Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 21 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 5

 நம் நேச ஆண்டவருடைய திவ்யபாடுகள் மேல் பக்தி


ஒருசமயம் அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் போர்சியன்குலாவிலுள்ள பரிசுத்த சம்மனசுகளின் இராக்கினியின் தேவாலயத்தினருகே செல்கையில் வாய்விட்டுக் கதறி அழுவதை ஒருவன் கண்டான். உடனே அர்ச்சிஷ்டவரிடம் சென்று, அவர் ஏன் இவ்வளவு துக்கத்துடன் அழுகிறார் என்று வினவினான். அதற்கு அவர், இன்னும் அதிகமாக விம்மி அழுதுகொண்டே, “நம்முடைய நேச ஆண்டவர், மாசற்ற செம்மறிபுருவை போல நமக்காக சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு மரித்தபோது, யூதர்களும் மற்ற அனேக மனிதர்களும் அவருக்கு வருவித்த நிந்தை கஸ்தி நிர்ப்பந்தங்களைக் குறித்து நான் துயரப்பட்டு அழுகிறேன். நம் திவ்ய இரட்சகர் பட்டனுபவித்த இந்த எல்லா பாடுகளுக்கும் காரணமான, நீச மனுஷர்கள்; ஆண்டவருடைய எல்லையில்லா நேசத்தையும், அவர் நமக்காக அனுபவித்த கொடிய உபாதனைகளையும், மறந்து போனதையும் நினைத்து, நான் அழுகிறேன்” என்றார்.  மேலும் “எல்லையில்லா சிநேகமானவர், சிநேகிக்கப்படவில்லையே” என்று கதறிக் கூறிக்கொண்டே சென்றார். 

ஒரு சமயம் காட்டில் அர்ச்.மக்காரியார் நடந்து சென்றபோது, கிழே கிடந்த ஒரு மண்டையோட்டைத் தமது ஊன்றுகோலால் தள்ளினார். அப்போது அது புதுமையாக, அவரிடம், “இங்கே குடியிருந்த அஞ்ஞானியான பூசாரி நான். நானும் இங்கிருந்த அஞ்ஞானிகளும் நரக நெருப்புக்குள்ளே இருக்கிறோம்” என்று பேசியது. உடனேஅதனிடம், “நரகத்திலே அதிக வேதனை அனுபவிப்பவர் யார்?” என்று அர்ச்.மக்காரியார் வினவினார்.அதற்கு அந்த மண்டைஓடு, “நாங்கள் அனுபவிக்கிற வேதனையை விட கெட்டுப்போன கிறிஸ்துவர்கள் அதிக வேதனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குக் கீழே கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மிகுந்த நெருப்பும் அதிக வேதனையும் உண்டாயிருக்கிறது. ஏனென்றால், சேசுநாதர்சுவாமி, மனுஷருக்காக அனுபவித்த பாடுகள் மிது யாதொரு பக்தியுமின்றி, திவ்ய இரட்சகரை விட்டுவிட்டு உலகம், பசாசு, சரீரத்தின் தூண்டுதலின் பேரில் சுயஇச்சைக்கு இடம்கொடுத்து சாவான பாவத்தினால் தேவஇஷ்ட பிரசாதத்தை தங்களிடம் கொன்று போட்டனர்” என்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக