Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2023

சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்! - Feast of Annunciation (March - 25)

Source: Salve Regina, March 2007 


சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!

வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)


ரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!

அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி!  ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது. 

ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)

மாமரியின் தகுதி!

சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு  என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.

திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.

மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!

கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.

கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.

சனி, 9 டிசம்பர், 2023

Christmas - உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்

 உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்






உலகம் இன்று போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இறுதிக் காலங்களின் ஓர் அடையாளமாக "தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்பும்" (மத் 24:7) என்று நம் ஆண்டவர்தாமே முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா- யுக்ரேன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்ற எந்த ஒரு போரும் எந்த நிமிடத்திலும் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உலகப் போராக மாறக்கூடிய ஆபத்து நம் தலைக்கு மேல் வாளைப் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பிற நாடுகளை ஏமாற்றிக் கைவசப்படுத்து வதற்கென்றே உருவானவை போன்ற நாடுகள் "பேச்சு வார்த்தை" மூலம் சமாதானத்தை நிலை தாட்டப் போவதாகப் பாசாங்கு செய்கின்றன. அவை முதுகுக்குப் பின்னால் இடது கையில் கத்தியை மறைத்துக்கொண்டு வலது கையால் "பாசத்தோடு" கைகுலுக்குகின்றன. வேறு வழியின்றி அவற்றை நம்பும் ஏழை நாடுகள் பல வகைகளிலும் தங்களையே அவற்றிடம் அடகு வைக்கின்றன. உலகத்தில் சமாதானமில்லை. ஏனெனில் இப்போது அது "கடவுளற்றதாக" மாறிக் கொண்டிருக்கிறது. அது சமாதானம் (கடவுள்) இல்லாத இடங்களில் அதைத் தேடுகிறது. உலக செல்வங்களிலும், வெற்று வாக்குறுதிகளிலும், பேராசையிலும் அதைத் தேடுகிறது.

தனி மனிதர்களோ கடவுளை அடியோடு மறந்துவிட்டு, உலக செல்வங்களிலும், உலகக் கேளிக்கைகளிலும், மதுவிலும், சரீர இச்சையிலும் தங்கள் இன்பத்தையும், அதில் சமாதானத் தையும் தேடுகிறார்கள். நல்லொழுக்க விதிகளை மீறுவதில் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஊடகங்கள் சகல அகத்தங்களையும் கொண்டு மனிதனை நிரப்பி, அந்திக் கிறிஸ்துவுக்கான பாதையை மிக எளிதாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒளியைத் தேடுவதாக நினைத்துக்கொண்டு. மேலும் மேலும் அதிகக் கடுமையான, "தொட்டுணரக் கூடிய இருளுக் குள் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் சமாதானமில்லை.

இன்றைய (சங்கத்) திருச்சபையோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரட்சணியப் பணியை அடியோடு மறந்துவிட்டு, உலகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே உலக மதத் திற்கான விதையை அதுவே பூமியில் ஊன்றி, அது வளரத் தேவையான எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறது. அது தன் திவ்ய எஜமானராகிய உலக இரட்சகரைத் "தெய்வங்களில்" ஒருவராகப் பார்க்கிறது. அல்லது இன்னும் மோசமாக, சமூகப் புரட்சி செய்ய வந்த ஒரு "மிகச் சிறந்த மனிதராகப்" பார்க்கிறது. சங்கச் சபை சுவிசேஷ போதனைகளை ஏளனம் செய்கிறது; சரீர இச்சை, ஓரின உறவு, குருந்துவ அழிவு, துறவற அழுகல், தேவத் திரவிய அனுமானங்களின் முழுச் சிதைவு, விசுவாசமற்ற "இறை மக்களின்" வெறுமையான "மனித நேய" ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டு, தானே ஒரு முழுமையான விசுவாச மறுதலிப்பை முழுமை யாக்கி விட உழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய "திருச்சபையிலும் சமாதானமில்லை!

இந்நிலையில் இதோ! கீழ்த்திசையினின்று ஓர் ஒளி உதிக்கிறது/ பெத்லகேமில் உண்மை யான "சமாதானத்தின் அரசர்" (இசை.9:6) தோன்றுகிறார்? ஆச்சரியத்திற்குரிய முறையில், இன்று உலகம் தேடும் எதுவும் அவரிடமில்லை! பரலோக, பூலோக, பாதாள லோகங்களாகிய திரிலோகங்களையும் ஒரே வார்த்தையால் படைத்த அந்த நித்திய செல்வந்தர், இதோ, மனிதர் களின் இருதயங்களிலும், சத்திரத்திலும் கூட, தமக்கென ஓர் இடமின்றி, மாடும், கழுதையும் அடையும் கொட்டிலில், மூடத் துணியுமின்றி, படுக்கக் கட்டிலுமின்றி, உலசு வசதி ஏதுமின்றி. தீவனத் தொட்டியில் பரப்பிய வைக்கோலின்மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! யாருக்கு முன்பாக வானத்து நட்சத்திரங்களும் கூட வெறுமையாகவும். ஒரு மூச்சுக் காற்றைப் போலவும் இருக்கின் றனவோ, யாருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறதோ, யாருக்கு முன்பாக மலை களும், குன்றுகளும் துள்ளிக் குதிக்கின்றனவோ, அந்த உன்னத சர்வேசுரன் இங்கே, ஏதும் செய்ய இயலாத எல்லாவற்றிற்கும் தம்முடைய மாசற்ற திவ்ய கன்னிகையாகிய திருத்தாயாரையும், பிதாவால் தமக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட பரிசுத்த விரத்தராகிய நீதிமானையும் சார்ந்திருக்கிறார்! நித்திய பிதாவோடு ஒரே பொருளானவர். கீழ்ப்படிதலின் நிமித்தம் இந்தக் கேடுகெட்ட மனிதனை மீட்பதற்காக, சகல அசுத்தங்களும் நிறைந்த உலகிற்கு இறங்கி வந்திருக் கிறார்! நல்ல வேளையாக, பூலோக மோட்சமாகிய அமல உற்பவ நித்தியக் கன்னிமையின் மாசற்ற இருதயம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது!

ஆம்! கிறீஸ்துநாதரின் பிறப்பு தரும் போதனை உலகத்திற்கு எதிரானது! அது தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம், தரித்திரம், கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் போதனை! கிறீஸ்து பாலன் உலக இன்பங்களுக்கான, உலகில் சுகமாக மனிதன் வாழ்வதற்கான வழியை அல்ல, மாறாக, நித்திய மோட்சத்தின் வழியை, நித்திய இரட்சணியத்தின் வழியைத் திறந்து வைக்கவே வந்திருக்கிறார்! அவரே கூறுவது போல, அந்த வழி ஒடுக்கமானது! கல்லும், முள்ளும் நிரம்பியது! அதில் நுழைபவன் எவனும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, இரத்தம் தோய்ந்த தன் திவ்ய எஜமானரின் பாதச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவனாயிருக்கிறான்!

ஆயினும் இது நமக்கு அச்சம் தரத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஒடுங்கிய வழிக்குள் ஒருவன் நுழைந்த மாத்திரத்திலேயே, உலகம் தர முடியாத, நிரந்தரமான, நல்ல மனத்தவர்களுக்குரிய சமாதானம் அவனை நிரப்பி விடுகிறது. உலகத் துன்பங்களால் கெடுக்கப்படவோ, அழிக்கப்பட்டவோ முடியாத சமாதானம் அது! இன்னும் சொல்லப் போனால், உலகத் துன்பங்களை ஏக்கத்தோடு தேடச் செய்கிற உத்தமமான சமாதானம் அது!

அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த சமாதானத்தில் வாழ்ந்தார்கள்! பல சமயங்களில் அது தருகிற மோட்சத்தின் முன்சுவையாகிய இந்த நித்திய சமாதானத்தையும், பேரின்பத்தின் சில துளிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகக் கூட அவர்கள் இருந்தார்கள்! நம்முடைய ஞானத் தகப்பனான அர்ச். சவேரியாரின் "இந்திய" வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்! பிரபுத்துவப் பிறப்பு! ஆடம்பரமான இளமை வாழ்வு! மிகச் சிறந்த கல்வி! புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி! ஆனால் இதிலெல்லாம் தம்மால் காண முடியாத உண்மையான சமாதானத்தையும், உண்மையான இன்பத்தையும் அவர் தரித்திர வாழ்வைத் தேர்ந்துகொண்ட போது, மட்டற்ற விதமாக அனுபவித்தாரி! இரவெல்லாம் ஜெபத்தில் கழித்து, பகலெல்லாம் கால்நடையாக அல்லது படருகளில் பல ஊர்களுக்குச் சென்று பூசை வைத்து, ஞான உபதேசம் கற்பித்து, ஆலயங்கள் கட்டி, அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடிக் கழித்த பின், இரவில், அந்த மணப்பாட்டுக் குகையில் முழந்தாளிட்டபடி தம்முடைய பரவச நிலையில், "போதும்! போதும் என் ஆண்டவரே! தேவரீர் என்மீது பொழிகிற இந்தப் பேரின்பத்தை என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது!" என்று கூக்குரலிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தச் சமாதானத்தின் வேர்கள் எதில் ஊன்றியிருக்கின்றன? அவை தேவசிநேகத்தில் ஊன்றியிருக்கின்றன. இந்த தேவசிநேகமோ தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அடங்கி யிருக்கிறது. அவை தேவ நம்பிக்கையில் ஊன்றியிருக்கின்றன. பெத்லகேமின் திவ்ய பாவனைப் போல, வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரித்திர நிலையிலும், சர்வேசுரனைத் தன் சொந்தமாகக் கொண்டிருப்பவனை விடப் பெரிய செல்வந்தன் எவனும் இல்லை. அந்த வேர்கள் அசைவுறாத தேவ விசுவாசத்தில் ஊன்றியுள்ளன. இன்றைய விசுவாச மறுதலிப்புக்கு மத்தியிலும், புயலடித்தபோதும், வெள்ளம் வந்து மோதிய போதும். திடமான விசுவாசமென்னும் பாறையின் மீது எவனுடைய வாழ்வு கட்டப்பட்டிருக்கிறதோ. அவன் பாக்கியவான். ஆயினும், தன்னுடைய பரிசுத்த வாழ்வின் மூலம், இந்த விசுவாசமாகிய தேவ கொடை என்றென்றும் தன் சொந்தமா யிருப்பதையும், அது நித்திய ஜீவியத்திற்குரிய கனிகளைத் தன்னில் பிறப்பித்து, அவற்றை விளை வித்துக் கனியச் செய்வதையும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், "மலை களைப் பெயர்த்தகற்றும்" வல்லமையுள்ளதாக இருந்தாலும் கூட கடவுளுக்கு முன்பாக எந்த மதிப்பும் அற்றதாக இருக்கிற ஒரு விசுவாசம் உண்டு! அது பரிசுத்த வாழ்வில் ஊன்றியிராத. வெறும் போலி விசுவாசம்!

மேலும் அது கடவுளுக்குச் சித்தமானால் பரிசுத்த கன்னிமையில், அல்லது ஜீவிய அந்தஸ்துக்குரிய கற்பில் ஊன்றியிருக்கிறது! கடவுளுக்குச் சித்தமானால், அவரைப் போலவும். அவருடைய திருத்தாயாரைப் போலவும், பரிசுத்த நீதிமானைப் போலவும், பரிபூரண தரித்திரத் தையும் ஏற்றுக்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது! மரண மட்டுக்கும். அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவரைக் கண்டுபாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருப் பதிலும், அவரால் நமக்கு மேலாக நியமிக்கப்படுபவர்களுக்குப் பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் பணிந்திருப்பதிலும் அடங்கியிருக்கிறது!

இவை இல்லாத கிறீஸ்துமஸ் திருநாட்கள் திவ்ய பாலனின் பார்வையில் "அருவருப்புக் குரியவையாக" இருக்கின்றன என்பதை மறவாதீர்கள், குடில்கள், வீட்டு அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவற்றில் மட்டுமே இன்று மனிதன் கிறீஸ்து பிறப்பைக் கொண்டாடுவதுதான் இன்றைய பெரும் தீமையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் கிறீஸ்து பிறப்பிற்காகத் தன் ஆத்துமத்தை ஆயத்தம் செய்து வைத்துக் காத்திருப்பதை அவன் நினைப்பது கூட இல்லை. இவைகளைத்தான் செய்திருக்க வேண்டும்; அவைகளையும் விட்டு விடலாகாது (மத்.23:23).மேலும் உங்க ளிடையே வாழும் ஏழைகளையும் மறந்து விடலாகாது! எனவே, அன்புச் சகோதரரே! கிறீஸ்துநாதர் உண்மையாகவே நம் ஆத்துமங்களிலும்,

இல்லத்திலும் வந்து பிறப்பதை உறுதி செய்துகொள்வோம். அப்போது, நல்மனத்தோருக்குரிய சமாதானம் நம்முடையதாகும்; அதுவே உன்னத ஸ்தலங்களில் சர்வேசுரனுக்கு மகிமையாக இருக்கும்.




Source: Matha Malar - நவம்பர் - டிசம்பர், 2023


மரியாயே வாழ்க!