Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரும் அர்ச்.சவேரியாரும் (St. Ignatius and St. Francis Xavier) Tamil

 அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரும் அர்ச்.சவேரியாரும்

அர்ச் இலொயோலா இஞ்ஞாசியார் திருநாள்: ஜூலை 31




அர்ச். இஞ்ஞாசியார் தத்துவ சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தபோது, சவேரியார் அதை படித்து முடித்து, வெகு திறமையோடு பிறருக்கு கற்பிக்கும் ஆசிரியராயிருந்தார். இவ் வளவு சிறந்த இலட்சணங்கள் அமைந்த இவர், இகலோக மகிமையை வெறுத்து, சர்வேசுரன் பாரிசமானால், தேவ மகத்துவத்துக்கு எவ்வளவோ அதிமிக தோத்திரமுண்டாகுமென நன் குணர்ந்த இஞ்ஞாசியார், அவர் நட்பை அடைய பிரயத்தனம் பண்ணிவந்தார். ஆனால் இஞ் ஞாசியாருடைய மேன் பிறப்பையும், சுபாவ பெருந்தகைமையையும், சகலத்திலும் அவர் இருதயத்தை ஆட்கொண்டு நடத்திவந்த தேவ வரப்பிரசாத ஞானத்தையும், சவேரியார் இன்னும் அறியாமலிருந்தார். அவர் அணிந்திருந்த எளிய உடையின் கேவலமான வெளித் தோற்றத்தையும், மகிமையை அலட்சியம் செய்து, நிந்தை அவமானங்களையே, அவர் பிரிய மாய்த் தேடி வந்ததையும், கண்ட சவேரியார், அவர் மீது வெறுப்புற்று, அவரோடு சகவாச மாய் இருப்பது தனக்கு அவமானமென்பதுபோல் ஒதுங்கி நடந்து வந்தார். தன் சுபாவ மேட்டிமையை முற்றும் வென்று , சகலத்திலும் சர்வேசுரனுடைய அதிமிக தோத்திரம் ஒன் றையே கருத்தில் கொண்டு ஜீவித்த இஞ்ஞாசியார், இதனால் மனத்தாங்கல் கொண்டு பின் வாங்கவில்லை. சவேரியாரிடத்தில் என்றும் மாறாத அன்புடையவராய், அவருடைய சாஸ் திரத் திறமையைப் புகழ்ந்து பேசி, அவர் பெயர் மேன்மேலும் பிரசித்தி அடையும்படி, தாமே முயற்சி செய்து வந்தார்.

சவேரியாருடைய சாதுரிய சாமர்த்தியமான, சாஸ்திர விளக்கவுரைகளைவியந்து கேட் பதற்கு, தாமே மாணவர்களை சேகரித்துக் கொண்டு விடுவார். இதற்குப் பின் அதிவிரைவில், இஞ்ஞாசியாருடன் மனங்கலந்த நண்பரானார் சவேரியார். சவேரியார் இருதயத்தை, முற்றும் சர்வேசுரன் வசமாக்கும்படியாக, ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன்

ஆத்துமத்தை இழந்து போனால், வரும் பிரயோசனம் என்ன! என்கிற வேதவாக்கியத்தை அடிக்கடி எடுத்துரைத்து, அதன் சாரம் அவர் இருதயத்தில் நன்றாய் உறைக்கும்படியான வித மாய் பேசிவருவார். சவேரியார் இவ்வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கலானார். சிந்திக்க சிந்திக்க, தம்மை ஜெயித்து, தேவஊழியத்துக்கு தம்மை முழுதும் கையளித்து, இஞ்ஞாசியாரை பின் செல்வதாக வாக்குக்கொடுத்தார். ஞான முயற்சிகளை அனுசரித்து, தேவசிநேகத்தில் வளர்ந்து வந்தார்.

சேசு சபை ஸ்தாபிக்கப்பட்டபின், இந்தியாவுக்குச் செல்லும்படி, முதலில் குறிக்கப் பட்டவர்கள், சீமோன் ரொத்ரிகஸ், நிக்கொலாஸ் பொபதில்லா என்ற இருவர் தான். ரொத் ரிகஸ் சுவாமியார் 1540-ல் உரோமையை விட்டுப் புறப்பட்டார். பொபதில்லா சுவாமியார் வெகு வியாதியாயிருந்தார். ஆதலால் அவருக்கு பதிலாய் வேறொருவரைத் தெரிந்து கொள் வது அவசியமாயிற்று. யாரை அனுப்புவதென்று, இஞ்ஞாசியார் ஜெபத்தில் சர்வேசுரனை மன்றாடினார்.

பிரான்ஸிஸ் சவேரியார் இந்து தேசத்துக்குப் போவது, தேவசித்தம் என்றுணர்ந்தார்; அவரிடம், " சகோதரர் பிரான்சிஸ், அர்ச். பாப்பானவர் கட்டளைப்படி நம்முள் இருவர் இந்தி யாவுக்குப் புறப்பட்டுப் போவது அவசியம். அதற்கென்றுக் குறிக்கப்பட்ட பொபதில்லா சுவாமியார் வியாதியாயிருக்கிறார் என்பது உமக்குத் தெரியுமே. ஸ்தானாதிபதியோ பிரயா ணம் துவக்க அவசரப்படுகிறார். அதிகநாள் தாமதிக்க முடியாது. சர்வேசுரன், உம்மை இந்து தேசத்தில் வேதம் போதிக்க அழைக்கிறார்” என்று கூறினார். அஞ்ஞானதேசங்களுக்குச் சென்று, சேசுகிறீஸ்து நாதருடைய பரிசுத்த வேதத்தை போதித்து, வேதசாட்சியாக தமது இரத்தத் தைச் சிந்தி மரிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்குமென்று, வெகுகாலம் பரிதவித்திருந்த சவேரியார், இவ்வார்த்தைகளைக் கேட்டதும் சொல்லிலடங்காத ஆனந்தமடைந்து ," தந்தையே! இதோ புறப்பட்டுப் போக ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறிவிட்டு, உடனே பய ணத்துக்கு ஆயத்தம் செய்தார்.

இலொயோலா இஞ்ஞாசியாரும், பிரான்சீஸ்க்கு சவேரியாரும் தங்கள் உள்ளரங்க இலட்சணங்களில் ஒரே அச்சில் உருவாக்கப்பட்டவர்கள் போல், ஒரே தன்மை ஒரே சாய லுள்ளவர்களாய், ஒருவர் மீது ஒருவர் மேலான எண்ணமும், ஓர் அருமைத் தந்தையும், அரு மை மைந்தனும் போல் ஒருவருக்கொருவர் அன்னியோன்னிய நேசமுடையவர்களாயிருந் தார்கள். மேலும் சவேரியாருடைய புண்ணியங்களையும் திறமையையும் நன்றாக அறிந்த இஞ்ஞாசியார், அவர், தமதருகிலிருப்பது, புதிதாய் ஸ்தாபிக்கப்பட்ட சேசுசபைக்கு வெகு உதவியாயிருக்குமென்று எண்ணியிருந்தார். ஆதலால், அவரை, இந்து தேசத்துக்கு, அனுப் பத் தீர்மானித்தபோது, அவர் அதிக வருத்தத்துக்குள்ளானார். ஆனால், அவர் போவது தேவ சித்தம் என்றுணர்ந்த அக்ஷணமே, இந்து தேசத்தாரின் ஆத்தும் இரட்சணியத்துக்காக, அவ ரை சந்தோஷமாய் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். அது போலவே, சவேரியாரும் தம் ஞான பிதாவையும், ஞான சகோதரர்களையும் விட்டுப் பிரிவதால் உண்டான வியாகு லத்தை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார்.

இஞ்ஞாசியார் சவேரியாரை இந்தியாவுக்குப் போகும்படி சொன்னது 1540- ம் வரு டம் மார்ச் மாதம் 15-ம் தேதி. மறுநாள், அதிகாலையிலே, திவ்ய பலிபூசை செய்து, தமது கரத் தில் பலியான திவ்ய சுதனோடு தம்மையும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த பின், தமது அருமைத் தந்தையின் ஆசீர்வாதம் பெறும்படி அவர் முன் சென்றார். ஜெப் புஸ்தகமும், பாடுபட்ட சுரூபமும், அணிந்திருந்த பழையவஸ்திரமும் தவிர, பயணத்துக் கென்று வேறு எதுவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் போது குளிர் அதிகமிருக்குமே யென்று கவலையுற்ற இஞ்ஞாசியார், வியாதியினிமித்தம் , தான் அப்போது அணிந்திருந்த கம்பளிப் போர்வையை எடுத்து சவேரியார் மேல் போட்டு, அதை, அவர் அணிந்து கொள் ளும்படி செய்தார். பின், தம் அருமைப்புதல்வனை நோக்கி:"போய், உலகமெல்லாம் தேவசிநேக அக்கினியால் பற்றியெரியச் செய்யும்” என்று உருக்கமாய்க்கூறித் தம் கடைசி ஆசீர்வாதத்தை அவருக்களித்தார்.

சங்.சவேரியார், சங்.ரொத்ரிகஸ் என்ற இருகுருக்களையும் போர்த்துக்கல் அரசன் கண் டதும், அவர்களை, இந்தியாவுக்கு அனுப்ப, அவருக்கும் மனம் வரவில்லை. கல்வியிலும், அர்ச் சிஷ்டதனத்திலும் மிகத் தேர்ந்தவர்களான இவர்களை, தன் நாட்டிலே நிறுத்திக் கொள்ளப் பிரியப்பட்டு, அதற்காக பாப்பானவருக்கும், இஞ்ஞாசியாருக்கும் கடிதத்துக்கு மேல் கடி தம் எழுதினார். பாப்பானவரோவென்றால், அரசனும், இஞ்ஞாசியாரும், தங்களுக்குள் காரி யத்தை தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டு விட்டார். இஞ்ஞாசியார், சங். ரொத்ரிகஸ் சுவாமியார் போர்த்துக்கள் தேசத்திலிருக்கட்டும், சவேரியார் சுவாமியார் இந்தியாவுக்குப்

புறப்பட்டுப் போகட்டும், என்று அரசனுக்கு எழுதினார். அரசன் அதற்கு சம்மதிக்கவே, சவேரியார் 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி கப்பலேறி, 1542-ம் வருடம் மே மாதம் 6-ம்தேதி நம் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

உரோமையிலிருந்து வரும் இஞ்ஞாசியாருடைய குரலொலி போலும் அவருடைய உயிருள்ள உருவம் போலும், அர்ச்.சவேரியார் இந்து தேசத்தில் துலங்கினார். அர்ச். இஞ்ஞாசி யார் மேல், நமது அப்போஸ்தலர் இருதயத்தில் எவ்வளவு சங்கை, நேச வணக்கம் குடி கொண்டிருந்ததென்றால், அவருக்குக் கடிதம் எழுதும்போது முழந்தாளிட்டு எழுதி வந்த தாகத் தெரிகிறது. அவர் கடிதத்திலிருந்து சில பகுதிகள்:" கடைசியாய், நான் என் முழு இரு தயத்துடன் சங்கித்து வரும் எனதாத்துமத்தின் பிதாவே! நான் என் உடலில் உயிருள்ள வரை யும், சர்வேசுரனுடைய மகா பரிசுத்த திருவுளத்தை அறிந்து, அதை சம்பூரணமாய் நிறைவேற்றி வர, அவர் எனக்கு அனுக்கிரகம் தந்தருளும்படி, தேவரீர் உமது திவ்ய பலி பூசைகளிலும் ஜெபங்களிலும், எனக்காக சர்வேசுரனைப் பிரார்த்திக்க ஒருபோதும் மறந்து போகக் கூடாதென்று, முழந்தாளிலிருந்து தாழ்மையாய்த் தங்களை மன்றாடுகிறேன். ஏனெ னில், தேவரீரை நான் இப்பொழுது, என் கண்முன் இங்கு தரிசிப்பது போல், முழந்தாளி ருந்தே இக்கடிதத்தை எழுதுகிறேன். சேசுகிறீஸ்து நாதருடைய இருதயத்தில், எனக்கு சொந் தமான ஏகதந்தையே, மறுமையில் மாத்திரமல்ல, இம்மையிலும் தேவரீரைக்கண்டு தங்கள் உதவியும் ஒத்தாசையும், அவசியமாய் வேண்டிய அநேக விஷயங்களை பற்றி, தங்களிடத்தில் பேச நான் எவ்வளவோ ஆவலாயிருக்கிறேன் என்று சர்வேசுரன் அறிவார். எவ்வளவு தொலை வானாலும் கீழ்ப்படிதல் முன், அது ஓர் தடையாயிராது. உமது கடிதத்தில்: எவ்வளவு காலம் சென்றாலும், அதுவெல்லாம், நான் உம்மை மறந்து போகும்படி செய்யக்கூடுமானதல்ல; ஆகையால் முற்றும் உமக்கு சொந்தமான இஞ்ஞாசியுஸ், என்ற அன்பின் முத்திரை போன்ற கடைசி வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப நினைவில் சிந்தித்து வருகிறேன். ஒருவகையில், அவைகள் என் ஆத்துமத்துக்கு போசனம் போலிருக்கின்றன. கடந்து போன பாக்கியமான நாட்களையும், எக்காலமும், என்னை அரவணைத்து இன்னும் அரவணைத்து வரும், தேவரீரு டைய உண்மையும் பரிசுத்தமுமான சிநேகத்தையும் சிந்தித்து கண்கலங்கி பிரலாபிக்கிறேன்.

ஆவிபிரியுமுன் திரும்ப ஒருதரம் என்னைக் காண தேவரீர், வெகு ஆவலாயிருப்பதாக அன்புற்று சொல்லுகிறீர்கள். இவ்வார்த்தைகளை நான் சிந்திக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்களில் நீர் ததும்புகின்றது. திரும்ப நான் தங்களைக் காண்பதென்பது அரிதான காரியம் தான். ஆயினும் பரிசுத்த கீழ்ப்படிதலினால் ஆகாததொன்றுமில்லை. உமது மக்களிலெல்லாம் மிகச்சிறியவனும், யாவரிலும் அதிக தொலைவில் பரதேசியாயிருப்பவனு மாகிய பிரான்சீஸ்” என்று கடிதத்தை முடிக்கிறார். உரோமையிலிருந்த அர்ச். இஞ்ஞாசியார், தமது அருமைப்புதல்வனைத் திரும்ப வரவழைத்து, பத்து வருஷத்துக்கு மேலாக தாம் வகித்து வந்த அதிபதி சிரேஷ்டர் பதவியை, அவர் கையில் ஒப்புவிக்க ஆவலுற்றிருந்தார். உடனே உராமைக்குப் புறப்பட்டுவரும்படி சவேரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் அவர் கைக்கு கிடைக்குமுன், ஆண்டவர், சவேரியாரை நித்திய பேரின்பத்துக்கு அழைத்துக் கொண்டார்.


(அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் சரித்திரம் - சங்.மரிய இஞ்ஞாசியாரால் எழுதப்பட்டு, 1906ல் திருச்சி தொழிற்பள்ளியில் அச்சிடப்பட்டது)

அர்ச். பிரான்சிஸ் சவேரியாரை எங்களுக்கு அளித்த நல்ல ஞானத்தந்தையே!

அர்ச். இஞ்ஞாசியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக