Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

History லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
History லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 19, St. John Eudes - அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பர்

 

ஆகஸ்டு 1️9️ம்தேதி

யூடிஸ்ட்ஸ்குருக்கள்சபை என்று அழைக்கப்படுகிற, சேசுமரியாயின்சபையின்ஸ்தாபகரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்திருநாள்

அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1601ம்வருடம்‌, பிரான்சிலுள்ள நார்மண்டியைச்சேர்ந்த ரி என்கிற கிராமத்தில்‌, பக்தியுள்ள பெற்றோர்களிடம்பிறந்தார்‌. அவர்கள்இவரைப்பிறந்தவுடனேயே மகா பரிசுத்த தேவ மாதாவிற்கு அர்ப்பணம்செய்து ஒப்புக்கொடுத்தனர்‌. 1615ம்வருடம்‌, கான்என்ற இடத்திலுள்ள சேசுசபைக்கல்லூரியில்படித்தபோது, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்பரிசுத்த கற்பு வார்த்தைப்பாட்டைக்கொடுத்தார்‌; தன்னை முழுமையாக மகா பரிசுத்த தேவ  மாதாவிற்கு அர்ப்பணித்தார்‌;அன்று முதல்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மீதான அத்தியந்த பக்தியானது, இவரிடம்இன்னும்ஆழமாகவும்‌, இன்னும்உயரமாகவும்குறிப்பிடத்தக்கவிதமாக, அதிகரிக்கத்துவங்கியது.

1623ம்வருடம்‌, இவர்‌, வந்.பெரூலின்கர்தினால்ஆண்டகையால்ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸினுடைய ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌. 1625ம்வருடம்டிசம்பர்‌ 20ம்தேதியன்று,குருப்பட்டம்பெற்றார்‌; அப்போஸ்தல வேதபோதக அலுவலில்ஈடுபட்டு, நார்மண்டியிலும்‌, பர்கண்டியிலும்‌, பிரான்சின்ஏழைகள்வசிக்கும்சேரிகளிலும் மூலை முடுக்குகளிலும்‌, பிரிட்டனியிலும்‌, சுவிசேஷத்தைப்பிரசங்கித்து வந்தார்‌.  குருக்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி மிக முக்கியமானது, என்பதை உணர்ந்தவராக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, செபக்கூட துறவற சபையிலிருந்து வெளியேறி, சேசுமரியாயின்சபையை ஸ்தாபித்தார்‌. இது யூடிஸ்ட்ஸ்துறவற சபை என்று அறைக்கப்படுகிறது; இச்சபையின்முக்கிய நோக்கம்‌, மிகச்சிறப்பான குருமடத்தினகல்வியை குருமாணவர்களுக்கு அளிப்பதாகும்‌.

இதனுடைய முதல்குருமடம் , கான்என்ற இடத்தில்ஆரம்பிக்கப்பட்டது;: பின்விரைவிலேயே,மற்ற  பல இடங்களிலும்துவங்கப்பட்டது. தீய வழிகளில்ஜீவிக்கும்பெண்களை மனந்திருப்புவதற்காகவும்‌, பாவ வழியிலிருந்து மனந்திரும்பிய உத்தம கத்தோலிக்க ஜீவியம்  ஜீவிக்கிற நிராதரவான பெண்களுக்கு உதவும்படியாகவும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்பிறா்சிநேகத்தின்சபையை அர்ச்‌. யூட்ஸ் அருளப்பா்ஸ்தாபித்தார்‌; புறக்கணிக்கப்பட்ட கத்தோலிக்கர்களிடம்சுவிஷேத்தையும்ஞான உபதேசத்தையும்போதிப்பதற்காக, பங்குகளில்செயல்படக்கூடிய ஒரு வேதபோதக நிறுவனத்தையும்ஸ்தாபித்தார்‌. நீண்ட காலமாக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, தேவாலயங்களிலும்‌, திறந்த வெளி மைதானங்களிலும்‌, திரளான கூட்டங்களுக்கு, அல்லது அரண்மனைகளில்அரசவையிலுள்ள உயர்குடி மக்களுக்கும்அரசருக்கும்பிரசங்கித்து வந்தார்‌; மக்களிடையே நிலவிய பாவாக்கிரமங்கள்பற்றி, மிக பலமாகக்கண்டித்துப்பிரசங்கித்து வந்தார்‌; இவர்அனுசரித்த தன்னிகறற்ற பரிசுத்தத்தனத்துடன்கூட செய்த நேர்த்தியான பிரசங்கங்கள்‌, மக்களின்இருதயங்களை மிக ஆழமாக ஊடுருவும்சக்திவாய்ந்தவையாக திகழ்ந்தன!

பிரான்ஸ்நாடுமுழுவதும்‌, இவருடைய பிரசங்கங்கள்மிகவும்பிரபல்யமடைந்தன! திரளான மக்கள்பாவ ஜீவியத்தை விட்டு மனந்திரும்பினர்‌! உத்தம கத்தோலிக்கர்களாக ஜீவிக்கலாயினர்‌! நமதாண்டவருடையவும்‌, தேவமாதாவுடையவும்  மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்,‌ நம்மேல்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினால்பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன! என்பதை கேட்பவர்இருதயங்களில்ஊடுருவும்படியாக, சேசுமரிய திரு இருதய பக்தியை அயராமல்சென்ற இடங்களிலெல்லாம்‌, பரப்பி வந்தார்‌. நம்மேல்சர்வேசுரன்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினுடைய அடையாளமாக, திவ்ய சேசுமரிய திரு இருதயங்கள்நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! என்றும்‌, இவ்விரு மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்மீது பக்திகொண்டிருக்கும்ஒரு உத்தம கத்தோலிக்க சமுதாயத்திற்கு நாம்எவ்வாறு அழைக்கப்பட்டிருக்கிறோம்‌? என்பதைப்பற்றியும்அயராமல்‌, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்சென்ற இடங்களிலெல்லாம்‌, ஊக்கத்துடனும்உற்சாகத்துடனும்பிரசங்கித்து வந்தார்‌.

மகா பரிசுத்த சேசுமரிய திவ்ய திரு இருதயங்களுக்குத்தோத்திரமாக, இவர்திவ்ய பூசை ஜெபங்களையும்‌, திருவழிபாட்டின்மற்றும்துறவியர்கன்னியர்ஜெபிக்கக்கூடிய கட்டளை ஜெபங்களையும்இயற்றினார்‌; 1648ம்வருடம்‌, அவுட்டனில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மாசற்ற திரு இருதயத்தின்திருநாள்பிப்ரவரி 8ம்தேதி கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்‌. 1672ம்வருடம்‌, அக்டோபர்‌ 20ம்தேதி, திவ்ய சேசுநாதர்சுவாமியின்மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்திருநாள்கொண்டாடப்பட்டது. அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1680ம்வருடம்‌, ஆகஸ்ட்‌ 19ம்தேதியன்று, சேசுமரியாயின்மகா பரிசுத்தத்திவ்ய திருநாமங்களை பக்திபற்றுதலுடன்உச்சரித்தபடி பாக்கியமாய்மரித்தார்‌. 1925ம்வருடம்‌, மே 31ம்தேதியன்று, 11ம்பத்திநாதர்பாப்பரசரால்இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. இவர்மரித்தபிறகு, சேசுமரியாயின்சபை, தொடர்ந்து வளர்ந்து கொண்டு வந்தது. 1789ம்வருடம்‌, பிரஞ்சுப்புரட்சி துவங்கியபோது, இத்துறவற சபைக்குருக்கள்‌ 15 குருமடங்களை நடத்தி வந்தனர்‌; சில கல்லூரிகளையும்‌, சில பங்குகளையும்  நடத்தி வந்தனர்‌. பிரஞ்சுப்புரட்சியின்போது, இச்சபையின்எல்லா மடங்களும்மூடப்பட்டன ; இச்சபைக்குருக்கள்மற்ற நாடுகளுக்கு சிதறி ஓடினர்‌; இவர்களில்நான்கு குருக்கள்‌, உதவி தலைமை அதிபரானசங்.பிரான்சிஸ்லூயிஸ்ஹெர்பா்ட்சுவாமியார் உட்பட , பாரீசில்பிரஞ்சுப்புரட்சிக்காரர்களால்‌, வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. 1926ம்வருடம்இவர்களுக்கு முத்திப்பேறுபட்டமளிக்கப்பட்டது. 

மற்ற மனிதர்களுடன்வியாபார விஷயமாக, ஏதாவது பேச்சு வார்த்தை நிகழ்த்துவதற்கு முன்னதாக,இந்த குறிப்பிட்ட அலுவலின்போது, அதன்விளைவாக, சர்வேசுரனுக்கு அதிமிக மகிமை ஏற்படவேண்டும்என்பதன்பேரில்‌, அந்த மனிதர்களும்ஏற்புடன்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்ற கருத்திற்காக, எப்போதும்‌, அவர்களுடைய காவல்சம்மனசானவர்களிடமும்‌, அவர்களுடைய பாதுகாவலர்களான அர்ச்சிஷ்டவர்களிடமும்வேண்டிக்கொள்ளவேண்டும்‌!”- 🏻+ அர்ச்‌.  யூட்ஸ்அருளப்பர் 

ஸ்துதியரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


 

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 13, St. HIPPOLYTUS , அர்ச்‌. ஹிப்போலிடஸ்

 

ஆகஸ்டு 13ம் தேதி

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸ் திருநாள்

            இன்று, அர்ச்‌. ஹிப்போலிடஸின் திருநாளையும் கொண்டாடுகிறோம். இவர் உரோமைக் காவல்படை வீரர். உரோமைத் தலைமைத் தியாக்கோனும், வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸ் கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டபோது, இவர், அவருக்குக் காவல் வீரராக இருந்து அவரைக் கண்காணித்து, வந்தார்; அச்சமயம், அர்ச்‌. லாரன்ஸ், பெரிய இரும்பு அடுப்புக்கட்டிலில் கிடத்தப்பட்டு,  சூடேற்றப்பட்டு, உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டபோது, அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்தமுகத்தில் காணப்பட்ட மகிமையான பரலோக சந்தோஷ ஒளியை, இவர் கண்டார்.

            அகஷணமே, தேவபராமரிப்பினால், இவர்,மனந்திரும்புவதற்குத் தேவையான தேவ வரப்பிரசாதத்தைப் பெற்று, அர்ச்‌. லாரன்சிடம், தனக்கு ஞானஸ்நானம் வேண்டும் என்று கேட்டார்;அதன்படி,அர்ச்‌. லாரன்சிடம் ஞானஸ்நானம் பெற்று, கிறீஸ்துவரானார்; இதைக் கேள்விப் பட்ட உரோமை ஆளுநன், இவரைக் கொன்று போடக் கட்டளையிட்டான்; அதன்படி, இவருடைய கால்களைக் கயிற்றினால்கட்டி, அந்த கயிற்றை, முரட்டுக் குதிரைகளுடன் கட்டி விட்டனர். இவ்விதமாக, 260ம் ஆண்டு, அர்ச்‌.  ஹிப்போலிடஸ் , மகிமையான வேதசாட்சி முடியைப் பெற்றுக்கொண்டார்.

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!