Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Catholic doctrine in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Catholic doctrine in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - விபூதி (Ash)

விபூதி

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

விபூதி என்பது சாம்பல், தபசுகாலத்துக்கு ஆரம்பமாகியிருக்கிற புதன்கிழமை விபூதித் திருநாள் என்று பெயர் வழங்கிவருகிறது. தபசுகாலம் நாற்பது நாள் அடங்கியது. நாம் நமது சரீரத்தைத் தண்டித்து அடக்க வேண்டும் என்பதின் அவசியத்தைத் திருச்சபை நமக்கு இந்த நாட்களில் நினைப்பூட்டுகிறது. தபசு செய்யாமல் அலட்சியமாயிருக்கிறவன் கெட்டழிந்துபோகும் ஆபத்தைத் தேடிக் கொள்கிறான். கிறீஸ்தவன் தனது கடைசி முடிவையும், மண்ணுக்குத் திரும்பிப் போகவேண்டியதையும் எக்காலமும் மறந்துபோகக் கூடாது என்பதும் திருச்சபையின் கருத்து.



நாம் பிறக்கும்பொழுதே, பாவத்தோடு பிறக்கிறோம். பின்னும் புத்தி விபரம் அறிந்தது முதல் எத்தனையோ பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். இவைகளால் சர்வேசுரனுக்கு உண்டாகும் கோபத் தைத் தபசினாலும் பரித்தியாக முயற்சிகளினாலும் தணிக்கப் பிரயாசப்பட வேண்டுமென்று திருச்சபை வலியுறுத்துகிறது. நம் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கடமையை நமக்கு எடுத்துரைப்பதற்காகவே விபூதி திருநாள் அன்று சாம்பலை மந்திரித்து நெற்றியில் பூசுகிற சடங்கு ஏற்படலாயிற்று.

பூர்வீக வழக்கம்:

இருச்சபையில் வழங்கி வருகிற மற்ற அநேக ஆசாரங்களைப் போலவே, சாம்பலின் உபயோகமும் ஜனங்களுக்குள். ஏற்கனவே அநுசரிக்கப்பட்டுவந்த வழக்கங்களில் ஒன்றுதான். பழைய ஆகமங்களில் இதன் உபயோகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது இராஜா தன் பாவங்களுக்காகப் பச்சாதாபப்பட்டு, "சாம்பலைப் போஜனம் போலும் புசித்துக் கண்ணீரால் என் பானத்தைக் கலந்தேன்" என்று கூவினார். யோனாஸ் தீர்க்கதரிசி செய்த பிரசங்கத்தின் பயனாக, நினிவே நகரத்தார் தபசு செய்யத் தீர்மானித்து சாக்குத் துணியை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆகையால் திருச்சபை ஆரம்பத்தில் மனந்திரும்பின யூதர் இந்த வழக்கத்துக்குக் காரணமாயிருந்தார்கள் என்று சொல்ல நியாயமுண்டு.

திருச்சபை ஆரம்ப காலங்களில் சாம்பல் பெரும் பாவிகளுக்கு விதித்த தண்டனைகளில் ஒன்றாயிருந்தது. கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் மன்னிப்படைய வேண்டுமானால், விபூதித் திருநாட் காலையில் தபசுக்குரிய உடை உடுத்திக் கோவில் வாசற்படியில் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களுக்குச் சாக்குத்துணியை அணிந்துகொள்ளக் கொடுத்துச் சாம்பலை அவர்கள் மேல் தூவுவார்கள். அன்று முதல் பெரிய வியாழக்கிழமை வரைக்கும் கோவிலில் பிரவேசிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரசித்தமான பாவிகளல்லாதவர்களில், பக்திமான்கள் சிலர் தாழ்ச்சியின் காரணமாக மேற்கூறினவர்களுக்குப் போலவே தங்கள் பேரிலும் சாம்பலைத் தூவும்படி கேட்டுக் கொண்டார்கள். இதிலிருந்துதான், நாளாவட்டத்தில் கத்தோலிக்கர் யாவருக்கும் சாம்பல் பூசுகிற வழக்கம் உண்டானது. 1090-ம் வருடத்தில் இதைப்பற்றிச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

தற்கால வழக்கம்:

முந்தின வருடக்கில் குருத்து ஞாயிறன்று மந்திரித்த குருத்துகளைச் சுட்டு அந்த சாம்பலைத்தான் விபூதித் திருநாள் அன்று உபயோகிக் கிறார்கள். சில ஞான ஆசிரியர் இதற்கு ஓர் அர்த்தமுங் கூறி விளக்கி யிருக்கிறார்கள். குருத்து வெற்றிக்கு அடையாளம். பாவத்தின் பேரி லும், பசாசின் பேரிலும் நாம் வெற்றி அடையவேண்டும். தாழ்ச்சியும் தபசுமின்றி இந்த வெற்றியை நாம் அடைய முடியாது என்பதற்குச் சாம்பல் அடையாளம் என்று சொல்கிறார்கள்.


சாம்பலை மந்திரிக்கும் போது குருவானவர் சொல் கிற நான்கு ஜெபங்களில் வெகு நேர்த்தியான கருத் துக்கள் நிறைந்துள்ளன. பாவிகளாகிய நம்மை சர்வேசுரன் காப்பாற்றி, சாம்பலும் தூசியுமான நமது பேரில் இரக்கமா யிருந்து, இந்த சாம்பலை  நமக்கு இரட்சண்ய மருந் தாக்கி, நினிவே நகரத் தார் தபசு செய்யத் தீர்மானித்ததைக் கண்டு சர்வேசுரன் அவர்களை அழித்துப் போடாமல் காப்பாற்றின வண்ணம் தபசு செய்து மன்னிப்படைய விரும்புகிற நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவதே இந்த ஜெபங்களில் உள்ள சாராம்சம்.

சாம்பலை மந்திரித்தபின் குருவானவர் அதை எடுத்து இதர குருக்கள் உச்சியிலும் விசுவாசிகளின் நெற்றியிலும் பூசி, "மனிதனே. நீ தூசியாயிருக்கிறாய், மீண்டும் தூசியாய் போவாய் என்று நினைத்துக்கொள்” என்று சொல்கிறார். நாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை இது நமக்கு நினைப்பூட்டு கிறது. ஓர் ஞான ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல் சுட்ட சாம்பலை இன்னும் சுடாத சாம்பலோடு கலக்கிறார். ஆண், பெண், பெரியோர், சிறியோர் சகலரும் இதை நெற்றியில் தரித்துத் தங்கள் கடைசி முடிவை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக. சாம்பலை மந்திரித்துப் பூசுவது நாம் ஒருநாள் மரிக்க வேண்டும் என்பதையும், தாழ்ச்சியும், தபசு முயற்சிகளும் பாவத்துக்குப் பரிகரிக்க அவசியம் என்பதையும் நினைப்பூட்டுவதற்காகவேயன்றி வேறல்ல.

விபூதி மந்திரிக்கும் சடங்கு:

முந்தைய ஆண்டு குருத்து ஞாயிறன்று மந்திரித்த ஒலிவ மரக் கொம்புகள் அல்லது குருத்தோலைகளைச் சுட்டெரித்து எடுத்த சாம்பலைக் குருவானவர் பூசைக்குமுன் மந்திரிக்கிறார். (குரு ஊதா காப்பாவைத் தரித்துக்கொண்டு, பீடத்திலேறி நடுவில் முத்தஞ்செய்து, நிருபப்பக்கஞ் சென்று பின்வருமாறு சொல்லுவார். பாடகர் பாடுவார்கள்.)

ஆரம்ப வாக்கியம் - சங். 68:17:

ஆண்டவரே. உமது இரக்கம் மகா பட்சம் நிறைந்த தாகையால், எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும். ஆண்டவரே, தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்திற் கேற்றபடி எங்களை நோக்கியருளும். (சங். டிெ:2) சர்வேசுரா. தேவரீர் என்னை இரட்சியும்; ஏனெனில் வெள்ளம் என் ஆத்துமம் மட்டும் பெருகி நுழைந்தது. பிதாவுக்கும். (மறுபடியும்: "ஆண்டவரே...."சங்கீதம் வரையில்)

 (குரு அங்கேயே நின்றுகொண்டு, கரங்களைக் குவித்த வண்ணம்:)

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக;
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

செபிப்போமாக: (செபம் 1)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, பச்சாதாபப் படுகிறவர்களை மன்னித்தருளும்; தேவரீரை மன்றாடுகிறவர்கள்மீது இரக்கமாயிரும்: பரமண்டலங்களிலிருந்து உமது பரிசுத்த சம்மனசானவரைத் தயவுகூர்ந்து அனுப்பி, இந்தச் சாம்பலை (இரு முறை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு) ஆசீர்வதித்து அர்ச்சிக்கும்படி செய்தருளும். உமது பரிசுத்த நாமத்தைத் தாழ்ச்சியோடு மன்றாடு கிறவர்களுக்கும். தங்கள் பாவங்களைத் தாங்களே மனதார உணர்ந்து தங்கள் குற்றங்களைக் தாங்களே ஒப்புக்கொண்டு, உமது தெய்வீகத் தயவின் சமுகத்தில் தங்கள் அக்கிரமங்களை நினைத்து, மனம் நொந்து வருந்துகிறவர்களுக்கும், அல்லது உமது தாராளம் நிறைந்த நன்மை பெருக்கத்தைத் தாழ்மையோடும் தளரா நெஞ்சத் தோடும் இரந்து மன்றாடுகிற யாவருக்கும். இந்தச் சாம்பல் இரட் சண்ய சுகந்தரும் மருந்தாயிருப்பதாக! இந்தச் சாம்பலை இட்டுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் மது மகா பரிசுத்த நாமத்தை மன்றாடுவதின் மூலமாகத் தங்கள் பாவங்களினின்று விடுதலை யடையவும், சரீர சுகத்தையும் ஆத்துமப் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகஞ் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

செபிப்போமாக: (செபம் 2)

பாவிகள் அழிந்துபோகவேண்டுமென்றல்ல. ஆனால் அவர்கள் பச்சாதாபப்படவேண்டுமென்று விரும்புகிற சர்வேசுரா, மனித சுபாவத்தின் பலவீனத்தைத் தயவாய்க் கண்ணோக்கி, தாழ்ச்சிக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்படையப் பேறுபெற்றவர்களாகவும் எங்கள் நெற்றியிலிட்டுக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கும் இந்தச் சாம்பலை உமது நன்மைத்தனத்தை முன்னிட்டு (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)ஆசிர்வதித்தருளக் கிருபை செய்து, தாங்களும் சாம்பலாயிருக்கிறோமென்றும், எங்கள் அக்கிரமத்துக் குத் தண்டனையாக மீளவும் சாம்பல் ஆவோமென்றும் அறிந்திருக் கிற நாங்கள் சகல பாவங்களுக்கும் மன்னிப்பையும், மனஸ்தாபப் படுகிறவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிற சம்பாவனையையும் தேவர்ருடைய இரக்கத்தால் அடையும் அநுக்கிரகஞ் செய்தருளும். - எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.


செபிப்போமாக: (செபம் 3)

தாழ்மையைக் கண்டு மனம் இளகுகிறவரும், பாவப் பரிகாரத்தினால் கோபந் தணிகிறவருமான சர்வேசுரா, எங்கள் விண்ணப்பங்களுக்குத் தேவரீருடைய அன்பின் செவிசாய்த்து, இந்தச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் உம் அடியார்கள் சிரசின் மீது உமது ஆசீர்வாத அருளைப் பரிவுடன் பொழிந்து, அவர்களை மனஸ்தாப உணர்ச்சியால் நிரப்பி, அவர்கள் நியாயமாய் கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்து, தந்தருளிய கொடைகள் எந்நாளும் பழுதின்றி நிலைத்திருக்கும்படி கட்டளையிட்டருளும். -எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துளின் பேரால் -ஆமென்,

செபிப்போமாக: (செபம் 4)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, சாம்பலும் சாக்குத் துணியும் அணிந்து தவம் செய்த நினிவே நகரத்தாருக்கு தேவரீருடைய இரட்சண்ய சுகந்தரும் மன்னிப்பையளிக்கச் சித்தமானீரே; தாங்களும் அவர்களைப் போல் மன்னிப் படைவதற்கு ஏற்ற வண்ணம், அவர்களுடைய தவத்தை வெளியரங்கமாய்ச் சாம்பல் பூசிப் பின்பற்றும்படி எங்களுக்குத் தயவாய் அநுக்கிரகஞ் செய்தருளும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

சனி, 9 டிசம்பர், 2023

அமலோற்பவ கன்னிமரி - December 8 - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ கன்னிமரி


அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது. (அரு. காட்சி. 12:1) 




1854 டிசம்பர் 8-ம் நாளன்று பாப்பரசர் முத். போன 9-ம் பத்திநாதர் "Ineffabilis Deus" என்ற பிரகடனத்தில் "...மிக ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரி, மனுக்குலத்தைக் காப்பாற்றுகிறவரான சேசு கிறீஸ்துவின் பேறு பலன்களை முன்னிட்டு, எல்லாம் வல்ல சர்வேசுவரனுடைய தனி வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும் தான் உற்பவித்த முதல்கணத்தில், ஜென்மப்பாவக்கறை எதுவும் அணுகாமல் காப்பாற்றப்பட்டார்கள், இந்த சத்தியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால் இது உறுதியுடனும் இடைவிடாமலும் விசுவாசிகள் அனைவராலும் விசுவசிக்கப்பட வேண்டும்..."என்று மாதாவின் அமலோற்பவத்தை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

இந்த உண்மை பரிசுத்த வேதாகமத்திலும், திருச்சபையின் போதனைகளிலும் காணப்படும் ஒன்று கத்தோலிக்க வேதசாஸ்திரத்தை ஒத்திருக்கும் இந்த சத்தியம் பரிசுத்த கன்னிமரியாயின் மிகப்பெரிய மகிமைப் பாக்கியமாக உள்ளது. இது பல புதுமைகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வேசுவரன் ஆதாமையும் ஏவாளையும் தேவ இஷ்டப் பிரசாதத்தில் மிக உன்னதமான நிலையில் சிருஷ்டித்திருந்தார். ஆனால் விலக்கப்பட்டசு கனியினைத் தின்று, பாவம் கட்டிக்கொண்டு தேவ கோபாக்கினையைத் தண்டனையாக தங்கள் மீது தேடிக் கொண்டனர். சர்வேசுவரன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளவை: "உனக்கும் ஸ்திரீக்கும். உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவள் குதிகாலைத் தீண்டப் பிரயத்தனம் பண்ணுவாய்" (ஆதி. 3:15) இதனை சற்று ஆராய்வோம்: ஆதியாகமத்தில் இந்த வார்த்தைகளை சர்வேசுவரன் எக்காலங்களுக்கென்று மனிதர்களுக்காக கூறியது.

அவருடைய வாக்கு மகிமையாகவும், உண்மையிலும், கம்பீர மாகவும் ஒலித்தது. அவர் முன்பாக, பாவத்தால் நிலை குலைந்து போன ஆதாம், வீழ்ச்சியின் துயரத்தோடு ஏவாள், சோதிப்பவனான சாத்தான் ஆகியோர் நிற்கின்றனர். ஆதாம் ஏவாள் விலக்கப்பட்டக் கனியை உண்ணக்கூடாதென்று கடவுளால் கூறப்பட்டாலும், அவர்கள் அவருடைய பேறுபெற்றப் பிள்ளைகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் தீமை நடைபெற்றுவிட்டது. சர்வேசுவரன் தயாளமுள்ள தந்தையாதலால் அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினார். அவர் பாம்பை நோக்கி, "கீழ்த்தரமான சாப்பமே, உனக்கும் பெண்ணுக்கும் அழிவுக்குரிய உடன்பாடு நீ சோதித்தாய். அவள் உடன்பட்டாள். இப்போது உனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் முழுமையான பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துவோம். அது என்னால் ஏற்படுத்தப்பட்ட பகை" என்று கூறுகிறார்.

அவளது மாசுபட்ட இரத்தத்திலிருந்து, குழந்தைகளையேப் பெறுவாள். ஆனால் நான் அவளது இந்த தலை முறையினரை நிறுத்தி, உனது (பசாசின்) ஆதிக்கமில்லாத ஒரு தலைமுறையைக் கொண்டு வருவேன். நான் ஒரு பெண்ணை உனது எதிரியாகவும், பகையாளியாகவும் ஏற்படுத்துவேன். அவளிடமிருந்து பிறப்பவர் பரிசுத்தராக இருப்பார். அவள் மட்டுமல்ல, அவளது வித்தும் உனது எதிரியாக இருப்பார். நீ அவளால நசுக்கப்படுவாய். நீ அவளைத் தீண்ட முயல்வாய். ஆனால் அவளது ஆன்மாவையோ அல்லது உள்ளத்தை யோ தொடமுடியாது. நீ வீணாக அவளது குதிகாலைத் தீண்ட முயற்சிப்பாய். இப்படியாக மரியாயில், சர்வேசுவரன் தாமே பசாசோடு பகையை மூட்டியுள்ளார். அவளை அணுக முயலும் போதெல்லாம் சாத்தான் தோல்வியே அடையும். ஆனால் அவள் அதன் தலையை நசுக்குவாள். மாதா தாம் உற்பவமான அந்த கணத்திலிருந்து அமலோற்பவியாக இருக்கிறார்கள். சாத்தானால் ஒரு கண நேரத்திலும் கூட மாதாவை வெற்றிகொள்ள முடியவில்லை.

பரிசுத்த கன்னிமரியம்மாள் சம்மனசானவரால் “அருள் நிறைந்தவள்" என அழைக்கப்பட்டார்கள். அருள் நிறைவு என்பது மாதா தனது வாழ்நாளெல்லாம் கடவுளோடு முழுமையாக ஒன்றித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் பாவத்தால் கறைபடுத்தப்படவில்லை. கடவுளின் நிறைவான படைப்பாக உருவாக்கப்பட்டார்கள். அமலோற்பவியாக பரிசுத்தவதியாக

அதிதூதரான கபிரியேல் "கர்த்தர் உம்முடனே” (லூக், 1:28) என்றுரைத்து மரியாயோடு சர்வேசுவரன் இருப்பதைக் கூறுகிறார். "சர்வேசுவரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்” (லூக், 1:30) ஆதாம் இந்த வரப்பிரசாதத்தை இழந்ததால் சர்வேசுவரன் அவரை சிங்காரத்தோப்பிலிருந்து வெளியேற்றினார். அவரோடு கடவுள் இருக்கவில்லை. ஆதாம் இழந்தவைகள் அனைத்தையும் மாதா கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து விலகியிருந்தது மட்டுமல்லாமல், அவருடைய பாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டு விலை மதிப்பில்லாத ஒவ்வொரு வரங்களாலும் அணிவிக்கப்பட்டு படைப்புகளிலேயே மிகவும் உன்னதமான சிருஷ்டியாக உயர்த்தப் பட்டார்கள்.

அர்ச். எலிசபெத்தம்மாள் மாதாவை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதாமே” (லுாக். 1:42) என்று வாழ்த்தினாள். இந்த வாழ்த்து எதற்கு? ஏனென்றால் மரியாயின் வயிற்றின் கனியானவர் வாக்களிக்கப்பட்ட மீட்பரான அவர்களது தெய்விக மகன்! சிங்காரத் தோப்பில் சர்வேசுவரனால் ஏவாளின் பாவங்களுக்காக முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரியானவள் மரியாயே! மாதா அவரது அன்னையாக ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகையால் ஒரு சிறு பாவம் கூட அணுகாமல் பாதுகாக்கப்பட்டார்கள். பாவத்தால் பீடிக்கப்பட்ட தாயிடமிருந்து மனுவுரு எடுக்கவோ, சாத்தானால் கவரப்பட்ட பாவக் கறைபட்ட பேழையிலோ அவர் தங்குவதில்லை.

திருவழிபாடுகளிலும், பாரம்பரியத்திலும், தொன்மை கலைச்சித்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட மாதாவின் அமலோற்பவம், விசுவாச சத்தியமாக்கப்பட்ட போது. திருச்சபையின் பாப்பரசரும் வேதபாரகர்களும் இந்த உண்மையை வலியுறுத்தி அநேக நூல்களையும், பிரபந்தங்களையும் எழுதினார்கள்,

கன்னிமாமரி அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந் தார்கள், ஏனெனில் அவர்களே ஞானத்திற்கு இருப்பிடம்: தீமையிலிருந்து காக்கப்பட்டார்கள். இதனால் நன்மைதனத்திலும் நிறைவிலும் எப்போதும் நிலைத்திருந்தார்கள். ஆகையால் தான் திருச்சபை "ஓ மரியாயே நீர் எத்துணை அழகானவள்; ஜென்மப்பாவத்தின் மாசு உம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்று பாடுகிறது. மரியாயின் சரீரத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி என்ற மனித இயல்பின் பரிணாமத்திற்கு உட்பட்டாலும் ஜென்மப்பாவத்தின் தாக்கம் இல்லாமையால் முழுமையான சௌந்தர்யமுள்ளதாக விளங்கியது. அவர்கள் சுகவீனத்திலிருந்துதடுக்கப்பட்டிருந்தாலும் பசி, தாகம், மனவேதனை ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு கடந்து மறுமைக்குச் சென்றதும்கூட சுகவீனமோ. நோய்வாய்ப்பட்டதாலோ அல்ல. மாறாக வல்லமை வாய்ந்த தேவசிநேகமே அவர்களது சரீரத்தை நிலைகுலையச் செய்தது.

மாதாவின் அமலோற்பவத் திருநாளின் கட்டளை ஜெபம், திவ்விய பலிபூசையிலும் கூட மாதாவின் உற்பவத்தின் போது அவர்களது சரீரத்தோடு இணைக்கப்பட்ட, அசாதாரணமான ஆன்ம அழகு பெரிதும் போற்றப்படுகின்றது. கபிரியேல் தூதனால் "அருள் நிறைந்தவளே வாழ்க!" (லுாக். 1:28) என்று கடவுளின் மாதாவை வாழ்த்துவதைப் பற்றிய திருச்சபையின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானனை. மரியாயைப் போதிய அளவுக்கு வாழ்ந்த வேண்டுமானால் நாமும் கபிரியேல் தாதுவரின் மனப்பான்மையை கொண்டிருப்பது அவசியம். அவைகளின் உயர்வை, உன்னதத்தினை யோசிப்பது அவ்வளவு சிரமமில்லை. விசுவாசத்தோடு சம்மனசானவர் தெய்வீக நன்மைத்தனங்களோடு விளங்கிய மரியாயை ஆராதித்த போது, இந்த தாழ்ச்சியானக் கன்னிகை அந்த மகா உன்னத மகிமை உயர்வுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டு வியப்படைந்தாள் மீட்பினுடையவும். மனிதாவதாரத்தினுடையவும் பரமரகசியங்களை முன்னறிவிப்பவராக தாம் ஏற்படுத்தப்பட்ட மரியாதையினால் சம்மனசானவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலோற்பவ மாதாவின் மகோன்னதமான உயர்வு பெருமைகளையெல்லாம் திருச்சபையின் ஜெபங்களிலும், திருவழிப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. மரியாயின் நாமம். எல்லா அழகோடும், தூய்மையோடும், ஒளிபொருந்திய சூரிய பிரகாசத்தோடும், அவர்களது வரப்பிரசாத சுகந்தங்களோடும் அகில உலகெங்கும் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. அவர்கள் ஜெருசலேமின் மகிமை உயர்வு. மக்களின் பெருமை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தெய்விக வல்லபத்தின் உருவம் உயர்ந்த பரிசுத்த பர்வதங்களின் உச்சியில் கட்டப்பட்ட கடவுளின் திருநகர்!

ஒ. அனைத்தும் பரிசுத்த பிரகாசமான மாசில்லாத கன்னிகையே, உலகமுண்டாகும் முன்பே நீர் தேர்ந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்! குற்றங்களின் பாரத்தால் நசுக்கப்பட்டு மீட்பு பற்றிய நிச்சயமில்லாமல் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் மனிதன் உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறான். நீரே எங்களது நம்பிக்கை, உம்மில் உம் வழியாகவே குற்றவாளிகள் வரப் பிரசாதத்தைக் கண்டடைகிறார்கள். நொறுக்கப்பட்டவன் ஆறுதலையும், கைவிடப்பட்டவன் அடைக்கலத்தையும், அறிவிலி ஞானத்தையும்; பாவியானவன் மன்னிப்பையும்; நீதிமான் நிலைமை வரத்தையும் கண்டடைகிறான். தாயே நீரே எங்களது ஏக அடைக்கலம்!



Source: சால்வே ரெஜினா- டிசம்பர் 2006

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அன்னையின் அமலோற்பவத் திருநாள் - Feast of Our Lady of Immaculate Conception

அன்னையின் அமலோற்பவத் திருநாள்

(டிசம்பர்-8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி

கன்னிமரியம்மாள் கடவுளின் அன்னை ஆக வேண்டியவள் என்னும் ஒரு காரணமே அவள் ஜென்மப் பாவ மின்றி உற்பவித்திருக்கவேண்டும் என்பதற்குப் போதும். 



ஒரு கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உற்பவிக்கத் திருவுளமிரங்குகிறார். இது மகத்தான ஒரு காரியம். இதை நிறைவேற்ற, நன் இருக்கையின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றிருந்த ஒருவரைத் தவிர, வேறு யாரையும் கடவுள் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளது நரம்புகளில் ஓட இருந்த இரத்தம் அதன் ஊற்றிலே கறைப்பட்டிருக்கலாமா? நித்திய வார்த்தையானவர் மரியம்மாளின் உதரத்தை தன் இருப்பிடமாக்கத் தீர்மானித்தார். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தைப் பசாசு முதலில் தனது வாசஸ்தலமாக்க அவர் சம்மதிப்பாரா? பசாசாகிய சர்ப்பத்தின் தலையை நகக்க வேண்டிய அவன், அவள் ஒரு வினாடி முதலாய் மாசின் அதிகாரத்தில் இருப்பது நியாயமா? கடவுளுடையத் தாயாக வேண்டிய அவள் உற்பவித்த வினாடியிலிருந்தே தன் உயர்பதவிக்கு ஏற்புத் தூய்மையுள்ளவளாயிருந்தாள்; பரிசுத்தவதியாயிருந்தாள்.

அவள் கடவுளுடைய மாதாவாக வேண்டியவள். அதே கடவுளுடைய பிதா. பரலோக பிதாவே. தம்முடைய சுதனுக்கு மாதாவாக வேண்டியவளை, அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே, சம்மனசுக்களைவிட அதிகத் தூய்மையும், பரிசுத்தமுமுள்ளவளாக்கினார். நித்திய வார்த்தையானவர். தம் தாயாகும்படி ஒரு பெண்ணை நித்தியத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். அவள் எப்பொழுதும் முற்றிலும் தூய்மையுள்ளவளாயிருக்கும்படிச் செய்தார். அவர் தம் தாய்க்குத் தம்மால் இயன்ற அளவு நன்மை செய்ய விரும்பினார். தம்முடன் அவள் ஒன்றித்துப் பசாசை முறியடித்து, இரட்சண்ய வேலையைச் செய்து முடிக்கவேண்டும். எனவே அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே அவளை அலங்கரித்தார், அவளிடம் பாவக்கறை படாதபடி பார்த்துக்கொண்டார். மரியாயிடமாய் மனித கடவுளை உருவாக்க வேண்டியவர் இஸ்பிரித்துசாந்து: இவ்விதம் மரியாயை அவர் தம் நேசபத்தினி என்னும் புதவிக்கு உயர்த்த இருந்தார். எனவே அவள் முற்றிலும் பரிசுத்தவதியாகவும். ஒரு சிருஷ்டி கொண்டிருக்க வேண்டிய புண்ணியங்கள் அனைத்தையும் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆதலின் மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றி இருக்கவேண்டும் என்றும். சகல வரப்பிரசாதங்களையும் நிரம்ப கொண்டிருக்க வேண்டும் என்றும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், சம்மனசுக்களையும் விட அவள் அதிக பரிசுத்தவதியாயிருக்க வேண்டும் என்றும் கடவுள் நித்தியத்திளிருந்தே தீர்மானித்தார். இவ்விதம் மாதாவாக வேண்டிய அவளுக்கு அமலோற்பவம் என்னும் மகிமை வழங்கப்பட்டது. அகில உலக கத்தோலிக்கரும் அக மகிழ்ந்து ஆர்ப்பரிக்க, 9-ம் பத்திநாதர் பாப்பரசர். கன்னிமரி ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள் என்பது வேத சத்தியம் எனப் பிரகடனம் செய்தது முற்றிலும் நியாயமே. மரியாயின் கிரீடத்தை அலங்கரிக்கும் இப்புதிய இரத்தினத்தை முன்னிட்டு மரியாயை நாம் வாழ்ந்துவோமாக; திருச்சபை யுடன் சேர்ந்து, "என் நேசமுள்ளவளே, நீர் முற்றிலும் அழகு வாய்ந்தவள், ஜென்மப் பாவத்தின் தோஷம் உம்மிடத்தில் இருந்ததில்லை" என்போம்.

மரியாயின் புண்ணியங்கள் அனைத்திற்கும் ஆதித்தொடக்கம் அவளது அமல உற்பவமே மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே மிகப் பரிசுத்தவதி என்றாலும், அவள் மென்மேலும் தன்னை உயர்த்திக்கொண்டு வந்தாள். புண்ணியத்தில் அதிகரித்து வந்தாள். உதிக்கும்பொழுதே மிக்க பிரகாசத்துடன் இருந்த இந்த நட்சத்திரமானது விடாமல் எழும்பிக்கொண்டு வந்ததுடன், பரிசுத்ததனம் என்னும் கதிர்களை தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வீசிவந்தது. சாதாரண மக்களின் ஆத்துமங்களில் இருக்கும் வரப்பிரசாதத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; நன்மை செய்ய ஆசிக்கும்போது எதிர்ப்பு உண்டாகிறது. தீமையை நோக்கி நாட்டம் இருக்கிறது. நாம் பிறந்ததிலிருந்தே இவ்விரண்டும் நம்மிடம் உண்டு. ஆனால் மாசின்றி உற்பவித்த மரியாயிடம், வரப்பிரசாதமானது எதிர்ப்பை காணவில்லை: ஆத்துமத்தின் சகல வாய்க்கால்களும் வரப்பிரசாதத்தை ஏற்க தயாராயிருந்தன. அவளது ஆத்துமத்தில் வரப்பிரசாதமானது தன்னைத் தடையின்றி பரப்புகிறது, வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகல புண்ணியங்களும் அங்கு வளரச் செய்கிறது. ஆகவே, உள்ளும் புறமும் அழகுடன் இருந்த மரியம்மாள் மோட்சத்தின்முன், கண்ணைப்பறிக்கும் வெண்மையான அழகிய லீலி மலர்போல் காணப்பட்டாள். எளிய குடிசை என்றாலும் அரசர்களும் அதை மதிக்கச் செய்யும் தாழ்ச்சி அவளிடம் இருந்தது: வேதனையாலும் முறியடிக்க முடியாத பொறுமையை அவள் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த இனிமையானது எந்த எதிர்ப்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆபத்து நேரத்திலும் அவள் மன அமைதியுடன் இருந்தாள். மலைகளை அசைக்கும் விசுவாசம் மாத்திரமல்ல, ஆனால் நித்திய வார்த்தையானவரை பரலோகத்திலிருந்து இறங்கச் செய்யும் விசுவாசம் அவளிடம் இருந்தது; அபிரகாமிடம் இருந்த நம்பிக்கையை விட அதிக வீரத்தனம் வாய்ந்த நம்பிக்கை மரியாயிடம் இருந்தது; அவளது சிநேகம், எரியும் சுவாலைக்குச் சமம். மரியாயின் பரிசுத்ததனம் எல்லா உள்ளங்களையும் பரவசப்படுத்தக்கூடியது. "பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள். நீயோ சகலரையும் மேற்கடந்தாய்” (1. 31:29), "மகா உன்னதமானவர் தமது வாசஸ்தலத்தை அர்ச்சித்தா?" (சங். 45:3). எனவே மரியாயின் உள்ளத்தை மிக மகிழ் விப்பது, அவள் பரலோக இராக்கினி கான்பதல்ல; பூலோக அரசி என்பதல்ல; ஆனால் அவளது அமல உற்பவமே. அதனாலேயே லூர்து கெபியில் அன்னையின் பெயரை பெர்நதெத் வினவியபோது. "அமலோற்பவம் நாமே" என அவள் பதிலளித்தாள்.

அன்னையைப் பின்பற்றி புண்ணிய பாதையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டிருக்கவேண்டும். முன்னேறியது போதுமென ஒருபோதும் சொல்லலாகாது. கடவுளுக்குப் பிரியப்படுவதே அனைத்திலும் நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடிவருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமலோற்பவமானது வரப்பிரசாதங்களின் களஞ்சியம்

 இயற்கையானது தாய்மாரின் உள்ளங்களில் ஒருவித பவவீனத்தை வைத்திருக்கிறது; அதனாலேயே, பிள்ளைகள் நாங்கள் கேட்பதற்கு அதிகமாகவே தாய்மாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதேபோல் மரியாயை அமலோற்பவி என வாழ்த்துகிறவர்களின் மீது ஓர் அன்புணர்ச்சி மரியாயின் உள்ளத்தில் இருக்கிறது. பாவச் சோதனையால் துன்புறுத்தப்பட்ட ஆத்துமங்கள் பாவமில்லாத மரியாயைக் கூவியழைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனையில் வெற்றிபெற்றார்கள்; துன்புற்ற ஆத்துமங்கள் ஆறுதலடைந்தன; கலங்கியிருந்த உள்ளங்கள் அமைதியடைந்தன; தைரியமற்றிருந்தோர் திடன் பெற்றார்கள். முற்றுகையிடப்பட்ட பட்டணங்களின் வீடுகளின் கதவுகளில் "மரியாயி பாவமின்றி உற்பவித்தவள்” என எழுதியமையால் நாசத்தினின்று அவை காப்பாற்றப்பட்டன. நெருப்புக்கு இரையாக இருந்த கட்டிடங்கள் ஆயிரம் ஆபத்துக்களால் சூழப்பட்டிருந்த தனி நபர்கள் இந்த வார்த்தைகளை எழுதியதால் அல்லது அவற்றை உச்சரித்ததால் அழிவினின்று தப்பித்தார்கள். பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் உருவத்தைத் தாங்கிய சுரூபங்கள் உலகத்தை அதிசயங்களால் நிரப்பியிருக்கின்றன. அந்தச் சுரூபமானது துன்பங்களை விரட்டி யடித்திருக்கிறது. வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. பாவிகளை மனந்திருப்பியிருக்கிறது. இதனால் அது புதுமை சுரூபம் என எங்கும் அழைக்கப்படுகிறது. பாரீஸ் நகரின் மத்தியில் இருக்கும் ஜெய இராக்கினி மாதாக்கோவில் ஒரு காலத்தில் முற்றிலும் கைவிடப்பட்டதாயிருந்தது; அதை மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு அர்ப்பணம் செய்ததும், உலகிலேயே மிகப் பிரசித்திபெற்ற ஆலயமாயிற்று அது. மக்கள் அந்த ஆலயத்தை விரும்பி சந்திக் கிறார்கள். அநேக புதுமைகள் அங்கு நடக்கின்றன. 9-ம் பத்திநாதர் பாப்பானவர் எதிரிகளின் தாக்குதல்களின் மத்தியில் தம்மை, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயிக்கு ஒப்புக் கொடுத்தார். இதன் விளைவாக, பேரதிசயம் நடந்தது. கொடிய சத்துருக்களால் சூழப்பட்டிருந்த உரோமை நகரில் ஒரு பொதுச் சங்கத்தை நடத்தக்கூடியவரானார். என்னென்ன துன்பம் வந்தாலும், திருச்சபை அதையெல்லாம் மேற்கொள்ளும்; மாசற்ற மரியாயி வழியாக திருச்சபை வெற்றிப் பெற்றுவரும். நமக்குத் துன்பங்களும், சோதனைகளும் வரும்போது அமல உற்பவ அன்னையிடம் நம்பிக்கையுடன் செல்வோமாக.

அமல உற்பவம் நமக்குப் படிப்பினைகளைத் தருகிறது

அமல உற்பவ அன்னையைப் போல் நாம் தூய உள்ள முள்ளவர்களாய் இருக்கவேண்டும். திவ்விய நன்மை உட்கொள்ள இந்தத் தூய்மை அவசியம். மாமிசமான வார்த்தையானவரை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மரியாயி இத்தனை தூய்மையாயிருப்பது தேவையாயிருந்தால், அதே கடவுளை திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ளும் நாம், மாசு மறுவற்றவர்களாய் இருக்க வேண்டு மல்லவா? மங்கள வார்த்தை நாளன்று மரியாயி தேவசுதனை தன் உதரத்தில் ஏற்றாள். நாமோ நம் வாழ்நாளில் பலமுறை அவரை ஏற்றுவருகிறோம்.

நாம் நம் மீது, நமது சிந்தனையின் மீது, நமது புத்தியின் மீது, நமது இருதயங்கள் மீது, விழிப்பாயிருக்க வேண்டுமென்று அன்னையின் அமல உற்பவம் படிப்பிக்கின்றது. முற்றிலும் தூய்மையுள்ளவளான, நேர்மையுள்ளவளான, மாசுமருவற்ற, மரியாயி தன் மீது மிக விழிப்புடனிருந்திருக்க, மிக்கபலவீனரும். தீமை மீது அதிக நாட்டம் கொண்டவர்களும், எளிதில் தவறுகிறவர்களுமான நாம் இன்னும் அதிக கவனத்துடன் நம் மீது விழிப்பாயிருக்க வேண்டும்.

உத்தமதனத்தின் பாதையில் நாம் விடாது முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அமல உற்பவ அன்னை கற்பிக்கிறாள். சகல புண்ணியங்களையும் நிரம்பக் கொண்டிருந்த மரியாயி, தன் வாழ்நாளெல்லாம் புண்ணியங்களில் வளர்ந்து வந்தாள். வரப்பிரசாதத்துடன் ஒத்துழைத்து, அதிக பரிசுத்தவதியாகும் வண்ணம் உழைத்தாள். குறைகள் நிறையப்பெற்றுள்ள நாம் சோம்பேறிகளாய் முன்னேறாமல், பழைய நிலையிலேயே திருப்தியடையலாகாது. முன்னேறாதிருப்பது பின்வாங்குவதாகும். நாம் ஒவ்வொரு நாளும் அதேக வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுவருகிறோம். அவற்றுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். நமது இவ்வுலகப் பற்றுதல்களை அகற்றி, கடவுள் அழைக்கும் பரிசுத்த நிலையை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.

"என் அன்பே, நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதே கிடையா!"(உந்நத சங்கீதம். 4:7



Source: Sancta Maria (Magazine) Nov. - Dec. 2012