Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

August 8 - St. John Maria Vianney - அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்

 ஆகஸ்டு08ம்தேதி

ஸ்துதியரும்‌, பங்கு சுவாமியார்களின்பாதுகாவலருமான
அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்திருநாள்


 

அர்ச்‌. மரிய பாப்டிஸ்ட்வியான்னி அருளப்பர், பிரான்சிலுள்ள லியோன்ஸ்நகருக்கருகிலுள்ள டார்டிலி என்ற கிராமத்தில்‌, 1786ம்வருடம்‌, மே 8ம்தேதி, ஒரு ஏழை விவசாயக்குடும்பத்தில்பிறந்தார்‌. குழந்தைப்பருவ முதற்கொண்டு, இவர்மோட்சத்தை நோக்கியே, ஜீவித்து வந்தார்‌. எப்போதும்பரலோகம்‌, இவரை கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது! இவருக்கு பகுத்தறியும்திறன்ஏறக்குறைய வருவதற்கு முன்பாகவே, இவருடைய அறிவு, சர்வேசுரனை நோக்கி, இவரை இட்டுச்சென்றது; 3 அல்லது 4 வயதானபோது, தனியாக ஒரு மூலையில்விளையாடிக்கொண்டிருக்கிறபோது,அடிக்கடி, ஜெபித்துக்கொண்டிருப்பதை இவர்வழக்கமாகக்கொண்டிருந்தார்‌.

இவருக்கு ஏழு வயதானபோது, பசுக்களை மேய்க்கும்படி, இவர்அனுப்பப்பட்டார்‌. அச்சமயங்களில்‌, அந்த நாள்முழுவதும்ஜெபத்தி னுடைய இனிமையில்செலவழித்து வந்தார்‌. ஆட்டிடையர்களான சிறுவர்களை, அவ்வப்போது ஒன்று கூட்டி, அவர்களுக்குரிய கடமை களை எவ்வாறு கத்தோலிக்க நல்லொழுக்கத்துடன்நிறைவேற்றுவது என்றும்‌, தீமையைமுற்றிலுமாக விலக்கி, நன்மையிலும்‌, புண்ணியங்களிலும்எவ்வாறு நிலைத்திருப்பது என்றும்‌, ஒரு சிறிய அறிவுரையை அளிப்பார்‌. இவர்தன்நல்ல கத்தோலிக்க பெற்றோர்களை, எப்போதும்தன்கண்முன்பாக, தனது மிகச்சிறந்த நல்ல முன்மாதிரிகைகளாகக்கொண்டிருந்தார்‌;

நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கர்களான அவருடைய பெற்றோர்கள்‌, எப்போதும்‌, அவர்களுடைய பிள்ளைகளை, தீமையின்அற்பக்கறையும்தீண்டாதபடிக்கு மிகக்கவனத்துடன்வளர்த்துவந்தனர்‌; பக்தியின்மிகச்சிறந்த முன்மாதிரிகைகளாகவும்ஜீவித்து வந்தனர்‌. கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக வேத விரோதிகளால்‌, வந்த  பிரஞ்சு புரட்சியால்‌, எல்லா தேவாலயங்களும்மூடப்பட்டன. குருக்கள்வெளியேற்றப்பட்டனர்‌. மறைவிலேயே கத்தோலிக்கர்கள்‌, வேத ஒழுங்குகளை அனுசரித்து வந்தனர்‌; ஒரு இரவில்‌, ஒரு தானிய களஞ்சிய சேகரிப்பு அறையில்‌, நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையின்போது, இவர்புதுநன்மை வாங்கினார்‌. இறுதியாக, ஒரு பக்தியார்வமுள்ள குருவானவர்‌, சங்‌. சார்லஸ்பேய்லி, 1803ம்வருடம்‌, எகுல்லியின்பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்‌. இந்த பங்கு டார்டிலியிலிருந்து மூன்று மைல்தூரத்திலிருக்கிறது.

இவருடைய கவனம்‌, விரைவிலேயே புண்ணிய சீலரான அர்ச்‌. மரிய வியான்னியின்மீது, விழுந்தது. சிறுவன்மரிய வியான்னி, குருவாக ஆசித்தால்‌, அதற்கு, தான்உதவுவதாக, சங்‌.சார்லஸ்பேய்லி சுவாமியார்கூறி, உற்சாகப்படுத்தினார்‌. அதை சிறுவனும்ஏற்று, அதற்கு தன்இருதயபூர்வமான சம்மதத்தைத்தெரிவித்தார்‌; அடிக்கடி எகுல்லிக்குச்சென்று, இந்த பக்தியுள்ள குருவானவரிடம்இலத்தீன்மொழிப்பாடத்தைக்கற்றுக்கொள்ளக்துவக்கினார்‌. அப்போது,மரிய வியான்னிக்கு 17 வயது. இவர்பள்ளிக்கூடம்செல்லாததால்‌, இலத்தீன்கற்பது, இவருக்கு மிகக்கடினமான காரியமாயிருந்தது.

ஆனால்‌, இவருடைய ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியார்‌, இம்மாசற்ற நேர்மையான இளைஞர்‌, திருச்சபைக்கு, தன்னிகறற்ற தனது பரிசுத்தத்தனத்தினால்‌, மாபெரும்ஊழியம்செய்வார்‌!  என்பதைக் கண்டுணர்ந்தவராக, இவருக்கு மிகுந்த பொறுமையுடன்‌, கற்றுக்கொடுத்து வந்தார்‌; பள்ளிக்கூடத்திலும்‌, பின்குருமடத்திலும்‌, சக மாணவர்களாலும்‌, ஆசிரியர்களாலும்‌, அதிகமான கேலிப்பரிகாசங் களுக்கு ஆளானார்‌; சிறுமைப்படுத்தப்பட்டார்‌; சர்வேசுரனிடம்தேவ உதவியை நாடியவராக, அர்ச்‌. மரிய வியான்னி, லாலுவெஸ்கிலுள்ள அர்ச்‌. ஜான்பிரான்சிஸ்ரேஜிஸின்கல்லறைக்கு திருயாத்திரை செல்வதாக நேர்ந்து, வேண்டிக்கொண்டார்‌.

சின்ன குருமடத்தில்‌, படிப்பை முடிக்க இயலாமல்‌, கஷ்டப்பட்டார்‌; அடுத்த நிலைக்கான லியோன்ஸ்நகர பெரிய குருமடத்திற்குச்செல்வதற்கான நுழைவு தேர்விலும்தோல்வியடைந்தார்‌; இவருடைய ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியாரின்பரிந்துரையினாலே, இவருக்குப்பெரிய குருமடத்தில்நுழைய அனுமதி கிடைத்தது. “மகா பரிசுத்த தேவமாதாவின்மீது உங்களுக்கு பக்தியிருக்கிறதா?” என்று வினவிய மேற்றிராணியார்‌, இவரிடமிருந்த மகா பரிசுத்த தேவமாதா மீதான பக்தியைக்கண்டபிறகு, இறுதியில்‌, இவருக்கு குருப்பட்டத்தை அளித்தார்‌;

இவ்வாறு, 1815ம்வருடம்‌, ஆகஸ்டு 12ம்தேதியன்று, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்‌, குருப்பட்டம்பெற்றார்‌. இவரின்ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியாரின்உதவி பங்கு குருவாக அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பர்‌, குருப்பட்டம்பெற்றபிறகு, முதலில்‌, எகுல்லிக்கு அனுப்பப் பட்டார்‌. எகுல்லி பங்கு மக்கள்‌, சந்தோஷம்அடைந்தனர்‌. ஏனெனில்‌, அம்மக்கள்‌, இப்புதிய குருவின்ஆழ்ந்த பக்தியைப்பற்றியும்‌, அடக்க வொடுக்கத்தைப்பற்றியும்ஏற்கனவே அறிந்திருந்தனர்‌. ஆத்துமங்களை ஞான வழியில்‌, சிறந்த விதமாக நடத்துவதில்‌, அர்ச்‌. மரிய வியான்னி கொண்டிருந்த அபூர்வ திறன்‌, விரைவிலேயே வெளிப்பட்டது.

ஆத்துமங்களில்தேவ சிநேகத்தை மூட்டி சர்வேசுரனிடம்கூட்டிச்செல்வதில்‌, இவர்உன்னதமான வெற்றிகளை அடையலானார்‌.  1818ம்வருடத்தின்துவக்கத்தில்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பா்‌, ஆர்ஸ்நகரின்பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்‌. லியோன்ஸ்மேற்றிராசன முதன்மைப்பங்கு குருவானவர்‌, இவரிடம்‌, என்நண்பரே! நீங்கள்ஆர்ஸ்நகரத்தின்பங்கு சுவாமியார்‌; இது ஒரு சிறிய பங்கு; இங்கிருக்கிற பங்கு மக்களிடம்‌, சர்வேசுரன்மட்டில்மிகச்சிறிய நேசம்மட்டுமே உள்ளது; அவர்களிடம்உத்தம தேவ சிநேகத்தை அதிகரிக்கச்செய்து, முழுமையான தேவசிநேகத்திற்கு, அவர்களைக்கூட்டி வாருங்கள்‌! என்று கூறினார்‌. 

ஆர்ஸ்நகரம்ஞான ஜீவியத்தில்மிக மோசமான நிலைமையில்இருந்தது. அதற்குக்காரணம்இருந்தது; திருச்சபையின்திருவழி பாட்டின்சடங்குகளில்ஒழுங்காக பங்கேற்ற கத்தோலிக்கர்கள்கூட,மிகக்குறைவான வரையரையினுள்மட்டுமே, வேத கடமைகளை அனுசரித்து வந்தனர்‌. மற்றவர்கள்‌, திருவழிபாடுகளில்கலந்து கொண்டனர்‌; ஆனால்‌, வெளியரங்கமாக மட்டுமே பங்கேற்றனர்‌; ஏனெனில்‌, இந்நகர மக்களுடைய, சிற்றின்பத்கையே எப்போதும்நாடித்திரியும்ஒழுக்கம்கெட்ட சுபாவத்தினால்தான்‌, இந்த ஊரில்கத்தோலிக்க வேத விசுவாசம்வளர்ச்சியடையாமல்‌, மிகக்குறைவாகவும்‌, குற்றுயிராகவும்‌, அழியும்தருவாயிலிருந்தது!

இருப்பினும்‌, காண்போரை உத்தம கத்தோலிக்க ஜீவியத்திற்குக்‌  கொண்டு வரும்‌, புதிய குருவானவருடைய உத்தம நன்மாதிரிகை யினாலும்‌, எளிமையான அடக்காவொடுக்கமுள்ள ஜீவியத்தாலும்கவர்ந்திழுக்கப்பட்டவர்களாகஅந்நகர மக்கள்எல்லோரும்‌, அவரை வியப்புடன்போற்றினர்‌. நல்ல ஞான மேய்ப்பர்‌, தம்மை நோக்கி வராத ஆடுகளை நோக்கிச்செல்வதுபோல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, வேதகடமைகளில்அசமந்தர்களாக, தேவாலயத்திற்கு வராத மக்கள்ஒவ்வொருவரையும்‌, அவரவருடைய வீடு தேடிச்சென்றார்‌; அவர்களிடம்‌, அவர்களுடைய நலத்தின்மீது முழு அக்கறையுடன்பேசி, அவர்கள்அனுபவிக்கிற உலகத்துன்ப உபத்திரவங்கள்‌, அவர்களுடைய பர லோக சம்பாவனையை கூடுதலாக அதிகரிக்கச்செய்கின்றன! என்று ஆறுதல்கூறித்தேற்றி வந்தார்‌; இவ்விதமாக, ஆர்ஸ்நகர மக்களின்ஞான ஜீவியத்தில்மறுமலர்ச்சியைக்கொண்டு வந்தார்‌; நாளடைவில்தேவாலயத்திற்கு வந்த கூட்டம்வெகுவாக அதிகரித்தது.

 ஒவ்வொரு  நாளும்திவ்ய பலிபூசைக்கு திரளான மக்கள்வரத்         துவக்கினா்‌; பாவ சங்கீர்த்தனத்தில்‌, இந்த அர்ச்சிஷ்ட பங்கு குருவானவர்கூறும்‌, தேவ சிநேகத்தை மூட்டக்கூடிய இனிமையான பரிசுத்த அறிவுரையே, திரளான பாவிகளை, அவருடைய பாவசங்கீர்த்தனத்தொட்டிக்கு அழைத்துவந்தது! சர்வேசுரனைப்பற்றியும்‌, மரணத்தைப்பற்றியும்‌, மோட்சத்தைப்பற்றியும்‌, நரகத்தைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவ நற்கருணையைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றியும்‌, இவர்நிகழ்த்திய உன்னதமான ஞானப்பிரசங்கங்களைக்கேட்ட மக்கள்‌, தங்கள்பாவாக்கிரமங்களை நினைத்து, உத்தம மனஸ்தாபத்துடன்‌, வாழ்நாளிலெல்லாம்இல்லாத அளவிற்கு திரளாகக்கண்ணீர்வடித்து அழுதனர்‌.

ஆர்ஸ்என்ற இந்த நகரில்‌, விரைவிலேயே ஒரே ஒரு குரல்ஒலி தான்கேட்கத்துவங்கியது: “எங்கள்பங்கு சுவாமியார்‌, ஒரு அர்ச்சிஷ்டவா்‌!” என்பது தான்‌, அந்த குரலொலி! ஆனால்‌, இந்த கத்தோலிக்க ஊரில்‌, இவ்வுன்னத மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு வெகுக்காலம்‌, அர்ச்‌. மரிய வியான்னி போராடி உழைக்க நேர்ந்தது! சிற்றின்பத்தின்மீதான சிநேகம்‌, மிகக்கடுமையாக அர்ச்சிஷ்டவர்‌, தன்பங்கு மக்களிடையே மேற்கொண்ட ஞான ஜீவிய சீர்திருத்தத்தை எதிர்த்து நின்றது! அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர், தன்அயரா உழைப்பினால்‌, அந்த பாவ சிநேகத்தை, மக்களிடையே முற்றிலுமாக அகற்றி அழித்து, அவர் களுடைய இருதயங்களை தேவசிநேகத்தினால்வெற்றி கொண்டார்‌!

 ஆர்ஸ்நகரில்இப்பரிசுத்த குருவானவர்‌, அடைந்த இம்மகா பெரிய ஞான வெற்றியைப்பற்றிய செய்தி ஐரோப்பா முழுவதும்‌, துரிதமாகப்பரவியது; உயிருடன்வாழும்ஒரு அர்ச்சிஷ்டப்பங்கு சுவாமியாரைக்காணவும்‌, அவரிடம்பாவசங்கீர்த்தனம்செய்யவும்‌, எல்லா நகரங்களிலிருந்தும்மக்கள்கூட்டம்‌, ஆர்ஸ்நகரை நோக்கி, திருயாத்திரையாக வரத் துவங்கியது. ஐரோப்பாவிலிருந்து எல்லா நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், இந்நகரை நோக்கி வருடந் தோறும், அர்ச்சிஷ்டவரைக் காணவும், அவரிடம் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யவும்,  20000 பேர் திருயாத்திரையாக வரத்துவக் கினர்! இத்தகைய உன்னதமான ஞான வளர்ச்சி ஐரோப்பாவில்ஏற்படத்துவங்கியதற்குக்காரணம்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர் அனுசரித்து வந்த மிகக்கடினமான ஜெப தபப்பரிகார ஜீவியம்தான்‌!



அர்ச்‌. மரிய வியான்னி, ஒவ்வொரு நாளும்‌, இரவில்‌, ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம்மட்டுமே உறங்குவதற்கு செலவழித்தார்‌. நடு இரவிற்குப்பிறகு, சிறிது நேரம்கழித்து, இவர்பாவசங்கீர்த்தனம்கேட்க விரைந்து செல்வார்‌: அங்கேயே அந்த நாளின்எஞ்சிய நேரமெல்லாம்பாவசங்கீர்த்தனம்கேட்டுக்கொண்டிருப்பார்‌; அயல்நகரங்களிலிருந்து வருகிற மக்கள்கூட்டம்‌, சில சமயங்களில்‌, இரண்டு அல்லது முன்று நாட்கள்தொடர்ந்து, இவரிடம்‌, பாவசங்கீர்த்தனம்செய்வதற்காக வரிசையில்காத்திருப்பார்கள்‌; காலையில்திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக மட்டுமே, இவர்பாவசங்கீர்த்தனத்தொட்டியை விட்டு எழுந்து செல்வார்‌.

சில சமயங்களில்‌, ஒரு சுருக்கமான ஞான உபதேசத்திற்கும்‌, உணவு நேரத்தில்மிகச்சிறிதளவான உணவிற்கும்எழுந்து செல்வார்‌. உறக்கமும்போதிய உணவும்இல்லாமல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, எவ்வாறு நாள்முழுவதும்‌, இவ்விதமாகக்கடுமையான உழைப்பில்ஈடுபடுதற்குத்தேவையான பலத்தைப்பெற்றார்‌! என்பதைப்பற்றி எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்‌; ஏனெனில்‌, இவர்எப்போதும்‌, பலவீன ராயிருந்தார்‌. மேலும்‌, இது பற்றாது என்பதைப்போல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, தன்சரீரத்தை மிகக்கடுமையான ஒறுத்தல்‌, சாட்டையடிகள்போன்ற தபசுகளால்‌, ஒறுத்தார்‌; இது, சர்வேசுரனை எவ்வளவுக்கு அதிகமாக மகிழ்வித்தது! என்றால்‌, இன்னும்கூடுதல்உள்ளரங்க சோதனைகளை, அனுப்பி வைத்தார்‌; அதிலும்குறிப்பாக இரவு நேரத்தில்‌, பசாசு, இவரை அதிகம்உபாதித்து வந்தது!

இது, அர்ச்‌. வனத்து அந்தோணியாருக்கு பசாசினால்வந்து சோதனைகளைப் பற்றி அர்ச்‌. அத்தனாசியார்‌, விவரிப்பதை  நமக்கு ஞாபகப்படுத்துகின்றது! வல்லமையைப்பற்றியும்‌, அழகைப்பற்றியும்‌, நீதிமானுடைய ஆத்துமத்தின்மாட்சிமிக்க பேரெழிலைப்பற்றியும்‌, தேவவிசுவாசம்நமக்குக்கற்பிக்கிற உன்னத குணாதிசயங்க ளெல்லாம்‌, அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பரிடம்‌, தன்னிகரற்ற விதமாகத்திகழ்ந்தனதன்னிடம்வருகிற பாவிகளுடைய இருதய உள்ளரங்க ஆத்துமத்திலிருக்கும்இரகசியங்களையும்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்அறியக்கூடிய திறனைக்கொண்டிருந்தார்‌. ஒரு சமயம்‌, தன்னிடம்வந்த ஒரு இளம்பெண்ணிடம்‌, அவள்அணிந்திருந்த மகா பரிசுத்த தேவ மாதாவின்அற்புதப்பதக்கம்தான்‌, அவளிடம்‌, அன்றொரு நாள்‌, நடை பெற்ற ஒரு நடன நிகழ்ச்சியில்‌, ஒரு அழகிய வாலிப உருவத்தில்தோன்றி எல்லா பெண்களுடனும்நடனமாடிய பசாசை, நெருங்கக்கூடாமல்‌, செய்தது! என்கிற உண்மையைக்கூறினார்‌.

1859ம்வருடம்‌, ஜூலை 29ம்தேதியன்று, அர்ச்‌. மரிய வியான்னி  அருளப்பருக்கு, 73 வயதானபோது, வழக்கம்போல்‌, 16 அல்லது 17 மணி நேரம்பாவசங்கீர்த்தனம்கேட்டார்‌. அப்போது, திடீரென்று, பலமெல்லாம்இழந்து மயங்கி விழுந்தார்‌; ஆகஸ்டு மாதம்‌ 4ம்தேதி காலையில்‌, சங்‌.மோனின்என்ற மடாதிபதி, இறக்கிறவர்களுக்கான ஜெபத்தை, சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசுகள்இவரைச்சந்திக்க வருவார்களாக! இவரை வழிநடத்தி, பரலோக ஜெருசலேமுக்குக்கூட்டிச்செல்வார்களாக! என்கிற ஜெபத்தை ஜெபித்தபோது, அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பருடைய பரிசுத்த ஆத்துமம்‌, பரலோகத்தை நோக்கிப்பறந்து சென்றது! ஆனால்‌, ஆத்துமங்களை சர்வேசுரனிடம்கூட்டிவருகிற இவருடைய உன்னத அலுவல்‌, இவருடைய மரணத்துடன்முடியவில்லை!

 அர்ச்‌. பத்தாம்பத்திநாதர்‌, 1905ம்வருடம்‌, ஜனவரி 8ம்தேதியன்று, இவருக்கு முத்திப்பேறு பட்டம்அளித்தபோது, அதில உலகமும்அகமகிழ்ந்தது!  1925, மே 31ம்தேதியன்று, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்‌, அளிக்கப்பட்டது. 11ம்பத்திநாதர்பாப்பரசர்‌, 1929ம்வருடம்‌, இவரை சகல மேற்றிராசனப்பங்குக்குருக்களுக்கும்பாதுகாவலராக ஏற்படுத்தினார்‌. இவருடைய பரிசுத்த சரீரம்புதுமையாக அழியாத சரீரமாகத்திகழ்கின்றது.

 

அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!

August 8 - ST. CYRIACUS - அர்ச்‌. சிரியாக்கூஸ்

 ஆகஸ்டு 0️8ம்தேதி

தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான
அர்ச்‌. சிரியாக்கூஸ்திருநாள்


 

 அர்ச்‌. சிரியாக்கூஸ்‌, திருச்சபையின்‌ 14 உதவியாளர்களில்ஒருவராக போற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறார்‌. மேலும்‌, திருச்சபையின்மாபெரும்வேதசாட்சியான தியாக்கோன்களான அர்ச்‌. முடியப்பா்‌, அர்ச்‌. லாரன்ஸ்‌, சரகோசாவின்அர்ச்‌. வின்சென்ட்ஆகியோருடன்ஒருவராகக்திகழ்கிறார்‌. உரோமாபுரியின்பத்ரீசிய உயர்குடி மகனாகப்பிறந்தார்‌; கத்தோலிக்கரானார்‌; தன்ஆஸ்திகளையெல்லாம்‌, ஏழைகளுக்குக்கொடுத்தார்‌; முதலாம்மர்செல்லினுஸ்பாப்பரசர்‌, இவருக்கு தியாக்கோன்பட்ட மளித்தார்‌. பரிசுத்த தியாக்கோனான சிரியாக்கூஸ்‌, உரோமையின்கொடுங்கோல் சக்கரவர்த்தி தியோக்ளேஷியனின்மகளான ஆர்டிமிசியாவிடமிருந்து பசாசுகளை ஓட்டினார்‌; இவளும்‌, இவளுடைய தாயான அர்ச்‌. செரினாவும்‌, கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினார்‌; மேலும்‌, பெர்ஷிய அரசரான ஷாபுரின்மகளான ஜோபியாஸிடமிருந்து, பசாசுகளை ஓட்டி விரட்டினார்‌;

இப்புதுமையால்‌, அரசருடைய குடும்பமும்‌, பெர்ஷிய நாட்டின் ‌400 அஞ்ஞானிகளும்கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினர்‌. பெர்ஷியாவி லிருந்து, இவர்‌, உரோமைக்குத்திரும்பி வந்தபோது, உரோமையின்மாக்சிமின்என்ற அஞ்ஞானியும்கிறீஸ்துவர்களைக்கொடூரமாக உபத்திரவப்படுத்தியவனுமான சக்கரவர்த்தி மாக்ஸ்மின்‌, மாபெரும்குளியல்அறைகளுடனான ஒரு பிரம்மாண்டமான அழகிய அரண்மனையைக்கட்டிக்கொண்டிருந்தான்.‌ உரோமை விக்கிரகங் களை வழிபட மறுத்த பத்தாயிரத்திற்கு மேலான கத்தோலிக்கர்களை, குருக்களை, சிறைபிடித்து அடிமைகளாக்கி, இந்த கட்டிட வேலையில்‌, அமர்த்தினான்‌. இவர்களுக்கு சொற்ப உணவை அளித்தான்‌; கடின வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்‌!

ஆகவே, தியாக்கோன்சிரியாக்கூஸ்‌, தன்சக தோழர்கள்சிலருடன்சேர்ந்து, மற்ற விசுவாசிகளிடமிருந்து உணவையும்‌, மற்ற அத்தியா வசியப்பொருட்களையும்சேகரித்து, இரகசியமாக, அடிமைகளாயிருந்த கிறீஸ்துவர் களுக்குக்கொடுத்து வந்தார்‌. இதைப்பற்றிக்கேள்விப்பட்ட மாக்ஸ்மின்‌, இவரைக்கைதுசெய்து, கொடிய சித்ரவதைகள் செய்து உபத்திரவப்படுத்தினான்‌; இவருடைய சரீரத்தின்மீது, கொதிக்கிற கீல்ஊற்றப்பட்டது: இறுதியாக, வியா ஒஸ்டென்ஸ்என்ற இடத்தில்‌, 304ம்வருடம்‌, 8ம்தேதியன்று, இவரை தலையை வெட்டிக்கொன்றனர்‌;

இவருடன்இவருடைய சக தோழர்களான லார்ஜூஸ்‌, ஸ்மாராக்டுஸ்ஆகிய இருவரும்‌, இன்னும்மற்ற இருபது கத்தோலிக்கர் களும்வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. அர்ச்‌.சிரியாக்கூஸின்பரிசுத்த சரீரம்‌, உரோமையிலுள்ள வியா லாட்டாவிலுள்ள மகா பரிசுத்த தேவமாதா தேவாலயத்தில்அடக்கம்செய்யப்பட்டது. இந்த தேவாலயத்தில்‌, இவருடைய சகாக்களின்பரிசுத்த சரீரங்களும்‌, இன்னும்அநேக வேதசாட்சிகளின்பரிசுத்த அருளிக்கங்களும்பூஜிதமாக அடக்கம்செய்யப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்த இரத்தம்அடைக்கப்பட்டிருக்கிற ஒரு அருளிக்கக்குப்பி, டோர்ரே லே நோச்செல்லேயிலுள்ள பரிசுத்த சந்நிதானத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! மரணப்படுக்கையிலிருக்கிற போது, வருகிற சோதனைகள்நேரத்தில்அர்ச்‌. சிரியாக்கூஸிடம்‌, வேண்டிக் கொள்வது மிகுந்த பலனை அளிக்கக்கூடிய பக்தி முயற்சியாகும்‌. பசாசுகளின்பிடியிலிருந்து விடுதலை அடைவததற்கும்‌, அர்ச்‌.  சிரியாக்கூஸிடம்வேண்டிக்கொள்ளலாம்‌.

 தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. சிரியாக்கூஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


புதன், 7 ஆகஸ்ட், 2024

Aug. 07 - St. Cajetan - அர்ச்‌. கயேத்தான்‌

 ஆகஸ்டு 0️7ம்தேதி 

ஸ்துதியரும்தியேட்டைன்துறவற சபையின்ஸ்தாபகருமான அர்ச்‌.கயேத்தான்திருநாள்

 

 இவர்இத்தாலியிலுள்ள விசென்ஸா என்ற உயர்குடியில்‌ 1480ம்வருடம்‌, அக்டோபர்‌ 1ம்தேதி பிறந்தார்‌. இவருடைய 2வது வயதில்‌, இவருடைய தந்தை இறந்தார்‌.இவர்‌, பதுவா பல்கலைக்கழகத்தில்சட்டக்கல்லூரியில்கல்வி பயின்றார்‌. 24வது வயதில்‌, சமூக சட்டத்துறையிலும்‌, வேத இயல்சட்டத்துறையிலும்முனைவர்பட்டம்பெற்றார்‌; 1506ம்வருடம்முதல்‌, 2ம்ஐூலியஸ்பாப்பரசரிடம்திருச்சபையின்அரசாங்க விவகார அதிகாரியாக, இவர்தன்அலுவலைத்துவக்கினார்‌; வெனிஸ்குடியரசை, பாப்பரசருடன்சமரசம்செய்து கொள்ளச்செய்து, பாப்பரசருடன்நல்லுறவு கொள்ளச்செய்தார்‌. 1513ம்வருடம்‌, 2ம்ஜூலியஸ்பாப்பரசர்இறந்தபிறகு, அர்ச்‌.கயேத்தான்‌, பாப்பரசருடைய அரண்மனையிலிருந்து விலகி வெளியேறினார்‌. இவர்‌ 1516ம்வருடம்குருப்பட்டம்பெற்றார்‌; அடுத்த வருடம்‌, இவருடைய தாயார்இறந்தபிறகு, விசென்ஸாவிற்கு இவர்மறுபடியும்வரவழைக்கப்பட்டார்‌; அங்கு, குணப்படுத்த முடியாத நோயில் பீடிக்கப்பட்டிருந்த வியாதியஸ்தா்களுக்காக, 1522ம்வருடம்‌, ஒரு மருத்துவமனையைக்கட்டினார்‌.

 இவ்விதமாக இவருடைய ஜீவிய காலம்முழுவதையும்நிரப்பியிருந்த உத்தமமான பிறர்சிநேக அலுவல்களின்அத்தாட்சியாக இம்மருத்துவமனை திகழ்கிறது! ஆனால்‌, ஆத்துமங்கள்மீது, இவர்கொண்டிருந்த ஆர்வமானது, அக்காலத்தில்பல்வேறு நிலைகளிலிருந்த குருக்களிடையே நிலவியதும்‌, அவர்களுடைய ஞான ஜீவியத்தின்நோயாக இருந்ததும்‌, அவர்களிடையே தொற்று நோயைப்போல்பரவியிருந்ததுமான அரசியல்ஒழுங்கீனங்களால்‌, மிக ஆழமமான தாக்கத்தையும்‌, உத்வேகத்தையும்கொண்டிருந்தது! முன்னொரு காலத்தில்‌,அர்ச்‌. அகுஸ்தீனார்செய்ததைப்போல, இவரும்‌, தீவிர முனைப்புடன்குருக்களிடையே நிலவிய சீர்கேட்டை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்காக, குருக்களை சீர்திருத்துவதற்காக, ஒரு துறவற குருக்கள்சபையை ஏற்படுத்தினார்‌; இக்குருக்களுடைய ஜீவியம்‌, துறவற மடத்தின்ஜீவியமும்‌, மக்களிடையே குருக்கள்ஆற்ற வேண்டிய ஆன்ம இரட்சணிய அலுவலின்ஜீவியமும்ஒன்றிணைந்த துறவற ஜீவியமாக இருந்தது! இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை என்று அழைக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, 1523ம்வருடம்‌, உரோமாபுரிக்குத்திரும்பி வந்தபோது, இத்துறவற சபையை ஸ்தாபித்தார்‌.

1524ம்வருடம்‌, 7ம்கிளமென்ட்பாப்பரசர்‌, இத்துறவற சபையை அங்கீகரித்து, அதற்கான அனுமதியை அளித்தார்‌. இத்துறவற சபையை ஸ்தாபிப்பதில்‌, அர்ச்‌. கயேத்தானுக்கு உறுதுணையாக இருந்து, உதவிய முதல்நான்கு சகதுறவிகளில்ஒருவர்‌, ஜான்பியத்ரோ கராஃபா, சியட்டியின்மேற்றிராணியாராயிருந்தார்‌. இந்த சியட்டி நகரம்‌, இலத்தீனில்தியேட்டே என்று அழைக்கப்படுகிறது; இம்மேற்றிராணி யார்‌, பின்னாளில்‌ 4ம்சின்னப்பர்பாப்பரசரானார்‌; இருப்பினும்‌, இவர்‌, தியேட்டே மேற்றிராணியாராக இருந்த போது, இத்துறவற சபையின்தலைமை அதிபராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதால்‌, இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை, என்று அழைக்கப்பட்டது. ஒரு சமயம்‌, உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின்பெரிய பசிலிக்கா தேவாலயத்தில்‌, கிறீஸ்துமஸ்திருநாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்திருக்கரங்களிலிருந்து, தேவபாலனான திவ்ய குழந்தை சேசுவை, அர்ச்‌.கயேத்தான்நேரடியாக தன்கரங்களில்பெற்றுக்கொள்கிற மகா உன்னதமான பாக்கியம்‌, பெற்றார்‌. இத்துறவற சபை, மெதுவாக வளர்ந்தது.

1527ம்வருடம்‌, 5ம்சார்லஸ்உரோமையை ஆக்ரமித்து, அதை சூரையாடியபோது, அந்த அரசனுடைய வீரர்கள்‌, அர்ச்‌.கயேத்தானை சித்ரவதை செய்தனர்‌; இவருடைய தியேட்டைன்துறவியர்‌, உரோமையை ஆக்ரமித்த வீரர்களால்‌, அநேக அவசங்கைகளையும்‌, துன்ப உபத்திரவங்களையும்‌ , அனுபவித்தபிறகு, இத்துறவற சபையிலிருந்த 12 துறவியரும்‌, உரோ மையிலிருந்து தப்பி, வெனிஸ்நகருக்குச்சென்றனர்‌. அங்கு, கயேத்தான்‌, அர்ச்‌. ஜெரோம்எமிலியானியை சந்தித்தார்‌. இவருடைய துறவற குருக்கள்சபையை ஸ்தாபிப்பதில்‌, இதற்கு முன்பாக,இவருக்கு அர்ச்‌.கயேத்தான்‌, உதவியிருந்தார்‌. இங்கு ஏழைகளுக்கு உதவுவதற்காக, ஒரு வங்கியை அர்ச்‌.கயேத்தான்‌, நிறுவினார்‌. அச்சமயம்‌, அங்கே, ஏழைகள்‌, கடன்தருகிற பண முதலைகளால்‌, மாபெரும்விதமாக துன்புறுத்தப் பட்டிருந்தனர்‌. இவ்வங்கி, பின்னாளில்‌, நேப்பிள்ஸ்வங்கி என்று அழைக்கப்பட்டது. நேப்பிள்ஸிலும்‌, ஒரு துறவற மடத்தை ஸ்தாபித்து, லூத்தரன்பதித சபையை, அங்கிருந்து விரட்டினார்‌. அர்ச்‌. கயேத்தான்‌, 1547ம்வருடம்‌,ஆகஸ்டு 7ம்தேதியன்று, பாக்கியமாய்மரித்தார்‌. இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள்‌, நேப்பிள்ஸிலிருக்கும்அர்ச்‌.சின்னப்பா்பசிலிக்கா தேவாலயத்தில்‌, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1629ம்வருடம்‌, அக்டோபர்‌ 8ம்தேதியன்று, 8ம்உர்பன்பாப்பரசரால்இவருக்கு முத்திப்பேறு பட்டம்அளிக்கப்பட்டது. 1671ம்வருடம்‌,ஏப்ரல்‌ 12ம்தேதியன்று, 10ம்கிளமென்ட்பாப்பரசரால்‌, இவருக்கு, அர்ச்‌. லீமா ரோசம்மாள்‌, அர்ச்‌. லூயிஸ்பெல்டிரான்‌, அர்ச்‌.பிரான்சிஸ்போர்ஜியா, அர்ச்‌.பிலிப்பெனிசியார்ஆகியோருடன்சேர்த்து, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, அர்ஜென்டீனா நாட்டிற்கும்‌, வேலை தேடுகிறவர்களுக்கும்பாதுகாவலர்‌.

ஸ்துதியரான அர்ச்‌.கயேத்தானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

August 6 - Transfiguration of Our Lord - நமதாண்டவர்‌ மறுரூபமான திருநாள்

 

ஆகஸ்டு 06ம்தேதி

நமதாண்டவர்மறுரூபமான திருநாள்


 தமது பரிசுத்தப்பாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்‌, நமதாண்டவர்‌,தம்பிரிய அப்போஸ்தலர்களான அர்ச்‌. இராயப்பர்‌, அர்ச்‌. யாகப்பா்‌, அர்ச்‌. அருளப்பருடன்கலிலேயாவிலுள்ள தாபோர்மலை உச்சிக்குச்சென்றார்‌. இந்த மலையின்உச்சி , திபேரியக்கடலிலிருந்து ஏறக்குறைய 2000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கு தான்‌, ஆண்டவர்தமது தேவமகிமையை வெளிப்படுத்தினார்‌: அவருடையமுகம்சூரிய னைப்போல்துலங்கினது; அவருடைய வஸ்திரங்கள்வெண்மை யாயின! (மத்‌ 17:2) வேத சட்டத்தையும்‌, தீர்க்கதரிசனங்களையும்குறிக்கும்விதமாக, மோயீசனும்‌, எலியாசும்‌, மறுரூபமான ஆண்டவரை ஆராதிக்கிறதாகக் காணப்பட்டார்கள்‌; “இவரே நமது பிரிய குமாரன்‌! இவரில்நாம்பூரண பிரியமாயிருக்கிறோம்!” என்று பகிரங்கமாக பிதாவாகிய சர்வேசுரன்தாமே,தமது ஏகக்குமாரனைப்பற்றி அறிவிக்கிற குரலொலி, மறுபடி‌, இச்சமயத்திலும்கேட்கப்படுகிறது. நமதாண்டவரின்பகிரங்க ஜீவியத்தின்உச்சக்கட்டமாகவும்‌, மோட்ச மகிமையின்முன்சுவையாகவும்திகழ்கிற நமதாண்டவரின்மகிமைமிகு மறுரூபத்திருநிகழ்வு, இப்பிரிய அப்போஸ்தலர்களின்இருதயங்களில்‌, ஆண்டவரின்பரிசுத்த உபாதனையினுடையபாடுகளின்நாளில்‌, தேவ விசுவாசத்தை உறுதிப்படுத்தும்விதமாக நிகழ்ந்தது!

பரம இரகசியமான இத்திருநிகழ்வு நிகழ்ந்த இடத்தில்‌, தாபோர்மலையில்‌,4ம்நூற்றாண்டில்ஒரு தேவாலயம்கட்டப்பட்டு, ஆகஸ்டு 6ம்தேதி அபிஷேகம்செய்யப்பட்டது. ஆண்டவருடைய மகிமைமிகு மறுரூபமான திருநிகழ்வுக்குத்தோத்திரமாக, மத்திய கிழக்கு நாடுளில்திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, இதே காலத்தில்‌, துவங்கியது. ஐரோப்பாவின்அநேக பகுதிகளில்‌ , இந்த திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, 8ம்நூற்றாண்டிலிருந்து துவங்கியது . 1456ம்வருடம்‌, ஜூலை 22ம்தேதியன்று, பெல்கிரேடிட்டில்  துலுக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த ஒரு சிலுவைப்போரில்‌, மிகச்சிறிய கத்தோலிக்கர்களுடைய படை, ஒரு மாபெரும்துருக்கியப்படையை நசுக்கி, அதன் மீது வெற்றியடைந்தது! உரோமாபுரியை நோக்கி, அந்நகரத்தைக் கைப்பற்றும்படியாக அணிவகுத்துச்சென்ற 1,20,000 மகமதிய வீரர்களைக்கத்தோலிக்க இராணுவம்‌,கொன்று குவித்தது; பல்லாயிரக்கணக்கான துலுக்க வீரர்கள்‌,இப்போரில்படுகாய மடைந்தனர்‌; இப்போரில்கத்தோலிக்க இராணுவம்அடைந்த வெற்றியின்செய்தி, ஆகஸ்டு மாதம்‌ 6ம்தேதி , 3ம்காலிஸ்துஸ்பாப்பரசரை அடைந்தது. ஆண்டவருக்கு நன்றியறிதலாக, ஆண்டவருடைய மறுரூபமான திருநாளை, ஏற்படுத்தி,ஆகஸ்டு 6ம்தேதியன்று, அடுத்தவருடத்திலிருந்து, இத்திருநாளை அகில உலகம்முழுவதும்கொண்டாடும்படியாகக்கட்டளையிடடார்‌. மேலும்‌, இந்தபோரில்அடைந்த வெற்றிக்கு, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்தும்விதமாக, 3ம்காலிஸ்துஸ்பாப்பரசர்‌, இனிவரும்காலத்தில்‌, எல்லா தேவாலயங்களிலும்மத்தியம்‌ 12 மணிக்கு தேவமாதாவிற்குத்தோத்திரமகிமையாக, திரிகால ஜெபம்ஜெபிக்கும்படியாக, தேவாலய மணிகள்அடிக்கப்பட வேண்டும்என்று , உத்தரவிட்டார்‌. ஏனெனில்மத்தியம்‌ 12 மணிக்கு தான்‌, துலுக்கப்படை நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது! எனவே, அடுத்த தடவை நீ மத்தியம்‌, தேவாலயங்களில்‌ 12 மணி திரிகால ஜெபத்திற்கான மணி சத்தத்தைக்கேட்கும்போது, திரிகால ஜெபத்தை பக்தி பற்றுதலுடன்ஜெபி! மேலும்‌, சத்துருக்களுக்கு எதிராக மகா பரிசுத்த தேவமாதா கொண்டிருக்கிற மகத்துவமிக்க இராணுவ வல்லமையைப்பற்றி நினைவு கூர்வாயாக!

! மகா பரிசுத்த மரியாயே! தேவரீர்போரணியிலிருக்கும்இராணுவத்தைப்போல்‌, மகா வல்லமையுள்ளவர்களாயிருக்கிறீர்‌!

திபேரிய ஏரி, கலிலேயக்கடல்‌, ஜெனசரேத்ஏரி, திபேரியக்கடல்ஆகிய பெயர்கள்எல்லாம்‌, இஸ்ரேலில்உள்ள ஒரே ஏரியைக்குறிக்கின்றன. இது மிகப்பெரிய நல்ல தண்ணீர்ஏரி; இதன்சுற்றளவு ஏறக்குறைய 53 கி.மீ. இதன்நீளம்‌, 23 கி.மீ ; அகலம்‌ 13 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து, 209 மீ கீமே தாழ்வாக இருக்கிறது! உப்புத்தண்ணீர்ஏரியான சாக்கடலுக்கு அடுத்தபடியாக, உலகத்திலேயே இரண்டாவது மிக தாழ்ந்த ஏரியாக, இந்த ஏரி இருக்கிறது. இந்த கலிலேயக்கடலிற்கு பூமிக்கு அடியிலிருக்கும்நல்ல தண்ணீர்ஊற்றுகளிலிருந்து தண்ணீர்வருகிறது; அத்துடன்‌, இதற்கு வருகிற தண்ணீருக்கு முதன்மையான முக்கிய ஆதாரமாயிருப்பது, யோர்தான்நதியாகும்‌. யோர்தான்நதி, பாலஸ்தீனத்தின்வடக்கிலிருந்து, தெற்குப்பகுதிக்கு, இக்கலிலேயக்கடல்வழியாகப்பாய்ந்து ஓடுகிறது.