Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St.Therese லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St.Therese லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

St. Therese Daily Thought 4

பூமியின் மீதுள்ளவர்களுக்கு நன்மை செய்வதில் என் விண்ணக வாழ்வை நான் செலவிடுவேன்.  இது சாத்தியம் இல்லாதது அல்ல.  ஏணென்றால் வான தூதர்கள் கடவுளின் காட்சியை எப்போதும் கண்டு அனுபவித்து கொண்டிருந்தாலும், அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள்.  இல்லை, உலக முடிவு வரையிலும் என்னால் ஓய்வெடுக்க முடியாது.  





Download Tamil Catholic Songs

சனி, 28 ஏப்ரல், 2018

*SS. Didymus & Theodora, MM.* *அர்ச். திதிமுசும்* *தெயதோரம்மாளும்*

*ஏப்ரல் மாதம் 28-ம் தேதி*

*SS. Didymus & Theodora, MM.*              
*அர்ச். திதிமுசும்*
*தெயதோரம்மாளும்*
*வேதசாட்சி - (கி.பி. 304).*   

தெயதோரா கிறீஸ்தவளாயிருந்ததினால் பிடிபட்டு அதிகாரிக்குமுன் கொண்டுவந்து விடப்பட்டபோது, அவன் இவளுக்கு நயபயத்தைக் காட்டி வேதத்தை மறுதலிக்கும்படி கட்டளையிட்டும், இவள் அதற்கு சம்மதிக்க வில்லை. அதிபதி இவளுடைய சிறந்த வம்சத்தையும், இவளுடைய அழகையும் இவளுக்கு எடுத்துக் கூறி, கிறீஸ்தவ வேதத்தை விடும்படி கட்டாயப்படுத்தினான். அப்படியிருந்தும் இவள் வேதத்தில் உறுதியாயிருப்பதைக் கண்டு இவளைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். சிறையில் துஷ்டரால் தன்னுடைய கற்புக்குப் பழுது உண்டாகாதபடி ஆண்டவரை இவள் உருக்கத்துடன் மன்றாடினாள். அச்சமயத்தில், ஒரு சேவகன் சிறையில் பிரவேசிப்பதைக் கண்டு இவள் கலங்கினாள். அப்போது சேவகனுடைய உடையை அணிந்து வந்த திதிமுஸ் இவளுக்குத் தைரியமளித்து, தன் உடுப்பை அணிந்துகொண்டு தப்பித்துக்கொள்ளும்படி கூறவே, இவளும் அவ்வாறே வெளியே தப்பிச் சென்றாள். சிறையில் நடந்த சம்பவத்தை அதிபதி கேள்விப்பட்டு, திதிமுஸின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான். திதிமுஸ் கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிரச்சேதம் செய்யப்படும் தருவாயில், தெயதோரா அங்கு சென்று, நான்தான் சிறையினின்று என் கற்புக்கு பழுதுண்டாகாதபடி ஓடிப்போனவள். என்னைச் சிறையிலிருந்து காப்பாற்றிய இந்தப் புண்ணியவானுடன் வேதசாட்சி முடி பெற ஆசையாயிருக்கிறேன் என்று கூறி, அன்றே அவளும் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றாள்.          

*யோசனை*
நமது கற்புக்குப் பழுதுண்டாகக்கூடிய மனிதர், இடம் முதலியவற்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் விட்டு விரைந்தோடுவாமாக.

St. Therese Daily Thought 3

துன்பத்தை தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்காமல் இருக்கும் பொது மிக சிறிய சந்தோசம் வந்தாலும் நாம் அதைக் கண்டு வியப்படைகிறோம்.  ஆனால் அந்நேரத்தில், துன்பத்தை விலை மதிப்பு மிக்க ஒரு பொக்கிஷமாக நாம் தேடும்போது, அந்த துன்பமே நமக்கு எல்லாவற்றிலும் பெரிய மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.


Download Tamil Catholic Songs