Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Anthony லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anthony லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2022

St. Anthony Devotion (Day 18) in Tamil

 பதினெட்டாம் நாள்


வெங்காயத்தின் புதுமை


அர்ச். அந்தோனியார் சபையின் ஒழுங்குப் பிரகாரம் வயல்களின் லீலிப் புஷ்பங்களை உடுத்தி வானத்தின் பறவைகளைப் போஷித்து வரும் வல்லமை பொருந்திய சர்வேசுரனுடைய கிருபைகடாக்ஷத்தையே தம்முடைய மடத்துச் சவரக்ஷணைக்காக எப்போதும் நம்பியிருப்பார். அநேகாநேக சமயங்களில் மடத்தில் ஒன்றுமில்லாமலிருப்பதும் உண்டு. அப்படியே சாப்பாட்டுக்கு ஒன்றும் அகப்படாத ஒருநாள், அர்ச். அந்தோனியார் ஒரு பக்தியுள்ள ஸ்திரீயிடம் சொல்லி அவளுடைய தோட்டத்திலிருந்து ஏதாவதது மரக்கறி பதார்த்தங்கள் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அந்தப் புண்ணியவதி உடனே தன்னுடைய வேலைக்காரியை அழைத்துத் தோட்டத்தில் காய் வகைகள் பறித்து மடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்று கட்டளை மிட்டாள். ஆனால் அச்சமயம் அசாத்தியமான மழை விடாமற் பெய்துகொண்டிருந்ததால் வேலைக்காரி சாக்குப் போக்குச் சொன்னபோது, அவசியம் கொண்டுபோகத்தான் வேண்டுமென்று எசமானி திரும்பவும் கட்டளையிட்டதால், வேலைக்காரி ஒரு பெருங் கொத்து வெங்காயமும், கிழங்கும், காய்களும் பறித்துத் தொலைவிலிருந்த மடத்துக்கு எடுத்துப் போனாள். மழை ஓயாமற் பெய்து கொண்டிருந்தபோதிலும் ஒரு துளி தண்ணீர் முதலாய் அவள் மேற்படவில்லை, அவள் திரும்பி வந்தபோது நடந்த அற்புதத்தைத் தன் எசமானி யிடத்திற் சொல்ல இருவரும் சுவாமிக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணினார்கள். அந்தப் புண்ணிய வதியின் குமாரன் ஒரு மடத்துக்குச் சிரேஷ்டராயிருந்தவர், வெகு சந்தோஷத்தோடு இந்த அற்புதத்தைப்பற்றி அடிக்கடி பேசி வருவார்.

இந்த விசேஷத்தைப் பற்றித்தான், இந்தப் புதுமையை ஞாபகப்படுத்துவதற்காகத் தான், பிரிவ் பட்டணத்தில் ஆகஸ்டு மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்காயச் சந்தை வெகு வருஷ காலமாய்க் கூடி நடந்து வருகிறதென்று அநேகர் எண்ணுகிறார்கள். அர்ச்சியசிஷ்டவருடைய சரித்திரத்தை எழுதினவர் இந்தப் புதுமையைப் பேசும்போது வேலைக்காரர், வேலைக்காரிகள் தங்கள் எசமான்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தங்களுக்கு இடும் கட்டளைகளை நல்ல மனதோடு நிறைவேற்றினால் அவர்களுக்கு இவ்வுலகத் திலேயே சர்வேசுரன் வெகுமதி அளிப்பாரென்று எழுதி வைத்திருக்கிறார். இந்தக் காலத்திலோ, வேலைக்காரரும் பிள்ளைகளும் எசமான்கள் பெரியவர்கள் என்கிற எண்ணமில்லாமல் இருக்கிற காலமாயிருக்கின்றது. பரலோகத்தையும் பூவோகத்தையும் படைத்த சேசுநாதசுவாமியே கீழ்ப்படிடத்த நடந்தார். ஆனதால் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.

'காணாமற்போன பொருளைக் கண்டுபிடிக்கும்படி அர்த் அந்தோனியார் செய்கிறார்" என்பது எல்லோரும் அறிந்த காரியம். அவருக்கு இந்த வரம் எப்போது சுலாம் அளித்தாரென்றால், அவர் மடத்திலிருந்த ஒரு நவசந்தியாகி மடத்திலிருக்க மனதில்லாமல் அதை விட்டு இரகசியமா ஓடிப்போகும்போது அவர் எழுதி வைத்திருந்த பிரசங்ல பிரதிகளையும் திருடிக்கொண்டு போய்விட்டார் அந்தோனியார் அவர் ஓடிப்போனதைப்பற்றியும், மேலும் திருடினதைப் பற்றியும் கவலைப்பட்டு வேண்டிக்கொண்டார் திருடி ஓடிப்போகத் தந்திரம் பண்ணின பசாசே நவசந்நியாசியைக் கொன்றுபோடுவதாகப் பயமுறுத்தி திருடின பொருளோடு திரும்பவும் மடம் சேரக் கட்டாயப்படுத்தியதால் சந்நியாசி பயந்து மனஸ்தாபப்பட்டுத் திரும்பி வந்து அர்ச்சியசிஷ்டவருடைய பாதத்தில் விழுந்து தன்னை மடத்தினின்று தள்ளிவிடாதபடிக்கு அவரைக் கெஞ்சி மன்றாடினார். அக்காலமுதல் இக்காலம் வரைக்குங் காணாமற்போன பொருளைக் கண்டடைய அர்ச், அந்தோனியார் உதவி புரிந்து வருகிறார். 13-ம் சிங்கராயர் என்னும் அர்ச். பாப்பானவர் அர்ச். அந்தோனியார் பூலோக முழுமைக்கும் அர்ச்சியசிஷ்டவர் என்கிறார். மெய்யாகவே அந்தோனியார் எத்தேசங்களிலும் எந்தச் சாதி மனிதரிடத்திலேயும் தமது வல்லமையைக் காட்டிப் புதுமை செய்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் இவ்வுலகத்தில் எளியவர்களையும், தாய் தகப்பனற்ற பிள்ளைகளையும் சகலராலுங் கைவிடப்பட்டவர் களையும் விசேஷ விதமாய் நேசித்தவராதலால், இப்போதும் அவருடைய மன்றாட்டுகளைக் கேட்கும்  நாமும் விசேஷமான பிரகாரம் எளியவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், சகலராலும் கைவிடப்பட்டவர்களுக்கும் நல்ல மனதோடு நம்மாலான உதவி செய்யும்படி சித்தமாயிருக்கிறார். அப்படி நாம் செய்வோமேயானால் நாம் அவரைக் கேட்கும் அனுக்கிரகத்தைத் தவறாமல் கட்டளையிடுகிறார். ஆனதால் நாம் அவருடைய சலுகையைத் தேடி நமது இரட்சணியத்துக்கும் அர்ச்சியசிஷ்டத்தனத்துக்கும் அவசியமான வரங்களை அவரிடத்தில் கேட்கக்கடவோம்.


செபம்

கவலைப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிற அர்ச். அந்தோனியாரே, என்னைச் சுற்றிலும் வருத்தும் இக்கட்டுகளைப் பார்த்து என்னை இரக்ஷித்தருளும். அவைகளை நான் நல்ல மனதோடு சகிக்கும் கிருபை செய்யும். என் ஆபத்துக்களில் என்னை ஒருபோதும் கைவிடாமல் காப்பாற்றும். நாங்கள் எங்கள் கவலை துன்பங்களில் சுவாமிக்குப் பிரமாணிக்கமாயிருந்து நித்திய மோக்ஷானந்த ஆறுதலுக்குப் பாத்திரவான்களாகும்படி எங்களுக்காக மன்றாடியருளும். ஆமென்.


நற்கிரியை: ஒரு எளியவனுக்குச் சாப்பாடு போடுகிறது. 

மனவல்லயச் செபம்: கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.