Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

tamil sermon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil sermon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜனவரி, 2024

தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபணம்

 "ஆதித்திருச்சபையின் மகாத்துமாவானவரும் வேதவல்லுனருமான ஓரிஜன் என்பவர் தேவமாதாவின் மோட்சாரோபணத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்: " மோட்சத்தில் மகிமையுடன் தேவமாதா பிரவேசிப்பதைக் கண்ணுற்ற பரிசுத்த ஆத்துமங்கள், "முள்ளும் உபாதனைகளும் நிறைந்த பூமியாகிய பாலைநிலத்திலிருந்து, நமது நேச ஆண்டவரே வெகுவாய் களிகூர்ந்து தம்முடன் மாபெரும் மகிமையுடன் அழைத்துவரும் பேரெழில் மிக்க இப்பெண்மணி யார்? (உன்னத சங்கீதம் 8:5)
ஆண்டவர் தமது திருத்தோள்மேல் சாய்ந்து கொண்டு வருபவர்களும் மகா பரிசுத்தமும் அதிஉன்னத புண்ணியங்களும் நிறைந்தவர்களுமான இவர்கள் யார்?" என்று ஒருமித்தகுரலில் வினவியபோது, தேவமாதாவுடன் சூழ்ந்து வந்த சம்மனசுகள், "அவர்கள், நமது தேவாதி தேவனும் ராஜாதி ராஜாவுமான சர்வேசுரனின் தாயார்' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களுமான அவர்கள் நம் இராக்கினி' அர்ச்சிஷ்டவர்களுக்கெல்லாம் மேலானவர்களும் நம் சர்வேசுரனின் பிரிய நேசமான பத்தினியும் அமல உற்பவியும் பரிசுத்த புறாவுமாக விளங்குகின்றார்கள்' சகல சிருஷ்டிகளிலும் அதி உன்னத மேன்மைமிகுந்த சிருஷ்டியாக திகழ்கிறார்கள் என்று பதில் கூறினர். உடனே சகல மோட்சவாசிகளும் தேவமாதாவைப் போற்றிப் புகழ்ந்து ஆர்ப்பரித்து, "ஓ! எங்கள் ஆண்டவளே! எங்கள் இராக்கினியே! நீரே எங்கள் பரலோக நாட்டின் மகிமையும் மகிழ்ச்சியுமாகவும் எங்கள் அனைவருக்கும் மகிமையாகவும் விளங்குகின்றீர். உமது வரவு நல்வரவாகுக! நீர் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீராக! இதோ உமது அரசு! இதோ உமது ஊழியரான நாங்கள் எப்போதும் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய காத்திருக்கிறோம்!" என்று பாடினர்.

தேவமாதாவை தங்களுடைய இராக்கினியாக வணங்கி வாழ்த்தி வரவேற்பதற்காக எல்லா அர்ச்சிஷ்டவர்களும் அங்கு ஒன்று கூடி வந்தனர். அப்போது பரிசுத்த கன்னியர்கள் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம்," ஓ மிகவும் பரிசுத்த ஆண்டவளே! நாங்களும் இப்பரலோகத்தின் அரசிகள் தான். ஆனால் நீரே எங்கள் அனைவருக்கும் இராக்கினி! ஏனென்றால், நீரே முதலில் உமது பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் அனைவருக்கும் மேன்மைமிகுந்த நன்மாதிரிகையாக திகழ்கின்றீர்! அதற்காக உம்மைப் போற்றி உமக்கு நன்றி செலுத்துகின்றோம்!" என்று கூறினர். அதன் பிறகு ஸ்துதியர்களும் வேதபாரகருமான சகல அர்ச்சிஷ்டவர்களும், தமது பரிசுத்த ஜீவித்தினால், தங்களுக்கு மிக அழகிய உன்னதமான நற்புண்ணியங்களைக் கற்பித்து அவற்றில் நடப்பித்த தங்கள் தேவ ஆண்டவளுக்கு நன்றியும் வாழ்த்துதலும் வணக்கமும் செலுத்தினர்.

பிறகு, சகல வேதசாட்சிகளும் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம் வந்தனர். தமது திவ்ய குமாரனின் பரிசுத்த பாடுகளின் மீதான வேதனைகள் மற்றும் வியாகுலங்களில் இவ்வுலக ஜீவியம் முழுவதும் நிலைத்திருந்த தேவமாதா தங்களுடைய தேவஆசிரியையாகவும் வேதசாட்சியத்தில் திவ்ய சேசுநாதர் சுவாமிக்காக தங்கள் உயிரை விடுவதற்கு தேவையான ஞானபலத்தை தமது பேறுபலன்களினால் பெற்றுத் தந்ததற்காகவும் தங்களுடைய திவ்ய இராக்கினிக்கு நன்றியும் ஸ்துதியும் தோத்திரமும் செலுத்தினர்” அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் +


எல்லா அப்போஸ்தலர்களுடைய சார்பில் அர்ச். யாகப்பர் தேவமாதாவிடம் வந்து இவ்வுலகில் இருந்தபோது தங்களுக்கு தேவமாதா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்தினார். அடுத்ததாக தீர்க்கதரிசிகள் வந்தனர். தேவமாதாவை அவர்கள் வணங்கி வாழ்த்தி, "எங்கள் ஆண்டவளே! எங்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும் முன்குறிக்கும் அடையாளங்களாக உம்மையே சுட்டிக் காட்டின” என்றனர். பிறகு, பிதாப்பிதாக்கள் வந்தனர். தேவமாதாவிடம் அவர்கள், "ஓ மிகவும் பரிசுத்த மரியாயே! நீரே எங்கள் நம்பிக்கையாக விளங்கினீர். உமது வரவிற்காக நாங்கள் நீண்ட காலம் வெகு பக்திபற்றுதலுடனும் பெருமூச்சுகளுடனும் காத்திருந்தோம்" என்று கூறினர். அவர்களுடன் நமது ஆதிப்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் வந்தனர். அவர்கள் மாதாவுக்கு மகா பிரியத்துடன் நன்றிசெலுத்திக் கொண்டே தேவமாதாவிடம், "ஆ பிரிய குமாரத்தியே! நாங்கள் மனுக்குலத்திற்கு ஏற்படுத்திய காயத்தைக் குணப்படுத்தினீர். எங்கள் அக்கிரமத்தினால் இழந்துபோன தேவஆசீரை மனுக்குலத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தீர்! உம்மாலேயே நாங்கள் இரட்சணியமடைந்தோம். அதன்பொருட்டு நீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக!" என்று கூறினர். அர்ச். சிமியோன் தேவமாதாவின் திவ்ய பாதங்களை முத்தமிட்டார். அதன்பிறகு, தன் கைகளில் திவ்ய பாலனை ஏந்திய நாளைப்பற்றி மிக ஆனந்த அகமகிழ்வுடன் தேவமாதாவிடம் ஞாபகப்படுத்தினார். அர்ச். சக்கரியாஸ்,

அர்ச். எலிசபெத்தம்மாளுடன் வந்தார். மகா தாழ்ச்சியுடனும் உத்தம சிநேகத்துடனும் தங்களை சந்திக்க தங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்தமைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினர். அதனால் தாங்கள் திரளான தேவவரப்ரசாதங்களைப் பெற்றதாகக் கூறினர். அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் அங்கு வந்தார். மாதா, தமது திவ்ய குரலினால் தன்னை அர்ச்சித்ததற்காக அவர் மிகுந்த சிநேகத்துடன் தேவமாதாவுக்கு நன்றி செலுத்தினார். மாதாவுடைய பரிசுத்த பெற்றோர்களான அர்ச். ஜோக்கிம், அர்ச். அன்னம்மாள் மாதாவை அணுகி, ஓ ஆண்டவரே! எத்தகைய கனிவுடன் அவர்கள் தேவமாதாவை ஆசீர்வதித்தனர்! அவர்கள் மாதாவை வாழ்த்திக் கொண்டே, “ஓ நேச குமாரத்தியே! உம்மை எங்கள் குழந்தையாகப் பெற்றது எத்தகைய பெரிய பாக்கியம்! இப்பொழுது நீர் எங்களுடைய இராக்கினியாக இரும். ஏனெனில் நீர் எங்கள் சர்வேசுரனுடைய தாயார்! உம்மை வணங்கி தோத்தரித்து ஸ்துதிக்கிறோம்!" என்றனர்.

அர்ச்.சூசையப்பர் அங்கு தோன்றுகிறார். அவர் எத்தகைய உன்னதமான சிநேகத்துடன் மாதாவிடம் வருகிறார் என்று யாரால் சரிவர உணரக்கூடும்? பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், தமது திவ்ய பத்தினி மகத்தான வெற்றி வாகையுடன் பரலோக மகிமைக்குள் நுழைவதையும் அங்கு பரலோக இராக்கினியாக முடிசூட்டப்படுவதையும் காணும்போது, எத்தகைய ஆனந்த அக்களிப்பு எய்தினார் என்பதை யாரால் விவரிக்கமுடியும்? அவர் மகா கனிவுடன், "ஓ என் ஆண்டவளே! என் பிரிய பத்தினியே! நமது ஆண்டவரின் தாயாரான உம்மை எனது பத்தினியாக ஏற்படுத்தத் திருவுளமான நமது சர்வேசுரனுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்தப்போகிறேன? நித்திய வார்த்தையானவரின் திவ்ய பாலத்துவத்தைப் போஷித்து அவருக்கு பணிவிடைசெய்தும் அவரை எனது கரங்களில் ஏந்தியும் மகிழ்ந்தேன். அதனால் வெகுவான விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்ள தேவையான உன்னத அந்தஸ்தை உமது வழியாகவே நான் அடைந்தேன். திவ்ய சேசுவுக்கும் என் பரிசுத்த பத்தினியான உமக்கும் நான் இப்பூமியில் ஊழியம் செய்த அந்த மணித்துளிகள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவனவாக! இதோ நம் சேசு! பெத்லேகமில் நாம் அவரைப் பார்த்தது போல இனி அவர் மாட்டுக் கொட்டிலில் வைக்கோலின் மேல் படுத்துறங்க மாட்டார். நசரேத்தில் ஒரு தச்சுக்கூடத்தில் நம்முடன் வாழ்ந்தது போல அவர் யாவராலும் வெறுக்கப்பட்ட ஒரு தரித்திரராக இருக்க மாட்டார். உலகின் இரட்சணியத்திற்காக அந்த அவமான மரத்தில் இனி அவர் அறையப்படமாட்டார். ஆனால், அவருடைய தந்தையான பிதாவாகிய சர்வேசுரனின் வலது பாரிசத்தில் பரலோக பூலோக அரசராகவும் ஆண்டவராகவும் முடிசூட்டப்பட்டு வீற்றிருக்கிறார். மேலும், இப்பொழுது என் இராக்கினியே! இனிமையான அவருடைய திவ்ய பாதங்களைவிட்டு நாம் ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்! அங்கு அவரை நாம் நித்தியத்திற்கும் ஸ்துதித்துக்கொண்டும் சிநேகித்துக் கொண்டும் இருப்போம்" என்றார்.
பிறகு, எல்லா சம்மனசுக்களும் வந்து, சம்மனசுக்களின் இராக்கினியை வணங்கினர். அவர்களைக் கண்ட தேவமாதா பூமியில் அவர்கள் தமக்களித்த அனைத்து பணிவிடைகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி செலுத்தினார்கள். விசேஷமாக மாதாவின் மகிமைகளை சுமந்து சென்றவரான அர்ச்.கபிரியேல் அதிதூதர், தம்மிடம் மகிழ்ச்சியின் துாதுவராக வந்து, தான் சர்வேசுரனின் தாயாராக சர்வேசுரனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சுபசெய்தியை அறிவிக்க வந்ததற்காக நன்றி செலுத்தினார்கள். அதன்பிறகு, தாழ்ச்சி மிகுந்த மகா பரிசுத்த கன்னிகை சர்வேசுரனின்தேவமகத்துவத்தை முழங்காலில் இருந்து ஆராதித்தார்கள். தனது ஒன்றுமில்லாமையில் மூழ்கியவர்களாக, தேவமாதா, தனக்கு சர்வேசுரனுடைய பரிசுத்த நன்மைத்தனம் அளித்த எல்லா தேவவரப்ரசாதங்களுக்காகவும் விசேஷமாக நித்திய வார்த்தையானவருக்கு தன்னை தாயாராக ஏற்படுத்தியமைக்காகவும் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம் எத்தகைய அளவில்லா சிநேகத்துடன் மாதாவை ஆசீர்வதித்ததை யாரால் புரிந்து கொள்ளக் கூடும்? அவ்வாறு புரிந்து கொள்பவரால் மட்டுமே பரமபிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்ய குமாரத்தியையும், திவ்ய சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவையும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரன் தமது பரிசுத்த பத்தினியையும் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிதாவாகிய சர்வேசுரன் தமது வல்லமையை அளித்து மாதாவுக்கு முடிசூட்டினார். அவ்வாறே, சுதனாகிய சர்வேசுரன் தமது ஞானத்தைக் கொண்டும் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தமது சிநேகத்தைக் கொண்டும் மாதாவுக்கு முடிசூட்டினார்கள். மூன்று தேவஆட்களும் சேசுநாதர்சுவாமியின் வலதுபக்கத்தில் மாதாவை அமரச் செய்தனர். அங்கு பரலோக பூலோக இராக்கினியாக தேவமாதாவுக்கு முடிசூட்டினர். மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம், சும்மனசுக்களுக்கும் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவமாதாவை தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவும் மாதாவுக்கு ஊழியம் செய்து மாதாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் கட்டளையிட்டனர்.

புதன், 20 டிசம்பர், 2023

அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்

 "அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்" (லூக். 2:7)





திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப்பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பார் என்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத்திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன்  அடிமைத்தனத் தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீது என்பவர் இராஜபட்டம் பெற்ற 1032-ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவகுமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையாஸ் வசனித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப்பிறப்பு சம்பவித்தது. 

சேசு இரட்சகருடைய வருகை!

நம் பரிசுத்த வேதத்தை உண்டாக்கியவரான சேசு கிறீஸ்துநாதர் பெத்லெகேமில் பிறந்ததும், பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து மரித்ததும் சரித்திர வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். உலக சரித்திரமும் இவற்றிற்கு சான்று பகர்கிறது. எவராலும் மறுக்கப்படாத விதமாய் இவைகள் எண்பிக்கப்பட்டிருக்கின்றன.

பெத்லெகேமில் குழந்தையாய் பிறந்த சேசு மெய்யாகவே கடவுள். அவர் ஏனைய குழந்தைகளைப் போன்றவரன்று: அவர் உண்மை யாகவே கடவுள் என்று எண்பிக்க பல அதிசயங்கள் நடைபெற்றன.

கடவுளாகிய தேவகதன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றும்படி இப்பூமிக்கு வந்தார். பாஸ்கு வாரத்தில் மனித மீட்புக்காக உயிர்விட்டார். தமது இரட்சிப்பின் பண்டிகையான அர்ச்சியசிஷ்ட வார திருநாட்களுக்கு, கர்த்தர் பிறந்த திருநாள் தயாரிப்பாகும். மோட்சம் போவதற்கான வழியை மனிதருக்கு காட்ட சேசு இப்பூமிக்கு வந்தார். மோட்ச பாதையை பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியைத் தர வந்தார். எனவே கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளாகும்.

கர்த்தர் பிறந்த திருநாளையொட்டி ஒவ்வொரு கோவிலிலும், இல்லங் களிலும் குடில் தயாரிப்பதுண்டு. குடிலின் மத்திய ஸ்தானம் குழந்தை சேசுவே. அவரருகில் அவருடைய மாதாவான மரியாயையும் அவரை வளர்த்த தந்தை சூசையப்பரையும் காணலாம். தேவ குழந்தையை தரிசிக்க வந்த இடையர்களையும் அங்கு பார்க்கிறோம். சேசு பிறந்த சில நாட்களுக்கு பின் அவரை தரீசிக்க வந்த மூன்று இராஜாக்களின் உருவங்களை ஜனவரி 6-ம் நாளாகிய மூன்று இராஜாக்கள் திருநாளையொட்டி அங்கு வைப்பார்கள். கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளெனக் காட்ட குடிலில் நட்சத்திரங்களையும் காணலாம்.

சேசுவின் பிறப்பானது உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றி ருக்கிறது. அவர் பிறந்த காலத்தில் உரோமை இராஜ்ஜியத்தை செசார் அகுஸ்துஸ் ஆண்டுவந்தான்.

உரோமை இராச்சியம் உலகில் அநேக பகுதிகளில் பரவியிருந்தது. அந்தப் பகுதிகளிலெல்லாம் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக அரசன் கட்டளை பிறப்பித்தான். ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர்களை எழுதிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் தங்கள் சொத்த ஊர்களுக்குப் போனார்கள். சூசையப்பர் தாவிதின் கோத்திரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால் கர்ப்பிணியான கன்னிமரி யுடன் பெயர் எழுதிக்கொடுக்கும் பொருட்டு, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் நகரத்துக்குச் சென்றார். அந்த நாட்களில் எரோது அரசன் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான் (மத் 2:1). சேசு பிறந்த இரவில் அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து தங்கள் கிடைக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். சேசு பிறந்த பெத்லெகேம் ஊர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஊர் இன்னும் இருக்கிறது. சேசு பிறந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள். சேசுவை துணிகளால் சுற்றி முன்னிட்டியில் (தொழுவத்தில்) கிடத்தினார்கள். அவரைப் பெற்ற தாய் மரியம்மாள் என்றும், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் என்றும் தெரியும். இடையர்கள் போய் சேசுவை சந்தித்தார்கள். கீழ் திசையிலிருந்து சோதிட சாஸ்திரிகள் (மூன்று இராஜாக்கள்) அவரைத் தரிசிக்க சென்றனர். 

சேசுவின் பிறப்பானது ஏனையக் குழந்தைகளைவிட அவர் மேம்பட்டவரெனக் காட்டுகிறது. அவரது பிறப்பை சூசையப்பருக்கும் இடையருக்கும் சம்மனசுக்களும், கீழ்த்திசை சோதி சாஸ்திரிகளுக்கு ஒரு நட்சத்திரமும் அறிவிக்கின்றன. சீனாய் மலையில் கடவுள் தம்மை மோயீசனுக்கு வெளிப்படுத்தியபோது தெய்விக ஒளி காணப்பட்டது போல சேசு பிறந்த இரவில் தெய்விக பிரகாசம் பரலோகத்திலிருந்து வந்து காணப்பட்டது என லூக்காஸ் சுவிசேஷத்தில் (2:9) பார்க்கிறோம். கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் கடவுளால் அனுப்பப்பட்ட அதிசய நட்சத்திரமாகும்.

நம்மை இரட்சிப்பதற்காகவே சேசு பிறந்தார்!


நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்" (லூக் 1:31) என கன்னிமரியம்மாளிடம் சம்மனசானவர் அறிவித்தார். சேசு என்றால் இரட்சகர் என்று பொருள். "இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்" என இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்தார் (லூக். 2:11). கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகளுக்கு நோன்றிய நட்சத்திரமானது சேசு அனைவருக்கும் இரட்சகர் எனக் காட்டிற்று. இந்த இரட்சிப்பானது மானிட சந்ததிக்கு ஒரு நல்ல செய்தியாரும்; இந்த நல்ல செய்தியோ பெரும் மகிழ்ச்சியின் ஊற்று, “இதோ எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று இடையர்களுக்கு தேவ தூதன் தெரிவித்தார் (லூக் 2:10). இந்த நல்ல செய்தியானது ஒரு புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை சுவிசேஷப் புத்தகம் என்கிறோம்.

இடையர்கள் போய் சேசுவை கண்டார்கள். அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும், மகிழ்ச்சியும் யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அவன் ஒளியும் சந்தோஷமும் அடைவான். பெத்லெகேம் நகர் மக்களோ சேகவை சட்டைப் பண்ணவில்லை. கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பெற்றார்கள். ஜெருசலேம் நகர் குருக்களோ, சேசுவைப் போய் பார்க்க விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விகும்பினான். சாதாரண மக்களும் அறிஞர்களும், ஏழைகளும் செல்வந்தர்களும் சேசுவைப் பார்க்கப் போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு  நேசிக்கிறார். யூதர்களும் புறஜாதியாரும் சேசுவிடம் போனார்கள்.  சேசு அனைவருக்கும் இரட்சகர் 

கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பலிபூசை நிறைவேற்றுகின்றனர். முதற் பூசையானது சுவிசேஷத்தில் சொல்லப் பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. இரண்டாவது பூசையானது இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும் ஆத்துமங்களில் சேசு பிறப்பதைக் காட்டுகிறது. சேசு கடவுளாகிய மட்டும் நித்தியத்திளிருந்தே இருக்கிறார் எனக்காட்ட “ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார்" என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்றுக் காட்ட “வார்த்தையானவர் மாம்சமானர்" என்றும், தாம் உண்டாக்கிய திருச்சபையில் வசிக்கும் சேசு ஞான விதமாய் ஆத்துமங்களில் பிறக்கிரா ரென்று காட்ட “யார் யார் அவரை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்" என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும் கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டுமென்பதையும் மூன்று பூசைகளும் நம் நினைவுக்கு கொண்டுவருகின்றன. அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல் மாசற்றவர்களாக வாழ்வதே. “நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்".

சேசு தம்மை சாஸ்திரிகளுக்கு காண்பிப்பதை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த சாஸ்திரிகள் புறஜாதியார் அனைவரையும் குறிக்கிறார்கள். சகல ஜாதி ஜனங்களும் இரட்சகரிடம் வருவார்கள் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும், தாவீது இராஜாவும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

கர்த்தர் பிறந்த திருநாளன்று பிறருக்கு நாம் கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு; என்றாலும் கர்த்தர் பிறந்த திருநாளை யொட்டி நாம் பிறருக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சேசு தம்மை இடையர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம் இருதயங்கள் உயிருள்ள குடில்களாக வேண்டும். அந்த குடில்களில் சேசுவை ஏற்றுக்கொள்ள அவற்றை தயாரிக்கும்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும். பாவமோ, பாவத்தின் மேல் பற்றுதலோ, நம் இருதயத்தில் இருக்கலாகாது. அப்படியானால் திவ்விய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

J.M.N உத்தம மக்களை உருவாக்க: 583.# 23

Source : Salve Regina 2010 October - December