Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 12 பிப்ரவரி, 2022

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

 பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பருடைய மகிமைகள்


சங்.பினே சுவாமி


“சேசுநாதர்சுவாமியின் தந்தை” என்ற உன்னதமான பட்டமே, அர்ச். சூசையப்பருடைய பரிசுத்ததனத்தினுடையவும், தேவவரப்பிரசாதங் களினுடையவும் முதல்அளவுகோலாக திகழ்கின்றது. மனிதவதாரம் எடுத்த தேவ வார்த்தையானவருடைய தேவ ஆளுக்கு, ஊழியம் செய்யும் அலுவலைப் பெற்ற மனிதர், மாபெரும் பாக்கியம் பெற்றவர். அவர், அவ்வுன்னதமான அலுவலைத் தகுதியுடன் பெற்று, மாபெரும் கீர்த்தியுடன் விளங்குவார் என்று, புகழ்பெற்ற வேதஇயல் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். தேவமாதாவுக்கு அடுத்தபடியாக, அர்ச். சூசையப்பரைத் தவிர வேறு எந்த மனிதனும் இவ்வளவு நெருக்கமாக, நமது ஆண்டவரின் அருகில், அவருக்கு ஊழியம் செய்யும்படியாக, அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அர்ச். சூசையப்பர், நித்திய பிதாவினுடைய தேவ வரப்பிரசாதங்களில் அடையப்பெற்ற பெரும்பான்மையான பங்கை, வேறு எவரும், அடைந்து கொள்ளமுடியவில்லை. நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்துடன், தேவ மனித ஐக்கியத்தின் மூலம், ஒன்றிணைந்த ஆண்டவருடைய பரிசுத்தமனிதத்துவம், அளவில்லாத தேவ வரப்பிரசாதங்களைக் கொண்ட ஒரு முழு உலகத்தையேப் பெற்றுக்கொண்டது.

ஆண்டவரைத் தமது திருக்கன்னிவுதரத்தில் ஒன்பது மாதமளவாக சுமந்தவர்களும், அவரை ஆயிரம் தடவையாவது, தமது கரங்களில் ஏந்தினவர்களுமான, அவருடைய மிகவும் பரிசுத்த தாயாரான, தேவமாதா, நம் நேச ஆண்டவருக்கு மிக நெருங்கிய விதத்தில் ஊழியம் செய்யத் தகுதி பெற்றிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு, ஆண்டவருடைய ஆராதனைக்குரிய ஆளுமைக்குப் பாதுகாவலரும், வளர்ப்புத் தந்தையுமான அர்ச். சூசையப்பர், நம் திவ்ய இரட்சகருக்கு நெருங்கிய விதமாக ஊழியம் செய்யும்படி, அவரிடம் வருகின்றார். மாமிசமான தேவ வார்த்தையானவருக்கு,இவ்வளவு நெருங்கிய முறையில்,ஊழியம் செய்வதற்கு,வேறு எந்த அர்ச்சிஷ்டவரும் அழைக்கப்படவில்லை.இந்த அலுவலின் உன்னதமான மாண்பிற்கு ஏற்றாற்போல், அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, வேறு யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலர்களுடைய அலுவலே, திருச்சபையில் அதிமிக உயர்வானது என்று அர்ச். அன்செல்ம் குறிப்பிடுகின்றார். ஆனால், அர்ச். சுவாரெஸூடன் சேர்ந்து, “அர்ச். சூசையப்பருடைய அலுவல், அதை விட அதிக மாட்சிமையும் உத்தமமுமானது. தேவமாதாவினுடையவும் அர்ச். சூசையப்பருடையவும் அலுவல், சர்வேசுரனுடைய திருச்சபையின் சகல அர்ச்சிஷ்டவர்களுடைய அந்தஸ்தையும் விட பல மடங்கு உயரியநிலைமையைப் பெற்றது” என்று நாமும் கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக