023

October 1 - St. Remigius அர்ச். ரெமிஜியார்

 


அக்டோபர் 1

அர்ச். ரெமிஜியார்

மேற். துதியர்.

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . 
.
சபைச் செபம்.

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக் காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணி யாருமான முத்திபேறுபெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய  வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


Previous

Next
 


வியாழன், 11 ஆகஸ்ட், 2022

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம்


 உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம் 

கி.பி. 1589ம் வருடம், இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரத்தில், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், சம்மனசுகளின் இராக்கினியான அர்ச். தேவமாதாவின் மடத்தில் ஜீவித்த போது, ஒரு நாள் மடத்தின் தேவாலயத்தில் தேவநற்கருணைப் பேழையின் முன்பாக ஆராதித்தபடி ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு உருவம் தேவாலயத்தின் மையப் பகுதியில், திவ்ய நற்கருணைப் பேழையை, பக்தி பற்றுதலுடன் சாஷ்டாங்மாக விழுந்து ஆராதிக்கும் விதமாக, முழங்காலில் இருந்து ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அந்த உருவம், சமீபத்தில் மடத்தில் இறந்துபோன ஒரு கன்னியாஸ்திரி என்பதையும் உணர்ந்தாள் ; அக்கன்னியாஸ்திரி, புண்ணியத்தில் சிறந்து விளங்கியவளாக, சக கன்னியர்களால் கருதப்பட்டிருந்தாள்; பாக்கியமாக மரித்திருந்தாள்; ஆனால், இப்போது, அர்ச். பாசி மரிய மதலேனம்மாளிடம், உத்தரிக்கிற ஸ்தலத்தில், தான், மிகப் பயங்கரமாக அனுபவித்து வரும் உபாதனைகளிலிருந்து, விடுதலையடைவதில், தனக்கு உதவி செய்யும்படி கேட்பதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி தோன் றினாள்.

அந்த கன்னியாஸ்திரியைச் சுற்றிலும், அவளை முழுமையாக சுட்டெரிக்கும் ஓர் மேற்போர்வை போல், பயங்கரமான உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு சுவாலைகள், சூழ்ந்திருப்ப தையும், அதே சமயம், கொடிய தீச்சுவாலைகள், முழுமையாக அவளைச் சுட்டெரித்து விடாதபடி, நெருப்பின் ஒரு பகுதியைத் தடுத்து நிறுத்தி, அவளைப் பாதுகாக்கும்படியாக, ஒரு வெள்ளை நிற அங்கி, அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்ததையும், அர்ச். மரிய மதலேனம்மாள் பார்த்தாள். இதைக் கண்டு பெரிதும் அதிசயித்த மரிய மதலேனம்மாள், இந்த காட்சியின் அர்த்தம் என்னவென்று அறிய விரும்பினாள்; அதற்குக் காரணம், இந்த கன்னியாஸ்திரி, மகா உன்னதமான பீடத்தின் மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மட்டில், கொண்டிருக்க வேண்டிய சங்கை மேரை மரியாதை ஆராதனையில், கவனக்குறைவாக நடந்ததினாலேயே , உத்தரிக்கிற ஸ்தலத்தில், இவ்விதம் அவதியுற வேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டிருக்கிறாள், என்ற பதில் மரிய மதலேனம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது.



இந்த கன்னியாஸ்திரி மடத்தில் வாழ்ந்தபோது, அடிக்கடி திவ்யநன்மையை தகுந்த ஆத்தும் சரீர ஆயத்தத்துடன் உட்கொள்ள வேண்டும் என்ற சபை ஒழுங்கை சரிவர அனுசரிக்காமலிருந்தாள்; அப்படியே, திவ்ய நன்மை உட்கொள்ளும் சமயங்களில், ஆண்டவரை போதிய பக்திபற்றுதலுடனும், ஆச்சாரத்துடனும் உட்கொள்ளாமல், வேண்டாவெறுப்புடன் உட்கொண்டு வந்திருக்கிறாள், என்பதையும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள் அறிந்தாள். அதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி, ஒவ்வொரு நாளும், திவ்ய நற்கருணைப் பேழையை அதற்கு செலுத்த வேண்டிய சங்கை மேரை பக்தியுடன், ஆராதிக்க வேண்டும் என்றும், சேசுகிறீஸ்துநாதரின் திருப்பாதங்களின் அடியில், உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் கொடிய உபாதனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தேவ நீதி அவளுக்குத் தீர்ப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்த கன்னியாஸ்திரி, பிரமாணிக்மாக அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்திற்கு சம்பாவனையாக, நமதாண்டவரும், அவளுடைய பரிசுத்த பத்தாவுமானவர்,

உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் உபாதனையின் பெரும்பகுதியினால், அவதியுறாத விதமாக, அவளை ஓர் வெண்ணிற அங்கியினால் உடுத்திப் பாதுகாத்தார்; அந்த வெண்ணிற அங்கி, அவள் அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது. என்பதை யும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள அறிந்து கொண்டாள்; உடனே அன்றிலிருந்து, அந்த கன்னியாஸ்திரியின் உத்தரிப்பின் காலத்தையும் வேதனையையும் குறைப்பதற்குத் தன்னாலான ஜெபதப ஒறுத்தல் முயற்சிகள் செய்து, ஒப்புக் கொடுத்து வந்தாள்; அநேக திவ்ய பலிபூசைகளைப் பக்தி பற்றுதலுடன் கண்டு, அந்த கன்னியாஸ்திரியின் ஆத்துமத்தை, உத்த ரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவித்தாள்; இந்த சம்பவத்தை, அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், தன்சபைக்கன்னியாஸ்திரிகளுக்கு அடிக்கடிக்கூறி, திவ்ய நற்கருணையின் மட்டில் மிகுந்த பக்தி பற்றுதல் கொண்டிருக்கும்படி, அறிவுறுத்தி வந்தாள். "



Download Tamil Catholic SOngs

திங்கள், 18 ஜூலை, 2022

உத்தரிக்கும் ஆத்துமங்களுக்கு உதவுவோம்

 


ரித்த விசுவாசிகளுக்காக ஜெபிப்பதும், ஒறுத்தல் பரித் தியாகங்கள் செய்து ஒப்புக்கொடுப்பதும், அனைத்திற்கும் மேலாக திவ்ய பலிபூசை செய்விப்பதும் கிறீஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீதான பக்தி, விசுவாசிகளின் இருதயங்களில் இஸ்பிரீத்து சாந்துவானவரால் தூண்டப்படுகிற பிறர்சிநேக பக்தியாக இருக்கிறது.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீதான நம்முடைய பக்தி உத்தமமானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தெய்வ பய உணர்வாலும், தேவ நம்பிக்கை உணர்வாலும் உயிரூட்டப் பட வேண்டும். ஒரு புறத்தில் சர்வேசுரனுடைய கடுங்கோபமும் அவருடைய நீதியும் நமக்கு மிகுந்த நலம் பயக்கும் தேவ பயத்தை நம்மில் தூண்ட வேண்டும்; மறு புறத்தில், அவருடைய அளவற்ற இரக்கம் மட்டற்றதாகிய ஒரு தேவ நம்பிக்கையை நமக்குத் தர வேண்டும்.

சூரியன் ஒளியாயிருப்பதை விட எவ்வளவோ அதிகமாக சர்வேசுரன் தம்மிலே பரிசுத்த தனமாக இருக்கிறார். பாவத்தின் நிழல் கூட அவர் திருமுன் ஒரு கணமும் நிற்க முடியாது. " அக்கிர மத்தின் மீது தங்க முடியாதபடி உம் கண்கள் மாசற்றவையாக இருக்கின்றன" என்று தாவீது கூறுகிறார். கடவுள் பக்திச்சுவாலகர்களிடம் கூட குற்றம் கண்டுபிடிக்கிறார் என்றால், அற்ப மனிதர்களாகிய நாம் எந்த அளவுக்குக் கடவுளின் திருமுன் அஞ்சி நடுங்க வேண்டும்!


ஆகவே, சிருஷ்டிகளில் அக்கிரமம் தன்னை வெளிப்படுத்தும் போதெல்லாம், கடவுளின் அளவற்ற பரிசுத்ததனம் அதற்குப் பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இந்தப் பரிகாரமானது, தேவ நீதியின் முழுக் கடுமையோடு செய்யப்படும் போது, அது பயங்கரமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் பரிசுத்த வேதாகமம், ''அவருடைய திருநாமம் பரிசுத்தமும் பயங்கரமும் உள்ளது" என்கிறது (அபாக். 1:13). அதாவது, சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்டதனம் அளவற்ற தாக இருப்பதால், அவருடைய நீதி பயங்கரமுள்ளதாக இருக்கிறது.

இந்த பயங்கரமுள்ள தேவ நீதி மிக அற்பமான பாவங்களையும் கூட மிக அகோரமான துன்பங்களைக் கொண்டு தண்டிக்கிறது. காரணம் என்னவெனில், நம் கண்களில் இலகுவான வையாகவும், இலேசானவையாகவும் தோன்றுகிற பாவங்கள், கடவுளின் அளவற்ற பரிசுத்த தனத்தின் முன்பாக மிகவும் அருவருப்புக்குரியவையாகத் தோன்றுகின்றன என்பதுதான். இதனால் தான் இந்த தெய்வீகப் பரிசுத்ததனத்தை நெருங்கிச் செல்லச் செல்ல, அர்ச்சியசிஷ்ட வர்கள் தெய்வீகப் பேரொளியில் தங்கள் அற்பப் பாவங்களையும் மிகக் கனமான பாவங்களாக உணர்ந்தார்கள். பெரும் புனிதர்களும் கூட, அதாவது, அற்பப் பாவங்களையும் கூட மிகுந்த விழிப்புணர்வோடு விலக்கி, மிகப் பரிசுத்தமாக வாழ்ந்த புனிதர்களும் கூட, தங்களுடைய ஒரு சில அற்பமான பாவங்களைக் கண்டு, உலகிலுள்ள சகல பாவிகளிலும் அதிக மோசமான பாவிகளாகத் தங்களைக் கருதினர். அந்த அற்பப் பாவங்களையும் அருவருத்து அவற்றை விலக்குவதற்காக ஒவ்வொரு கணமும் அவர்கள் போராடினார்கள்.

ஆம்! பாவம் அளவற்றதாகிய பரிசுத்ததனத்தை நோகச் செய்வதால், மிக அற்பமான பாவமும் கூட கடவுளுக்கு முன் மிகப் பிரமாண்டமானதாக ஆகிறது. ஆகவே அது மிக கடுமை யான பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உத்தரிக்கிற ஆன்மாக்கள் உட்பட்டிருக்கிற மகா கொடிய வேதனையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வேதனை நம்மை ஒரு பரிசுத்த பயத்தில் ஆழ்த்துகிறது.

உங்கள் மனமாகிய "அறைக்குள் " நுழைந்து, மரித்த உங்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகள் உறவினர் / நண்பர்கள் / பகைவர்களின் அழுகுரலைக் கூர்ந்து கவனியுங்கள். வாழும்போது, உங்களை எவ்வளவோ பிரியத்தோடு நேசித்தவர்கள் இப்போது படும் துன்பத்தை உணருங்கள். அவர்கள் மீது பரிதாபப்படுங்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்கள்தான் உங்கள் ஜெபத்தாலும், நற்செயல்களாலும் அவர்களுக்கு உதவ முடியும்.

அதே சமயத்தில் இந்த நவம்பர் மாதம் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற உத்தரிப்பின் வேதனையையும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. மறுவுலகில் இந்த உத்தரிப்பு அகோரமானது தான் எனினும், இவ்வுலகில் எவ்வளவோ எளிதாக நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் வழிமுறைகளைக் கடவுள் தம் திருச்சபையின் வழியாக நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்:



1. பாவங்களை, குறிப்பாக சாவான பாவங்களையும், முடிந்த வரை அற்பப் பாவங்களையும் விலக்க முயல வேண்டும். அடிக்கடி பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை என்னும் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவது பாவங்களை விலக்க நமக்குப் பெரும் உதவியாயிருக்கும்.

2. ஜெபம், குறிப்பாக ஜெபமாலை பக்தி, உத்தரிய பக்தி ஆகியவை உத்தரிக்கிற நெருப் புக்கு எதிராக நமக்குத் தரப்பட்டுள்ள ஆயுதங்களாகும்.

3. பாவப் பரிகாரம் திருச்சபை வழங்கும் ஞானப் பலன்களால் எளிதாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, "திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உமது அர்ச்சியசிஷ்ட சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்" என்ற மனவல்லய ஜெபம் ஒரு முறை பக்தியோடு சொல்லப்படும்போது அது பத்து வருடப் பலனைப் பெற்றுத் தருகிறது; அதாவது, பத்து வருடங்கள் கடும் தபசு செய்வதால் வரும் பலனை இந்தச் சிறு மன வல்லய ஜெபம் நமக்குத் தருகிறது. திவ்ய நன்மை உட்கொண்டபின் " மகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே...'' என்ற ஜெபம் சொல்லி, சேசுவின் திருக்காயங்களுக்குத் தோத்திரமாகவும், பாப்பரசரின் கருத்துகளுக்காகவும் வேண்டிக்கொள் ளும்போது, நாம் ஒரு பரிபூரண பலனைப் பெற்றுக்கொள்கிறோம். அதாவது, நாம் தேவ இஷ்டப்பிரசாத நிலையிலிருந்து இதைச் செய்யும் போது, நம் பாவங்களுக்கான அநித்திய தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறோம். ஆகவே, ஒன்றில் உத்தரிக்கிற நெருப்பின் மூலம் பாவப் பரிகாரம், அல்லது இவ்வுலகில் பரிகாரம் செய்வதன் மூலம் உத்தரிக்கிற ஸ்தலத்தை முழுமையாகத் தவிர்ப்பது, இரண்டும் நம் கையில் தான் உள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை எட்டு நாட்கள் தேவ இஷ்டப்பிர சாத (சாவான பாவமில்லாத) நிலையில் இருந்து, பூசை கண்டு, நன்மை வாங்கி, பாப்பரசரின் சுகிர்த கருத்துகளுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஒரு பரிபூரண பலனை நாம் பெற்று, அதை ஓர் ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்து, அந்த ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கலாம். பாப்பரசர் இந்த நவம்பர் மாதம் முழுவதும் இந்தப் பரிபூரணப் பலனை வழங்கி யிருப்பதால், அதை இம்மாதம் முழுவதும் பயன்படுத்தி, உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவலாம்.


புதன், 2 பிப்ரவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 9

 மகாப் பரிசுத்த தேவநற்கருணைப்புதுமை அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்ததால் நான்கு யூதர்கள் மனந்திரும்பின புதுமை


16வது நூற்றாண்டில், ரோமாபுரியில் ஜீவித்த அநேக அர்ச்சிஷ்டவர்களுள் அர்ச்.பிலிப் நேரியாரும் ஒருவர். இவர் தமது ஆன்ம இரட்சணிய அலுவலினாலும், ஞானமிக்க பிரசங்கங்களினாலும், எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். அப்பொழுது அந்நகரத்தில், நான்கு யூத சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் கன்னெஞ்சர்கள். குருக்கள் சொன்ன நற்புத்திமதிகளை எத்தனை முறை கேட்டாலும், மனந் திரும்பாமல் இருந்தனர். இந்த நான்கு யூதர்களையும், சிலர், அர்ச். பிலிப்பு நேரியாரிடம் கூட்டிச் சென்றனர். அர்ச். பிலிப் நேரியார், அவர்களுக்கு அதிக சிநேகத்தைக் காண்பித்து, அவர்களிடம், "மோட்சத்துக்குப் போகிற மெய்யான வழி எது என்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய பிதாக்களாகிய அபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களைப் படைத்த சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அர்ச். பிலிப், "நாளைக்கு நாமும் திவ்ய பலிபூசையில் வேண்டிக் கொள்வோம்" என்றார். 

பின்பு அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். கூட வந்தவர்கள், "அர்ச்சிஷ்டவர், அவர்களுக்கு வேறு புத்தி எதுவும் சொல்லவில்லை", என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை அவர் கண்டு, அவர்களைப் பார்த்து, "நாளைக்கு நாம் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகிறபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள்'' என்று கூறினார். அந்த நான்கு யூதர்களும் தங்களுடைய வீட்டிற்குப் போனபிறகு, மற்ற யூதர்கள் அவர்களிடத்தில் வந்து, அர்ச். பிலிப் நேரியார் அவர்களுக்கு என்ன புத்தி சொன்னார் என்று கேட்க, "அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் எத்தனைப் புத்தி சொன்னாலும், நாங்கள் கேட்போமா , நம் வேதத்தை விடுவோமா?'' என்று அவரைப் பரிகாசம் பண்ணும் வகையில் பேசினார்கள். ஆனால், மறுநாள் அர்ச்சிஷ்டவர், திவ்ய பலிபூசை செய்கையில், அந்த நான்கு யூதர்களும் புதுமையாக மனந்திரும்பினர். மற்ற யூதர் முன்பாக, தாங்கள் கிறிஸ்துவர்களாக விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த நான்கு யூதர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், ஞான உபதேசம் கேட்கிறபோது, அவர்களில் ஒருவனுக்குக் கடின காய்ச்சல் கண்டு படுக்கையில் கிடந்தான். அர்ச். பிலிப், இதை அறிந்து அந்தக் காய்ச்சல்காரனிடத்தில் போய், "நீ கிறிஸ்துவனான தினால் உனக்கு சாவு வந்தது" என்பார்கள். நாளைக்கு நான் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகையில் உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் அனுப்பு" என்றார். அன்று இரவு அவனுடைய உடல் நிலை மிக மோசமாயிருந்தது. மருத்துவர், இவன் பிழைக்கமாட்டான் என்று தெரிவித்து விட்டார். மறுநாள் அவன் பேச்சில்லாமல் அவஸ்தையாயிருந்த போது, அருகிலிருந்தவன் உரத்த சத்தமாய், "பிலிப்பு நேரியார் நேற்று சொன்னபடி, உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் ஆனப்ப வேண்டுமோ?" என்று கேட்டான். அவன் தலையசைத்து, ஆமென்று அடையாளம் காண்பித்தான். 

அப்படியே பிலிப்பு நேரியாரிடம், ஆள் போய், வியாதிக்காரன் தனக்காகப் பூசையில் வேண்டிக்கொள்ள மன்றாடினாரென்று சொன்னதும் தவிர, அவனும் திவ்ய பலிபூசையைப் பக்தியுடன் கண்டான். அப்படியே அர்ச். பிலிப்பு பூசையில் வேண்டிக் கொண்டார். திவ்ய பலிபூசை முடிந்த பிறகு, அவன் திரும்பிச் சென்றான். அவஸ்தைக்காரன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நோயாளி நலமுடனிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் . " எப்படி உனக்கு திடீரென்று சுகம் கிடைத்தது? எந்த நேரத்தில் உனக்கு சுகம் கிடைத்தது?" என்று நோயாளியிடம் கேட்டதற்கு, அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்கிற நேரத்தில் அவனுக்குக் குணமானது என்று அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவர்களே! ஆத்துமத்தின் வியாதியாகிய பாவமும், சரீரத்தின் வியாதியும் திவ்ய பலிபூசைப்பலத்தினால் நீங்கிப்போகும். உங்கள் உறவினர் அல்லது மற்றவர்களுக்குள்ளே பாவியாயிருக்கிறவர்கள் மனந்திரும்ப , நீங்கள் பக்தியோடு காண்கிற பூசையில் அவர்களுக்காக மகா பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டு, அந்தப் பூசையைப் பிதாவாகியசர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவ பூசையின் பலத்தினால் அப்பேர்பட்ட பாவிகள் மனந்திரும்புவார்கள். கல்வாரி மலைமேல் சிலுவை மரத்தில் நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையில், அருகில் இருந்த நல்ல கள்ளன் மனந்திரும்பினான். இரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பூசைக்குள்ள பலன், இரத்தம் சிந்தாத இந்தப் பூசைக்கும் இருக்கிறதினால், அதனுடைய பலத்தினால் அப்போது பாவி மனந்திரும்பினதுபோல், இந்தப் பூசை பலத்தினால் இப்போதும் பாவிகள் மனந்திரும்புவர். உங்கள் உறவினருள் யாதொரு வியாதிக்காரன் உண்டானால், நீங்கள் கோவிலுக்குப் போய் பக்தியோடு பூசைக்கண்டு, ஆண்டவருக்கு சித்திமிருந்தால் இந்த வியாதிக்காரனுக்குக் குணமுண்டாகும்படி, நீங்கள் கண்ட பூசையை ஒப்புக்கொடுத்தால் அந்தப் பூசையின் பலத்தினால் வியாதிக்காரருக்கு சுகம் கிடைக்கும்.