Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St Dominic லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St Dominic லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 45

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 45

ஒரு சமயம் அர்ச்.சாமிநாதர் பாரீஸிலிருந்து பொலோஞா நகருக்குச் சென்றார். அங்கு, அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தில் சகோ. ரெஜினால்டுவினுடைய பொறுப்புமிக்க வழிநடத்துதலினால், கிறிஸ்து சேசுவுக்குள் நன்கு போஷிக்கப்பட்டு துறவறஜீவியத்தில் வேரூன்றிய இவருடைய சபை சகோதரர்கள் ஏராளமானோர், இவரை மகிழ்வுடனும், தந்தைக்குக்குக் காட்ட வேண்டிய சங்கை மரியாதையுடனும் உற்சாகமாக வரவேற்று உபசரித்தனர். முன்மாதிரிகையுடன் கூடிய ஞானதியான பிரசங்கங்கள் மூலம் அவர்களுடைய ஞான ஜீவியம் உத்தமதனத்தில் நன்கு செழித்து வளரும்படியாக, அவர்களுடன் சிறிது காலம் சாமிநாதர் தங்கினார். அந்நகரிலிருந்த ஓர் குருவானவர், அர்ச். சாமிநாதரும் அவருடைய சீடர்களும், ஞானபிரசங்கங்கள் நிகழ்த்துவதில் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டிருப்பதையும், மற்ற எந்த உலக சன்மானங்களைப் பற்றியோ, உலக தேவைகளைப்பற்றியோ கவலைப்படாமல் ஜீவிப்பதையும், ஞான காரியங்களுக்காக மற்ற எல்லாவற்றையும் துறந்தவர்களாக வாழ்வதையும் உன்னித்துக் கவனித்து வந்தார். அவர்களுடைய இந்த உன்னதமான துறவற ஜீவிய அந்தஸ்தின் வசீகரத்தால் கவர்ந்திழுக்கப்பட்டவராக ,இக்குருவானவர், பக்திபற்றுதலின் துாண்டுதலால், அர்ச். சாமிநாதருடைய துறவறஜீவியத்தை தம்மால் முடிந்தவரை பின்பற்ற ஆவல் கொண்டார். 

இப்பரிசுத்த ஆவலின் பிரகாரம், அவர், எல்லாவற்றையும் முழுவதுமாகத் துறந்து விட்டு, அர்ச். சாமிநாதசபைத் துறவிகளுடைய ஜீவியத்தைப் பின்பற்ற விரும்பினார். ஆனால், அந்த போதகதுறவியருடைய ஜீவியத்திற்குள் உட்படுவதற்கு புதிய ஏற்பாடு மிக அவசியமாகத் தேவை என்றும், சுவிசேஷத்தின் இந்நுால் தனக்குக் கிடைக்குமானால், தான் நிச்சயமாக எல்லாவற்றையும் துறந்து விட்டு சாமிநாத சபைக்குள் உட்படுவதாக நினைத்திருந்தார். இவ்வாறு அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் தன் அங்கியினுள் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதை விற்பதற்காக அவரிடம் வந்தான். அவன் கொண்டு வந்த புத்தகம் சுவிசேஷத்தின் புதிய ஏற்பாட்டு நுால்எ ன்றறிந்ததும், குருவானவர் ஆச்சரியத்துடனும் அகமகிழ்வுடனும் உடனே , சுவிசேஷ புத்தகத்தை அவனிடம் வாங்கினார். ஆனால், சுவிசேஷத்தை வாங்கிய பிறகு, "நான் இச்சபையில் உட்படுவது சர்வேசுரனின் சித்தம் தானா? இதில் உண்மையில் ஆண்டவர் மகிழ்வாரா?'' என்றெல்லாம் அக்குருவானவர் சோதனையான நினைவுகளுக்கு உட்பட்டார். இவ்வாறு பல நினைவுகள் மாறி மாறித் தோன்றி அவரைக் குழப்பிக் கொண்டிருந்த போது, இக்காரியத்தில் சர்வேசுரனுடைய பதிலை, சுவிசேஷத்திலேயே பார்க்க வேண்டும் என்று எண்ணிய அவர், ஒரு சிறு ஜெபத்தை பக்தியுடன் ஜெபித்த பிறகு, சுவிசேஷத்தை மூடினார். பிறகு, புத்தகத்தின் மீது, சர்வேசுரனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே, சிலுவை அடையாளத்தை வரைந்தார். அதன்பிறகு, சுவிசேஷத்தைத் திறந்து முதன்முதலாக வந்த பக்கத்தைத் திறந்து படித்தார். கொர்னேலியுஸ் மூன்று பேரை அர்ச். இராயப்பரிடம் அனுப்பியபோது, இஸ்பிரீத்துவானவர், அவரிடம், "நீ எழுந்து புறப்பட்டுச் சற்றேனும் ஐயப்படாமல் அவர்களுடனே கூடப்போ' ஏனெனில் நாமே அவர்களை அனுப்பினோம்" என்று கூறிய பகுதியை வாசித்தார். சுவிசேஷத்தின் இப்பகுதியை வாசித்தவுடன், தாம் அர்ச். சாமிநாதரைப் பின்பற்றுவதே சர்வேசுரனின் சித்தம் என்பதை உறுதி செய்தவராக, உடனே உலகத்தை முழுதும் துறந்து விட்டு, சாமிநாத சபைத் துறவற சகோதரர்களைப் பின்பற்றி, அச்சபையில் உட்பட்டார்.

மற்றொரு சமயம், பொலோஞாவில் அர்ச்சாமிநாதசபைத் துறவற மடத்தில் சகோதரர்களின் எண்ணிக்கைமிக அதிக அளவாக உயர்ந்தபோது, திருச்சபையின் தலைமையகத்திலிருந்து , பாப்பரசரின் துாதுவராக வந். கொன்ராட் என்ற பார்த்தோ நகர மேற்றிராணியார் பொலோஞாவிற்கு வந்திருந்தார். அப்போது, சாமிநாதசபைத் துறவிகள், இவரை மிகுந்த மரியாதையுடனும், நேசத்துடனும் வரவேற்று தங்களுடைய மடத்தில் தங்க வைத்து உபசரித்தனர். ஆனால், இந்த மேற்றிராணியார், புதிதாக துவங்கிய இச்சபையைப் பற்றிய தவறான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டார். எக்காரணத்தினால், இம்மாதிரியான , வழக்கத்தில் இல்லாத , புதிய, துறவற சபை துவங்கப்பட வேண்டும் ? இச்சபையினால் எவ்வித ஞான நன்மைகள் திருச்சபைக்கு கிடைக்கும்? இச்சபை மனிதரிடமிருந்து உருவானதா? அல்லது சர்வேசுரனிடமிருந்து தோன்றிய துறவற சபையா? என்றெல்லாம் நினைத்துக் குழப்பமடைந்திருந்தார். இத்தகைய குழப்பத்துடன் தேவாலயத்திற்குள் சென்றார். அங்கு அச்சபையின் சகோதரர்கள் இவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஒரு விசேஷ இருக்கைக்குச் சென்றபோது, ஒரு புத்தகத்தைக் கொண்டு வரும்படிக் கேட்டார். அவர்கள் அவரிடம் திவ்ய பூசைப் புத்தகத்தைக் கொடுத்தனர். அதன்மேல் சிலுவை அடையாளத்தை வரைந்து விட்டு பூசைப்புத்தகத்தைத் திறந்தார். 

முதல் பக்கத்தின் தலைப்பில், ”Laudare, benedicere et nraedicare ஜூபுகழ், போற்று, பிரசங்கம் செய்”ஸ என்ற பகுதியை கண்டார். உடனே இச்சபையின் போதக அலுவலை பரலோகமே அங்கீகரித்துள்ளது என்பதற்கான பதில் இதுவே என்று கண்டுணர்ந்தார். தன் இருதயத்தில் இருந்த இச்சபையைப் பற்றிய ஐயப்பாடுகளையெல்லாம் அகற்றினார். அவரும் இச்சபையின் உன்னதமான துறவறஜீவியமுறையினால் பெரிதும் ஈர்க்கப்ட்டவராக, அச்சபைச் சகோதரர்களை அன்புடன் அழைத்து, "நான் வெளியே, எனது அந்தஸ்திற்கான வேறு உடையை அணிந்திருந்தபோதிலும், எனது ஆத்துமமானது உள்ளரங்கத்தில், உங்களுடைய சபையின் துறவற உடுப்பையே அணிந்துள்ளது. நான் முழுவதும் உங்களுக்கேச் சொந்தமானவன் என்று நிச்சயத்திருங்கள். உங்களுடைய சபையைச் சேர்ந்தவன். நான் என் என்னை எல்லாநேசத்துடன் உங்களுக்கே கையளிக்கிறேன்" என்று கூறினார்.