Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 2 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 6 - அலோய்ஷியஸ் கமோ

கென்யாவின் வேதசாட்சி 

ஆப்ரிக்காவிலுள்ள கென்யா என்கிற நாடு 1895ம் ஆண்டு, ஆங்கிலேயருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1920ல், ஆங்கிலேய ஆட்சி அங்கு வலுப்பெற்றது. நாட்டின் விடு தலைக்காக, ஜோமா கென்யட்டா என்பவர், ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடங்கினார். இயக்கத்தின் ஒரு பகுதியினர் பயங்கரவாதிகளாக மாறினர். ஆங்கிலேயரைத் துரத்தும்படி, சகல வித அக்கிரமங்களிலும் ஈடுபட்டனர். "வெள்ளையர்களுக்குச் சாவு" என்பதே, இடை விடாமல், அவர்கள் தொடர்ந்து எழுப்பிய கூச்சலாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அநேக கத்தோலிக்க வேதபோதகர்கள், கென்யாவில் ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் நடத்தி வந்தனர். ஆட்சியிலி ருந்த ஆங்கிலேயருடன் கூட, இந்த வேதபோதகர்களையும் சேர்த்து ஒழித்துக்கட்டுவதற்கு, தீவிரவாதிகள் உறுதி செய்தனர். வேத போதகர்களுக்கு உதவி செய்யும் சகலரையும் கொல் வதற்கு திட்டமிட்டனர். கமோ என்பவர், ஒரு ஆப்ரிக்கர்; தொடக்கப்பள் பணி புரிந்து வந்தார். வேத போதகர்களுக்கு அவர் உற்ற நண்பர். அவருடைய நடவடிக்கை களை, தீவிரவாதிகள் கண்காணிக்கத் துவக்கினர். கமோ, நம்முடன் சேர்வாரென்றால், நமது இயக்கம் வலுவடையும். மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவோம்; கமோ நம்முடன் சேர்ந்து, வெள்ளையருக்கு எதிராக வாக்குறுதி எடுக்க வேண்டும்; அல்லாவிடில், அவரைக் கொல்ல வேண்டும், என்று, அவர்கள் கூறினர்.

மேற்றிராணியார், கென்யா நாட்டு விசுவாசிகளுக்கு ஒரு சுற்றுமடல் எழுதி அனுப்பி, சுதந்திரம் பெறுவதற்கு, நியாயமான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், மௌ மௌ என்ற தீவிரவாதிகளின் கொள்கைகளை, யாரும் பின்பற்றக் கூடாது; அவை திருச்சபைக்கு விரோதமானவை என்றும், அவர், அம்மடலில் எச்சரித்திருந்தார். ஏனெனில், தீவிரவாதிகள், கிறீஸ்துவ மதத்தை விட்டுவிட வேண்டும்; வெள்ளையரின் இரத்தத்தை ஒருகிண்ணத்தில் பருக வேண்டும் என்று, திருச்சபைக்கு எதிரான ஒரு ஆணையை அவ்வியக்க உறுப்பினருக்கு விடுத் திருந்தனர். இளைஞராயிருந்தபோது, கிறீஸ்துவ மதத்தில் சேர்வது, கமோவிற்கு, கடினமாகத் தோன்றியது. கிறீஸ்துவ வேதம், அநேகக் கடினமான காரியங்களைச் செய்யும்படி நம்மிடம் கேட்கிறதே, என்று கமோ கூறி வந்தார். ஆனால், தேவதிருவுளத்தின்படி, ஒரு பரிசுத்தகுருவா னவரின் ஆன்ம ஈடேற்ற அலுவலின் பயனாக, 1945ம் ஆண்டு, செப்டம்பர் 7ம் நாளன்று ஞானஸ்நானம் பெற்று, அலோய்ஷியஸ் என்ற பெருடன், கமோ, கத்தோலிக்கரானார்.

ஒரு சமயம், ஞான உபதேச வகுப்பில், கன்னியாஸ்திரி, உங்கள் வேதத்தை விடுவது அல்லது கடவுளுக்காக உயிரை விடுவது என்று நிர்ப்பந்திக்கப்பட்டால், இரண்டில் எதைத் தெரிந்து கொள்வீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். ஞான உபதேசம் கற்றுக்கொண் டிருந்த கமோ, உடனே எழுந்து, சத்திய வேதத்தை விடுவதை விட, நான் சாவையேத் தெரிந்து கொள்வேன் என்று கூறினார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள், கமோ, கல்வி கற்பித்து வந்த 4வது வகுப்பிற்குள் நுழைந்தபோது, ஞான உபதேச புத்தகங்கள், துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டு, அவர் மேஜையின் மீது போடப்பட்டிருப்பதைக் கண்டார்.

மௌ மௌ என்ற தீவிரவாத இயக்கத் தலைவன், மாணவர்களுக்குத் துர்போதனை செய்திருக்கிறான் என்பதை, கமோ, அறிந்தார்: உங்கள் ஆசிரியன், வெள்ளையர்களின் கூட்டாளி. நம்மை அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு, வெள்ளையர் ஆசிக்கின்றனர்; அதற்கு, உங்கள் ஆசிரியனும் ஆதரவாக இருக்கிறான். அவனுக்கு விரோதமாக, நீங்கள் எல்லோரும் எழும்ப வேண்டும். துரோகிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும். ஒரு ஆழமான குழியைத் தோண்டுங்கள். உங்கள் ஆசிரியன் சைக்கிளில் வரும்போது, அதில் விழுவான்; அவனைக் கொன்று விடுங்கள், என்பதே அவன், மாணவர்களுக்களித்தத் துர்போதனை.

அதன்படி, கெட்ட மாணவரெல்லோரும் ஒன்றுகூடி, அவ்வாறே ஒரு குழி தோண்டி வைத்தனர்; ஆனால், மழைகாலம் துவங்கியதால், அவர் சைக்கிளில் வராமல், நடந்து வந்தார். உடனே, அக்கிரமிகளின் தலைவனது வேறு திட்டத்தின்படி, கமோ, வகுப்பில், கரும்பலகை யில் எழுதிக்கொண்டிருக்கும்போது, அவர் மேல் ஈட்டிகளை எறிந்து, கரும்பலகையோடு சேர்த்துக் கொல்வதற்காக, மாணவர்கள், ஈட்டிகளை, புத்தகங்களில் மறைத்து வைத்திருந்த னர். இப்பேராபத்தைப் பற்றி, ஒரு சிறுமி, ஆசிரியரிடம் தெரிவித்தாள். அலோய்ஷியஸ் கமோ, ஆண்டவரின் பேரில் வைத்த சிநேகத்தினிமித்தம், வகுப்பைத் தொடர்ந்து நடத்தினார்: அவர், மாணவரிடம், தீயவர்கள், உங்களுக்குத் துர்போதனை செய்திருப்பதைப் பற்றிவருந்து கிறேன். நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். வெள்ளையரை கென்யாவிலிருந்து விரட்ட வேண்டும். எனினும், வெள்ளையராயிருப்பது பற்றி அவர்களைக் கொல்வது சாவான பாவமா கும். நான் கிறீஸ்துவன். என் விசுவாசத்தை விட்டுவிட மாட்டேன். நேச ஆண்டவருக்காக இக்காரியத்தில் என் உயிரை அளிப்பதற்குக்கூடதயாராக இருக்கிறேன், என்று கூறினார். வீட்டில், உன் வேதத்தை விடாவிட்டால், உனக்கு சாவு நிச்சயம், என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தைக் கண்டார். பாடுபட்ட சுரூபத்தின் முன் பக்தியுடன் முழங்காலிலிருந்து, ஆண் டவரே! நான் ஒருபோதும், உமக்கு துரோகம் செய்ய மாட்டேன். என் விசுவாசத்தைத் திடப்படுத்தியருளும். நான் உம்மை நேசிக்கிறேன். உமக்காக என் உயிரைக் கையளிப்பேன், என்று ஜெபித்தார்.

ஒரு நாள், அவர் வீட்டுக்குத்திரும்பி வரும் வழியில், அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், வெள்ளையர்களின் இரத்தத்தில் ஆணையிட்டு, அவர்களை விரட்ட எங்களு டன் சேர்ந்துகொள். அல்லது சாவாய்! உன்னைக் கொன்று விடுவோம் என்று, தீவிரவாதிகள் அச்சுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே, அவரைக் கத்தியால் குத்தி வீழ்த்தினர். அலோய்ஷியஸ் கமோ, சேசுவே! மாதாவே! எங்களுக்குத் துணையாக வாருங்கள்! என்று தன் மீது சிலுவை அடையாளம் வரைந்தார். கொடூரமான காட்டுமிராண்டிகளான தீவிர வாத இயக்கத்தினர், அவரைத் துண்டு துண்டாக வெட்டிக்கொன்றனர்; கமோ, வேத சாட்சி யாக மரித்தார்; ஆம், அர்ச். அலோய்ஷியஸ் கமோ என்கிற இன்னொரு ஆப்ரிக்காவின் அர்ச் சிஷ்டவர், திருச்சபையில் தோன்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக