Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

சேசு சபை நிறுவனர்- அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரின் உத்தமதனம்.

 சேசு சபை நிறுவனர்- அர்ச். இலொயோலா இஞ்ஞாசியாரின் உத்தமதனம்.

அர்ச். இலொயோலா இஞ்ஞாசியார் போர் வீரராயிருந்தவர். உலகத்தை வெறுத்து, தேவ ஊழியத்தில் பிரவேசித்ததால், தன் மாளிகையைவிட்டு வெளியேறினார். அவர் சகோ தரர்களில் ஒருவரும், இரு ஊழியரும் அவருடன் சென்றனர். வழியில் இருந்த தேவமாதா வின் தேவாலயத்தில், ஓர் இரவு முழுதும் தங்கி, ஜெபத்திலாழந்திருந்தார். அதன்பின் கூட வந்தவர்களை மாளிகைக்குத் திரும்பிப் போகச் சொல்லிவிட்டு, தனியே, மோன்செராத் எ ன்னும் மலையை நோக்கிப் பயணம் செய்தார். அம்மலையிலிருக்கும் தேவமாதாவிற்கு தோத் திரமாகக் கட்டப்பட்டிருந்த தேவாலயத்தைச் சந்தித்து, அங்கிருந்து ஜெருசலேமுக்கு திரு யாத்திரை புறப்பட்டுப் போகலாமென்று எண்ணியிருந்தார்.

அவர் வழியே செல்கையில், மகமதியன் ஒருவன் குதிரைமேல் சவாரியாய் அவரோடு வந்து சேர்ந்தான். செல்லுமிடத்தைப் பற்றி, ஒருவரொருவரை வினாவி, சம்பாஷித்துக் கொண்டு போகையில், தான், மோன்செராத் மலைமேலிருக்கும் பரிசுத்தக் கன்னிகையின் தேவாலயத்திற்குப் போவதாக, இஞ்ஞாசியார் கூறினார். மகமதியன், தேவதாயாரின் பரிசுத்தக் கன்னிமைக்கெதிராய் அவதூறு பேசத் துவக்கினான். இஞ்ஞாசியார், உடனே கோபங் கொண்டு, அவிசுவாசி சொன்னதை மறுத்து, பல நியாயங்களை எடுத்துரைத்து, வாக்குவாதம் செய்தார். அவற்றுக்கெல்லாம் மகமதியன் சற்றும் இணங்காமல், தப்பறையில் மூர்க்கமாய் நின்றான். ஆனால், கோபத்தால் சிவந்திருந்த, இஞ்ஞாசியாரின் முகத்திலும் பேச்சிலும் விளங் கிய வேற்றுமையைக் கண்டு அஞ்சி, திடீரென குதிரையை முன்னுக்கு தட்டி, அப்பாற் சென்றுவிட்டான். அவிசுவாசி அப்பாற் சென்றதும், இஞ்ஞாசியார் இருதயத்தில் ஓர் கடும் போர் நிகழ்ந்தது. என்ன! மகாபரிசுத்த திவ்ய கன்னிகையை நிந்திக்கத் துணிந்த பாதகனை, அப்பொழுதே சிட்சியாமல் விட்டுவிட்டது யோக்கியமா? பரலோக இராக்கினிக்கு அவன் செய்த நிந்தையைத் தீர்க்க, அவனை வாளுக்கு இரையாக்கியிருக்க வேண்டாமா? என அவர் மனம் சந்தேகமுற்று வருந்தலாயிற்று. மகமதியன் மேல், அவர் இருதயத்தில் பொங்கிய கோபம் கட்டுப்படுத்த முடியாததாயிருந்தது. தாமதமின்றி குதிரையைத் தட்டிவிட்டு, அவனை வாளால் தண்டிக்க மனம் ஆத்திரப்பட்டது. ஆனால் அப்படிச் செய்வது சர்வேசுர னுக்கு ஏற்குமோவென்னும் சந்தேகமும், அவர் இருதயத்தை வருந்தச் செய்தது. தம்மால் கண்டுபிடிக்கக் கூடாததை, சர்வேசுரன் கையில் விட்டுவிடுவதென்று தீர்மானித்து, ஒரு நல்ல முடிவுக்குவந்தார். வழி இரு மார்க்கமாய் பிரியும் ஓரிடத்துக்கு வந்ததும், கடிவாளத் தைத் தளரவிட்டு, குதிரையைத் தன் போக்கிலே போக விட்டுவிட்டார். மகமதியன் சென்ற மார்க்கத்தில் குதிரை செல்லுமேயாகில், அவிசுவாசியைத் தேடிப் பிடித்து அவன் உயிரை மாய்க்கிறது. அதைவிட்டு வேறுமார்க்கத்தில் சென்றால், அவனை, சர்வேசுரன் கையில் விட்டு விடுகிறது என்று, தனக்குள் தீர்மானித்துக் கொண்டார். மகமதியன் சென்ற பாதை அகலமா யும், செவ்வையாகவுமிருந்தது. இன்னொருபாதையோ, ஏற்றமான மலைப்பாதையாயிருந்தது. என்றாலும் குதிரைசெவ்வையான பாதையை விட்டுவிட்டு மலைப்பாதையில் ஏறிச் சென்றது. மகமதியனும் தப்பிப் பிழைத்தான். இப்படியாகத் தன் தாசனுடைய இருதய நேர்மையை அறிந்த சர்வேசுரன், அவருடைய அறியாமைக்கு இரங்கி, பெரும் ஆபத்தினின்று அவரைத் தற்காக்கத் திருவுளமானார்.

மோன்செராத் மலையடிவாரத்திலிருந்த ஊரில் போய்ச் சேர்ந்ததும், ஜெருசலேமுக்கு யாத்திரை போகும்போது அணிந்து கொள்வதற்கென்று சாக்குத் துணியால் செய்யப்பட்ட ஒரு அங்கியும், இடைக்கச்சையாக ஒரு பெருங்கயிறும், தும்பினால் செய்யப்பட்ட ஒரு பாத ரட்சையும், ஓர் ஊன்று கோலும், ஓர் சுரைக் குடுக்கையும் சேகரித்துக் கொண்டார். இக லோக காரியங்களை முற்றும் மறந்தவராய், சர்வேசுரனுடைய அதிமிகத் தோத்திரத்துக்காக தாம் செய்ய ஆசித்திருக்கும் உன்னத காரியங்களின் மேலேயே ஆழ்ந்த சிந்தனையாய், மலை மேலிருக்கும் தேவமாதாவின் கோவிலை நோக்கி குதிரையை நடத்திச் சென்றார்.

மோன்செராத்தில் பிரசித்தி பெற்ற திருயாத்திரை ஸ்தலமாகிய தேவமாதா தேவால யம் கட்டப்பட்டிருந்தது. அதற்கருகாமையில் பறவைக்கூடுபோல் ஆசீர்வாதப்பர் சபை மடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 150 சன்னியாசிகள் இம்மடத்தில் வசித்து வந்த னர். இதற்கும் உயரத்திலிருக்கும் செங்குத்தான கொடுமுடிகளில், ஆங்காங்கு துண்டு துண் டாய் தபோதனர்கள் வசிக்கும் 13 குடிசைகளும், அவைகள் ஒவ்வொன்றை அடுத்து ஒவ் வொரு அர்ச்சிஷ்டவர்கள் பெயர்கொண்ட சிறு கோவில்களும் இருந்தன. இவைகளுள் வெகு உச்சத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு குடிசையும், அதைச் சேர்ந்த சிறு கோவிலும், பச்சாதாபக் கள்ளனாகிய அர்ச். தீஸ்மாஸ் என்பவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு, அர்ச் தீஸ்மாஸ் குடிசையென்று அதற்குப் பெயர் வழங்கி வந்தது. மடத்து சன்னியாசிகளுக்குள் அதிக ஏகாந்தத்தையும் அருந்தவத்தையும் விரும்பியவர்கள், அங்கு சென்று, தனிவாசம் செய்தார்கள்.

இஞ்ஞாசியார் வந்த சமயம், தீஸ்மாஸ் குடிசையில் அர்ச்சிஷ்டதனத்தில் உயர்ந்த ஷானோன் அருளப்பர் அங்கே வாசமாயிருந்தார். இவர் பிறந்து வளர்ந்து குருப்பட்டம் பெற்றது, பிரான்சு நாடு. 32- ம் வயதில் இத்திருஸ்தலத்தை தரிசிக்க வந்தவர், அங்கிருந்த சன்னியாசிகளின் சுகிர்த ஒழுக்கத்தைக் கண்டு, மனம் உவந்து அவர்கள் சபையில் பிரவே சித்தார்; தனது 88-ம் வயது வரை, புண்ணிய சாங்கோபாங்கத்தில் உயர்ந்து, மற்ற சன்னியா சிகளுக்கு மேல் வரிச்சட்டமாய்த் துலங்கிவந்தார். இவரிடத்தில், இஞ்ஞாசியார் அதிக மனஸ் தாபத்துடன், பொது பாவசங்கீர்த்தனம் செய்தார். செய்து முடிக்க மூன்று நாள் ஆனது. தன் எண்ணங்கள், கருத்துக்கள் யாவற்றையும் இக்குருவானவரிடத்தில் வெளிப்படுத்தினார். அவரு டைய ஞான அறிவுரையைத் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். பிறகு, தன் குதிரையை மடத்துக்கு தானமாகவும், வாளையும், சுரிகையையும் தேவமாதாவின் பீடத்திற்கு முன் காணிக் கையாக விட்டுச் செல்வதற்கும், அவருடைய சம்மதம் பெற்றுக் கொண்டார்.

1522-ம் வருடம் மங்கள வார்த்தை திருநாளன்று, தாம் அணிந்திருந்த விலையுயர்ந்த வஸ்திரங்களையெல்லாம், ஒரு பிச்சைக்காரனிடம் விட்டுவிட்டு, தான் சேகரித்து வைத்திருந்த சாக்கு அங்கியைத் தரித்துக்கொண்டு, கையில் ஊன்று கோலும் பிடித்துக்கொண்டார். இந்தக் கோலமாய் அகமகிழ்ந்தவராய் தேவதாயார் பீடத்தின் முன் சென்றார். முற்காலத்தில் சுத்த வீரன் பட்டத்துக்கு தெரிந்து கொள்ளப்பட்ட கிறீஸ்துவப் போர்வீரன், அப்பட்டத்தைப் பெறுவதற்கு முந்தின நாள், உபவாசமாயிருந்து, இரவுமுழுதும் நித்திரையின்றி, தேவாலயப் பீடத்துக்கு முன் போர்க்கவசமணிந்து நின்று, தான் கைகொள்ளப் போகும் மேன்மையான அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, தேவ ஆசீர்வாதத்தை மன்றாடி, யுத்தாயுத நோன்பு அனுசரிப்பான். அதை நினைவு கூர்ந்த இஞ்ஞாசியார், சேசுகிறீஸ்துநாதருடைய பரிசுத்த வீரனாக, திவ்ய கன்னித்தாயார் கரத்தில் தன்னை ஒப்புக்கொடுத்து, அன்றிரவு முழு வதும் ஒரு சமயம் முழங்காலிலிருந்தும், ஒரு சமயம் நின்று கொண்டும், காலைவரை ஜெபத் தில் செலவழித்தார். காலையில் திவ்வியசற்பிரசாதம் உட்கொண்டு, தேவ ஆசீர்வாதத்துடன் தீவிரமாய், பார்சலோனா வழியாக ஜெருசலேமுக்குப் புறப்பட்டார்.

ஆத்தும் இரட்சணியத்தின் மேல் ஆவல் கொண்ட அர்ச். இஞ்ஞாசியார், ஒரு சமயம், நன்னெறி தவறி துர்மாதிரிகையாய் நடந்த ஒரு குருவானவரை, மனந்திருப்ப விரும்பினார். அவருக்காக, சர்வேசுரனை உருக்கமாக மன்றாடிய பின், அவரைத் தேடிப்போய், அவர் பாதத் தில் முழந்தாளிட்டு, தன் ஜீவியக் காலமெல்லாம், தான் செய்த பாவங்களையெல்லாம், அள வற்ற துக்க மனஸ்தாபத்துடன், அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் செய்தார். கடந்து போனக் குற்றங்கள் மீது, இவர் கொண்டிருந்த துவேஷத்தையும், மனஸ்தாபப் பெருக்கத்தையும் கண்ட அந்த குருவானவர், தன்பாவங்களை நினைத்து, பச்சாதாபம் கொண்டார். தன் ஆத்து மம், தேவசமூகத்தில் இருக்கும் நிர்ப்பாக்கிய அந்தஸ்தை, அர்ச். இஞ்ஞாசியாருக்கு அறி வித்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டார். இஞ்ஞாசியார், அவரை சில நாள், ஒடுக்கத் தில அமர்ந்திருக்கச் செய்து, தமது ஞான முயற்சிகளை அவருக்குப் போதித்தார். அதன் பிறகு, துர்மாதிரிகையாய் நடந்து வந்தவர், யாவருக்கும் நன்மாதிரிகையான நல்ல குருவானவரா னார்.

மற்றொரு சமயம், தன் ஆத்துமத்துக்கடுத்த காரியங்களில், அஜாக்கிரதையாக நடந்து வந்த ஓர் சாஸ்திரியார் வீட்டிற்கு இஞ்ஞாசியார், செல்லும்படி நேரிட்டது. அச்சமயம் அவர், மேஜைப் பந்து (பில்லியார்ட்ஸ்) விளையாடிக் கொண்டிருந்தார். இஞ்ஞாசியாரைக் கண்ட தும், தன்னுடன் விளையாடும்படி அழைத்தார். இஞ்ஞாசியார், அதற்கு துவக்கத்தில் சம்மதிக் கவில்லை. பின் ஒருநிபந்தனையின் பேரில், விளையாடச் சம்மதித்தார். நான் தோல்வி அடைந் தால், ஒரு மாதக் காலம் உமக்கு ஊழியனாக இருந்து, நீர் இடும் வேலைகள் யாவும் செய்து வருவேன். நான் வெற்றியடைந்தாலோ, நான் சொல்லும் ஒரே ஒரு காரியம் மாத்திரம், நீர் செய்தால் போதும் என்று, அர்ச். இஞ்ஞாசியார் சாஸ்திரியாரிடம் கூறினார். அதற்கு சாஸ்திரி யார் சம்மதித்தார். இருவரும் விளையாடினர். இஞ்ஞாசியார் வெற்றியடைந்தார். தோல்வி அடைந்த சாஸ்திரி, இஞ்ஞாசியார் என்ன கேட்கப்போகிறார் என்று பயந்தார். இஞ்ஞாசியார், தமது ஞான முயற்சிகளை செய்யும்படி மாத்திரம், அவரிடம் கேட்டார். அது முதல், சாஸ்திரியார் ஜீவியம், முற்றிலும் மாறியது; உத்தம் கிறீஸ்துவ ஜீவியம் ஜீவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக