Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 21 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 4

 நம் நேச ஆண்டவரின் பாடுபட்ட சுரூபத்தின் மேல் பக்தி


நமதாண்டவர் அர்ச்.ஜெர்த்ரூத்தம்மாளிடம், “நாம் பாடுபட்ட சுரூபத்தை ஒருவன் எத்தனை முறை பக்தியோடு பார்ப்பானோ அத்தனை முறையும் நாம் மிகுந்த சிநேகத்துடன் நம்முடைய அளவி;ல்லாத கருணை பொழியும் திருக்கண்களாலே அவனைப் பார்ப்போம்” என்று திருவுளம்பற்றினார். ஆஸ்திரியா நாட்டில் உயர்குடிப் பெண் சந்தொசால் கத்தரின் மிக்க அழகுடையவளாக இருந்தாள். அதனால் அவளுக்கு மிதமிஞ்சிய அகங்காரமும் இருந்தது. உயர்குடி மக்கள் பலரும் அவளை மணந்து கொள்ள ஆசித்தனர். 
அவளோ, தன்னை மணக்க தகுதியானவர் யாருமில்லை என்று  திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாள். ஒரு நாள் அவள் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தன்னைப் போல் அழகி யாருமில்லை என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அப்போது, அவள் அருகிலிருந்த சேசுநாதர்சுவாமி பாடுபட்ட சுரூபத்தைத் திடீரெனக் கணடாள். அந்தச் சுரூபத்தின் முகம் மிகுந்த துக்கமாயிருக்கிறதைக் கண்டபோது அவளுடைய இருதயத்தில் இருந்த பாவகரமான பற்றுதல்கள் அனைத்தும் புதுமையாக மறைந்ததுமல்லாமல், உத்தமமான மனஸ்தாபமும் தேவசிநேகமும் ஏற்பட்டது. அப்போது அவளிடத்தில் எழுந்த எண்ணமாவது: “எனக்காக நம் நேச ஆண்டவர் இவ்வளவு துக்கமாயிருக்கிறார். அவர் இப்படி இருக்கையில் நான் தகாத சந்தோஷப்படுவேனோ! இந்தத் தகாத சந்தோஷத்தைத் தள்ளிவிட்டு நம் திவ்ய இரட்சகர் பேரில் என் நேசமெல்லாம் வைப்பேன்”. 

உடனே அவள், தன்னை முழுவதும் பரலோக பத்தாவான திவ்ய சேசுநாதர் சுவாமியிடம் அர்ப்பணித்து அவரை முழுவதும் சிநேகித்து வந்தாள். தன் மேல் பிறருக்கு பொல்லாத பற்று உண்டாகாதபடிக்கு ஒரு சந்தியிருந்தும், தன் சரிரத்தை அடித்தும், அடிக்கடி முகத்தை வெயிலில் கருக்கப் பண்ணியும் தன் முகத்தின் வசீகர அழகைக் குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாள். இறுதியாக அர்ச்.தெரசம்மாளின் கார்மேல் சபையில் உட்பட்டாள். அங்கு “சேசுவின் கத்தரீனாள்” என்று தான் அழைக்கப்பட ஆசித்தாள். 
மரணமட்டும் தேவசிநேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து நம் ஆண்டவரின் நேச பத்தினியாக பரிசுத்த கன்னியாஸ்திரியாக வாழ்ந்து வந்தாள். 

புறோவான்ஸ் என்ற நாட்டிலிருந்து ஒரு நல்ல கிறிஸ்துவன், நமதாண்டவர் பாடுபட்ட ஸ்தலங்களைத் தரிசிப்பதற்காக தவயாத்திரையாக பாலஸ்தீனநாட்டிற்கு வந்தான். ஆண்டவர் சஞ்சரித்த ஸ்தலங்களை யெல்லாம் மிகுந்தபக்தியோடு சேவித்துக் கபாலமலைக்குச் சென்றான். வுழியில், “இங்கு சேசுநாதர்சுவாமி முகங்குப்புற விழுந்தார், இங்கு அவர் தமது திவ்யதாயாரைச் சந்தித்தார்” என்று அழுகையோடு தியானித்தபடி சென்றான். மலைமேல் ஏறியதும், “ஆண்டவர் சிலுவையில் அறையுண்டு மரித்த இடம் இதோ”என்று காண்பித்தனர். அப்போது அவன் அந்த ஸ்தலத்தைப் பார்த்து, “என் நேச ஆண்டவரே! நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னே, தேவரீர் பிறந்த இடத்தைக் கண்டேன். தேவரீர் புதுமைகள் செய்த இடங்களையும் பார்த்தேன். தேவரீர் சுகிர்த பிரசங்கங்கள் நிகழ்த்திய இடங்களையும் அழுதுகொண்டு தரிசித்தேன். ஆனால், தேவரீர் என் பாவத்தினால் மரணமடைந்த இடத்தைச் சாகாமல் காணமாட்டேன். ஐயோ, நான் செய்த பாவத்தினால் இவ்விடத்தில் மரணமடைந்த நம் திவ்ய இரட்சகருக்கு அல்லவா துரோகம் செய்தேன்” என்று கூறி மனஸ்தாப மிகுதியால் மயங்கிக் கிழே விழுந்து மரித்தான். அவனோடு சென்றவர்கள், அவன் மயங்கியிருக்கிறான் என்று எண்ணி அவனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவன் இறந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக