Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 24 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 8

 மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை


உக்ரேன் நாட்டில், சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி: மிக்கேல் எர்லாவ் என்ற இளங்குருவானவர், குருப்பட்டம் பெற்றதும், அகதிகளின் முகா மிற்கு விசாரணைக் குருவாக நியமிக்கப்பட்டார். தூர நாடுகளுக்குச் சென்று, வேத போதகத் தில் ஈடுபட்டு, அஞ்ஞானிகளுக்கு ஆண்டவரைப் பற்றி சுவிசேஷத்தைப்பிரசங்கிக்க வேண் டும் என்பதே, இளங்குருவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இளம் வயதில், அவர் மிக வும் துன்பத்திற்கு ஆளானவர். அவருடைய வாழ்வு துயர் நிறைந்த வாழ்வு எனலாம். அவர், ஆறு வயது, சிறுவனாக இருந்தபோது, பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டனர். கத்தோ லிக்க வேதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே, அவர்கள் கொல்லப்பட்டனர்; அதாவது, வேத சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, தங்கள் உயிரை நேச ஆண்டவருக்காகக் கொடுத்த னர். அவருடைய அக்காள், திடீரென்று மாயமாக மறைந்தாள். அவள் எங்கே சென்றாள், என்பது பற்றிய செய்தி  ஒன்றும்கிடைக்கவில்லை. குடும்பத்தின் நண்பர் ஒருவர் மிக்கேலை, பி ரான்சு நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். 

இரண்டாவது உலகப்போரின் போது, மிக்கேல் கைது செய்யப்பட்டார். சிறையில் மிகுந்த அவதிப்பட்டார். போருக்குப்பின் விடுதலையானதும், குரு மடத்தில் சேர்ந்து, மிக்கேல் குருப்பட்டம் பெற்று, குருவானார். அவருடைய அதிபர் சுவாமியார், ஒருநாள், அவரிடம், அகதிகள் முகாமிற்குப் போங்கள். அங்கு இருக்கும் அகதிகளின் அவலமான வாழ்வை நீங்கள் அறிவீர்கள். சர்வேசுரன் உங்களுக்கென்று, அங்கு ஏதாவது வேலை வைத்திருப்பார். ஆண்ட வர் பெயரால் போவீராக! என்று கூறி, சங். மிக்கேல் சுவாமியாரை, அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அங்கே செல்வதற்கு, முதலில் விருப்பமில்லாமல் இருந்தாலும், கீழ்ப் படிதலின் பேரில் உடனே, மிக்கேல் சுவாமியார், அங்கு சென்றார்.

முகாமிற்கு விசாரணைக் குருவாக சென்ற சில நாட்களுக்குள்ளேயே, மிக்கேல் சுவாமி யாரை அங்கிருந்த எல்லாரும் விரும்பினர். காலை முதல் மாலை வரை, அவர்களுக்காகவே, இளங்குருவானவர் உழைத்தார். ஒரு பெண் மாத்திரம் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. அவள் பெயர் நூதனமாக இருந்தது; எதிரில் குரு வந்தால் ஒளிந்து கொள்வாள். அவளுக்கு திடீரென்று இருதய நோய் வந்தது. மரண அவஸ்தைப் பட்டாள். உதவி உதவி என்று கதறி னாள். ஒருவர் குருவை, உதவிக்கு அழைத்தார். மருத்துவரை அழைத்து வரும்படி அவரை அனுப்பி விட்டு, மிக்கேல் சுவாமியார் மட்டும், நோயாளியான அப்பெண் இருந்த அறைக் குள் நுழைந்தார். உடனே, அப்பெண், நீர் யார்? உம்மை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். எங்கு பார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, என்று கோபத்துடன் சப்தமாகக் கூறினாள். அதற்கு, இளங்குரு , மிக சாந்தமான குரலில், நான் ஒரு கத்தோலிக்கக்குருவானவர். உங்களைச் சந்தித்துப் பேசியதில்லை, என்று கூறினார். அதற்கு, அவள் மிகுந்த கோபாவேசத்துடன்," நான் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டவள்" என்று திரும்பத் திரும்ப உரத்தக் குரலில் அலறினாள். அதற்கு இன்னும் அதிக பொறுமையுடனும் கனிவுடனும், குருவானவர், அவளிடம், அம் மா! தயவு செய்து, நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம். பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள், என்று கூறினார். உடனே, அவள் அழுதாள்; நீர் நிரம்பிய கண்களுடன், எனக்கு மன்னிப்புக் கிடையாது, என்று கூறினாள். பாவியின் சாவை சர்வேசுரன் விரும்புவதில்லை. பாவி மனந்தி ரும்ப வேண்டும் என்று தான் , அளவில்லா இரக்கமும் சிநேகமும் உள்ள சர்வேசுரன் ஆசிக் கின்றார். மன்னிக்க முடியாத பாவமே கிடையாது. சர்வேசுரனுடைய இரக்கம் எல்லை யற்றது, என்று திரும்ப திரும்ப வலியுறுத்திக்கூறி, அவளுக்கு குருவானவர் நம்பிக்கையூட்டி னார்.

அந்த பெண், கடவுளா? அவர், ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால், மனிதன் மன்னிக்க மாட்டான். மோட்சத்தில் கூட மன்னிக்க மாட்டான். மனிதர்களை, மோட்சத்தில் இருப்ப வர்களை, எப்பொழுதாவது நான் சந்தித்தால், அவர்கள் என்னை சபிப்பார்கள், என்று அழுது கொண்டே உரத்த சத்தமாய்க் கூறினாள். குருவானவர், அதற்கு, அவளிடம், மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை. அங்கிருக்கும் எல்லோரும் அர்ச்சிஷ்டவர்கள். அவர்கள் எல்லோரும், பாவிகள் மனந்திரும்பி மோட்சத்தை அடைய வேண்டும் என்றே, எப்போதும் சர்வேசுர னின் பரிசுத்த சந்நிதானத்தில், இடைவிடாமல் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர், என்று மொழிந்தார். அதைக் கேட்டதும், அப்பெண், அவநம்பிக்கையுடன், தலையசைத்து, நீங்கள் என்னை அறியாததால், இப்படிக் கூறுகிறீர்கள். இப்படி உங்களுடன் பேசுவதற்கு, நான் என்னையே மிகவும் வலுவந்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த வலுவந்தத்திற்கான முயற்சி என் சாவுக்கேக் காரணமாயிருக்கலாம். பரவாயில்லை. எனக்கு அம்மா, அப்பா, குடும் பத்தினர் யாரும் இல்லை. என் வீட்டார் அனைவரையும் உலகப்போர் எடுத்துக் கொண்டது; அந்த போர் அவர்களை, என்னிடமிருந்து பிரித்து விட்டது.

நான் சிறுமியாக இருந்தபோது, நான் படித்த பள்ளிக் கூடத்தில், என் குடும்பத்தை முதலாய் வெறுக்க எனக்குக் கற்பிக்கப்பட்டது... எனக்கு 14 வயது நடக்கும்போது, கத்தோ லிக்க வேதத்தை அனுசரித்த என் பெற்றோரைக் காட்டிக் கொடுக்கும்படி நான் வற்புறுத்தப் பட்டேன். என் பெற்றோரைக் கைது செய்தனர். மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் சத்திய வேதத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனவே, நான் நரகத்திற்குப் போவது உறுதி. சில காலமாக, எதிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. என் தம்பி ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, பிரான்சு நாட்டிற்குச் சென்றான். அங்கு செல்வதற்கு, எனக்கு, அப்போது, அனுமதி கிடைக்கவில்லை, என்று சுருக்கமாக தன் ஜீவியத்தைப் பற்றி விவரித்தாள். இதைக் கேட்டதும், மிக்கேல் சுவாமியாரின் உடல் நடுங்கியது. அந்தப் பெண் சிறுவயதில் காணாமல் போன தன் அக்காளாக இருக்க முடியுமா, என்று சிந்தித்தார். பின் நோயாளிப் பெண்ணின் அருகில் சென்று, அன்னா! அன்னா! என்று மெதுவாக அழைத்தார். உடனே, நோயாளி, தன் கண்களை, அகலத் திறந்தாள். கலக்கமடைந்தவளாக, அவள், குருவிடம், என்ன சொன்னீர்கள்? 25 வருடங்களாக யாரும் அந்தப் பெயரைச் சொல்லி என்னை அழைத்த தில்லையே , என்று கூறினாள். ஆம். அவள், மிக்கேல் சுவாமியாரின் காணாம அன்னாவே தான். தனது அதிபர் சுவாமியார், அகதிகள் முகாமில் சர்வேசுரன், உங்களுக் கென்று ஏதாவது அலுவல் வைத்திருப்பார் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்; சர்வேசுரனி ன் அளவில்லா இரக்கமும் சிநேகமுமுள்ள பராமரிப்பிற்காக, மிக்கேல் சுவாமியார், நன்றி கூறினார். உடனே, நோயாளியின் கரங்களை அன்புடன் பற்றி, என் அன்புள்ள அக்கா அன்னா! என்றார். அதற்கு அன்னா, என் தம்பி, மிக்கேலா, இது? என் பாவ அக்கிரமத்தை, என் தம்பி யிடமா வெளியிட்டேன்? என்று நடுக்கத்துடன் கூறினாள். அதற்கு, அவர், அவளிடம், ஆம். என் பிரியமுள்ள அக்கா! உன் பாவ அக்கிரமங்களுக்காக மனஸ்தாபப் படு.சர்வேசுர னுடைய அளவில்லா சிநேகத்தையும் இரக்கத்தையும் பற்றி சிறிது நேரம் தியானி, என்று கூறியபடியே, சுவாமியார், அவளிடம் பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்து, அதை பக்தி யுடன் முத்தி செய்யும்படிச் செய்தார்.

உடனே, அன்னா, உத்தம மனஸ்தாப மிகுதியால் தேம்பி தேம்பி அழுதுகொண்டே, அதுவரை கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்காகவும், தேவ நம்பிக்கையில்லாமல் இருந்த தற்காகவும், நேச ஆண்டரிடம் மன்னிப்புக் கேட்டாள்; தன் தம்பி மிக்கேல் சுவாமியாரிட மே, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாள். மிக்கேல் சுவாமியார், அவளுக்கு பாவபொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார்:சர்வேசுரன் பெயரால், உனக்கு பாவ மன்னிப்பிற்கான ஆசீர்வாதத் தை அளிக்கிறேன். நம் அம்மா அப்பா பெயராலும் நான் உன்னை மன்னிப்பேன், என்று கூறி, தன் அக்காளை, ஆசீர்வதித்தார்.

குருவின் கரத்தை அன்னா நேசமுடன் பற்றிக்கொண்டு, மோட்சத்தை எனக்குத் திறந் து விட்டீர்கள். அம்மா, அப்பாவை சந்தித்ததும், பரலோகத்திற்கு எதிராகவும் உங்களுக்கு எதி ராகவும் நான் பாவம் செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று மனந்திரும்பிய ஊதாரிமகன், தன் நல்ல தந்தையிடம் கூறியதையேக் கூறுவேன், என்று கூறினாள். அவள் தன் கரங்களை மார்பின் மேல் வைத்தாள். குரு, இன்னொரு முறை, தன் அக்காளுக்குப் பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார். சற்றுப் பின், அவள் இறந்தாள். அருகில் அவளுடைய ஆத்துமத்தை, சர்வேசுரனிடம் ஒப்படைக்கும்படியாக, மரிப்போருக்கான ஜெபத்தை, மிக்கேல் சுவாமி யார் முழங்காலில் இருந்து அழுதபடியே ஜெபித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகளின் பிடியில் சிக்கி, விசுவாசத்தை இழந்த தனது அக்காள், மனந்திரும்பி சர்வேசுரனிடம் வரும் படி, தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் வேண்டி வந்த தன் ஜெபத்தை, தேவமாதா வும், ஆண்டவரும் கேட்டருளியதற்கு, தன் முழு இருதயத்துடன் நன்றி செலுத்தினார். தன் அக்காள் மனந்திரும்புவதற்காக, ஜெபித்துக் கொண்டிருந்த தம்பியையே குருவானவ ராக்கவும், அக்குருவானவரின் மூலமாகவே, அந்த அக்காளை, தம்முடன் ஒப்புரவாக்கவும் திருவுளம் கொண்ட அளவிலா நன்மையுடையவரான சர்வேசுரனின் பராமரிப்பு, மனித அறிவைக் கடந்த பேரதிசயமல்லவா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக