Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Christian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Christian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 18 - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica)

 அர்ச். மோனிக்கம்மாள்

"ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன"




பிரசித்திப்பெற்ற வேதபாரகரும் திருச்சபைத் தூண்களில் ஒருவருமாகிய அர்ச். அகுஸ்தீன் என்பவரின் தாயாகிய மோனிக்கம்மாள், ஆப்பிரிக்காவின் வடபாகத்தில் பக்தியுள்ள குடும்பத்தில் 332-ம் ஆண்டில் பிறந்தவள். மோனிக்காவின் தாய் தந்தையர் தங்கள் பிரிய குமாரத்தியைப் புண்ணியவதியான ஓர் வேலைக்காரி வசம் சிறு வயதிலேயே ஒப்படைத்திருந்தனர். இந்த வேலைக்காரி புகட்டிய நற்புத்திமதி, மோனிக்கம்மாள் தெய்வபயத்திலும் தல்லொழுக்கத்திலும் நாளடைவில் அபிவிருத்தியடைய தூண்டுகோலாயிருந்தது. திருமண பருவம் வந்தவுடன், மோனிக்கம்மாள் பத்ரீசியுஸ் என்னும் பிற மத வாலிபனை மனம்புரிய நேர்ந்தது. இவள் தனது அடக்கவொடுக்கம், கீழ்ப்படிதல், அன்பு, தயை, தாட்சண்யம் முதலிய அருங்குணங்களால் தன் கணவனின் நேசபாசத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். கணவன் அன்புடையவனாயிருந்த போதிலும் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். அவன் கோபமாயிருக்கும்போது மோனிக்கம்மாள் எதிர்த்துப் பேசாமல் பொறுமையாயிருப்பாள். கோபம் தணிந்தவுடன் மிக்க அன்புடன் அவனுக்கு தற்புத்தி புகட்டி அவனது சீர்கேடான நடத்தையைச் சீர்திருத்த முயற்சிப்பாள். கடைசியாக இப்பதி விரதையின் ஜெகுபத்தினால் பத்ரீசியுள் மனத்திரும்பி பாக்கியமான மரணம் அடைந்தான். மோனிக்கம்மாளின் அயல் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரோடு சண்டையிட்டு அடி உதை பட்டு முகத்தில் காயங்களோடு வந்து அவளிடம் முறையிடுவர். "உங்கள் நாவை அடக்கினால் இத்தகைய கேடு உங்களுக்கு வராது" என்பதே மோனிக்கம்மாள் இப்பெண்களுக்கு அடிக்கடி கூறும் புத்திமதி. இந்தப் புத்திமதியை நன்குணர்ந்து இதன்படி நடந்து கொண்டவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி சமாதானம் நிலைபெறும். மற்றவர்கள் குடும்பங்களோ ஓயாத போர்க்களமாகவே இருக்கும். மோனிக்கம்மாளுக்கு ஏழை

களின் மீது அணைகடந்த இரக்கமுண்டு. தனது கையினால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பது அவளுக்கு ஆனந்தம். அனுதினமும் திவ்விய பலிபூசை காணத் தவறமாட்டாள். காலை மாலை தேவாலயத்தில் நடக்கும் பொது ஜெபத்திற்கு போவது இவ்வுத்தமியின் சிறந்த வழக்கம்.

மோனிக்கம்மாளுக்கு மோட்சவாசிகள்மீது உருக்கமுள்ள பக்தி பற்றுதலுண்டு, வேதசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அவர்களுடைய உதவியை அடிக்கடி இரந்து மன்றாடுவாள். வேத அனுசாரத்தைச் சார்ந்த எதையும் சிறிதாக எண்ணி அலட்சியம் செய்யமாட்டாள். சர்வேசுரனுக்கடுத்த காரியங்களில் சகலமும் பெரிதே என்று மதித்து நடந்துவந்தாள். தேவ சிநேகத்தை முன்னிட்டுச் செய்யும் அற்ப நற்கிரிகைகூட தேவ சமுகத்தில் மிக்கப் பேறுபெற்ற மகத்தான புண்ணிய முயற்சியாக மாறிவிடுமென்பது அவளின் திடமான நம்பிக்கை.

மோனிக்கம்மாள் ஜெபத்திலும் தபத்திலும் வெகுநேரம் செலவழித்த போதிலும் தனது பிள்ளைகளைத் தெய்வபக்தியில் வளர்ப்பது கிறீஸ்தவத் தாயின் கடமை என எண்ணியிருந்தான். இவளுக்கு அகுஸ்தீன், நவீஜியுஸ் என்னும் இரண்டு புத்திரர் இருந்தனர். மூத்த குமாரனாகிய அகுஸ்தீன் கல்வி கற்க கார்த் தேஜ் நகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான். இவ்வாலிபன் பக்தியுள்ள தாயின் கண்காணிப்பிலிருந்து வெகு தூரம் சென்ற பின் மனிக்கேயர் என்னும் பதிதர் வலையில் சிக்கித் தனது ஞானக் கடமைகளைக் கைநெகிழ்ந்து எதேச்சையாய்த் திரிந்து தன் அன்புள்ள தாயின் இருதயத்திற்கு அளவற்றத் துயரத்தை வருவித்தான். மோனிக்கம்மாள் தனது மகனுக்கு எவ்வளவுதான் நற்புத்தி கொல்லியும் பயனற்றுப்போனதை கண்டு, அவனுக்காக அழுது கண்ணீர் சிந்தி இடைவிடாது தேவ இரக்கத்தை மன்றாடுவாள்.

அகுஸ்தீன் உலக சாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சிபெற்று பட்டங்களைப் பெற்ற பின்னர், தாய்க்குத் தெரியாமல் கப்பல் ஏறி அன்னியதேசம் சென்று தனது இஷ்டப்படி திரியலாம் என்றெண்ணி இத்தாலிக்குப் பயணமானான். மகன் தப்பித்து ஓடிவிட்டான் என்று அறித்த அன்புள்ள அன்னை அவனைத் தேடிப்பிடிக்கும்படி மறு கப்பலில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள். மிலான் பட்டணத்தில் தாயும் மகனும் ஒருவரை யொருவர் சந்தித்தனர். வேதபாரகராகிய அர்ச். அம்புரோஸ் அச்சமயம் மிலான் நகர் ஆயராயிருந்தார். இந்தப் பரிசுத்த ஆயரின் புத்திமதிகளையும், போதனைகளையும் கேட்டு அகுஸ்தீன தன் பதித அபத்தங்களை விலக்கி, கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வக் குமாரன் ஆனார். இந்த ஊதாரிப் பிள்ளை மனந்திரும்பி தந்தை வீடு சேர்ந்ததை அறிந்த பக்தியுள்ள தாய் ஆண்டவருக்குத் தாழ்மையுடன் நன்றி சமர்ப்பித்து, "ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன" என்று மன்றாடினான். 

அகுஸ்தீன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பியதுமன்றி. குருப்பட்டம் பெற்று. தன் கல்வி, சாதுரியம், திறமை, சத்துவம் சகலத்தையும் தேவ ஊழியத்தில் செலவிடத் தீர்மானித்திருப்பதாக தனது அன்பு தாய்க்குத் தெரிவித்தார். இதைக் கேட்ட உத்தம தாய் ஆனந்தக் கண்ணீர் சொரித்து, தனது மகனை தோக்கி: “அப்பா, மகனே. என் வேலை முடித்துவிட்டது. நீ கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து சர்வேசுரனுடையப் பிள்ளையாயிருப்பதைப் பார்க்கும் பொருட்டே சிறிதுகாலம் இவ்வுலகில் வாழ ஆசைப்பட்டேன். நல்ல ஆண்டவர் நான் கேட்டதற்கு மேல் எனக்கு அளித்தருள கிருபை செய்திருக்கிறார். நீ திருச்சபையில் சேர்ந்தது மாத்திரம் போதாதென்றாற்போல் உன்னைத் தமது திவ்விய ஊழியத்திற்கும் தெரிந்துகொண்டார். எனது பாக்கியமே பாக்கியம்" என்றாள். மோனிக்கம்மாளின் அந்தரங்க ஆவல் முற்றிலும் நிறைவேறியது. இனி மரணத்திற்கு ஆயத்தம் செய்தாள். அவளுடைய குமாரர் இருவரும் தங்கள் சொந்த தேசமாகிய ஆப்பிரிக்காவுக்குத் தாயை அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இத்தாலியின் துறைமுகப்பட்டனமாகிய ஓஸ்தியாவில் மோனிக்கம்மாளுக்கு கடின ஜுரம் கண்டது. பிள்ளைகள் தன்னைச் சொந்த தேசத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாயிருப்பதை அறிந்து மோனிக்கம்மாள் சொல்வாள்: "என் பிரிய மக்களே. தான் அன்னிய நேசத்தில் இறந்து என் சரீரம் நமது நாட்டிற்குத் தூரமான நாட்டில் புதைக்கப்பட்டாலென்ன? ஆண்டவருக்குத் தூரம், சமீபம் உண்டோ? உலக முடிவில் மாமிச உத்தான நாளில் என் சரீரம் இருக்குமிடம் ஆண்ட வருக்குக் தெரியாதோ? மற்றவர்களோடு என்னையும் எழுப்பி எனக்கு மோட்ச பாக்கியம் அளித்தருளுவாரன்றோ? உங்கள் தாயை எவ்விடத்திலென்கிலும் அடக்கம் பண்ணுங்கள். என் சரீரத்தைப்பற்றி எனக்கு யாதொரு கவலையுமில்லை. ஆனால் ஒரேயொரு மன்றாட்டு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் மரித்தபின் என்னை மறவாமல் என் ஆன்ம இளைப்பாற்றிற்காக திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுங்கள். எனக்காக அடிக்கடி வேண்டிக்கொள்ளுங்கள்." 

இவ்வாறு மோனிக்கம்மாள் தனது அருமைப் பிள்ளைகளுக்குக் கடைசி அறிவுரை கூறிய ஐந்தாம் நாள் இக்கண்ணீர் கணவாயை விட்டு கருணா கரத்து கடவுளாகிய தனது கர்த்தர் பதம் சென்றாள். அவள் மரித்தது

387-ம் வருடம். தாயை அடக்கம் பண்ணியபின் இரு சகோதரரும் தங்கள் சொந்த தேசம் திரும்பினர். மூத்தவர் தனது தீர்மானப்படி குகுப்பட்டம் பெற்றார். அவருடைய பரிசுத்த தனத்தையும் அபாரக் கல்வியறிவையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் அவரை ஆயராக நியமித்தார். அருஸ்தின் தேவ ஊழியத்தில் அயராது உழைத்து அதேக அரிய நூல்களை எழுதித் திருச்சபையின் புகழ்பெற்ற வேதபாரகராக இன்றும் விளங்குகிறார்


அர்ச். மோனிக்காம்மாளுக்கு புனிதர் பட்டம் 390ம் ஆண்டு Pope . Siricius  அவர்களால் கொடுக்கப்பட்டது. 

அவளுடைய திருநாள் மே மாதம் 4ம் தேதி.


Source: Sancta Maria 2018 - April - June

Epiphany of Our Lord - ஞானத்தைத் தேடி தரிசிப்போமாக!

Epiphany of Our Lord

ஞானத்தைத் தேடி அதில் வளரவேண்டும் என்ற உணர்வு மனிதர்களிடம் எப்பொழுதும் இருந்துவந்தது. மனித புத்தியானது தான் அநுதினம் எதிர்கொள்ளும் காரியங்கள். பொருட்களைப் பற்றிய உண்மைகளை இன்னும் அதிகமதிகமாய் அறிய விரும்புகிறது. ஆகையால்தான் மக்கள் சில காரியங்களைக் குறித்த, தங்களின் அறியாமையை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை! இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம். ஒரு மனிதன் தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறான். அது முதல் தடவையாதலால் வீட்டு முகவரி இருந்தும், அவனால் சரியான தெருவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் வேறொருவரின் உதவியை நாடுகிறான். முன்பின் தெரியாத அந்த மனிதன் தமக்கும் சரியான முகவரி தெரியவில்லையானாலும், அந்த இடத்தை அறிந்தவன் போல் பாவனை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், எப்படியாவது அவனுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று விருப்பம் கொண்டதால், தவறான வழியைக் காட்டிவிடுவான். ஏன் இந்த மனிதன் தவறான வழியைக் காட்டிட வேண்டும்? ஏனெனில் தனக்கு உண்மையிலேயே பாதை தெரியாது என்ற தமது அறியாமையை வெளிக்காட்டிக்கொள்ள அவன் விரும்ப வில்லை. இப்படி தமது அறியாமையை வெளிப்படுத்த விரும்பாதவன் எப்படி, அதனை போக்கிக்கொள்ள முடியும்? அதிகமதிகமாய் தேடி அறிவை வளர்ப்பதே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவு வாயிலாகும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஞானத்தை அடைய வேண்டுமென்ற தாகமே, அந்த கீழ்த்திசை ஞானிகள் சகல ஞானங்களின் ஊற்றாகிய நித்திய ஞானமானவரை குழந்தை சேசுவை தேடிக்கொண்டுவர தூண்டியது. நூற்றாண்டு காலமாக "பூமியின் எல்லைகளையும்" (சங். 2:8) சொந்தமாகக் கொண்டவரான, நித்திய ஞானமானவரை ஒரு நட்சத்திரத்தின் மூலமாக அஞ்ஞானிகளுக்கு முன்னுரைக்கப்பட்டது. அது எப்படியெனில்: "...அவரைக் காண்பேன், ஆனால் இப்போதல்ல; அவரை தரிசிப்பேன், ஆனால் சமீபித்திருந்தல்ல. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல்  இஸ்ராயேலியரிட மிருந்து எழும்பும்; அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும், சேத் புத்திரர்களெல்லோரையும் நாசம் பண்ணும்" (எண். 24:17). இது பாலாமின் தீர்க்க தரிசனமாகும். அஞ்ஞானியான பாலாம் இஸ்ராயேலியரை சபிக்கக் கேட்டுக்கொள்ளப்பட, அவனோ அவர்களை ஆசீர்வதிக்கும் கட்டாயத்துக்குள்ளானான்.

மூன்று இராஜாக்கள்" என்று அழைக்கப்படும் ஞானிகளான கஸ்பார், மெக்கியோர் மற்றும் பல்தஸார் பாலாமின் இந்த தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தனர். அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு அது மோட்சத்தி லிருந்து தங்களுக்கு வந்த அழைப்பு என உறுதிகொண்டனர் அவர்களின் இருதயத்தினுள் உள்ளரங்க வரப்பிரசாதம் செயல்படவே, நித்திய ஞானமானவரைத் தேடும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களது பயணம் எதனாலும் தடைபடவில்லை. குடும்பத்தைப் பற்றிய கவலையோ, களைப்பைத் தரும் நீண்ட பயணத்தைப் பற்றிய பிரமிப்போ, எதனையும்பற்றி கவலைப்படாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாலைவனத்தின் கடும் வெப்பத்தைப்பற்றிய சுவக்கமோ, கொள்ளைக்காரர்களைப்பற்றிய அச்சமோ, எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறப்பட்டதுபோல் "தேடியவர்கள் சர்வேசுரனைக் கண்டுகொண்டனர்." அவரை தரிசித்தார்கள். ஏனெனில்ஞானம் அவர்களோடு இருந்தது.

ஆம்! எண்ணில்லா கடினமான துன்பங்களுக்குப் பிறகு, கர்த்தரை கண்டுகொண்டார்கள். அவரை ஆராதித்தார்கள். ஞானத்தைப்பற்றி பெரிய நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்துபவராக அல்லாமல், அமைதியான குழந்தையாகக் கண்டுகொண்டார்கள். ஒரு தாயின் கவனமான அரவணைப்பில், பாதுகாப்பில் அவர் இருக்கக் கண்டு கொண்டனர். இதன் மூலம் சர்வேசுரன் தாமே தாழ்ச்சியின் அற்புதத்தை பிறருக்கு காண்பித்தார்.

நித்திய ஞானத்தோடு தொடர்புகொண்ட அவர்கள், கிறீஸ்துவின் பிறப்பை ஏரோதனுக்கு சொல்லாது, மாற்றுப் பாதையில் தங்களது நாடுகளுக்குச் சென்றனர். அவர்களது இச்செயலே ஞானிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு தந்தது என்றால் மிகையாகாது!

நாமும்கூட இந்த ஞானிகளைப் போல கிறீஸ்துவை தேடிவந்து கண்டு ஆராதிக்கவும், அவரது சுவிசேஷ சட்டங்களின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலமாகவே நித்தியமானவரோடு நம்மையே இணைத்துக்கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் பாக்கியம் பெறுவோமாக!


Source: Salve Regina - Jan. - Feb. 2011

அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்

 "அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்" (லூக். 2:7)





திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப்பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பார் என்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத்திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன்  அடிமைத்தனத் தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீது என்பவர் இராஜபட்டம் பெற்ற 1032-ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவகுமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையாஸ் வசனித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப்பிறப்பு சம்பவித்தது. 

சேசு இரட்சகருடைய வருகை!

நம் பரிசுத்த வேதத்தை உண்டாக்கியவரான சேசு கிறீஸ்துநாதர் பெத்லெகேமில் பிறந்ததும், பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து மரித்ததும் சரித்திர வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். உலக சரித்திரமும் இவற்றிற்கு சான்று பகர்கிறது. எவராலும் மறுக்கப்படாத விதமாய் இவைகள் எண்பிக்கப்பட்டிருக்கின்றன.

பெத்லெகேமில் குழந்தையாய் பிறந்த சேசு மெய்யாகவே கடவுள். அவர் ஏனைய குழந்தைகளைப் போன்றவரன்று: அவர் உண்மை யாகவே கடவுள் என்று எண்பிக்க பல அதிசயங்கள் நடைபெற்றன.

கடவுளாகிய தேவகதன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றும்படி இப்பூமிக்கு வந்தார். பாஸ்கு வாரத்தில் மனித மீட்புக்காக உயிர்விட்டார். தமது இரட்சிப்பின் பண்டிகையான அர்ச்சியசிஷ்ட வார திருநாட்களுக்கு, கர்த்தர் பிறந்த திருநாள் தயாரிப்பாகும். மோட்சம் போவதற்கான வழியை மனிதருக்கு காட்ட சேசு இப்பூமிக்கு வந்தார். மோட்ச பாதையை பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியைத் தர வந்தார். எனவே கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளாகும்.

கர்த்தர் பிறந்த திருநாளையொட்டி ஒவ்வொரு கோவிலிலும், இல்லங் களிலும் குடில் தயாரிப்பதுண்டு. குடிலின் மத்திய ஸ்தானம் குழந்தை சேசுவே. அவரருகில் அவருடைய மாதாவான மரியாயையும் அவரை வளர்த்த தந்தை சூசையப்பரையும் காணலாம். தேவ குழந்தையை தரிசிக்க வந்த இடையர்களையும் அங்கு பார்க்கிறோம். சேசு பிறந்த சில நாட்களுக்கு பின் அவரை தரீசிக்க வந்த மூன்று இராஜாக்களின் உருவங்களை ஜனவரி 6-ம் நாளாகிய மூன்று இராஜாக்கள் திருநாளையொட்டி அங்கு வைப்பார்கள். கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளெனக் காட்ட குடிலில் நட்சத்திரங்களையும் காணலாம்.

சேசுவின் பிறப்பானது உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றி ருக்கிறது. அவர் பிறந்த காலத்தில் உரோமை இராஜ்ஜியத்தை செசார் அகுஸ்துஸ் ஆண்டுவந்தான்.

உரோமை இராச்சியம் உலகில் அநேக பகுதிகளில் பரவியிருந்தது. அந்தப் பகுதிகளிலெல்லாம் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக அரசன் கட்டளை பிறப்பித்தான். ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர்களை எழுதிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் தங்கள் சொத்த ஊர்களுக்குப் போனார்கள். சூசையப்பர் தாவிதின் கோத்திரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால் கர்ப்பிணியான கன்னிமரி யுடன் பெயர் எழுதிக்கொடுக்கும் பொருட்டு, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் நகரத்துக்குச் சென்றார். அந்த நாட்களில் எரோது அரசன் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான் (மத் 2:1). சேசு பிறந்த இரவில் அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து தங்கள் கிடைக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். சேசு பிறந்த பெத்லெகேம் ஊர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஊர் இன்னும் இருக்கிறது. சேசு பிறந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள். சேசுவை துணிகளால் சுற்றி முன்னிட்டியில் (தொழுவத்தில்) கிடத்தினார்கள். அவரைப் பெற்ற தாய் மரியம்மாள் என்றும், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் என்றும் தெரியும். இடையர்கள் போய் சேசுவை சந்தித்தார்கள். கீழ் திசையிலிருந்து சோதிட சாஸ்திரிகள் (மூன்று இராஜாக்கள்) அவரைத் தரிசிக்க சென்றனர். 

சேசுவின் பிறப்பானது ஏனையக் குழந்தைகளைவிட அவர் மேம்பட்டவரெனக் காட்டுகிறது. அவரது பிறப்பை சூசையப்பருக்கும் இடையருக்கும் சம்மனசுக்களும், கீழ்த்திசை சோதி சாஸ்திரிகளுக்கு ஒரு நட்சத்திரமும் அறிவிக்கின்றன. சீனாய் மலையில் கடவுள் தம்மை மோயீசனுக்கு வெளிப்படுத்தியபோது தெய்விக ஒளி காணப்பட்டது போல சேசு பிறந்த இரவில் தெய்விக பிரகாசம் பரலோகத்திலிருந்து வந்து காணப்பட்டது என லூக்காஸ் சுவிசேஷத்தில் (2:9) பார்க்கிறோம். கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் கடவுளால் அனுப்பப்பட்ட அதிசய நட்சத்திரமாகும்.

நம்மை இரட்சிப்பதற்காகவே சேசு பிறந்தார்!


நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்" (லூக் 1:31) என கன்னிமரியம்மாளிடம் சம்மனசானவர் அறிவித்தார். சேசு என்றால் இரட்சகர் என்று பொருள். "இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்" என இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்தார் (லூக். 2:11). கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகளுக்கு நோன்றிய நட்சத்திரமானது சேசு அனைவருக்கும் இரட்சகர் எனக் காட்டிற்று. இந்த இரட்சிப்பானது மானிட சந்ததிக்கு ஒரு நல்ல செய்தியாரும்; இந்த நல்ல செய்தியோ பெரும் மகிழ்ச்சியின் ஊற்று, “இதோ எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று இடையர்களுக்கு தேவ தூதன் தெரிவித்தார் (லூக் 2:10). இந்த நல்ல செய்தியானது ஒரு புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை சுவிசேஷப் புத்தகம் என்கிறோம்.

இடையர்கள் போய் சேசுவை கண்டார்கள். அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும், மகிழ்ச்சியும் யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அவன் ஒளியும் சந்தோஷமும் அடைவான். பெத்லெகேம் நகர் மக்களோ சேகவை சட்டைப் பண்ணவில்லை. கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பெற்றார்கள். ஜெருசலேம் நகர் குருக்களோ, சேசுவைப் போய் பார்க்க விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விகும்பினான். சாதாரண மக்களும் அறிஞர்களும், ஏழைகளும் செல்வந்தர்களும் சேசுவைப் பார்க்கப் போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு  நேசிக்கிறார். யூதர்களும் புறஜாதியாரும் சேசுவிடம் போனார்கள்.  சேசு அனைவருக்கும் இரட்சகர் 

கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பலிபூசை நிறைவேற்றுகின்றனர். முதற் பூசையானது சுவிசேஷத்தில் சொல்லப் பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. இரண்டாவது பூசையானது இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும் ஆத்துமங்களில் சேசு பிறப்பதைக் காட்டுகிறது. சேசு கடவுளாகிய மட்டும் நித்தியத்திளிருந்தே இருக்கிறார் எனக்காட்ட “ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார்" என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்றுக் காட்ட “வார்த்தையானவர் மாம்சமானர்" என்றும், தாம் உண்டாக்கிய திருச்சபையில் வசிக்கும் சேசு ஞான விதமாய் ஆத்துமங்களில் பிறக்கிரா ரென்று காட்ட “யார் யார் அவரை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்" என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும் கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டுமென்பதையும் மூன்று பூசைகளும் நம் நினைவுக்கு கொண்டுவருகின்றன. அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல் மாசற்றவர்களாக வாழ்வதே. “நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்".

சேசு தம்மை சாஸ்திரிகளுக்கு காண்பிப்பதை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த சாஸ்திரிகள் புறஜாதியார் அனைவரையும் குறிக்கிறார்கள். சகல ஜாதி ஜனங்களும் இரட்சகரிடம் வருவார்கள் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும், தாவீது இராஜாவும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

கர்த்தர் பிறந்த திருநாளன்று பிறருக்கு நாம் கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு; என்றாலும் கர்த்தர் பிறந்த திருநாளை யொட்டி நாம் பிறருக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சேசு தம்மை இடையர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம் இருதயங்கள் உயிருள்ள குடில்களாக வேண்டும். அந்த குடில்களில் சேசுவை ஏற்றுக்கொள்ள அவற்றை தயாரிக்கும்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும். பாவமோ, பாவத்தின் மேல் பற்றுதலோ, நம் இருதயத்தில் இருக்கலாகாது. அப்படியானால் திவ்விய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

J.M.N உத்தம மக்களை உருவாக்க: 583.# 23

Source : Salve Regina 2010 October - December