Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 24 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 7

 உத்தரிக்கிற ஆத்துமங்களின் மாதத்திற்கான தியானம்

அர்ச். சியன்னா பெர்நர்தீனுக்கு அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்ட சமயத்தில், இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸ் நாட்டின் காசியா என்ற ஊரில், பிளாசியோ மசயி என்ற பதினொரு வயது சிறுவன் இருந்தான். சிறுவனின் பெற்றோர், அர்ச். பெர்நர்தீன் மீது, அதிக பக்தி கொண்டிருந்தனர். சிறுவனின் இருதயத்திலும், அவர் மீது, பக்தியை ஏற்படுத்தினர். ஜெபமாலையின் அப்போஸ்தலராக விளங்கிய அர்ச். பெர்நர்தீனுடைய பிரிய சீடர்களாகும் படிக்கு, சிறுவனும், அவன் பெற்றோரும் தினமும் பக்தியுடன், குடும்ப ஜெபமாலை ஜெபித்து வந்தனர். சிறுவனும், அர்ச்சிஷ்டவர் மீது, பக்தியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம், சிறுவ னுக்கு கடின வியாதி ஏற்பட்டது; அவனது பெற்றோர், துயரத்தில் ஆழ்ந்தவர்களாக, பக்தியு டன் ஜெபமாலை ஜெபித்தபடியே, அர்ச். பெர்நர்தீனிடம் தங்களது நேச மகன் சுகமடைவ தற்காக வேண்டிக் கொண்டனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, சிறுவன் இறந்து போனான். அப்போது, தங்கள் நேசமகனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, இன்னும் அதிக பக்தியுடன் அர்ச்சிஷ்டவரிடம், தொடர்ந்து வேண்டிக்கொண்டேயிருந்தனர்.

இறந்த சிறுவனின் உடலை, அடக்கம் செய்வதற்காக, கல்லறைக்கு எடுத்துச் சென்ற னர். திடீரென்று, வழியிலேயே , சிறுவன், ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்ததைப் போல், எழுந்தான். அர்ச். சியன்னா பெர்நர்தீன், எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கிறார். இறந்த பிறகு நிகழும் காரியங்களைப் பற்றியும், பரலோகத்தில், அவர் காண்பித்த அதிச மக்களுக்கு எடுத்துரைக்கும்படியாகவே, எனக்கு உயிர் திரும்பக் கிடைத்திருக்கிறது. இப் புதுமையைப் பற்றிய செய்தி, நேப்பிள்ஸ் நாடு முழுவதும் பரவியது. ஒரு மாதமாக, சிறு வனைப்பார்ப்பதற்காக தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது. அவன் அவர்களிடம், பின்வருமாறு விவரித்தான் : நான் இறந்ததும், அர்ச். பெர்நர்தீன் என் முன் தோன்றினார். என் கரத்தைப் பிடித்து. பயப் படாதே! நான் உனக்கு, காண்பிக்கப்போகிறவற்றை, கவனத்துடன் நோக்கிப் பார். அப்படி யானால், அவற்றைப் பற்றி, நீ மக்களுக்கு எடுத்துரைப்பாய், என்றார். நரகம், உத்தரிக்கிற ஸ்தலம், லிம்போ , மோட்சம் ஆகிய இடங்களுக்கு, அவர் என்னை அழைத்துச் சென்றார் கத்தில் பயங்கரத்திற்குரிய வேதனையில் ஆத்துமங்கள் மூழ்கி, கூக்குரலிட்டு அலறிக் கொண் டிருப்பதைக் கண்டேன். ஆங்காரிகளும், பேராசை பிடித்தவர்களும், கற்பை இழந்தவர்க ளும், நாஸ்திகர்களும், மற்ற மனந்திரும்பாத கன்னெஞ்சரான பாவிகளும் வெவ்வேறு வகை யான வேதனைகளை, நரகத்தில் அனுபவிப்பதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த சிலரை, அங் குப் பார்த்தேன். அப்போது இறந்துபோயிருந்த புற்சரெல்லி, வ்ராஸ்கா என்னும் இருவரும் நரகத்தில் இருந்தனர். தவறானதும் பாவகரமுமான வழியில் சம்பாதித்தப் பொருட்களை வைத்திருந்ததால், வ்ராஸ்கா, நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டிருந்தான். வ்ராஸ்காவின் மகன், இதைப் பற்றிக் கேட்டவுடன், இடி விழுந்தது போல அதிர்ச்சியடைந்தார். சிறுவன், பிளாசி யோ, கூறியது முற்றிலும் உண்மை என்பது, அவருக்குத் தெரியும். உடனே, நரகத்திற்குத் தப்பி, மோட்சத்தை அடைவதற்காக, தன் தகப்பன் சம்பாதித்திருந்த சகல பொருட்களை யும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு துறவற மடத்தில் சேர்ந்து சந்நியாசியானார்.

பின்வருமாறு சிறுவன் மேலும் தொடர்ந்து விவரித்தான். பின், நான் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அங்கே, கட்டிக்கொண்டவெவ்வேறு பாவங் களுக்கேற்ப, ஆத்துமங்கள் பலவிதமான கொடிய உத்தரிப்பு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். எனக்குத் தெரிந்த பலரை, நான் அங்கே பார்த்தேன். தங்கள் வேதனை கள் பற்றி, தம் பெற்றோரிடமும், உறவினரிடமும் தெரிவிக்கும்படி, பலர் என்னிடம் கேட்டுக் கொண்டனர். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலையடைவதற்காக, என்னென்ன ஜெபங்க ளும், திவ்ய பலிபூசைகளும், ஜெபமாலைகளும், தான தர்மங்களும், தபசுமுயற்சிகளும், ஒறுத் தல் உபவாசங்களும் செய்யவேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுக் கூறினர். சிலர் இறந்த தங் கள் உறவினரைப்பற்றி வினவினர்: உம் தந்தை, இன்ன நாளிலிருந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலி ருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மத்தில் செலவழிக்க வேண்டுமென்று, உன் தந் தை, உனக்குக் கூறியிருந்தார். நீயோ, அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை, என்று சிறுவன், ஒருவனிடம் தெரிவித்தான். இன்னொருவனிடம், என் ஆன்ம இளைப்பாற்றிக்காக, இத்தனை திவ்ய பலிபூசைகள் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று, உன் அண்ணன் கேட்டிருந்தார். அவ ருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக, நீ வாக்களித்திருந்தாய். ஆனால், இதுவரை, அதை நீ , நிறைவேற்றவில்லை, என்று சிறுவன். கூறினான்.

மேலும், சிறுவன், மோட்சத்தைப் பற்றிக் கூறினான் : எண்ண முடியாத அணி அணி யான சம்மனசுகள் சேனையினர், மிகுந்த மாட்சிமிக்க பேரொளியுடன் பிரகாசிக்கும் சர்வே சுரனுடைய பத்திராசனத்தைச் சூழ்ந்தபடி, அவர்சந்நிதானத்தின் முன்பாக தாழ்ந்து பணிந்து, எல்லாம் வல்ல அர்ச். தமதிரித்துவசர்வேசுரனை ஆராதித்துக்கொண்டிருந்தனர். சகல அர்ச்சிஷ் டவர்களுக்கும், சம்மனசுகளுக்கும், நித்தியகாலமாக, இடைவிடாமல், சர்வேசுரனை ஆராதித் துக் கொண்டிருப்பதே, மோட்ச பேரின்பமாக இருக்கிறது. சகல அர்ச்சிஷ்டவர்கள், சம்மன சுகளுக்கு மேலாக, மகத்துவமிகுந்த வல்லமையுடனும் மாட்சிமையுடனும், சர்வேசுரனு டைய பத்திராசனத்திற்கு அருகில் வீற்றிருக்கும் தேவமாதாவின் பேரழகு, என் இருதயத் தை மிகவும் வசீகரித்துத் தன் பால் ஈர்த்தது; அங்கேயே தங்கிவிட நான் பெரிதும் ஆசித்தேன், என்று கூறி முடித்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக