Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

July லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
July லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

July 15- St. Hentry the 2nd - அர்ச். 2ம்ஹென்றி

 


 

ஜுலை 1️5️ம் தேதி

 

சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம்ஹென்றி திருநாள்

 


                2ம் ஹென்றி, 973ம் வருடம், மே 6ம் தேதியன்று பவேரிய நாட்டின் அரசனுடைய மகனாகவும், ஜெர்மனி நாட்டு அரசரான முதலாம் ஹென்றியின் கொள்ளுப்பேரனாகவும் பிறந்தார்.இரண்டு முந்தின சக்கரவர்த்திகள் ஆண்ட சமயத்தில், இவருடைய தந்தை அந்த சக்கரவர்த்திகளை எதிர்த்து நின்றதால், அடிக்கடி நாடுகடத்தப்பட்டார். சின்ன 2ம் ஹென்றியும் தந்தையுடன் அடிக்கடி நாடுகடத்தப்பட்ட நிலையில் ஜீவிக்க நேர்ந்தது. இச்சூழ்நிலை தான், இவரை சிறுவயதிலேயே, சர்வேசுரனையும், திருச்சபையையும் அண்டிப் போகும்படி தூண்டுவதற்குக் காரணமாயிற்று.. 995ம் வருடம், இவருடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, இவர் பவேரியா நாட்டின் சிற்றரசரானார்.

         இவருடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியுமான 3ம் ஓட்டோ, , ஜெர்மனியின் படைவீரர்களின் துணையுடன், இத்தாலியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறுகிற புரட்சியை ஒடுக்கி அடக்கும்படியாக, 1002ம் வருடம், இவரை தன்னிடம் வரும்படி, அழைத்தார்.

                ஆனால், இவர் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைவதற்குள் 3ம் ஓட்டோ சக்கரவர்த்தி காய்ச்சலினால் இறந்தார். அவருக்கு வாரிசு யாருமில்லாததால், 2ம்ஹென்றி, ஜெர்மனியின் அரசராக 1002ம் வருடம் ஜுலை 9ம் தேதியன்று முடிசூட்டப்பட்டார். 2ம் ஹென்றி, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, இந்த உலகத்தை, அரசராள வேண்டும் என்கிற ஒரே உன்னத நோக்கத்துடன், அரசருடைய  பத்திராசனத்தில் ஏறி அமர்ந்தார்.

                வட ஐரோப்பாவிலிருந்து தாக்குதல் நடத்திய அஞ்ஞானிகளும் காட்டுமிராண்டிகளும், உரோமை சாம்ராஜ்ஜியத்தை கொள்ளை யடித்துக்  கொண்டிருந்தனர். மிகப்பெரிய அவர்களுடைய படைகளுக்கு முன்பாக அர்ச். 2ம் ஹென்றி தனது சிறிய படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், இவருடைய படையணிகளை, சம்மனசுகளும், அர்ச்சிஷ்டவர்களும், புதுமையாகத் தோன்றி, வழிநடத்தினர்! ஆதலால், அஞ்ஞானிகளுடைய படைகள், அவநம்பிக்கைக்கும் குழப்பத்திற்கும் உட்பட்டவர்களாக, பல்வேறு திசைகளில் சிதறி ஓடினர். இவ்விதமாக காட்டுமிராண்டிகளின் தொல்லைகளிலிருந்து, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தை, அர்ச். 2ம் ஹென்றி காப்பாற்றினார். போலந்து, பொஹேமியா, மொராவியா, பர்கண்டி ஆகிய நாடுகளை வென்று, தனது உரோமை சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்துக் கொண்டார். பன்னோனியா, ஹங்கேரி நாடுகளை, சத்திய கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்த்தார்.

                ஜெர்மனியில் சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஸ்திரமாக ஸ்தாபித்தபிறகு, அர்ச். 2ம் ஹெனறி அரசர், இத்தாலிக்குள் அணிவகுத்துச் சென்றார். கிரகோரி என்ற எதிர்பாப்புவை அகற்றி விட்டு, 8ம் பெனடிக்ட் பாப்பரசரை, வரவழைத்து, மறுபடியும், பாப்பரசரின் பத்திராசனத்தில் அமர்த்தினார். 8ம் பெனடிக்ட் பாப்பரசர், அர்ச். 2ம் ஹென்றி அரசருக்கு, 1014ம் வருடம் பிப்ரவரி 14ம் தேதியன்று, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியின் மகுடத்தைச் சூட்டினார்.

                சக்கரவர்த்தி 2ம் ஹென்றி, எந்த நகரத்திற்குச் சென்றாலும், அங்கு அந்நகரிலுள்ள  மகா பரிசுத்த தேவமாதாவின் ஒரு தேவாலயத்திற்குச் சென்று, ஜெபிப்பதில் தன் முதல் இரவைக் கழிப்பதைத் தன் பக்தியுள்ள வழக்கமாகக் கொண்டிருந்தார். அர்ச். ஹென்றி, உரோமாபுரிக்குச் சென்றபோது, அங்கிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் தலைமை தேவாலயமான மேரி மேஜர்  பசிலிக்காவில் தனது முதல் இரவைக் கழிக்கும்படியாக,  ஜெபித்துக் கொண்டிருந்தபோது,  உன்னதரும் நித்திய குருவுமான நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக தேவாலயத்தினுள் நுழைவதைக் கண்டார். அர்ச். லாரன்ஸும், அர்ச். வின்சென்டும், தியாக்கோன் மற்றும் உபதியாக்கோன்களாக முறையே, திவ்யபலிபூசைக்கு உதவி செய்ய  அங்கு வந்ததையும் கண்டார். தேவாலயம் முழுவதும் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்களால் நிரம்பியது. சம்மனசுகள் பாடற்குழுவினரின் அறையில் இருந்தபடி, மகா இனிமையான பரலோக இசையில் பாடினர். மகா பரிசுத்த தேவமாதாவும் திவ்யபலிபூசையைக் காணும்படி தேவாலயத்தினுள் மிகுந்த பக்திபற்றுதலுடன் முழங்காலிலிருந்தார்கள்.  நடுப்பூசையிலும், திவ்ய நன்மை நேரத்திலும், தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரை ஆராதித்தார்கள்!

                சுவிசேஷம் வாசித்தபிறகு, மகா பரிசுத்த தேவமாதா அனுப்பிய ஒரு சம்மனசானவர், சுவிசேஷத்தை முத்தமிடும்படியாக, அர்ச். ஹென்றியிடம் கொண்டு வந்தார். அச்சமயம், யாக்கோபுவிற்குச் செய்ததைப் போல, அந்த சம்மனசானவர், இவருடைய தொடையை மெதுவாகத் தொட்டு, “நீ அனுசரிக்கிற பரிசுத்த கற்பின் விரத்தத்துவத்தின் பேரிலும், நீதியின் பேரிலும், சர்வேசுரன் காண்பிக்கிற சிநேகத்தின் அடையாளத்தை ஏற்றுக்கொள்!” என்று கூறினார். அந்நேரமுதல், பரிசுத்த உரோமைச் சக்கரவர்த்தி 2 ஹென்றி,  தன் எஞ்சிய வாழ்நாள் காலத்தில் எப்போதும் நொண்டியாக இருந்தார்.

                தாவீதரசரைப்போல், அர்ச். 2ம் ஹென்றி தனது போர்களில் அடைந்த சகல வெற்றிகளின் பலன்களையெல்லாம், திருச்சபையின் ஊழியத்திற்குப் பயன்படுத்தினார். உரோமை சாம்ராஜ்ஜியத்திலிருந்த காடுகள், சுரங்கங்கள், மேலும், தனது திரவியசாலை அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கனிகள் யாவற்றையும்,                  சர்வேசுரனுடைய தேவாலயங் களின் மகா பரிசுத்த சன்னிதானங்களுக்காக அர்ப்பணித்தார்: தனது சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசாங்கங்களின் உயர்ரக கதீட்ரல் தேவாலயங்கள், உன்னதமான துறவற மடங்கள், எண்ணிக்கையில்லாத தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு, தன் சாம்ராஜ்ஜியத்தின் திரவியங்கள் எல்லாவற்றையும் பயன் படுத்தினார். ஒரு காலத்தில் அஞ்ஞான இருளினுடைய ஐரோப்பியப் பகுதியாக இருந்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் ஜெர்மனி மற்றும் அதைக் சேர்ந்த வடக்குப் பகுதியை அர்ச். 2ம் ஹென்றி, இவ்வளவான தேவாலயங்கள், துறவற மடங்களால் ஒளிர்வித்து அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தினார்.

                1024ம் வருடம், ஜுலை 15ம் தேதி, அர்ச். 2ம் ஹென்றி சக்கரவரதேவாலயங்கள், ெர்ஸ்டாடு அருகிலுள்ள குரோன் கோட்டையில் பாக்கியமாய் மரித்தார்.  சர்வேசுரனுடைய பரலோக இராஜ்ஜியத்தையே எப்போதும் தன் கண்முன் கொண்டவராக, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, தன்னுடைய உலக இராஜ்ஜியத்தை  மிகுந்த பொறுப்புடன் ஆண்டு நடத்திய உன்னத அர்ச்சிஷ்ட அரசரான 2ம் ஹென்றியின் மரணத்தை, நாட்டு மக்களும், திருச்சபை அதிகாரிகளும்  உகந்த விதத்தில் அனுசரித்தனர். 1146ம் வருடம், 3ம் யூஜின், பாப்பரசர் அர்ச். 2ம்ஹென்றிக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

 

பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம் ஹென்றியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

July 27 – St. Pantaleon, அர்ச். பந்தலேயோன்

 

ஜூலை2️7ம்தேதி

வேதசாட்சியான அர்ச். பந்தலேயோன் திருநாள்.



இவர் வேதசாட்சியாக கிபி 305ம் ஆண்டில் மரித்தார். இவர், நிக்கோமேதியாவைச் சேர்ந்த யுஸ்டோர்ஜியுஸ் என்கிற  ஒரு அஞ்ஞான பணக்காரரின் மகன். இவர், இவருடைய கிறீஸ்துவ தாயாரான யூபுலாவிடமிருந்து ஞான உபதேசத்தைக் கற்றுக்கொண்டார். பின்னர், இவர் கிறீஸ்துவ வேதத்தை அனுசரிப்பதை விட்டு விட்டார்! மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். சக்கரவர்த்தி மாக்ஸிமியானுசி னுடைய குடும்ப மருத்துவரானார்; சங். ஹெர்மோலாவுஸ் என்கிற குருவானவரால், இவர் மனந்திரும்பி, மறுபடியும் கிறீஸ்துவ வேதத்தில் சேர்ந்து, வேதக்கடமைகளை அனுசரிக்கலானார்!

இவருடைய தந்தை இறந்தபிறகு, அவருடைய திரளான சொத்துக்கள், இவருக்குக் கிடைத்தன! உரோமை சாம்ராஜ்ஜியத்தின்  கீழை நாடுகளின் சக்கரவர்த்தியான தியோக்ளேஷியனுடைய காலத்தில், கிறீஸ்துவர்களுக்கு எதிரான வேதகலாபனை ஏற்பட்ட சமயத்தில், இவர் பேரில் காய்மகாரம் கொண்ட சக அலுவலர்கள், சக்கரவர்த்தி மாக்ஸிமியானுசிடம் இவர் ஒரு கிறீஸ்துவர் என்று காட்டிக்கொடுத்தனர். மாக்ஸிமியானுஸ், இவரைக் காப்பாற்ற விரும்பி, கிறீஸ்துவ வேதத்தை மறுதலித்து விடும்படி கூறினான்.

ஆனால், பந்தலேயோன், பகிரங்கமாக சக்கரவர்த்தியிடம், தனது கிறீஸ்துவ வேத விசுவாசத்தை உச்சாரணம் செய்தார்! ஆண்டவர் தான் உண்மையான சர்வேசுரன் என்பதை நிரூபிப்பதற்காக, நடக்கக் கூடாமலிருந்த ஒரு பக்கவாத நோயாளியை புதுமையாக நடக்கச் செய்தார்! இவர் இந்த புதுமையைச் செய்தபோதிலும், இவர் கிறீஸ்துவ வேதத்தில் உறுதியாக நிலைத்திருந்ததைக் கண்ட சக்கரவர்த்தி, அந்த புதுமை ஒரு மாய வித்தை என்று கூறி, இவருக்கு மரண தண்டனை விதித்தான்.

                பந்தலேயோனின் சரீரம் முதலில் நெருப்புப் பந்தங்களால் சுட்டெரிக்கப்பட்டது!அச்சமயம், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின் உருவத்தில் தோன்றி, இவருடைய சரீரத்தில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களை குணப்படுத்தி, இவரை திடப்படுத் தினார்! தீப்பந்தங்கள் இதன்பின் அணைக்கப்பட்டன! பிறகு, காய்ச்சப்பட்ட ஈயம் இருந்த ஒரு கொப்பறையினுள் இவரைத் தூக்கிப் போட்டனர்! அச்சமயம், மறுபடியும், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின் உருவத்தில் இவருடன் கூட கொப்பறையினுள் இறங்கினார்! அடியில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு அவிந்துபோனது! உள்ளேயிருந்த காய்ச்சப்பட்டிருந்த ஈயம் குளிர்ந்து போனது! பின், இவரை, ஒரு பெரிய கல்லைக் கட்டி, கடலில் எறிந்தனர்! ஆனால், அந்த கல் கடலில் மூழ்காமல் மிதந்தது!  அதன்பின், காட்டு மிருகங்கள் மத்தியில் இவரை விட்டனர்.  எல்லா கொடிய மிருகங்களும், இவர்பேரில் மயங்கி, இவருடைய பாதத்தண்டையில் உட்கார்ந்து கொண்டன!  இவர் அந்த மிருகங்களை ஆசீர்வதித்தபிறகே, அவை, இவரை விட்டுச் சென்றன!               

ஒரு பெரிய சக்கரத்தில் இவர் கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கட்டப்பட்டார். ஆனால், கயிறுகள் அறுந்துபோயின! சக்கரம் உடைந்துபோனது! இவரை இறுதியாக தலையை, ஒரு வாளால் வெட்டிக்கொல்ல முயற்சித்தபோது, அந்த வாள் வளைந்துபோனது! இதைக் கண்ட கொலைஞர்கள் மனந்திரும்பி கிறீஸ்துவர்களாயினர்!  தன்னைக் கொல்ல வந்த கொலைஞர்களை மன்னிக்கும்படி, இவர் பரலோகத்தை நோக்கி ஜெபித்தார்! சர்வேசுரனிடம் அதற்காகக் கெஞ்சி மன்றாடினார்! இதனாலேயே இவர்சகல இரக்கத்தையுடையவர்என்கிற அர்த்தமுள்ளபந்தேலேயோன்பெயரினால் அழைக்கப் படுகிறார்! பின்னர், தனக்கு மகா பாக்கியமான வேதசாட்சிய மரணம் கிடைக்கும்படியாக ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடினார்! அதன் பின்னரே, இவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்! மகிமையான வேத சாட்சிய மரணத்தினுடைய கிரீடத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்! 

கீழை நாடுகளில், அர்ச். பந்தலேயோன், மகா பெரிய வேதசாட்சியாகவும், புதுமை செய்கிறவராகவும் வணங்கப்படுகிறார்! மத்திய நூற்றாண்டுகளில், மருத்துவர்களும் தாதியர்களும் இவரைப் பாதுகாவலராகக் கொண்டு இவர் மீது விசேஷ பக்தி பற்றுதல் கொண்டிருந்தனர்! மேலும்,திருச்சபையின் உதவியாளர்களான பதினான்கு வேதசாட்சிகளில் இவரும் ஒருவராயிருந்தார்! ஆதிக்காலத்திலிருந்தே, இவருடைய பரிசுத்த இரத்தம் அடங்கிய ஒரு சிறிய குப்பி, கான்ஸ்டான்டிநோபிளிலுள்ள ஒரு தேவாலயத்தில், ஒரு அருளிக்கப்பேழையாக பூஜிதமாகக் காப்பாற்றப்பட்டு, வணங்கப்பட்டு வந்தது!

அர்ச். பந்தலேயோன் திருநாள் அன்று, வருடந்தோறும், திடப்பொருளாக உறைந்து போயிருந்த இரத்தம், புதுமையாக, திரவ நிலையை அடைந்து, நுரையுடன் காணப்படும்! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள் பாரீஸிலுள்ள அர்ச். டென்னிஸ் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்தத் தலை, லியோன்ஸ் நகரில் பூஜிதமாக வணங்கப்படுகிறது!

வேதசாட்சியான அர்ச். பந்தலேயோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


 

July 28 - ST. NAZARIUS & ST. CELSUS, அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்

 ஜூலை 2️8தேதி

 வேதசாட்சிகளான அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்திருநாள்‌. 

              

அர்ச்‌. நசாரியுஸ்‌, பக்திப்பற்றுதலுள்ள  அர்ச்‌.  பெர்பெத்துவம்மா ளினுடைய மகன்உரோமையில்பிறந்தார்‌. இவருடைய தந்தை உரோமை இராணுவத்தின்அதிகாரியாக இருந்தார்‌. அவர்இன்னும்அஞ்ஞானியாக இருந்தார்‌. நசாரியுஸ்‌, 9வது வயதில்கத்தோலிக்க வேதத்தில்சேர்ந்தார்‌. இவருக்கு பின்னாளில்பாப்பரசரான அர்ச்‌. லீனுஸ்ஞானஸ்நானம்கொடுத்தார்‌. இவருடைய அஞ்ஞான தந்தை தன்மகன்நசாரியுஸ்அனுசரித்த உத்தம கத்தோலிக்கப்புண்ணியங்களால்பெரிதும்கவர்ந்திழுக்கப் பட்டார்‌: அதன்காரணமாக ஆண்டவருடைய சுவிசேஷத்தையும்சத்திய கத்தோலிக்க வேதத்தையும்பரப்பும்படி எங்கு வேண்டுமானாலும்செல்வதற்கு அனுமதித்து தன்மகனை அனுப்பி வைத்தார்‌.

நசாரியுஸ்உரோமாபுரிக்கு வெளியே அநேக நகரங்களுக்குச்சென்று கத்தோலிக்க வேதவிசுவாசத்தையும்சுவிசேஷத்தையும்பரப்பி வந்தார்‌. 10 வருடங்களுக்குப்பின்மிலான்நகரை அடைந்தார்‌. ஆனால்அந்நகர ஆளுநன்‌, இவரை சாட்டையால்அடித்து நகரை விட்டு விரட்டி விட்டான்‌. நசாரியுஸ்‌, இத்தாலியை விட்டு வெளியேறி, பிரான்ஸ்நாட்டிற்குச்சென்றார்‌. அங்கு ஒரு பக்தியுள்ள கிறீஸ்துவ பெண்மணி தன்மகனான செல்சுஸ்என்பவரை இவரிடம்கூட்டி வந்தார்கள்‌. தன்மகனுக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பிக்கும்படி  கேட்டுக்கொண்டார்கள்‌.

இவரும்செல்சுஸூக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பித்து அவரை தன்சீடனாக ஆக்கிக்கொண்டார்‌. அநேகர்அங்கு மனந்திரும்பினர்‌: இதைக்கண்ட அந்நகரின்ஆளுநன்நசாரியுஸையும்செல்சுஸையும்கைது செய்தான்‌. சித்ரவதை செய்து கொடுமைப்படுத் தினான். அந்த ஆளுநனின்மனைவி ஒரு கிறீஸ்துவளாயிருந்ததால்தன்கணவனிடம்போராடி மாசற்ற இருவருக்கும்விடுதலை வாங்கித்தந்தாள்‌. இனி கிறீஸ்துவ வேதத்தைப்பிரசங்கிக்கக்கூடாது என்கிற நிபந்தனையின்பேரில்இருவருக்கும்விடுதலை கிடைத்தது.

நசாரியுஸ்தன்சீடனுடன்பிரான்சை விட்டு வெளியேறி  ஆல்ப்ஸ்மலைப்பிரதேசத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும், எம்ப்ருன்என்ற இடம்வரைச் சென்று  சத்திய கத்தோலிக்க வேதத்தைப்போதித்து வந்தார்‌. இங்கு ஒரு சிற்றாலயத்தைக்கட்டினார்‌. பின்னர்ஜெனிவா நகருக்கும்அதன்பின்டிரவெஸுக்கும்சென்றார்‌. டிரவெஸில்நசாரியுஸ்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்‌. தன்குருவைப்பின்பற்றி வந்த செல்சுஸ்தன்குருவுடன்தன்னையும்சிறையில் அடைக்க வேண்டும்என்று கண்ணீர்மல்க ஆசித்தார்‌. அதன்படி அவரும்சிறையிலடைக்கப்பட்டார்‌.

சில நாட்களுக்குப்பின்ஆளுநன்இருவரையும்தன்முன்நிறுத்தும்படி கட்டளையிட்டான்‌. இருவரையும்கொடூரமாக சித்ரவதை செய்து உபத்திரவப்படுத்தினா்‌. இருவரும்மாஜிஸ்திரேட்முன்பாக நிறுத்தப்பட்ட போது பரலோக மகிமையின்மாபெரும்பிரகாசமுள்ள ஒளியினால்இரு அர்ச்சிஷ்டவர்களுடைய முகங்களும்ஒளிர்வதைக்கண்டு கூடியிருந்த மக்கள்எல்லோரும்ஆச்சரியமடைந்தனர்‌! அச்சமயம்அங்கு நிகழ்ந்த அதிசயங்களும்புதுமைகளும்அங்கிருந்த அஞ்ஞான அதிகாரிகளை அச்சமடையச்செய்தன!

உடனே இருவரையும்விடுவித்து. அப்பிரதேசத்திலிருந்து வெளியேறும்படி கூறினர்‌.  இருவரும்மிலான்நகருக்குத்திரும்பி வந்தனர்‌. ஆனால்விரைவிலேயே இங்கேயும்கைது செய்யப்பட்டனர்‌. உரோமையின்அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடவேண்டும்என்று இருவரையும்நிர்ப்பந்தித்தனர்‌. அதற்கு இருவரும்மறுத்ததால்சகல கொடிய உபதக்திரவங்களால்இருவரையும்சித்ரவதை செய்தனர் தேவ பராமரிப்பினால்அந்த கொடிய சித்ரவதைகளிலிருந்து இருவரும்புதுமையாகப்பாதுகாக்கப்பட்டனர்‌. இதைக்கண்ட ஆளுநன்இருவரையும்தலைவெட்டிக்கொல்லும்படி உத்தரவிட்டான்‌.

இதைக்கேட்டு இருவரும்சந்தோஷத்தினால்ஒருவர்ஒருவரை அரவணைத்துக்கொண்டனர்‌. வேதசாட்சிய மகிமையை தங்களுக்கு அளித்தமைக்காகவும்அதற்கான விசேஷ தேவ வரப்பிரசாதத்தை அளித்தமைக்காகவும்இருவரும்முழங்காலிலிருந்து மகிழ்வுடன்சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தினர்‌. இது கி.பி.56ம்வருடம்கொடுங்கோலனான நீரோ உரோமையை ஆண்ட காலத்தில்நிகழ்ந்தது!

 கிறீஸ்துவ உத்தமதனத்தின்பெருந்தன்மையையும்தயாள குணத்தையுமுடைய இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும்தங்களுடைய பரிசுத்த இரத்தத்தை திருச்சபையின்விலைமதியாத பொக்கிஷ திரவியசாலையில்சேர்த்தனர்‌. இருவருடைய பரிசுத்த சரீரங்களும்தனித்தனியாக உரோமை நகருக்கு வெளியே உள்ள ஒரு தோட்டத்தில்அடக்கம்செய்யப்பட்டன.  இந்த கல்லறைகளை, 395ம் வருடம்‌, அர்ச்‌. அம்புரோசியார்‌, கண்டெடுத்து, இருவருடைய பரிசுத்த சரீரங்களையும்‌, தான்அப்போஸ்தலர்களுக்குத்தோத்திரமாக புதிதாகக்கட்டியிருந்த தேவாலயத்தில்பூஜிதமாக அடக்கம்செய்தார்‌.

அச்சமயம்‌, பேய்பிடித்திருந்த ஒரு பெண்புதுமையாக குணமடைந்தாள்‌. இவ்விரு அர்ச்சிஷ்டவர்களின்பரிசுத்த அருளிக் கங்கள்சிலவற்றை நோலாவிலுள்ள அர்ச்‌.  பவுலினுசுக்கு, அர்ச்‌.  அம்புரோசியார்அனுப்பி வைத்தார்‌. அவற்றை  அர்ச்‌. பவுலினுஸ்நோலாவிலுள்ள தேவாலயத்தில்பூஜிதமாக ஸ்தாபித்தார்‌.  அர்ச்‌. நசாரியுஸ்கல்லறையில்அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த தலையும்பரிசுத்த சரீரமும்முழுமையாகப்பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்ணாடி குப்பியினுள்பூஜிதமாக அடைக்கப்பட்டிருக்கிற அர்ச்சிஷ்ட வருடைய பரிசுத்த இரத்தம்புதுமையாக அன்று தான்சிந்தப்பட்டதுபோல்‌,சிவப்பு நிறத்துடனும்நுரை பொங்கியபடியும்காணப்பட்டது!

வேதசாட்சிகளான  அர்ச்‌. நசாரியுஸே!  அர்ச்‌. செல்சுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்‌!



For more please Visit here - https://livesofsaint.blogspot.com/