Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 22 பிப்ரவரி, 2025

சப்தரிகை ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கம்: இரட்சணியத்தினுடைய முக்கியத்துவத்தின் பேரில்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

சப்தரிகை ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கம்: 

இரட்சணியத்தினுடைய முக்கியத்துவத்தின் பேரில்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் 

அவன் அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப் பினான் (மத்20:2) நம் ஆத்துமங்கள், ஆண்டவருடைய திராட்சைத் தோட்டங் களாக இருக்கின்றன! நம் நல்ல அலுவல்களால், அவற்றை வளப்படுத்தி செழுமையாக்கவும், அதனால், நித்திய மகிமையினுள் நாம் அனுமதிக்கப்படுவதற்காகவும், ஆண்டவர் நமக்கு திராட் சைத் தோட்டங்களாகிய ஆத்துமங்களை அளித்திருக்கிறார். இது எப்படி நிகழ்கிறது? ஒரு கிறீஸ்துவன் விசுவசிக்கிறான்! இருப்பி னும், எதிர்காலத்தைப் பற்றி, அவன் பயப்படாமல் இருக்கிறான்! இது எப் படி நிகழ்கிறது, என்று ஸ்லாவியன் என்பவர் ஆச்சரியத்துடன் கூறுகின்றார். அதாவது, கிறீஸ்துவர்கள், மரணம், தீர்வை, நரகம், மோட்சம் என்ற நான்கு இறுதிக்கதிகளை விசுவசிக்கின்றனர்; ஆனால், இந்த வேத சத்தியங்கள் எல் லாம், மனித அறிவினால், புனையப்பட்ட கட்டுக் கதைகள் என்பதை ஏற்று, இந்த வேத சத்தியங்களை நம்பாதவர்கள் போல் ஜீவிக்கின்றனர்! ஒருபோதும் சாக மாட்டோம் என்பதுபோலவே அநேகர் ஜீவிக்கின்றனர். அல்லது, நரகமோ, மோட்சமோ, எதுவும் இல்லை என்பது போலவும், உலக ஜீவியத்தின் முடிவில், சர்வேசுரனுக்கு, தங்கள் ஜீவியத்தினுடைய கணக்கை ஒப்படைக்கத் தேவையில்லை என்பது போலவும் அநேகக் கிறீஸ்துவர்கள் உலகத்தில் ஜீவித்து வருகின்றனர்! ஒருவேளை அவர்கள், இந்த வேத சத்தியங்களை விசுவசியாமலிருக்கிறார்களா? இல்லை! அவர்கள், விசுவசிக்கின்றனர்! ஆனால், அவற்றைப் பற்றி தியானிப்பதில்லை! இவ்வித மாகவே அவர்கள் நித்தியத்திற்குமாக இழக்கப்படுகின்றனர்! உலகக் காரி யங்கள் பற்றி தங்களால் கூடிய சகல கவனத்தையும், செலுத்துகின்றனர். ஆனால், அதே சமயம், அவர்களுடைய ஆத்துமங்களின் இரட்சணியத்தின் மீது எந்த கவனத்தையும் அக்கறையையும் கொண்டிருக்க மாட்டார்கள். உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாயிருக்கிறது என்பதை, இன்று, நான், உங்களுக்குக் காண்பிப்பேன். முதல் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஆத்து மம் இழக்கப்பட்டால், சகலமும் இழக்கப்பட்டுவிடும்! இரண்டாம் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஒரு முறை ஆத்துமம் இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப் பட்டு விடும். முதல் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஆத்து மம் இழக்கப்பட்டால், சகலமும் இழக்கப்பட்டுவிடும்! 1.ஆனால், நாங்கள், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் (1 தெச 4:10-11) என்று அப்போஸ்தலரானஅர்ச்.சின்னப்பர் அறிவுரை கூறுகின்றார். பெரும்பான்மையான உலக நேசர்கள், உலகத்தைச் சார்ந்த அலுவல்க ளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டிருப்பார்கள்; எத்தகைய தளரா ஊக் கத்துடன் நீதி மன்ற வழக்கில், வெற்றியடையவோ அல்லது, நல்ல சம்பளத் தையுடைய வேலையைப் பெறவோ, அயராமல் அவர்கள் உழைப்பார்கள்!
அதற்காக எத்தனை வழிமுறைகளுக்குள் தங்களையே உட்படுத்திக் கொள் வார்கள்? அல்லது, எத்தனை விதிமுறைகளை அனுசரிப்பார்கள்? அவர்கள் சாப்பிடவும் மாட்டார்கள்! தூங்கவும் மாட்டார்கள்! ஆனால், அவர்களுடைய ஆத்துமங்களைக் காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் எடுப்பார்கள்? அவர்களுடைய குடும்ப காரியங்களில் அலட்சிய மாக இருந்து, கவனக்குறைவாக இருப்பதைப் பற்றி கூறும்போது, எல்லோ ரும் வெட்கப் படுவார்கள்.ஆனால், அவர்களுடைய ஆன்ம இரட்சணியத் தின் மட்டில் அலட்சியமாக கவனக்குறைவாக இருப்பதைப் பற்றிக் கூறும் போது, எவ்வாறு வெகு சிலரே வெட்கப்படுகின்றனர்? சகோதரரே! உங்கள் சொந்த அலுவல்களைப்பார்த்துக்கொள்ளுங்கள், என்று கூறும்போது, அர்ச்.சின்னப்பர், உங்களுடைய நித்திய இரட்சணியத் தினுடைய அலுவல்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதைப் பற்றியே, வலியுறுத்தி அறிவுறுத்துகின்றார். 2.சிறுவர்களுடைய அற்பக் காரியங்கள், அற்பக் காரியங்கள் என்று அழைக் கப்படுகின்றன.ஆனால், பெரியவர்களான மனிதர்களின் அற்பக்காரியங்கள் அவர்களுடைய அலுவல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அற்பக்காரியங் களான இவ்வலுவல்களின் நிமித்தமாக எவ்வளவு அநேக மனிதர்கள்,அவர் களுடைய ஆத்துமங்களை நித்தியத்திற்குமாக இழந்துபோயிருக்கின்றனர்! என்று அர்ச்.பெர்னார்டு கூறுகின்றார். ஒரு உலக பரிவர்த்தனையில்,உனக்கு இழப்பு ஏற்படுமாகில், மற்றொரு உலக பரிவர்த்தனையின் மூலமாக இந்த இழப்பை நீ ஈடு செய்வாய்.ஆனால், நீ சர்வேசுரனுடன் பகைமையில், இறந்து, உன் ஆத்துமத்தை நித்தியத்திற்குமாக இழக்க நேரிட்டால், இந்த மாபெரும் இழப்பை, உன்னால் எவ்வாறு ஈடு செய்யக்கூடும்? அவன் தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்று,நம தாண்டவர் தாமே அறிவுறுத்துவதை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இரட்சணியத்தின் மட்டில் விழிப்புடன் கவனமாயிருப்பதில் அலட்சி யம் செய்கிறவர்களைப் பார்த்து, அர்ச்.யுத்தேரியுஸ், உன்னை சிருஷ்டித்த திவ்ய கர்த்தரை விசுவசியமாலிருக்கும் மனிதனே! உன்னை எவ்வளவு விலைமதிப்புள்ளவனாக அவர் சிருஷ்டித்திருக்கிறார், என்பதை நீ அறிய மாட்டாயா? என்று திவ்ய இரட்சகர் உன்னிடம் கேட்கின்றார், என்று கூறு வார்.சர்வேசுரனுடைய சொந்த சாயலாகவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற நீ, உன் ஆத்துமத்தினுடைய விலைமதியா மதிப்பை புரிந்து கொள்ளவில்லை என்றால், உன்னைத் தமது சொந்த விலைமதியாத திவ்ய திரு இரத்தத்தி னால் மீட்டு இரட்சித்த நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதர்சுவாமி யிடமிருந்து அதைக் கற்றுக்கொள். அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியினாலும்,நீங்கள் இரட்சிக்கப் படாமல், மாசுமருவற்ற ஆட்டுக்குட்டிக்கொப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் (1 இரா 1:18,19) என்று அர்ச்.இராயப்பர் பிரசங்கிக்கின்றார். 3.அப்படியென்றால், சர்வேசுரன், உன் ஆத்துமத்திற்கு, அவ்வளவு மகா பெரிய விலைமதிப்பை நிர்ணயம் செய்திருக்கிறார்.அது, அவ்வளவு அதிக விலைமதிப்புள்ளதாயிருக்கிறதால் தான், அதைக் கைப்பற்றி தனது ஆதிக்கத் திற்குள் கொண்டு வந்து, தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக., பசாசு, இரவு பகலாக துாங்காமல், இடைவிடாமல் அலைந்து திரிந்து, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஆகவே தான், உன் சத்துரு உறங்குகிறதில்லை! நீ யோ உறங்கிக்கொண்டிருக்கிறாய்! என்று அர்ச்.அகுஸ்தீனார், ஆச்சரியத்து டன் கூக்குரலிடுகின்றார். உன் சத்துரு எப்போதும் உன்னைக் காயப்படுத் துவதற்காக, தூங்காமல் விழித்திருக்கிறான்; நீயோ சோம்பலாய் அசமந்த மாய் இருக்கிறாய்! ஒரு சமயம், 12ம் பெனடிக்ட் பாப்பரசரிடம், ஒரு இளவரசன் ஒரு உதவியை, தூதுவர் மூலமாகக் கேட்டபோது, பாப்பரசர், தூதுவரிடம், இளவரசரிடம் நான் கூறுவதைக் கூறுங்கள்: என்னிடம் இரண்டு ஆத்துமங் கள் இருக்குமாயின், ஒரு ஆத்துமத்தை இழந்து, இளவரசர் கேட்பதைக் கொடுப்பதன் மூலமாக நான் அவரை மகிழவைக்கக் கூடும்.ஆனால், என்னி டம் ஒரு ஆத்துமம் மட்டுமே இருக்கிறபடியால், அதை இழக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்! என்று, இளவரசருக்கு உதவக்கூடாமலி ருப்பதற்கான காரணத்தை விளக்கிக் கூறி, தூதுவரை அனுப்பிவைத்தார்; இவ்விதமாக பாப்பரசர், இளவரசர் கேட்ட உதவியை செய்ய மறுத்தார்.




4.சகோதரரே! நீங்கள் உங்கள் ஆத்துமங்களைக் காப்பாற்றினால், உங்கள் உலகக் காரியம் ஒவ்வொன்றிலும் அடையக்கூடிய தோல்விகள், மிக அற்ப மான காரியமாக இருக்கும்;ஏனெனில், நீங்கள் இரட்சணியத்தை அடைந் தால், முழுமையான பேரின்ப சந்தோஷத்தை முடிவில்லாமல் நித்தியத்திற் குமாக மோட்சத்தில், அனுபவிப்பீர்கள். ஆனால், உங்கள் ஆத்துமங்களை இழந்துபோனால், இந்த உலகத்தினுடைய சகல செல்வங்கள், மகிமைகள், கேளிக்கைகள் ஆகியவற்றினால், உங்களுக்கு என்ன பயன்? உங்கள் ஆன் மாக்களை நீங்கள் இழந்து போனால்,சகலமும் உங்களுக்கு இழக்கப்பட்டு விடும்! மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும்,தன் ஆத்து மம் சேதப்பட்டால்,அவனுக்குப் பிரயோசனமென்ன?(மத் 16:26) என்று நமதாண்டவர் தாமே,நம்மை எச்சரிக்கிறதை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் கூறிய இப்பொன்மொழியினால், அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார், அநேகருடைய ஆத்துமங்களை, சர்வேசுரனிடம் கொண்டு வந்தார். அத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர், அர்ச்.பிரான்சிஸ் சவேரி யார். இவர் அச்சமயம், பாரீஸ் நகரில் உலக நன்மைகளை ஈட்டும்படியாக உழைப்பதில் தன்னையே அர்ப்பணித்திருந்தார். ஒருநாள், அர்ச். இஞ்ஞாசி யார், இவரிடம், பிரான்சிஸ்!நீர் யாருக்கு ஊழியம் செய்கிறீர்?உலகத்திற்கு ஊழியம் செய்கிறீரா? அது ஒரு துரோகி! அது செய்வதாக வாக்களிக்கும்! ஆனால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாது! அப்படியே,அதுஅவற்றை யெல்லாம் நிறைவேற்றினாலும், அதனுடைய பொருட்கள் எல்லாம் எவ்வ ளவு காலம் நீடித்திருக்கும்? அவையெல்லாம், இந்த உலக ஜீவியத்தை விட அதிகமாகக் கடந்து நீடித்திருக்குமா? இறந்தபிறகு, நீர் உமது ஆத்துமத்தை இழந்துபோயிருந்தால், அவற்றினால் உமக்கு என்ன பிரயோசனம் உண் டாகும்? என்று கேட்டார். பின்னர், அர்ச்.இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரி யாரிடம், சுவிசேஷ பொன்மொழி வாக்கியங்களை நினைவுபடுத்தினார்: மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால்,அவனுக்குப் பிரயோசனமென்ன? ஒரு காரியம் தான் அவ சியம்! (லூக் 10:42)ஆகிய சுவிசேஷ வாக்கியங்களை அடிக்கடி நினைவுபடுத் திக் கொண்டிருப்பார்.


இந்த உலகத்தில், மகிமை பெருமை கண்ணியங்களைப்பெற்றுபெரிய செல்வந்தனாக ஆக வேண்டுமென்பது அவசியமல்ல! நாம் நம் ஆத்துமங்க ளை இரட்சிப்பதே அவசியமான காரியம். ஏனெனில், நாம் மோட்சத்தை அடையவில்லையெனில்,நரகத்திற்கு நாம் தீர்ப்பிடப்படுவோம்.இரண்டிற் கும் இடைபட்ட நிலைமை எதுவும் இல்லை. ஒன்றில் நாம் இரட்சிக்கப்படு வோம்; அல்லது, நித்தியக் கேட்டிற்குத் தீர்ப்பிடப்படுவோம். சர்வேசுரன் நம்மை இந்த உலகத்திற்காக சிருஷ்டிக்கவில்லை. நாம் உலகத்தில் செல்வந் தர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கேளிக்கைகளை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவோ, சர்வேசுரன் நம் உயிரைப் பாது காக்கவில்லை! இப்பொழுதோ, பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டுச் சர்வேசுர னுக்கு அடிமைகளானதினாலே, உங்களுக்குப் பலனாகப் பரிசுத்தத்தனமும், முடிவாக நித்திய ஜீவியமும் கிடைக்கின்றது!(உரோ 6:22) என்று, இக்கருத் தைப் பற்றியே,அர்ச்.சின்னப்பர் நமக்கு உபதேசிக்கின்றார். நாம் நித்திய மோட்ச மகிமையை அடைவதற்காகவே, சர்வேசுரன் நம்மை சிருஷ்டித்து நம்மைப் பாதுகாத்து வருகிறார். 5.சகல காரியங்களுக்கும் மேலாக, தன் ஆத்துமத்தினுடைய இரட்சணியத் தைத் தேடாதவன், ஒரு முட்டாள், என்று கூறுவதை அர்ச்.பிலிப் நேரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வுலகில் அழியக்கூடியவர்கள் மற்றும் அழியக்கூடாதவர்கள் என்கிற இருவிதமான மனிதர்கள் இருந்தார்கள் என்று கற்பனை செய்து பார்ப்போம்; அழியக்கூடாதவர்கள் முழுமையாக உலக ஆஸ்திகளை சேர்த்து வைப்பதிலேயே அர்ப்பணித்து வாழ்வதை, அழியக்கூடிய மனிதர்கள் காண்பார்களேயாகில், அவர்கள்,அழியக்கூடாத மனிதர்களைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள்? நித்திய நன்மைகளை மோட்சத்தில் சேர்த்து வைப்பதற்கான வல்லமையை நீங்கள் கொண்டிருக்கிற போதிலும், மரணத்துடன் அழிந்துபோகக்கூடிய உலக பொருட்களை சேகரிப்பதிலேயே உங்கள் ஜீவிய காலத்தை வீணில் செலவிடுகிறீர்களே! இவ்வுலகப் பொருட்கள் காரணமாகவே, நீங்கள் நித்தி ய நரக உபத்திரவங்களை அடையக்கூடிய அபாயத்தில் உங்களையே நிறுத்தியிருக்கிறீர்களே! ஆதலால், இந்த மரணத்துடன் முடிந்து விடக்கூடிய இவ்வுலகப்பொருட்களை கவனிக்கும் அலுவலை எங்களிடம் விட்டுவிடுங் கள்! எங்களுக்கு எல்லாம் இந்த மரணத்துடன் முடிந்து விடும்!என்று கூறுவ ார்கள். ஆனால், சகோதரரே!நாம் எல்லோரும் அழியக்கூடாதவர்கள்.நாம் ஒவ்வொருவரும் மறுவுலகத்தில், ஒன்றில்,நித்தியத்திற்கும் பேரின்ப பாக்கிய சந்தோஷத்தை அடைவோம்; அல்லது, நித்திய நரக உபாதையைஅனுபவிப் போம். ஆனால், பெரும்பான்மையான மனுக்குலத்தினரின் துர்ப்பாக்கிய மான நிலைமை என்னவெனில், அவர்கள்,தற்கால ஜீவியத்தின் மேல் எப் போதும் அதிக ஆர்வமுள்ளவர்களாகவே இருப்பதும், எதிர் காலத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை என்பதும் தான்.ஆ! அவர்கள் ஞானத் தை அடைவது எப்போதோ?அவர்களுக்குஎப்போதோ அறிவு உண்டாகும்? தங்களுக்கு என்ன கதி வரப்போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன? (உபா 32:29) என்று உபாகமத்தில், இதற்கான அறிவுரையை வாசிக்கிறோம். ஓ! அற்ப நேரமே நீடிக்கிற தற்கால உலக நன்மைகளிலிருந்து, தங்க ளையே எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதையும், மோட்சப் பேரின்ப மகிமையை அடைவதற்கும், நித்திய நரகத்தில் பசாசின் அடிமையாக விழா மல் தப்பிப்பதற்கும், எதை அவசியமாகக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! ஒரு சமயம், அர்ச்.பிலிப் நேரியார், பிரான்சிஸ் சாஸ்ஸெரா என்ற ஒரு இளைஞனிடம் உரையாடிக்கொண்டிருந்தார்; அவன் மிகத் திறமைசாலி யாயிருந்தான்; உலக மகிமையை அடையக்கூடியவன் என்று எல்லோரா லும் எதிர்பார்க்கப்பட்டவன்.அர்ச்சிஷ்டவர், அவனிடம், நீ பெரும் பாக்கி யமான நிலைமையை அடைவாய். நீ ஒரு மேற்றிராணியாராகவும், பின்னர் கர்தினாலாகவும் ஆகக்கூடும். முடிவில், நீ ஒரு பாப்பரசராகவே கூட ஆக லாம். ஆனால், அதன் பின் கட்டாயமாக என்ன வரும்? கட்டாயமாக வர வேண்டியது என்ன? இப்பொழுது, மகனே! போ! இந்த வார்த்தைகள் பற்றி சிந்தனை செய்! என்று கூறி அனுப்பி வைத்தார். கடைசியாகக் கட்டாயமாக என்ன வரவேண்டியிருக்கிறது? என்பதன் பேரில் தியானித்த பிறகு, அந்த இளைஞன், உலகத்தையும், தன் ஆஸ்திகளையும் துறந்து, தன்னையே முழுமையாக சர்வேசுரனுக்கு அர்ப்பணித்தான். அர்ச்.பிலிப் நேரியாரின் குருக்களுக்கான ஜெபக்கூடத்தின் துறவறசபையில் சேர்ந்து, பரிசுத்தமாய் மரித்தான். 6.இவ்வுலகத்தின் கோலம் மாயமாய்ப் போனது (1கொரி 7:31) என்று அர்ச். சின்னப்பர் போதிக்கின்றார். இப்பகுதியைப் பின்பற்றியே, கொர்னேலியுஸ் என்பவர், இந்த உலகமானது, நாடக மேடையாக இருக்கிறது என்கிறார். தற்கால ஜீவியமானது, கடந்துபோகும் ஒரு நாடகமாக இருக்கிறது. இந்த உலக ஜீவியமான நாடகத்தில் தன் ஆத்துமத்தைக் காப்பாற்றிக் கொள்வதன் மூலம், ஒருவன், தன் பாகத்தை நன்கு நடிக்கிறான்.ஆனால், அவன் உலக செல்வங்களை,மகிமைகளை சேகரிப்பதிலேயே தன் ஜீவியத்தை செலவிடு வானால், அவன் முட்டாள் என்று அழைக்கப்படுவான். மேலும், அவன் மர ணநேரத்தில், சுவிசேஷத்தில், பணக்காரனைப் பார்த்து, சர்வேசுரன், மூட னே! இந்தஇராத்திரியில் தானே,அவர்கள், உன் உயிரை உன்னிடத்தின்று வாங்குவார்களே!அப்போது நீ தேடினவைகள் யாருடையனவாகும்? (லூக் 12:20)என்று கூறுவதுபோல், இவனையும் பார்த்துக் கடிந்துகொள்வார். அவர்கள் உன் உயிரை வாங்குவார்கள், என்கிற வாக்கியத்தைப் பற்றி தொலேதுஸ் என்பவர், பின்வருமாறு விவரிக்கின்றார்: ஆண்டவர் நமக்கு ஆத்துமங்களை அளித்திருக்கிறார்; நாம் ஞான சத்துருக்களின் தாக்குதல் களிலிருந்து, நம் ஆன்மாக்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற் காகவே, சர்வேசுரன் நமக்கு ஆன்மாக்களை அளித்திருக்கிறார். ஆகவேதான், நம் மரண சமயத்தில், அந்த உயிரை வாங்க அல்லது, ஆத்துமத்தை வாங்க சம்மனசானவர் நம்மிடம் வருவார். பின்பு, அவர் நம் ஆத்துமங்களை திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் நீதியாசனத்திற்கு முன்பாக சமர்ப்பிப்பார். ஆனால், நாம் உலக ஆஸ்திகளை சம்பாதிப்பதிலேயே, கருத்தாயிருந்து நம் ஆத்துமங்களை இழந்தோமாகில், இந்த உலக ஆஸ்திகளும் இனி நமக்கு சொந்தமில்லாமல், மற்றவர்களுக்குச் சொந்தமாகிவிடும்; அதே சமயம், நம் ஆத்துமங்களுக்கு அப்போது என்ன நேரிடும்?
7.பரிதாபத்திற்குரிய உலக நேசர்கள்! அவர்கள் சேர்த்து வைத்தத் திரளான உலக செல்வங்கள், இந்த ஜீவியத்தில் அவர்கள் காண்பித்த வீண் ஆடம்பரம் ஆகியவற்றினுள், அவர்கள் மரிக்கும்போது, எதைக் கண்டடைவார்கள்? அவர்கள் நித்திரை கொண்டார்கள்; இந்த ஆஸ்திக்காரர்களுடைய கையில் ஒன்றும் அகப்படவில்லை (சங்.75:6) என்று சங்கீதத்தில் வாசிக்கிறோம். இவ்விதமாக தற்கால ஜீவியத்தினுடைய கனவானது, மரணத்துடன் முடிவடையும். அப்போது, அவர்கள், நித்தியத்திற்காக ஒன்றையும் சேகரித் திருக்க மாட்டார்கள். இந்த உலகத்தினுடைய மாபெரும் மனிதர்களாக அபரிமிதமான செல்வசெழிப்பின் மத்தியிலும், மகிமைகள், இன்பங்கள் மத் தியிலும் ஜீவித்து, மரித்தபிறகு, இப்போது, நரகத்திலிருக்கும் அநேக அரசர் கள், சக்கரவர்த்திகளிடம்,அவர்கள், உலகத்தில் வைத்திருந்த அந்த செல்வங் கள், மகிமைகள், இன்பங்கள் எல்லாம் இப்போது என்னவாயின? என்று கேளுங்கள்! அதற்கு,அவர்கள், ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! என்று கண் ணீருடன் பதில் கூறுவார்கள்! அவற்றில் எஞ்சியனவாக ஏதாவது இருக்கின் றனவா? என்று கேளுங்கள். அதற்கு அவர்கள், ஒன்றுமில்லை! ஒன்றுமில் லை! என்று கூக்குரலிட்டு ஊளையிடுவார்கள்! 8.இதைப் பற்றிதான் அர்ச்.பிரான்சிஸ் சவேரியார், இந்த உலகத்தில் ஒரே ஒரு நன்மையும், ஒரே ஒரு தின்மையும் உண்டு என்று கூறுகின்றார்:அந்த ஒரே ஒரு நன்மை, நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்வதிலும், அந்த ஒரே ஒரு தின்மை, நம் ஆத்துமங்களை இழப்பதிலும் அடங்கியிருக்கிறது! ஆகவே தான், நான் ஆண்டவருடைய வீட்டில், என் ஜீவிய காலம் முழுவதும் குடிகொண்டு, ஆண்டவருடைய ஆனந்தத்தைப் பார்த்து,அவர் ஆலயத்தில் அகமகிழ்வதாகிய இவ்வொரே காரியத்தை மாத்திரம், நான் ஆண்டவரிடத்தில் கேட்டேன் (சங்.26:4) என்று தாவீதரசர் கூறுவதை, சங் கீதத்தில் வாசிக்கிறோம். ஒரே காரியத்தை மட்டுமே நான் தேடினேன்.என் ஆத்துமத்தை இரட் சிப்பதற்கான தேவ வரப்பிரசாதத்தை எனக்கு சர்வேசுரன் அனுக்கிரகம் செய்யும்படியாக, அதையே நான் எப்போதும் என்றென்றைக்கும் தேடு வேன். ஏனெனில்,நான் என் ஆத்துமத்தைக் காப்பாற்றினால், எல்லாம் எனக்கு பாதுகாப்பாய் இருக்கும்.நான் அதை இழந்துபோனால், சகலத் தையும் நான் இழந்துபோவேன். இரண்டாம் தியானக்கருத்து: உங்கள் ஆத்துமங்களின் இரட்சணியமானது, எல்லா காரியங்களிலும் மகாமுக்கியமான காரியமாயிருக்கிறது. ஏனெனில், ஒரு முறை ஆத்துமம் இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப் பட்டு விடும். 9. மனிதர்கள் ஒரே முறை தான் மரிக்கின்றனர். ஒருவேளை ஒரு கிறீஸ்துவன் இரண்டு தடவை மரிப்பானேயாகில், முதல் தடவை, அவன் ஆத்துமத்தை இழந்துபோனாலும், இரண்டாவது தடவை அவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான். ஆனால் நம்மால் ஒரு தடவை தான், மரிக்க முடியும். முதல் தடவையாக ஆத்துமத்தை இழந்துபோனால்,அது நித்தியத்திற்குமாக இழக் கப்பட்டு விடும்! இந்த சத்தியத்தை தனது சகக் கன்னியர்களின் மனதில் பதியவைப்பதற்காக, அர்ச்.அவிலா தெரசம்மாள், ஒரே ஆத்துமம்! ஒரே நித்தியம்! என்று அடிக்கடி கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நமக்கு ஒரே ஒரு ஆத்துமம் இருக்கிறது.அது இழக்கப்பட்டால், எல்லாம் நமக்குஇழக்கப்பட்டதாகிவிடும்! நமக்கு ஒரே நித்தியம் உண்டு!ஆத்துமம் ஒரு தடவை இழக்கப்பட்டால், அது நித்தியத்திற்குமாக இழக்கப்பட்டு விடும், என்று அர்ச்.அவிலா தெரசம்மாள் கூறுவார்கள். 10.நித்திய இரட்சணியத்தின் மட்டில் கொண்டிருக்கிற அலட்சியத்தைப் போல், மாபெரும் தவறு வேறு எதுவுமில்லை, என்று அர்ச்.யுக்கேரியுஸ் கூறு கின்றார். இந்த தவறு மற்ற எல்லா தவறுகளையும் வெகுவாய்க் கடந்து, மகாபெரியதவறாக இருக்கிறது.ஏனெனில், இது பரிகரிக்க முடியாத தவறாக யிருக்கிறது. மற்ற தவறுகள் அல்லது பிழைகள், திருத்திக்கொள்ளக் கூடியன வாயிருக்கின்றன : ஒருவன் தன் ஆஸ்தியை, ஒரு வழியில் இழப்பானேயா கில், மற்றொரு வழியில், அதை அவன்வேறு விதமாக அடைந்து கொள்ள முடியும்.அவன், ஒரு சந்தர்ப்பத்தை, கண்ணியத்தை இழந்துபோனால், பின் னர்,அவற்றைமறுபடியும் அடையக்கூடும்.அவன் தன் உயிரை இழந்தாலும், ஆத்துமத்தை இழந்துபோகாத வரை, அவனுக்கு எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், ஆத்துமத்தை இழந்த ஒருவனுக்கு, அந்த இழப்பை ஈடு செய்யக்கூடிய வழிமுறை ஒன்றுமில்லை. அவர்களுக்கு இனி இரட்சணி யத்தினுடைய காலம் இல்லை! இரட்சணியத்தின் காலம் அவர்களுக்கு முடி வடைந்து விட்டது என்ற நினைவிலிருந்தும், அவர்களுடைய நித்திய கேட் டிலிருந்து அவர்களை விடுவிக்கக் கூடிய பரிகாரத்திற்கான வழிமுறையைப் பற்றிய நம்பிக்கை எதுவும் இல்லை என்கிற நினைவிலிருந்தும், நரகத்திலிருக் கும் நிர்ப்பாக்கிய பாவிகளின் அழுகுரலின் ஓலம், தோன்றி, இடைவிடாமல் அலறிக்கொண்டிருக்கிறது. முதுவேனிற்காலமும் கடந்தது. நாம் இன்னும் விடுதலையடையவில்லை (எரே 8:20)என்று அவர்களின் புலம்பலைப் பற்றி எரேமியாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார். ஆகையால்,நாமல்லோ சத்தியத்தின் மார்க்கத்தை விட்டகன்று திரிந் தோம்;நீதியின் ஒளி நமக்கல்லோ பிரகாசிக்கவில்லை. அறிவின் சூரியன் நமக்கல்லோ உதிக்கவில்லை (ஞான 5:6) என்று ஞானாகமத்தில் வாசிக்கிற தைப்போல, அவர்கள், நித்தியத்திற்குமாக ஆறுதல் இல்லாமல் புலம்பி அழுதுகொண்டிருப்பார்கள். ஆனால், இனி அவர்களால் அந்த தவற்றிற்கு பரிகாரம் செய்வதற்கான காலம் மிகவும் பிந்திவிட்ட நிலையில், அல்லது, முடிந்து விட்ட நிலைமையில், அவர்கள் செய்த தவறைப் பற்றி அறிவதால், அதனால் அவர்களுக்கு என்ன பயன்? 11.அவர்கள் ஆத்துமத்தை நித்தியத்திற்குமாக இழந்துபோனதைப் பற்றிய நினைவிலிருந்தும், அதுவும் அவர்களுடைய சொந்தக் குற்றத்தினாலேயே, ஆத்துமத்தை இழந்துபோனதைப் பற்றிய நினைவிலிருந்தும், தோன்றுகிற உபத்திரவத்தின் ஆக்கினையே, நித்தியக் கேட்டை அடைந்த நிர்ப்பாக்கிய பாவிகள் நரகத்தில் அனுபவிக்கிற ஆக்கினைகளிலேயே மகா பெரிய ஆக்கி னையாக இருக்கிறது! இஸ்ராயேலே! உன் சேதாரம் உன்னிடத்தியதே! நம்மிடத்தில் மாத்திரம் உனக்கு உதவி கிடைக்கும் (ஓசே 13:9) என்று சர்வேசுரன் தாமே, மனிதனிடம், அவனுடைய கேட்டிற்குக் காரணம் அவனுடைய சொந்த குற்றமே, என்று கூறுவதாக, ஓசே தீர்க்கதரிசி ஆகமத்தில் வாசிக்கிறோம்.
ஓ! பரிதாபத்திற்குரியவனே! உன் அழிவு உனக்குச் சொந்தமாயிருக்கிறது; அதாவது, உன்னாலேயே உனக்கு அந்த அழிவு வந்தது. நீ கட்டிக்கொண்ட பாவத்தினால், உன் நித்திய கேட்டிற்கு, நீயே காரணமாயிருக்கிறாய்!ஏனெ னில், நீ உன் இரட்சணியத்தின் மட்டில் கவனமாய் ஈடுபட நீ ஆசித்திருந் தால், நான் உன்னை இரட்சிப்பதற்குத் தயாராயிருந்தேன்! என்று சர்வேசு ரன் நித்தியக்கேட்டை அடைந்த நிர்ப்பாக்கிய பாவியிடம் கூறுகின்றார். ஒருவன், ஒரு அற்பப்பொருளை தன் சொந்தக் குற்றத்தினால், இழப்பானே யாகில், அதைக் குறித்து அவன் மனம் சஞ்சலமடைகிறது; அவனுடைய சமாதானம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஓ! திவ்ய கர்த்தரே!அப்படியென் றால்,தன் சொந்தக்குற்றத்தினாலேயே ஆத்துமத்தையும் சகலத்தையும் இழந் ததைப் பற்றிய நினைவுடன், நரகத்தினுள் நுழையும்போது நித்தியக் கேட் டை அடைந்த ஒவ்வொரு நிர்ப்பாக்கிய பாவியும் அனுபவிக்கிற உபத்திர வத்தின்ஆக்கினைஎவ்வளவு மகா பெரியதாயிருக்கும்! என்று, அர்ச்.அவிலா தெரசம்மாள், கன்னியாஸ்திரிகளுக்கு அறிவுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 12.அப்படியென்றால், நாம் இன்றுமுதல், கட்டாயமாக, நம் ஆத்துமங்களை இரட்சிப்பதற்கான அலுவலில் நம் எல்லா கவனத்தையும் கொண்டு ஈடுபட வேண்டும். ஏதோ ஒரு உலகப்பொருளை இழப்பதைப் பற்றி எந்த கேள்வி யுமில்லை. அதை என்றாவது ஒருநாள் இழக்க வேண்டியிருக்கும். ஆனால், மோட்சத்தையே இழப்பது என்பதும்,நித்தியத்திற்குமாக நரகத்தில் உபாதிக் கப்பட்டுத் துன்புறுவது என்பதும் மிகப்பெரிய கேள்விக்குரிய காரியமாகும்! நாம் கட்டாயமாக அஞ்சி நடுங்க வேண்டும். இவ்விதமாகவே நாம் நித்திய பேரின்ப மோட்ச சந்தோஷத்தை அடைந்துகொள்ளக் கூடும். அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள் (பிலிப் 2:12) என்று இதைப் பற்றியே அர்ச்.சின்னப்பர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.ஆக வே, நாம் நம் ஆத்துமங்களை இரட்சித்துக்கொள்வதற்கு ஆசிப்போமேயா னால், ஆத்துமத்திற்கு ஆபத்தான சந்தர்ப்பங்களை விலக்குவதிலும், சோத னைகளை எதிர்ப்பதிலும், தேவதிரவிய அனுமானங்களை அடிக்கடி பக்தி பற்றுதலுடன் பெற்றுக்கொள்வதிலும், அயராமல் மிகக் கடினமாக உழைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். உழைப்பு இல்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது. இதைப் பற்றியே நமதாண்டவர், ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரையில் பர லோக இராஜ்ஜியம் பலவந்தப்படுகின்றது; பலவந்தம் பண்ணுகிறவர்களே, அதைப் பறித்துக்கொள்கிறார்கள் (மத் 11:12) என்று கூறுகின்றார். அர்ச்சிஷ் டவர்கள், நித்தியத்தைப் பற்றிய நினைவின் மட்டில் அஞ்சி நடுங்கினார்கள். அர்ச்.அவெல்லினோ பெலவேந்திரர், நான் இரட்சணியமடைவேனா? அல் லது நித்தியக் கேட்டிற்குத் தீர்ப்பிடப்படுவேனா, யாருக்குத் தெரியும்? என்று கூறியபடி அழுதுகொண்டிருப்பார். அதேபோல், அர்ச்.லூயிஸ்பெட் ரான்டு என்பவர், மறுவுலகத்தில் என் கதி என்னவாயிருக்குமோ? என்று அஞ்சி நடுங்கியபடி கூறுவார். அப்படியென்றால், நாம் அஞ்சி நடுங்க வேண்டாமா? நமதாண்டவரி டமும்,அவருடைய மகா பரிசுத்த தாயாரிடமும், நாம் நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்வதில் நமக்கு உதவும்படியாக வேண்டிக் கொள்வோ மாக! இதுவே, நம் எல்லா காரியங்களிலும் மகா முக்கியமான காரியமாக இருக்கிறது: இதில் நாம் வெற்றியடைந்தால், நித்திய காலத்திற்கும் நாம் சந் தோஷமாயிருப்போம்! இதில் தோல்வியடைந்தால், நித்திய காலத்திற்கும் நாம் கட்டயாமாக கொடிய நரக ஆக்கினைக்கு உட்பட்டு துன்புற வேண் டும். ஓ! மகா பரிசுத்த தேவமாதாவே! என் மேல் இவ்வளவான சிநேகமும் இரக்கமும் உள்ள தேவரீரிடம், சோதனைவேளைகளில், நான் எப்போதும் உதவித் தேடி ஓடிவரத் தேவையான நல்ல மனதையும், ஆண்டவரை தின மும் அதிக அதிகமாக நேசிக்கவும், தேவரீர் பேரில் உத்தமமான பக்தியைக் கொண்டிருக்கவும் தேவையான தேவவரப்பிரசாதத்தை, அளித்தருளவும் வேண்டுமென்று, மன்றாடுகிறேன்.ஆமென். அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

February 21 - வேதசாட்சியான அர்ச்‌. பீட்டர்‌ மாவிமேனுஸ்‌ - மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸ்

 

பிப்ரவரி21 - வேதசாட்சியான அர்ச்‌. பீட்டர்‌ மாவிமேனுஸ்‌ திருநாள்

 

இவர்‌ டமாஸ்கஸ்‌ நகரிலுள்ள ஒரு துறவற மடத்தில்‌ சந்நியாசியாக ஜீவித்து வந்தார்‌. ஒரு சமயம்‌, இவர்‌ வியாதியாய்‌ இருந்தபோது, இவரைச்‌ சந்திக்க வந்த அராபிய மகமதியர்கள்‌, இவரிடம்‌, இஸ்லாம்‌ மதத்திற்கு மாறும்படி கூறினர்‌; உடனே, இவர்‌, அவர்களிடம்‌,  கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும்‌, உங்களுடைய கள்ள தீர்க்கதரிசியான முகமது நபியைப்‌ போல்‌ நித்திய தண்டனையை அடைந்து நரகத்திற்குப்‌ போவான்‌!என்று அறிவித்தார்‌. இதைக்‌ கேட்டு ஆத்திர மடைந்த மூர்க்கர்களான அந்த மகமதியர்கள்‌, அர்ச்‌.பீட்டர்‌ மாவிமேனுஸை அங்கேயே கொன்று போட்டனர்‌; கி.பி.743ம்‌ வருடம்‌, அர்ச்‌.பீட்டர்‌ மாவிமேனுஸ்‌, வேதசாட்சிய முடியைப்‌ பெற்றுக்கொண்டார்‌.

கள்ள தீர்க்கதரிசியான முகம்மது நபி தோற்றுவித்த மிகப்‌ பெரிய பதிதத் தப்பறையான மதமாகிய இஸ்லாமிய மதத்தைப்‌ பற்றியும்‌, நபியைப்‌ பற்றியும்‌ அர்ச்சிஷ்டவர்கள்‌ அநேகக்‌ காரியங்களைக்‌ கூறியிருக்கின்றனர்‌; அவற்றிலிருந்து ஒரு சிலவற்றைப்‌ பார்ப்போம்‌:

9ம்‌ நூற்றாண்டில்‌, ஸ்பெயின்‌ நாட்டை மகமதியர்கள்‌ ஆக்கிரமித்திருந்த போது, அநேகக்‌ கத்தோலிக்கத்‌ துறவிகளும்‌ கன்னியர்களும்‌, விசுவாசிகளும்‌ வேதசாட்சிகளாகக்‌ கொல்லப்பட்டனர்‌; அப்போது வேதசாட்சிகளாகக்‌ கொல்லப்பட்டவர்களில்‌ ஒரு சில குறிப்பிட்ட வேதசாட்சிகள்‌ (அர்ச்‌.ஹபேனிதுஸ்‌, அர்ச்‌.ஜெரேமியா, அர்ச்‌.பீட்டர்‌, அர்ச்‌. சபினியான்‌, அர்ச்‌.வாலாபோன்சுஸ்‌, அர்ச்‌ விஸ்ட்ரெமுன்டுஸ்‌) பின்‌வருமாறு கூறியுள்ளனர்‌: திவ்ய சேசுகிறீஸ்துநாதா்‌ சுவாமி! தான்,‌ மெய்யான சர்வேசுரன்!‌ என்று நாங்கள்‌ ஏற்று விசுவசிக்கிறோம்‌. ஆனால்‌, உங்கள்‌ கள்ள தீர்க்கதரிசியான முகமது நபி அந்திக்கிறீஸ்துவினுடையவும்‌, அவசங்கையான கள்ள மதத்தினுடைய போதகக்தினு டையவும்‌, முன்னோடியாயிருக்கிறான்!”‌.

வேதபாரகரும்‌, கத்தோலிக்க துறவியுமான அர்ச்‌.தமாசின்‌ அருளப்பர்‌, இஸ்லாம்‌ என்ற பதித மதத்தைப்‌ பற்றிப்‌ பின்வருமாறு எழுதியுள்ளார்‌: இஸ்லாமியருடைய மூட நம்பிக்கைகள்‌, இன்று வரை மக்களை தப்பறையில்‌ வைத்திருக்கின்றன. அக்காலத் திலிருந்து, இன்றுவரை, அந்திக்‌ கிறீஸ்துவின்‌ முன்னோடியான முகமது நபி, அம்மக்களின்‌ நடுவில்‌ தோன்றி இருக்கிறான்‌. இந்த மனிதன்‌, பழைய ஏற்பாடு, புதிய ஏற்‌பாடு, ஆகிய வேதாகமங்களைப்‌ பற்றி தெளிவில்லாத அறிவுடன்‌ மேலோட்டமாகப்‌ படித்ததாலும்‌, ஆரிய பதிதத்தைச்‌ சார்ந்த ஒரு துறவியுடன்‌ உரையாடி, அத்துறவியின்‌ வழிநடத்துதலினால்‌ பாதிக்கப்பட்டதாலும், இவன், ஒரு சொந்த பதித மதத்தை உருவாக்கினான்‌. அது தான் இஸ்லாமிய மதம்.

பின்னர்‌, இவன்‌ ஒரு பக்திமானைப்போல்‌ தோற்றமளித்து, மக்களுடைய நல்லெண்ணத் திற்குள்‌ தன்னையே பெரிய ஆளாக நம்ப வைத்தான்‌; பின்‌, பரலோகத்திலிருந்து தனக்கு ஒரு புத்தகம்‌ கொடுக்‌கப்பட்டதாகக்‌ கூறினான்‌; அதில்‌ கேலிக்குரிய காரியங்களை எழுதியிருந்தான்‌; கத்தோலிக்க வேதத்தினுடைய சில காரியங்களை ஆங்காங்கே எழுதி மழுப்பியிருந்தான்‌; இப்புத்தகத்தை, வணக்கத்திற்குரிய புத்தகமாக மக்களுக்குக்‌ கொடுத்தான்.

 

வேதசாட்சியான அர்ச்‌.பீட்டர்‌ மாவிமேனுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!  

 

 

பிப்ரவரி21 - வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸ்

 

மார்சியன் மற்றும் அர்ச்.புல்கேரியா கிழக்கு உரோமை சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட காலத்தில், சால்செடன் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது; இச்சங்கம் கிழக்கத்திய நாடுகளில் தோன்றியிருந்த யுடிசியன் பதிதத் தப்பறையைக் கண்டனம் செய்து கண்டித்தது! நமதாண்டவருக்கு தேவ சுபாவம் மனித சுபாவம் என்கிற இரு சுபாவங்களும் இருப்பதை, இப்பதிதத் தப்பறையினர், ஏற்றுக்கொள்ளவில்லை! மாறாக, ஆண்டவருக்கு ஒரே ஒரு சுபாவம் தான் உண்டு என்று தப்பறையாக போதித்து வந்த இந்த பதிதர்கள், நாளடைவில், ஆண்டவருக்கு தேவத்துவமும் இல்லை, என்று போதிக்கவும் துணிந்தனர்! பாலஸ்தீனிய துறவற மடங்களின் மடாதிபதிகளில் மாபெரும் அதிகாரத்தையுடைய மடாதிபதியான அர்ச். யுதிமியுஸ் மற்றும் அ்நநாட்டிலிருந்த அநேக துறவியர்களும், இப்பதிதத் தப்பறையைக் கண்டித்துக் கண்டனம் செய்தனர்! இப்பதிதத்திற்கு எதிராக இப்பொதுச் சங்கம் இயற்றிய தீர்மானங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்!

                ஆனால், யுடிசியன் பதிதத் தப்பறையைத் தழுவியிருந்த தியோடோசியுஸ் என்கிற அறிவிலியும், கொடுங்கோண்மை குணமுடையவனுமான ஒரு துறவி, அநீதியான முறையில் , ஜெருசலேம் மேற்றிராசனத்தின் அரண்மனையை அபகரித்து, அதன் மேற்றிராணியாரை, வலுவந்தமாக வெளியேற்றினான். இந்த பதிதன், இறந்துபோயிருந்த சின்ன தியோடோசியுஸ் என்ற சக்கரவர்த்தியின் மனைவியும், சக்கரவர்த்தினியுமான யுடோக்சியாவின் ஆதரவிலும், பாதுகாப்பிலும், இவ்விதம் கொடூரமாக நடந்து கொண்டிருந்தான்! அச்சமயம், யுடோக்சியாவும் ஜெருசலேமில் தங்கியிருந்தாள்.  இப்பதிதன், மற்ற அநேக சகத் துறவியரையும் தன் தப்பறையான பதிதத்திற்குள் சேர்ந்து கொள்ளும்படிச் செய்தான்!  இப்பதிதத்தில் சேராத மற்ற எல்லாரையும், இவன் கொடூரமாகக் கொன்று போட ஏற்பாடு செய்தான்; ஜெருசலேம் நகரமே இரத்த வெள்ளத்தினால் நிரம்பியது!  பெரிய படைவிரர்களுடைய சேனையைக் கொண்டு, அந்நாடு முழுவதும் தன்னுடைய பதிதத் தப்பறையை வலுவந்தமாக பரப்புவதற்காக, அதை எதிர்த்த எல்லா மக்களையும் கொன்று போட்டு,  பேரழிவைக் கொண்டு வந்தான். இருப்பினும், அநேகக் கிறீஸ்துவர்கள், சத்திய வேத விசுவாசத்திற்காக, இவனையும், இவனுடைய கொடூர உபத்திரவங்களையும், துணிவுடன்  எதிர்த்து நின்றனர்!  இவர்களில், ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாரான அர்ச். செவெரியன்,  மிக அதிக உத்தம மேரையுடனும், உறுதியுடனும், சத்திய வேத விசுவாசத்தில் நிலைத்திருந்தார்; அதற்கான மகிமையான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்; படை வீரர்கள்  இவரைப் பிடித்து, நகரத்திற்கு வெளியே இழுத்துச் சென்று, அங்கே இவரைக் கொன்று போட்டனர்!

 

வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

February 20 - St. Eleutherius of Tournai

  பிப்ரவரி 20ம்‌ தேதி 

வேதசாட்சியான அர்ச்‌.எலியுதெரியுஸ்‌

இவர்‌ முதல்‌ சில்டெரிக்‌ அரசனுடைய காலத்தில்‌ டூர்னை என்கிற இடத்தில்‌ பிறந்தார்‌. கிறீஸ்துவர்கள்‌ உபத்திரவப்படுத்தப்பட்டதால்‌, இவருடைய குடும்பத்தினர்‌,பிலான்டினியம்‌ என்ற கிராமத்திற்கு ஓடினர்‌. ஆனால்‌, பிரான்ஸ்‌ நாட்டின்‌ குளோவிஸ்‌ அரசன்‌ கிறீஸ்துவராக மாறி யதும்‌,இவருடைய குடும்பத்தினர்‌, இவர்களுடைய கிராமத்தில்‌ ஒரு தேவாலயத்தைக்‌ கட்டினர்‌. 

ஐந்தாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌, வடக்கு பிரான்ஸ்‌ பகுதியில்‌ திருச்சபையின்‌ அதிகாரிகளை, அர்ச்‌.ரெமிஜியுஸ்‌ ஏற்படுத்திய பிறகு, டூர்னையின்‌ மேற்றிராணியாராக, எலியுதெரியுஸ்‌ அபிஷேகம்‌ செய்‌ யப்பட்டார்‌. பாப்பரசர்‌, ஆரியப்‌ பதிதத்திலிருந்து திருச்சபையைப்‌ பாதுகாப்பதைப்‌ பற்றி, இவரிடம்‌ ஆலோசனை நடத்தினார்‌. 

ஆரியப்‌ பதிதர்களுடன்‌, இவர்‌ மிகுந்த ஞானத்துடன்‌ வேத சத்தியங்கள்‌ பற்றி தர்க்கம்‌ செய்து வாதாடினார்‌; இவரை அவர்கள்‌ வாதத்தினால்‌ ஜெயிக்கக்‌ கூடவில்லை, என்பதால்‌, அப்பதிதர்கள்‌, இவர்‌ மேல்‌ வெகுவாகக்‌ கோபமடைந்தனர்‌. இவர்‌ ஒருநாள்‌ தேவாலயத்திற்குச்‌ செல்கிற வழியில்‌, ஆரியப்‌ பதிதர்களுடைய கூட்டத்தினால்‌, அடிக்கப்பட்டார்‌; அதனால்‌ ஏற்பட்ட காயங்களால்‌, திரளான இரத்தம்‌ சிந்தி, கி.பி.532ம்‌ வருடம்‌ வேதசாட்சியாக மரித்தார்‌.

  இவர்‌ மரிக்கும்போது, தன்‌ மேய்ப்பின்‌ கீழ்‌ இருந்த ஞான மந்தை யை அர்ச்‌.மெதார்துவிடம்‌ ஒப்படைத்தார்‌.

அர்ச்‌.எலியுதெரியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!



St. Eleutherius of Tournai – Defender of the Faith

Feast Day: February 20

St. Eleutherius was a native of Tournai, born during the reign of Childeric I. Due to Christian persecution, his family fled to Blandinium. After King Clovis of France converted to Christianity, they built a church there.

He was consecrated bishop of Tournai following the church's reorganization by St. Remigius in the late 5th century. A strong defender against Arianism, he was consulted by the Pope on safeguarding his people. His arguments angered the Arians, and he was fatally attacked while on his way to church in 532 A.D.

On his deathbed, St. Eleutherius entrusted his flock to St. Medardus.

St. Eleutherius, pray for us!

Tag: #SaintEleutherius #MartyrOfFaith #DefenderOfTruth #CatholicSaints

வியாழன், 20 பிப்ரவரி, 2025

Saints Quotes in Tamil

அர்ச். அக்குவினஸ் தோமையார்  "சிலுவையிலே தேவசுபாவம் மாத்திரம் மறைந்திருந்தது. திவ்விய நற்கருணையிலோ தேவ சுபாவத்தோடு கூட மனுஷ சுபாவமும் மறைந்திருக்கிறது''

February 16 - ST. ONESIMUS

 பிப்ரவரி 16ம் தேதி
வேத சாட்சியான அர்ச்சி ஒனேசிமுஸ்

இவர் பிறப்பினால் ஃபிர்ஜியனாகவும், பிலமோன் என்பவரின் அடிமையாகவும் இருந்தார். அர்ச். பிலமோன் என்பவர் ஏற்கனவே அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் கிறிஸ்துவராக மனந்திருப்பப்பட்டிருந்தார்.

ஒனேசிமுஸ், தன் எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு ஓடிப்போனார்; பின் எதிர்பாராத விதமாக உரோமையில் சிறைப்பட்டிருந்த அர்ச். சின்னப்பரை இவர் சந்திக்க நேர்ந்தது. அர்ச். சின்னப்பர் இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம் கொடுத்தார். பின், இவரை, இவருடைய எஜமானரான அர்ச். பிலமோனிடம் அனுப்பி வைத்தார். அச்சமயம், அர்ச். சின்னப்பர் ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார்.

அது, சுவிசேஷத்தில் நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக் கிடைத்திருக்கிறது! அந்த கடிதத்தில், பிலமோனிடம், அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும், மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும், அர்ச். சின்னப்பர் கேட்டுக் கொள்வதை வாசிக்கிறோம்.

அர்ச். சின்னப்பரின் அறிவுரையின்பேரில், பிலமோன் ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்தை அளித்தார். அதன் பின், தன் ஞானதந்தையான அர்ச். சின்னப்பர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்பேரில், ஒனேசிமுஸ் திரும்பி அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார். அவருக்கு பிரமாணிக்கத்துடன் ஊழியம் செய்து வந்தார்.

அர்ச். சின்னப்பர் கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம் கொடுத்தனுப்பியபோது, அவருடன் ஒனேசிமுஸையும் சேர்த்து அனுப்பி வைத்தார் (கொலொ 4:7-9). பின்னர், ஒனேசிமுஸ் உரோமாபுரி ஆளுநனால் மிகக் கொடிய உபத்திரவங்களால் சித்ரவதை செய்யப்பட்டார். திருமணம் செய்யாமல் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கும் கத்தோலிக்கக் குருத்துவத்தைப் பற்றி இவர் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டுக் கோபமடைந்த உரோமை ஆளுநன், இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள் தொடர்ந்து உபாதித்தான். இவருடைய கால்களையும், கைகளையும் குண்டாந்தடியால் அடித்து முறித்தனர்; பின் கல்லால் எறியப்பட்டு கி.பி. 95ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

சர்வேசுரனை சிநேகிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று அறிந்திருக்கிறோம்; அவர்கள், தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்களாமே! (அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய நிரூபம் 8:28).

அர்ச் ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச் அமலோற்பவ மாமரியே! வாழ்க!


February 16

Martyrdom
ST. ONESIMUS

Onesimus was a Phrygian by birth and a slave to Philemon, a person of influence who had been converted to the faith by St. Paul.

Onesimus robbed his master Philemon and then fled away, accidentally coming into contact with St. Paul, who was then a prisoner for the faith in Rome.

The Apostle Paul converted Onesimus and baptized him. St. Paul then sent him back to his master Philemon with the beautiful letter, which we know as the Epistle to Philemon.

In this letter, St. Paul requested Philemon to pardon his slave Onesimus so that he might become one of his own assistants.

Philemon pardoned him and set him at liberty. Onesimus then returned to his spiritual father, as St. Paul had requested, and thereafter faithfully served the Apostle.

St. Paul later made Onesimus, along with Tychicus, the bearer of his Epistle to the Colossians (Col. 4:7-9).

St. Onesimus was later cruelly tortured in Rome for eighteen days by the governor of that city, who was angered by his preaching on the merit of celibacy. His legs and thighs were broken with bludgeons, and he was then stoned to death in the year 95 AD.

"We know that to them that love God, all things work together unto good, to such as, according to his purpose, are called to be saints."
— St. Paul (Romans 8:28)



  • #Christianity
  • #Faith
  • #Bible
  • #Saints
  • #Catholic
  • #ChristianHistory
  • #Martyrdom
  • #EarlyChurch
  • #EpistleToPhilemon
  • #ApostolicFathers
  • #NewTestament
  • #BiblicalFigures
  • #PaulineEpistles
  • #BookOfColossians
  • #Romans828
  • #Forgiveness
  • #Redemption
  • #ChristianVirtues
  • #FaithJourney
  • #SpiritualGrowth

புதன், 19 பிப்ரவரி, 2025

Catholic Tidbit- 4 The Fastest Canonization in History

Catholic Tidbit: The Fastest Canonization in History

The record for the fastest canonization in the Catholic Church belongs to St. Peter of Verona (St. Peter Martyr).

He was a 13th-century Dominican friar and preacher who was assassinated for his faith in 1252. Miracles were reported almost immediately after his death, and less than a year later, on March 9, 1253, Pope Innocent IV officially canonized him—just 11 months after his martyrdom!

While St. Anthony of Padua’s canonization (in 1232) was also very fast, St. Peter of Verona holds the record by just a few weeks. His feast day is celebrated on April 29.

St. Peter of Verona, pray for us!


#Catholic_Tidbit #The_Fastest_Canonization_in_History

Catholic Tidbit - 3 St. Peter Canisius

Catholic Tidbit: St. Peter Canisius’ Long Road to Canonization

Unlike some saints who were canonized quickly, St. Peter Canisius had to wait over 300 years to be officially declared a saint!

A Jesuit priest and Doctor of the Church, he was instrumental in defending and spreading the Catholic faith during the Protestant Reformation, especially in Germany. He died in 1597, but due to historical circumstances, his canonization was delayed.

He was eventually beatified in 1864 by Pope Pius IX and later canonized and declared a Doctor of the Church in 1925 by Pope Pius XI.

Despite the long process, his influence never faded. He is known as the "Second Apostle of Germany" for his tireless missionary work and remains a powerful intercessor for those seeking wisdom and courage in defending their faith.

St. Peter Canisius, pray for us!

#Catholic #Tidbit: #St.Peter_Canisius #tamil

Catholic Tidbit - 2 St. Anthony

Catholic Tidbit: St. Anthony of Padua’s Record-Breaking Canonization

St. Anthony of Padua, one of the most beloved saints in the Catholic Church, holds the record for the fastest canonization in history!

After his death on June 13, 1231, reports of miracles at his tomb spread rapidly. Just 11 months later, on May 30, 1232, Pope Gregory IX officially declared him a saint—an incredibly fast process, considering canonizations often take decades or even centuries.

This quick canonization was a testament to his holiness, preaching, and the countless miracles attributed to his intercession. Today, he is widely venerated as the Patron Saint of Lost Things and continues to be one of the most invoked saints in Catholic tradition.

St. Anthony of Padua, pray for us!


#Catholic #Tidbit: #St.Anthony

Catholic Tidbit: The Meaning of "Amen"

Catholic Tidbit: The Meaning of "Amen"

The word "Amen" is one of the most frequently used words in Catholic prayers, hymns, and the Mass. But what does it actually mean?

"Amen" comes from Hebrew and means "so be it" or "truly". When we say "Amen" at the end of a prayer, we are affirming our belief in what has been said and expressing trust in God.

Interestingly, Jesus often used "Amen, Amen, I say to you" in the Gospels to emphasize the truth of His teachings (e.g., John 6:47). In the Mass, our final "Amen"—especially at the Doxology ("Through Him, with Him, and in Him…")—is known as the "Great Amen", signifying our full assent to the Eucharistic Prayer.

So next time you say "Amen," remember: it's more than just an ending—it's a powerful declaration of faith!



#catholictamil #catholictidbit #tidbit

Feb. 19 அர்ச். கொன்ராட்

பிப்ரவரி 19ம் தேதி

அர்ச். கொன்ராட்

இவர், இத்தாலியின் லொம்பார்டியைச் சேர்ந்த பிளெசென்சா என்ற இடத்தில் ஓர் உயர்குடியில், 1290ம் வருடம் பிறந்தார். இவர் இளமையில் வீரத்துவ விளையாட்டுகள் மேல் மாபெரும் ஆர்வமுள்ளவராயிருந்தார். ஆர்வமுள்ள வேட்டைக்காரர்; லோடியைச் சேர்ந்த உயர் குடிமகனின் மகளான யுஃப்ரோசின் என்பவளை திருமணம் செய்தார்.

ஒரு சமயம், இவர் ஒரு காட்டு மிருகத்தை வேட்டையாடியபோது, அந்த விலங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்ததால், அந்த புதருக்கு நெருப்பை வைத்தார். அந்நெருப்பு புதரை ஒட்டியிருந்த வயல்வெளி முழுவதையும், அருகிலிருந்த பெரிய காட்டையும் சேர்த்து எரித்து சாம்பலாக்கியது. இதில் அறுவடைக்குத் தயாராயிருந்த தானியங்கள் எல்லாம் சேதமாயின!

பிளெசென்சாவின் ஆளுநன், காட்டையும் வயலையும் தீக்கிரையாக்கியவன் யார் என்பதைக் கண்டறிய ஆயுதம் தாங்கிய படைவீரர்களைக் அனுப்பி வைத்தான். அதற்குள் கொன்ராட், நகரத்திற்குள் ஓடிவிட்டார். அச்சமயம், வயல்வெளியில் கறுகிப்போயிருந்த விறகுக் குச்சிகளைக் கட்டிகளாகக் கட்டி எடுத்துச் சென்ற ஒரு ஏழை விவசாயியைக் கைது செய்தனர். விவசாயியின் மேல் குற்றம் சுமத்தி, அவரை ஒரு தட்டில் படுக்க வைத்து சகல ஆக்கினைகளாலும் உபாதித்தனர்; இறுதியாக அவரை சாவுக்கு தீர்ப்பிட்டனர்.

அந்த ஏழை விவசாயியை, கொலைக்களத்திற்கு இட்டுச் செல்கிற போது, கொன்ராட் வீட்டிற்கு முன்பாகக் கொண்டு சென்றனர். அப்போது தான், இவர் விவசாயியை எதற்காக கொலைக்களத்திற்கு இட்டுச் செல்கின்றனர் என்பதைப் பற்றி அறிந்தார். மனச்சாட்சியின் உறுத்தலினால் உந்தப்பட்டவராக, வெளியே ஓடிப்போய், விவசாயியை வீரர்களிடமிருந்துக் காப்பாற்றினார். எல்லோர் முன்பாகவும், "வயலில் நெருப்பை நான் தான் வைத்தேன்!" என்று அறிவித்தார்.

கொன்ராட், கவர்னரிடம் சென்று, தவறுதலாக வைத்த நெருப்பு இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியதைப் பற்றி விளக்கிக் கூறி, அந்த சேதத்தை ஈடு செய்வதற்கான பணத்தைத் தருவதாகக் கூறினார். கொன்ராட்டின் மனைவியும், தாராள மனதுடன் தான் கொண்டு வந்திருந்த டெளரிப் பணத்தையும், கணவருக்கு உதவும்படியாக அளிக்க முன்வந்தார்கள்.

இந்நிகழ்வு உலக ஆஸ்திகளின் மாயத் தோற்றத்தைப்பற்றிய ஒரு பாடத்தை கொன்ராட்டிற்குக் கற்றுக் கொடுத்தது. அர்ச். கொன்ராட்‌டும் அவருடைய மனைவியும், ஒத்த மனநிலையுடன், சர்வேசுரனுக்காகத் தங்களையே எஞ்சிய ஜீவியகாலத்தில் அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர். அதன்படி, கொன்ராட், பிரான்சிஸ்கன் மடத்தில் சேர்ந்தார். இவருடைய மனைவி, ஏழை கிளாரம்மாள் கன்னியர் மடத்தில் சேர்ந்தார்.

வெகுக் குறுகிய காலத்திலேயே, உத்தமதனத்தில் முன்னேறினார்; இவருடைய சாங்கோபாங்கத்தின் பரிசுத்தத்தனம், இவருடைய முந்தைய நண்பர்கள் மற்றும் திருயாத்ரீகர்களை, இவரிடம் கவர்ந்திழுத்தது. ஆனால், அர்ச். கொன்ராட், உலகத்தை முற்றிலுமாக துறந்து விட ஆசித்தார். எனவே, இவர் மறைவாக உரோமைக்குச் சென்று, அங்கிருந்து சிசிலி தீவிற்குச் சென்றார்.

அங்கு, சிராக்கூஸிலுள்ள நோட்டோ பள்ளத்தாக்கில் 36 வருட காலம், ஒரு உயர்ந்த மலையிலுள்ள குகையில் தபோததனராக வாழ்ந்தார். இந்த மலை இப்போது "கொன்ராட் மலை" என்று அழைக்கப்படுகிறது. இங்கு, இவர் அசாதாரணமான தபசை மேற்கொண்டார்; வெறுந்தரையில் படுத்துறங்குவார்; ரொட்டி, தண்ணீர் மற்றும் சில காட்டு மூலிகைகளை உண்டு உயிர்வாழ்ந்தார். இருப்பினும், பிசாசு இவரை மிகக் கொடூரமாக சோதித்து அலைக்கழித்தது.

அச்சமயம், அர்ச். கொன்ராட் சர்வேசுரனை மகிழ்விப்பதற்காக, இடைவிடாமல் தளரா ஊக்கத்துடன் ஜெபித்ததால், புதுமை செய்யும் வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் சர்வேசுரன் இவருக்கு அளித்தார்.

நோட்டோவிலுள்ள ஒரு பிரசத்திபெற்ற ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இவர் தவறாமல் கடைசி 30 வருட காலம் தொடர்ந்து பக்திபற்றுதலுடன் சந்தித்து வந்தார். இவ்விதமாக, 1351ம் வருடம், பிப்ரவரி 19ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, ஆண்டவருடைய இப்பரிசுத்த பாடுபட்ட சுரூபத்தின் முன்பாக முழங்காலிலிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது, பாக்கியமாய் அர்ச். கொன்ராட் மரித்தார்.

இவருடைய விருப்பத்தின்படி, நோட்டோவிலுள்ள அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். ஒரு வெள்ளிப் பேழையில் இவருடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது.

1515ம் வருடம், பத்தாம் சிங்கராயர் பாப்பரசர், இவருடைய திருநாளை நோட்டோவில் கொண்டாடுவதற்கு அனுமதித்தார். 1625ம் வருடம், 8ம் உர்பன் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப் பட்டம் அளித்தார்.

அர்ச். கொன்ராட்! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!!


செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

Feb. 18 - Saint Bernadette of Lourdes

பிப்ரவரி 18ம்‌ தேதி 

அர்ச்‌.பெர்னதெத்தம்மாள்‌ திருநாள்‌ 

இவளுடைய ஞானஸ்நானப்‌ பெயர்‌, மேரி பெர்னார்டு சுபீரூஸ்‌. அர்ச்‌. பெர்னதெத்‌ சுபீரூஸ்‌, 1844ம்‌ வருடம்‌, ஜனவரி 7ம்‌ தேதி, பிரான்சிலுள்ள தெற்குப்‌ பகுதியின்‌ பிரனீஸ்‌ மலைக்‌ தொடரிலிருக்கும்‌ லூர்து நகரில்‌ பிறந்தாள்‌. பிரான்சிஸ்‌ சுபீரோ என்பவர்‌, இவளுடைய தந்தை, லூயிஸ்‌ காஸ்டிராட்‌ , இவளுடைய தாய்‌. இருவரும்‌ பக்தியுள்ள நல்ல கத்தோலிக்கர்கள்‌; வேத கடமைகளை பிரமாணிக்கத்துடன்‌ நிறைவேற்றி வந்தனர்‌; அதே சமயம்‌ வறுமையில்‌ உழன்ற ஏழைக்குடி யானவர்கள்‌. பெர்னதெத்‌, இவர்களுடைய மூத்த மகள்‌; இவர்களுக்கு 11 பிள்ளைகள்‌ பிறந்தனர்‌. பிரான்சிஸ்‌, ஒரு அரவை ஆலையை நிர்வகித்து வந்திருந்தார்‌;  நஷ்டமடைந்ததால், அந்த அரலை ஆலையை மூடும்படியாயிற்று: அதன் காரணமாக, பிரான்சிஸ் சுபீரோவின் குடும்பம் வறிய நிலையை அடைந்தது;  1858ம்‌ வருடம்‌, பெர்னதெத்திற்குக்‌ காலரா நோய்‌ வந்தது. மிகவும்‌ பலவீனமடைந்தாள்‌. பின்‌ அதைத்‌ தொடர்ந்து, ஆஸ்த்துமா வந்தது; இவளுடைய ஜீவியகாலம்‌ முழுவதும்‌ இந்நோய்‌ இவளை உபாதித்துக்கொண்டிருந்தது.அடுத்து அடுத்துத்‌ தொடர்ச்சியாக அநேக வியாதிகளால்‌, இறுதியாக, காலில்‌ ஏற்பட்ட ஒரு புண்ணினால்‌ இறக்கும்வரை, மிகுந்த துன்ப உபத்திரவத்திற்கு ஆளானாள்‌. 

1858ம்‌ வருடம்‌, பிப்ரவரி 11ம்‌ தேதியன்று, இவளுக்கு 14 வய  தானபோது, அருகிலிருந்த மசபியேல்‌ என்ற பாறையின்‌ அடிப்பகுதியில்‌ அமையப்பெற்றிருந்த ஒரு குகையில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகள்‌ பெறும்‌ பாக்கியம்‌ பெற்றாள்‌. 1858ம்‌ வருடம்‌, பிப்ரவரி 11ம்‌ தேதியன்று,‌ முதல்‌ காட்சியைப்‌ பெற்றாள்‌; அன்றிலிருந்து, அவ்வருடம்‌ ஜுலை 16ம்‌ தேதி வரை, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகளை, தொடர்ச்சியாக 18 முறை இவள்‌ பெற்றாள்‌.

 மகா பரிசுத்த தேவமாதா தாமே, தமது பிரசன்னத்தினால்‌, புது  மையான ஒரு நீரூற்றை மசபியேல்‌ குகையினருகில்‌ ஏற்படுத்தும்படி யாக மண்ணைத்‌ தோண்டி, அதிலிருக்கும்‌ நீரைப்‌ பருகும்படி பெர்ன தெத்தம்மாளுக்குக்‌ கட்டளையிட்டார்கள்‌; முதலில்‌ சேறு நிறைந்ததாக இருந்தபோதே, அதை பெர்னதெத் , தேவமாதாவிற்குக்‌ கீழ்ப்‌படிந்து பருகினாள்‌; பின்னர்‌, அதுவே பொங்கி வழிந்தோடும்‌ மாபெரும்‌ நீரூற்றாகவும்‌, புதுமையாக வியாதிகளைக்‌ குணப்படுத்தும்‌ நீரூற்‌ றாகவும்‌ மாறியது. வெடிவிபத்தில்‌ தன்‌ கண்ணை இழந்த ஒருவன்‌, இத்தண்ணீரில்‌ கழுவினான்‌; புதுமையாகக்‌ கண்பார்வை அடைந்தான்‌: இறக்கவிருந்த ஒரு குழந்தை இப்புதுமைத்‌ தண்ணீரினுள்‌ அமிழ்த்தி எடுக்கப்பட்டவுடன்‌ புதுமையாக உயிர்பெற்று, நடக்கத்‌ துவக்கியது. இது போன்ற எண்ணற்ற புதுமைகள்‌ நிகழலாயின.

 1858ம்‌ வருடம்‌ மார்ச்‌ 25ம்‌ தேதியன்று,மங்களவார்க்தைத்‌ திரு நாளன்று, மகா பரிசுத்த தேவமாதா அளித்த காட்சியின்போது, பெர்னதைத்தம்மாளிடம்‌, “நாமே அமலோற்பவம்‌!” என்று கூறித்‌ தம்மை வெளிப்படுத்தினார்கள்‌. மேலும்‌, லூர்து நகரில்‌ தமக்குத்‌ தோத்திரமாக ஒரு தேவாலயத்தைக்‌ கட்டும்படி கூறினார்கள்‌; பெர்னதெத்தம்மாள்‌, தான்‌ கண்ட இப்பரலோகக்‌ காட்சிகள்‌ எல்லாம்‌ உண்மையானவை என்று திடமாக எல்லோரிடமும்‌ கூறினாள்‌; பெற்றோர்களிடமும்‌, நகர அதிகாரிகளிடமும்‌, பங்கு சுவாமியாரிடமும்‌, திருச்சபை அதிகாரிகளிடமும்‌, இக்காட்சிகள்‌ பற்றிய விசாரணையின்போது, மிக ஸ்திரமாகத்‌ தான்‌ கூறுபவை அனைத்தும்‌ உண்மையானவை! என்று உறுதியாக நின்றாள்‌; மகா பரிசுத்த தேவமாதா தன்னிடம்‌ கூறிய செய்திகளை பிரமாணிக்கத்துடன்‌ பங்கு சுவாமியாரிடமும்‌, மற்றவர்களிடமும்‌ அறிவித்தாள்‌.  

1858ம்‌ வருடம்‌, ஜூலை 28ம்‌ தேதியன்று, திருச்சபை மசபியேல்‌ குகையை அதிகாரபூர்வமாக தன்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்தது; நகர அதிகாரிகளின்‌ அச்சுறுத்தல்கள்‌ விலகின! பக்தி முயற்சிகள்‌ சுதந்திரமாக விசுவாசிகளால்‌ அனுசரிக்கப்பட்டன. 1860ம்‌ வருடம்‌, நெவர்ஸ்‌ நகரிலுள்ள பிறர்சிநேகக்‌ கன்னியர்‌ மடத்தில்‌, பெர்னதெத்‌ , தனது 16வது வயதில்‌ தங்கி, பள்ளிக்கூடத்தில்‌ கல்வி கற்பதற்கான ஏற்பாடு நடந்தது. பின்னர்‌, அதே மடத்தில்‌ 22 வயது வரை, பெர்ன தெத்தம்மாள்‌ தங்கியிருந்தாள்‌.

 1866ம்‌ வருடம்‌, தனது 22வது வயதில்‌, நெவர்ஸிலுள்ள பிறர்‌ சிநேகக்‌ கன்னியர்‌ மடத்தில்‌ நவசந்நியாசியாக பெர்னதெத்‌ சேர்க்கப்‌ பட்டாள்‌.அங்கேயே, அவள்‌ சிறு சிறு வேலைகள்‌ செய்துகொண்டு, மறைந்த ஜீவியம்‌ ஜீவித்தாள்‌; எஞ்சிய காலமெல்லாம்‌,ஆஸ்த்துமா நோயினாலும்‌, காலில்‌ ஏற்பட்டஒரு புண்ணினாலும்‌, விவரிக்க முடி யாத வேதனையை அனுபவித்து வந்தாள்‌.  “லூர்து நகரில்‌ அநேக வியாதியஸ்தர்கள்‌ புதுமை நீரூற்றில்‌ குணமடைவதுபோல்‌, ஏன்‌ நீங்களும்‌ அங்கு சென்று, குணமடையக்கூடாது?” என்று கேட்டதற்கு, அர்ச்‌.பெர்னதெத்தம்மாள்‌, “மகா பரிசுத்த தேவ மாதா ‌, இவ்வுலகத்தில்‌ எனக்கு, சந்தோஷத்தை வாக்களிக்க வில்லை! மறுவுலகத்தில்‌ தான்‌ எனக்கு சந்தோஷம்‌ கிடைக்கும்!‌ என்று‌ வாக்களித்திருக்கிறார்கள்‌” என்று கூறுவாள்‌. மகா பரிசுத்த தேவமாதா, தன்னிடம்‌ கேட்டுக்கொண்டது போல, உபாதிக்கும்‌ இத்துன்பவேதனைகளை, தபசாகவும்‌, பரிகாரமாகவும்‌ ஒப்புக்கொடுத்து வந்தாள்‌. “சர்வேசுரன்‌, என்னை ஒரு முக்கிய வேலைக்காகப்‌ பயன்படுத்தினார்‌; இப்போது, இந்தத்‌ துடைப்பத்திற்கான அலுவல்‌ முடிந்து விட்டதால்‌, இந்தக்‌ துடைப்பமாகிய என்னை ஒரு மூலையில்‌ வைத்திருக்கிறார்” என்று அர்ச்‌.பெர்னதெத்‌ கூறுவாள்‌. 

1879ம்‌ வருடம்‌, ஏப்ரல்‌ 16ம்‌ தேதியன்று பாக்கியமாய்‌ மரித்தாள்‌. 11ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, 1933ம்‌ வருடம்‌, டிசம்பர்‌ 8ம்‌ தேதியன்று இவளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டத்தை அளித்தார்‌. 

நெவர்ஸ்‌ பிறா்சிநேகக்கன்னியர்‌ மடத்தின்‌ தேவாலயத்தில்‌, இவளின்‌ பரிசுத்த அழியாத சரீரம்‌ பீடத்தினடியில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.  அர்ச்‌. பெர்னதெத்தம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Saint Bernadette of Lourdes

🌿 Marie-Bernarde Soubirous 🌿
📅 Born: January 7, 1844 – Lourdes, France
✝️ Died: April 16, 1879 – Nevers, France
🙏 Canonized: December 8, 1933
🎉 Feast Day: February 18


A Life of Faith and Devotion

Saint Bernadette Soubirous, a humble and frail young girl, was born into a poor yet deeply pious family in Lourdes, nestled in the Pyrenees mountains. Despite her fragile health, at the tender age of 14, she was blessed with eighteen apparitions of the Blessed Virgin Mary at the Grotto of Massabielle between February 11 and July 16, 1858.

During these miraculous encounters, the Most Holy Virgin entrusted her with a divine message, revealing herself with the words:

“I am the Immaculate Conception.”

Mary instructed Bernadette to share the message of prayer, penance, and healing, and to reveal the sacred waters of the now-famous Lourdes spring, a place where countless miracles and healings have since taken place. Among them, a worker who had lost an eye regained his sight, and a dying child was miraculously restored to health after being immersed in the waters.

The authorities tried to prevent the crowds from gathering at the Grotto, but faith could not be silenced. The devotion spread, and Lourdes became one of the world’s greatest pilgrimage sites.


A Life of Humility & Suffering

💠 Frail in health, Bernadette suffered from cholera, asthma, and other ailments throughout her life. Seeking refuge from public scrutiny, she entered the Sisters of Charity of Nevers in 1866, dedicating her life to prayer and service.

💠 Despite great pain and suffering, she bore everything with profound faith and love, offering her suffering as penance. She humbly referred to herself as “a broom that Our Lady has used and then put aside.”

💠 On April 16, 1879, at just 35 years old, Bernadette entered eternal rest, fulfilling the Blessed Virgin’s request for a life of penance, humility, and unwavering devotion.


Her Enduring Legacy

🌟 Canonized on December 8, 1933, by Pope Pius XI, St. Bernadette’s incorrupt body rests in the chapel of the St. Gildard Convent in Nevers, drawing pilgrims from around the world.
🌟 Lourdes remains a beacon of faith and healing, where millions seek spiritual and physical restoration through the intercession of Our Lady of Lourdes and St. Bernadette.

On this blessed Feast of St. Bernadette, may we be inspired by her unwavering faith, humility, and love for Our Blessed Mother. 🙏💙


🕊 St. Bernadette, pray for us! 🕊
🌿 Ave Maria! 🌿

வியாழன், 13 பிப்ரவரி, 2025

La Réglementation de la Lecture dans les Séminaires : Enjeux et Prescriptions de l'Église


Après l’article de L’Ami sur la défense de lire les journaux et les revues dans les séminaires, je voudrais avoir l’avis de M. sur les points suivants :

1. Ne pourrait-on pas, pour défendre l’opinion de L’Ami, s’appuyer aussi sur les deux documents suivants :

a) Le formulaire pour la relation triennale sur les séminaires de 188_, Acta 1926, p. 000, n° 232
b) L’instruction de la S. C. des Religieux sur la formation des clercs religieux, Acta 1983, p. 70, où l’on trouve : Quo quidem tempore, etc.


2. Le décret du 22 mars 1918 contient-il la défense de lire tous les journaux et toutes les revues également et au même titre que les prescriptions relatives à la répression du modernisme ?


3. La défense de ces lectures a-t-elle été faite uniquement au niveau du modernisme, ou bien encore pour éviter que les clercs ne perdent leur temps dans des lectures inutiles ?




---

Réponse à L.

Il est indéniable que l’on peut trouver dans les actes cités par notre correspondant une preuve que l’on pourrait appeler de jurisprudence, qui s’ajoute légitimement à la preuve par les actes législatifs stricts dont nous avons uniquement parlé dans la réponse à laquelle il est fait allusion. Il serait, du reste, illogique et extraordinaire que ce supplément de preuve par la jurisprudence n’existât pas. Son absence pourrait prouver — ce qui ne peut être — que l’Église se désintéresse de ses propres lois, qu’elle déclare pourtant encore en vigueur, sans en poursuivre ni exiger pratiquement l’observance.

Le premier des documents que cite notre correspondant est la relation triennale que tous les Ordinaires des lieux sont tenus, tous les trois ans, de transmettre au Saint-Siège sur l’état de leurs séminaires. Le triennat date du 1er janvier 1924, et toutes les années qui ont suivi cette date sont divisées en groupes de trois ans. Dans chacun de ces groupes :

La première année, le Saint-Siège (via la S. C. des Séminaires et Universités, dont dépendent les séminaires) doit recevoir la relation des Ordinaires d’Italie, de France, d’Espagne et des îles adjacentes.

La deuxième année, celle des Ordinaires du reste de l’Europe.

La troisième, celle des Ordinaires d’Amérique.

Cette relation ne porte aucun préjudice à la relation quinquennale que tous les Ordinaires doivent, selon une procédure analogue, adresser à la S. C. Consistoriale (cf. cap. 340). Elle doit être faite suivant un formulaire imposé par la S. Congrégation, qui comporte quarante et une questions.

La question 26, à laquelle se réfère la présente demande, est la suivante :
"Les élèves ont-ils interdiction de lire les livres et les revues qui, bien qu’en soi non nuisibles, peuvent cependant les distraire de leurs études ?"

Il y a là, semble-t-il, comme un écho de la prohibition de Pie X, que le Saint-Office a déclarée en vigueur. C’est une idée qui vient immédiatement à l’esprit. Il est cependant remarquable que la S. Congrégation, en posant cette question dans son formulaire obligatoire, ne se réfère pas explicitement à la prescription de Pie X, comme elle le fait pour d’autres points (par exemple, la question 28 sur la fréquentation des universités laïques, où elle mentionne entre parenthèses le décret de la S. C. Consistoriale du 30 avril 1918). Il faut en chercher la raison.

Cette raison ne peut être que la suivante : la défense que soutient la S. Congrégation va plus loin que celle de Pie X. Son objectif est plus général et dépasse, pensons-nous, les préoccupations du pape, du moins dans leur formulation stricte. En effet, elle mentionne non seulement les publications périodiques (journaux et revues), mais aussi les livres, ce que Pie X n’avait pas fait.

On peut donc dire que la question de la S. Congrégation suppose l’existence d’une interdiction qui, d’une part, va plus loin que celle de Pie X en ajoutant les livres aux revues et publications périodiques, et, d’autre part, ne vise que la distraction apportée aux études.

Cette dernière particularité montre que, si l’interdiction de Pie X n’était plus en vigueur, on ne pourrait conclure de la question posée par la S. Congrégation que toutes les publications périodiques sont interdites dans les séminaires. Seules celles nuisant à la bonne marche des études seraient concernées. De ce point de vue, la question de la S. Congrégation semble restreindre l’interdiction initiale, laissant une latitude que la lettre du 20 octobre 1910 au cardinal Vaszari admettait déjà, en permettant la lecture des revues dénuées de toute controverse.

Ces renseignements, même religieux, peuvent, s’ils sont intempestivement communiqués aux séminaristes par la lecture de revues pourtant permises, être un obstacle à la bonne marche de leurs études. Si tel était le cas, nul doute que même cette lecture serait interdite et entrerait dans la prohibition sous-entendue par la question 26 du formulaire.

C'est l'instruction récente de la S. C. des Religieux adressée, en date du 4 décembre 1934, « aux modérateurs suprêmes des religions et sociétés cléricales, sur la formation cléricale et religieuse des élèves destinés au sacerdoce, et sur l'enquête à faire avant la réception des ordres. »

Sur le premier point, Formation des élèves qui doivent être promus aux ordres, au n° 7, il est dit que ces élèves, après leur noviciat terminé, doivent être placés dans les maisons d'études dont parle le can. 537, § 2. Le canon déclare que la vie commune doit exister dans ces maisons d'études ; s'il en était autrement, les élèves ne pourraient pas être promus aux ordres. L'instruction précise : « Ces maisons, dans lesquelles doit fleurir la pleine observation des lois, surtout en ce qui regarde la perfection de la vie commune et la pauvreté. » Par ailleurs, « tout doit s'y trouver pour l'accomplissement fructueux du cours prescrit de philosophie et de théologie. »

L'instruction continue par ces paroles que vise notre correspondant : « En ces temps (des études), les Supérieurs se garderont bien d’éloigner les âmes des jeunes de la conquête des vertus. Ils les détourneront de la lecture de ces livres et de ces périodiques qui pourraient, de quelque façon que ce soit, empêcher le bien des études. »

Ces prescriptions appellent le même commentaire que la question précédente relative aux séminaires. Elles ne reflètent pas seulement les préoccupations de la prohibition de Pie X, elles peuvent être tenues pour aller plus loin ; elles n'ont pas seulement le caractère transitoire des prescriptions des encycliques et Motu proprio suscités par la crise du modernisme.

On le voit, à tout dire, ces divers textes paraissent bien se référer aux prescriptions de Pie X. Mais, en somme, ils sont d'un autre genre. Ils sont différents. Ils sont pris en vertu de préoccupations plus générales, d’un ordre, peut-on dire, plus permanent. Nous dirions, si nous étions sûrs d’être compris, plus essentiel, découlant de la nature même des séminaires et des maisons d’études, comme nous l’expliquerons en terminant notre présente réponse.

Ces prescriptions prouvent, non pas que les ordonnances de Pie X sont encore en vigueur (elles le sont en vertu d’autres actes du Saint-Siège), mais que quelques-unes, au moins, des préoccupations qui étaient celles du pape Pie X demeurent toujours dans l’esprit et, par conséquent, dans les recommandations de l’Église.

Ad II.

Le décret du Saint-Office du 22 mars 1918 ne se rapporte nommément qu’à la persistance des prescriptions sur le Conseil de vigilance et sur le serment antimoderniste. Mais les raisons données ont un caractère général touchant le modernisme et le maintien des prescriptions qui s’y rattachent, comme nous l’avons indiqué.

Ad III.

On peut dire que Pie X avait en vue à la fois le modernisme ou l’état d’esprit qui le suscitait ou le maintenait, ainsi que la perte de temps dans les études, voire la corruption, si l’on veut, de ces mêmes études. La S. C. des Études et celle des Religieux, faisant, d’après leur objet même, œuvre exclusivement permanente, ont plutôt en vue la seconde de ces considérations.

Il ne faut pas oublier que c’est dans des revues que s’étalèrent, dès l’abord, avant d’être exposés dans un petit nombre de livres retentissants, les principes de la critique moderniste et les destructions qui en découlaient, tant du point de vue historique que du point de vue scripturaire, dogmatique, moral et philosophique.

Il faut remarquer encore que la façon même dont sont rédigées les revues et leur mode de fonctionnement sont absolument opposés à l’enseignement du séminaire ainsi qu’à la méthode des études qui y sont nécessairement en vigueur. Les études du séminaire sont élémentaires : elles ne comprennent pas des notions approfondies, mais un cours suivi, épuisant tous les éléments des diverses doctrines que les clercs doivent étudier et connaître pour être à même de remplir les devoirs du sacerdoce. Les revues, en revanche, approfondissent des points spéciaux, et leurs articles n’ont pas entre eux l’unité que doit avoir un corps de doctrine.

Elles sont généralement inutiles pour des séminaristes qui étudient un cours élémentaire et complet d’une science ecclésiastique. Généralement aussi, elles leur sont nuisibles, au moins en ce sens qu’elles les incitent à approfondir des points particuliers, alors que leur temps serait incontestablement mieux employé à l’étude de leurs manuels, laquelle est nécessaire au séminaire. C’est précisément cette étude qui leur permettra plus tard, selon leurs nécessités ou utilités particulières, de tirer profit des développements plus restreints des revues dans leurs sujets spécifiques.

Il n’est pas besoin, assurément, de souligner combien la lecture des journaux politiques, sociaux ou littéraires ne saurait qu’ôter aux séminaristes un temps précieux, qu’ils doivent utiliser autrement qu’en ces lectures. En même temps, cette lecture pourrait aisément exciter leur esprit à des luttes ou rivalités d’opinions ou de doctrines, sur lesquelles ils n’ont pas à se prononcer dans leur condition actuelle, qui est précisément d’étudier les éléments leur permettant ensuite un choix prudent entre les systèmes.

Ajoutons à cela que le séminaire n’est pas uniquement une maison d’études, mais un lieu de formation morale, où les séminaristes doivent s’efforcer d’acquérir la sainteté que l’Église, traditionnellement, a toujours regardée comme désirable ou nécessaire pour la réception des ordres successifs et l’accomplissement des fonctions du ministère sacerdotal. Le séminaire doit donc être, à ce point de vue, une maison fermée, où les vains bruits du siècle ne doivent pas pénétrer, pas plus que les querelles d’écoles rivales, en quelque science que ce soit.

Le nécessaire en matière d’information sur toutes ces choses doit être fourni par l’action des professeurs, et nos lecteurs ont bien vu que les instructions de Pie X n’avaient garde d’oublier cette fonction des professeurs et la nécessité d’un enseignement structuré.

Il paraît donc tout à fait raisonnable que les lectures, non seulement dangereuses, mais inutiles, et qui prendraient le temps des séminaristes au détriment de ce qui doit être le véritable objet de leur activité, soient écartées du séminaire. Les prescriptions de l’Église relatives aux livres étrangers aux études du séminaire ainsi qu’aux journaux et revues paraissent ainsi marquées du sceau de la véritable sagesse et de la saine prudence.


---




ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

febru🥳8


பிப்ரவரி 08ம் தேதி
அர்ச். தமதிரித்துவ சர்வேசுரனின் டிரினிடேரியன் துறவற சபை ஸ்தாபகரான அர்ச். மாத்தா அருளப்பர் திருநாள்

அருளப்பர், 1160ம் ஆண்டு பிரான்சில் ஃபோகன் தே பார்சலெனோட்டே என்ற இடத்தில் பிறந்தார். 32வது வயதில் குருவானார். 1193ம் ஆண்டு, ஜனவரி 28ம் தேதி, முதல் திவ்யபலிபூசை நிறைவேற்றினார். அப்போது, ஒரு சம்மனசானவர் சங்கிலிகளால் கட்டுண்டிருக்கும் கிறிஸ்தவ அடிமை மற்றும் ஒரு மகமதிய அடிமையை தமது கரத்தில் பிடித்திருப்பதை காட்சியாக கண்டார்.

அந்த காலத்தில், கிறிஸ்தவர்கள் மற்றும் மகமதியர்கள் இடையே சிலுவைப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திவ்யபலிபூசை முடிந்ததும், மகமதியரிடமிருந்து கிறிஸ்தவ அடிமைகளை மீட்டெடுப்பதற்காக, தனது வாழ்நாளையே அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.

அருளப்பர், பிரான்சின் செஃப்ரோய்டு நகரில் அர்ச். வாலோய்ஸ் ஃபெலிக்ஸின் ஆன்ம வழிகாட்டுதலை நாடினார். மகமதியரிடமிருந்து கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்காக, தனி துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்ட அர்ச். ஃபெலிக்ஸும் அவருடன் சேர்ந்தார்.

1198ம் ஆண்டு, அருளப்பர் உரோமாபுரிக்குச் சென்று, பாப்பரசரின் அனுமதி பெற முயன்றார். 3ம் இன்னசன்ட் பாப்பரசர், லாத்தரன் தேவாலயத்தில் திவ்யபலிபூசை நிறைவேற்றியபோது, அருளப்பர் கண்ட அதே காட்சியை அவர் கண்டார். பிறகு, பாப்பரசர், இந்த புதிய துறவற சபையை அங்கீகரித்து, அருளப்பரை அதன் முதல் பொது அதிபராக நியமித்தார்.

"மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் துறவற சபை" என்று அழைக்கப்பட்ட இச்சபை உறுப்பினர்கள், சிவப்பு மற்றும் நீல நிற சிலுவையுடனான வெண் அங்கியை அணிய வேண்டும் என விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. அருளப்பர், அர்ச். ஃபெலிக்ஸுடன் பிரான்சுக்குத் திரும்பி, பிலிப் 2ம் அகஸ்டஸ் அரசரின் அனுமதியுடன் பல மடங்கள் நிறுவினர்.

இந்த துறவற சபையினர், ஸ்பெயின், மொராக்கோ, தூனிஸ் போன்ற நாடுகளுக்கு சென்று, கொடுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ அடிமைகளை பணய தொகை செலுத்தி மீட்டனர். இந்த பணத்தொகையை, ஐரோப்பிய நாடுகளில் இருந்து நன்கொடையாக திரட்டினர்.

அருளப்பர், இறப்பதற்கு முன் அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை சந்தித்தார். 1213ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி, உரோமாவில் மரணமடைந்தார். 1655ம் ஆண்டு, இவரின் பரிசுத்த அருளிக்கங்கள் ஸ்பெயின் நகரமான மாட்ரிட் நகருக்கு மாற்றப்பட்டன. 1666ம் ஆண்டு, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கப்பட்டது.

1599ம் ஆண்டு, டிரினிடேரியன் துறவற சபை, அர்ச். உற்பவத்தின் பாப்டிஸ்ட் அருளப்பர் என்பவரால் சீர்திருத்தப்பட்டது.

சிந்தனை:
நமதாண்டவர் தமது திவ்ய உயிரையே நமக்காக முழுமையாகக் கையளித்ததைப் பின்பற்றி, பிறரை மீட்பதற்காக தன்னையே அர்ப்பணித்த அர்ச். மாத்தா அருளப்பரைப்போல், நாமும் பிறருக்காக, அவர்களின் இரட்சணியத்திற்காக வாழ்வோமாக!

அர்ச். மாத்தா அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!


February 9 - St. Cyril


பிப்ரவரி 09ம் தேதி

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச். சிரில் 

அர்ச். சிரில், கி.பி. 376ம் வருடம், அலெக்சாண்டிரியாவில் பிறந்தார். இவருடைய மாமாவும், அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவுமான தியோ ஃபிலியுஸ், இவருக்கு தபோதன ஜீவியத்திற்கு தேவையான ஞான பயிற்சியை அளிக்க, எகிப்திய பாலைவன தபோதனர்களிடம் அனுப்பினார். 9 வருடங்களுக்குப் பிறகு, தியோஃபிலியுஸ் இறந்தபோது, சிரில் 36வது வயதில் அலெக்சாண்டிரியாவின் மேற்றிராணியாராக பதவி ஏற்றார்.

பதவியை ஏற்றவுடன், அலெக்சாண்டிரியாவில் உள்ள அனைத்து பகைமை கோவில்களையும் மூடினார். திருச்சபையை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். யூதர்களால் ஏற்பட்ட கலவரங்களால், அவர்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கி.பி. 428ம் ஆண்டு, கான்ஸ்டான்டிநோபிளின் பிதாப்பிதாவாக நெஸ்டோரியஸ் பதவி ஏற்றார். அவரது தவறான போதனைகள் பற்றி, அர்ச். சிரில், பாப்பரசருக்கு அறியப்படுத்தினார். மகா பரிசுத்த தேவமாதா பற்றிய திருச்சபையின் போதனைகளை காத்து, நேர்த்தியான பிரசங்கங்களையும் எழுத்துக்களையும் வழங்கினார்.

431ம் ஆண்டு, எபேசுஸ் நகரில் கூடிய திருச்சபைச் சங்கத்தில், "சர்வேசுரனுடைய மாதா" என்ற பட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அர்ச். சிரில், வாழ்நாள் முழுவதும், தேவமாதாவின் மகத்துவம் பற்றியும், ஆண்டவரின் இருவேறு சுபாவங்களை விளக்கும் நூல்களை எழுதியும் பிரசங்கித்தும் தன்னைத்தான் அர்ப்பணித்தார்.

அர்ச். சிரில், மகா பரிசுத்தத் தமதிரித்துவம் மற்றும் ஆண்டவரின் மனிதவதாரம் பற்றிய வேத சத்தியங்களை ஆய்வுகளின் மூலம் விளக்கியார்.  நெஸ்டோரியப் பதிகம் மற்றும் பெலேஜியனிசம் ஆகிய தவறான போதனைகளை அழித்து அகற்றினார்.

அவர், கி.பி. 444ம் ஆண்டு இறந்தார். அர்ச். சிரில் எழுதிய நூல்கள், துல்லியமான சிந்தனை, நுட்பமான வெளிப்படுத்துதல், காரண காரிய திறன் ஆகியவற்றால் சிறந்து விளங்குகின்றன. 1882ம் ஆண்டு, 13ம் சிங்கராயர் பாப்பரசர், அவரை திருச்சபையின் வேதபாரகராக பிரகடனம் செய்தார்.

அர்ச். சிரிலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!


#catholictamil #saintslifeintamil #punithargal

Feb. 9 - கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். அப்போல்லோனியா


பிப்ரவரி 09ம் தேதி

கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். அப்போல்லோனியா திருநாள்

இவள் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த கன்னிகை. மிகுந்த பக்தியுடன் கிறிஸ்தவ வேதத்தை அனுசரித்து வந்தாள். தேசியுஸ் சக்கரவர்த்தி உரோமையை ஆண்டபோது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏற்பட்ட வேதகலாபனத்தின் போது, கிபி 249ம் வருடம், கிறிஸ்தவ வேதத்திற்காக வேதசாட்சியாகக் கொல்லப்பட்டாள். மகிமையான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றாள்.

வேதசாட்சியாக மரிப்பதற்கு முன்பாக, கொலைஞர்கள் இவளுடைய பற்களை பிடுங்கி எடுத்தனர். பின்னர், கிறிஸ்துவை மறுக்காவிட்டால் உயிருடன் நெருப்பில் சுட்டெரிக்கப்போவதாக அச்சுறுத்தினர். இதைக் கேட்டதும், அர்ச். அப்போல்லோனியா கொலைஞர்களிடம் கால அவகாசம் கேட்டாள். ஆண்டவரை நோக்கி மன்றாடி ஜெபித்த பிறகு, நெருப்பில் விழுந்து வேதத்திற்காக உயிரை விட்டாள்.

அர்ச். அப்போல்லோனியாவின் மீதான பக்தி மிகுந்த பிரபலமடைந்தது. மத்திய நூற்றாண்டு காலத்திலிருந்து, இவளுடைய பரிசுத்த பற்கள் புதுமையாக பெருகி, பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. பல்வலியால் அவதிப்படுகிறவர்களுக்கு, அர்ச். அப்போல்லோனியா பாதுகாவலியாகத் திகழ்கிறாள்.

ஐரோப்பிய ஓவியர்கள், அர்ச். அப்போல்லோனியாவின் வேதசாட்சிய மரணத்தை மிக அருமையாக ஓவியங்களாக வரைந்துள்ளனர். இத்தாலிய சிற்பக்கலையில், இவளது உருவப்படங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

17ம் நூற்றாண்டின் ஓவியரும் சிற்பியுமான குயிடோ ரெனி, அர்ச். அப்போல்லோனியாவைச் சித்தரித்திருந்தார். அவரது ஓவியங்களில், அர்ச். அப்போல்லோனியா ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், இரு கொலைஞர்கள் அவளைப் பிடுங்குவதற்கு ஆயத்தமாக, ஒரு குறடை ஏந்தியபடி நிற்பதாகவும் காணலாம்.

அர்ச். அப்போல்லோனியாவின் பரிசுத்த அருளிக்கங்கள் உரோமாபுரியிலுள்ள அர்ச். அப்போல்லோனியா தேவாலயத்தில் பூஜிதமாக வைக்கப்பட்டுள்ளன. வேதசாட்சியின் பரிசுத்த தலை, டிராஸ்ட்வெரெ என்ற இடத்திலுள்ள சாந்தா மரியா பசிலிக்காவில் உள்ளது. பரிசுத்த கரங்கள், சான் லொரென்ஸோ ஃபுவோரி லெ முரா பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய நூற்றாண்டுகளில், பல்வலியால் அவதிப்பட்டவர்களின் வலிவேதனையை அர்ச். அப்போல்லோனியாவின் பரிசுத்த பற்கள் குணப்படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அர்ச். அப்போல்லோனியாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!

#catholictamil #saintslifeintamil #punithargal