Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 9 பிப்ரவரி, 2022

லூர்து மாதா காட்சிபெற்ற அர்ச். பெர்னதெத்தம்மாளின் புண்ணிய ஜீவியம்



அர்ச். பெர்னதெத்தம்மாள் மற்ற கன்னியரைப்போல் உடுத்தியிருந்த போதிலும், சிறிது உற்று நோக்குவோர் கண்களுக்கு, அவளுடைய முகத்தைப் பார்க்காமலேயே, முக்காளை அணிந்திருந்த விதத்தினாலும், அவளுடைய பொதுவான அடக்கமான தோற்றத்தினாலும், மற்ற கன்னியரிடமிருந்து தனியாகத் தோன்றுவாள். அதேபோல், பக்திக்குரிய காரியங்களை, மற்றவர் களைப் போல் அனுரித்து வந்த போதிலும், மற்றவரிடம் காணமுடியாத சுபாவத்திற்கு மேலான பிரகாசம், பெர்னதெத்தம்மாளுடைய பக்தி முயற்சிகளில் காணப்பட்டது. பிதாவுக்கும் சுதனுக் கும் இஸ்பிரீத்து சாந்துக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக என்ற அர்ச்தமத்திரித்துவ தோத்திர ஜெபத்தின் போது, மிகுந்த பக்தி பற்றுதலுடனும், சங்கையுடனும், மெதுவாக நிறுத்தி, அழுத்தம் திருத்தமாக சிலுவை அடையாளத்தைத் தன்மேல் வரைந்தபடி, அந்த உன்னத ஜெபத்தை ஜெபிப்பாள்.

சிலுவை அடையாளத்தை அடிக்கடி நம் சரீரங்களில் வரைந்து கொள்வதால், அபரி மிதமான ஞானநன்மைகள் மற்றும் ஞானசத்ருக்களிடமிருந்து பாதுகாப்பை அடைந்து கொள்ள லாம் என்பதை நன்கு உணர்ந்தபடியால், அவ்வாறு பக்தி பற்றுதலுடன் ஜெபிப்பாள். சங்.லான் ன சென்ஸ் என்ற கன்னியாஸ்திரி, "ஜெபிக்கும்போது, பெர்னதெத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதை மிகவும் விரும்பினேன். பெர்னதெத்தம்மாள் ஜெபிக்கும் போது, அங்கு ஓர் சம்மனசானவர் ஜெபிப்பது போலிருக்கும். யாதொரு அசைவும் சலனமும் இன்றி, நிமிர்ந்ததலை யுடனும், கூப்பிய கரங்களுடனும், தேவநற்கருணைப் பேழையையே உற்று நோக்கியபடியோ அல்லது புற உலக அசைவுகளால் யாதொரு பாதிப்புமின்றி, தேவசிநேக மிகுதியால் கனத்த இமைகளுடன் கீழ் நோக்கியபடியோ இருக்கும் கண்களுடனும், முழங்காலில் இருந்து பெர்ன தெத்தம்மாள் ஜெபிக்கும் அந்த அழகானக்காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது.

எங்கும் வியாபித்திருக்கும் தேவபிரசன்னமானது, பெர்னதெத்தம்மாளை மேலும் மேலுமாக ஊடுருவித் தன் வசப்படுத்தியுள்ளதாக நாங்கள் கருதுவோம். நவசந்நியாசிகளான நாங்கள் பூசை முடிந்து, நன்றியறிதல் முடிந்து, கோவிலிலிருந்து வெளியேறும் போது, பெர்னதெத்தம்மாள் இருக்கும் இடத்திற்கு வரும்போது, சர்வேசுரனுடன் அவர்கள் நெருக்கமாக சல்லாபித்து உரையாடும் காட்சியை நன்குக் காணும்படி, மெதுவாக அந்த இடத்தைக் கடந்து செல்வோம் " என்று குறிப்பிடுகிறாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக