Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் Life History of St. Alphonsus Liguori in Tamil

 திவ்ய இரட்சகர் சபையின் ஸ்தாபகர், அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்:




திருநாள் ஆகஸ்டு 2ம் தேதி 1696ம் வருடம் அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியார், நேப்பிள்ஸ் நகரத்தில், அக் காலத்தில் புகழ் பெற்றிலங்கிய, தொன் சூசை லிகோரி, தோனா அன்னாள் என்னும் பக்திக் குரிய தாய் தந்தையரிடத்தில் பிறந்தார். மரிய நேலா என்னும் பெயருடைய மாளிகையில் பிறந்த குழந்தைக்கு, கன்னியருக்கு இராக்கினியான தேவமாதா கோவிலில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த சேசுசபைகுருவானவர் பிராஞ்சீஸ்க்கு ஜெரோம் என்பவர், குழந்தையைக் கையிலேந்தி ஆசீர்வதித்து," இக்குழந்தை மிகவும் விருத்தாப்பிய வயது வரை க்கும் ஜீவிக்கும், மேற்றிராணியாராகவும் ஆகும், தேவதோத்திரத்துக்காகவும் அநேக ஆத்து மங்களின் இரட்சணியத்துக்காகவும், மிக அரியகாரியங்களை செய்து முடிக்கும்” என்று தீர்க்க தரிசனமாய் உரைத்தார்.

ஆனால், அரசனின் இராணுவத்தில் தளபதியாக உயர்ந்த பதவியிலி ருந்த தகப்பனார், தொன் சூசைலிகோரிக்கு, தமது சிரேஷ்ட புதல்வனைப் பற்றி கூறப்பட்ட தீர்க்கதரிசனம் ஒருவிதத்திலும் திருப்தியாயில்லை. அதற்கு மாறாக, தேவமாதா மீது மகா பக்தி யாயிருந்த தாய் அன்னாளுக்கு, அது மட்டற்ற அக்களிப்பையும், ஆறுதலையும் தந்தது. தேவ தாய் தனக்களித்த ஏழு குமாரர்களுக்கும், அனுதினம் மரியாயின் பக்தியை மறவாமல் ஊட்டி வளர்த்தாள். அர்ச். லிகோரியார் பின்னாளில் எழுதிய மரியாயின் மகிமைகள், என்னும் புத்த கம் இதற்கு சாட்சி. காலையும் மாலையும் தாய் மக்களை தன்னுடன் கூட்டிச் சேர்த்து, குடும்ப ஜெபம் ஜெபிப்பாள். தினமும் குடும்பத்தோடு சேர்ந்து ஜெபமாலை சொல்லுவாள். நல்ல புஸ்தகங்களை எடுத்து தினமும் ஞான வாசகம் வாசிக்கச் செய்வாள். பாவத்துக்கு விலகி அஞ்சி நடக்கவும், எப்பொழுதும் உண்மையே பேசவும் கற்பித்து வந்தாள். பரிசுத்த கற்பு என் னும் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அற்பப் பழுதும்படாமல் காப்பாற்ற வேண்டும்

என்று புத்தி புகட்டுவாள். அத்தோடு தாய், தன் மக்களின் கல்வி விஷயத்திலும் கவனமாயிருந்தாள்.

மூத்த மகனாகியலிகோரியார் கல்வியில் வெகுதேர்ச்சியடைந்து, தனது 17-வது வயதில் சட்ட சாஸ்திரத்தில் (L.L.D) பட்டம் பெற்று, பாரிஸ்ட்ட ர் என்னும் பதவியடைந்து, மகா கீர்த்தியும் மகிமையுமடைந்தார். இப்படி, 8 வருட காலமாக, தாம் ஒப்புக்கொண்ட ஒவ் வொரு வழக்கிலும் வெற்றியடைந்தார். ஓர்நாள், திரண்ட சொத்தைப் பற்றிய ஒரு வழக்கில், நெடு நேரம் மிகபலமாய் இவர் வாதாடி அமர்ந்த பின், எதிர் வக்கீல் எழும்பி, தம் கையிலி ருந்த ஓர் பத்திரத்தில் சில வரிகளை வாசித்து, லிகோரியாரைப் பார்த்து, நீர் ஏன் இவ்வளவு நேரம் வீணாய்ப் போக்கினீர்?நான் வாசித்த இதற்கென்ன பதில் சொல்கிறீர் என்று வினவி னவுடனே, லிகோரியார் ஸ்தம்பித்து, தலை கவிழ்ந்து, தாம் அதேபத்திரத்தை வழக்கு சம்பந்த மாய் அநேகமுறை வாசித்திருந்த போதிலும், அவ்வார்த்தைகளையும், சட்டமாற்றத்தையும் கவனிக்காது போனதைப் பற்றி அதிசயப்பட்டு, தாம் ஒருபோதும் அபத்தமென்றறிந்த வழக் குகளை ஏற்றுக் கொள்ளாதிருந்தும், சத்தியத்துக்கு விரோதமாய், தான் இப்போது வாதாடிய தால் சகலருக்கும் துர்மாதிரிகையானதே என்று சஞ்சலப்பட்டு, மனம் சோர்ந்து, இவ்வளவு ஆபத்துள்ள இவ்வுத்தியோகத்தை இனிமேல் ஒரு போதும் செய்வதில்லையென்று கூறிவிட்டு வீடு போய் சேர்ந்தார். இது தேவசெயலாய் நேரிட்ட சம்பவமே. இச்சம்பவத்துக்குப் பின், இவர் தம்மை தேவஊழியத்துக்கு ஒப்புக் கொடுத்து, தமது 30-வது வயதில் 1726-ம்ஆண் டில் டிசம்பர் 21-ம் தேதி அர்ச். தோமையார் திருநாளன்று குருப்பட்டம் பெற்றார். பின்புதீர்க் கதரிசன வாக்குப்பிரகாரம் மேற்றிராணியாருமானார். ஆத்துமங்களை இரட்சிப்பதற்காக அல் லும் பகலும் அயராது உழைத்தார். ஒருபோதும் நேரத்தை வியர்த்தமாய் செலவிடுவதில்லை என்று ஆண்டவருக்கு உத்தம வார்த்தைப்பாடு கொடுத்து அதை பிரமாணிக்கமாய் அனு சரித்துவந்தார். அதன்காரணமாக இரவும் பகலும் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல் லாம் சன்னியாசிகள், கன்னியாஸ்திரிகள், விசுவாசிகள் சகலருக்கும் ஆத்தும் பிரயோசனம் உண்டாகும்படி, அநேக நூற்றுக்கணக்கான பக்திக்குரிய புத்தகங்களையும், வேத சாஸ்திர நூல்களையும் எழுதி பிரசுரித்தார். அப்புத்தகங்களில் சில புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கது.

குருக்கள் பாவசங்கீர்த்தன மூலமாக ஆத்துமங்களை இரட்சிப்பதற்கு உதவியாக, இவர் எழுதிய இரு வேதசாஸ்திர நூல்கள் உலகெங்கும் கீர்த்தி பெற்றவை. அவை ஒவ் வொன்றும் 1000ம் ஏட்டுக்கும் அதிகமாயுள்ளது. இதை முறையே எழுதி முடிக்க, இந்த அர்ச் சிஷ்டவர் எடுத்து வாசித்து ஆராய்ந்த புத்தகங்கள் அநந்தமென அதில் தெளிவாகிறது. இந் நூலை, 312 அடி அளவுள்ள ஒரு சிறிய மேசையிலேயே, அவர் எழுதினார். இதுவும், ஒரு அர்ச் சிஷ்டப் பண்டமாக, நேப்பிள்ஸ் நகருக்கு அருகே, அர்ச். லிகோரியார் வாழ்ந்து மரித்த நொ சேரா ஊர் மடத்தில், காப்பாற்றப்பட்டிருக்கின்றது. தம்மாலியன்ற மட்டும் அநேக ஆத்து மங்களை இரட்சிக்க வேண்டுமென அத்தியந்த ஆவலுடன் நேப்பிள்ஸின் மேற்றிராசனங்கள் எங்கும் போய் பிரசங்கம் செய்வார். இப்பணியை தம்மோடு சேர்ந்து செய்யும்படியாக, திவ்ய இரட்சகர் சன்னியாச சபை, என்னும் ஓர்சபையையும் ஸதாபித்தார். அதில் உட்பட்ட குருக் கள் பல இடங்களுக்கும் போய், ஞான ஒடுக்கம் கொடுத்ததினால் அநேக ஆத்துமங்களுக்கு மோட்ச பாக்கியம் நிச்சயமானது. அர்ச். லிகோரியார், அனைவரும் நித்தியமான சத்தியங்க ளின் பேரில் எளிதில் தியானம் செய்து பலனடையத்தக்கதாக, நன்மரண ஆயத்தம், என்னும் தியானப் புத்தகத்தை தமது 62-ம் வயதில் 1758-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். நாள் தோறும் சிறியோர் பெரியோர் சரீரகாரியங்களைப்பற்றி சிந்தித்து யோசிக்கிறார்கள். இப்படி யே ஆத்துமகாரியத்திலும் செய்யவேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

அர்ச்சிஷ்டவர் மரணப்படுக்கையிலிருக்கும் போது, தாமே எழுதிய மரியாயின்மகி மைகள் என்னும் புத்தகத்தை, தமது சபை சன்னியாசிகள் வாசிப்பதைக் கேட்டு, அந்த ஆண் டவள் தமது ஊழியருக்கு, மரண சமயத்தில் செய்யும் பலத்த சகாயங்களைப் பற்றி மலர்ந்த முகத்துடன் கேட்டு, மிகவும் ஆறுதலடைந்த போதிலும், ஆ! வெளியிலிருந்து வரும் சத்துருக் கள், எவ்வளவோ திரளான பேர், என்று கூறினார். அதைக் கேட்ட ஒரு சன்னியாசியார் நன் மரணத்துக்கு அடைக்கலமான அர்ச். சூசையப்பருடைய படத்தை எடுத்து, அவர் கையில்

கொடுக்க, அதை பக்தியோடு முத்திசெய்து கொண்டபின், தேவமாதா படத்தையும் கேட்டு வாங்கி முத்தி செய்து, பிரியதத்த மந்திரத்தையும் ஜெபித்தார். அவருக்கு நேரே, அவரே வரைந்த தேவமாதாவின் படம் தொங்கிற்று. அடிக்கடி அதை உற்றுப்பார்த்தார். மரண அவஸ்தையாயிருந்த நேரத்தில், கண்களை திடீரெனத் திறந்து, அந்தப்படத்தை உற்றுப்பார்த் துக் கொண்டிருக்கையில், அவர் முகம், ஜோதி மயமாய் பிரகாசித்து ஜொலிப்பதையும், மலர்ந்த முகத்தோடும் ஆனந்த மகிழ்ச்சியோடும் பரவசமாயும் காணப்பட்டார். இவ்வாறு ஏறக்குறைய கால்மணி நேரம் கழிந்தது. அவரை சூழ்ந்து நின்ற அநேகரும் இந்த அதிசயத் தைக் கண்டார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அவரது சபை சகோதரர், குருக்கள் மாறிமாறி, அவர் மரணப் படுக்கையை சூழ்ந்து நின்று ஜெபித்துக் கொண்டிருந்ததால், அனைவரும் இக்காட்சியைக் கண்டனர்.

அர்ச்சிஷ்டவர் தமது வாழ்நாளில் தேவமாதாவுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்தது மல்லாமல், என் ஆண்டவளே என் தாயாரே! உமது தாசரில் எத்தனையோ பேருக்கு அவர்கள் மரணதருணத்தில், நீரே உமது தரிசனையளித்து இரட்சித்தபடியே, அடியேனுக்கும் கிருபை செய்தருளும், என்று கெஞ்சி மன்றாடி வந்தபடியால், பரலோக இராக்கினி , இவ ருக்கு ஒருதரம் மாத்திரமல்ல, மூன்று தரம் காணப்பட்டு பிசாசுக்களை ஓட்டி இரட்சித்தார் கள். உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டதை அவர் அறிந்து, எல்லாம் முடிந்துவிட்டது; இனி வைத்தியரால் யாதொன்றும் செய்யமுடியாது என்றார். பாடுபட்ட சுரூபத்தையும், தேவ மாதா சுரூபத்தையும் அடிக்கடி ஆவலோடு முத்தி செய்தார். அப்போது சிறு சிறு நேசப்பற் றுதல்களைக் கூறி ஜெபித்தார். அவ்விரு சுரூபங்களையும் மார்போடு சேர்த்து, அரவணைத்து வைத்துக் கொண்டார். கடைசியாய் 1797-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி அதிகாலை யில் திரிகாலஜெபத்திற்கான மணியடித்தவுடனே, அவர் படுக்கையை சூழ்ந்து நின்ற குருக் கள் சகோதரர் முழங்காலில் இருந்து, திரிகால ஜெபத்தையும், அதில் சேர்ந்த பிரியதத்த மந் திரத்தையும், பக்தியோடும், கண்ணீரோடும் ஜெபித்தனர். "இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்” என்று அவர்கள் ஜெபித்த போது, அவருடைய ஆத்து மம் அவருடைய 91ம் வயதில், முன்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படி, அவரைவிட்டுப் பிரிந்தது. அவர், தாம் ஸ்தாபித்த திவ்ய இரட்சகர் சபையின், தாய் மடமாகிய நொசே ராவிலேயே மரித்தார். அங்கேயே பூஜிதமாய் அடக்கம் செய்யப்பட்டார். 1830ம் ஆண்டில் அவருக்கு அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்டது. அர்ச். மரிய லிகோரியாருக்கும், அவர், குழந்தையாயிருக்கும்போதே, அவரைக் குறித்துத் தீர்க்கதரிசனத்தை, உரைத்தசங். ஜெரோம் சுவாமியாருக்கும், ஒரே நாளில் அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுக்கப்பட்டது. (சங்.லாரன்ஸ் சேவியர் பெர்னான்டஸ் சுவாமியார் அர்ச். மரிய லிகோரியாரின் நன்மரண ஆயத்தத்தை தமி ழில் 1934ல் வெளியிட்டார். அதன் முன்னுரையிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டது)

தேவசிநேகத்தில் நாங்கள் உயர்வதற்கு உறுதுணையான ஞானநூல்கள் தந்த

அர்ச். அல்ஃபோன்ஸ் மரியலிகோரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச். மரிய லிகோரியர் நமக்கு அருளிச்செய்த சாங்கோபாங்கத்தின் சுருக்கம்:

1. சேசுநாதர் சுவாமியின் திவ்ய பாடுகளை நன்றாக தியானித்து, ஆண்டவரின் சிநேகத்திலே உயர்வதற்கு தினமும் பிரயாசைப்படு!

2. அடிக்கடி பக்தியுடனும் தகுந்த ஆயத்தத்துடனும் திவ்ய நன்மை உட்கொள்!

3. ஒருநாளைக்கு ஒருமுறையாவது தேவ நற்கருணை சந்திக்கச் செல்.

4.காலையில் எழுந்திருக்கையில், அன்று வரும் சகல தின்மைகளை எல்லாம், நேசஆண்டவருக் காக பொறுத்துக்கொள்வதாகத் தீர்மானித்து, உன்னை முழுவதும் ஆண்டவருக்காக ஒப்புக் கொடு!

5.ஆண்டவர் தம்மில் தாமே அளவில்லாதவிதமாய், மிகுந்த பாக்கியமுள்ளவராய் இருக்கி றார் என்பதை தியானித்து களிகூர்வாயாக!

6. மோட்சத்தை ஆவலுடன் ஆசித்து, அதற்குத் தடையானவைகளை விலக்கி, சாவை எப்பொழுதும் விரும்பி இரு

7. உன்னைச் சேர்ந்தவர்கள் திவ்ய சேசுநாதர்சுவாமியை சிநேகிக்கும்படி செய்.

8.நேச ஆண்டவருக்குப் பிரியமானதை எப்பொழுதும் நாடி, பொருந்தாததை வெறுத்து, உன்னை முழுவதும் குறைவின்றி, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடு.

9. தினந்தோறும், உத்தரிக்கிறஸ்தலத்தின் ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்.

10. நீ எந்த காரியத்தைச் செய்தாலும், அதை சேசுநாதர்சுவாமிக்குப் பிரியப்படுவதற்காகச் செய். .

11. உன்னை முழுவதும், ஒருநாளில், ஒருமுறையாகிலும், திவ்ய சேசுநாதர் சுவாமிக்கு ஒ ப்புக்கொடுத்து, அவர் சித்தத்திற்காகக் காத்துக்கொண்டிரு.

12. உன்னை நேசிப்பதுபோல, பிறரையும் நேசி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக