Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 24 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 6

 தேவ பாலன் ஹங்கேரி நாட்டில் நிகழ்த்திய புதுமை 


புடாபெஸ்ட் பங்குகுருவாக இருந்து, பின்னர், மேற்கத்திய நாட்டிற்கு சென்றவரான சங்.நார்பெர்ட் சுவாமியார் நேரில் கண்ட இந்நிகழ்வை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: 1956ம் வருடம், ஹங்கேரி நாடு, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்த காலம், அது. புடாபெஸ்டில், சிறுமியருக்கான பள்ளிக் கூடம் ஒன்றில், கம்யூனிச வெறி பிடித்த ஓர் ஆசிரியை இருந்தாள். ஜெர்த்ரூத் என்பது அவள் பெயர். அவளும் கத்தோலிக்க வேதத்தை, சிறு வயதில் அனுசரித்திருந்தாலும், கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் கடுமையான சித்திரவதைக்கு உட்பட்டு, சத்திய வேதத்தை மறுதலித்திருந்தாள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவளுடைய இருயத்தில் கடவுள் வெறுப்புக் கொள்கையை ஆழமாக பதித்திருந்தனர். ஆகையால், அவள் தன் வகுப்பிலுள்ள மாணவியரின் இருதயங்களிலிருந்து, கத்தோலிக்க விசுவாசத்தை அகற்று வதில் பெரிதும் ஈடுபட்டாள்; கத்தோலிக்க சத்தியங்களை கேலி செய்து நகைப்பாள்; அல்லது, அவர்கள் இருதயங்களில் கம்யூனிச தப்பறைகளை, பதியச் செய்வாள்; இதை, தன் மாபெரும் அலுவலாகக்கருதி, அது, கம்யூனிசத்திற்கு, தான் ஆற்றும் மகத்தான காரியமாக, ஆர்வத்துடன், செய்து வந்தாள். அவள் வகுப்பில், ஆஞ்சலா என்ற ஒரு பக்தியுள்ள சிறுமி இருந்தாள். புத்தி சாலியான அவள் தான், வகுப்பின் மாணவியர் தலைவியாக இருந்தாள். அவள், பங்கு குரு, சங். நார்பெர்ட் சுவாமியாரிடம் சென்று, தினமும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கு, தனக்கு, உத்தரவளிக்க வேண்டும் என்று கேட்டாள்.

அதற்கு, குருவானவர், அப்போது, உன் ஆசிரியை உனக்கு இன்னும் கூடுதல் கஷ்ட மான உபத்திரவங்கள் கொடுப்பாள், என்றார். அதைத் தாங்குவதற்கான ஞானபலத்தை, நிச்சயம் ஆண்டவர் தனக்களிப்பார் என்று, 10 வயது சிறுமி ஆஞ்சலா, வலியுறுத்திக் கூறி, தின மும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கான அனுமதியை குருவிடமிருந்து பெற்றுக் கொண் டாள். உண்மையாகவே, அந்நாளிலிருந்து, ஆஞ்சலாவிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தைக் கண்ட ஜெர்த்ரூத், மனரீதியான சித்திரவதையால், ஆஞ்சலாவைத் துன்புறுத்தினாள். டிசம்பர் 17ம் தேதியன்று, சிறுமியரிடையே கிறீஸ்துமஸ் திருநாளுக்கான பக்தி பற்றுதல் ஏற்பட்டிருந் தது. இதை உணர்ந்த ஜெர்த்ரூத், திவ்ய குழந்தை சேசுவின் மீது, மாணவியர் கொண்டிருந்த பக்தியை அகற்றுவதற்கு, ஓர் கொடிய தந்திரத்தை பிரயோகிப்பதில் கருத்தாயிருந்தாள்.

ஜெர்த்ரூத், இனிய குரலில், அஞ்ஞான உலகாயுதக் கொள்கைகளை, சிறுமிகளின் இரு தயங்களில் பதியச் செய்வதற்காக, நாம் காணும், அல்லது தொட்டு உணரும் பொருட்கள் மட்டுமே உண்மையில் நிஜமாக இருக்கின்றன; மற்ற எல்லாம் உண்மையில் இல்லாதவை என்று கற்பித்தாள். அதை உணர்த்துவதற்காக, ஆஞ்சலாவை வகுப்பறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, ஆஞ்சலா! உள்ளே வா! என்று அவளை, ஒருமித்த குரலில், எல்லா மாணவிக ளும் அழைக்கும்படிச் செய்தாள். இதில், ஒரு சதி இருக்கிறது என்ற சந்தேகத்துடன், ஆஞ்ச லா, உள்ளே வந்தாள். பிள்ளைகளே! ஆஞ்சலா, நம்மால் தொட்டு உணரப்படுபவளும் காணப்படுவளுமான ஒரு உயிருள்ள சிறுமி! அவளைக் கூப்பிட்டவுடன், அவள் நம் குரலைக் கேட்டாள்; உடனே உள்ளே வந்தாள். ஆனால், உங்கள் கிறீஸ்துமஸ் திருநாளுக்காக நீங்கள் குழந்தை சேசுவைக் கூப்பிட்டால், அவர் உங்கள் குரலைக் கேட்டு வருவாரென்று நீங்கள் நம்புகிறீர்களா? அதெல்லாம் பழைய கால கிறீஸ்துவ மதத்தின் குருட்டு நம்பிக்கைகள், என்று கம்யூனிஸ்டு வாதியான ஆசிரியை, தன் மாணவிகளிடம் அபத்தத்தைக் கற்பித்தாள். அப்போது சிறுமிகளிடையே ஒரு அழுத்தமான மௌனம் நிலவியது. பின்பு மெல்லிய குர லில், சில பிள்ளைகள், மிகுந்த பயத்துடன், ஆம்! நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதை, ஆசிரியைக் கேட்டாள். உடனே, கோபமடைந்த ஜெர்த்ரூத், ஆஞ்சலா! இதற்கு உன் பதில் என்ன? என்று கேட்டாள். இது, ஒரு சூழ்ச்சி என்று இப்போது, ஆஞ்சலாவிற்கு நன்கு புரிந் தது. உடனே, அவள், மிகுந்த பக்தி பற்றுதலுடன், ஆம்! அவர் என் குரலைக் கேட்பார், என்று விசுவசிக்கிறேன்! என்று, உறுதியான தொனியுடன் பதில் கூறினாள். இதைக் கேட்டதும், ஆசிரியை, மிக சப்தமாக பரிகாசமாக சிரித்தபடியே, தன் வகுப்பிலிருக்கும் மாணவிகளைப் பார்த்து, நல்லது! அப்படியானால், நீங்கள் அவரை கூப்பிடுங்கள்! என்று பயங்கரமாக அலறி னாள். வகுப்பிலிருந்த சகல சிறுமிகளும், ஆசிரியையின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் சற்றும் பயப்படாமல், அப்படியே மௌனமாக இருந்தனர். கம்யூனிஸ்டுவாதியின் தப்பறையான உபதேசங்கள், மாணவியரிடையே பயனற்றுப்போனது.

அப்போது, திடீரென்று, மாணவியர் முன்பாக, ஆஞ்சலா பாய்ந்து வந்தாள். அவளு டைய கண்களில் ஒளிவீசியது! தன் சக மாணவியரைப் பார்த்து, அவள், கவனியுங்கள் ! பிள்ளைகளே! நாம் அவரைக் கூப்பிடப்போகிறோம்! ஓ! திவ்ய குழந்தை சேசுவே! வாரும் என்று, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்தபடி, நம்நேச ஆண்டவரை, நம் திவ்ய பாலனை, இங்கு வரவேண்டும் என்று கூவி அழைப்போமாக! என்று உரத்தக் குரலில் கூறினாள். உடனே, வகுப்பிலிருந்த எல்லா சிறுமிகளும், அங்கேயே முழங்காலில் இருந்தபடி, பக்தி பற்றுதலு டன், வாரும்! திவ்ய குழந்தை சேசுவே! ஓ! தேவ பாலனே! வாரும்! என்கிற பாடலைப் பாடத் துவக்கினர். தான் கூறியதற்கு, மாணவியர், இவ்வாறு நடந்து கொள்வார்கள், என்ப தை சற்றும் எதிர்பாராத ஜெர்த்ரூத், இதைக் கண்டு திடுக்கிட்டாள். ஆனால், சிறுமிகள் தொடர்ந்து, மிக ஊக்கத்துடனும், பக்தியுடனும் திவ்ய குழந்தை சேசுவை நோக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய சின்ன தலைவியான ஆஞ்சலாவின் இருதயத் தில் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்கத் துவங்கியது. அவளும் உருக்கமாக, தன் மனதில் மன வல்லய ஜெபங்களுடன் கூட, தேவபாலனிடம் வேண்டிக்கொண்டே இருந்தாள்; அவளின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியதும் , வகுப்பறையின் கதவு, சப்தமில்லாமல் திறந் தது; வகுப்பறைக்கு வெளியே திடீரென்று ஓர் மிகுந்த பிரகாசமுள்ள ஒளி மின்னியது; அம் மாட்சிமிக்க ஒளி மின்னியபடியே, வகுப்பிற்குள் நுழைந்தது. பிறகு, அவ்வொளி, அதிகரித் துக்கொண்டே போனது; பெரிய ஒளியாக, மாபெரும் நெருப்பாக மாறியது; அம்மாபெரும்

பிரகாசமுள்ள நெருப்பின் நடுவில், ஓர் அழகிய பூலோக வடிவிலான கோளம் இன்னும் கூடுதல் தெளிவான ஒளியுடன் தோன்றியது. ஆசிரியையும், மாணவியரும் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அந்த கோளம், தரையில் இறங்கி நின்று திறந்தது; உள்ளிருந்து, மாட்சிமிக்கதும் பேரெழில் மிக்கதும், பல நிறங்களுடன் பிரகாசிப்பதுமான ஓர் அங்கியு டன், திவ்ய குழந்தை அதிலிருந்து தோன்றினார். அவர், சிறுமியரைப் பார்த்துப் புன்னகைத் தார்; அது, அவர்களின் இருதயங்களை ஆழமாக ஊடுருவி, தேவபாலனிடம் ஈர்த்தது. சிறுமி களும் முழு சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் தேவபாலனை நோக்கி புன்முறுவல் செய்தனர். அதன் பின்னர், அந்த கோளம் மறு படியும் மூடிக்கொண்டு, கதவின் வழியாக வெளியே சென்று மறைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆஞ்சலாவும், சக மாணவிகளும், தேவபாலனின் கோளம் சென்ற திசையைப் பார்த்தபடியே, தொடர்ந்து பரவசத்தில் ஆழ்ந் திருந்தனர். வகுப்பு முழுவதும் ஆச்சரியத்தினாலும் பயத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டு, ஓர் மாபெரும் அமைதியுடனிருந்தது. அப்போது, ஆசிரியை, மிகுந்த அச்ச நடுக்கத்துடனும் ஒரு வித மனவியாதியால் பீடிக்கப்பட்டவளாக, அவர் வந்தார்! அவர் வந்தார் ! என்று அலறிக் கொண்டே, வகுப்பை விட்டு வெளியே வராந்தாவில் இறங்கி ஓடினாள்.

சங்.நார்பெர்ட் சுவாமியார், சிறுமிகள் எல்லோரையும், ஒருவர், ஒருவராகத் தனித் தனியாக, அப்போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய சகல காரியங்களையும், வினவினார். எல் லா மாணவிகளும், அந்த நிகழ்வை ஒரே மாதிரியாக விவரித்துக் கூறினர். யாருடைய கூற்றி லும் எந்த முரண்பாடும் இல்லை, என்பதை குருவானவர் நிச்சயப்படுத்தி அறிவிக்கிறார். மன நோயாளிகளுக்கான ஓர் இல்லத்தில், ஜெர்த்ரூத் சிகிச்சை பெற்று வந்தாள். வகுப்பறையில், சிறுமிகளுக்கு முன்பாக, தேவபாலன் அற்புதமாகத் தோன்றிய காட்சி, கடவுள் அற்ற அவ ளுடைய மனதிற்கு, பேரதிர்ச்சியாக இருந்தது; கடவுள் வெறுப்புக் கொள்கையை, ஜெர்த் ரூத்தின் மனதில் கம்யூனிஸ்டு தீவிரவாதிகள் எவ்வளவிற்கு, ஆழமாக பதிய வைத்திருந்தார் களென்றால், கடவுளான தேவபாலன், தன் மாணவியர் மத்தியில் வந்து தோன்றியதை, அவ ளால் ஏற்பதற்கும் நம்புவதற்கும் கூடாமல் போனது. அவள், அவர் வந்தார்! என்று, இடை விடாமல் தொடர்ந்து, கூறிக்கொண்டே இருந்தாள். சின்ன தலைவியான ஆஞ்சலாவின் தலைமையில், சகல மாணவிகளும், தங்களுடைய ஆசிரியையின் மனந்திரும்புதலுக்காகத் தொடர்ந்து வேண்டிக்கொண்டனர். திவ்ய குழந்தை சேசு, அவர்களுடைய மன்றாட்டை நிச்சயம் ஏற்று, ஜெர்த்ரூத்தைத் திருச்சபைக்குள் சேர்த்திருப்பார். இந்த கிறீஸ்துமஸ் திருநாள் சமயத்தில், நம் வீடுகளுக்குள் வந்து நம்மை ஆசீர்வதிக்கும்படியாக, நாமும் தேவபாலனாகிய திவ்ய குழந்தை சேசுவை, பரிசுத்த இருதயத்துடன் வரவேற்போமாக! "


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக