Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 9 பிப்ரவரி, 2022

பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்

 பாத்திமா காட்சிபெற்ற சிறுமியான அர்ச்.ஜசிந்தா கூறிய ஞானமிக்க அறிவுரைகள்


1. சரீரத்தின் பாவங்களே, ஆத்துமங்களை நரகத்திற்கு இட்டுச்செல்வதற்கு ஏதுவான பாவங்களாக இருக்கின்றன.

2. பரிசுத்த கற்பை அனுசரிப்பதற்கு, சரீரத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆத்துமத்தைப் பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு, பாவம் கட்டிக்கொள்ளக் கூடாது: தீமையானவற்றைப் பார்க்கக்கூடாது, திருடக்கூடாது, பொய்பேசக் கூடாது,எவ்வளவு கடினமானதொன்றாக இருந்தபோதிலும் உண்மையே பேச வேண்டும்.

3. நம் நேச ஆண்டவரை மிகவும் நோகச்செய்யும் ஆடைகளை அணியக்கூடிய நாகாரீகங்கள் இனி தோன்றும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் உடை உடுத்துவதில் இத்தகைய மோசமான நாகரீகங்களைப் பின்பற்றக் கூடாது. திருச்சபைக்கு இத்தகைய நாகரீகங்கள் இல்லை. நம் ஆண்டவர் எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றார்.

4. மருத்துவர்கள், தேவசிநேகத்தைக் கொண்டிராததால், நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஞானஒளியைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

5. குருக்கள் திருச்சபையின் அலுவல்களில் மட்டுமே ஈடுபடவேண்டும். குருக்கள் பரிசுத்தமாக, அதிக பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும். குருக்களும், துறவியரும், ஞான அதிகாரிகளுக்கும், பாப்பரசருக்கும் கீழ்ப்படியாமல் ஜீவிப்பது, நம் ஆண்டவரை மிகவும் நோகச் செய்கின்றது.

6. கன்னியாஸ்திரிகள் துறவற அந்தஸ்தில் நிலைத்திருப்பதற்கு, அவர்கள் சரிரத்திலும், ஆத்துமத்திலும் பரிசுத்தமாக இருப்பது அவசியமாகும்.

7. பல திருமணங்கள், சர்வேசுரனுடையதாக இல்லாதிருப்பதால், நல்ல திருமணங்கள் அல்ல. அவை சர்வேசுரனுக்கு உகந்தவை அல்ல.

8. பாவசங்கீர்த்தனம் என்பது, தேவ இரக்கத்தின் தேவதிரவிய அனுமானம். எனவே, உறுதியான நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் பாவசங்கீர்த்தனத் தொட்டியை அணுக வேண்டும்.

9. என் ஞானத் தாயே! நாட்டை ஆள்பவர்களுக்காக அதிகம் ஜெபியுங்கள். நம் ஆண்டவருடைய திவ்ய வேதத்தை அனுசரிப்பவர்களை தண்டிப்பவர்களுக்கு ஐயோ கேடு! திருச்சபையுடன் சமாதானத்துடன் இருக்கும் நாடுகளையும், பரிசுத்த வேதவிசுவாசத்தை அனுசரிப்பதற்கு சுதந்திரத்தை அளிக்கும் நாடுகளையும் சர்வேசுரன் ஆசீர்வதிப்பார்.

10. உலகத்தின் பாவாக்கிரமங்களுக்கான தண்டனையாக, நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன.

11. இனிமேலும், தேவமாதா, உலகத்தைத் தண்டிப்பதிலிருந்து, தம்முடைய நேசகுமாரனுடைய திருக்கரத்தைத் தாங்கிப் பிடிக்கக் கூடாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, நாம் அவசியமாக தபசு செய்ய வேண்டும். மனிதர்கள் தங்களுடைய பாவவழியைவிட்டுத் திரும்பினால், ஆண்டவர் உலகத்தைத் தண்டிக்காமல் விட்டு விடுவார். இல்லையென்றால், துப்புரவுத் தண்டனை வந்தே திரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக